Thursday, September 19, 2013

சிவகாமியின் அரிதிலும் அரிதான புலிவாதம்

-வேப்பூர் திருடன்-
டெல்லி மருத்துவ மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகளையும், அதனையொட்டிய கொலையையும் முன்வைத்து 13.09.2013 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்த்திய நேர்படப்பேசு நிகழ்ச்சியில் சமூக சமத்துவப்படையின் (SSP) தலைவர் சிவகாமி அய்.ஏ.எஸ்பங்கேற்று அவ‌ர் தெரிவித்த  பெண்கள் மீதான பாலியல் பிரச்சனைகளையும், அதனூடாக‌ ஈழப்புலிகள் குறித்துப் பேசிய கருத்துக்களுக்கும் எதிர்வினையாக நாகரிகமற்ற, கீழ்த்தரமான, அறிவார்த்தமில்லாத‌ விமர்சனங்களை வலைத்தளங்களில் கண்ட பின்னரே தலித் மனித உரிமைப் பார்வையில் சில குறிப்புகளை முன் வைக்கிறேன்.
—————————————-
நிர்பயா வழக்கில் நால்வருக்கு விதிக்கப்பட்ட அரிதிலும் அரிதான தூக்குத் தண்டணை குறித்து ஒடுக்கப்பட்ட மக்கள் பார்வையில் சிவகாமி மிகவும் கூர்மையான விவாதங்களை நேர்படப்பேசு நிகழ்ச்சியில் எழுப்பினார். நடுத்தர வர்க்க மேட்டுக்குடி கலாச்சார மனோபவம் கொண்ட பெண்ணிய வாதிகளுக்கும், தலித் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களுக்கும் அவரின் அடித்தளப் பார்வையிலான விமர்சனம் சற்று எரிச்சலானது. அதிலும் அவர் சொல்ல வந்த‌ கருத்து எதையும் முகம் சுளிக்காமல், மற்றவரை நேருக்கு நேர் விமர்சிக்கின்ற ஆளுமை கொண்டவராக இருந்ததினால் விவாதத்தினூடாக விடுதலைப்புலிகள் பற்றியும் பேசினார்.
அவர் பேசிய கருத்து என்னவென்றால் “விடுதலப்ப்புலிகள் ஈழத்தமிழருக்காகப் போராட்டம் நடத்தும்போது ஈழப்புலிகள் இராணுவத்தில் சில பெண்கள் இருந்தார்கள். ஈழப்புலி இராணுவத்தின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்பட்டார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு வந்த போது என்ன பதில் சொன்னார்கள் என்றால், உயிரையே பணயம் வச்சி ஒருத்தன் நாட்டுக்காக உழைக்கும்போது இது அதோட ஒப்பிடுகையில் ஒரு சாதாரண விஷயந்தான் என்பதை செய்திகளில் நான் படிச்சேன்” என்று கருத்து தெரிவித்தார். அவரின் கருத்தை இடை மறித்த  நிகழ்ச்சித் தொகுப்பாளர் குணசேகரனும், வழக்கறிஞர் அருள்மொழியும் நீங்கள் இதுவரை கேள்விப்படாத ஆதாரமற்ற செய்திகளை அவதூறாக புலிகள் மீது சொல்லுகிறீர்கள் என்று பேசினார்கள். இதனையடுத்த தொடர் விவாதங்களில் “பாரீசில் வாழும் தமிழர் ஒருவர் என்னிடம் இதனைப் பகிர்ந்து கொண்டார். என்னிடம் இதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன” என சிவகாமி விளக்கமளித்தார். இறுதியில் வழக்கறிஞர் அருள்மொழியும், திலகவதியும் இதனை மீண்டும் மறுத்தார்கள் (பார்க்க இணைப்பு – http://www.dailymotion.com/video/x14o4u3_nerpada-new_lifestyle).
———————————————–

nerpada_(new) by tamildoom

சிவகாமி எந்த கருத்தை வலியுறுத்தி விவாதிக்க விரும்பினாரோ, அந்த நோக்கம் சற்று திசைமாறி சிவகாமி மீதான புலிகள் விமர்சனத்துக்கு அது அகல வழி ஏற்படுத்தியது.

Friday, September 13, 2013

(For Sunila Sundari Janet Abeysekera)


Twenty-six years have passed.

Our first meeting,
North of Colombo,
a house on the beach.


flowers and creepers;
Beyond the fence,
fearful and shy
lovers trembling in passionate embrace.
Waves breaking incessantly.

For both of us
the agony and haste
of flight to safety.

The spark of righteous anger
a straight line on the sea,
unswerving we stayed the course,
reaching the Hague
where dawn and dusk
merged as one.

“Goluhathavaththin thunveniyamatta”  -
your  music my lullaby.

When  Subha was born,
I heard her cry
I saw your tears.

