Showing posts with label karavaithasan. Show all posts
Showing posts with label karavaithasan. Show all posts

Tuesday, June 09, 2026

பிரக்ஞை

 -கரவைதாசன்-

   நான், அம்மா, அக்கா, தங்கை, ஐயா எல்லாருமாக  வீட்டுக்குள்ள இருக்கிறம் . மூலையில் கைவிளக்கு எரிந்துகொண்டிருக்கின்றது. விளக்கு சின்னதுதான் ஆனால் அறையிலிருந்த இருட்டு முழுவதையும் விரட்டியடித்து விட்டிருந்தது. ஒரு கடகம் இல்லை! ஒரு மூடல் அதுவும் இல்லை! அப்படின்றால் அதனை எப்படி அழைப்பது? ஓ! ஒரு குஞ்சுப்பெட்டி இது தான் சரி. அது நிறைய இடியப்பம் இருக்கிறது. உடனே அம்மியில் அரைச்சு எடுத்து வந்த சம்பல் ஒரு கிண்ணத்திலும் சட்டி நிறைய  தக்காளியும் சிறு நெத்தலியும் போட்டு வைச்ச சொதியும் இருக்கிறது. இந்த நேரத்தில எங்கால நெத்தலி என்று கேட்கக் கூடாது. எங்கட ஊர்ப்பக்கம் பின்னேரம் கூடுகிற கோயில்ச் சந்தையிலிருந்து அது அம்மம்மா கொண்டு வந்தது. எல்லாருமாக சாப்பிடத் தொடங்கும்போது நான் மட்டும் குழப்படி செய்யிறன். 

  "எனக்கு இடியப்பம் வேண்டாம். எனக்கு ஐயா வாங்கி வந்த பணிஸ்தான் வேணும்." இதில் நான் பிடிவாதமாக நிற்கிறன். அம்மா எனக்கெதிராக ஏப்பையை தூக்குகிறா. திண்ணையில் இருந்து நிலைமைகளை  அவதானித்த அம்மம்மா   "நான் யாவாரத்துக்கு எடுத்துச்செல்ல அரிஞ்சு வைச்ச வாழைப்பழ சீப்புகளில் நாலு கரஞ்ச பழத்தை இப்ப சாப்பாட்டுக்கு எடுங்கோவன்" என்று கூறுகிறா.

    ஐயா  சொல்லுகிறார் "அதிலை பிள்ளை இரண்டு பழத்தைப் பிடுங்கி பணிசோட அவனுக்கு குடுங்கோவன்" ஐயா அம்மாவை எப்பவும் பிள்ளை என்றுதான் அழைப்பார். எனக்கு பணிசும் பழமும் அவைக்கு சம்பலும் சொதியும் இடியப்பமும். எனக்கு நிறைய சந்தோசம். நான் வீட்டில் எல்லாருக்கும் செல்லம், யாரென்றில்லை  ஒருவர் கோவித்தாலும்  வேறு யாராவது ஒருவரிடமிருந்து எனக்கு அரவணைப்பு கிடைக்கும்.  

   எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறம். "மாமி கொஞ்சம் காலைவில த்தணை"  தாழ்வாரத்துக்கு குனிந்தவாறு சொல்லிக்கொண்டு பெரியப்பா திண்ணைக்கு வருகிறார்...  பெரியப்பாவென்றால் அம்மாவின்ர சொந்த மச்சான். அவருக்கு நான் பெறாமகன். 

    "யார் வாத்தியாரே? வாங்கோ! வாங்கோ!" ஐயா சாப்பாட்டுக்குள்ளால கையை  எடுத்துக்கொண்டு செம்பையும் தண்ணியையும் தூக்குகிறார். "அவசரமில்லை,  நாங்கள் முற்றத்தில இருக்கிறம் . நீங்கள் சாப்பாட்டை முடித்துக்கொண்டு வாங்கோ" என்று கூறிக்கொண்டு பெரியப்பா முற்றத்துக்கு திரும்புகிறார். 

    முற்றத்தில் இந்தியாவிலிருந்து வந்த நடிகர் கோபாலகிருஷ்ணர், அவர் கையில் ஒரு பருவ வயதை எட்டிய   பராயப் பெண் பிள்ளையுடன் நிற்கிறார். படங்களில் பார்த்த அதே முகம் , நல்ல நரைத்த வெள்ளைத்தலை, வெள்ளை அரக்கை சேர்ட் + வெள்ளை நாலுமுழம். அந்தப் பெண்கூட வடிவானவளாக இருக்கிறாள். அவளுக்கு இது புது இடம் தானே அவளது வண்டுக் கண்களால் உருட்டி உருட்டி எல்லாரையும் பார்க்கிறாள். ஆனால் எனக்கோ அவள் என்னை மட்டும் துரத்தித்  துரத்தி தேடுவது போல் மனதிற்குள் மத்தளம். 

    ஐயா  முற்றத்திற்கு வந்ததும் ஐயாவும் பெரியப்பாவும் கதைத்துக் கொள்ளு .கினம் சித்தப்பாவும் தங்கட வீட்டுத் தாழ்வாரத்துக்குள்ளால குனிந்து முற்றத்துக்கு வருகின்றார்.

    எங்களின்ர வளவுக்கு பெரிய முற்றம் அடுப்புக்கு  மூன்றுகால்    வைச்சது மாதிரி எங்கடவீடும் சித்தியின்ரவீடும் மாமாவின்ரவீடும். இந்த மூன்று வீடுகளையும் பிறவெட்டுத்தடிகளால் வளைச்சுப் போட்ட வேலி இருக்கு, ஆனால் படலை இல்லை. முற்றம் நிறைய வெள்ளை மணல். அன்று பௌர்ணமி, அதனால் முற்றம் முழுவதும் பால்போல் இருந்தது. வேலிகளுக்கேயிருந்த நந்தியாவெட்டையும் பட்டிப்பூவும் காற்றடிக்கும் போதெல்லாம்  சிரித்துக் கொள்கின்றன. மாலுக்குள்ள இலட்சுமி படுத்துக்கொண்டு பகல் மேந்த  புல்லின் சுவைதனை மீ ட்டு இரைகண்டது. 

    இப்ப எங்கள் முற்றம் நிறைய சனம். அந்தோனிமாமா, காதர்காக்கா, பியதாச ஐயே  இன்னும் நிறைய ஐயாவின் கட்சியாக்கள். பெரியப்பா கொண்டு வந்த அரிக்கன் லாம்பு இரண்டையும் அம்மாவிடம் நீட்டியவாறு "சிமிளினை மினுக்குங்கோ" என்று சொல்லுகிறார். ஆனால் ராணிச்சித்திதான் லாம்புகளை வாங்கிக்கொண்டு எரிச்ச உமி போட்டு மினுக்கிறாள். 

    அரிக்கன் லாம்பு இரண்டும் இப்போ முற்றத்துக்கு வந்தாச்சு எல்லாரது முகங்களும் இப்போ வடிவாகத் தெரிகிறது. வகுப்பு ஆரம்பமாகியாச்சு முதலில் பெரியப்பா, பிறகு ஐயா இப்போ கோபாலகிருஸ்ணர் பேசிக் கொண்ட்டிருகின்றார். நாட்டில் எல்லாரும் கட்சிக்காக கூட்டம் கூடுவார்கள். ஆனால் இவர்கள் வகுப்பு எடுக்கிறம் அல்லது வகுப்பு நடத்துறம் என்று தான் சொல்லுவார்கள். அவர் பேசுவது என் காதில் தெளிவாக விழுகிறது . ஆனால் அது பற்றி நான் யாருடனும் கதைத்துக்கொள்வதில்லை. அதற்கான பக்குவம் இன்னும் எனக்கு வரவில்லையாம் . ஐயாவும் மாமாவும் கண்டிப்பான தொனியில் சொல்லிக்கொள்வார்கள்.   "நீயென்ன இப்போதும் குழந்தைதானே  இனி  வாலிபனாகி கமிட்டிக் காட்டெடுக்க இன்னும் காலங்கள் இருக்கு"  என்பார்கள்.    

      கோபாலகிருஸ்ணர் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றார். "பேரினவாத அரசு அப்பாவி மக்கெளுக்கெதிராக அராஜகத்தினை" எல்லாரும் அவதானமாகக்  கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நானும் தான் கேட்டுக்கொண்டிருக்கின்றேன் வலு தெளிவாக என் காதில் விழுகின்றன. நவ குடியேற்ற வாதம் ,  இலுமினாட்டிகள், உலகமயமாதல், பேரினவாதம், குறுந்தமிழ் தேசியம், அராஜகம், கொடூரம், கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது, பங்கெடுப்பு சொற்கள் தொடர்கிறது  நான் அவற்றை அசை போட்டுக் கொண்டு உச்சரித்துப் பார்க்கிறேன். எனக்கு பக்குவம் வர, வாலிபக் கமிட்டிக் காட்டு வர இன்னும் ஐந்து ஆண்டுகள் தான்  இருக்கின்றன. நானும் ஐயா வைப்போல, மாமாவைப்போல, பெரியப்பாவைபோல, கோபாலகிருஸ்ணரைப் போல  பேச வேண்டும் ........ 

       (காகம் இதழ்:4  ஏப்ரல் 1995 )

 


Friday, May 29, 2026

A Letter to Lanka இலக்கியா மரியா சைமன் அவர்களுடன் சந்திப்பு

-கரவைதாசன்- 

அன்றொருநாள் நோர்வே நாட்டைச் சேர்ந்த
இயக்குனர்/ திரைப்பட தயாரிப்பாளர்: இலக்கியா மரியா சைமன் அவர்களை சந்தித்ததும் அவர் ஆவணப் படத்தினை தருசித்த தருணமும்.....

