Tuesday, March 29, 2011

The activist -Dominic Jeeva


1 montage + 5 audio

The poet and writer, Dominic Jeeva, talks about growing up with caste, how he challenged the system as an activist and why, despite its many flaws, he’s still proud to be a Jaffna man. 
-Photography by Kannan Arunasalam-

       I took a three wheeler with my friend Shaseevan to Kotahena, on the fringes of Colombo. I was going to meet one of Sri Lanka’s original activists, Dominic Jeeva. On our way, we passed Hindu temples and shops selling Jaffna wares. It was almost like being in Jaffna. We reached Sri Kathiresan Street in the heart of Kotahena, where Mr Jeeva’s office was, right across the street from a barber shop called the Saloon de Shakthi. Having heard about Mr Jeeva’s anti-caste activism, I couldn’t help but think that this may have been his way of making a statement. Mr Jeeva is also from the barber caste, one of the lowest rungs in Jaffna’s caste hierarchy. He still keeps a barber shop in Jaffna.
He had shunned a formal education system that paid little interest in educating someone who would normally follow his father’s trade. By reading magazines and pamphlets from India he began to write and stood up for the human rights of downtrodden communities in Jaffna.
Piled up around Mr Jeeva’ tiny office were books of poetry and short stories he had written or published through his publishing house, “Mallikai pandhal”, or the “Jasmine shed”.  A photograph of Mr Jeeva with the President had pride of place above his desk, but there were many trophies and certificates on the walls and shelves of the dark room. Every last inch of floor and wall space was used.
I was sad that my Tamil was not strong enough to be able to read any of these books of poetry, but hoped that my interview would give me some insight into this unique man from Jaffna.
Mr Jeeva talked to me about what it was like growing up with caste, about forbidden love and glass ceilings, and his passion for writing.  He was a natural storyteller.  He talked with wild gestures, as he acted out events from his life.
Unlike others I had interviewed on stories to do with caste, I could be direct with Mr Jeeva in asking him about his experiences of being treated differently simply because he was born into a certain family and therefore community. I wanted to know what he thought of the popular view that the system was gradually fading. His replies opened my eyes to another world, far from my privileged Jaffna roots.
My final question to him was simple: with all these terrible experiences of an archaic system that Jaffna still seemed to cling to, what did he think of his hometown? Mr Jeeva’s wrinkled face softened and he smiled. His response was equally simple, something even I could understand.  ”Naan Yaalpanathaan,” he said proudly.  ”I am a Jaffna man”.  There had been many bitter experiences, but he was still proud of his hometown. We left this remarkable man as we found him, reading quietly by the window.


