Thursday, January 26, 2006

ஆசிரியர் தலையங்கம்

நமக்கு வெளியில் நமது தலை விதி

அன்பும் தோழமையும் கொண்ட நண்பர்களே!நீண்டதொரு இடைவெளியின் பின், இனி¢, சமூக கலாசார இலக்கியத் தளத்தில் சந்தித்துக் கொள்கிறோம். கடந்த காலங்களில், கூடவே எங்களுடன் புலம்பெயர்ந்து வந்த இயக்க முரண்பாடுகள் பற்றியும் மிகப் பிழையான பழைய ஐதீகங்கள், மூடநம்பிக்கைகள், கலாசார முரண்பாடுகள், அதிகாரத்துவம் அதனையொட்டி எழும் வன்முறைகள் பற்றியும் நாம் நிறையவே எழுதியும் பேசியும் விவாதித்தும் வந்துள்ளோம். சமூகப் பொறுப்போடு எடுத்துக்கொண்ட அனைத்து விடயங்களையும் அதியுயர் ஜனநாயக கோட்பாட்டின் பன்முகத்தன்மையான மறு விசாரணை செய்தல், சுயவிமர்சனத்துள்ளாக்குதல், பிழைகளைக் கண்டறிதல், கண்டறிந்த பிழைகளை முடிவுக்கு கொண்டு வருதல் எனக் கருத்துரீதியில் எம்மை பலசந்தர்ப்பங்களில் சரி செய்தும், ஒற்றைச் சிந்தனையில் சில சந்தர்ப்பங்களில் வசதிக்குத் தக்கவாறு கணக்குத் தீர்த்தும் வந்துள்ளோம். இந்த வசதிக்குத் தக்கவாறு கணக்குத் தீர்த்தபோதுதான் எங்களிடமிருந்த சிற்றிலக்கிய ஏடுகள் பல காணாமல் போயின. எமது திசைவழியை நாம் தவறவிடல் தகுமா? “தோன்றி வளர்ந்து சிதைந்து அழிந்து, மறுபடியும் மறுபடியும் புதியன தோன்றும்” எனில் எமது சமூகக் கடமையை நாம் தவறவிடல் தான் தகுமா?எமது நிகழ்காலம் கொடூரங்களாலும் பயங்களாலும் நிறைந்துள்ளது. தாயகத்தில் தமிழ் தேசியத்தினை தொடர்ந்தும் அரைகுறைத் தீர்வுக்கதையாடல்கள் மூலமும் அல்லது வல்லரசுப் பின்னணிகளின் விளைவான சமரசங்கள் மூலமும் சமாதானத்துக்கான தீர்வானது தள்ளிக் கொண்டே செல்கிறது. புலம் பெயர்ந்த மண்ணில் ஒவ்வொரு நாளும் புதிது புதிதான பிரச்சினைகளை சந்திக்கிறோம். எமது இரண்டாம் தலைமுறையினருக்கும் எமக்குமான இடைவெளி கூடிக் கொண்டே செல்கிறது. இனி வரும் காலங்களில் அவர்கள் அந்தந்த நாட்டின் அடிக்குறிப்போடு தான் தங்களை அடையாளப்படுத்தப்போகிறார்கள். எனில் இணைவாக்கத்துக்கான முன்னெடுப்புகளை தீவிரப்படுத்துதல் இன்றைய காலத்தின் கட்டாய தேவை. இனி தொடரும்....-ஆர்-

விளம்பரம் (அல்ல)


அன்பின் அப்துல்லா,
உசிரை மசிராய்
உழுத மண்ணிலே - நான்
உன்னை எங்கு தேட...

நீங்கள் இருந்த வளவும்
எங்களது வீடும்
உனது நிக்காவில் நின்ற
எனது தலையைப் போலத்தான்...

குற்றமற்றவர்களை அறியாமலே
கற்கள் வீசப்பட்டதால்
நானும் சிலுவையை
சுமந்து கொண்டுதான் நிற்கிறேன்.
மன்னித்துக்கொள்!

சேதி! அறிந்திருப்பாய்,

ஓரு மத்தியானம்
நடுமுற்றத்தில் விழுந்து நொருங்கிய
அதே! சூரியன்தான்
எங்களது இரவுகளிலெல்லாம் - இப்போ
வரத்தொடங்கிவிட்டான்.

இது, விளம்பரமல்ல
விபரம் அறிந்தால்
உடனே பதில் போடு.

-கரவைதாசன் 1996

சிங்கள சாதியமைப்பை விளங்கிக் கொள்ளுமுன்...


-சரா-
இந்தக் கட்டுரையானது தமிழ்த் தேசத்தின் மீதான சிங்கள சாதியத்தின் தலையீட்டைப் பற்றிப் பேசுவதை விட சிங்கள சாதிய கட்டமைப்பு குறித்த ஒரு அறிமுகத்தை செய்வதிலேயே அதிக அக்கறை கொண்டிருக்கும். சிங்கள சாதியமைப்பானது தமிழ்ச் சூழலில் ஒரு பேசுபொருளுக்குரிய விடயமாக இருப்பதில்லை. அது அவ்வப்போதைய கதையாடல்களுக்குள் வந்துபோகும் ஒரு விடயமாக மட்டுமே பெரும்பாலும் இருந்து வருகிறது. சிங்கள தேசமானது அதன் இனப் பெருமிதம் பேசி, சிங்களத் தேசியவாதம் பேரினவாத ஈடாக பாசிசப் பரிமாற்றம் வரையான அதன் பரிணாம வளர்ச்சியும், ஒவ்வொரு காலகட்டத்திலும் அது வெளிக்காட்டும் பரிமாணங்களையும் கண்டுகொள்ளாமல் இலங்கையில் இனப்பிரச்சினை பற்றியோ இலங்கையில் ஒரு சமூக மாற்றம் பற்றியோ முடிவுகளுக்கு வரமுடியாது.தமிழ்ச் சூழலில் இதன் தாக்கம் பற்றிய ஆய்வுகள் தொடர்;ந்து மேற்கொள்ளப்படவேண்டும். சிங்களத் தேச உருவாக்கம் பற்றிய பார்வைகளை கண்டடைவதற்கு அதன் உட்கட்டுமானத்தில் புரையோடிப்போயுள்ள சாதியத்தை அடையாளம் காண்பதுடன், சிங்களத் தேசத்தின் பாசிசக் கூறுகளுக்கு அதன் அகப்; பண்புகள் ஆற்றிய பாத்திரத்தையும் இனங்கண்டாக வேண்டும்.இதன் அடிப்படையில் சிங்கள சாதியம் பற்றிய அறிமுகத்தையே இந்தக் கட்டுரை வழங்கும்.தேசியவாதத்தை பிற்போக்கான திசையில் வழிநடத்துகின்ற மிக முக்கிய பண்புகளாக இருப்பவை அவ் இனக்குழுமம் பற்றிய புனிதத்துவம், தூய்மைவாதம், இனப்பெருமிதம் போன்றவையே. இதன் அடிப்படையில் கட்டமைக்கப்படும் கற்பிதங்கள், வரலாற்றுத் திரிபுகள், போலிப் பிரச்சாரங்கள், மூட நம்பிக்கைகளால் எழுப்பப்பட்ட மாயைகள் போன்றனவற்றைக் குறிப்பிடலாம். அது கொண்டிருக்கும் பலத்தை உயர்ந்தபட்சம் பயன்படுத்தி இவ்வகைப்பட்ட ஐதீகங்களை திரும்பத் திரும்ப பரப்புவதன் மூலம் அது நம்பவைக்க முயலும். இவ்வாறான நம்பிக்கைகளுக்கு மதம் என்கிற மிகப் பலம் பொருந்திய ஆயுதம் பிற்போக்கு திசையில் வழிநடத்தப்படும் சகல தேசியவாதங்களுக்கும் இலகுவாக கைகொடுக்கும்.அவ்வாறு கைகொடுக்கும் முக்கிய மரபுசார் காரணியாக இந்திய உபகண்டத்தில் பல நாடுகளில் இந்த சாதியம் திகழ்ந்து வருகிறது. இதைவிட இந்த சாதியத்துக்கென்றே தனித்துவமான போக்கும் அதன் உறுதியான பண்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆளும் குழுமங்கள் எப்போதும் தமது மூலோபாயங்களை அடைவதற்காக இந்த காரணிகளை இலகுவாக பயன்படுத்திவிட்டுப் போகின்றன. ஆளும்குழுமங்களின் இருப்புக்கு இவை தந்திரமாக சமூகத்தில் கையாளப்படும். இன்றைய பூலோகமயமாக்களுக்கு கூட ஏகாதிபத்தியத்துக்கு துணைபோகிற காரணிகளாக இவை இருக்கின்றன. இது போன்ற காரணிகளை ஆளுங்குழுமங்கள் தன்னகத்தே கொண்டிருப்பதானது ஏகாதிபத்திய நலன்களுக்கு இலகுவான ஒன்றாக ஆக்கிக்கொடுக்கப்பட்டிருக்கிறது.சமூகத்தில் உள்ள மூட நம்பிக்கைகளையும், ஐதீகங்களையும் பரப்புவதிலும், அவற்றை நம்பவைப்பதையும் ஏன் இவ்வளவு இலகுவாக மேற்கொள்ள முடிகிறது?இந்த மலினத்துவ அரசியலை கொண்டு நடத்த எது இலகுவாக்கிக் கொடுத்துள்ளது.எப்போதும் நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள், கற்பனைகள், கனவுகள் போன்றவற்றிற்கு எல்லைகள் வகுக்க முடிவதில்லை. இந்த எல்லையற்ற இடைவெளிக்குள் எதனையும் போட்டுக்கொள்ளலாம். இந்த இடைவெளியைநம்பித் தான் விஞ்ஞானத்துக்குப் புறம்பான மூடநம்பிக்கைகள் ஆட்சிசெலுத்துகின்றன. இந்த இடைவெளியை நம்பித்தான் போலிகள் பல நிறுவனமயப்பட்டுள்ளன. இந்த இடைவெளியை நம்பித்தான் உலகில் அனைத்து அதிகாரத்துவமும் கோளோச்சுகின்றன. கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் இப்படித் தான் இருப்பார் என்றும் அதற்கு கண், காது, மூக்கு, எல்லாமே வைத்து நம்பவைத்தது மட்டுமல்லாமல், கண்ணுக்குத் தெரிவதில்லை என்றும், ஆதியும் அந்தமும் இல்லையென்றும், கேள்விக்குட்படுத்துவது பாவம் என்றும், பழித்தால் நரகம் என்றும் நரகம் பற்றிய கற்பிதங்களும், இவை எல்லாவற்றையும் தொடர்ந்து நிலைநிறுத்த மிரட்டுகின்ற கட்டுக்கதைகளை புனைந்து அவற்றை இலக்கியங்களாக்கி, அந்த இலக்கியங்களை உண்மையென்றாக்கி, பாடப்புத்தகங்கள் தொடக்கம் அரசு கையகப்படுத்தியிருக்கும் பிரச்சார சாதனங்கள் வரைக்கும் சகல வளங்களையும் பயன்;படுத்தி நிலைநிறுத்த எத்தனிக்கின்றன.அதிகார அலகை தக்க வைக்க இத்தகைய மாயைக்குள் மக்களை வைத்திருப்பதன் அதிகாரத்துவத்தை இலகுவாக கொண்டு நடத்த முடிகிறது. கேள்விக்குட்படுத்தும் அல்லது இதனை அம்பலப்படுத்தும் சக்திகள் மடையர்களாக்கப்பட்டு, துரோகிகளாக்கப்பட்டு, பாவப்பழி சுமத்தப்பட்டு வன்முறையால் பதிலளிக்கப்படும். மாற்றுக்கருத்துக்கள் பலங்கொண்டு நசுக்கப்படும். தமது பிரச்சினைகளை யதார்த்தமாக எதிர்கொள்ள திராணியற்றவர்களாக ஆக்கப்படும் மக்கள், இத்தகைய மரபுகளில் திளைத்திருக்கச் செய்வதன் மூலம் கடவுள்மாரிடம் பொறுப்பை விட்டுவிடுவார்கள்.சமூகத்தில் பொருண்மைகள் எல்லாவற்றுக்கும் உடனடி விளைவுகள் வேண்டும். மற்றவற்றிற்கெல்லாம் "தெய்வம் நின்றருக்கும்". இவ்வாறு பிழையான வழிகாட்டல்களுக்கு இலகுவாக பலியாகிவிடக்கூடிய முழு ஏற்பாடுகளும் தலைமுறை தலைமுறையாக கடத்தப்படுகிறது. தலைமுறை தலைமுறையாக அடக்கப்படும் மக்கள் இதற்கு பழக்கப்படுத்துகிறார்கள்.பொய்மைகளை ஏற்றும், உண்மைகளை மறுத்தும் வந்திருக்கிறோம். இந்த சமூக அமைப்பில் நாம் விரும்புகிற பொய்மைகளை விட நாம் வெறுக்கும் உண்மைகள் தான் அதிகம். மலினத்துவத்துக்கு அடிமைப்பட்டுக்கிடக்க வைத்திருக்கிறது. நாம் வெறுக்கும் "உண்மைகளை" புறந்தள்ளியே பழக்கப்பட்டு வந்திருக்கிறோம்.இந்த அடிப்படைகளை மறுத்து விட்டு புரட்சிகர சமூக மாற்றத்துக்கான திசைவழியை கண்டறிய முடியாது.தமிழ்த் தேசத்துக்குள் நிலவி வரும் சாதியம் பற்றி தமிழ்ச்சூழலில் பல ஆய்வுகள், அதனடிப்படையில் அமைந்த பல்வேறுபட்ட வழிமுறைகளைச் சார்ந்த மூலோபாய தந்திரோபாயங்களை வகுத்தல் என்பவற்றை நாம் கண்டுள்ளோம். ஆனால் இன்று சிங்கள அரச பயங்கரவாதத்தை மட்டுமன்றி இன்று சிங்கள சிவில் சமூகத்தையும் வழிநடத்த தலைப்பட்டுள்ள சிங்கள பௌத்த பேரினவாதத்தினை எவ்வாறு புரிந்து கொள்ளப் போகிறோம்? இதற்கான ஊற்று மூலம் சிங்கள தேச உருவாக்கத்தில் எங்கிருந்து வந்திருக்கிறது?சாதியமைப்பினை எதிர்த்து முதன்முதலிலும், அதிகளவிலும் போதித்தவராக கொள்ளப்படுபவர் கௌதம புத்தர். அவரின் போதனை வழிகாட்டலில் இருக்கின்ற ஒரு இனக்குழுமம், இன்னொரு இனத்தையும் ஏன் தனது இனத்துக்குள்ளும் நரவேட்டை புரிய எங்கிருந்து கற்றுக் கொண்டது? இது கூர்ந்து அவதானிக்க வேண்டியவை.தமிழ்த் தேசம் தனக்குள் நிலவுகின்ற சாதியத்தை, தற்காலிகமாக ஒத்திவைத்திருப்பதாக மேலோட்டமாக நம்பவைக்கும் எத்தனிப்பைப் போலவே சிங்களத் தேசமும் மண்ணின் மைந்தர்களான சிங்கள பௌத்தர்கள் என்ற குடையின் கீழ் சாதியம், கட்சி அரசியல், பிரதேசவாதம், வர்க்கப் பகை என எல்லாவற்றையும் தற்காலிகமாக பின்போடக்கோருகிறது இப்போது. முதலில் தமிழ்த் தேசப் போராட்டம் ஒடுக்கப்பட வேண்டும் என பகிரங்கமாக பிரச்சாரிக்கிறது அது. இவை பெருங்கதையாடல்களாக ஆக்குவதற்குரிய அனைத்து வளங்களும் ஒன்றுகுவிக்கப்படுகின்றன. தமிழர்கள் வரலாற்று எதிரிகளாக சித்திரிக்கப்படுகிறார்கள்.இவ்வாறு அறைகூவுபவர்கள் எந்த சக்தியினர்? நிச்சயமாக ஆளும் குழுமத்தினர் தான். சிங்கள-பௌத்த-கொவிகம-ஆணாதிக்க-நகர்சார்-உயர் வர்க்க குழாமினரை மையமாகக் கொண்ட சக்திகளே இந்த அறைகூவலுக்கு தலைமை தாங்கி வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.இனி, அடுத்து...