NAFA INTERNATIONAL ETHNOGRAPHIC FILM FESTIVAL – 2023 Copenhagen.
A Letter to Lanka
லங்காவுக்கு ஒரு கடிதம்
ஆண்டு: 2023
நீளம்: 28 நிமிடங்கள்
இயக்குனர்/திரைப்பட தயாரிப்பாளர்: இலக்கியா மரியா சைமன்.
தயாரிப்பு நிறுவனம்: UiT நோர்வேயின் ஆர்க்டிக் பல்கலைக்கழகம்
தயாரிப்பு நாடு: நோர்வே நாடு
திரைப்படம் உருவான நிலம் : ஸ்ரீ லங்கா
திரையில் ஸ்ரீலங்காவின் உள்நாட்டுப் போரின் நினைவுகளுக்கு இடையே தற்போதைய அரசியல் கொந்தளிப்பு வரை விம்பங்கள் நகர்கிறது. திரைக்கதையின் பேசுபொருள் நிலம், மண் மற்றும் மனிதர்களுடன் திரைப்படத் தயாரிப்பாளரின் மறு தொடர்பின் கவிதை மற்றும் தனிப்பட்ட பயணத்தின் அனுபவத்தின் மூலம் பேசப்படுகிறது. இது, குழப்பமான உலகத்தைச் சேர்ந்த இருத்தலியல் கேள்விகளுக்கு பார்வையாளர்களை அழைக்கிறது. உலகில் வீட்டில் இருப்பதன் அர்த்தம் என்ன? எது மக்களை ஒன்றாக இணைக்கிறது! எதனால் அவர்களைப் பிரிக்க முடியும்? என கேள்விகளை அடுக்கிச்செல்கிறது...
இலக்கியா மரியா சைமன், கவிஞர் பானுபாரதி பன்முக ஆளுமை குறும்பட இயக்குனர் தமயந்தி இணையர்களின் மகள் ஆவார். சமீபத்தில் ஆஃப் விஷுவலை துறையில்தனது முதுமானியப் படிப்பினை
UiTயில் மானுடவியல் நோர்வேயின் ஆர்க்டிக் பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார். ஏலவே அவர் எத்னோகிராஃபிக் ஃபிலிம் கிளப்பை நிறுவிய பெர்கன் பல்கலைக்கழகத்தில் சமூக மானுடவியலில் BA இளநிலை பட்டம் பெற்றுள்ளார். மானுடவியலில் சேருவதற்கு முன்பு அவர் பல்வேறு துறைகள் மற்றும் கலைகளில் இருந்து ஒரு ஆசிரியராகவும் இயக்க பயிற்சியாளராகவும் இருந்தார்.
இயக்கம் மற்றும் அவரது இலங்கை வம்சாவளி தொடர்பான அவரது அனுபவங்கள், வீடு, சொந்தம், அடையாளம் மற்றும் சூழல் ஆகிய இருத்தலியல் கருப்பொருள்களை ஆராய்வதில் அவரது மானுடவியல் ஆர்வத்திற்கு வழிகோலுகிறது. இலக்கியா இலங்கையுடனான தனது நெருக்கமான மற்றும் துண்டு துண்டான உறவில் ஆர்வமாக உள்ளார்.


வடக்கு  நோர்வேயின் ஓலசுண்ட்   மலைகளின் அடிவாரத்தில், சதுப்பு நிலக் காடுகளுக்கு அருகில் வளர்ந்த இலக்கியா , சக்திவாய்ந்த இயற்கை உணர்வுகளைத் தன் கமராவுக்குள் இருளும் ஒளியுமாக  கொண்டு வந்த ஓர் இருத்தியியல் படைப்பாளி . அறம்,  அன்பு, அதிகாரம் , அனைத்தையும் பற்றிய கூர்மையான பார்வைகள், சமூக உணர்வு மற்றும் சீற்றம் ஆகியவற்றால் உயிரூட்டப்பட்ட முடிவற்ற படிமங்களின் படச்சுருள்  கூட்டங்களில் அனைத்தையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு நீர்த்தேக்கமாக அவற்றைப் பயன்படுத்துகின்றார் . பெரியம்மா  எனும் பாத்திர வாகனத்துக்கூடாக  வர்ணமும் வனப்புமாக  ஈழத்தின் லாவண்யத்தினை   பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஈழத்தின் கறுப்பாகிக் கிடந்த பக்கங்களை நிழல் கொள்ளளால்  அவர் தனது உணர்வுகளைத் தனக்குள்ளேயே பதிவு செய்துகொண்டார் என்கிறேன் .


காலனித்துவம் தந்துவிட்டுப்போன கருப்பு வெள்ளை வேதச் சீருடைகுள்ளே அறமாக ஆமிக்கு  குடிநீர் வழங்குவதும் அறச் சீற்றமாக இரவுப் பொழுதுகளில் மரக்கிளையினில் இலாம்பினை ஒளிர விடுவதும் , நிலத்தினைகொத்திப் பண்படுத்துவதும் அக்கருப்புக் கோட்டுக்குள்ளிருந்து நாட்டுக்கூத்துப் பாட்டு வருவதும்    உணர்வுகளின் வழியே  ஒரு பாரம்பரிய பண்பாட்டுச் சேமிப்பும் உள்ளது. அவற்றை எப்படிச் சேமிப்பது? அவர் கையாளும் மொழி அவரது இருப்பு சார்ந்து வலுக்கொள்கிறது அவை எழும்போது அவற்றைப் பற்றி உணர்வதன் மூலமாக  வெள்ளைத் திரை  முன், அந்த உணர்வை விட இந்த உணர்வை நாம் மிகவும் தெளிவாக நினைவில் கொள்கிற அவை இப்போது அவருடைய திரைக்கதையாடலில் வரும்  ஒரு சொல் " விளைநிலம்" soil என்ற முழுமையானசொல்  வழமையாக வரும் மண், நிலம்,  நாடு  போன்ற சொற்களிளிருந்து விடுபட்டு  பதிப்பில்  அவை திருத்தப்பட்டு, ஒரு சுதந்திரமான மொழிக்கு நெருக்கமாக வந்துள்ளன; நல்லதோ கெட்டதோ, அவை இன்னும் உரைநடையாக மாறியுள்ளன. முன்பு ஒரு வரி, "நீ துன்பப்படுகிறாய், என் அன்பே, பிறகு நான் மீண்டும் இறப்பேன்" என்று இருந்த இடத்தில், இப்போது அது "நீ துன்பப்படுகிறாய், என் அன்பே, நான் இன்னொரு முறை இறப்பேன்" என்று உள்ளது. போல் ஆகியுள்ளது இது , அதன் நீண்ட பாரம்பரியத்தில், மிகவும் கண்டிப்பான ஒரு வரி வடிவமாகும்.


 அவர் , அங்கே  உள்ள மரக்கட்டைகள், மணல் கடற்கரைகள் மற்றும் தென்னைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட  தென்னங்காய்களைக்  கொத்தி உடைப்பதனூடு  ஒரு கோடாரி, அரிவாள் மற்றும் மடிக்கத்தி ஆகியவற்றைக் கொண்டு, உணர்வுக் குவியல்களை அவர் காட்டுகின்றார். இந்த உருவக வழியில், முற்றிலும் இருத்தலியல் கருப்பொருள் சார்ந்த ஒரு படைப்பு உருவானது;  இந்த கருப்பொருளின் உண்மையான விரிவான விளக்கம், letter to sri lanka  என எழுத வைத்தது 

ஆழ்ந்த அற உணர்வு அறிவுத்திறன் அல்லது கருத்துப் பரிமாற்றங்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பு மாறாக, அவளது அகம்  எதனுடன் தொடர்புடையதோ, அவை அனைத்தின் மீதும் ஒரு விரிவான பேரார்வம் காணப்படுகிறது. இது படத்தின் முதல் ஒளியிளியிலிருந்து  நூர்ந்து நூர்ந்து வெளிப்படுகிறது. அதுவும் ஒரு முறையான வினைத்திறனே! 

இலக்கியாவுக்குள்  ஒரு மூர்க்கமான உணர்வு  கொழுந்துவிட்டு எரிகிறது; அது அவளை தலை  தனில் தரித்த முட்களாலும் வாள்களாலும் குத்தி, சுட்டெரிக்கும் தீயுடன் அவரின்  இதயத்தைக் கிழிக்கிறது. தனது உணர்வுதனை  பல்வேறு மனநிலைகளையும் முழுமையாக வெளிப்படுத்த, அவர்  ஒரு படிமத்திலோ,  ஒரு உருவகத்திலோ திருப்தி அடையாவில்லை; மாறாக, புலன்களின் களஞ்சியத்தில் உள்ள நிகழ்வுகளை மனிதகுலம் குறித்த ஒரு இயற்கைவாதப் பார்வையில் ஒன்றாகத் தொகுக்கிறார் . அதன் எல்லையற்ற பன்முகத்தன்மை இருந்தபோதிலும், அது சலிப்பூட்டுவதாகத் தோன்றாமல் இருக்க .  சமையல் அனுபவங்களை இணைத்துள்ளார்.:

சமையல்காரியே, உன் இரத்தம் இந்த விளை நிலம் போல உயிருள்ளது,

மேலும் உன் பழக்கவழக்கங்கள் உன்னதமானவை, இந்த விளை நிலம் போல.

ஒரு ஊர்த் தூரப் பயணத்தில் தேசம் எனும் கோடு கட்டலின்  அனைத்தையும் கண்டு மனம் வெந்து ஆவணப் படுத்தியுள்ளார்.  

எப்படியாயினும், அவள் நிலத்தின்  வேறொரு இடத்தில்  தன் தலைவணக்கத்தைச் செலுத்திக்கொண்டிருக்கும்போதும், அவள் தொட்டுணரக்கூடியவளாகவே இருக்கிறாள்.

 மரணம் வரும்போதும் , ​​அந்த வெறுமை அனைத்திற்கும் எதிராக அவளது பார்வை மட்டுமே உள்ளது; இருளை விரட்ட அன்பு மட்டுமே உள்ளது.