மல்லிகை ஜீவாவின் நேர்காணல்


பகுதி 1


பகுதி 2


பகுதி 3


பகுதி 4


பகுதி 5


பகுதி 6

Monday, March 28, 2011

எழுத்தாளர் (நடிகர் ) கே.எஸ். பாலச்சந்திரனுக்கு 

அமுதன் அடிகள் இலக்கியப் பரிசு

-குரு அரவிந்தன்-


ஆண்டுதோறும் பாகுபாடின்றி, தரமான இலக்கியப் படைப்புகளை தேர்ந்தெடுத்து, அவற்றின் படைப்பாளிகளுக்கு ‘‘அமுதன் அடிகள் வெள்ளிவிழா அறக்கட்டளை இலக்கியப்பரிசு” வழங்கிவரும் அமுதன் அடிகள் அறக்கட்டளை, முதன்முதலாக ஒரு இலங்கைப்படைப்பாளியின் நூலுக்கு இந்த விருதை வழங்கியுள்ளது. கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் எழுதிய ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்” என்ற நாவலுக்கு 2009ம் ஆண்டுக்கான அமுதன் அடிகள் இலக்கியவிருது கிடைத்திருக்கிறது.
சென்ற மாதம் 26ந்திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தஞ்சாவூரில் பெசன்ட் அரங்கில் நடைபெற்ற விழாவில் வணிகவரித்துறை அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா அவர்கள் இவ்விருதை வழங்கிப் பாராட்டினார்.
இந்திய ரூபா 15,000 உள்ளிட்ட இந்த விருதை இதுவரை புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலர் பெற்றிருக்கிறார்கள். இந்திய சாகித்ய விருது பெற்ற பல எழுத்தாளர்கள் அடங்கிய இந்த வரிசையில்
தோப்பில் முகமது மீரான் (1996)
வல்லிக்கண்ணன் (1997)
இந்திரா பார்த்தசாரதி (1998)
நாஞ்சில் நாடன் (1999)
பூமணி (2000)
இமயம் (2001)
மேலாண்மை பொன்னுசாமி (2002)
பாமா (2003)
பெருமாள் முருகன் (2004)
எஸ்.வி. ராஜதுரை (2005)
கவிஞர் சல்மா (2006)
ஜோ டி குரூஸ் (2007)
ஆகியோர் இவ்விருதை இதுவரை விருதைப்பெற்றிருக்கிறார்கள்.
தஞ்சாவூரில் நடைபெறும் “அமுதன் அடிகள் அறக்கட்டளை” இலக்கிய விருதுவிழாவில், 2008 ம் ஆண்டுக்கான விருதை பிரபல நாவலாசிரியர் சோ.தர்மன் அவர்களும், 2009ம் ஆண்டுக்கான விருதை கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரனும், 2010ம் ஆண்டுக்கான விருதை பிரபல நாடகாசிரியர் முத்துவேலழகன் அவர்களும் பெற்றுக் கொண்டார்கள். தவிர்க்க முடியாத காரணங்களால் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களால் நேரடியாக விழாவில் கலந்து கொள்ள முடியாமற் போய்விட்டது.
உலகளாவிய ரீதியில் இந்த நாவல் வாசகர்களை சென்றடைந்தால், சிறந்த படைப்புக்களை சீர்தூக்கிப்பார்தது, விருது வழங்கிக் கௌரவிக்கும் ஆய்வாளர்கள் கையில் இந்நூல்  சென்றடைய ஆவன செய்தால், நிச்சயம் இந்த நூல் சிறந்த படைப்பிலக்கிய நாவலுக்கான அங்கீகாரம் பெறும். என்று பி.எச். அப்துல் ஹமீட் ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள் - நாவலுக்கான முன்னுரையில் குறிப்பிட்டதையும் இங்கே நினைவுகூரலாம். தமிழ்கூறும் நல்லுலகெங்கும் அறிமுகமான ஒரு சிறந்த தமிழ் அறிவிப்பாளரின்  மேற்குறித்த  வார்த்தைகள் இப்போது நிஜமாகியிருக்கின்றன.
பகலும் இரவும் முத்தமிட்டுக் கொள்ளும் அந்த மாலைப்பொழுதில்... மேற்கிலிருந்து அடித்த வாடைக் கச்சான் காற்று, கடற்கரையை பார்த்துக்கொண்டு நின்றிருந்த அந்தோனியின் பொத்தான்கள் இல்லாத சேர்ட்டை பின்னே தள்ளி நெஞ்சுக்கூட்டை குளிரினால் சில்லிட வைத்தது. -  “கரையைத்தேடும் கட்டுமரங்கள்” நாவலிலிருந்து சில வரிகளை மீட்டுப்பார்க்கும் நூலாசிரியர் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்,  தினமும் வாழ்வுக்காக அலைகளோடு ஜீவமரணப்போராட்டம் நடத்தி மீளும் அல்லது தோற்றுப்போகும் ஒரு சமூகத்திடம் தனக்குள்ள நியாயமான மதிப்பும், இரக்கமும்தான் தன்னை இந்த நாவலை எழுதத்தூண்டியிருக்கிறது என்று அவருடனான உரையாடலின் போது குறிப்பிடுகின்றார்.
கலைஞர் பாலச்சந்திரன் இலங்கையில் யாழ்மாவட்டத்தில் வடபகுதியில் உள்ள கரவெட்டி என்னும் ஊரில் ஜூலை மாதம் 10ம் திகதி 1944ம் ஆண்டு பிறந்தவர். பாலச்சந்திரனின் தந்தையின் பெயர் கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் என்பதாகும். எல்லோராலும் கலைஞராக அறியப்பட்ட இவர் சிறந்த ஒரு எழுத்தாளருமாவார். கனடாவில் வாழும் இவர் பல சிறுகதைகளை தினகரன், வீரகேசரி போன்ற வாரஇதழ்களில் எழுதியுள்ளார். சுமார் 250ம் மேற்பட்ட வானொலி நாடகங்களை இலங்கை வானொலிக்காக எழுதியிருக்கிறார் இவர் எழுதிய கிராமத்துக் கனவு, விழுதுகள், வாத்தியார் வீட்டில், மனமே மனமே போன்ற வானொலி தொடர் நாடகங்களும், தூரத்துச் சொந்தம், ஒருகை ஓசை, ஒருநாள் கூத்து போன்ற தொலைக்காட்சி நாடகங்களும் மறக்க முடியாதன. சுமார் 12 தொலைக்காட்சி நாடகங்களை எழுதியிருக்கும்; இவர், வை.ரி.லிங்கம், நாதன் நீதன் நேதன், போன்ற தொலைக்காட்சித் தொடர்களையும் எழுதி நெறிப்படுத்தியிருக்கின்றார். சுமார் 20 மேற்பட்ட மேடை நாடகங்களை எழுதி, இயக்கியதோடு; இவர் சிரித்திரன், தினகரன், சிந்தாமணி போன்றவற்றில் எழுத ஆரம்பித்து, தொடர்ந்து ஒருபேப்பர், தாய்விடு, தூறல் போன்ற இதழ்களில் எழுதிக் கொண்டிருக்கின்றார். இலங்கையில் தயாரிக்கப்பட்ட வாடைக்காற்று திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர் இதுவரை சுமார் 5 திரைப்படப்பிரதிகளை எழுதி, இயக்கியிருக்கின்றூர். இவர் ஒருபேப்பரில் எழுதிய அனுபவத் தொடர், ‘நேற்றுப்போல இருக்கிறது’ என்ற  பெயரில் நூல்வடிவில் வெளியாகவருக்கிறது.
இந்த நாவல் வெளிவந்தபோது பல பத்திரிகைகள், சஞ்சிகைகளில் விமர்சகர்கள் பலர் அதைப்பற்றி விமர்சனம் செய்திருந்தார்கள். அவர்களில் செ.கலாயா – தினக்குரல், அதிபர் திரு.பொ.கனகசபாபதி, பி.எச். அப்துல் ஹமீட் - தீராநதி, என்.கே. மகாலிங்கம் - தாய்வீடு, பி.விக்னேஸ்வரன் - காலச்சுவடு, முல்லை அமுதன் - காற்றுவெளி, மனுவல் ஜேசுதாசன் - வீரகேசரி, குரு அரவிந்தன் - இணையம் - திண்ணை, பதிவுகள், தமிழ் ஆரம், கலைஞன் - இணையம் - யாழ்களம், வல்வை சாகரா - இணையம் - யாழ்களம் போன்றவற்றில் விமர்சனக் கட்டுரை எழுதி இவரது ஆளுமையை வெளியுலகிற்குத் தெரிய வைப்பதில் முன்னின்ற முக்கியமானவர்களை இங்கே குறிப்பிடலாம்.
கடலோடிகளின் கதையைச் சொல்லும் இந்த நாவல் பற்றி எழுத்தாளர் குரு அரவிந்தன் குறிப்பிடும் போது, தங்களைத் தாங்களே விமர்சகர்களாக ஆக்கிக் கொண்ட ஒருசில நவீன விமர்சகர்கள் ஈழத்து படைப்பிலக்கியத்தில் இந்த நாவலைச் சேர்த்துக் கொள்ளப் பின்நிற்பார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை. ஏனென்றால் ஏதாவது தகாத வார்த்தைப் பிரயோகங்களையோ, அல்லது பாலியல் உணர்வுகளைத் தூண்டிவிடக் கூடிய சம்பவங்களையோ ஆசிரியர் இந்த நாவலில் எந்த ஒரு இடத்திலும் வலிந்து புகுத்தவில்லை என்பதே அவர்களின் பெரிய குறையாக இருக்கும். ஆசிரியரின் முதல் நாவல் என்பதால் ஆசிரியர் இந்த சூட்சுமத்தை அறிந்திருக்கவில்லையோ, அல்லது மொழி நாகரிகம், பண்பாடு கருதி, சமுதாயம் சீரழிய எழுத்தாளன் காரணமாக இருக்கக்கூடாது என்ற தனது கொள்கை காரணமாக இதைப் புகுத்தவில்லையோ தெரியவில்லை. முப்பத்தைந்து, நாற்பது வருடங்களுக்கு முன் ஈழத்தமிழ் கடலோடிகளின் வாழ்க்கை எப்படி இருந்தது, அவர்கள் எங்கே, எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறிந்து கொள்ள நீங்களும் விரும்பினால், இந்த அருமையான நாவலை ஒரு தடவையாவது வாசித்துப் பாருங்கள். மான்பாய்ஞ்சான் என்றொரு தமிழ் கிராமம் இருந்ததே அது எங்கே இருந்தது, அது ஏன்தொலைந்து போயிற்று என்று எங்கள் அடுத்த தலைமுறையினர்  தேடவேண்டி வந்தால் அதற்குப் பதில் சொல்ல இந்த நாவல் ஒரு ஆவணமாகப் பாதுகாக்கப்பட வேண்டும். ஈழத்து ஓவியர் ரமணி இந்த நாவலுக்கு அட்டைப்பட ஓவியம் வரைந்திருக்கிறார். பி.எச். அப்துல் ஹமீதின் முன்னுரையோடு, இந்த நாவலை வடலி பதிப்பகத்தினர் சிறப்பாக வடிவமைத்து பிரசுரித்திருக்கிறார்கள். தனது பண்பட்ட எழுத்து மூலம் கனடிய தமிழ் இலக்கியத்திற்கு மேலும் வளம் சேர்க்க வேண்டும் என்று கலைஞர், எழுத்தாளர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களை நாங்களும் வாழ்த்துவோமாக!

