Showing posts with label அப்பலத்தாடிகள். Show all posts
Showing posts with label அப்பலத்தாடிகள். Show all posts

Saturday, September 05, 2015

நாம் நெல்லியடி அம்பலத்தாடிகளில் குழந்தைக் கலைஞர்கள்......

-கரவைதாசன்-


நெல்லியடி அம்பலத்தாடிகள்  என இலங்கையின்  நாடகவரலாற்றில் அறியப்பட்ட கலை  இலக்கியச் செயற்பாட்டாளர்கள் வெறுமனே நாடகக் கலைஞர்கள் என்பதனை தாண்டி மக்கள் கலைஇலக்கியச் செயற்பாட்டாளர்கள் எனச் செயற்பட்டவர்கள். இந் நாடகமன்று அந்நாட்களில்  இடது சாரியக்  கலை இலக்கிய மன்றாகவே  இயங்கி வந்தது. கந்தன் கருணை, சங்காரம் இதுவுமன்றி சமூக விழிப்பினை புகட்டவல்ல  தாளலய ஓரங்க நாடங்கங்கள் பல அந்நாட்களில் இவர்களால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில்  அரங்காடப்பட்டன. 

இலங்கை கம்யுனிஸ்டுகள் மாஸ்கோ,  பீக்கிங் என கோட்பாட்டு ரீதியிலே  பிளவுண்டிருந்த காலத்தினிலே நெல்லியடி அம்பலத்தாடிகள் கலைமன்று  சீன சார்பு செயற்பாட்டாளர்களின் கலை இலக்கிய மன்றாக இயங்கி வந்தது  என்பதே பொருந்தக் கூறக்கூடிய செய்தியாகும் . இம்மன்று  நெல்லியடியினிலே முகவரியினை கொண்டிருந்தபோதும் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் முற்போக்கு கலைஞர்கள்  மத்திமைப்பட்டு இம் மன்றில் செயற்பட்டார்கள். 

மட்டக்களப்பிலிருந்து சி.மௌனகுரு, தாளயடியிலிருந்து  தாசீசியஸ், ம.சண்முகலிங்கம், யாழ்ப்பாணத்தில் பிறந்து  கரவெட்டி கன்பொல்லையில் திருமணபந்தத்தினால் வாழ்வினைக்  கொண்ட கே.எஸ். இரத்தினம் இப்படியே ஒரு நீண்ட பட்டியல் நீளும். இன்று அண்ணாவியராக  விழிக்கப்படுகின்ற இளைய பத்மநாதன் கலைஞனாக  கருக்கொண்டதும் இம் மன்றில்த் தான். அந்நாளில் அம்பலத்தாடிகளின்  வில்லிசை குழுவில் பத்தண்ணா  பிரதான கதை சொல்லியாக   இருந்தார். இவ் வில்லிசைக் குழுவினை நெறிசெய்து இவர்களுக்கு ஒத்தாசையாக கன்பொல்லையைச்  சேர்ந்த நாடறிந்த இசை நாடகக் கலைஞர் நாடத்திலகம் கே.வி. நற்குணம் அவர்கள் இருந்தார்.