இலக்கியாவின் படைப்பு  அதன் ஒளியைத் தக்கவைத்துக் கொள்கிறது.

Tuesday, October 21, 2025

சாதனையாளர் இனோ சூரன்


காங்கசந்துறையிலிருந்து, அவரது உலகப் பயணத்தின் இலங்கைப் பயணம் தொடர்ந்து அவரின் தாயாரின்  ஜென்ம பூமியான நல்லூர்   யாழ்ப்பாணத்தை நோக்கி அவரது பயணம் விரிவடைகிறது.

இந்த குறிப்பிடத்தக்க பணி அவரது தைரியம், உறுதிப்பாடு மற்றும் வலுவான அர்ப்பணிப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு. இது அவரது **பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமல்ல, உலகில் எங்கும் வாழும் **தமிழ் மக்களுக்கும், அவரது **பூர்வீக தாயகமான இலங்கைத் தீவுக்கும் ஒரு பெருமையாகும்.

சைக்கிளில் உலகம் சுற்றும் வாலிபர் எங்கள் மண்ணின் மைந்தனே வருக! 
  பிரான்ஸ் நாட்டின் பிரசையான இவரின்    தாய் ராதா யாழ்பாணம், தந்தையார் ராஜா நெல்லியடி கரவெட்டி. பேற்றோரின் பூர்வ ஜென்ம நிலங்களை தரிசித்து தனது பயணத்திணை முடித்துக்கொள்ள இருப்பதாக அறியக் கிடைத்துள்ளது.



Saturday, November 30, 2024

மலையக இலக்கியத்தில் லெச்சுமி

தினகரன் பத்திரிகைச் செய்தி .....
மலையக இலக்கியத்தில் லெச்சுமி தந்த வாய்மொழி இலக்கியம் பேராசிரியர் மு.நித்தியானந்தன் ஆவர்களால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இச்செயற்கரிய செயற்பாட்டிற்கு தவம் அறக்கட்டளை அனுசரணை இன்றைய (24.11.2024) தினகரன் செய்தி.
-நன்றி: மரதன் கிருஷ்ணன் -


 

Thursday, February 15, 2024

தலைவராக டொமோகோ தமுரா (JCP)

-கரவைதாசன்- 

ஜப்பானிய கம்யுனிஸ் கட்சி ஜூலை 15ந் திகதி 1922ம் ஆண்டு பழமையான கிறித்தவ சமூகவாதிகளிளிருந்தும் சிந்திகட் சிந்தனாவாதிகளிலிருந்து பிரிந்து வந்த சோஷலிச சிந்தனாவாதிகளினால் டோக்கியோவில் தொடங்கபட்ட ஜப்பானிய தொன்மையான மாக்சிய சோஷலிச கட்சியாகும். அதன் ஆரம்ப காலங்களிருந்தே இக்கட்சியானது சோஷலிச முகாமினை சார்ந்தே வந்தது. 1960களில் சோவியத் சம்மேளன சமூகத்திலிருந்து சீனா தன்னை விடுவித்துக் கொண்டு வெளியேறியபோது அணிசேரா சோஷலிசக் கொள்கையினை கடைப்பிடித்து ஜேசிபி தனி வழியாகப் பயணித்தது, ஆனாலும் சீனாவில் நடந்தேறிய கலாச்சாரப்புரட்சியினை அந்நாட்களில் ஜேசிபி ஆதரித்தது. எந்தவொரு நாடும், இராணுவ முகாம்களும் அணு ஆயுதங்களையும் வைத்திருப்பதை ஜேசிபி எதிர்க்கிறது அதன் போக்கில் வடகொரியாவின் அணு ஆயுத பரிசோதனை முறைமையினை வன்மையாக கண்டித்து வருகிறது. உலகின் முதலாளித்துவ முகாம்களினால் ஏற்படுத்தப்படும் போட்டிச்சண்டைகளில் ஜப்பான் ஈடுபடக் கூடாது என்பதனை முதல்க் கொள்கையாகப் பிரகடணப்படுத்தி வருகிறது. மாறாக சர்ச்சைகளைத் தீர்ப்பது தொடர்பாக, பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியான வழிமுறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், இராணுவத் தீர்வுகளுக்கு அல்ல என்று வாதிடுகிறது. ஐக்கிய நாடுகளின் சாசனத்தை ஜப்பான் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று ஜேசிபி கூறுகிறது. இதற்காக யப்பானின் அரசியல்ச் சட்டத்தில் 9வது பிரிவை திருத்த வேண்டுமென வலியுறுத்தி வருகிறது. ஜேசிபி அதன் தொடக்கத்திலிருந்து ஜப்பானிய பெண்ணிய முகாமுடன் நட்புறவைப் பேணி வருகிறது, மேலும் ஜப்பானின் முக்கியமாக இன்னும் பெண்கள் உரிமைப் பிரச்சினைகளில் மிகவும் தீவிரமாக உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள ஊதிய இடைவெளியை நீக்குவதைக் கட்சி ஆதரிக்கிறது. மேலும் ஜப்பானிய சகல துறைகளிலும் குறிப்பாக அரசியல் வாழ்வில் அதிகமான பெண்கள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது, அதன் உச்சமாக ஜேசிபியின் மத்திய குழுவின் செயற்குழுவின் தற்போதைய தலைவராக டொமோகோ தமுரா எனும் பெண் தோழரை தேர்ந்தேடுத்துள்ளது இவரது பொறுப்புக்காலம் (பதவிக்காலம்) 2-3 ஆண்டுகளைக் கொண்டது.

Monday, January 30, 2023

அன்று துரைராசா

-கரவைதாசன்-
அநுபவபகிர்வு....... 

அன்று துரைராசா சூட்டுக்கு இலக்காகி மறைந்திருந்தால் இன்று அவரின் நினைவுச் சிலையினையும் திசைமாறிய கிராமத்தின் ஒரு கிடுகுவேலி இடுக்கிநூடேதான் பார்க்க நேர்ந்திருக்கும்." என் தந்தைவழி உறவுக்காரத் தம்பி, துரை என நாமும் தான் வாழ்ந்த கொழும்புப் பகுதியில் குமார் என நன்கறியப்பட்ட அமரர் லிங்கம் துரைராசா அவர்களின் அமரத்துவச் செய்தியறிந்து என்னில் ஒரு துண்டம் இழந்ததாய் உணர்கிறேன். நானும் அவரும் எமது பகுதியில் அருகருகே வாழ்ந்து வந்தோம் என்பதை கடந்து வாழ்வின் அர்த்தங்களை புரிந்து கொண்டு எம்மை பொறுப்புடன் உருவாக்கி அசல் மனிதர்களாய் வாழ்வதற்கான முன்னெடுப்புகளை முன்செய்தோம் பாதியிலே படிப்பினை நிறுத்திய பல எமது கிராமத்து இளைஞர்களுக்கு மாலை நேர வகுப்புக்களை நடத்தினோம். திருக்கோணமலையிலிருந்து வந்திருந்த பொலிஸ் மார்க்கண்டு ராஜாஅண்ணாவிடம் மாலை நேரத்தில் ஆங்கில மொழியினை கற்றோம். இதன் தொடர்ச்சிதான் தனது பிள்ளைகளை ஆங்கில மொழிவழிக் கல்வியில் அவர் கற்பிக்கும் வழிக்கு அவரை இட்டுச் சென்றிருக்கலாம். மொத்தத்தில் கல்வியின் அவசியத்தினை உணர்ந்தவராக அவர் இருந்தார். எமது கிராமத்தின் மூத்த தலைமுறையினைச் சார்ந்த வ. தங்கமணி , க.இராசரத்தினம் , மு.தவராசா, வீ.எஸ். சிவபாதம், ஆ.சிவகுரு , ஆ.தங்கராசா இன்னும் சிலர் கிராமத்தின் கட்டுமானப் பணிகளான பாடசாலை , சனசமூகநிலையம் , கோவில்கள், சுடலை, தெருக்கள், சங்கக்கடை போன்றவற்றில் களப்பணியாற்றி அவற்றில் அபிவிருத்தியினையும் கண்டனர். இடதுசாரிகளான இவர்களிடையே ரசிய சார்பு ,சீன சார்பு எனத் துருவப்பட்ட நிலையும் இருந்து வந்தது . 1978ஆம் ஆண்டளவில் இத்துருவப்பாட்டு நிலையிலிருந்து விலகி அன்று இளைஞர்களாக இருந்த நாம் ஒரு நிலையில் நின்று உருவாக்கியதே கரவை செஞ்சுடர் விளையாட்டுக்கழகம். என்னிலும் மூன்று வயதுகள் குறைந்த துரைராசா என்னோடு வயதுகள் ஒத்த இளைஞர்களுடன் சேர்ந்து கழகத்தின் களப் பணியாற்றிய ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர் . விளையாட்டுத் துறை , மலை நேர வகுப்பு , கரவை சகாதேவன் குடியிருப்பு ஞான வைரவர் ஆலயத்துக்கு மின் இணைப்பு என பல்வேறு ஆக்கப்பணிகளில் தன்னையும் ஒருவராக இணைத்துக் கொண்டு செயற்பட்டார். வந்துபோன நாட்களில் 1982 ல் பாரதி நூற்றாண்டு விழாவினை மிகவும் சிறப்பாக செய்து முடித்தோம். குற்றப் புலனற்ற கிராமமாக அந் நாட்களில் நாம் கிராமத்தினை வழி நடத்தினோம். கிராமத்தின் வளர்ச்சி வலதுசாரிய அரசியல்காரர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தியது. அதன் உச்ச செயற்பாடாக ஆயுதாரி இயக்கங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் இரவோடு இரவாக வந்து கன்பொல்லைதியாகிகளின் சிலைகளை உடைக்க முற்பட்டனர். சத்தம் கேட்டு ஊரவர்கள் திருப்பத் தாக்கவே அவர்கள் மறைந்தோடினர். தீ.ஒ.வெகுசன அமைப்பின் ஆயுதத்துக்கு அப்போது பொறுப்பாக சி. புலேந்திரன் இருந்தார். அவர் அந்த கைத்துப்பாக்கியினை வெளிக்கொணர்ந்து சத்தவெடி வைத்தது அப்போது ஆயுதாரி இயக்கப் பொடியளை அந்நாளில் கிலிகொள்ள வைத்தது. மறு நாள் ஊரில் எதிர்ப்புக் கூட்டம் ஒன்று கூட்டப் பட்டது இதற்கு பகிரங்க எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் முடிவானது. ஆனால் எந்த நடவடிக்கையுமற்று நாட்கள் சென்றன. நானும் உலகனும் துரைராசவும் தோழர் சி.கா.செந்திவேலிடம் சென்று போராட ஆயுதம் கேட்டோம். செந்தில் தோழர் நாம் வந்த விடயம் எனது தந்தையார் தவத்துக்குத் தெரியுமா என என்னிடம் கேட்டார். தெரியாது எனச் சொல்லவே ,நீ போய் படியும் என அறிவு சொல்லி அனுப்பி வைத்தார். நல்லவேளை ஐயாவிடம் எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஆயுதத்தினை எப்படி கையாள்வதென எங்களுக்கு மூன்றுநாள் வகுப்புகள் எடுத்தார். இத்தனைக்கும் கட்சியில் நாம் அங்கத்தவர்கள் இல்லை. அவரின் பொறுப்பினை இன்றும் நினைத்து மெச்சுகிறேன். ஆனால் நாம் ஓயவில்லை எங்கள் கடைக்குள் யாருக்கும் தெரியாமல் நான், நேசன்,ரங்கன்,உலகன்,துரைராசா,ரவி, எனது மச்சான் செல்வா இவ்வளவு பேருமாக சேர்ந்து கண்டன சுவரொட்டிகளை தயார் செய்தோம். பருத்தித்துறை ,மந்திகை, வல்வெட்டித்துறை, நெல்லியடி நகரங்களில் ஒட்டிவைத்தோம். நெல்லியடி மத்தியசந்தை சுவரின் மேற்பகுதியில் நேசனும் துரைராசவும் பெரும் கண்டனப் பதாகையை ஒட்டிக்கொண்டு இருக்கும்போது நான் கீழிருந்து டோச் வெளிச்சத்தினை சுவருக்கு பாய்ச்சிக்கொண்டு இருந்தேன். நல்லவேளை ரங்கன் சந்தியிலிருந்து சமிக்கை தந்தான் ஆமியின் டிராக் வண்டி வருவதாக நான் திருமகள் ஸ்டோர்ஸ் முன் ஒழுங்கைக்குள் இறங்கினேன் செல்வா என்னை பின் தொடர்ந்தான் ஆளுக்கு ஒரு திசையாக ஓடி மறைந்தோம். வந்த டிராக் வண்டி துரைராசவையும் நேசனையும் நோக்கிச் சுடத் தொடங்கியது அவர்கள் இருவரும் கூரைக்கு தாவி பின்பக்கமாக மறைந்துவிட்டார்கள். அன்று துரைராசா சூட்டுக்கு இலக்காகி மறைந்திருந்தால் இன்று அவரின் நினைவுச் சிலையினையும் திசைமாறிய கிராமத்தின் ஒரு கிடுகுவேலி இடுக்கிநூடேதான் பார்க்க நேர்ந்திருக்கும். எங்களது கண்ணீர்ப் பூக்களை மலர்க் காணிக்கையாக சாத்தியப்படுத்திய நண்பர் திலகராஜ் உள்ளிட்ட தோழர்களுக்கு நன்றிகள்...