Scattered like floating lotus
defying land and time,
our wings gained strength.

Your life the essence of kindness.

Divided by land and sea and space,
our dreams
a constant bridge.

“Son, where are you?
I don’t hear your voice,
send me your picture.”
The messages you sent.
The telephone bursting with
love.

A short life,
what did we learn?

We are puddles
created by chance;
not crystals of love;
poetry, music and freedom
remain always entwined;
we can tread on fire, or
defy the wind;
we cannot lose our lives.

This year in the Hague
when we met,
my farewell was final.
From you
a smile and a tear.


R. Cheran | September 11, 2013

Translated from Tamil by Chelva Kanaganayakam

Tuesday, September 10, 2013

Sov godt søster Sunila

Prisbelønnet menneskerettighedsforkæmper og berømte aktivist Sunila Abeysekera gik bort i Colombo for et øjeblik siden.

Sov godt kammerat!

Vi har mistet en meget god ven, søster og kammerat hvis aktiviteter altid lange betegnes og uden for vores hori
sont. Hele hendes liv var dedikeret til ét mål, rettigheder for mennesker.


Vi vil savne hende. Du vil forblive i vores tanker og hjerter for evigt.


Saturday, September 07, 2013

ஒரு வரலாற்று எழுதியை வக்கிரமாக கொன்றுள்ளனர்.

-கரவைதாசன்-

இந்தியதேசத்து கல்கத்தா நகரினைச் சேர்ந்த நடுத்தர வர்க்க குடும்பத்தில் 1964ல் பிறந்த வரலாற்று எழுதி சுஸ்மிதா பானர்ஜி அவர்கள், முஸ்லீம் அடிப்படைவாதிகளால் ஆப்கனிஸ்தான் நாட்டின் பக்கிற்றா மாகாணத்திலுள்ள அவரது வீட்டின் முன்னால் மிகவும் வக்கிரமான முறையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சமூகத்தில் முன்னனியில் உள்ள பெண்களுக்கு ஆப்கானிஸ்தான் ஆபத்தான இடம் அதிலும் முஸ்லீம் அடிப்படைவாத தலிபான்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருக்கும் கிழக்கு ஆப்கானிஸ்தானில் பெண்களின் நிலை மிகவும் மோசமானது. கடந்த வருடம் உயர்பதவியில் இருந்த இரண்டு ஆப்கான் பெண்கள் லக்மான் (Laghman)  மாகாணத்தில் கொல்லப்பட்டனர். பெண்கள் சம்பந்தமான வாரியத்தின் தலைவியாக இருந்த நஜியா சித்திக்கி அவர்களும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். அந்த வரிசையில் சுய ஆற்றலும் இன்பமான காதல் வாழ்வும் கொண்ட  இந்திய எழுத்தாளர் சுஸ்மிதா பானர்ஜி கொல்லப்பட்டுள்ளார். பெண்களின் உரிமை பற்றி பேசும் எல்லோருமே அதிலும் கிழக்கு ஆப்கனிஸ்தானில் பயமுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்                  

மூன்றாம் உலக நாடுகளுக்குள் அவர்களது சிறு சிறு வித்தியாசங்களை கண்டறிந்து அவற்றை  ஊதிப்பெரிதாக்கி, எப்போதும் தமது நலன்களுக்காகவே அத்துமீறி பிரவேசித்து நாட்டாள்மை செய்யும் நேட்டோ நாட்டுப்படைகள்  ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைகளையும், பெண்களின் நிலையையும் உயர்த்தி, பெண்களுக்கு பாதுகாப்பைக் கொடுத்தமை நேட்டோ(Nato) நாடுகளின் தலையீட்டால் நடைபெற்ற சாதனை, ஓரளவேனும்  பாராட்டப்பட்ட விடயமாகும். நேட்டோ நாடுகள் 2014 இல் தமது படைகளைக் மீளப் பெற்றுக் கொள்ளவுள்ள நிலையில், பெண்ணுரிமை என்பதே  ஆப்கானிஸ்தானில் மீண்டும் கேள்விக்குறியாகவுள்ளது. 

Friday, September 06, 2013

மரணத்தில் நேசித்தவர்களே சீவியத்திலும் மறவாதிருங்கள்

-லீனா மணிமேகலை-
 

யாழ்ப்பாணத்தில் ஜூலை 20, 21 தேதிகளில் நடைபெற்ற41 வது இலக்கிய சந்திப்பை பற்றிய குறிப்புகளை எழுதும் இந்த தருணத்தில், ”நாங்கள் எல்லா தரப்புகளாலும் விசாரிக்கப்பட்டவர்கள்” என்ற ஐயா சோ.பதம்நாதனின் சொற்கள் தான் நினைவில் மோதுகின்றன. 