முல்லையூரானும் அவர் தம் அருவுருவமும் என்னுள்...

-யூலியஸ் அன்ரனி-
1984இல் தாயகத்தை விட்டுப் பிரிந்து 1986 இலிருந்து டென்மார்க் நாட்டில் வாழ்ந்து வரும் கவிஞர் முல்லைய+ரான் புலம்பெயர்ந்ததும் சில காலங்கள் எழுத்துத்துறையில் தன்னை ஈடுபடுத்த முடியாமலிருந்து சிறிது சிறிதாய் தன் மனநிலையை மாற்றி 1993இல் நிர்வாண விழிகள் என்னும் கவிதைத் தொகுதியையும், காகம் என்ற பெயரில் ஒரு மாத சஞ்சிகையையும் வெளியிட்டு வந்தார். சில தடைகளினால் காகம் சஞ்சிகை நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்டார். கவிஞர் முல்லைய+ரானுக்கும் நோர்வே தேன்தமிழோசைக்கும் அல்லது எனக்குமான உறவு ஏற்பட்டது. அது இப்பொழுதும் என் நெஞ்சில் பசுமையாய் விரிந்து கிடக்கிறது. கவிச்சித்திரம், கவிதைக்கோடுகள், சிறுகதைகள், நாடகங்கள், உரைச்சித்திரம் என வானொலி நிகழ்ச்சிகள் தயாரித்துக் கொண்டிருந்த வேளை, ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்குப் பின்னாலும் பாடலொன்றையும் சேர்ப்போமென முடிவெடுத்து பாடல்களை எழுதி இசையமைக்கவும் தொடங்கிவிட்டார் கவிஞர் தமயந்தி அவர்கள். அவ்வேளை மழைதூறி நிலம் நனைந்துதெரு நீளம் சலசலக்கும்களைமீறி தாய்நாடங்குபுகை மூடி இருண்டிருக்கும்..என ஆரம்பிக்கும் கவிஞர் முல்லைய+ரானின் கவிதைக்கு இசையமைத்துவிட்டு என்னைபாடச் சொன்னார். பாடல் பதிவானது. 2 வருடங்களின் பின்பு கவிஞர் முல்லைய+ரானை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. அப்போது அவர் அப்பாடலுக்கான இசை தொடர்பாகவும், பாடிய தன்மை தொடர்பாகவும் வைத்த விமர்சனம் எனக்கு உற்சாகத்தைத் தரவே, எனது வானொலி நிகழ்ச்சிகள் அடங்கிய ஒலிநாடாவை கேட்கும் படி கொடுத்தேன். சில நாட்களின் பின்னர் ஒரு நீண்ட கடிதமொன்றை எழுதி அனுப்பியிருந்தார். அதிலே எமது ஒவ்வொரு நிகழ்ச்சிகள் தொடர்பாகவும் தகுந்த விமர்சனத்துடன், தான் தமிழ் இலக்கியத்துள் புதிய வடிவமொன்றை எழுத எண்ணியுள்ளதாகவும்; அதை வானொலிக்கென எழுதுவதாகவும், வானொலித் தயாரிப்பை என்னையே செய்யும்படி கேட்டிருந்தார். அப்போது என்னுள் ஒரு பயம் ஏற்பட்டது. பொதுவாக சஞ்சிகைகள், பத்திரிகைகளில் வரும் கவிதைகள், சிறுகதைகளை வாசிக்கும் போது அவை என் மனதைத் தொட்டால், எம் சமூகத்துக்கு கொடுக்கப்பட வேண்டிய விடயங்கள் எனக் கண்டால் அவற்றை வானொலிக்குத் தயாரித்து ஒலிபரப்பியதே அதிகம் எனலாம்.ஆனால் இப்போது ஒரு கவிஞர், சிறுகதை எழுத்தாளன் தன்னுடைய படைப்புக்கள் எனது குரலிலே, எனது தயாரிப்பிலே வரவேண்டுமென கேட்கிறாரே. அதிலும் கவிஞர் முல்லைய+ரான் ஈழத்து இலக்கியப் பரப்பில் ஆழமாகப் பதிவானவர். ஆற்றல்மிக்க, கூர்மையான படைப்பாளி. முதிர்ந்த அனுபவம் வாய்ந்த எழுத்தாளன். இவரது எழுத்துக்கு எனது குரல் ஈடு கொடுக்குமா? தகுந்த முறையில் மக்களிடம் போய்ச்சேருமா? என்ற அச்சம் என்னுள் எழுந்தது. அதை அவருக்கு வெளிப்படுத்தினேன். அவரே எனக்குத் தைரியத்தைக் கொடுத்து வேலையைத் தொடங்கு முடிய முடிய ஆக்கங்கள் வந்து சேரும் என்றார்.மூன்று நாட்களுள் ~~யுத்த நாட்களில் நடத்தல் என்ற படைப்பு தபாலில் வந்தது. பார்த்ததும் அவசர அவசரமாக இசையைத் தேடினேன். ஒலிப்பதிவை ஆரம்பித்தேன். ஒவ்வொரு சொற்களும் என்னுள் தாக்கத்தைத் தந்தது. கதையுள் செல்லச் செல்ல நான் என்னை படைப்புக்குள் முழுமையாக இழப்பதை உணர்ந்தேன். நிகழ்ச்சி ஒலிப்பதிவு முடிந்ததும் சில நிமிடங்கள் என்னால் எதுவுமே செய்ய முடியாமலிருந்தது. எமது தாய்நாட்டிலே யுத்த நாட்களில் ஒரு குடும்பம் எதிர் கொள்ளும் இன்னலை மிகத் துல்லியமாக படைத்திருந்தார். ஈழத்திலே எமது மக்கள் அனுபவித்த, அனுபவித்துவரும் நிகழ்வுதான் இது. ஆனால் ஈழத்திலிருக்கும் எழுத்தாளர்களே இப்படி எழுதியிருப்பார்களா? என்று என்னுள் நானே கேட்டுக் கொண்டேன். இந்நிகழ்ச்சியைக் கவிஞருக்கு உடன் அனுப்பினேன். கேட்டுவிட்டு தொலைபேசியில் என்னை அழைத்து ஒரு குழந்தையைப் போல் விம்மி விம்மி அழுதார். கூடவே அவர் மனைவியும் அழுதார். சில நிமிடங்களின் பின் மீண்டும் என்னோடு பேச ஆரம்பித்தார். இந்நிகழ்ச்சி தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் இது சிறுகதையோ, கவிதையோ, கட்டுரையோ அல்ல இப்புதிய வடிவத்துக்கு புதிய பெயரொன்றை வைப்போமென அவரது மனைவியுடனும்;, நண்பர்களுடனும் கலந்துரையாடி ~~அருவுருவம் என்ற பெயரை சூட்டினார். இவ்வடிவத்திலேயே சில முக்கியமான விடயங்களை எழுதப் போவதாகக் கூறினார். சில நாட்களால் ~~அவர்களுடைய வாசல் எனும் தலைப்பில் அருவுருவம் ஒன்று வந்தது. வெலிக்கடை சிறையில் சித்திரவதை அனுபவித்துவரும் ஒரு நிரபராதி எழுதிய கடிதத்தினை வைத்தே அவர்களுடைய வாசலை எழுதியிருந்தார். ~~எனது புன்னகையைப் பறிப்பதில் அப்படி உனக்கென்ன இன்பமடாகட்டளை இடப்பட்ட இராணுவக் காரனே போ! போ! பொலநறுவையில் ஆள் துயிலடிக்கும் அந்த நீண்ட புத்தனை எழுப்பி வா வழக்கை விசாரிப்போம். நான் அடங்கினால் நீ வீரன் நீ அடங்கினால் நான் வீரன்.இவ்வரிகள் சோக வரிகளோடு உறவாடிக் கொண்டிருந்த என்னுள் வீரத்தைக் கொடுத்தது. கவிஞர் எழுதிய குங்குமம் ப+சப் படாத கோழிக்குஞ்சுகள், சாயிராப் ப+மி, உயிர் உள்ள சரித்திரம் போன்றவையும் என்னை மிகவும் பாதித்தது. ஒவ்வொன்றிலும் உயிரோட்டமும், பிரகாசமும் இருந்தது. இதுவரை ஐந்து அருவுருவங்களை எழுதியுள்ளார். அவற்றுள் சாயிராப்ப+மி மிகவும் வித்தியாசமானது. ஆப்கான் மக்களின் சமகாலப் பிரச்சனை, அவர்களது காதல், அந்த அரசின் தடைச்சட்டங்களால் மக்கள் படும் துன்பங்கள், அனைத்தையும் மிக அழகாக கவித்துவத்தோடு எழுதியிருந்தார். சாயிராப்ப+மியை படிப்போர் ஆப்கானிற்குள் நுளைந்து விடுவர்கள் என்பதில் ஐயமில்லை. எனவே அம்மண்ணுக்குரிய இசையைத் தேடுவதில் பல நாட்களை நான் செலவு செய்யவேண்டி இருந்தது.15 நிமிடங்கள் தொடர்ந்து நான் கண்ணீர்விட்டு அழுதுகொண்டே ஒரு நிகழ்ச்சி தயாரித்துக் குரல் கொடுத்தேன் என்றால் அது ~~உயிர் உள்ள சரித்திரம் என்ற அருவுருவத்துக்கே. என்னால் முடியாமல் பல தடவைகள் ஒலிப்பதிவை நிறுத்தி நிறுத்தித் தொடர்ந்தேன். எப்படி இவர் இதை எழுதி முடித்தார்? இந்த வார்த்தைகள் இவருடைய இதயத்திலிருந்து எப்படி விழுந்தன? இதை எழுதி முடிப்பதற்குள் என் அண்ணன் துடித்துப் போயிருப்பாரே என என் மனம் துடித்துக் கொண்டே இருந்தது.; ~~எப்படி எழுதினீங்கள்? என அவரிடம் கேட்டேன். ~~ஆ, எழுதி முடிக்கும் வரை கண்ணீர் வந்தபடிதான், ஆனால் ஒரு இடத்திலும் தடங்கல்ஏற்படவே இல்லை. சொற்கள் தடையின்றி வந்துகொண்டே இருந்தன என்றார். அருவுருவம் என்ற சித்திரத்துக்கப்பால் அவரது கவிதைகள், சிறுகதைகள், வானொலி நாடகம் போன்றவை பலவற்றையும் நான் தயாரித்திருக்கிறேன். ஒரு நாள் வானொலியில் மாவீரர் நிகழ்ச்சி செய்வதற்கு நாடகம் ஒன்று எழுதித் தரும்படி கேட்டேன். உடனே நாவற் பழங்கள் என்ற நாடகத்தை எழுதி அனுப்பினார். முல்லைத்தீவில் நடந்த உண்மைச்சம்பவம் ஒன்றை வடித்திருந்தார். 8 கதாபாத்திரங்கள் 2 பெண்கள் (தாய்மார்). அவ்விருவரும் ஒப்பாரி வைத்து அழவேண்டும். ஒலிப்பதிவின் போது கவிஞர் ஒப்பாரிக்கென எழுதிய வரிகளைப் பார்த்ததும் அவர்கள் அழுதுகொண்டே செய்தார்கள். மற்றைய ஆண்களும் மனம்கலங்கி குரல் வராது நின்ற காட்சி இப்பொழுதும் என் மனதை பிழிந்து கொண்டிருக்கிறது. கவிஞர் ஆட்கொள்ளும் சொற்களில் கூர்மையும், அழகும் நிறைந்திருக்கும். வேறு யாரும் பாவித்திராத, எழுதியிராத சொற்களை பிரயோகிப்பது இவரது சிறப்புத் தன்மை எனலாம். மனிதத்துக்காய் நேர்மையாக துணிச்சலாய் குரல் கொடுத்து வருபவர். துன்பத்தில் வாடும் உலக மக்களுக்காக எழுதுவதிலேயே திருப்தி காண்பவர். கவிஞரும் நானும் இணைந்து செய்த அனைத்து நிகழ்ச்சிகளும் நோர்வே தேன்தமிழோசையிலும், லண்டன் ஐ.பி.சி வானொலியிலும், தமிழ்நாதம் இணையத்தளத்திலும் ஒலிபரப்பப்பட்டன.