Sunday, May 22, 2022

தெணியான் மறைவு

தெணியான் எனும் பெயரில் அறியப்பட்ட கந்தையா நடேசன் அவர்கள்  இலங்கையில் இலக்கியத்துக்கான அதி உயர்விருதான சாகித்ய ரத்னா விருது பெற்றவர் இன்று காலமான செய்தி கிட்டிக் கலங்கி நிற்கிறோம்.
தனது எழுத்துக்களால் விளிம்பு நிலை மக்களின் வாழ்வினை வரலாறாக்கிய தெணியான்
1942ல் யாழ் மாவட்டத்தின் வடமராட்சிப்பிரதேசத்திலுள்ள பொலிகண்டி கிராமத்தில் பிறந்தவர். தொழில்ரீதியில் தமிழ் ஆசிரியராக நீண்டகாலம்பணியாற்றி ,யா/கரவெட்டி ஸ்ரீ நாரதவித்தியாலயம் அரச பாடசாலையாக அங்கீகாரம் பெற்றபோது தலைமைஆசிரியர்உயர்வுப் பொறுப்புப் பெற்றவர், தொடர்ச்சியில்  பகுதித்தலைவர்,கனிஸ்ட அதிபர்,உபஅதிபர்,தொலைக்கல்விப்போதனாசிரியர் போன்ற பதவிகளை வகித்து 2002ம்ஆண்டு ஓய்வு பெற்றவர். முற்போக்கு எழுத்து அணியை சேர்ந்த தெணியான் கலகக்கார எழுத்தாளர்கள் அணியில் முதல் வரிசையினை சேர்ந்த  படைப்பாளி .
1964ல்’விவேகி’ சிற்றிதழில் வெளிவந்த ‘பிணைப்பு’என்ற சிறுகதையுடன் இவரது எழுத்துலகப்பிரவேசம் ஆரம்பமானது.
சுமார் 150  சிறுகதைகள் ,10 நாவல்கள்,3.  குறுநாவல்கள்,5 வானொலிநாடகங்கள், நூற்றுக்கு மேலான கட்டுரைகள், விமர்சனங்கள்,செவ்விகள் என்பன இவரது படைப்பாக்கங்கள்.
இவரது வாழ்நாள் இலக்கியப்பணிக்காக இலங்கைஅரசு ‘சாகித்யரத்னா’(2013) ,வடக்கு மாகாண ‘ஆளுனர் விருது’, (2008),இலங்கை இந்து கலாசார அமைச்சு’கலாபூஷணம்’(2003) போன்ற விருதுகளை  வழங்கி இவரைக்கௌரவித்துள்ளது.
இவரது ‘கழுகுகள்’ நாவல் ‘தகவம்’பரிசையும்,’மரக்கொக்கு’ நாவல் இலங்கைஅரசினதும்,வடகிழக்கு மாகாண சபையினதும் சாகித்திய விருதுகளையும் ,’காத்திருப்பு’ நாவல் வடகிழக்கு மாகாண சபையின் பரிசையும், ‘கானலின் மான்’ நாவல்  இலங்கைஅரசின் சாகித்திய விருதையும்,’
‘குடிமைகள் ‘நாவல்  இலங்கை அரசின் சாகித்தியவிருதையும், ‘சிதைவுகள்’ குறு நாவல்  தேசிய கலை இலக்கியப்பேரவை பரிசையும்,சுபமங்களா பரிசையும் ,சின்னப்பபாரதி 
அறக்கட்டளை விருதையும் , ‘ஒடுக்கப்பட்டவர்கள்’ சிறுகதைத்தொகுதி கொடகே விருதையும்  பெற்றுள்ளன.
சிறந்த மேடைப்பேச்சாளரான இவர் இளவயதிலிருந்தே மார்க்சியக் கோட்பாட்டில் ஈடுபாடு கொண்டிருந்தவர். இலங்கை கம்யூனிஸ்ட்  கட்சியின் ஆயுள் கால உறுப்பினர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்  தளகர்த்த அங்கம் வகித்த நாளில் சங்கத்தின் யாழ் கிளைச்செயலாளர் பொறுப்பினை வகித்தவர். சிறுபான்மைத்தமிழர் மகாசபையில்  இணைந்து சாதிய ஏற்றத்தாழ்வுக்கு எதிரான போராட்டங்களில் பங்கு கொண்ட ஒரு சமூக விடுதலைப்போராளி.
ஏற்றத்தாழ்வற்ற சமத்துவமான சமுதாயமே அவரது இலட்சியமாக இருந்தது.
எனக்கு தமிழ் கல்வியை புகட்டிய ஆசான். எனது தந்தையாரை அண்ணர் என அழைத்தாலும் அவரது நெருக்கமான தோழர்.  எனக்கு  சிறந்த வழிகாட்டியாகவும் ,ஆதர்சனமாகவும் விளங்கிய
 அவரது இழப்பு  பேரிழப்பாகும்.

Tuesday, January 25, 2022

"மரணம் உன்னிடமிருந்து எதையாவது எடுத்துக்கொண்டு எதனை திருப்பித் தந்தது."

-கரவைதாசன்- 


நாயா மரி அட்ஸ் அவர்களின் சொந்த மகனை இழந்த அனுபவத்தில் எழுதப்பட்ட "மரணம் உன்னிடமிருந்து எதையாவது எடுத்துக்கொண்டு எதனை திருப்பித் தந்தது" என்ற அனுபவ சிறு கதையினை படித்துக் கொண்டிருந்தேன். கவிதையின் லயத்தில் அமைந்திருக்கும் அவரின் மொழி நடைக்குள் அமிழ்ந்து சாவும் வாழ்வின் ஒரு பகுதியே என்ற புதிர் அவிழ்புக்குள் பயணிப்பது ஒரு புரிதலைத் தந்திருந்தது.