சிங்களப் பேரினவாதமும், ராணுவவாதத்தை மட்டுமே நம்பிய தமிழ்த் தேசிய விடுதலை இயக்கங்களும் குற்றவாளிகளெனவும், துரோகிகளெனவும் வேட்டையாடியது போக இன்னும் மிச்சமிருக்கும் கலைஞர்கள் உண்மைகளை இரத்தப்பலியென எழுத்தில் கழுவிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு சாட்சியாக நிற்கும் புலம் பெயர்ந்த படைப்பாளர்களின் இயக்கமான “இலக்கிய சந்திப்பு” மூன்று தசாப்தங்களைக் கடந்து புலத்தின் கரை சேர, வரலாறு சற்று நெகிழ்ந்து நிற்கிறது. 

தேசியம் குறித்த இலக்கிய சந்திப்பின் அரங்கில் பேசிய யதீந்திரா, அல்ஜீரிய சிந்தனையாளர் பிரான்ஸ் ஃபனானின் “தேசியம் என்பது ஒரு வெற்றுக்கூடு” என்ற கூற்றை முன்வைத்து, எப்படி தேசியம் அடிப்படைவாதிகளின் வசமிருந்தால், அவர்களுக்கு சேவை செய்யும், அது இடதுசாரிகள் வசமிருந்தால்,இடதுசாரி முகம் காட்டும், அதுவே பயங்கரவாதிகள் வசமிருந்தால் பயங்கர முகம் காட்டும் என தேசியத்தின் பண்பை நாடி பிடித்துக் காட்டினார். இன்று ஈழத்தில் தமிழ்த்தேசியம், ஐக்கிய இலங்கையில் அதிகாரப் பகிர்வு என்ற ஆரம்பகால மிதவாத தேசிய அரசியலுக்கே திரும்பியிருப்பதின் நெருக்குவாரங்களினூடே கலை இலக்கிய செயற்பாட்டாளர்கள் தங்கள் பற்றுக்கோள்களைக் குறித்த விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள்.

Sunday, September 01, 2013

நிர்மல் ரஞ்சித் தேவசிறி - சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு எதிரான தொடர் குரல்

என் .சரவணன்

தோழர் நிர்மல் ரஞ்சித்தை 11 வருடங்களுக்குப் பின் நான் மீண்டும் நேரில் சந்தித்தது, கொழும்பில் ஊடக ஒழுக்கக்கோவை பற்றி கடந்த ஜூலை 17 அன்று நடந்த மாநாட்டில். அப்போது தான் இலக்கிய சந்திப்புக்கு யாழ்ப்பாணம் செல்வதாக என்னிடம் தெரிவித்தார். ஒரு காலத்தில் ஜே.வி.பி செயற்பாட்டளராக இருந்து பின்னர் 90களில் X-group எனும் பெயரில் இயங்கி வந்த அணியில் செயற்பட்டு வந்தார்... சிங்கள சூழலில், அமைப்பியல்வாதம், நவ-மாக்சியம், பின்நவீனத்துவம் போன்றவற்றை அறிமுகம் செய்து அதன்வாயிலாக பலத்த விவாதங்களையும், புதிய அரசியல் பார்வைகளையும், மொழிப்பிரயோகங்களையும், எழுத்து நடைகளையும் கொணர்ந்ததில் இந்த X-Group க்கு முக்கிய பங்குண்டு. பின்னர் அந்த குழு உடைந்து வெவ்வேறு அணிகளானார்கள். சரிநிகர் காலத்தில் எங்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்தார்.

அவரது கட்டுரைகளையும், பெட்டிகையும் பிரசுரித்திக்கிறோம். அப்போது கூட சமாதான பேச்சுவார்த்தை, அதிகாரப்பகிர்வு என்பவற்றிற்கு எதிராக நலின் டி சில்வா பேசும் கருத்துக்களுடன் தர்கிக்க மேடைகளில் அழைக்கப்படும் பேச்சாளராக இருந்தவர் நிர்மல். பேரினவாதத்தை புலமைத்துவ அறிவோடு நிறுவ முயல்பவர்களுக்கு புலமைத்துவ அறிவோடு தென்னிலங்கை சிங்கள பேரினவாத சக்திகளுக்கு தக்க பதிலளிப்பதில் வல்லவரும் நிர்மல் தான் என்பது என் கருத்து. குறிப்பாக சொல்வதென்றால் "சமூக விஞ்ஞானிகள் சங்கம்" (SSA - Social scientist association) த்தில் குமாரி ஜெயவர்தன, ஜயதேவ உயன்கொட போன்றோருடன் பல வருடங்களாக இயங்கி வருபவர். அவர்கள் வெளியிடும் "ப்ரவாத" சஞ்சிகையில் இலங்கையின் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் உருவாக்கம், அதன் அமைப்பு, செயல் என்பன குறித்து நிர்மாலின் பல கட்டுரைகளை காணலாம்.