நன்றி: வடக்கு வாசல் 


Saturday, March 26, 2011

ஈழத்துச் சிறுகதைகள்: எனது பார்வை

 -முல்லை அமுதன்-

ஈழத்து  சிறுகதைகளின்  மீதான  பார்வை  தமிழக  விமர்சகரிடையே  பரவலாக தென்படவிலையோ  என்பதான  ஆதங்கம்  எம்மிடையே  இருப்பதை  மறுக்க முடியாது. விமர்சகர்களின்  வாசனைத்  தளம்  பலரை  உள் வாங்காமல்  இருந்திருக்கலாம். விமர்சகர்களும்  தங்கள்  பரப்பை  விட்டு  வெளி வரத்  தயாராகவும்  இல்லை.
ஈழத்து  விமர்சகர்கள்  முன்வைத்த  சிறுகதைகள்  பல  தளங்களிலும்  பேசப்படாமல்  போயும் இருக்கலாம். மேலும்  அவ்வாறான  சிறுகதைகளின்  ஆசிரியர்களால்  மீண்டும்  எழுதாமல் போனதுவும்  நமது  துரஷ்டமுமாகும்.
குறிப்பாக  திருக்கோவில்.கவியுவன், கோ.றஞ்சகுமார்  போன்றோரிடமிருந்து  சிறுகதைகள் பேசும்  படியாக  வரவில்லை. கோ.றஞ்சகுமாரின்   'மோகவாசல்'  தொகுப்பு  மீள்பிரசுரம் பெற்றிருந்தாலும்  அதில்  அவரின்  தொடர்ச்சியான  வளர்ச்சியைத்  தெரிந்து  கொள்ள வாய்ப்பில்லாமல்  போய்விட்டது.
அதற்காக  வேறு  யாரும்  எழுதவில்லை  என்பதல்ல. சிறுகதைகளை  கனதியாக  எழுதுகிற பலரும்  இருக்கிறார்கள்  தான்.
தமிழ்க்  கதைஞர்வட்டம்   காலாண்டுகளில்  வெளிவந்த  சிறுகதைகளைத்   தேர்ந்தெடுத்து சிறப்புச்   செய்வதும்,  ஞானம்  சஞ்சிகையூடாக  சிறுகதைப் போட்டிகள்  நடாத்தப்  பட்டும் வருவது  நல்ல  பயனைத்  தந்துள்ளதை  மறுக்க  முடியாது.  இங்கிலாந்திலிருந்து 'பூபாளராகங்கள்'  நிர்வாகிகளால்  வருடா வருடம்  நடத்தப்பட்ட  சிறுகதைகள்  பலவற்றைச்  சொல்லி  நின்றன.  'புதினம்' பத்திரிகையினால்  நடாத்தப்பட்ட  சிறுகதைப்  போட்டியில் அதிகமாக  நல்ல  சிறுகதைகளே  வந்து  பரிசுக்குழுவினரை  வியக்கவும்  வைத்தது.
அலை     பிறகு  சிறுகதைகளுக்குப்  பிறகு  நல்ல  சஞ்சிகையாக  நாம்  பார்த்த  'மூன்றாவது மனிதன்'  இதழ்   கணிசமான   சிறுகதைகளைத்   தந்தது   எனலாம்.
சிரித்திரன்,  மல்லிகை,  தீர்த்தக்கரை,  புதுசு, நந்தலாலா, தாயகம், நான், செம்பருத்தி, ரோஜாமலர், விடிவு, துயரி, சரிநிகர், ஓலை, அகல், பெண், சிறகுகள், போது, சமாதானம், கீறல், கொழுந்து,  நதி, விவேகி,  கலைச்செல்வி,  கிருதயுகம்,  பூரனி,  மருதம்,  மறுமலர்ச்சி,   கண்,  கலைக்குரிசில்,  மாற்றம்,  வசந்தம்,  புத்தொளி, யாழ்,   முத்தூர் முரசு,  தாரகை,  வெளிச்சம்,  பூவரசு,  படிகள், ஜீவநதி,  கிருதயுகம், அம்பலம்,  புதிய தரிசனம், அஞ்சலி, அகிலம், இருக்கிறம், வியூகம்,  நதி,  தோழி, உதயம்,  உள்ளம், கனவு, செங்கதிர்,  கிழக்கொளி, குமரன், திருப்பம், திசை புதிது, பூங்காவனம்,  பெருவெளி,  புதுமை இலக்கியம் ,மறுகா, மலர், நவரோஜா, கலைமுகம், ஞானம், நங்கூரம், சமர்,  வாகை,  மேகம், வசந்தம் ,அஞ்சலி , ஏகலைவன்,   திசைபுதிது,  புதிய உலகம்,   பிரியநிலா, தொடர்பு,  தொன்டன்,  இப்படிப்  பல  சஞ்சிகைகளும்,  தினகரன், சுடர்,  வீரகேசரி, தினக்குரல், தினச்சுடர், சங்கமம், ஈழநாடு,  ஈழமுரசு. நமது ஈழநாடு, ஈழநாதம் , உதயன், சஞ்சீவி,  திசை,  ஈழமணி,   ஈழகேசரி,  சுதந்திரன்   எனப்  பல  பத்திரிகைககளும்  சிறுகதைகளை  பிரசுரித்து   வளம்  தந்தன  எனலாம்.
புலம்பெயர்  சஞ்சிகைகளாக  அ.ஆ.இ,  ஈழகேசரி, அம்மா,   கமலம்,  கலப்பை, ஆதவன்  எக்ஸில்,   காலம்,   மண்வாசம்,  நான்காவது பரிமாணம்,  உயிர்நிழல்,  உயிர்மெய்,  தமிழ் உலகம், தமிழர் தகவல், அலை ஓசை, மண், காகம், கற்பகம், மேகம்,  இனி, கலைவிளக்கு, கலைஓசை, இலண்டன் , சுடரொளி   புலம், தேடல்,  பாலம்,  பூவரசு,  அக்னிக்குஞ்சு, மரபு, சுவடுகள்,  மௌனம்,  ஓசை,  காற்றுவெளி, கதலி,  கண்,  இளைஞன், ஆனந்தி,
,பத்திரிகைகளாக  புதினம்,  தாய்வீடு,  வடலி, தமிழர் செந்தாமரை, நிருபம்,  பாரிஸ்முரசு, நிலவரம்,  தமிழன்   வழிகாட்டி,  உதயன், ஈழநாடு  (பாரிஸ்,கனடா)
கூடவே,
பிரதேச  மட்டத்திலான  இலக்கிய-சாகித்திய விழா மலர்கள், கல்லூரி-பாடசாலை-பல்கலைக்கழக  விழா மலர்கள்,  தனியான- கழக  தொகுப்புக்கள்  என  வெளி வந்த  சிறுகதைகள்   அதிகம்  பேசின  எனலாம். அண்ணளவாக ஆயிரக்கணக்கில்  வெளிவந்தாலும்  அரசியல், இனமுரண்பாடுகளினால்  பலரிடம்   சென்று   சேர  வாய்ப்பில்லாமல்  இருந்திருக்கலாம்.
தனிமனித   துயரம்,  அரசியல்  சித்தாந்தம்,  இடபெயர்வு,  இனநெருக்கடி,  வறுமை,  காதல், வர்க்க முரண்பாடு,  சீதனக்  கொடுமை   எனப்  பலவற்றை  அழகாகவும்  ஆணித்தரமாகவும்  சொன்ன  சிறுகதைகள்   ஏராளம்.