அவர் மொழியில் புத்தகத்தில் குந்தியிருந்த வரிகள்

 ஒருமுறை நான் கர்ப்பமாக இருந்தபோது எனக்குள் இருக்கும் குழந்தை புலிக்குட்டி என்று கனவு கண்டேன். அப்படியே  அவன்  பிறந்தபோது வெளிர் பழுப்பு நிற கண்கள் மற்றும் தங்க நிற தோல் கொண்ட விளையாட்டுத்தனமான, மென்மையான ஆனால்  செல்லம் கொண்டவனாக  இருந்தான். அவன்  பசிய காட்டில் நடந்தான், காட்டின் பசுமையை விரும்பிக்கொண்டே ஆனால் சிங்கம் போல் நிமிர்ந்தான். எனினும் புலிகளின் தோலைப் போன்றே  நிறமுடைய அவனுடைய மயிர்களில் ஒளி தெறித்து மினுமினுப்பதைப் பார்த்தேன். அவன் தனியாக நடந்தான். அவன் ஏன் தனியாக இருக்கிறான் என்பது அவனுக்கு புரியவில்லை. நான் கனவு கண்டதுபோல் அவனிடம் புலியின் சாயலே உள்ளது. ஆனாலும் அவன் நிமிர்ந்த நடையுடனே காட்டுக்குள் மறைந்தான்.

விஷயம் என்னவென்றால், சிறந்த புத்தகங்கள் பெரும்பாலும் ஒருவரின் இதயத்தை உடைத்து விடுகின்றன. அதை படைப்பாளி  விரும்பலாம், இது படைப்பாளி மீதோ அல்லது படைப்பின்மீதோ உள்ளும் புறமுமாக பச்சாதாபத்தை ஏற்படுத்த கூடும். எதுவாயினும் சிறந்த புத்தகங்கள் தன்னையும் பிறரையும்  புத்திசாலி ஆக்கிக்கொண்டே  இருக்கின்றன.

உடைந்து போதல் என்பது  இயற்கையானது Breaking is natural.

Sunday, January 23, 2022

திச் நாட் ஹான் "மனம் கொண்டவர்களின் தந்தை" மறைவு

 -கரவைதாசன்- 

"மனம் கொண்டவர்களின் தந்தை. " எனஉலகறிந்த  திச் நாட் ஹான் காலமானார். 

போரும் அமைதியும் வாழ்வாகிப்போன உலகில் சாத்வீகப் போராட்டத்தினால் அமைதியும் சமாதானமும் ஏற்பட வாய்ப்புண்டு என்று கற்பித்த மஹாத்மா காந்தி, மாட்டீன் லூதர் கிங்-யூனியர் போன்றவர்கள் வரிசையில் வைக்கப்படும் ஒருவராக திச் நாட் ஹான் (Thich Nhat Hanh) இருந்தார்.

இவர் உலகின் மிகப் பெரிய ஜென் பௌத்தர் ஆவார்,
அவர் பௌத்தத்தைப் பற்றிய கோட்பாட்டுகளில் ஈடுபட்டிருப்பதை விட, பௌத்தத்தை நம் வாழ்விலும், அன்றாட வாழ்விலும் எப்படிப் பயன்படுத்த முடியும் என்பதில் ஆர்வமாக இருந்தார். அதன் வெளிப்பாடாய் 100 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார், அவை மிகவும் நடைமுறைக்குரியவை என்பது எனது மனக்கணிப்பு. ஊடகங்கள் அவரை "நினைவின் தந்தை" என்றும் மனம் கொண்டவர்களின் தந்தை என்றும் அழைத்தன மற்றும் மார்ட்டின் லூதர்கிங்-யூனியர் அவரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தார்.

1926ல் வியநாமில்  பிறந்த  திச் நாட் ஹான் தனது பதினாறாவது வயதினில் துறவறம் பூண்டார்,  1960களில் அமெரிக்காவுக்குப் பயணம் செய்தார். இங்கே அவர் கொலம்பியா மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகங்களில் கற்பித்தார்.

அமெரிக்காவில் வாழ்ந்த காலங்களில் தான் அமெரிக்கா வியட்நாம் மேல் மேற்கொண்ட போருக்கு எதிரான பகிரங்க கடிதத்தினை மார்ட்டின் லூதர் கிங்- யூனியருக்கு எழுதினார். தொடர்ந்து பூமி எங்கள் தாய் எனும் பதாகையின்கீழ் மக்களைச் சேர்த்து உலகின் அமைதி வேண்டி அமைதியான ஊர்வலங்கள் செய்தார். இச்செயற்பாடுகளுக்காக அங்கிருந்து பிரான்சிற்கு நாடு கடத்தப்பட்டார்.

பிரான்சில் உள்ள கான்வென்ட், பிளம் எனும் குக் கிராமத்தில் வசித்தார். அங்கே வசித்துவந்த வேளையில்த்தான் நூற்றுக்கணக்கான மனமும் பெளத்தமும் சார்ந்த புத்தகங்களை எழுதினார். அவரது 90வது வயதில் 2014 இல் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது,பேச்சுத் தொடர்பற்றிருந்த அவர் செப்டம்பர் 2015 இல் திரும்பவும் தனது முதல் வார்த்தைகளைச் சொன்னார். 2018ல் திரும்பவும் தாயகம் திரும்பினார். அங்கே து ஹியூ கோவிலில் தனது இறுதி நாட்களைக் கழிக்க அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்டார்.
சனிக்கிழமை மற்றும் கடைசி ஐந்து நாட்களில் ஹியூவில் தொடங்கும் அவரது இறுதி ஊர்வலத்திற்கு அரசாங்கம் எவ்வாறு பிரதிபலிக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

 இவரது  செய்தி எனது சிந்தையை எனதூரின் பக்கம் இழுத்துச் சென்றது. கடந்த 2012ல் நான் ஊர் சென்றபோது கன்பொல்லை  கிராமத்தின் தந்தை அதிபர் க. இராசரத்தினம் அவர்களுடன் சில நாட்களை செலவு செய்தேன். அவ்வேளை அவர் துறவி திச் நாட் ஹான் அவர்களை அவரது பெயரினை குறிப்பிடாது மஹாயானவகையைச் சேர்ந்த இந்த ஜென் பெளத்த துறவிஎன அவரைப் பற்றி  குறிப்பிட்டார். யாழ் கரவெட்டி கன்பொல்லையில் அமைந்துள்ள தமிழ் சிங்கள பெளத்த பாடசாலையான ஸ்ரீநாரத வித்தியாலயத்தின் தொடக்கத்துக்கு உறுதுணையாக அமர்ந்த வணக்கத்துக்குரிய நாரத தேரர் அவர்கள் 1966ல் வியட்நாமில் நடைபெற்ற போரை நிறுத்தக் கோரி வியட்நாமுக்கும் அமெரிக்காவுக்கும் சென்று திச் நாட் ஹான் அவர்களை சந்தித்து அவருடன் சேர்ந்து "போர் தவறு" எனும் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகச் சொன்னார். இப்பேர்ப்பட்ட வரலாறுகளை சுமந்து நிற்கும் கிராமத்தினை நினைத்து மூச்செறிகிறேன்.

Sunday, October 18, 2020


 இன்றைய தினம் 14.10.20 நெல்லியடி பிரதேசசபை பகுதியில்J/363 கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ள இராஜகிராம முன்பள்ளிக்கு பாண்ட் வாத்தியகருவிகள் தவம் அறக்கட்டளைச் செயற்பாட்டாளர் இராசையா சாள்ஸ் அவர்களால் முன்பள்ளி ஆசிரிகைகள் திருமதி நவசீலன் கிருஜா, திருமதி சிவர்தன் விஜிதா ஆகியோரிடம் வழங்கப்பட்டது. அவ்வேளை கிராம அலுவலர்- சிறந்த பண்பாளர் கணேஷ் ரதீசன் அவர்களும் பல்வேறு பொதுநல அமைப்புகளில் தன்னை இணைத்துக் கொண்டு செயற்படும் செல்வி அருமைத்துரை சாளினி அவர்களும் கலந்து சிறப்புச் செய்தார்கள்.அனுசரணை தவம் அறக்கட்டளை.