நூல் அறிமுகம்: குழந்தைகள் இளையோர் சிறக்க

-வேதா லங்காதிலகம்
தன் பிள்ளைகளை வளர்த்தெடுத்த அனுபவத்துடன் புகலிய விஞ்ஞான பிள்ளை பராமரிப்புக் கல்வி அறிவினை பிசைந்து எடுத்து இந்நூலில் உள்ள கட்டுரைகளை மொழி பெயர்த்துத் தந்துள்ளார்.-வி.சிறீ கதிர்காமநாதன் (உளவியல் நிபுணர்.டென்மார்க்)
தொகுப்பிலிருந்து:- மரணம் -இறப்பு என்பதுநாம் கதைப்பதற்கு கஷ்டமான ஒரு விடயம்தான்.ஆயினும் மரணம் என்பது நாம் கதைக்க முடியாத விடயம் அல்ல. ஒரு குடும்பத்தில் பிரியமாக நன்கு நேசிக்கப்படுபவர், பாரிய நோய்வாய்ப்படுவதோ, அன்றி மரணமடைவதோ, ஒரு குழந்தையின் வாழ்வில், இயற்கையாக அப்பிள்ளை இயங்குவதை தவிர்க்கச் செய்கின்றது. குழந்தையின் வாழ்வில் இந்த வெறுமை நிலை மிகவும் குழப்பம் தரக்கூடியது.பிரிய சகோதரர்கள், பெற்றோர், தாத்தா, பாட்டி, நண்பர்கள் என்று குழந்தையின் நெருங்கிய அன்புக்கு உரியவர்கள் உயிருக்குப் போராடும் நோய் வாய்ப்படுவது உண்டு. அன்றி மரணமடைவதும் உண்டு. பாடசாலையிலோ, பாலர் நிலையங்களிலோ, இப்படியான நிலைக்கு ஆளாகும் பிள்ளையின் நிலைமையை சிலர் கருத்துக்கு எடுப்பதில்லை. பிள்ளைக்கு கிடைக்கும் ஆதரவு, நெருக்கம் என்பன மிக எளிதாக விலகிப்போகிறது. ஒரு பொதுவான அனுதாபம் கூட அப்பிள்ளைக்கு கிடைக்கும் நிலையிலிருந்து விலகிப்போகிறது. தன் நேசத்திற்கு உரியவர்கள், பாரிய நோயில் விழும்போது அன்றி மரணமடையும்போது ஒரு பிள்ளை, ஏக்கம், துக்கம், கோபம், குற்ற உணர்வு எனும் பல உணர்வுகளை அடைகின்றது. இதைவிட குடும்பச் சூழல் - சுற்றுச் சூழல் நிலைகளும் மிகப் பாதிப்பை உண்டாக்கின்றது. உதாரணமாக தாயின் இழப்பால் தந்தை வருந்தும்போது, அல்லது தந்தையின் இழப்பால் தாய் வருந்தும்போது, பிள்ளையை- அல்லது பிள்ளையின் மனநிலையை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. அவரவர் துன்பமே அவரவர்க்குப் பெரிதாக நினைக்கத் தோன்றுகிறது. இதனால் பிள்ளைக்கு கிடைக்கும் ஆதரவு குறைகிறது. வேறு குடும்பத்துப் பெரியவர்கள் குடும்பத்தின் உள்ளே நுழைந்து குடும்ப உதவிகள் செய்யும்போது பல தாக்கங்களுக்கு, பழக்கமற்ற சூழல், குழப்பங்களுக்கு குழந்தை ஆளாகின்றது. இப்படி ஒரு சோகநிலை பிள்ளைக்கு நடந்துள்ளது என்பது பாடசாலையில், பாலர் நிலையங்களில் கூறப்பட வேண்டும். சாதாரணமாக எல்லோருக்கும் தெரிய ஏற்றுக் கொள்ளக் கூடியதாக தெரிவிக்க வேண்டும். இதனால் பாதிக்கப்பட்ட பிள்ளைக்கு எல்லோரும் தனது துயரத்தில் பங்கு கொள்கிறார்கள் எனும் ஒரு உணர்வு வரும். வுழமையாக அப்பிள்ளையைத் தொந்தரவு செய்யக்கூடாது. ஆமைதியாக இருக்கவிடுங்கள் - எனும் நிலைமையையே நாம் கொடுப்போம். ஆனால் இப்படியான அனுபவம் அந்தப்; பிள்ளைக்கோ, பிள்ளையுடன் நெருங்கிய பாதிப்புக்கு உள்ளானவருக்கோ வர இடம் கொடுக்கக் கூடாது. பிரச்சினை என்பது யாவருக்கும் பொதுவானது எனும் நோக்கில், பரந்த அளவில் நடந்தவற்றைக் கதைத்து பிரச்சினையைப் பகிரங்கப்படுத்த வேண்டும் இப்படிச் செய்வதால் பிரச்சினையை மூடிவைத்துப் பெரிதாக்காமல், அதில் ஓட்டைபோட்டு, சிறுதுண்டுகளாக்குகின்றோம். மிக எளிதானதாக ஆக்குகின்றோம: இப்பிள்ளைக்கு பல செயல்பாட்டு முறையில் நாம் உதவிகள் செய்யலாம். உதாரணமாக, படம் வரைவது: இது ஒரு நியாயமான, இயற்கையான செயல்பாடு. தந்தை இறந்த பிள்ளையானால் அவனிடம் உன் குடும்பத்தை வரைந்து காட்டுகிறாயா? அப்பாவின் கல்லறையை வரைந்து காட்டுகிறாயா? ஊhரசஉhஐ கீறிக் காட்டுகிறாயா? என்னும்போது பிள்ளை தன்னால் வார்த்தையால் கூற முடியாது மனதில் புழுங்குவதைப் வரைந்து காட்டுவான். தன் உணர்வை படமாக்கிக் காட்டுவான். பின்பு அதன் தொடர்பாக உரையாட வேண்டும். அப்படி உரையாடுவது அவனது நினைவு உலகினுள் நுழையும் ஒரு நுழைவாயிலாக இருக்கும். மற்றப் பிள்ளைகளும். அவனுடன் சேர்ந்து உள்ளே நுழைந்து பங்கு பற்றும் நிலைமை உருவாகும். பல கேள்விகள், பதில்களென சம்பாஷனை அவர்களுக்குள் நீளும். கதை வாசித்தல்: இறப்புகள் பற்றிய கதைகளை வாசிப்பது பொருத்தமாக இருக்கும். நம்பிக்கை தரும் சமய புத்தகங்கள் வாசிக்கலாம். ”எனது சொந்தப் புத்தகம்” எனும் தலைப்பில்பிள்ளை வரைந்த படங்களின் மூலம் விளக்கங்களை கேட்டு எழுதி, அதை ஒரு புத்தகமாக்கி வாசிக்கலாம். இது அவர் சொந்த எண்ணங்கள் வெளிவரும் வடிகாலாக உருவாகலாம். நாமாக எடுத்துக் கட்டி: கற்பனை மூலம் பிள்ளையின் நிலைமைக்கு ஏற்ப கதை கூறலாம். புpன் பிள்ளையையும் அப்படி கூறும்படி கேட்டும் மனம்திறந்து கூற வழி வகுக்கலாம். இதில் தனது நிலை - கற்பனையும் மனதில் இருப்பதும் சேர்ந்து வெளியே வர இடமுண்டு. கனவு: இது ஒரு ராஜபாதை. படம் கீறி முயற்சித்தோம். கற்பனைக் கதை கூறினோம். இப்பொழுது உணர்வு மூலம் முயற்சி. உதாரணமாக, இரவு நான் இப்படிக் கனவு கண்டேன். நீ கனவு கண்டாயா? எனும்போது பிள்ளையின் பய நினைவு கனவாக, அதை ஒரு பெரியவர் எதிர்கொண்டு கேட்பதாக உரையாடலாம். இங்கும் மூடிவைத்த உணர்வுகள் வெளிவரும். விளையாட்டு: சவ அடக்கம் செய்வது போல விளையாடலாம். ஒரு பறவை இறந்துவிட்டது போல, இதில் பெரியவர்களும் கலந்து கொள்ளலாம். அதோடு நாமும் ஒரு கவனிப்பாளராக இருந்த பிள்ளையின் நடவடிக்கையையும் கவனிக்கலாம் - கிரகிக்கலாம். பொம்மைகள் வைத்து விளையாடுதல்: நாம் இதில் பிள்ளை போல பங்கு கொண்டு, உள் ஆளாகவும், பார்வையாளராக, வெளி ஆளாகவும் இருந்து பங்கு கொள்ளலாம். இன்னும் இசை கேட்பது போன்று பலவகையாக ஈடுபடுத்தலாம். இதில் குழந்தை அறிய வேண்டுவது யாதெனில், மரணம், இறப்பு என்பது பற்றி நாம் கதைக்க முடியும். இது யாருமே கதைக்க கூடாத விடயம் அல்ல என்பதே. முடிந்தால் நாம் அக்குழந்தையின், அந்த உறவினரின் சவ அடக்கத்திற்கு செல்வது, ஊhரசஉhலோ அன்றி வீட்டிலோ பூச்சோடனைகளில் பங்குபெறுவது. பூச்செண்டுடன் விஜயம் செய்வது என்று பிள்ளையின் தனிமையை தவிர்த்தல் நலம். அதேபோல சம்பந்தப்பட்ட பெரியவர்களின் தனிமையும் தவிர்க்கப்படவேண்டும். மனம்விட்டுக் கதைத்து “அழுது” துயரங்களை தூரத்தள்ள வேண்டும். இப்படி துயரம் துடைக்க உதவலாம்.

நனவோடை - சிறுகதை


-மீரா
மனத்தை ஏதோ சூனியம் கவ்விக்கொண்டிருக்கிற மாதிரி ஒரு பிரமை. அப்படி ஏதும் நடந்து விடவில்லை. யாருடனும் எந்தக் கொடுக்கல் வாங்கலோ, வாக்குவாதமோ எதுவுமே இல்லை ஆனால் மனம் மட்டும் வெறுமையில் போன மாதிரி. கண்கள் மட்டும் ரீவியில் பதிந்திருக்க, கைகள் மட்டும் ஏனோ தானோ என்று ரிமோட் கொன்றோலில் சனல்களை மாற்றி மாற்றி அழுத்திக்கொண்டிருக்கிறது. றொஸ்கில் பெஸ்ரிவலில்; (Roskilde Festival) அப்படி என்னதான் இருக்கிறது. இவ்வளவு சனக் கூட்டம். ஆண்கள் தோள்களில் பெண்களும், பெண்கள் மடிகளில் ஆண்களுமாக..... ஏதோ அதில் இருக்க வேண்டும். எனக்குத்தான் அந்த இசையை சுவைக்கத் தெரியவில்லை. இவர்களால் மட்டும் வீ.வீ.வைரமுத்துவின் கூத்தை ரசிக்க முடியுமா என்ன.கை ஆபிரிக்காவுக்குத் தாவுகிறது. மக்கள் நாலா பக்கமும் சிதறி ஓடுகிறார்கள். கண்முன்னே ஒரு குண்டனின் தடியடியில் ஓர் கறுப்பனின் தலையிலிருந்து இரத்தம் பீறுகிறது. கற்கள் எங்கேயோ எங்கேயோ இருந்து வந்து விழுகிறது. ஓர் பெண்ணை நாலு பேர்; தர தரவென்று பற்றை மறைவுக்குள் இழுத்துக் கொண்டு போகின்றார்கள். அந்தப் பெண்ணில் கதறலில் புதர்ச் செடிகள் குலுங்குகின்றது. மேல் அறையில் எனது மூன்றாவது பிள்ளை வயிற்றுக்குத்தால் அழுகிறது. மனைவி இரண்டு மணித்தியாலமாக சமாதானப்படுத்துவது கேட்கிறது. ஆனால் எனக்குத்தான் மேலேபோய் ஆறதல்ப்படுத்த மனம் ஏவுதில்லை. சோபாவின் சொகுசிலும் மனத்தின் மூட்டத்திலும் மேலும் அமிழ்கிறேன். அந்த அண்ணாமலைச் சித்தர் எனக்கு ஏதோ சொல்லுமாப் போல் இருக்கிறது. சிக்கடித்த முடியும், அரைத்துண்டுத் துணியும், கால் வயிற்றுக் கஞ்சியுடன் அந்த சித்தர் நிமிர்ந்து நிக்கிற மாதிரி ஏன் என்னால் சுதந்திரமாக திரியமுடியவில்லை. சுமைகள் பொறுப்புக்கள், கடமைகள் என்று எல்லாத்தையும் தூக்கிப்போட்டுக் கொண்டு ஏன் அமிழ்ந்து அமிழ்ந்து போகிறோம். சித்தருக்கு என்ன கவலை? எந்தச் சீட்டு, என்ன கழிவு, என்ன வட்டி, என்ன பில்... என்ன கவலைகள். ஒரு சோற்றுப் பருக்கையாவது எந்த யோசினையும் இல்லாமல் சாப்பிட முடிகிறதா? கையும் மனமும் ஒன்று சேரச் சாப்பிட்டு, கண்மூடி கவலையில்லாது தூங்கி எத்தனை நாள் ஆச்சு. ரெலிபோன் மணி பயங்கரமாக அலறுகிறது. செல்லத்துரையண்ணை தனது மகளின் 5வது பிறந்தநாளுக்;கு வரட்டாம். காலம் எவ்வளவு கெதியாக ஓடுகிறது. இப்போது தான் 4வது பிறந்தநாளுக்கு போனதுபோலை இருக்கிறது. 4வது பிறந்தநாளுக்கு 3வதுக்கு வந்ததில் அரைவாசிப் பேரும் இல்லை. இம்முறை அதிலும் அரைவாசியாகத்தான் இருக்கும் ஏன் பழகின்றோம், எதுக்காகப் பழகின்றோம,; எவருடன் பழகின்றோம்... எதுவும் .இல்லாமல் அண்ணா, அக்கா, அன்ரி, அங்கிள் உறவு முறை வேறு. ஆனால் அண்ணா அக்காவிடம் அறாவட்டி வேண்டுவார். அன்ரி அங்கிளுக்கு ஆயிரம் பொய் சொல்லி அடித்து சத்தியம் செய்வார். இந்த உறவுமுறைகளால் செல்லத்துரை யண்ணையின் சுற்றுவட்டாரம் வருசத்துக்கு ஓர் தடவை குறையும். ஏன் என்மனம் எந்தக் காரணமும் இல்லாமல் எல்லா இடமும் அலைகின்றது. உந்த ரீவியில இருந்தது காணும். ஓருக்கா வயித்தாலை போற மருந்தை வேண்டிக் கொண்டு வாங்கோ. அதைக் குடுத்தால் ஆவது சுகமாய் இருக்கும். மனசி மகளை ஆற்ற முடியாமல் என்மேல் கோபமாய்க் காட்டுகிறாள். நேரத்தைப் பார்க்கிறேன் இரவு 9.30 மணியாகிவிட்டது. மூலைத் தெருவிலுள்ள மருந்துக் கடைதான் இரவு முழுக்கத் திறந்திருக்கும். காரில் போவதைவிட நடந்து போனால் மனது நல்லாய் இருக்கும் போல இருக்கு. ஐhக்கட்டையும் கைப்போனையும் எடுத்துக் கொண்டு றோட்டில் இறங்கின்றேன். றோட் வெறிச்சோடிக் கிடக்கின்றது என் மனம் போல யாரையும் காணவில்லை. விடியவிடிய திருவிழாக்கள் நடந்த தெருக்கள் கேர்வியூ சட்டம் வந்தபோது இருட்ட வர முதலே இருட்டிவிட்டது போல இந்த டென்மார்க் தெருக்களும் இருக்கிறது. கைத்தொலைபேசி அடிக்கிறது. மாமாவுக்கு ஊரிலை கடுமையாம் ஒருதரம் அதிர்ந்து போனேன். ஏதோ ஒரு கொப்பூழ்கொடி உறவு அறுந்தது போலை@ திருவிழாவுக்கு, பள்ளிக்கூடத்துக்கு, படத்துக்கு... சைக்கிளில் முன்னால் இருத்திக் கொண்டு போய்விட்டது தொடக்கம், டென்மார்க் வர வெளிக்கிட, ரெயில் ஸ்ரேசன் வரை வந்து அழுது அழுது அனுப்பியது வரை ஒன்றன்மேல் ஒன்றாக வருகிறது. எனக்கு என் மாமா வேண்டும் நீ வேண்டும் கண்கள் கலங்கிறது. மிக அருகில் ஓர் கார் வந்து விலத்திப்போகிறது. அடுத்த ரெலிபோன் வருகிறது. நீங்களும் ஊருக்கு வருவியளாமோ? மனம் நிசத்தை நோக்கி திரும்புகிறது. பக்ரறியில் லீவு கிடைக்குமா? ஏக்ஸ்ராவாகச் செய்யும் கழுவுறவேலையை எப்படி சமாளிக்கிறது. களவாய் வேலை செய்யும் பிற்சாகாரன் என்னை விடுவானோ. நான் போட்டுவர வேறயாரையும் எடுத்திடுவானோ. என்ன இது? என்னை நினைக்க விசராய் இருக்கிறது. இப்படியா இஞ்ச டென்மார்க்குக்கு வர முதல் என்ர யோசினைகள் இருந்தது. நான் மாறிவிட்டேனா? இல்லை நிசத்தை யோசித்து இலங்கைக்கு போகாமல் இருப்பதுக்கு நியாயம் கற்பிக்கிறேனா? ஏன் நான் பயப்பட வேண்டும்? இலங்கை என் நாடு இல்லையா? எதுக்கு நான் பயப்பட வேண்டும்? நான் துரோகியா? இல்லை... இல்லை... இல்லை... ஆனாலும் மனம் பயப்படுகிறது. நான் வளர்ந்த இலங்கை அல்ல அது. காணி உறுதி மட்டும் என் பெயரில் ஆனால் யாரோ அளவெட்டி ஆட்களை இருத்தி இருக்கினமாம். போனாலும் வீட்டுத் தாவாரத்தில்த்தான் நான் படுக்க வேண்டும். அல்லது தங்கைச்சி வீட்டைபோய் நிற்கலாம். மருந்தை வேண்டிக் கொண்டு திரும்புகிறேன். சந்தின் மூலையில் 3,4 பேர் பியர்ப் போத்தலுடன் நிற்கிறார்கள். பொருட்படத்தாமல் தாண்டிக் கொண்டு போகின்றேன்.சோட்ட சுவீன கோ யெம் (கறுத்தப் பண்டியே வீட்டை போ) பின்னால் கத்திக் கேட்கிறது. உடல் உதறிப் போகிறது. இருப்பினும் துணிவினை வரவழைத்துக் கொண்டு அவர்களை நெருங்கிறன். உங்களுக்குத் தெரியுமா எனக்கு டென்மார்கில் பிரஐh உரிமை இருக்கிறது. நானும் இந்த நாட்டுப் பிரiஐதான் சொல்லி முடிக்கவில்லை ஓர் வெறும் போத்தல் என் கன்னத் தடியால் பறக்கிறது. கை, கால்கள் எல்லாம் மின்னுகிறது. எனது வலு எல்லாம் போய்விட்டது. அவங்களும் போய்விட்டாங்கள். கடைசியாக அவங்கள் சொன்ன வார்த்தை மட்டும் காதில் ஒலிக்கிறது. உந்த நியாயங்களை உன்ர நாட்டில போய்க் கதை. நாக்கு வரண்டு போய்க் கிடக்கிறது. எங்கே என் நாடு” ஐக்கற் பொக்கற்றில் இருந்த பிள்ளையின் மருந்துப் போத்தல் உடைந்து போய் இருக்கிறது.