இருள்வெளி,   பத்மநாப ஐய ர்   தொகுத்த    தொகுப்புக்கள்,   தேனகம்,   இளந்தளிர்,  விடுதலைபுலிகள்   தொகுத்த    முத்தமிழ்   விழா   மலர்கள்,  புலிகளின் குரல்  வானொலியினர்   தொகுத்த   தொகுத்த  மலர்   இப்படி   பலதையும்  சொல்லலாம். எல்லாவற்றையும்   ஒரு   சேர பார்த்து   இதுவரை   நல்ல   விமர்சனத்தை  வைக்கவில்லை. இதுவே  பல  அசௌகரியங்களை நமக்கு  ஏற்படுத்தி  இருக்கிறது.
புலம்  பெயர்ந்த  எழுத்தாளர்களில்  பொ.கருணாகரமூர்த்தி, விமல் குழந்தைவேல், ராஜேஸ்வரி.பாலசுப்பிரமணியம், ஷோபா சக்தி, சுமதிரூபன், அ.முத்துலிங்கம், இரவி.அருணாசலம், சிறிதரன், ரமணீதரன்(சித்தாந்த சேகுவரா), சார்ல்ஸ்   போன்றவர்களின்   சிறுகதைகள்   அதிகம்  பேசப்பட்டன.  எனினும்   'மண்' சிவராஜா, இந்துமகேஷ்,  வண்ணைதெய்வம்,  தேவகாந்தன்,  எம்,ரி.செல்வராஜா, கல்லாறு.சதீஷ், தமிழ்ப்பிரியா, களவாஞ்சிக்குடி.யோகன்,   லெ.முருகபூபதி,  அருண்.விஜயராணி,  குரு அரவிந்தன், மா.கி.கிரிஸ்டியன், த.சு.மணியம்,  கௌசல்யா.சொர்ணலிங்கம்,  சாந்தினி.வரதராஜன், அகில், வி.ரி.இளங்கோவன், ஹேமா, ராகினி.பாஸ்கரன்,  ரமேஷ் சிவரூபன், நவஜோதி. யோகரத்தினம்,  இரா.தணிகாசலம்,  ந.கிருஷ்ணசிங்கம், விக்கி.நவரத்தினம், சந்திரா.ரவீந்திரன், சந்திரவதனா.செல்வகுமாரன்,  சாந்தி.ரமேஷ் வவுனியன்,  விக்னா.பாகியநாதன் போன்ற  பலரின்   சிறுகதைகளையும்  கவனத்தில்   கொள்ள வேண்டும்.
கதைக்களம், பாத்திரத்  தேர்ந்தெடுப்பு, மொழியின்  ஆளுமை வளம்  சற்று  தூக்கலாகவே கதைகளில்  தென்படுவதை  உணரலாம். 83இன்  பின்னரான  சிறுகதை  எழுத்தாளர்களின் வருகை  அபரிமிதமானதாகவே  உள்ளது. வாய்ப்பும்  அவர்களுக்கு  அமைந்திருக்கிறது.
மென்போக்குக்  கொண்ட  கதையாளர்களாக  நாம்  நினைத்திருக்கும் இலங்கையர்கோன், சம்பந்தன், சி.வைத்திலிங்கம்  இவர்களுக்குப்   பிற்பாடு  கல்வியாளர்களாக  முகிழ்த்த பவானி.ஆழ்வாப்பிள்ளை, செம்பியன்.செல்வன், செ.யோகநாதன், நவசோதி, செங்கைஆழியான், யோ.பெனடிக்பாலன், சொக்கன்  என்று  பலரைப்  பட்டியல்  இடலாம். பிறகு  சாதி, மனித முரண்பாடுகள், வர்க்கம்  சார்ந்து  எழுத முற்பட்ட  டானியல் ,என்.கே.ரகுநாதன், டொமினிக் ஜீவா, தெணியான், அகஸ்தியர், இ.நாகராஜன், மயிலிட்டி.ராஜதுரை,  ஞானரதன், நந்தி, சொக்கன், அ.யேசுராஜா,  டானியல்.அன்ரனி, மதிவாணன் (ரத்தினசபாபதி) வை.அஹ்மத்,  மதுபாலன்  என்று  பலரும் அடங்குவர்.
 எஸ்.பொ. தனித்தே  நின்றார்.
ஈழத்தில்  தொகுக்கப்பட்ட  தொகுப்புக்களில்  கலை ஒளி  முத்தையாபிள்ளை ஞாபகார்த்த  போட்டிச்  சிறுகதைகளின்  தொகுப்பு, அகஸ்தியர்  நினைவுச் சிறுகதைப் போட்டிச்  சிறுகதைகளின் (2001)  தொகுப்பு, செல்வகுமார்  தொகுத்து  மணிமேகலைப்  பிரசுரம் வெளியிட்ட  இரு  தொகுதிகள், செங்கை ஆழியான் தொகுத்த   மறுமலர்ச்சி சிறுகதைகள், ஈழநாடு  சிறுகதைகள், சுதந்திரன்  சிறுகதைகள்,  மல்லிகைச்  சிறுகதைகள், ஞானம் போட்டிச்  சிறுகதைகள்  மலையகச்  சிறுகதைகளின்  தொகுப்பு  இப்படிப்  பலதை உதாரணம்  காட்டலாம்.
இலங்கைக்  கலைகழகம்  1998  இல் வெளியிட்ட  'சுதந்திர  இலங்கையின்  தமிழ்ச் சிறுகதைகள்'  நல்லதொரு  தொகுப்பு.  செங்கைஆழியான்  அண்மையில் தொகுத்த 'முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள் (2010)  நல்லதொரு  தொகுப்பாகும்.
செ.யோகநாதன்  தொகுத்த  இரண்டு  தொகுப்புகள் (வெள்ளிப் பாதரசம், தோட்டக்காட்டினிலே)   எஸ்.பொ.  தொகுத்த  'பனியும் பனையும்  நல்ல  தொகுப்பாக இன்றும்  பேசப்  படுகின்றன.
மு.நித்தியானந்தன்  வைகறை  வெளியிட்டகத்தின்(1980)  மூலம்  மலையக  எழுத்தாளர்களின் கதைத்  தொகுப்பை  வெளி யிட்டிருந்தார். மாத்தளை  தமிழ்  எழுத்தாளர்  ஒன்றியம்  80 களில்  'தோட்டக் காட்டினிலே'  தொகுப்பையும், ஐரோப்பிய  தமிழ்  எழுத்தாளர்  ஒன்றியம் 89இல்  'தேசம் தாண்டிய நதிகள்' போன்ற தொகுப்புகளும், நெதர்லாந்திலிருந்து  வெளிவந்த  அ.ஆ.இ  தொகுத்த (1993)  சிறுகதைகளும்,  கனடாவிலிருந்த  கே.நவம்  தொகுத்த 'உள்ளும்  புறமும்'  தொகுப்பும்(1991)  கனடா  தமிழ்  எழுத்தாளர்  இணையம் வெளியிட்ட 'அரும்பு'  (2000)தொகுப்பும் வன்னியில்  கப்டன். வானதி  வெளியீடுகளும்  வீரகேசரி  பவள  விழா சிறுகதைக்  களஞ்சியம்  தொகுப்பும்,  இரத்தின வேலோன்  தொகுத்த  புலோலியூர் சொல்லும்  கதைகள் (2002)  தொகுப்பும், துரைவி  வெளியீடுகளும்   (1997) எமக்குத்  தந்த  கதைகளை  சற்றும்   குறைத்து  மதிப்பிட  முடியாது.( துரைவியின் மறைவு ஈழத்து எழுத்தாளர்களுக்கு பாரிய இழப்பாகும்)
கலைச்செல்வி. சிற்பி  தொகுத்த  ஈழத்துச் சிறுகதைகள்-(1958)  தொகுப்பையும்  மறக்க முடியாது. மன  உணர்வுகளைத்  தட்டி  எழுப்பும்  வகையில்  அமைந்த   கதைகள்  அடங்கிய  தொகுதியாகும்.  ஆங்காங்கே  நண்பர்கள்  இணைந்தும்  தனித்தும்  (லெ.முருகபூபதி, ஓ.கே.குணநாதன், புரட்சிபாலன்  எனப் பலர்)  சிறுகதைத் தொகுப்புகளை  வெளியிட்டு  வருவது  குறிப்பிடத்தக்கது.