Sunday, July 05, 2020

கலீல் ஜிப்ரானும் எனது பேரக்குழந்தைகளும்

-கரவைதாசன்-
இந்தக் கிழமை நேற்றும் இன்றும் பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக பொழுது கழிகிறது. எங்களது பிள்ளைகள் மூவரையும் நல்ல மனிதர்களாய் வளர்த்தெடுத்துவிட்டோம் என்ற மதர்ப்பு எங்களிடமிருந்தது.
"பிள்ளைகள் எங்களிடமிருந்து வந்தவர்கள் ஆனாலும் அவர்கள் எங்களவர்கள் அல்ல " என்ற கலீல் ஜிப்ரானின் வார்த்தைகளுக்கு எங்களிடம் பொருள் இருந்ததில்லை.
எங்களது பேரக்குழந்தைகளுடன் கழிக்கின்ற அநேக பொழுதுகளை நான் நிழலாகவோ அல்லது காணொளியாகவோ பதிவு செய்து நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ்ந்து வந்திருக்கின்றேன். ஆனாலும் இதனை எங்களது பிள்ளைகள் கூடுமானவரை தவிர்த்து வருகிறார்கள் என்பது எனது மகன் ஸ்ரெலினுடன் உரையாடும்போது தெரிய வந்தது. அவரிடம் கேட்டபோது அவர் சொன்னார் "நாங்கள் அங்கரின்(எனது பெயரன்) படங்களை பகிர்ந்து மகிழலாம் ஆனால் அதனை அனுசரிக்கின்ற எந்த அறிவும் அவருக்கு இப்போது இல்லை. அவர் வளர்ந்த பின் ஏன் இப்படி செய்தீர்கள்? எனக் கேட்டால் எங்களிடம் பதில் இல்லாமல்ப் போகலாம் அப்பா. எனவே தான் தவிர்த்து வருகிறோம்" எனப் பதிலிறுத்தார். எனது மகனிடம் கலீல் ஜிப்ரானின் வார்த்தைகளுக்கு பொருள் இருந்தது கண்டு மகனை நினைத்து எனக்குள் இன்னும் மதர்ப்பு.
இந்த நிழல் எனது பெயரன் அகரன் (மகளின் மகன்) நேற்றைய தினம் எனது அலைபேசியிலிருந்து கிளிக் செய்தது.
இந்தக் கிழமை நேற்றும் இன்றும் பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக பொழுது கழிகிறது. எங்களது பிள்ளைகள் மூவரையும் நல்ல மனிதர்களாய் வளர்த்தெடுத்துவிட்டோம் என்ற மதர்ப்பு எங்களிடமிருந்தது.
"பிள்ளைகள் எங்களிடமிருந்து வந்தவர்கள் ஆனாலும் அவர்கள் எங்களவர்கள் அல்ல " என்ற கலீல் ஜிப்ரானின் வார்த்தைகளுக்கு எங்களிடம் பொருள் இருந்ததில்லை.
எங்களது பேரக்குழந்தைகளுடன் கழிக்கின்ற அநேக பொழுதுகளை நான் நிழலாகவோ அல்லது காணொளியாகவோ பதிவு செய்து நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ்ந்து வந்திருக்கின்றேன். ஆனாலும் இதனை எங்களது பிள்ளைகள் கூடுமானவரை தவிர்த்து வருகிறார்கள் என்பது எனது மகன் ஸ்ரெலினுடன் உரையாடும்போது தெரிய வந்தது. அவரிடம் கேட்டபோது அவர் சொன்னார் "நாங்கள் அங்கரின்(எனது பெயரன்) படங்களை பகிர்ந்து மகிழலாம் ஆனால் அதனை அனுசரிக்கின்ற எந்த அறிவும் அவருக்கு இப்போது இல்லை. அவர் வளர்ந்த பின் ஏன் இப்படி செய்தீர்கள்? எனக் கேட்டால் எங்களிடம் பதில் இல்லாமல்ப் போகலாம் அப்பா. எனவே தான் தவிர்த்து வருகிறோம்" எனப் பதிலிறுத்தார். எனது மகனிடம் கலீல் ஜிப்ரானின் வார்த்தைகளுக்கு பொருள் இருந்தது கண்டு மகனை நினைத்து எனக்குள் இன்னும் மதர்ப்பு.
இந்த நிழல் எனது பெயரன் அகரன் (மகளின் மகன்) நேற்றைய தினம் எனது அலைபேசியிலிருந்து கிளிக் செய்தது.

இரண்டு தலையணையும் ஒரு படுக்கையும்....

-கரவைதாசன்-
எனது அப்பாவும் சகோதரனும் மொட்டைமாடியிலே பாயை போட்டுவிட்டு மல்லாந்து படுத்துக் கொண்டு கனவு காண்பார்கள் கூடவே என்னையும் அழைத்து நடுவில் படுக்கவைப்பார்கள் நான் என்ன காண்கிறீர்களெனக் கேட்டால் ஒவ்வொன்றாக சொல்வார்கள். அவர்களின் கனவுகளை வேறு எவர்தனும் காண முடியாது அப்படி வித்தியாசமாக இருக்கும்.என்னையும் சேர்ந்து கனவு காணச்சொல்வார்கள் நான் தான் கேள்விச் செவியனாச்சே கேட்பேன் "என்னத்தைக் காண? "யார் சொன்னதாக ஞாபகமில்லை என் காதில் விழுந்தது "எங்கள் ஊர்க் குளத்தில் எத்தனை பேர் அடிக்கழுவினால் குளத்து நீர் வற்றும்?" ம்.. வித்தியாசம் கட்டுடைப்பான கனவு தான். ஒருவர் சொன்னது கேட்டது " மல்லாந்து படுத்துக் கொண்டு குனிந்து செய்கின்ற வேலைக்கு கனவென்று பெயரோ இதுக்க வேற கட்டுடைப்பாம்." மற்றவர். நான் சொன்னேன் "வானத்தைப் பார்த்துக் கொண்டு காணூங்கள்." இருவரும் "ஆதோ அந்த நட்சந்திரங்களைப் பாருங்கள் அவை விளக்கானால் எரிவதுக்கு எவ்வளவு எண்ணை தேவைப்படும்?. அவை தொழிலாளவர்க்கத்தின் நம்பிக்கையின் குறியீடு அல்லவா இப்பவும்கூட பிரகாசமாக எரிந்து கொண்டுதான் இருக்கின்றன. நான் மகிழ்ந்திருந்தேன். ஆகா நட்சத்திரம் பற்றி கனவு காண்கிறார்கள் நானும் சேர்ந்து கனவு கண்டு கொண்டிருந்தேன். திடீரென வானத்தை நோக்கி துப்பத் தொடங்கினார்கள். நான் கேட்டேன் "என்ன ஆச்சு?ஏன் இப்படி? " இருவரும் முந்திக் கொண்டு சொன்னார்கள். நட்சத்திரங்களை துப்பி அணைத்துவிட்டு எண்ணையின் தேவையை கணக்கிடப்போகிறோம். யார் அதிகம் அணைக்கிறாரோ அவரே விபரமானவர். எஃகி, எஃகி துப்பத் தொடங்கினார்கள். முகம் தலையணையென தெப்பமாக அவர்களின் முகங்கள்மட்டுமல்ல எனது முகமும் எச்சில் நெடில் எங்கு சென்று கழுவுவது? ஏற்கெனவே அடிக்கழுவி குளத்தைக் கலக்கி......

22.6.20

Sunday, March 29, 2020

உலர் உணவும் முதல் உதவிப்பொருட்களும் தவம்அறக்கட்டளை

நாமும் நம்மால் ஆனது செய்வோம்!
‐----‐-‐---------‐--------------------------------------------


தவம் அறக்கட்டளையினரால் உலர் உணவும் முதல் உதவிப்பொருட்களும் வழங்கப்பட்டன. ஒழுங்கு கவனிப்புக்கு நெல்லியடி பொலிசும் இராணுவமும் கிராம அலுவலரும் பணியில் இருந்தார்கள். பலவகையில் உதவிய யாழ்.நண்பர்கள் வட்டத்தினைச்சேர்ந்த நண்பர் Dr.சி.மோகன் அவர்களுக்கும் கிராம அலுவலர் க.ரதீசன் அவர்களுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் கிராமத்து இளைஞர்களுக்கும் தவம் அறக்கட்டளைச் செயற்பாட்டாளர் இ. சாள்ஸ் மற்றும் வை.திலக், அ.சாளினி அவர்களுக்கும் நன்றிகள். கூட்டமாக கூடாமல் எமது உறவுகள் ஒத்துழைத்தார்கள்.

Saturday, January 18, 2020

புத்தாடையும் பொங்கலுமென..




14.01.2020 அன்றைய தினம் எமது கரவெட்டி மேற்கு j363 கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட எழுபது குடும்பங்களுடன் புத்தாடையும் பொங்கலுமென மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டோம் . இதனை சாத்தியப்படுத்திய கிராம அலுவலர் கணேசராசன் ரதீசன் அவர்களுக்கும் பல்வேறு கிராம நல அமைப்பைச் சேர்ந்த அ.சாளினி, வை.திலக், ந.நகுலேஸ்,ல.பமிலன், சி.குரு, யோ.பிரசீலன், கா.ஜெயரஞ்சி, இ.சாள்ஸ் இன்னும் உறுப்பினர்களுக்கும் மான்புடை நன்றி. நிகழ்வில் யாழ் நண்பர்கள் வட்டத்தின் தலைவர் . Dr.சிதம்பரம் மோகன் அவர்களும் அதிபர் க.இராசரத்தினம் தம்பதிகளும் கலந்து சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஒருங்கமைப்பு அனுசரணை தவம் அறக்கட்டளையினர்.

Tuesday, November 26, 2019

சி.கா. செந்திவேல் 76 அநுபவப்பகிர்வு...

-கரவைதாசன்-

தோழர்களும் நண்பர்களும் கூடுங்கள்! பயணத்தின் பகிர்வில்.....

கன்பொல்லையில் சமத்துவத்துக்கான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை தோழர் அடிக்கடி கிராமத்துக்கு வருவார், சிலவேளையில் பொழுது சாய்ந்துவிட்டால் இரவு தங்கி நின்று செல்வார். அப்போது கிராமத்தின் சனசமூக நிலையம் கனுவில் சனசமூக நிலையம் என்னும் பெயரில் பதிவு செய்யப்பட்டு முதலியார் கோவிலடியில் இயங்கி வந்தது. இரண்டு பெரிய வாங்கில்களும் ஒரு பெரிய வாசிப்பு மேசையும் அங்கிருந்தது. அங்கிருந்த ஒற்றை வாங்கிலில் தான் தோழர் தூங்குவார். அநேகமாக அப்போராட்ட காலத்தில் ஆண்கள் யாருமே வீடுகளில் தூங்குவது இல்லை அங்கிருந்த கோவில்களிலும் ஸ்ரீ நாரதா பாடசாலையிலும் பூவரசமரங்கள் குடைபிடித்து நின்ற இருண்ட ஒழுங்கைகளிலும் ஆண்கள் இரவிரவாக விழித்திருப்பார்கள். வாசிகசாலை கிராமத்தின் நடுப்பகுதியிலும் போலிஸ் வாகனம் உள்வரமுடியாத ஒழுங்கையுடன் அமைந்திருந்ததாலும் அங்கே தான் ஊருக்கு வரும் தோழர்களை தங்கவைப்பார்கள். காலையில் ஒரு குண்டுசீனிப்பாணும் தேனீரும் அல்லது இரண்டு தோசையும் தேனீரும் பாடசாலை வளவில் எல்லோருக்கும் போல் தோழருக்கும் கிடைக்கும் மதியம் யராவது ஒரு முக்கிய தோழர் ஒருவரின் வீட்டில் உணவருந்துவார். பின் நெல்லியடித் தோழர்கள் அவரை வந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்வார்கள். அந்நாட்களில் தோழருக்கும் எனது தந்தையார் தவத்தாருக்கும் இடையில் நடந்த சம்பாசனைகளின் அநுபவங்களை கடிதவாயிலாக எனக்கு எழுதியுள்ளார். அவற்றை நான் பாதுகாத்து வைத்துள்ளேன்.