ஹிட்லரின் “எனது போராட்டம்” நூல் மேலான விமர்சனம்


-தமிழரசன் (ஜெர்மனி)
ஜெர்மனிய மாக்சியவாதிகளால் kannibalen bibel (மனிதமாமிசம் புசிப்போரின் வேதம்) எனப்பட்ட ஹிட்லரின் mein kampf நூல் மலேசிய கோலாலம்பூரைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு சென்னை சாந்தி பதிப்பகத்தால் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் மனித விரோத படைப்பு என்று கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக தடை செய்யப்பட்ட புதிய நாசிகள் மத்தியில் மட்டுமே ரகசியமாய் உலாவும் ஒரு வெளியீடு, தமிழில் துணிவோடும,; பெருமையுடனும், பாசிசியக் கருத்துக்களை சுமந்து வந்துள்ளது. கடந்த பத்து வருடங்களில் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் புதிய நாசிகளும் பாசிசக் கருத்துக்களும் பலமடைந்து வரும் வேளையில் இந்தியாவில் இந்துசமயம் சார்ந்த பாசிசச் சிந்தனைகள் செழித்து வரும்பொழுதில் இந்த புத்தகம் வெளிவந்திருக்கிறது. இதை தற்செயல்களின் தற்செயல் ஏதோ விபத்தால் எம்தலை மீதும் தமிழ்மீதும் பொறிந்துள்ளது என நம்பியிருக்க இடமில்லை. கொடிய மனித விரோதிகளும் பொய்யர்களும் மனிதநாகரிக சிதைப்பாளர்களுமான நாசிகளின் வேதம் கருத்தியல் வழிகாட்டி.. சுப்பிரமணியத்துக்கு மாபெரும் மனிதக் கவனத்துக்கும், அரசியல் கண்டெடுப்புக்கும், பிரமிப்புக்கும் உரியதாகிவிடுகிறது. ஹிட்லரின் எழுத்து மனிதம் மேலான அவமதிப்பு ஆரோக்கிய அரசியல் சிந்தனைகள் மேலான தாக்குதல் என்பதெல்லாம் அவரின் பேரறிவுக்கு கிட்டவில்லை. கிடலர் என்ற பாசிச இனவெறியனின் மனச்சிதைவு நூலான என்னுடைய போராட்டம் சுப்பிரமணியத்தின் காலவழக்கொழிந்தமொழி, உயிரிழந்த ஓட்டமற்றநடை என்பவற்றோடு எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஹிட்லரின் எழுத்திலுள்ள கொம்யூனிசம், ய+தர் மேலான பாசிச நஞ்சுகள் அவரால் கடுமையும், தீவிரமும் குறைக்கப்பட்டுள்ளதோடு மொழிபெயர்ப்பும் பூரணமற்ற கோணத்தில் எம்முன் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மொழிமாற்றம் செய்ததுடன் மட்டும் சுப்பிரமணியம் தன் எழுத்துக்கடனை முடித்துக்கொள்ளாமல் பாசிசத்தையும், ஹிட்லரையும் புகழ்ந்தேற்றி ஒரு முன்னுரையும் வழங்கியுள்ளார். விமர்சனம், வரலாற்றுணர்வு இவைகளோடு தொடர்பற்ற உயர்ந்த மதிப்புரையும,; கௌரவமும் ஹிட்லருக்கு கொடுத்து மனிதகுலத்துக்கு வழங்க ஹிட்லரிடம் ஏதோவுள்ளது என்ற சிந்தையை நிரூபணம் செய்ய முயன்றுள்ளார்.
ஆரியப் பெருமையும் உயர்வுள் குறுகிய ஹிட்லரின் பாசிச எழுத்தை மனிதகுலம் கற்றுத்தேற வேண்டிய சிந்தனையாக ஜெர்மனிய மேலாண்மைக் கருத்தே சகல மக்களினங்களும் ஆராதித்து பூண்டொழுகத்தக்கதாய் சுப்பிரமணியத்தின் எழுத்துப்படையல் பேசுகிறது. ஹிட்லர் முதல் இன்றைய புதிய நாசிகள் வரை இந்நூலை ஆரியருக்கு மட்டுமே முக்கியமாய் ஜெர்மனிய உயர் இனத்தின் பெருமைக்கானது என்று கருவதுதோடு ஆசியா, ஆபிரிக்கா, லத்தீன்அமெரிக்க பூர்வகுடிகள் என்போரும் கிழக்கு ஐரோப்பிய இனம்களும்கூட அடிமைகொள்ளப்பட்டு அழிக்கப்பட வேண்டியவர்களாகவே கருதினர். செயற்பட்டனர். இந்தியர்களை ஹிட்லர் மதித்ததே கிடையாது. ஆரியரான பிரிட்டிஸ்காரர் அவர்களை அடக்கி ஆள்வது பொருத்தமானது என்றே அவன் கருதினான். இந்தியரை அவன் சாதாரண ஆரியப்பிரிவினுள் கூட ஒப்புக்கொள்ளவில்லை என்பதும் அவனால் கீழ் நிலையிலுள்ள ஆரியராய் கருதப்பட்ட சிந்தி, ரோம இன மக்கள்கூட பூண்டோடு அழிக்கப்பட்டனர். வரலாறு அப்பபடி இருக்க இந்தியர்களும் இந்தியாவும் ஹிட்லரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை உண்டு என்கிறார் சுப்பிரமணிம், இவரிடமுள்ள பாசிச துர்நாற்றத்துக்கு இவருள்ளே சீவிக்கும் இந்து ஆத்மா மலேசியாவிலுள்ள கொம்யூனிச எதிர்ப்பு வெறி, சாதாரண முதலாளிய ஜனநாயகத்துடன் கூட உறவற்ற நிலை@ காரணம் எனலாம். உயிர்களை நேசிப்பதென்பது மனிதர்களின் கற்பனா சக்தியால் உருவானது என்ற ஹிட்லரின் கருத்து இரண்டாவது உலக யுத்தத்தில் 50 மில்லியன் மக்களின் மரணத்துக்கு காரணமானது என்ற உண்மை சுப்பிரமணியத்தின் பகுத்தறிவை திடுக்கிட வைக்கவில்லை. மனிதம் என்று சிந்திக்க முடியாத ஒருநாசி போலவே அவர் சிந்தித்து எழுதுகிறார். ஹிட்லரை மாபெரும் மனிதராக கட்டமைப்பவா,; அழிபட்ட மில்லியன் கணக்கான யூத உயிர்களைப்பற்றி முன்னுரையில் ஒரு சொல்லில் கூட இரக்கம் காட்டவில்லை. புதிய நாசிகள் இன்று ஹிட்லரை:- தலைவா,; மாமனிதர் என்று பாடிக்கொண்டு இருக்கையில் சுப்பிரமணியமும் அதே வழியில் வீரபுருசன் அஞ்சா நெஞ்சுடையான் என்று அதிசயப்படதக்க வகையில் தன் பாசிச உணர்வைக் காட்டுகின்றார். முன்னுரை இறுதியில் ஜெர்மனிய பாசிஸ்டுகளின் ஆண்டு கணக்கிடும் முறையைப் பின்பற்றி 2001 ஆண்டை 2603 எனக்குறிக்கும் சுப்பிரமணியம் ஹிட்லர் எவ்வாறு முழுமனித இனத்தையே காயப்படுத்தினான் என்பதையோ, பாசிசத்தின் வெற்றி என்பது முழுமனிதகுல நாகரீகத்தின் தோல்வியாக முடியுமென்பதையோ மதிப்பிட முடியாத பாழடைந்த மனிதராக எம்முன் நிற்கிறார். இவரை ஒரு மொழிபெயர்ப்பாளராகவோ! எழுத்தாளராகவோ! ஏன் சாதாரண மனிதப்பிறவியாகக் கூட அங்கீகரிக்க எந்த மானிடப் பார்வை கொண்ட மனிதனும் விரும்பான்.
ஹிட்லரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்களான எபர்காட் யேக்கல்
(Eberhard Jåekel) (Sebastien Huffner) செபஸ்டியான் கூவ்னர் யோகிம் பெஸ்ற்
(Joachim Fest) இவர்களோடு இறுதியாக ஹிட்லரின் சரிதியை எழுதியுள்ள கூர்ட் பட்சோல் (Kurt Påtzold) மான்பிரன்ட் வைஸ் பேக்கர் (
(Manfred Weissbcker) உட்பட பலதரப்பட்ட மதிப்பீடுகள் இருந்தபோதும் இவை ஆதரிப்பு, பாராட்டுகளைக் கடந்து விமர்சன மதிப்பீடுகளுக்கு உட்பட்டு எழுதியவர்கள். 1938ல் ஹிட்லர் குண்டுத்தாக்குதலில் இறந்திருந்தால் ஜெர்மனியின் மிகப் பெரும்தலைவனாக பிஸ்மார்க் வரிசைக்கு உயர்த்தப்பட்டு இருப்பான் என்று யோகிம் பெஸ்ற் (Joachim Fest) குறிப்பிடுகிறார். பாசிசத்தை மாக்சிய இயக்கங்களின் எதிர்வினை என்பவர்களும் பாசிசத்தையும் சோசலிசசிந்தனையையும் சமப்படுத்திவிடும் முதலாளித்துவ சீர்திருத்தவாதப் புனிதர்களும் உள்ளனர். பாசிசத்தின் பேரழிவை மனிதகுலம் தன்னைத்தானே அழித்துக்கொள்ள எடுத்துக்கொண்ட முயற்சியாக சகலதையும் சகலமனிதர் தலைமீதும் சுமத்திவிட்டுக் கதறும் அவநம்பிக்கைவாதிகளும்; இருக்கின்றார்கள். தமிழ்ப் பரப்பில் பாசிச விசக்கிருமியைப் பரப்பும் மனித அழிவுக் கோட்பாட்டை பரிந்துரை செய்யும் அற்பவாத மிகைவுணர்வுடன் வரும் சுப்பிரமணியத்தை அவரின் இந்து பாசிச உள்ளுணர்வையும் கண்டறிவது அவசியம்.