இவற்றை  தொகுத்து  நோக்கின்  ஈழத்தின்  சிறுகதைகளின்  தன்மை  பற்றி  உணர  முடியும்.
கதைக்களம்,  கதைக்கரு, பாத்திரச்  சேர்க்கை  சிறுகதையைத்  தீர்மானிக்கின்றன. அளவில்  அல்லது  பக்கங்களின்  வரையறை  இல்லை. எனினும்  பொதுவான  சிறுகதைப் பண்புகளைக்  கொண்டிருப்பின்  வாசகரின்  கணிப்பைப்  பெறும்.
இங்குள்ள  பிரச்சனை  என்னவெனில்  விமர்சகர்களின்  பார்வையில்  படாதவைகள்  தரம்  பிரிக்கப்  படமாட்டாதா  என்பதே  பலரின்  வருத்தமுமாகும்.  புதியவர்களின் மழுங்கடிக்கும்   முயற்சியும்   இடம் பெறக்கூடாது.
தற்போது  கவிதை  போல  சிறுகதைகள்  எழுதுபவர்களின்  எண்ணிக்கை  சற்று அதிகம். இழப்புகளை  அதிகம்  சந்திக்கிறார்கள்(காதல் உட்பட). படித்த  மலையக  வாலிபர்களின் வருகை  அவர்களின்  பிரச்சினைகளை   லாவகமாக  சொல்லி  பலரிடம்  கொண்டு செல்கிறார்கள்.  புலிகளின்  கட்டுப்பாட்டில்  இருந்த  வன்னியில்  பல  சிறுகதைகள் வெளி வந்தன.  தாமரைச்  செல்வி, முல்லைக் கோணேஸ், இணுவையூர். சிதம்பர. திருச்செந்திநாதன்,  ஆதிலட்சுமி.  சிவகுமார்,   மலைமகள், மலரன்னை  எனப்  பலர்  குறிப்பிடத்  தக்கவர்கள்.
வெளிச்சம்  சஞ்சிகை   கணிசமான  பங்களிப்பைச்  செய்திருந்தது. வெளிச்சம்  சிறுகதைகளின் தொகுப்பு  (1996)தமிழ்நாட்டிலும்  மீள்பிரசுரம்  கண்டது.  அதைப்  போலவே ஈழத்து   இலக்கியத்தின்  பால்  அதிக  அக்கறை  கொண்ட  கலாச்சார  உத்தியோகத்தர்களின்   முன்னெடுப்புகளால்  மாவட்ட  பிரதேச சபைகள், வடக்கு  கிழக்கு மாகாண  கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத் துறை  அமைச்சு,  மட்டக்களப்பு  எழுத்தாளர்  ஊக்குவிப்பு  மையம், யாழ்  இலக்கியவட்டம், தேசிய  கலை  இலக்கியப்  பேரவை, முற்போக்கு  கலை இலக்கியப்பேரவை  என  பல  அமைப்புகள்  சிறுகதை  ஆர்வலர்களின்   ஆவலைப்   பூர்த்தி  செய்து   வருகின்றனர். அவுஸ்திரேலியா/விக்டோரியா  இலங்கைத்  தமிழச்  சங்கம் (1996) வெளியிட்ட 'புலம்பெயர்ந்த பூக்கள்' போட்டிச்  சிறுகதைகள்  அடங்கிய  தொகுதியில்  பலரும் எழுதியுள்ளனர்.
உதய தாரகையின்  ஆசிரியர்  ஆர்னோல்ட்.சதாசிவம்பிள்ளையின் (1875) சிறுகதைகளுடன் ஈழத்துச்  சிறுகதை  முயற்சிகள்  ஆரம்பித்தன  எனக் கொண்டாலும்  இலங்கையர்கோன்  போன்றோரே  தொடர்ச்சியாக  எழுதி  பலரைத்  திரும்பிப்  பார்க்க  வைத்தனர்  என்பர் அறிஞர்கள். அவர்களின்  கல்வியும்  அக,புற அறிவு  ஜீவிகளின்  தொடர்புமே எழுத வைத்தது. தற்போது  போல  எழுத்தில்  தீவிரம்  இல்லை. நவீன  பரிச்சயமும் இல்லாததினால்  தங்களை  வளர்த்துக் கொள்ளும்  வட்டம்  சிறியதாகவே  இருந்தது.
காவலூர்.ஜெகநாதன், தமிழ்ப்ரியா, தாமரைச் செல்வி, வடகோவை  வரதராஜன், ஐ.சாந்தன், செங்கை ஆழியான், செ.யோகநாதன், சோ.இராமேஸ்வரன்,  தி.ஞானசேகரன், தெளிவத்தை.ஜோசேப்  அதிக  சிறுகதைகளை  எழுதுள்ளனர்.
சோபாஷக்தி, விமல்.குழந்தைவேல், பொ.கருணாகரமூர்த்தி, இராஜேஸ்வரி.பாலசுப்ரமணியம், இரவி.அருணாசலம், குமார்.மூர்த்தி, தேவகாந்தன் புலம்பெயர்  வாழ்வியல்  பிறழ்வுகள், சமூக  சிந்தனை  இன்னோரன்ன  பிற  சம்பவங்களை கருவாகக்  கொண்டு  எழுதுபவர்கள். அகில்  சில  போட்டி  கதைகள்  எழுதி  உள்ளார். லெ.முருகபூபதி, வ.ந.கிரிதரன், களவாஞ்சிகுடி.யோகன்  போன்றோர்  வாசகர்  மனதைத் தொடும்  படி  எழுதி  வருகின்றனர். இப்படி  பலரை  உதாரணம்   காட்டலாம்.
நிறைவாக,
ஈழத்துக்  கவிதைகள்  போல  சிறுகதைகளும்  சிறந்த  முறையில்  வளர்ந்து  வருவது கண்கூடு.  ஈழத்துச்  சிறுகதைகளை  தேர்ந்தெடுத்து  முழுமையான  தொகுப்பாக்கும் பட்சத்திலும்,  அவற்றை  பிற  மொழிகளில்  மொழி  பெயர்ப்பதன்  ஊடாகவும்  புற வெளிச்சங்களையும்  உள்வாங்க  முடியும்.  திரு.பத்மநாப ஐயர், பேராசிரியர். செல்வா.கனகநாயகம்  போன்றோர்  ஆத்மார்த்தமாக  சில  தொகுப்பு , மொழிபெயர்ப்பு முயற்சிகளில்  ஈடுபடுகிறர்கள். இது  வரை  இவை  தான்  ஈழத்து  சிறுகதைகள் என  சிலரை  மட்டுமே  குறிப்பிடுகின்ற  தமிழக  விமர்சகர்களைத்  தொடவும் செய்யலாம். தனியே  வரப்பெற்றோம்  என்று  போடுவதற்காக  மட்டுமில்லாமல்  காத்திரமான விமர்சனங்களுக்ககாவும்  இரண்டு  பிரதிகளை  பெற  இனிமேலாவது  சஞ்சிகைகள், பத்திரிகைகள்  முயலவேண்டும். இவை  எதிர்லாலத்தில்  நல்ல  பயனை  நம்மவர்க்குப் பெற்றுத் தரும்
கூடவே,
நமக்கிடையேயான  தடைகள்  எதுவென  உணர்ந்து  அவற்றை  உடைத்தபடி முன்னேற நமது  படைப்பாளர்கள்  நகரவேண்டும்.  அதுவே  ஆரோக்கியமான  தடத்தை  பதிக்கும்  என நம்பலாம்.