Monday, October 14, 2019

புத்தகங்கள் பறப்பைத் தருகின்றன...

-கரவைதாசன்-

நான் தனியாகவில்லை, புத்தகங்கள் என் தோழன். அவை எனக்கு பறப்பைத் தருகின்றன. புத்தகங்களை கொண்டாடினால் நீ என் தோழன் என் உறவு எல்லாம். 

" ஒரு வயோதிபன் மறையும்போது ஒரு நூலகம் மறைகிறது" என்கின்ற பிரக்ஞை ஆபிரிக்க மக்களிடம் இருக்கின்றது, எனில் அவர்களிடம் அந்த வழக்காற்றுமொழி  இன்றும் வாழ்கின்றது என எழுத்தாளர் சினுவா அச்சுவா பறைகிறார்.

"லத்தீன் அமெரிக்க எழுத்தாளன் ஒவ்வொருவனும் தன் மக்கள் கடந்தகாலம் மற்றும் தேசியம் தேசிய வரலாறு என்றாகப்பட்ட கனத்த உடலை இழுத்துக்கொண்டு வருபவன்" என கவிஞர் பாபிலே நெருடே பறைகிறார். 

தொல்காப்பியம் குறைந்தது மூவாயிரம் வருடங்கள் பழமையானது என்கின்ற பறைதல் தமிழர்களிடம் இருக்கின்றது. சிங்கத்திடம் இருந்து வந்தவர்கள் நாம்  என கூச்சத்துடன்  உரைக்கிடினும்  மகாவம்சம் எனும் நூலினை இலங்கையின் வரலாற்று நூல் என  பறைகின்ற போக்கு சிங்கள மக்களிடம் இருக்கின்றது. 

டன் எனும் ஒரு கிழவன் மலைக்குகை ஒன்றிலிருந்து டெனிஸ் மொழியின் இலக்கணத்தினை வகுத்தான் என்று பறைதல் டெனிஸ் மக்களிடம் இருக்கின்றது. 

இப்படியாக மனித சமூகம் நூலினை நேசிப்பதால் பல விடயதானங்களை தெரிந்துகொள்ளவும் சில விடயதானங்களை அறிந்துகொள்ளவும் வழியாகின்றன

நூல்கள் தங்களின் சிறந்த தோழன் என நான் வாழுகின்ற வயன் நகரத்து மக்கள் கடந்த 01.10.19 அன்று  டென்மார்க்கினிலே வாழ்கின்ற சகல இன மக்களுக்கும்  பிரசங்கித்துள்ளார்கள். நூல்களின் நேசர்களுக்கு அன்று பொன்னான நாள். சுமார் பதின்நான்கு வருடங்களுக்கு முன்பாக றீப (Ribe) மற்றும் தெற்குஜூலன்ட் (Sønderjylland ) மாவட்டங்கள் கலாசார மண்டபம் ஒன்று கட்டுவத்துக்கு ஒதுக்கிய 32.6 மில்லியன் குறோணர்களை மூலதனமாக வைத்து 29 மீற்றர் உயரம் 7500 சதுர அடி பரப்பளவினையும் கொண்ட டென்மார்க்கின் புதியதும் நவீனத்துவதுமான நூலகம் மக்கள் பாவனைக்காக அன்றைய தினம் பி.ப.4.00 மணிக்கு வயன் நகர மேயர் ஈகோன் வ்பிராயர் (Egon Fræhr) அவர்களின் பிரதமஉரையுடன் திறந்து வைக்கப்பட்டது. அவரைத்தொடர்ந்து. கட்டடத் தொகுதியின் பகுதி உரிமையாளர் Morten Oxlund, பிரதம நூலகர்Kasper Østergaar Grønkjær, சிறப்புவிருந்தினர் Jacob Steglmann உரையாற்றினார்கள். மாலை 7.00 மணி கடந்தும் நிகழ்சிகள் நடந்தன. 

ஒரு வாசகன் என்ற முறையில் எனக்கு அழைப்பு மின்னஞ்சல்  ஊடாக கிடைத்தது. உண்மையில் நிகழ்ச்சி மதியம் 12.30 மணிக்கே தொடங்கியிருந்தது. அங்கே நூலகர் மேற்றவும் நூலகர் ஹன்னேயும்  பத்து நூல்களை அறிமுகம் செய்து வைத்தார்கள். அவை 

Tysklandsarbejderen Frederiks valg.
Katte øje
Høstkarl i himlen
Dansk,Dænsk,Darnsk
Hungerhjerte
Vinter
Mit navn er Lucy Barton
Lone star 
Insekternes Planet
Hjertebank 
 நூல்கள் பற்றிய அவர்களது அறிமுக உரைகள் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தன. அஸ்கோ  உயர் நிலைக்கல்லூரியின் முதல்வர், முன்னாள் நகரசபை மேயர் எனது முன்னாள் வரலாற்று விவுரையாளர் ஹான்ஸ் ஜோர்ன், அரசியலாளர்கள் நண்பர்கள்  என பலரை சந்தித்து உரையாடும் வாய்ப்பும் கிட்டியது அன்றைய நாள் எங்கள் எல்லோர்க்கும் கொண்டாட்டமான நாளாக கழிந்தது . 

Wednesday, February 01, 2017

தொட்டுணர்ந்த ஏழு தேவதைகள் பற்றிய கதை.

-கரவைதாசன்- 
தமயந்தியின் ஏழு  கடல் கன்னிகள்  வாசிப்பு மனநிலை!

அலை ஒதுங்கிய கரையில் விசாரணை செய்! எனும் அரசியல் கோரிக்கையுடன் விரிகிறது பக்கங்கள்.
ஓலசுண்டின் அலை ஒதுங்கிய கரையொன்றில் தானை வைத்து கடல் நுகப்பினை கணக்கிட்டு தூண்டில் எறிந்த களைப்பு தீர முன்னே வங்கு நிறைந்த மீன் அளைந்த கைகளை உப்புநீரிலேயே அலம்பிவிட்டு ஈரமான கைகளை தன் சாரத்திலே துடைத்து விட்டு உழைப்பேறி மரத்துப்போன விரல் நீட்டி அழைக்கின்றார் .  கதை சொல்ல...

மொழிகளில் யார் தேவதைகளை பிரசவித்தவர்களோ அவர்களே அறிவர், தேவதைகளை காண முடியாது, பேசமுடியாது, நுகர முடியாது,  சுவைக்க முடியாது, தொட்டுணரவும் முடியாது.

எனினும்  மாந்திரீக எதார்த்தம் செய்த காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸின் கதைகளிலே வருகின்ற ஒரு இருளுடனோ அல்லது இருண்ட வீட்டுடனோ அல்லது  எச்.சி. அனசனின் கதைகளில் வருகின்ற ஏதாவது ஒரு அஃறினை பொருளுடனோ உறவாடுவதுபோல் இக்கதைகளினிலே வருகின்ற தேவதைகளுடன் சிரித்துப் பேசி கும்மாளமிட்டு குதூகலிக்க  முடிகிறது, கண்டு வரத்துகள் வாங்க முடிகிறது, சேர்ந்து நுகர்ந்து சல்லாபிக்க முடிகிறது, கிள்ளி எறிந்து வாயினிலே விட்டு மென்றும் மீதியினை கொப்பளிக்கவும் முடிகின்றது. என்றால் பிள்ளைவாளும் பறையனாரும் சபையினில் விவாதம் செய்கின்றனர் என்பது போல் சமன் செய்யப்படுகின்றது . மையத்தினை உடைத்து உதைத்து உதைத்து விளிம்பினில்  வைத்து அழகு செய்யப்படுகின்றது . இது தமயந்தி என்ற கதை சொல்லியால் முடிந்திருக்கின்றது.  தமிழ் மொழியினிலே தேவதை என்ற சொல் உசத்தியானது என்ற ஆதிக்க மனோபாவத்துக்கே பட்டா ஆகிப்போயிருக்கும் மனோநிலையில் முட்டியை உசத்தி "எங்களதும்  தேவதைகள் தான்! வயல்  உனக்கு சாமி என்றால் கடல்  எனக்கு தேவதை!" இதுவும் கர்வமான ஒரு இலக்கியச் செல்நெறிதான். அவர் உருவகித்த அந்த தேவதைகள் ராட்சத இரும்பு  இயந்திரங்கள் கொண்டு உழுது கிழிக்கப்படுகின்றபோது வீசும் இரத்தவாடை, கந்தகம் விழுந்து வெடிக்கின்றபோது எழும் கரும் புகை போன்ற  சொற் கூட்டங்கள் அவரின் எழுதுகோலினால்   வரிகளில் குந்தி  இருக்கச் செய்கின்றபோது வாசிப்போரின்   கண்களை  சிவக்க வைக்கின்றார்.

