Monday, October 17, 2016

மல்லிகை தொடர்ந்தும் வரும்

ல்லிகை சஞ்சிகை வராத காலத்தில் கூட மல்லிகை ஆசிரியர் என்று நெஞ்சை நிமிர்த்தி பெருமை கொள்கிறேன் என மல்லிகை சஞ்சிகையின் ஆசிரியர் டொமினிக் ஜீவா தெரிவித்தார்.

மேலும் நான் இல்லாத காலத்திலும் மல்லிகை வரும், மணம் வீசும். தமிழ்பேசும் இம்மண்ணில் மிகவும் அதிகமாக நேசிக்கப்பட்ட சஞ்சிகை மல்லிகை ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.

மக்கள் கலை இயக்கியப் பெருமன்றத்தின் ஏற்பாட்டில் நானிலம் இணையத்தின் ஊடக அனுசரனையில் ‘ஜீவாவுடன் ஓரு மாலைப் பொழுது’ நிகழ்வு  16.10.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி தொடக்கம் 6 மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்…
இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பு யாழ்ப்பாணத்தில் இருந்த காலகட்டத்தில் திருநெல்வேலி, மதுரை போன்ற இடங்களில் இருந்து வந்திருந்த தமிழ்இன சிப்பாய்கள் மல்லிகை சஞ்சிகையை 30 சதம் கொடுத்து வாங்கி வாசித்தார்கள்.

Saturday, October 15, 2016

பாலியல் லஞ்சம் கொடுத்த மனைவியின் உண்மைக் கதை


பிரசன்ன விதானகே அவர்களின் உருவாக்கத்தில்  "silence in tha courts" உசாவிய நிஹண்டாய்  " நீதிமன்றத்தில் அமைதி " என்ற சிங்கள  திரைப்படம் திரையிடலுக்கான  அனுமதி மறுப்பினை  நீதி மன்றத்திலிருந்து  எதிர்நோக்கியுள்ளது. இலங்கையின் நீதித்துறையில்   இருள் படிந்த  சம்பவங்களை  ராவயின் முன்னாள் ஆசிரியர்  விக்டர் ஐவன்  அவர்கள் தனது நொனிமி அரகலய  என்ற  நூலில்  விரிவாக எழுதியிருந்தார் .  அதில்  லெனின்  ரத்நாயக  என்ற முன்னாள் நீதிபதி  மஹவ நீதி மன்றத்தில்  கடைமை ஆற்றிய காலத்தில்  ஒரு ஏழைப் பெண்ணிடம் கட்டாயத்தின் பேரில்  பாலியல் லஞ்சம்  பெற்றதினை  குறிப்பிட்டுள்ளார் .  இந்த  உண்மையினை அடிப்படையாக வைத்து  எடுக்கப்பட்ட  திரைப்படமே  தடையை  எதிர்கொண்டுள்ளது.

Sunday, October 09, 2016

தீண்டப்படாத முத்தம் - கொடூரத்தை மீண்டும் உரத்து ஒலித்து நிற்கின்றது.

-ந.சுசீந்திரன்-
சுகிர்தராணியின் „தீண்டப்படாத முத்தம்“ என்ற கவிதைத் தொகுப்பில் முதலாவது இடம்பெறும் கவிதை –விடுதலையின் பதாகை. 2006 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 29 ஆம் திகதி மகாராஷ்டிராவில் நிகழ்ந்த „கயர்லாஞ்சிப் படுகொலைகள்“ நினைவாக இக் கவிதை எழுதப்பட்டிருகின்றது. மிக நன்றாக எழுதப்பட்டிருக்கும் இவ் வரலாற்றுப் பதிவு, கழிந்துவிட்ட பத்து வருடங்களின் பின்னரும் „கயர்லாஞ்சிப் படுகொலையின் கொடூரத்தை மீண்டும் உரத்து ஒலித்து நிற்கின்றது.
அண்ணல் அம்பேத்கார் அவர்களின் ‚சாதி ஒழிப்பு‘ என்ற நூலின் விளக்கங்களும் விமர்சனங்களும் கொண்ட நவீன பதிப்புக்கு ”டாக்டரும் புனிதரும்” என்ற தலைப்பில் அருந்ததி ராய் அவர்களால் மிக நீண்ட முன்னுரை ( அடுத்த வருடம் இது ஒரு தனி நூலாகவும் வெளியிடப்படுகின்றது.) எழுதப்பட்டிருக்கின்றது. இந் நூல் பற்றிய ஓர் அறிமுகக் கூட்டத்தில் இதே தலைப்பில் அருந்ததி ராய் அவர்கள் சிறப்புரை யாற்றும்போது கயர்லாஞ்சிப் படுகொலை பற்றி மிக விபரமாகக் குறிப்பிடுகின்றார். எவ்வாறு கயர்லாஞ்சிப் படுகொலை இன்றைய சந்தை-ஜனநாயக உலகால் கவனங்கொள்ளப்படாமல் விடப்பட்டது என்பதை பாக்கிஸ்தான் நாட்டின் மாணவி மலலாவிற்கு கிடைத்த அங்கீகாரத்துடன் ஒப்பிட்டு, இன்றும் படுகொலைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இந்திய சாதி அமைப்பின் குரூரத்தையும் கொடூரத்தையும் விளக்கியுள்ளார்.
‚விடுதலையின் பதாகை‘ என்ற தலைப்பிடப்பட்டிருக்கும் இக் கவிதை ஜெர்மன் மொழியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் இக் கவிதையின் மூலத்தில் காணப்படும் சுகிர்தராணியின் படிமங்களையும் சொல்லாட்சியையும் இம் மொழிபெயர்ப்பில் காணமுடியவில்லை. எடுத்துக் காட்டாக:
“… மூங்கில் கூடையில் வெளிச்சம் வாரப்பட்ட
வீட்டின் முற்றத்தில்
நிர்வாணமாய்க் கிடத்தப்பட்டிருக்கிறேன்
கால்களும் கட்டப்பட்டிருக்கின்றன …”