Sivananthan Muthulingam Muthali இந்த எழுத்தாளர்கள் எல்லோரும் இலங்கையில் அரசுக்கெதிரான கருத்துக்களை விதைப்பதில் தீவிரம் காட்டினார்கள். புலிகளால் செய்யப்பட்ட கொடூரங்கள் பற்றி மூச்சுக் கூட விடவில்லை. இந்த எழுத்தாளர்களும், பத்திரிகைகளும் இன்னமும் பிரபாகரன் சாகவில்லை என்ற மாயையை சிருஷ்டிப்பதில் ஆர்வப்படுகிறார்கள். புலிகளினால் குடும்பத் தலைவனை இழந்த குடும்பங்கள் பற்றி எந்த ஒரு கதையும் அல்லது செய்தியும் வெளி வந்ததாகத் தெரியவில்லை. அதன் மூலம் புலிகள் "தர்மிஷ்ட" ஆட்சி நடத்தினார்கள் என்றுதான் 100 வருடங்களுக்குப் பின்னர் ஆய்வாளர்கள் அலை மோதுவார்கள்.

Sunday, March 20, 2011

Wars and Disappearances


Wars and Disappearances

-E .Thambiah-

[Given below is a slightly edited text of the address by Comrade E Thambiah, International Organiser of the New-Democratic Marxist-Leninist Party, at the First Plenary Session of the Sixth International Conference Against Disappearances from 9th to 12th December 2011 in London.]