எனது போராட்டம் நூலின் பின்புலங்கள்.
எதுவித அரசியல் சமூகத்தகுதியுமற்ற அலைந்து திரியும் இலக்கற்றவனான ஹிட்லருக்கு 1914 ஆண்டின் முதலாவது உலகயுத்தம் ஜெர்மனிய இராணுவ வீரன் என்ற அடையாளத்தை பெற்றுத் தந்தது. அவன் யுத்தமுனையில் எந்தச் சாதனையும் படைத்துவிட வில்லை. ஆனால் ஜெர்மனிய இராணுவத்தின் பாசிச ஆக்கிரமிப்புக் கருத்துக்களே அவனது அரசியல் அடிப்படையாயிற்று. இதனுடன் அவனது நாடோடி வாழ்க்கையுள் பொறுக்கிக் கொண்ட ஜெர்மனிய தேசியவாதப் பெருமைகளும் சேர்ந்து கொண்டன. ஓஸ்திரியாவின் பழைமைவாத கத்தோலிக்க வாழ்வியலின் பெறுபேறாக விமர்சனச்சுதந்திரம், தனிமனிதக்கருத்தியல் என்ற போக்குகளை கண்டறியாதவனாகவே இருந்தான். அவனது வாழ்வின் தொடக்கம் கட்டளைக்குப் பணிதல், ஏவல்மனிதனின் வாழ்வு இவைகளில்தான் பயிற்றப்பட்டு இருந்தது. யுத்தம் முடிவடைந்து 1919ம் ஆண்டில் இவன் தீவிர பாசிசக் கட்சியான DAPயில் சேருமுன்பு தொழிலாளர் இயக்கங்கள், அதன் தலைவர்கள் பற்றி அரசு உளவுத்துறைக்கு தகவல் தரும் வேலையில் ஈடுபட்டமையால் Acht groschen junge (எட்டு குரோசன் நாணயத்துக்கு காட்டிக் கொடுப்பவன்) என்று அழைக்கப்பட்டவன். அரசுக்கு எதிராய் பின்பு சதிப்புரட்சியல் இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த காலத்திலேயே எனது போராட்டம் நூல் எழுதும் வேலை ஹிட்லரால் தொடங்கப்பட்டது. ஹிட்லர் சிறையிருந்த பயான் (Bejern) பிரதேசத்தில் 1918 - 1924 காலத்தில் குடியரசுப் புரட்சிவாதிகள், மாக்சியவாதிகள், தொழிலாளர்கள் பலர் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். முக்கிய 20 புரட்சியின் தலைவர்களுக்கு மரணதண்டனையும் பல நூறு பேருக்கு ஆயுட்தண்டனையும் விதிக்கப்பட்டது. பலர் விசாரணைகள் இன்றியே சுட்டுக் கொல்லப்பட்டனர். மோசமான மனிதவதைக் குள்ளாயினர். ஆனால் சதிப்புரட்சி செய்து அரசைக்கவிழ்க்க முயன்ற ஹிட்லருக்கும் அவனது கூட்டாளிகளுக்கும் கிடைத்தது ஒருசில வருட சிறைத் தண்டனையே. பல இராணுவ பாசிஸ்டுகள் உடனடியாகவே விடுவிக்கப்பட்டனர். அந்த மட்டத்துக்கு பயானின் இராணுவ பாசிஸ்டுகளும் சகல அதிகார சக்திகளும் ஹிட்லரை ஆதரித்தன சலுகை வழங்கின.
சிறையில் ஹிட்லர் மிகவும் சுதந்திரமாய் செயற்பட்டான் தினசரிப் பத்திரிகைகள் வாசிக்க, வாசிகசாலையை உபயோகிக்க, கடிதங்கள் எழுத, பிறந்தநாள் கொண்டாட, வெளியே இருந்து வரும் பரிசுகளை பெற என்று அக்காலத்தில் சிறைவாழ்வில் நினைத்துக்கூட பார்க்க முடியாத உபசரிப்புகள் அவனுக்கு சிறையில் இருந்தது. தன் அரசியல் நன்பர்களையும், ஏனைய கைதிகளையும் சந்திக்க, உரையாடவும், பியர் குடிக்கவும் அவனால் முடிந்தது. இந்த சுதந்திரமான சிறை நிலைமைகளில்தான் ஹிட்லரின் எனது போராட்டம் எழுதப்பட்டது. அதை எழுத சிறைப் பொறுப்பதிகாரியின் தட்டச்சுயந்திரம் ஹிட்லருக்கு வழங்கப்பட்டது. உண்மையில் இந்த நூலை ஹிட்லர் தனியே எழுதும் ஆற்றலை பெற்றிருக்கவில்லை. இவனுடன் சிறையிருந்த பாசிஸ்டுகளான கெஸ் (Hess) எமில் (Emil Mauricce) என்போரின் உதவி, தகவல்கள் ஆலோசனைகள் இவைகளுடன் கூட்டுமுயற்சியாக எழுதப்பட்டது, என்பதோடு நூலில் பெரும்பகுதி ஹிட்லரின் மேடைப் பேச்சுகள், கட்சியின் தீர்மானங்கள் ஆகியவைகளின் தொகுப்பாகவே இருந்தது. இருந்தபோதும் ஹிட்லர் சிறையிலிருந்த 1924 டிசம்பர் 20ந் திகதி முதல் 1928 நவம்பர் 17ந் திகதி வரையிலான 4 வருடகாலத்தில் கூட இச்சிறிய நூல் எழுதி முடிக்கப்படவில்லை. ஹிட்லர் விடுதலை அடைந்த பின்பே இவை மீண்டும் கூட்டாகச் சேர்ந்து எழுதி முடிக்கப்பட்டது என்றே கொள்ளப்பட வேண்டும். ஆனால் உலகம் அறியாப் பூச்சியான சுப்பிரமணியம் ஹிட்லர் அதனை தனியே எழுதினான் என்பதாய் எம்மிடம் ஒப்புவிக்கிறார்.
இந்த நூலில் ஹிட்லர் யூதர்களையும் ஜெர்மனியர் அல்லாதோரையும் கோழைகள், மடையர்கள் என்பதோடு தொழிலாளர் இயக்கங்களில் முக்கிய தலைவர்களாக இருந்த யூதர்களை ஜெர்மனிய வெறியை மூட்டுவதன் மூலம் எதிர்கொள்ளமுயன்றான். கொலனிகள் எம்மால் வெல்லப்பட வேண்டும் இதற்கு யூதத்தையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஹிட்லர் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு தத்துவ ஊட்டம் வழங்கினான். யூதர்களுக்கு எதிராய் மட்டுமல்ல மனிதர்களை வெள்ளை, கறுப்பு, மஞ்சள் என்று பாகுபடுத்தி வெள்ளை ஆரியருக்கு முதன்மை இடமும் ஜெர்மனியருக்கு உயர்ந்த இனம், எசமான இனம், இனப்பெறுமானம் மிக்கவர்கள் என்று பாசிசவர்ணனை செய்வது ஹிட்லரை வரைமுறையற்றுப் புகழும் இந்தக் கறுப்பு மனிதரான சுப்பிரமணியத்துக்கு எவ்வாறு உறைக்காமல் போனது. ஹிட்லரின் கருத்துக்கள் மானுடவியல் ரீதியில் பொருளற்ற இனவெறியே என்பது ஹிட்லர் காலத்திலேயே மாக்சியவாதிகளாலும், தொழிலாளர் இயக்கங்களாலும் துலாம்பரமாகக் காட்டப்பட்ட ஒன்றாகும்.
வர்க்கப் போராட்டத்தையும் வர்க்கம் சார்ந்த சமூக இருப்பையும் எதிர்க்க தொழிலாளிகளின் எழுச்சிக் கோலத்தை தகர்க்க சமூகமானது ஆரியா,; யூதர்கள் இடையேயான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாய் பேசும் ஹிட்லர், ஆரியரின் தொன்மையான இயற்கை வாழ்வுக்கு அழைப்பது பாசிசத்தின் மூத்தோர்களில் ஒருவனான நீட்சேயின் ஞாபகத்திலாகும். ஹிட்லருக்கு பேச்சாளியாகும் சுப்பிரமணியம் ஹிட்லரின் சுயசரிதைபோல் உலகில் வேறு எந்த சுயசரிதையும் பிரசித்தி பெறவில்லை என்று இறும்பூதெய்துகிறார். எனது போராட்டத்தின் முதலாவது பாகம் 1930வரை 23,000 பிரதிகளும் இரண்டாம் பாகம் 13,000 பிரதிகளும்தான் விற்பனையாகியது. 1933 ஹிட்லரின் கட்சியான NSDAP யில் ஒருமில்லியனுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தபோது கூட மொத்தமாக விற்கப்பட்ட தொகை 287,000 இதழ்களைத் தாண்டவில்லை. (விற்பனையில் பதினைந்து வீத வருமானம் ஹிட்லருக்கு கிடைத்தது). பின்பு பாசிஸ்டுக்கள் பதவிக்கு வந்த பின்னரே இந்த நூல் அச்சிட்டு எங்கும் பரப்பப்பட்டது. இன்றுவரை இந்த நூல் 16 மொழிகளில் கிட்டத்தட்ட 10 மில்லியன் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன. இப்போது கிழக்கு ஐரோப்பிய நாட்டு மொழிகளில் புதிய பாசிஸ்டுக்கள் இதை அச்சிட்டு பரப்புகின்றனர். இதற்கான பெருமளவு நிதிகள் ஜெர்மனிய பாசிச இயக்கங்களாலும் அமெரிக்க பாசிச இயக்கங்களாலும் வழங்கப்படுகின்றன.
ஹிட்லரின் எனது போராட்டத்தில் தனது சிறை வாழ்வு பற்றிய சித்தரிப்புக்கள் பெரும்பகுதி பொய்களால் நிரம்பியது. அவன் சிறையில் துன்பங்களைக் கண்டதாய்ப் பேசுவது இத்தகையதே. 1925 ஜனவரியில்; ஹிட்லர் 3 தடவை பயான் அரசுத் தலைவனான கைன்றிச் கெல்ட் (Heinrich Held) சந்தித்துப் பேசினான். மாக்சியத்தை எதிர்க்கும் போராட்டத்தில் தான் அவர்களுடன் முழுமையாய் இணைவதாக உடன்பட்டதோடு தன்னுடைய சதிப்புரட்சி முயற்சியானது தவறானது என்றும் ஒப்புக்கொண்டான். இதையடுத்து 1925 பெப்ரவரியில் NSDAP மேலான தடை நீக்கப்பட்டது. 1924 களிலேயே பல பயான் அரசியல்வாதிகள் ஹிட்லர் இனி அரசுக்கு ஆபத்தானவன் இல்லை என்று பேசி வந்தனர். இச்சம் பவங்கள் ஹிட்லருக்கு மேல்மட்டத்துடன் இருந்த உறவைக் காட்டுகின்றன. மேலும் ஹிட்லர் தான் சிறையில் இருந்து வெளியே வந்தபோது பிச்சை எடுக்கும் வறுமை நிலையாய் இருந்ததாகக் கூறுகின்றான். ஹிட்லர் சிறை செல்ல முன்பே அவன் பொருளாதாரநிலை சிறப்பாகவிருந்தது. அவன் 1928 இல் சிறையிலிருந்து விடுதலையாகி வந்தவுடன் 20,000 Nஐர்மனிய மாக்குகளுக்கு புதிய பென்ஸ் கார் வாங்கியதோடு வருடம் 1,000 மார்க் வாடகைக்கு குடியிருந்த வீட்டைவிட்டு 4176 ஐர்மனிய மாக்குகள் வருட வடகை கொண்ட புதிய வீட்டுக்கு குடி பெயர்ந்தான். இதே வீட்டை 1929ல் ஒபர்சால்பேக்கில் (Obersalzberg) விலைக்கும் வாங்கினான். இதே வருடம் முன்சன் நகரில் 9 அறை கொண்ட பெரிய வீட்டை வாடகைக்கும் எடுத்தான். தனது செயலாளர் கென்சுக்கு மாதாமாதம் 300 மார்க்குகளும் தனது மெய்ப்பாதுகாவலருக்கு 200 Nஐர்மனிய மாக்குகளும் சம்பளம் வழங்கியதோடு தன் காதலிக்கு பல ஆயிரம் மார்க் பெறுமதியில் நகைகள் வாங்கி பரிசாக வழங்கவும் மிகவும் விலை உயர்ந்த ஓவியங்கள் வாங்கி சேமித்து வைக்கவும் ஹிட்லருக்கு நிதித்தட்டுப்பாடு இருக்கவில்லை. 1929இல் இவன் அரசவரிவதிப்புப் பகுதிக்கு சமர்ப்பித்த தனது வருடாந்த வருமானமாக 15,448 Nஐர்மனிய மாக்குகள் என்று காட்டியிருந்தான். இக்கால கட்டத்தில் nஐர்மனிய பெருநிறுவனங்களிடமிருந்து பெற்ற பல மில்லியன் Nஐர்மனிய மாக்குகள் அவனிடம் இருந்தன. எனவே ஹிட்லரின் நூல் விபரிப்புக்கள் உண்மையோடு எந்த தொடர்புமற்றவை.
ஹிட்லர் தான் DAP என்ற பாசிசக் கட்சியில் 7வது உறுப்பினராக சேர்ந்ததாகவும் அக்கட்சியின் மிக முக்கிய தலைவராகத்தான் இருந்ததாகவும் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் ஹிட்லர் DAP கட்சியில் 555வது உறுப்பினராக இணைந்ததோடு அதில் முக்கியமற்ற உறுப்பினராகதான் இருந்தான். பெண்கள் புனிதமாக யூத மற்றும் அந்நிய கலப்பற்று இருக்க வேண்டும.; ஆரிய இனப் பெருமை பேணவேண்டும். என்று எனது போராட்டத்தில் எழுதிய ஹிட்லர் தனது ஒன்றுவிட்ட சகோதரியின் மகளும் காதலியுமாகிய காலிரவுபல் (Gali Raubel) ஐ ரகசியமாக கண்காணிப்பது சவுக்கால் அடிப்பது என்று சித்திரைவதை செய்யத் தயங்கியதில்லை. 1931ல் இவளது மரணம் தற்கொலையல்ல ஹிட்லர் இவளை கொலை செய்தான் என்ற சந்தேகங்களும் நிலவின.
கலப்பு இரத்தம் உடையோர் கசநோயாளிகள் பரம்பரை வியாதி உடையோர், உடல் ஊனமுற்றவர்கள் மனப்பிறழ்வு நோயுடையோர். மனித வர்க்கத்தின் பெருமையைக் குலைக்கும் சைத்தான்கள் என்று எழுதினான் ஹிட்லர். ஆனால் இவனோ சொந்தமாய் யூத nஐர்மனிய கலப்புக் கொண்டவன். இவனின் நெருங்கிய பாசிஸ்ட் நண்பனான கோபல்ஸ் உடல் ஊனம் கொண்டவன். இவ்வாறு பாசிசம் பொய்களை போலி நம்பிக்கைகளை புனிதப்படுத்தியே தன்னைக் கட்டிக் கொண்டது.
முதலில் ஹிட்லரின் எனது போராட்டம் நூல் பொய், மடத்தனம், கோழைத்தனம் இவைகட்கு எதிரான மூன்றரை வருடப்போராட்டம்; (Diereinhalb Jahre kampf gegen luge dummheit und feigheit) என்று பெயரிடப்பட்டு பின்பே பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

சூலமும் காணியும் - கே.டானியல் சொன்ன கதை.


தகவல் - மு.சி.கந்தசாமி

காலை ஒன்பது மணியைத் தாண்டிக் கொண்டிருந்த வேளை டானியல் கராச்சின் முன்பு நண்பர்கள் சிலருடன் கதைத்துக் கொண்டிருந்தார். அந்நேரம் ஒருவர் தாண்டித் தாண்டீ உள்ளே வந்து கொண்டிருந்தார். இவர்களைக் கண்டதும் “இஞ்சே டானியல!; எனக்கு இண்டைக்கு எப்படியும் இரண்டு சூலமடித்து தரவேண்டும். என்ன செலவு எண்டாலும் பரவாயில்லை எனக்கு இண்டைக்கு வேணும். “ என்றார். “ஐயா இந்தப் பட்டடயிலே வேலை செய்யிறவன், ஒரு குடிகாரப் பரதேசி, அவனுக்கு நேரகாலம் எண்டு ஒண்டும் இஞ்சே இல்லை. நினைச்ச நேரம் வருவான், போவான். வாற நேரம் கண்டு கொள்ள வேண்டியதுதான். அவன் இப்ப எங்கை எண்டாலும் குடிச்சுக் கொண்டு நிற்பான்.” சொல்லிக் கொண்டே மைத்துணரைப் பிடித்து அவனைப்போய் எங்கை நிண்டாலும் பிடிச்சுக் கொண்டு வா என்று சைக்கிளையும் கொடுத்து அனுப்பிவிட அவனும் ஒரு மணி நேரத்துக்குள் ஆளைப் பிடித்து சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வந்துவிட்டான். “ தம்பி விஷயத்தை ஆருக்கும் சொல்லாதயுங்கோ! மூண்டடியில ஒண்டும், இரண்டடியில ஒண்டுமா ரெண்டு சூலம் அடிச்சாப் போதும். நான் இப்ப அலுவலா ஒருக்கால் நல்லூருக்கு போயிட்டு ரெண்டு, மூண்டு மணிக்கிடையிலே வந்திடுவன்” அவர் சென்று விட்டார். பட்டடடையில் வேலை நடந்து கொண்டிருந்தது. போனவர் திரும்பி வந்து விட்டார். “ ஐயா உங்களின்ர வேலை எல்லாம் முடிஞ்சுது சூலத்தை ஒருக்கா பாருங்கோ!” அவர் கையிலே எடுத்து நீள அகலம் எல்லாம் பார்த்து விட்டார். மனதுக்குள் திருப்தி. “எவ்வளவு தம்பி ரெண்டுக்கும்.” “ஒரு எழுபத்தைந்து ரூபா வரும்.” பொக்ற்றிலிருந்து நூறு ரூபாவை எடுத்து “ தம்பி உன்ர காசை எடுத்துப் போட்டு மிச்சத்தை பட்டடடைப் பொடியனட்டை கொடுங்கோ.” டானியல் சூலங்களை துடைத்து பேப்பரால் சுற்றிக் கொடுத்து விட்டு “ ஐயா இந்த சூலங்கள் ஏதும் புதிசா கோயிலுக்கு கொடுக்க போறியளோ? “தம்பி உனக்கு என்ன விசரோ? நான் ஏன் கோயிலுக்கு செலவு செய்து சூலம் கொடுக்க வேணும். ஒண்டும் இல்லையடா தம்பி, என்ர வீட்டுக்குப் பக்கத்தே ஒரு எட்டுப் பரப்புக் காணித்துண்டு கிடக்குது. அதை வாங்க இப்ப பத்து வருஷமா கேட்டுக்கொண்டுதான் இருக்கிறன். கேட்க கேட்க காணி என்ன குட்டியோ போடப் போகுது. எண்டு சொல்லிச் சொல்லி என்னைப் பேக்காட்டிப்போட்டு இப்ப ஆரோ ஓருத்தன் வெளிநாட்டுக் கப்பலிலே வேலை செய்துபோட்டு வந்தவனுக்கு விக்கப் போறனெண்டு அவன்ர பெண்டில் சொல்லித்தான் எனக்குத் தெரியும். என்னைத்தவிர வேறு ஒருத்தனை வாங்க விடுவனே.” “அப்ப நீங்கள் என்ன செய்யப்போறியள்?” “தம்பி அந்தக் காணிகுள்ள ஒரு அரசமரமும் ஒரு புளிய மரமும் ஏழு எட்டு பனையும் தான் நிற்குது. இண்டைக்கு இரவுக்குள்ளே அரசமரத்துக்கு கீழ இந்த ரெண்டு சூலங்களையும் இறுக்கப்போறன். பரியாரி சின்னத்தம்பியைக் கொண்டு இரவிலே அரசிலே பேய், பிசாசு குளறு சத்தம் கண்டதாய், கேட்டதா கதை உலாவவிட்டிட்டன். சூலத்தையும் குத்தி விட்டால், ஆரடா தம்பி இந்தக் காணியை வாங்கப் போறான். இவனுக்கு எப்பிடி இடும்பு கொடுக்கிற தெண்டு இந்த சொத்தி நல்லையனுக்குத் தான்ரா தெரியும்.” அவர் சூலங்களுடன் புறப்பட்டுவிட்டார். டானியலும் மனதுக்குள் சிரித்துக் கொண்டார். இரண்டு, மூன்று மாதங்கள் கழிந்து விட்டன. அவர் டானியலைச் சந்திக்க வந்தார். “தம்பி அடிச்சுத் தந்த சூலம் நல்ல வேலை செய்து போட்டுதடா. அவன் பேசின பேச்சைவிட மூவாயிரம் குறைச்சுத்தான் காணிக்குக் காசு கொடுத்து எழுதினனான். ஒரு நூறு ரூபா சிலவு, ரெண்டு சூலம்,ஒரு இறுக்கு, இப்ப காணி எனக்கு. தம்பி சில இடத்துக்கு ஆண்டவனை பாவிச்சால்த்தான் நாங்க நல்லா இருக்க முடியும். அது தான்ர இந்த சொத்தி நல்லையன்” என்றாராம்.
தகவல் - மு.சி.கந்தசாமி

கவிதை

நட்பு
உடைந்த உள்ளங்களுக்கு
ஒத்தடம்,
சிதைந்த உறவுகளுக்குப் பாலம்.,
எதையும் எதிர்பாராத நட்பு.
எட்டாப்பழம்
சொந்தங்கள் சரியாக இருந்தால்
சொர்க்கம் அருகில் இருக்கும்
சொந்தங்கள் பழுவானால்
சொர்க்கம் எட்டாப் பழமே.
உன்மானம்
கற்றவரின் அவமானம்
கலியுகத்தின் சன்மானம்
கலைஞரின் தன்மானம்
மனிதா! அது உன்மானம்.
நம்பிக்கை
மரத்துப்போன இதயத்தில்
மலரும் ஆசைகள் இல்லை
புதைந்த நினைவுகளின் ரணங்களில்
வேரூன்றி நிமிர்ந்து வளர்கிறது நம்பிக்கை.

