-விஜய பாஸ்கரன்-
சாதி வெறியர்கள் ஊருக்குள் புகுந்து நடத்த இருந்த திட்டம் தோற்றது.ஆனால் எமது பகுதி இளைஞர்கள் அதே வழியை சிந்திக்க தொடங்கினர்.இதே வேளை இதற்கு தலைமை தாங்கும் எதிரிகளை கொல்லும் முடிவுக்கு வந்தனர்.இது தொடர்பாக இரத்தினத்திடம் கேட்க அவர் மறுத்துவிட்டார்.அப்படி செய்வதாயின் ஒரே நாளில் சத்தமின்றி அவர்களை அழிக்கலாம்.நமது நோக்கம் அதுவல்ல.அவரகளை நம் கண் முன்னே பணிய வைக்க வேண்டும்.
இரத்தினம் அந்த நாட்களில் பல ஊர் சண்டியர்களை எல்லைக்கோடு தாண்டவிடாமல் தடுத்தவர்.பலர் அந்த எல்லைகளை தாண்டவே பயந்தனர்.இவரைக, கண்டாலே ஓடி விடுவர்.எனவே பழிவாங்கும் திட்டம் கைவிடப்பட்டது.
கொலை வழக்கில் சத்தியேந்திரா உதவ வந்தபின்னர் கம்யூனிஸ்ட் கட்சியினரும் தொடர்ச்சியாக வருகை தந்தனர்.சிலர் அவர்களுடன் உறவுகளை பலபல படுத்தினர்.எம்.பி.நவரத்தினம் விமர்சனத்துக்கு உள்ளாக தொடங்கினார்.இது நடராசா மாஸ்ரருக்கு பிடிக்கவில்லை.நேரடியாக இன்றி மற்றவரகளை தூண்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.























