Thursday, February 15, 2024

தலைவராக டொமோகோ தமுரா (JCP)

-கரவைதாசன்- 

ஜப்பானிய கம்யுனிஸ் கட்சி ஜூலை 15ந் திகதி 1922ம் ஆண்டு பழமையான கிறித்தவ சமூகவாதிகளிளிருந்தும் சிந்திகட் சிந்தனாவாதிகளிலிருந்து பிரிந்து வந்த சோஷலிச சிந்தனாவாதிகளினால் டோக்கியோவில் தொடங்கபட்ட ஜப்பானிய தொன்மையான மாக்சிய சோஷலிச கட்சியாகும். அதன் ஆரம்ப காலங்களிருந்தே இக்கட்சியானது சோஷலிச முகாமினை சார்ந்தே வந்தது. 1960களில் சோவியத் சம்மேளன சமூகத்திலிருந்து சீனா தன்னை விடுவித்துக் கொண்டு வெளியேறியபோது அணிசேரா சோஷலிசக் கொள்கையினை கடைப்பிடித்து ஜேசிபி தனி வழியாகப் பயணித்தது, ஆனாலும் சீனாவில் நடந்தேறிய கலாச்சாரப்புரட்சியினை அந்நாட்களில் ஜேசிபி ஆதரித்தது. எந்தவொரு நாடும், இராணுவ முகாம்களும் அணு ஆயுதங்களையும் வைத்திருப்பதை ஜேசிபி எதிர்க்கிறது அதன் போக்கில் வடகொரியாவின் அணு ஆயுத பரிசோதனை முறைமையினை வன்மையாக கண்டித்து வருகிறது. உலகின் முதலாளித்துவ முகாம்களினால் ஏற்படுத்தப்படும் போட்டிச்சண்டைகளில் ஜப்பான் ஈடுபடக் கூடாது என்பதனை முதல்க் கொள்கையாகப் பிரகடணப்படுத்தி வருகிறது. மாறாக சர்ச்சைகளைத் தீர்ப்பது தொடர்பாக, பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியான வழிமுறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், இராணுவத் தீர்வுகளுக்கு அல்ல என்று வாதிடுகிறது. ஐக்கிய நாடுகளின் சாசனத்தை ஜப்பான் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று ஜேசிபி கூறுகிறது. இதற்காக யப்பானின் அரசியல்ச் சட்டத்தில் 9வது பிரிவை திருத்த வேண்டுமென வலியுறுத்தி வருகிறது. ஜேசிபி அதன் தொடக்கத்திலிருந்து ஜப்பானிய பெண்ணிய முகாமுடன் நட்புறவைப் பேணி வருகிறது, மேலும் ஜப்பானின் முக்கியமாக இன்னும் பெண்கள் உரிமைப் பிரச்சினைகளில் மிகவும் தீவிரமாக உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள ஊதிய இடைவெளியை நீக்குவதைக் கட்சி ஆதரிக்கிறது. மேலும் ஜப்பானிய சகல துறைகளிலும் குறிப்பாக அரசியல் வாழ்வில் அதிகமான பெண்கள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது, அதன் உச்சமாக ஜேசிபியின் மத்திய குழுவின் செயற்குழுவின் தற்போதைய தலைவராக டொமோகோ தமுரா எனும் பெண் தோழரை தேர்ந்தேடுத்துள்ளது இவரது பொறுப்புக்காலம் (பதவிக்காலம்) 2-3 ஆண்டுகளைக் கொண்டது.