Showing posts with label அ.யேசுராசா. Show all posts
Showing posts with label அ.யேசுராசா. Show all posts

Saturday, September 12, 2015

யாழ்.சர்வதேசத் திரைப்பட விழா.

04. 09. 2015 இல், யாழ்ப்பாணம் மஜெஸ்ரிக் கூட்டுத் தொகுதியில் நடைபெற்ற, பத்திரிகையாளர் மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கை!


தொனிப்பொருள்: குடாநாட்டில் சுயாதீன திரைப்படங்களைக் கொண்டாடுதல். 
விரைவில் யாழ்ப்பாணத்தில் சர்வதேசத் திரைப்பட விழாவானது ஆரம்பமாகிறது. 

விழாத் திகதிகள்: 2015  செப்ரெம்பர் 15ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை. 
யாழ். பல்கலைக்கழக நுண்கலைத்துறை மற்றும் சிலோன் தியேட்டர்ஸ்  என்பவற்றோடு  அஜன்டா 14 ஆகியன இணைந்து, முதலாவது யாழ்ப்பாண சர்வதேசத்  திரைப்பட விழாவினை ஏற்பாடு செய்துள்ளன. இத்திரைப்பட விழாக் காட்சிகள் அனைத்தும் இலவசமாகக் காட்டப்படுகின்றமை முக்கியமானதாகும். 

விழாவின் இயக்குநரான அனோமா ராஜகருணா, குடாநாட்டில் சுயாதீனமாக திரைப்படங்களினைக் கொண்டாடுவது என்பதே எங்களுடைய அடிப்படையான நோக்கமாகும். இவ்விழாவானது 30 வருடகால ஆயுத முரண்பாடு மற்றும் போரின் அழிவுகளிலிருந்து நிகழும் மீண்டெழுதலாக அமைவதோடு, கலையைப் பயன்படுத்தலானது, மக்களைச் சென்றடைதலாகும் என நாங்கள் நம்புகின்றோம். அத்துடன் இந்த விழாவானது, சினிமாவினூடாகச் சமூகங்கள் தமது எல்லைகளினைக் கடந்து, ஒருவர் மற்றவருடன் இடைவினை புரிவதற்கான ஒரு வெளியினை உருவாக்கும் எனவும் நாம் எண்ணுகின்றோம். எனக் கூறுகிறார்.

Thursday, October 17, 2013

இருவர்

-அ.யேசுராசா- 

ஏ.ஜே. கனகரத்தினா

 ஏ.ஜே. கனகரத்தினா, ஓவியர் மாற்குபோன்றோருடன் நெருங்கிப் பழகியிருக்கிறீர்கள் ; அவர்களைப் பற்றிச் சுருக்கமாகக்  கூறுங்கள்!

*  1976 ஆம் ஆண்டிலிருந்து இருவருடனும் பழகத்தொடங்கினேன். மாற்கு மாஸ்ரர் எனது வீட்டுக்கு அண்மையிலும், ஏ.ஜே. எங்கள் ஊருக்கு மிக அண்மையிலும் வசித்தனர்.
ஏ.ஜேயைப் பற்றி ஏற்கெனவே,  மனிதனாயிருந்த மனிதன் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். எனது வாழ்வில் நான் சந்தித்த மிக முக்கிய மனிதருள் ஒருவர் அவர்! பரந்த வாசிப்பும், எளிமையும், அனைவருக்கும் உதவும் பண்பும், எதற்காகவும் தனது நிலையில் நின்று வழுவிச் சோரம்போகாத ஆளுமையும் கொண்டிருந்தவர். அவருடன் ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் அக்காலங்களில் பழகியிருக்கிறேன் ; அவரிடமிருந்து நிறையக் கற்றிருக்கிறேன். அன்னா அக்மதோவா, ஃவெடரிக்கோ கார்ஸியா லோர்கா ஆகியோரின் கவிதைகள் கொண்ட சிறிய ஆங்கில நூல்களைத் தந்து, “இனிமேல்ஆங்கிலத்திலும் வாசிக்கவேண்டும், மொழிபெயர்க்கவும் முயலுங்கள்” என்று தூண்டியவரும் அவரே.  ஆரம்பத்தில் மல்லிகைக்கும் டொமினிக் ஜீவாவுக்கும் நிறைய உதவியிருக்கிறார். எண்பதாம் ஆண்டுக்காலம் வரை மல்லிகை சிறப்பாக வந்ததென்றால், அதில் அவரின் பங்கு முக்கியமானது; அலை, சமர்முதலிய இதழ்களுக்கும் பின்னர் உதவினார். எழுபதுகளில் நடைபெற்ற, இலக்கியத்தில் கலை அம்சத்தின் முக்கியம் பற்றிய கருத்தாடல்களில், பிரச்சாரப் படைப்புகளுக்கு எதிரானதாக அவரது  நிலைப்பாடு இருந்தது.மார்க்சியமும் இலக்கியமும்  சில நோக்குகள் என்ற நூலும், அவர் எழுதிய – மொழிபெயர்த்த ஏராளமான கட்டுரைகளும், அவரது கருத்துநிலைச் சார்பை வெளிப்படுத்துகின்றன. பேராசிரியர் கைலாசபதிதனது இலக்கியமும் சமூகவியலும் என்ற நூலைத்  தந்து அபிப்பிராயத்தைத் தெரிவிக்கும்படி கேட்டதாகவும், ‘இலக்கியம் பற்றிக் கூறப்பட்டுள்ளது; சமூகவியல் பற்றியும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இரண்டுக்குமுள்ள தொடர்பு கூறப்படவில்லை’ என்ற சுருக்கமான குறிப்பை மட்டும் துண்டொன்றில் எழுதித் தான்  கொடுத்ததாகவும்,  ஒருதடவை என்னிடம்