- ஆதியா -

களிப்பூட்டும் பொய்யும், கசப்பூட்டும் மெய்யும் !


-ஜென்னி-
அந்தந்த காலத்துக்குரிய பொது அபிலாசைகளைக் கண்டறியாத, கண்டபின் அதனை நிறைவு செய்யாத ஒரு தலைமைதனது லட்சியத்தில் வெற்றிகொண்ட ஒரு தலைமையாக இருக்கமுடியாது.ஆனால் இந்த ~~பொது என்கிற விடயமானது கூர்ந்து நோக்க வேண்டிய ஒன்று. .பெரும்பான்மை அபிலாசைகளை நிறைவேற்றுதல். என்பது ஜனநாயகப் பண்பின் பிரகாரம் சரியானதாகவே பட்டாலும், அடிப்படை தர்மத்தை (ethics) நிறைவு செய்வதாகத்தான் அது இருக்குமென்றில்லை. சில பலமான கருத்துக்கள், நியாயமானதாகவும் சிறுபான்மையானதாகவும் கூட இருக்கமுடியும். எளிமையாக சொல்லப்போனால், நாம் இன்று நம்பி ஏற்றுக்கொண்டுள்ள அத்தனையும் உண்மையாகவும் நியாயமாகவும் தான் இருக்குமென்பதில்லை. அது அப்போதைய நேரத்தின் இன்பமூட்டுபவையாகவும், சுயகளிப்பூட்டுபவையாகவும் இருக்கும். மாறாக நாம் மறுக்கின்ற பல விடயங்கள் நமக்கு கசப்பானவையாகவும் உண்மையாகவும் இருக்க முடியும்.இந்த இடத்தில் மீண்டும் பொது என்கிற விடயத்துக்கு வருவோம். பெரும்போக்காக (அயiளெவசநயஅ) இருக்கிற அனைத்தும் நிச்சயம் உண்மையாகவும், சரியாகவும்தான் இருக்கும் என்றில்லை. மாறாக சிறுபான்மை கருத்துக்களாக இருப்பதால் அது பிழையாகத்தான் இருக்குமென்றில்லை.பலகோடி ஆண்டுகளாகப் புரையோடிப்போன மரபொன்றினை சமீப காலத்தேயே பகுத்தறிவுவாதத்தால் குறுகியகாலத்தில் வெற்றி பெறச்செய்துவிடமுடியாது என்பதை நாம் அனைவரும் உணர்வோம்.ஒரு இனத்தின் சமூக கட்டமைப்பானது, வரலாற்று ரீதியில் பல மரபுகளையும், அந்த மரபோடிணைந்த பல்வேறு புனைவுக் கூறுகளையும், மூட நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், மாயைகள், புனைவுகள், திரிபுகள் என்பன கலாசார பண்பாட்டு படிமங்கள் மீது குந்திக்கொண்டு தான் இருக்கும். இது நமது தமிழ் மரபில் மட்டுமல்ல உலகின் பல இனங்களின் மரபிலும் காணக்கிடைக்கின்ற கூறுகள்.சமூக உருவாக்கமானது, பல கட்டங்களைத் தாண்டி சமூகமாற்றங்களை கால வளர்ச்சிக்கமைய எதிர்கொள்கிற பொழுது, இவற்றில் இருக்கின்ற பல்வேறு பிழையான கூறுகளைக்களைவதில் தான் அந்த சமூகத்தின் ஆரோக்கியமான, புரட்சிகர சமூக மாற்றத்தின் வெற்றி தங்கியிருக்கிறது.நாட்டில் நமது போராட்டமானது ஒரு தேசிய போராட்டம் என்கிற ரீதியில், தேசிய உணர்வையும், அதன் கூறுகளையும் பாதுகாப்பதிலேயே நமது தேசியவாதத்தை தக்கவைக்கலாம் என்கிற வாதத்தின் விளைவாக புரையோடிப்போயுள்ள பல பிழையான மரபுகளைத் தோளில் சுமந்தபடி நமது சமூகம் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை உளச்சுத்தியுடன் ஒப்புக்கொள்வோம்.நம்மை வழிநடத்தும் உண்மைகள் பல நமக்குக் கசப்பானவை, நம்மால் ஜீரணிக்க முடியாதவை, நம்மை மகிழ்வூட்டடாதவை. மாறாக நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, பல பிழையான ஐதீகங்கள், மற்றும் புனைவுகள் நமக்கு களிப்பூட்டுபவையாக உள்ளன.கசப்பான உண்மைகளை விட்டுத் தப்பியோடுபவர்களாகவும், களிப்பூட்டும் பிழையான ஆதிக்க மரபுக்கூறுகளை தொடர்பவர்களாகவும் நாம் உள்ளோம். இதனை பண்பாட்டின் பேரால், கலாசாராத் தின் பேரால், தேசியத்தின் பேரால் நாம் தொடர்ந்து வருகிறோம் என்பதே யதார்த்தம்இந்த யதார்த்தத்தை உணராதவரை, இதன் மீது எமது தேடலை செய்யாதவரை, இதில் தேவையான மாற்றங்களை கொணடுவராதவரை, நமது உள்ளார்ந்த வளர்ச்சியில் மாற்றம் காணப் போவதில்தில்லை நாம். அது போல நமது அடுத்த சந்தியினரின் ஆரோக்கியமான வெற்றியையும் இது பாதிக்கச்செய்யும். இது நமது ஆரோக்கியமான சமூகமாற்றத்தில் வெற்றியையும் இறுதியில் ஒட்டுமொத்த பாதிப்பை ஏற்படுத்தும்.

Til mit ufødte barn


Mine forældre har en forvrænget holdning til alt,
De er gammeldags…primitive…alt for konservative,
men jeg må indrømme min søster har mere mod end mig,
hun tager de emner op med dem…som jeg tænker på.
Mine forældre er en generation.
Jeg er en anden.
Min søster er en tredje.

Sidst -
Søster: mor hva’ synes du om en abort?
Mor: det er modbydeligt, ingen har ret til at slå et barn ihjel!
Det er mod guds vilje.
Far: en abort er de unges løsning på deres umodne handling.
Et misbrugt påfund.
Søster: hva’ mener du?
Far: det kan jeg ikke forklare…
Mor: skal vi ikke skifte emne…
Jeg tænker; jeg er bestemt imod abort,
Hvad mine forældre tænker og siger, er sikkert rigtigt!
Til mit ufødte barn,
Jeg kan tilbyde:
- en luft der kvæler dig i udslip af forurenede gasser, jeg ikke kender formler for…
- hvis du er pige, ville du måske i østen blive slået ihjel med forgiftet mælk…
- hvis du er barn i vesten ville du blive offer for omsorgssvigt, skilsmisse…
- en verden hvor en pige ikke engang kan stole på sin far, bror eller onkel pga. incest…
- bliver du mørk vil folk der er lysere hakke ned på dig…
- et liv, hvor du kan vente dig at blive gammel alene, forladt af børnene…
- nogle steder vil dyrene blive behandlet som menneskets bedste ven og andre steder som forlystelse af enhver karakter
- en verden hvor mange er fattige og få rige
- en verden, hvor man har mere end en gud og en religion, hvilket er til mere skade end gavn…
- en hverdag hvor pengene styrer mennesket og ikke omvendt…
- et liv hvor man bruger mere tid på mobilen og computeren end det menneske der står lige ved siden af en…
- en hverdag hvor man ikke har plads nok i landets fængsler til de mange kriminelle
- …
Nu -
Jeg tænker,
Folk har en grund til abort…jeg har tusind.
Tilgiv mig, mit ufødte barn…ufødte…

-Sathya Sathyadas-

Wednesday, January 25, 2006

ஒரு பன்முக படைப்பாளி ஏ.சிவானந்தன்


-எம்.ஏ.ஜே-

-அரசியல,; இலக்கியம், சிந்தாந்த தளங்களில் இனம், மொழி, நாட்டின் எல்லை இவற்றைக் கடந்து சர்வதேசியவாதியாக வாழும் மனிதர்
Race and Class ஏ.சிவானந்தம். இவர் இலங்கைத்தமிழர். இலங்கையில் மிகச் சொற்பமாக பட்டதாரிகள் இருந்த காலகட்டத்தில் பட்டதாரியானவர். ஆனாலும் இந்த நிறவாத சமூகத்தின் சமரச அமைப்புக்களான பல்கலைக் கழகங்கள், Racial Equality Commission போன்றவற்றில் பதவி பெற அலையவில்லை. அல்லது தகவல் தொழில் நுட்ப சாதனங்களில் பேட்டியளிக்கின்ற அல்லது தோன்றுகின்ற (media figure) பெரிய மனிதராகவும் தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை. இவரது எழுத்துக்கள் ஆரம்பத்தில் கையெழுத்துப் பிரதிகளாகவே வெளிவந்திருக்கின்றன. எண்பதுகளின் ஆரம்பத்தில் தான் இவரது எழுத்துக்கள் VERSO, PLUTO பதிப்பகங்களால் நூல் வடிவில் கொண்டுவரப்பட்டுள்ளன. A Different Hunger, Writings on Black Struggle for Socialism, When memory Dies , Where the Dance is ஆகிய நூல்களையும் 40ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து Race and Class சஞ்சிகையையும் வெளிக்கொண்டு வரும் ஏ.சிவானந்தம் அவர்கள் தன்னை ஓர் எழுத்தாளானக சொல்வதை மறுக்கின்றார். தன்னை ஓர் கதை சொல்லி என்றே சொல்லிக்கொள்கிறார். இலக்கியம், கவிதை, ரீ.எஸ்.எலியட்,ஸீபர்ட், பீத்தோவன் என்று ஆழ்ந்து போகும் சிவானந்தன் சொல்கிறார். நாம் நிறைய எழுத்தாளர்களைப் படிக்கிறோம். ஆனால் பாருங்கள் அவர்கள் அநீதி பற்றி, ஏகாதிபத்தியம் பற்றி எதுவும் சொல்வதில்லை. ஆனால் எனக்கு கோபத்தில் அல்சர் வந்துவிட்டது. என்கிறார். மேலும் தன்னை ஓர் நடவடிக்கையாளன்

Sunday, January 01, 2006

தளத்திலும் புலத்திலும் அரசியலின் நவவடிவம், திசைவழி, அதன் பரிமாணம்...


என்.சரவணன்

90களின் ஆரம்பத்தில் விடிவு சஞ்சிகையின் ஆசிரியர் குழவில் இணைந்து தனது எழுத்துப் பணிகளை ஆரம்பித்த சரவணன் 1992 தொடக்கம் 8 வருடங்களாக சரிநிகர் ஆசிரியர் பீடத்தில் பணியாற்றிவிட்டு தற்போது சுதந்திரப் பத்திரிகையாளராகவும், ஆய்வாளராகவும், விமர்சகராகவும் இருந்து வருகிறார். மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம் மற்றும் தமிழ்த்தேசியம் சார்ந்த விடயங்களில் அதிகளவு படைப்புகளை தமிழிலும் சிங்களத்திலும் செய்து வந்த இவர் நடைமுறைச் செயற்பாட்டாளரும் கூட. தற்போது புலம்பெயர்ந்து நோர்வேயில் வசித்துவரும் இவர் நோர்வேயிலிருந்து வெளிவந்த பறை என்கின்ற சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தவர். இவரது ஒரு சில நூல்களில், பெண்களின் அரசியலும் அரசியலில் பெண்களும் என்கிற நூல், இலங்கையின் பெண்களின் அரசியல் வரலாறு குறித்து தமிழில் பேசப்படுகின்ற ஒரே வரிவான நூலாக உள்ளது. இலங்கையில் ஒட்டுமொத்த அரசியல் நீரோட்டம் பாசிசத்தை நோக்கி எவ்வாறு நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது குறித்த கருத்தாக்கங்களில் சமீப காலமாக அதிகளவு தேடல்களை செய்துவருபவர்.



புகலிடம் பற்றிய சிந்தனைப் போக்கின் இன்றைய வடிவத்தை எவ்வாறு விளக்குவீர்கள்?

தமிழ்த் தேசப் பிரச்சினை முனைப்பு பெற்று தமிழர்கள் இங்கு உயிர்வாழ்வுக்கு உத்தரவாதமில்லாமல் ஆக்கப்பட்டதன் பின்னரும், தமது அடிப்படை உரிமைகளை சொந்த நாட்டில் அனுபவிக்க முடியாமல் ஏற்பட்டதன் காரணமாகவும், 80களில் தமிழர்களின் புலப்பெயர்வு அதிகரித்தது. அதன் இன்றைய நிலை வடக்கு கிழக்கின் மொத்த சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இன்று புலம்பெயர்ந்துள்ளனர். இன்று தேசியம் பற்றிய பல்வேறு சிந்தனைகளின் போது உலகில் புகலிடம் என்பது தனித்து பார்க்கப்படவேண்டிய கருத்தாக்கமாக வளர்ந்துவிட்டிருக்கிறது. உலகில் உள்நாட்டு நெருக்கடி மிகுந்த நாடுகளிலிருந்தெல்லாம் இவ்வாறு புலம் பெயர்ந்தவர்களில் எத்தனை பேர் திரும்பி தமது தாயகங்களுக்கு திருப்பிப் போகப் போகிறார்கள் என்கிற கேள்வியும் மிகவும் அழுத்தமாக இன்று எழுப்பப்படுகின்றன. பிரச்சினை தீரும் பட்சத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களில் 5 வீதமாவது திரும்பி வருவார்களா என்கிற கேள்வி பலமாகவே இருக்கிறது. இந்த பின்னணியை வைத்துத் தான் புலம்பெயர்ந்தவர்களின் அரசியல் எதிர்காலம், அவர்களின் தனித்துவமான தேவைகள், பண்பாட்டு மாற்றங்கள், தேசத்துடனான உறவுகள் எல்லாமே பார்க்கப்பட வேண்டும். எனவே தான் புகலிட இலக்கியங்கள், புகலிட அரசியல், புகலிட சிந்தனைப் போக்குகள் என்றெல்லாம் நவவடிவம் பெறும் தமிழியப் போக்கை காண்கிறோம்.


இவற்றின் விளைவுகளை எவ்வாறு இலக்கியத்தில் காண்கிறீர்கள்?


ஏலவே இலக்கியத்துறை சார்ந்திருந்தவர்களின் படைப்புகள் போக அங்கு போனதன் பின்னர் இலக்கியப் படைப்புருவாக்கங்களில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் பலர். ஆரம்பத்தில் இந்த இலக்கியங்கள் அவர்களது தாயக நினைவுகளை அடியொற்றியதான படைப்புகளாக வந்துகொண்டிருந்தன. ஆனால் அதன் இன்றைய பரிமாணம் தாயக நினைவுகளுக்கு அப்பால் சென்று இன்றைய புகலிட வாழ்வு குறித்த அனுபவங்களையும், அவலங்களையும் வெளிப்படுத்துகின்ற படைப்புகளையே அதிகளவு காணக்கூடிய¬தாக இருக்கின்றன. இன்று புகலிடத்தில் அடுத்த தலைமுறை தோன்றி விட்டது. தம்மை இலங்கையர் என்றும் கூறமுடியாத, தாம் நோர்வேயில் பிறந்திருந்தால் தம்மை நோர்வேஜியர்கள் என்றும் கூற முடியாத, Nortamils, Dantamils னுயவெயஅடைள என தம்மை அடையாளப்படுத்துகிற நிலை வளர்ந்து வருகிறது. முழுமையாக அவர்கள் நோர்வேஜியர்களாகவும், டனிஷர்களாகவும் அடையாளப்படுத்துவதற்கு இன்னும் சில சந்ததிகள் கடக்கவேண்டியிருக்கும்.