International Humanitarian Law is specifically dealing with or concerned about individuals and groups at war or where there is armed conflict between resistance movements / liberation movements and the state/government security forces.
Resistance against injustice, unreasonableness and social injustice is an inherent right of an individual as well as communities. Resistance perhaps would lead to violence that is not individual terrorism or group terrorism or crime. Suppression of resistance through armed operation of the state security, alone or with the help of paramilitaries, is more or less war. Therefore war does not only mean armed operations between two state security forces or alignments of security forces.
In such situations states or governments tend to claim that the international humanitarian law is wrong and only relevant under a normal situation.
Besides, the state/government passes special laws to suppress resistance and to justify its violation of human rights and humanitarian norms. On the other hand, even under a normal situation there is no value for humanitarian norms within the framework of the so-called rule of law, other than shallow regulations/rules (of military discipline) on paper.
In these circumstances International Humanitarian Law is indulged as the means of protection of individuals and/or groups. It was believed that the Humanitarian Law, unlike International Human Rights Law, was inspired by feelings of humanity and centred on the protection of the individual in times of war and/or internal armed conflict, and the treatment of prisoners of war, hostages, surrendered persons and civilians.
International Humanitarian Law is mostly contained in the four conventions of 1949 and the protocols of 1977. It is about war and warlike situations and deals with the protection of victims of armed conflict. It has very specific provisions forbidding killings, involuntary removal or forced disappearances, torture of captives, taking of hostages, imposition of collective punishment and inflicting of avoidable hardships on civilians, among others. Moreover, the International Humanitarian Law imposes obligations on government forces as well resistance and/or liberation armed groups.
The International Committee of the Red Cross has formulated the contents of treaty and customary law under humanitarian law with regard to armed conflicts, as follows:
 A Persons hors de combat and those who do not take a direct part in hostilities are entitled to respect for their lives and their moral and physical integrity. They shall in all circumstances be protected and treated humanely without any adverse distinction.
 B It is forbidden to kill or injure an enemy who surrenders or who is hors de combat.
 C  The wounded and sick shall be collected and cared for by the party to the conflict which has them in its power. Protection also covers medical personnel, establishments, transports and equipment. The emblem of the Red Cross or the Red Crescent is the sign of such protection and must be respected.
 D Captured combatants and civilians under the authority of an adverse party are entitled to respect for their lives, dignity, personal rights and convictions. They shall be protected against all acts of violence and reprisals. They shall have the right to correspond with their families and to receive relief.
 E  Everyone shall be entitled to benefit from fundamental judicial guarantees. No one shall be held responsible for an act he has not committed. No one shall be subjected to physical or mental torture, corporal punishment or cruel or degrading treatment.
 F  Parties to a conflict and members of their armed forces do not have an unlimited choice of methods and means of warfare. It is prohibited to employ weapons or methods of warfare of a nature to cause unnecessary losses or excessive suffering.
G  Parties to a conflict shall at all times distinguish between the civilian population and combatants in order to spare civilian population and property. Neither the civilian population as such nor civilian persons shall be the object of attack. Attacks shall be directed solely against military objectives.
The rules may not be complete and may not be acceptable to all, but they are the basic rules put forward before the world community. The violations of same are tantamount to war crimes.
The international institutions that are expected to observe and take action against governments or individuals who disobeyed or acted in contravention of the rules are in the hands of hegemonic forces such as the US and powerful Western states, and have, except in one or two instances, not strictly pursued the matters when the rules were violated by the forces of the state themselves and constituted war crimes.
Apart from the above hegemonic forces, most of the countries are either aligned with them or their client states. Therefore attempts to charge them for war crimes, where they have violated the said rules, have proven futile before the so-called international forums.
This situation encourages parties to armed conflicts, mainly the state or the government, to implement repressive measures such as the involuntary removal of persons and forced disappearances of combatants as well as civilians. It can be seen from the wars in Bosnia, Afghanistan, Iraq and other Asian, African and Latin American countries during and after the period of war or armed conflict. In short, disappearances have become day-to-day occurrences.
On that basis, I will share some of my opinions and information about disappearances during and after the period of war.
The call for the fulfilment of the aspirations of the Tamils and other minorities (especially the Muslims and Hill Country Tamils) of Sri Lanka, denied to them by the Sinhala Buddhist chauvinistic elite classes of Sri Lanka, got transformed into armed resistance by Tamil nationalist youths since around 1980. From the very inception, there were forced disappearances of Tamils. The government as well as the Tamil nationalist movements are responsible for the disappearances, but successive governments have been responsible for most.               
It has been reported in the newspapers, despite denial by President Mahinda Rajapaksa, that approximately 287 000 people were displaced and 40 000 were killed in the last days of the war in May 2009 in the Vanni region which was controlled by the LTTE. He accepted that one or two civilians could have been trapped and killed and that the Sri Lankan security forces attacked only the terrorists but not civilians.
The Government claimed that the number of arrested persons was 10 000 and that between 5000 and 6000 of them have been released after screening and rehabilitation, whereas unofficial reports reveal that more than 30 000 people were arrested and that very few of them have been released, and that some of those released were taken into custody again and some are missing.
According to Lakshman Kiriella opposition (UNP) Member of Parliament, there are 9000 political prisoners in Sri Lanka (Thinakkural, Tamil daily 3rd December 2010), and around 11 000 according to an Australian parliamentarian (Thinakkural, Tamil daily 5th December 2010).
According N Sathasiva Iyer, Additional Registrar General, the Department of the Registrar will issue death certificates for disappeared or missing person as soon as possible and the number of persons reported as missing in the Jaffna Peninsula since 1990 is 1000; and so far no parent of a missing person has been compensated.
It has been reported in the media that 87 000 women (50 000 in the Northern Province and 37 000 in the Eastern Province) became widows as a result of 30 years of armed conflict, which implies that 87 000 men have been killed or have been disappeared.
During the war and in the post-war period, Tamil businessmen and personalities were abducted and some of them were released after paying large sums as ransom to the abductors. Bodies of some abductees were found and the whereabouts of the rest remain unknown.
It was continuously reported that people in the Northern and Eastern Provinces made submissions about the disappearance of their loved ones before the Lessons Learnt and Reconciliation Commission appointed by the President of Sri Lanka to make recommendations to him about measures to be taken to prevent the re-emergence of separatism and terrorism, although the LLRC had no mandate to inquire into disappearances.
There are detainees belonging to the Sinhala community branded as ‘Sinhala Tigers’, who have allegedly aided the LTTE. Some army and police personnel too have been held in custody on suspicion of helping the LTTE. Among the Sinhalese detainees are leaders of trade unions, journalists and teachers who have raised their voice on behalf of the Tamil people. There are a few left/revolutionary activists and leaders who have been detained for long as they were involved in resistance movements against anti-people programmes of the governments and demanded a political solution to the ethnic problem of Sri Lanka. The oppressive measures, seemingly against the minorities, are actually and basically against democracy, the right to self determination of the minorities, and human rights.
There have been journalists subjected to threats: Ekneligoda, a Sinhala journalist who has allegedly reported in his on-line news the security forces of Sri Lanka had used chemical weapons during the war in May 2009, has been missing for the past one year.
There are reports and advertisements that appear daily in the media about disappearances of Tamils, including businessmen: Kanapathy Kunaratnam, a Tamil businessman from the Colombo suburb of Wattala disappeared on 24th November 2010, and his body was found in Colombo 6 on 25th November 2010; another businessman, Melo Kunja disappeared on 22nd November 2010 from Colombo 13 and his body was found later by the side of the rail track in Colombo 6. The police say that they are investigating the deaths to ascertain whether the dead committed suicide or were murdered. Bodies of some members of the Muslim community have been found. And it was claimed that they were involved in drug peddling and were killed by their enemies: Patani Razeek of Puttalam, the founder of a social trust fund is missing for the past 10 months. Thus, disappearances in Sri Lanka do not exclude any nationality but mostly affects Tamils.
National and international laws warrant all governments to answer and be held responsible for the disappearances of their citizens and residents in their respective territories. Nationally, a writ of Habeas Corpus application before the Court of Appeal is the prerogative remedy for disappearances, but now the scope of such applications has become senseless. There was also a committee comprising some parliamentarians to receive complaints of disappearances, but it has done no justice to the victims.
The Human Rights Commission of Sri Lanka has the mandate to look into disappearances, but that serves no purpose since the SLHRC has no enforcing authority.
Internationally, there have been some commendable measures taken against states which were responsible for disappearances. For example, in 1981, the Inter-American Commission held the Honduran government responsible for the disappearance of Velaquez Rodriguez, a university student. Now the so called International Community, comprising the world’s hegemonic forces, is directly or indirectly patronising states which force disappearances and violate human rights.
There have been calls from political parties, social organisations and individuals demanding the Government of Sri Lanka as well as international institutions to investigate disappearances and/or war crimes alleged to have been committed during the war (the ‘humanitarian operation’ according to the Government of Sri Lanka), that ended on 19th May 2009, to release political prisoners, to resettle the displaced people with proper compensation and facilities, and to establish justice for the victims.
The need for investigation into war crimes including disappearances is totally rejected by the Government of Sri Lanka, and despite mutterings by the ‘Committee of Experts’ of the UN Secretary General, no meaningful step has been taken.
Therefore this conference should urge the Government of Sri Lanka and international institutions to take meaningful measures in this regard, at least with the available mainstream resources. This course of action should be followed with respect to other governments on the question of disappearances and violation of human rights.
Apart from these, I invite local organisations as well as international organisations like the International Committee Against Disappearances, with their alternative approaches, to accept complaints about, and investigate and inquire into disappearances and violation of human rights, with the view to exposing the truth to the people of the world for them to implement justice, transcending the limitations of sovereign states and the ‘International Community’.
Finally, only a political solution acceptable to the Tamils, Muslims and Hill Country Tamils of Sri Lanka would heal and soothe the wounds of war and violation of human rights.
*****