Wednesday, January 11, 2017

கன்பொல்லை தவம் இரண்டாம் ஆண்டு நினைவுகள்

- கரவைதாசன்- 
இன்று கன்பொல்லை தவம் (முத்தன் தவராசா) அவர்களின் நினைவுகளை மீட்டு நிறுத்தும் இரண்டாம் ஆண்டு. அவரைப் பற்றி அவர் எனக்கு தந்தை எனச் சிலவும் சமத்துவத்துக்கான போராளியெனச் சிலவும் பொதுவுடமைக் கட்சியாளரெனச் சிலவுமென பலதும் பத்துமாக பல்வேறு நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக இணைந்தும் பிரிந்தும் வந்தேகின்றன. அண்மையில் இலக்கிய நண்பர் சிவராசா கருணாகரன் அவர்கள் ஆனையிறவு உப்பளம் பல மில்லியன் செலவில் இலங்கை அரசினால் புனர் நிர்மானம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆனால் அரசாங்கம் உப்பளத்தினை தனியாருக்கு கையளிக்கப்போவதாகவும் இதனால் காலகாலமாக இவ்உப்பளத்தில் வேலை செய்து வந்த மாசியப்பிட்டி, தட்டுவன்கொட்டி, எழுதுமட்டுவாள், கரவெட்டி போன்ற கிராமத்து மக்களுக்கு திரும்பவும் வேலை கிடைப்பதிலுள்ள நிச்சயமின்மை குறித்தும் விசனப்பட்டு ஒரு பதிவு போட்டிருந்தார். அதனை படிக்க கிடைத்தபோது ஏனைய கிராமங்கள் ஆனையிறவுக்கு அயல் கிராமமாக இருக்கும்போது கரவெட்டியிலிருந்து வெகுதூரத்திலிருந்து வந்து அந்த மக்கள் வேலையில் சேர்ந்து கொண்ட வரலாற்றினை நான் பதிவுசெய்ய வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டதும் என் நினைவுப் புலவுக்கு வந்து எட்டி நிற்கின்றன. அது வடபுலத்து நிலவுடமைச் சமூகத்தின் எச்சங்களின் நாகரிகமற்ற கரிய பகுதி. இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு எதிராக குற்றப்பரம்பரைச் சட்டத்தினை அமுலுக்கு கொண்டு வந்து கள்ளர்சாதியினர் போன்ற ஒடுக்கப்பட்ட பகுதி மக்களை தொடர்ந்தும் ஒடுக்கியபோது அது போன்ற சட்டங்களை இங்குள்ள அதிகாரத்திலிருந்த ஆதிக்க சாதியினர் இங்கேயும் கொண்டு வர விரும்பினர். ஆனால் யாழ்ப்பாணராச்சியத்தில் அங்கம் வகித்த அந்திராசு போன்ற (கரையார) இடைச்சாதியினைச் சேர்ந்த முதலிகளினால் அவை முற்றுப்பெறாமல் போய்விட்டன. ஆனாலும் யாழ்ப்பாணத்து ஆதிக்க மையம் வடபுலத்திலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களை தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி தொடர்ந்தும் ஒடுக்கி வந்தனர். யாழ்ப்பாணத்து தேசவழமைச் சட்டம் இதன் விரிந்த பகுதி என்பது இங்கு கண்கூடு. இலங்கையில் டொனமூர்திட்டத்தின் கீழ் சர்வசன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டபோது சேர்.பொன்.இராமநாதன்  போன்ற சாதிவெறி பிடித்த தலைமைகள் தமிழில் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு வாக்குரிமை வழங்கப்படக் கூடாது என எவ்வளவு ஊழிக்கூத்து ஆடினார்கள் என்பதும் எங்களது இருண்ட பக்கங்கள் தான்.

Saturday, December 12, 2015

பழையகடுதாசி

-கரவைதாசன் -  
பேரூந்தின் பின்னே அலைந்து திரிதல் சருகுகளிற்கின்பம் எனின் காற்றிடையே பறந்து திரிந்து கம்பியிற் சிக்குண்டல் எனக்கின்பம். அதனிடையே என்பழைய செய்தி இன்னும் இருக்கிறது ஆதலால்.
-கரவைதாசன் -

இக்குறுகிய  கவி வரிகள் பல வருடங்களின் முன்னால் என்னால் எழுதப்பட்டு கிடப்பில் தூங்கிக்கொண்டிருக்கின்றன. அது  என் உணர்வு எனின், பல நினைவுகளும் அப்படித்தான். ஆண்டு சரியாக ஞாபகத்துக்கு  வருகுதில்லை அதை கண்டடைவதில் அப்படியொன்றும் கடினமில்லை ஞாபகத்துக்கு வரும்போது குறித்துக்கொள்கின்றேன். இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான சமாதானத்துக்கான கலந்துரையாடல் ஜேர்மன் சுட்காட் நகரின் புறநகர் பகுதியான பாட்போலில் நடைபெறுவதாகவிருந்து பின் இடம் மாற்றலாகி  ஜேர்மன் பேர்லின் நகரில் நடைபெற்றது.  நிகழ்வினை அவதானிப்பதற்காகவும் நிகழ்வில் கலந்துரையாடவும் அழைக்கப்பட்டிருந்தேன். பகல் முழுவதும் அரசியல் கலந்துரையாடல் மாலை உணவுவேளையின் பின் கலாசார நிகழ்வுகளின்போது இலங்கைத்தீவின் மக்கள் கலைஞர்  தோழர் ஜயதிலக பண்டாரவும் நானும் இன்னும் சில தோழர்களும் சில பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தோம் கிற்றார் வாத்தியத்துடன் ஒரு சிங்களத்தோழன், ரஞ்சித்தின் கையில் டோல்க்கி, முரளியிடம் பொங்கஸ், கரோக்கி இசையுடன் இணைந்து சில பாடல்களென இசையிலும்  நட்பிலும் தோழமையிலும் மிதந்து கொண்டிருந்தோம். தமிழ்ப் போராளிகளின் நியாயப்பாடுகளை வலியுறுத்தி தானே எழுதி  தானே இசையமைத்து  சிங்களக் கிராமம் கிராமமாக நடைப்பயணத்திலும்  கொண்டு சென்ற  பாடல்களில் சிலவற்றையும் ஜெயதிலக பாடினார் .  அப்போது இலங்கை சீனசார்பு  கம்யூனிசக் கட்சியின் தேசிய கலை இலக்கியப் பேரவைக்காக கவிஞர் முருகு இரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட இரண்டு பாடல்களை நான் பாடினேன். அதிலொன்று நெல்லியடிப்பகுதியில் தேனீர்க்கடைகளில் இரட்டைக்குவளை (இரட்டைப்பேணி) முறையினை ஒழிப்பதுக்காக போராடிய தோழன் நல்லதம்பி இளையதம்பி (கிளி ) (கன்பொல்லை) அவர்களின் மறைவுக்காகப் பாடப்பட்ட பாடல் அது. இப்பாடல் எழுபதுகளில் வெளிவந்த பாடல், துலாபாரம் திரைப்படத்தில் வரும் "காற்றினிலே பெரும் காற்றினிலே" என்ற பாடலின் மெட்டில் அமைந்துள்ளது அப்பாடல்.  

கடையினிலே நெல்லியடிக் கடையினிலே 
கறள்ப்பேணி யாவுமே கிடைக்கவில்லையே, 
உடைத்தெறிந்தான் போத்தலை 
உள்ளமர்ந்தான்  கிளியனே 
கடையினிலே நெல்லியடிக் கடையினிலே. 
சாதி வெறி தகரவே 
சஞ்சலங்கள் தீரவே 
சாட்சி வைத்தான்  சமூகம் தன்னிலே 
பாதியிலே போட்டியால் பழுது தூக்கி மாண்டானே
பாரில் அவன் வீரன் அல்லவா 
கிளியனும்  பகலவனாய்  ஒளி தருவானே. 
கடையினிலே நெல்லியடிக் கடையினிலே...

Saturday, October 10, 2015

என்ன மண்ணால் அடித்தார்களா?

-கரவைதாசன்- 


இலங்கையின் வட புலத்தில் கிராமம் என்பது சாதியக் குறியீடாகவே இருக்கின்றது என்பது நாகரிகமற்ற உண்மை. நீ உன் கிராமத்தினை சொல்லு உனது சாதியினை நான் கண்டறிவேன் என்பது ஆதிக்கசாதி மனோபாவமாக இருக்கின்றது. இதனாலேயே  ஒழுங்கை ,குறிச்சி விசாரிப்புக்கள் இரண்டு ஈழத்தமிழர்களின் முதல்ச்சந்திப்பினிலே  மிக இயல்பாக அரங்கேறும்  முடிந்தால் கண்டுபிடி  என்ற வகையில் ஒருவர் உச்சுவதும் இந்தாபார் உன்னையறிகின்றேன் என்றவகையில் மற்றவரின் தொடுப்புமாக இருக்கும். இறுதியில் அவரைத் தெரியுமோ அவர் எனக்கு உறவுக்காரன் என ஒரு பிரபலத்தினை இழுத்துச்  சாதி அறிந்து கொள்வார்கள். எனக்கோ இவர் விடுகிறார் என்ற ஆதிக்கச் செருக்கோடு ஒருவரும். விடுகிறான் இல்லை என்ற நளுவலுடன் மற்றவர் நளுவுவதுமாக பல சம்பவங்களை  கண்டு நாகரிகமுள்ள மனிதர்கள்  அருவருத்திருக்கின்றார்கள் . 
அனால் நாகரிகமற்ற இந்தச்  சமத்துவமின்மைக்கு எதிராக ஒவ்வொரு காலத்திலும் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து சிலர் வெளிக்கிளர்ந்து சில போராளித்தலைமையின்  கீழ்ப்போராடி வந்திருக்கின்றார்கள். வடபுலத்தின் பல்வேறுபட்ட கிராமங்களில் பல்வேறு வடிவங்களில் அந்தக் கால சூழ்வினைக்கேற்ப இந்த போராட்ட வடிவங்கள் அமைந்திருக்கின்றன. அந்த வரலாறுகள் சில இன்னும் பதிவு செய்யப்படாமலே செவிவழிக்கதைகளாகவே கடத்தப்படுகின்றன. சில அழிந்து தொலைந்து போகின்றன. தொலையாது நிலைக்க நான் கேட்டறிந்த ஒரு சம்பவத்தினை இன்று குறித்து வைப்பதே இக்கணத்தின் நோக்கம்.