அவர்களின் பெற்றோரின் தாயகத்தை அறியாத, அது குறித்த பிரக்ஞைக்கு அப்பாற்பட்டு, புகலிடத்தையே தமது தாயகமாக்கிவிட்ட தலைமுறை அது. இவர்களிடமிருந்து தமிழில் இலக்கியங்களை எதிர்பார்க்க முடியாது. ஆனால் அவர்கள் கற்ற அந்தந்த நாட்டு மொழிகளில் இலக்கிய ஈடுபாடுகளை காட்டுகின்ற போக்கு வளரத்தொடங்கியுள்ளது. தமிழிலிருந்தும் அந்தந்த மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்கின்ற முயற்சிகளும் கூட நடப்பதை அறிகிறோம். உலக புகலிட இலக்கியம் என்பது ஒரு சர்வதேச அளவில் கருத்திற்கொள்கின்ற இலக்கியமாக ஆகிவிட்டது. ஐந்திணை பற்றிய கருத்தாக்கங்களை விரித்து ஆறாந்திணையாக தகவல் தொழில்நுட்ப வெட்டவெளி எனப்படும் சைபர் ஸ்பேசை குறிப்பிடுகிறோம். ஏழாந்திணையாக இன்று புகலிடத்தை குறிக்கின்ற கருத்தாக்கங்¬களும் முன்மொழியப்படுகின்றன என்பதை கருத்திற் கொள்ளவேண்டும்.

மொத்தத்தில் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் தமிழில் புலத்து இலக்கியத்தின் ஆயுள் கேள்விக்குரியது.

புகலிடத்தில் அரசியல் செயற்பாடுகள் பற்றி..?

புகலிடத்தில் தமிழர்களின் அரசியல் செயற்பாடு இன்னமும் தமிழ்தேசிய அரசியலுக்கு அப்பால் எட்டவில்லை. விதிவிலக்காக அந்தந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் அந்த நாட்டு அரசியலுடன் இணைத்துக் கொண்டுள்ளனர் என்பது பொய்யில்லை. ஆனால் அது மீண்டும் தமிழ்த்தேசிய அரசியலைத் தாண்டி செல்லவில்லை என்பதே யதார்த்தம். இனி இதுவே தமது நாடாக ஆகிவிட்ட நிலையில் இந்த நாட்டவர்களுடனும், நாட்டு நலன்களுடனும், அதன் அரசியலுடனும், இணைவாக்கம் செய்துகொள்வது அவசியமானது. வெளிநாட்டவர்கள் சம்பந்தமாக இந்த நாட்டவர்கள் கொண்டுள்ள பொதுவான குற்றச்சாட்டுக்களில் ஒன்று, அவர்களின் சமூக இணைவாக்க பிரக்ஞையின் போதாமை பற்றியது.

அடுத்தது மாற்று அரசியல் கருத்துடையவர்கள் திட்டமிட்ட ரீதியில் நலமடிக்கப்பட்டமை பற்றியது. இன்று மாற்று அரசியல் கருத்துடையவர்கள், அல்லது விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்றாதவர்கள், அவர்களுக்கு நிதி வழங்காதவர்கள் அவர்கள் தமிழ்த்தேச ஆதரவாளர்களாக இருந்தாலும்சரி அனைவருமே எதிரிகளாகவும், துரோகிகளாகவும் மிக எளிமையாக முத்திரை குத்தப்படுகிறார்கள்.

இவர்கள் சமூகத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டும், அந்நியப்படுத்தப்பட்டும், தனிமைப்படுத்தப்பட்டும் சில சந்தர்ப்பங்களில் எதிரியின் முகாமுக்கே தள்ளப்பட்டுவருவது ஆரோக்கியமான ஒன்றல்ல.

இன்று புகலிடத்தில் மாற்று அரசியல் செயற்பாடுகள் நிறுவனமயமாக இல்லை.
யுத்தநிறுத்த ஒப்பந்தம், பின் "ஏகப்பிரதிநிதித்துவ" அரசியல், அதனைத் தொடர்ந்து அனைத்து ஊடகங்களும், புத்திஜீவிகள், எழுத்தாளர்கள் என அனைத்துமே தமிழ்த்தேசியத்தின் பெயரால் உண்மைகள் இருட்டடிப்பு செய்வது சர்வசாதாரண ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது. இதில் சிறிது ஒதுங்கிநின்று கிடைத்த சந்தர்ப்பத்தில் உண்மைபேசினால் ஓரங்கட்டப்பட்டுவிடுவோமோ, தனிமைப்படுத்தப்பட்டுவிடுவோமோ என்று அஞ்சி அதில் சரணடைந்தோர் பலர், சமரசம் செய்து கொண்டோர் பலர். தம்மை ஊமைகளாக ஆக்கிக்கொண்டோர் பலர். பலரதும் அரசியல் முகமூடிகள் கிழிந்தன. எப்போதும் பலமானவர்கள் பக்கம் இருப்பது லாபம் என்றுணர்ந்து தமது நேர்மை அரசியலை துறந்தவர்கள் எண்ணிக்கையில் அதிகம்.

நிச்சயமாக ஒரு ஆரோக்கியமான விடுதலையை இது பெற்றுத்தரப் போவதில்லை. பல்வேறுபட்ட மாற்றுக் கருத்துக்களும், ஜனநாயக குரல்களுமே கடந்த காலங்¬களில் தேச விடுதலைப் போராட்டத்தில் பாசிசப் போக்கை கணிசமான அளவு மட்டுப்படுத்தியது. இனி வரும் அத்தனை ஜனநாயக விரோதப்போக்குகளுக்கு வழங்கும் ஆசீர்வாதமும், அங்கீகாரமுமே இந்த "ஏகபிரதிநிதி" சித்தாந்தம். ஆரம்பத்திலேயே இதனை நாங்கள் எச்சரித்திருந்தோம். அனைத்து ஜனநாயக விரோத போக்குகளும் தேசியத்தின் பேரால் விதிவிலக்கு கோரும் நிலை மாற்றப்படவேண்டும். இந்த நிலை தளத்தில் மட்டுமல்ல புலத்திலும் தான்.

பாசிசம் பற்றிய எச்சரிக்கைகளை ஏற்படுத்தும் பல கட்டுரைகளை எழுதிவந்திருக்கிறீர்கள், இதன் அண்மைய வடிவம் பற்றிய உங்கள் புரிதல் என்ன?

வீரவிதான இயக்கம் 1995ஆம் ஆண்டு யூலை 7ஆம் திகதி தோற்றுவிக்கப்பட்ட போது அது வெறும் இயக்கமாகத் தான் பார்க்கப்பட்டது. ஆனால் அது எத்தனை பெரிய அபாயகரமான இயக்கம் என்பதை அதன் வியூகங்களும் திட்டங்களும், வேலைமுறைகளும் நிரூபித்துக்கொண்டு வந்தபோதுகூட பலரும் அதனை அசட்டைச் செய்தார்கள். ஒரு காலத்தில் சிங்களத் தேசியவாதம் என்கிற பதப் பிரயோகத்தைப் பாவித்தோம், அதன் பின் குறுந்தேசியவாதம் என்கிற பதப்பிரயோகத்தை பாவித்தோம், அதன் பின் இனவாதம், அதன் பின் பேரினவாதம் என்றெல்லாம் பதங்களை பாவித்தோம், இந்த பதங்களுக்குப் பின்னால் அர்த்தங்களும், அந்தந்தக் கட்ட பாசிசத்தின் வளர்ச்சிக் கட்டங்களையும் சேர்த்தே உணர்த்தியது. ஆனால் இன்று அது முழு அளவிலான செயற்பாட்டுக்கு தன்னை பலப்படுத்திக் கொண்டுள்ள பாசிச இயக்கம், முழு சிங்கள மக்களையும் ஓரணிக்குள் திரட்டியுள்ள, திரட்டி வருகின்ற சிங்கள மக்களை பாசிசமயப்படுத்துவதில் மிகவும், நுணுக்கமாக செயற்பட்டு வருகின்ற இயக்கம்.
இதில் இடதுசாரி இயக்கங்களின் பங்கு..?

தேசியவாதத்துக்கு பல முகங்கள் உள்ளன. பல சந்தர்ப்பங்களில் அது இனத்தேசிய சித்தாந்தத்தை உயர்த்திப் பிடிக்கின்ற பண்புகளை உருவகப்படுத்திக் கொண்டுள்ள சித்தாந்தமாக இருந்தாலும், வேறு சந்தர்ப்பங்களில் அது சோசலிச முகமூடிகளையும் கூட அணிந்து வரும். ஹிட்லரின் பாசிச சித்தாந்தம் கூட தேசிய சோசலிசம் பற்றிய கருத்தாக்கத்துடன் தான் தன்னை அடையாளப்படுத்தியதுஅதற்கூடாகவே தன்னளவில் அது வளர்த்துக்கொண்டது. இன்று சிறிலங்காவில்; சிங்கள பாசிசத்துக்கு வடிவம் கொடுக்கும் சம்பிக்க ரணவக்கவின் சித்தாந்த¬மும் கூட தேசிய சோசலிசம் தான் என்பதை கவனியுங்கள். ஆரம்பத்தில் ஜே.வி.பி.யுடன் இணைந்து பணியாற்றிய சம்பிக்க ரணவக்க அதிலிருந்து விலகி ஜனத்தா மித்துரோ எனும் இயக்கத்தை ஆரம்பித்து இலங்கைக்கான சோசலிச பொருளாதார கட்டமைப்பு குறித்த ஆய்வுகளையும், கருத்துருவாக்கங்களையும் செய்து இயங்கிக்கொண்டிருந்த போது அதன் ஒரு கட்டத்தில் சோசலிச கோசம் சரிவராது என்கிற கருத்தையும், சோசலிசத்தை தேசிய சித்தாந்தத்தோடு இணைத்து புதுவகை சிங்கள பௌத்த சித்தாந்த மற்றும் அமைப்புத் துறைக்கான வேலைகளை தொடங்கினார். அதன் வடிவம் தான் 1995இல் சிங்கள வீரவிதானவின் தோற்றம். மிகவும் நுணுக்கமாக இயங்கி அது வரை சிங்கள பௌத்தம் பேசிய இயக்கங்களை தம்மோடு சுவீகரித்தும், சிலவற்றை நாசூக்காக இயங்கவிடாமல் பண்ணியும், ஒட்டுமொத்த சிங்கள பௌத்த அமைப்புகளையும் ஒரே இயக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. பௌத்த மகா சங்கத்தினரை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. சமூகத்தில் கருத்துருவாக்கங்களை பலப்படுத்தும் நிறுவனங்களான தொடர்பூடகங்கள் அiனைத்திலும் ஊடுருவியது. திவய்ன போன்றவற்றை தமது கைக்குள் போட்டுக் கொண்டது லங்காதீப, சண்டே டைம்ஸ் போன்றவற்றை அச்சுறுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது, ஏனைய இலத்திரனியல் சாதனங்களுக்குள் சிங்கள தேசிய உணர்வு கொண்டவர்களை அடையாளம் கண்டு தமது வலைக்குள் சிக்க வைத்தது.

அரசியல் கட்சிகளுக்குள் ஊடுருவி அதன் அதிகார மற்றும் நிறைவேற்று அங்கங்களுக்குள் சென்று அரசியல் முடிவுகளை எடுக்க வைத்தது. அவ்வாறு எடுக்க வைப்பதற்கு வெளியில் இருந்து அழுத்தங்களை பிரயோகிக்க பெருமளவான முன்னணி அமைப்புகளை உருவாக்கியது. ஒரு அரசை கொண்டுள்ள சிறிலங்கா கூட இணையத்தளம் உருவாக்காத காலத்தில் 96ஆம் ஆண்டே தமக்கான இணையத் தளத்தை வீரவிதான தோற்றுவித்தது. சிங்கள வர்த்தகர் சங்கத்தை ஆரம்பித்து குறுகிய காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட கிளைகளை நாடளாவ ஏற்படுத்தியது. பெண்கள் அமைப்புகள், வேலை வாய்ப்பு அணி, என பல அமைப்புகளை உருவாக்கியது.

அரசியல்வாதிகள், கலைஞர்கள், விளையாட்டுவீரர்கள் என சமூகத்தில் உள்ள பிரமுகர் வட்டார சகாக்களை குறுகிய காலத்தில் சுவீகரித்தது மட்டுமல்லாமல் இராணுவத்தில் சமகாலத்தில் பெரிய அதிகாரிகள் பலரையும் இணைத்துக் கொண்டது. தப்பியோடிய இராணுவத்தினரை உள்வாங்கி இரகசிய பயிற்சி முகாம்களை நடத்தி வருவது பற்றிய செய்திகளை ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள்.

ஜாதிக ஹெல உறுமய என்பது இந்த பாசிச அமைப்புகளின் ஒரு முன்னணி அமைப்பாக இயங்குகிற ஒரு கட்சி மட்டும் தான்.

ஜே.வி.பி. இன்று சிஹல உறுமயவின் நிகழ்ச்சி நிரலை கைப்பற்றிக்கொண்டுள்ளது. ஆனாலும் ஜே.வி.பியின் மூலோபாயம் அதுவல்ல. அது அரசியல் சந்தர்ப்பவாத தந்திரோபாயம் மட்டும்தான். ஆனால் இதற்கான சித்தாந்த பலத்தை தயாரித்தளிப்பதும், அதனை விரவவிடுவதும் அதற்குப் பின்னாலுள்ள பலமான சிங்களப் பேரினவாத அணிகள் தான்.
வரலாற்றில் இதற்கு முன்னரும் பல பேரினவாத இயக்கங்கள் இருந்திருக்கின்றன அல்லவா?

முன்னரெல்லாம் பல பெயர்களைக் கொண்ட பேரினவாத அமைப்புகள் நிறையவே இருந்தன. அவற்றுக்கு பொதுவான சித்தாந்த வடிவம் இருக்கவில்லை. பொதுவான அமைப்பு வடிவம் இருக்கவில்லை. பொதுவான அரசியல் வடிவம் இருக்கவில்லை. ஆனால் இன்று அப்படியல்ல சிங்கள சிவில் சமூகத்தில் ஆழமாக வேர்விடுகின்ற அளவுக்கு அனைத்தையும் மையப்படுத்துகின்ற பலமான சித்தாந்த வடிவம் அதற்கு உண்டு. உறுதியான அமைப்பு வடிவம் உருவாக்கியாகிவிட்டது. அது போல அரசியல் வடிவமும் அதற்கு ஏற்படுத்தியாகிவிட்டது. இனி அது இராணுவ வடிவம் பெறவேண்டியதும், அரசை கைப்பற்றுகின்ற வேலையும் தான் பாக்கி என்று கூறி வந்தோம். அதற்கு இராணுவ வடிவம் இருப்பதை இராணுவ பயிற்சிகள் பற்றிய செய்திகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன. சாதாரண தமிழ் சிவிலியன்களின் மீதான வன்முறைச் சம்பவங்கள் பல செய்திகளை நிரூபித்தன. தென்னிலங்கையில் பிரதான அரசியல் அமுக்கக் குழுவாக இந்த சக்திகள் இன்று ஆகிவிட்டிருக்கின்றன.
இப்பின்னணியில் பாசிசத்தின் இராணுவ மயத்தன்மையை மேலும் விளக்குவீர்களா?

உங்களுக்குத் தெரியும் குமார் பொன்னம்பலம் கொல்லப்பட்ட செய்தி, சிங்கள வீரவிதான ஹெருவன எனும் பத்திரிகையொன்றை கடந்த மூன்று வருடங்களாக வெளியிட்டுக் கொண்டிருப்பதை அறிந்திருப்பீர்கள், இதனைத் தவிர அவர்கள் ஒரு செய்தி ஏடு நியுஸ்லெட்டர் ஒன்றை வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில் வெளியான வொய்ஸ் ஒப் த நேசன் எனும் பெயர் கொண்ட இந்த செய்தி ஏட்டின் கடைசி பக்கத்தில் ஆசிரியர் தலையங்கத்தில் இப்படி கூறப்படுகிறது. -கொழும்பில் இருந்து கொண்டு கொஞ்சம் கூட அச்சமின்றி புலிக்கு வால்பிடித்துக் கொண்டு இருந்த புள்ளிமாடு இனந்தெரியாத நபரால் புதைகுழிக்கு அனுப்பப்பட்டதானது, நமது தேசத்தை பாதுகாக்க சிங்கள இனத்தைப் பாதுகாக்க தற்போது இருக்கின்ற சக்திகளுக்கு அப்பாலும் ஒரு அமைப்பு இருப்பதை உணர்த்தியதானது நம்மெல்லோருக்கும் தைரியமளிக்கின்றது.- என்று இருந்தது. அந்தச் செய்தியில் இவ்வாறானவர்களுக்கு என்ன நேரும் என்கின்ற எச்சரிக்கையும், அவ்வாறான இயக்கமொன்று இருப்பதை பற்றிய சிங்கள மக்களுக்கு தைரியத்தையும் அளிக்கும் செய்தியாகவே அது இருந்தது. இதை விட முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் என்ன வென்றால் அதே பக்கத்தில் 7 கோசங்கள் இருந்தன. அந்த கோசத்தில் இறுதியானது என்ன தெரியுமா, நாட்டையே யுத்தத் தாயாரிப்புக்கு உட்படுத்துவோம், புலி எதிர்ப்பு தேசிய முன்னணியை கட்டியெழுப்புவோம் என்பது தான் அந்த கோசம். உங்களுக்குத் தெரியுமா குமார் பொன்னம்பலத்தின் கொலைக்கு உரிமை கோரிய இயக்கமும் இது தான். National front against tigers இதனை நீங்கள் உன்னிப்பாக கவனியுங்கள். இந்த விடயம் எங்கும் கவனிக்கப்பட்டதாக இது வரை நான் அறியவில்லை.

அவர்களின் கொலைபட்டியல் அடுத்தது யார் என்கிற கேள்வி பல புத்திசீவிகள், அரசியலாளர்கள் மத்தியில் தோன்ற ஆரம்பித்தன. அந்த பட்டியல் இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

சமீபத்தில் லக்பிம பத்திரிகையில் சம்பிக்கவின் பேட்டி ஒன்று வெளியாகியிருந்தது. அந்தப் பேட்டியில் ஒரு கேள்வி. இந்த குறுகிய காலத்தில் நீங்கள் கண்டடைந்த வெற்றிகள் என்ன? அதற்கு சம்பிக்கவின் பதில் இப்படி இருந்தது. இது வரைகாலம் செக்கியுலரிசம் பற்றி பேசிக்கொண்டிருந்த ஐக்கிய தேசியக்கட்சி இன்று ரணில் தலைமையில் மகாசங்கத்தினரை சந்தித்து பன்சில் எடுக்கிறார். இது வரைகாலம் மார்க்சியம், பேசிக்கொண்டி¬ருந்த ஜே.வி.பி. தங்கள் ஐந்தாண்டுத் திட்டத்தின் முதல் பிரதியை மகாசங்கத்தினருக்கு கொடுத்து ஆசி பெற்று "அடபிரி" செய்கின்றனர். இது யார் கண்ட வெற்றி என்பதை நீங்கள் தீர்மானியுங்கள் என பதிலளிக்கிறார் சம்பிக்க.

இந்தப் புள்ளி தான் நாங்கள் அவதானிக்க வேண்டிய முக்கிய புள்ளி. இன்று ஒட்டுமொத்த அரசியல் நீரோட்டத்தையும் கட்டுப்படுத்தும் வலிமையை பாசிசம் பெற்றுவிட்டது. ஆயுதப் புரட்சி பற்றி பேசிக் கொண்டிருந்த ஜே.வி.பி.யை சிங்களத் தேசியம் பற்றி பேசவும், அதற்கு எதிராக போகாமலும் பண்ணியிருக்கிறது. குறைந்தபட்சம் சமவாய்ப்புச் சட்டத்தைக் கூட பாராளுமன்றத்தில் அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியாமல் போனது எவரது வெற்றி? தமிழர்களின் உரிமைகளுக்கே வேட்டு வைக்க இருந்த தீர்வுப்பொதியைக் கூட பாராளுமன்றத்தில் நிறைவேற்ற விடாமல் செய்தது யாரது வெற்றி. சிறிமா அம்மையாரை பதவி விலக்கி சிங்கள வீரவிதானவுக்கு நெருக்கமான ரத்னசிறி விக்கிரமநாயக்கவை பிரதமராக போட்டு மகாசங்கத்தினரை அணுக வைத்தது யாரது வெற்றி. புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செல்லாக்காசாக்கியது யாரது வெற்றி, ரணிலின் ஆட்சி கவிழ்ப்பு, சந்திரிகாவுக்கு எதிரான சதி, மகிந்த ராஜபக்ஷவை ஆட்சியமர்த்தல், ஆட்சியை நிழலில் இருந்து வழிநடத்துதல் என சகல வெற்றிகளையும் அது தொடர்ந்துகொண்டே இருக்கி¬றது. இந்த நிலைமைகளை விளங்கிக்¬கொள்ளவும், அதற்கேற்ப தங்களை தயார்படுத்தவும் தமிழ்த் தேசம் அதிக அக்கறை செலுத்த வேண்டிய கட்டம் இது.
ஆக, முழு நாடும் பாசிசத்தின் நிகழ்ச்சிநிரலின் கீழ் கொண்டு செல்லப்படுவதாகக் கூறுகிறீர்கள்..?

இன்று முழு சிவில் சமூகத்தையும், அரச கட்டமைப்பையும், பாசிசம் தான் வழிநடத்துகிறது என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். இதற்குப் பின்னால் முதலாளித்¬துவ நலன்கள், பல்வேறு சக்திகளின் நலன்கள் கலந்திருக்கும் என்பது உண்மை. ஆனால் அவற்றின் அறுவடை அனைத்தும் பாசிசம் சுவீகரித்துக் கொள்கிறது. சிஹல உறுமய இன்று ஒட்ட இருந்த சுவரொட்டியை நேற்றே ஜே.வி.பி.யினர் ஒட்டிவிடுகின்றனர். சிங்கள வீரவிதானவுக்கு வேலை மிச்சம். ஜே.வி.பி. மட்டுமல்ல சிங்கள கட்சிகள் அனைத்தினதும் இன்றைய நடவடிக்கையின் அறுவடையை பாசிசம் தனக்குரிதாக்கி விடுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். 30களில் மேற்கில் சோசலிசத்தை பாசிசம் வெற்றிகண்ட வரலாற்றனுபவத்தை இன்னமும் இலங்கை இடதுசாரிகள் உணரவில்லை, என்றே நான் கூறுவேன். இனி பாசிசத்துடனான கொடுக்கல் வாங்கல்களை செய்து கொள்ளாமல் எந்தவொரு தென்னிலங்கை அரசியல் சக்திகளும் இருப்பு கொள்ள முடியாது. பேரினவாதம் நிறுவனமயப்படுதல் என்பது எந்தவொரு இடைஞ்சலும் இல்லாமல் இலங்கையில் நிகழ்கிறது.
இனிவரப்போகும் காலம் அபாயகரமானது என்றா எச்சரிக்கிறீர்கள்..?

பாராளுமன்ற அரசியல் வாதத்தைப்பொருத்தவரை பேரினவாதத்தை திருப்திபடுத்துகின்ற சக்திகளே ஆட்சியதிகாரத்தை கைப்பற்றமுடியும், அதனை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்கிற நிலை இன்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்த போக்கில் அடிப்படை மாற்றங்கள் நிகழவேண்டுமென்றால் ஒரு அதிசயம் தான் நிகழவேண்டும்.

பேரினவாத முலாம் பூசப்பட்ட பௌத்த மதமும், அதில் நிலையூன்றச்செயய்ப்பட்டுள்ள அரச அதிகார கட்டமைப்பு மேலும் கல்வி, மற்றும் சிவில் அமைப்புகள், அரசியல் இயக்கங்கள் என அனைத்¬தும் பேரினவாதமயப்படுத்தப்பட்டிருக்கிறது. புறநிலையாக இவற்றுக்கு எதிராக இடதுசாரி இயக்கங்கள் சில ஜனநாயக நிறுவனங்களுமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதும் அது அவ்வளவு பெரிய வெற்றியை எய்த முடியவில்லை.

மேலும் முற்போக்கான புத்திஜீவித்துவ சக்திகள், புலமையாளர்கள் என்போர் பல சமயங்களில் அரசியல் மாற்றங்கள் நிகழும் என்று நம்பி பூர்ஷ்வா சக்திகளை சார்ந்தும் அச்சக்திகளை பலப்படுத்தியும் வந்துள்ளனர். இந்தத்தவறை காலப்போக்கில் சிலர் திருத்திக்கொண்ட போதும் கணிசமானோர் அதனை திருத்திக்கொள்வதை தமது மானப் பிரச்சினையாகக் கொண்டதும் உண்டு. இதன் விளைவு அவர்கள் எதிரியின் கைக் கூலிகளாகவும், பகடைக்காய்களாகவும், ஆகி ஈற்றில் அவர்களின் உரிய இடத்தை முழுவதும் இழந்ததும் நமது நாட்டில் நடந்தது. பிரான்சில் பிரெஞ்சுப் புரட்சி காலங்களில் பூர்ஷ்வா வர்க்கம் முற்போக்கனாதாக காட்டிக்கொண்டதும், அது அறிவாளிகளையும், அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற உபயோகித்ததையும், அது அதிகாரத்தை கைப்பற்றிய பின்பும் தொடர்ந்தது போல இங்கும் நிகழ்ந்தது. 1956இல், 1970இல் 1994இல் இதுபோன்ற நிகழ்வுகள் இலங்கையில் நிகழ்ந்தன.

ஆனால் 2005இல் பேரினவாத சக்திகள் மட்டுமே அதிகாரத்தை கைப்பற்ற போதிய பலமுள்ளதாக இருநதது. மார்க்சிய தோல் போர்த்திய பேரினவாதிகள் இலகுவாக அதிகாரத்தை கைப்பற்றினர்.
இதில் ஊடகங்களின் பாத்திரம் பற்றி...?

இன்றைய யதார்த்த நிலையொன்று உள்ளது. அது தான். ஊடகச் சந்தையில், ஊடக முதலாளிகளின் மூலதனம் பாதுகாக்கப்படவேண்டுமென்றால், அந்த மூலதனம் லாபத்தை ஈட்டவேண்டுமென்றால் தேசியத்தை உயர்த்திப்பிடித்தல் என்பது தவிர்க்கமுடியாததாகிறது. இது ஒரு சந்தைக்கான தந்திரோபாயமாக (Marketing stretegy) ஆகிவிட்டிருக்கிறது. சிங்களத் தேசியத்தை உயர்த்திப்பிடிக்காத எந்தவொரு ஊடகமும் வர்த்தக ரீதியில் வெற்றியடைய முடியாத நிலை தோன்றியிருப்பது போலவே, தமிழ்த் தேசியத்தை உயர்த்திப் பிடிக்காத எந்த ஒரு ஊடகமும் வியாபார அளவில் வெற்றியடைய முடியாத நிலை தோன்றியிருப்பது தான் யதார்த்தம். இந்த இடத்தில் இருந்து உங்கள் பார்வைகளை விசாலப்படுத்துங்கள் மேலும் பல உண்மை நிலைகளை அறிந்து கொள்வீர்கள்.
தற்போதைய அரசியல் தீர்வு முயற்சிகளில் நோர்வேயின் பங்களிப்புகள் பற்றி..?

அடிப்படையில் நோர்வே அமெரிக்காவின் பொம்மையாகவே பாலஸ்தீன தீர்வு முயற்சியிலும் தன்னை ஆக்கிக் கொண்டிருந்தது. சமீபகாலமாக உலகில் தேசியப் பிரச்சினைகளின் மீதான தீர்வுகளுக்கு அமெரிக்கா நேரடியாக தலையிடாமல் நோர்வே மூலம் தமது நலன்களை நிறைவேற்றி வருவதை பார்க்கலாம். அடக்கப்படும் தேசங்களுக்கு தீர்வு தருவதைப் பார்க்க அடக்கப்படும் மக்களின் போராட்டங்களை சரணடையச் செய்கின்ற முயற்சியையே நோர்வே மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. மேலும் உலகின் சமாதான தேவதையாக நோர்வே நோக்கப்படும் அதே நேரம் நோர்வே தனது நாட்டுக்குள் ஏனைய தேசங்களை எப்படி அடக்கிவைத்திருக்கிறது என்பதற்கு வரலாறு உண்டு. அங்குள்ள சாமிர் எனும் இனத்தவர்களின் தனியான பண்பாடு, மொழி, கலாசாரம் என்பனவற்றை சிதைத்தும், அவர்களின் இன அடையாளத்தை பேணவிடாமல் நுணுக்கமாக இயங்கியும் வந்திருக்கிறது. நோர்வேயின் வடக்குப் பகுதியில் இந்த இனத்தவர்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வரை நோர்வேயின் பிரதான வருமானமான எண்ணெய் வளங்களை அனுபவிக்கலாம். இப்படிப்பட்ட நோர்வேயின் தலையீட்டை சந்தேகத்தோடு நாங்கள் பார்க்க வேண்டியிருக்கிறது. மேலும் அடிப்படையில் தமிழ் மக்களின் எதிரிகளாகிவிட்டிருக்கிற அமெரிக்கா, இந்தியா போன்ற சண்டியர்களிடம் தான் இலங்கை பிரச்சினை தொடர்பாக யோசனைகளை நோர்வே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதை கருத்திற் கொள்ளுங்கள். ஒரு புறம் குர்திஸ்தான் மக்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்குவதாக வேடம்போட்டுக் கொண்டு. மறுபுறம் குர்திஸ்தான் மக்களின் போராட்டத்தை அடக்க துருக்கி அரசாங்கத்திற்கு ஆயுத தளபாடங்களை விற்பனை செய்து வருகிறது நோர்வே. நோர்வேயின் நடவடிக்கைகள் குறித்து பேரினவாதிகள் சந்தேகிப்பதற்கும் தமிழ் மக்கள் சந்தேகிப்பதற்கும் இடையில் அடிப்படை வித்தியாசம் உண்டு என்பதையும் கவனியுங்கள்.
மாற்று அரசியலின் தேவை பற்றி..

தமிழ்த்தேசிய விடுதலையுடன் நமது தேவை நின்றுவிடவில்லை. இன்றைய முதன்மைத் தேவை என்கிற பேரில் ஏனைய சமூக அடக்குமுறைகள், ஏற்றத் தாழ்வுகள் என்பவற்றுக்கெதிரான போராட்டம் மறுக்கப்பட்டு வருவதை கண்மூடித்தனமாக தமிழ்தேசம் எதிர்கொண்டபடி இருக்கிறது. வர்க்கப் பிரச்சினை, சாதியம், பிரதேசவாதம், பால்வாதம், என்கிற விடுதலையின் தேவை இல்லாமல் போய்விடவில்லை. மேற்பூச்சுக்காக இன்று இவற்றையும் உள்ளடக்கியது தான் இன்றைய தேசப்போராட்டம் என்று கூறப்பட்டாலும் கூட, ஒரு புரட்சிகர சமூக மாற்றத்துக்குரிய எந்த நம்பிக்கையையும் இன்னும் கிஞ்சித்தும் காணவில்லை.

நமது சமூகம் இன்னமும் "யாழ்-சைவ-வேளாள-உயர்வர்க்க-ஆணாதிக்க" அதிகாரத்துவ அமைப்பையே கொண்டிருக்கிறது. வெறும் தமிழ்தேசிய விடுதலை இவை எல்லாவற்றுக்குமான சர்வரோகநிவாரணி ஆகிவிடாது. அதற்கப்பாற்பட்ட போராட்டத்தின் தேவை இன்னமும் உள்ளது.


-நேர்காணல்- தாஸ்