Friday, March 18, 2011

தகவல்

mdiyjPT
rjhrpt kfhtpj;jpahyar; rpwg;G kyu;
 'rjhrptd;" ghup]; khefupy;

 mdiyjPT rjhrpt kfhtpj;jpahyak; ,d;W ngUk; tsu;r;rp fz;Ls;sJ. efu;g;Gwf; fy;YhupfSf;F ,izahfr; rfy trjpfisAk; ,t;tpj;jpahyak; ngw;W tsu;r;rpfz;L tUtJ kfpo;r;rpf;FupaJ. ,d;iwa R+o;epiyapy;> mjd; 125 -tJ Mz;L epiwTtpohitr; rpwg;Gw elhj;jpr;> rpwe;jnjhU kyiu ntspapl;Litj;jijapl;L mdiyjPT kf;fs; ngUkpjkilfpwhu;fs;. me;j kfpo;r;rpf;Fg; Gyk;ngau;e;j mdiy kf;fspd; gq;fspg;G ghuhl;Lf;Fupajha; mike;jJ."
,t;thW gpuhd;]; - mdiyjPT kf;fs; xd;wpak; fle;j QhapW (13 - 03 - 2011) ghup]; khefupy; elhj;jpa> mdiyjPT rjhrpt kfh tpj;jpahya 125 -tJ Mz;L epiwTtpohr; rpwg;G kyu; 'rjhrptd;" ntspaPl;L epfo;Tf;Fj; jiyiktfpj;J ciuahw;wpa 'fy;tpr; Nritahsu;" jpU rp. fhuhsgps;is Fwpg;gpl;lhu;.

mtu; NkYk; NgRifapy; Fwpg;gpl;ljhtJ: 'fle;j khjk; 17 -k; jpfjp mdiyjPT rjhrpt kfhtpj;jpahya 125 -tJ Mz;L epiwTtpoh eilngw;wNghJ> Gyk;ngau;e;j ehLfspypUe;Jk; mdiyjPitr; Nru;e;j kf;fs; gyu; te;J fye;Jnfhz;L rpwg;gpj;jhu;fs;;. vq;F ehk; rpwg;Gw tho;e;jhYk;> gpwe;j jha; kz;izAk; kwthJ thoNtz;Lk;. tUlk; xUKiwahtJ gpwe;j kz;Zf;Fr; nrd;W juprpf;f Ntz;Lk;. mg;NghJ kdjpYk; clypYk; Vw;gLk; Rfk; thu;j;ijapy; nrhy;y KbahjJ. me;j czu;it vkJ tUq;fhyr; re;jjpapdu;f;Fk; Cl;b tsu;f;f Ntz;Lk;." vd;whu;.

'rjhrptd;" kyiu ntspapl;Litj;J %j;j vOj;jhsu; jpU tp. up. ,sq;Nfhtd; rpwg;Giuahw;Wifapy; Fwpg;gpl;ljhtJ: 'md;W fy;Yhupfs; ntspapLk; kyu;fs; ahtw;wpYk; khztu;fsJ Mf;fq;fNs ngupJk; cs;slq;fpapUe;jd. Mdhy; ,e;j 'rjhrptd;" kyu; kpfr; rpwg;ghd Kiwapy;> mjpf gf;fq;fSld; fdjpahd gy tplaq;fisAk; jhq;fp> mofpa tz;zj;jpy; ntspte;Js;sJ. Nguhrpupau;fsJ Ma;Tf; fl;Liufs;> vOj;jhsu;fs;> ftpQu;fsJ gilg;Gfs;> rpWtu; ,yf;fpag; gilg;Gfs;> khztu;fsJ rpwe;j Mf;fq;fs;> Mrpupau;fsJ mDgtg; gjpTfs;> glq;fs; ahTk; Nru;e;j KOikngw;w xU tz;zkyuhf kyu;e;Js;sik ghuhl;Lf;FupaJ. 

jPtfj;jpYs;s fpuhkq;fSld; xg;gpLifapy;> ,d;W mdiyjPtpy; rpWnjhif kf;fs; trpj;jhYk;> ,d;W mq;F gy tsu;r;rpg; Nghf;fpid> mgptpUj;jpapidf; fhzKbfpwJ. rjhrpt kfhtpj;jpahyak; gy trjpfisAk; ngw;W tsu;r;rpfz;L tUfpwJ. fle;j tUlk; ahd; mq;F nrd;W ghu;j;jNghJ me;j tsu;r;rpapid vd;dhy; czu Kbe;jJ. mq;F tpj;jpahyaj;jpd; 125 -tJ Mz;L epiwTtpoh rpwg;Gw eilngwTk;> kpfj;jukhd rpwg;G kyiu ntspaplTk; cwTg; ghykhfr; nraw;gl;l 'fy;tpr; Nritahsu;" jpU rp. fhuhsgps;is mdiy kf;fs; neQ;rnky;yhk; epiwe;Js;shu;" vd;whu;. 

'rjhrptd;" rpwg;G kyupd; Kjy;gpujpapidg; gpugy 'nkhop khw;Wr; Nrit" epWtd mjpgu; jpU r. fpU];zgps;is ngw;Wf;nfhz;lhu;. ,e;epfo;tpy; jpUkjp tpkyh ghyr;re;jpud;> jpU eh. rptFUehjd;> jpU K. eluhrh MfpNahUk; ciuahw;wpdu;. ghup]; khefupy; thOk; mdiyjPT kf;fs; cl;glg; gyUk; ,e;epfo;tpy; fye;Jnfhz;L rpwg;gpj;jdu;.
'rjhrptd;" rpwg;G kyu; tpiutpy; yz;ld; khefupYk;> fdlhtpYk; ntspaplg;glTs;sik Fwpg;gplj;jf;fJ.

njhFg;G: Mde;jd;.

Monday, March 07, 2011

அனைத்துலக பெண்கள் தினம் 

வரலாறு

1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்றும் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர். புயலாகக் கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்.

ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம். அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது. அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர். இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப் படுத்தினான். இயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது. இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8ம் நாளாகும். அந்த மார்ச் 8 ஆம் நாள் தான் அனைத்துலக பெண்கள் நாள் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.

அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயோர்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 1857 இல் நியூயோர்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின. 1908 இல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910 இல் ஹேகனில் அனைத்துலக பெண்கள் நாள் மாநாடு கிளாரா தலைமையில் கூடியது. அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர். இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 ஐ நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்!



பெப்ரவரி 28, 1909 இல் அமெரிக்க சோஷலிஸ்ட கட்சியின் ஒப்புதலுடன் முதன் முதலாக அந்த நாட்டில் பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் 1913 வரை பெப்ரவரி மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் நாளைக் கடைப்பிடித்து வந்தனர். மார்ச் 25 1911 இல் நியூயோர்க்கில் ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் சுமார் 140 க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இந்நிகழ்வே அமெரிக்காவில் தொழிலாளர் சட்டத்தைக் கொண்டுவர மிக முக்கிய நிகழ்வானது. தொடர்ந்து அனைத்துலக பெண்கள் நாள் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படலாயிற்று.

----------------------------


ரஷ்யாவில் பெண்கள் எழுச்சி

1913-14-களில் முதல் உலகப் போரின் போது ரஷ்யப் பெண்கள் அமைப்பினர் போருக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக பெண்கள் நாள் பேரணிகளை நடத்தினார்கள். இதே ஆண்டில் மார்ச் 8 ஆம் திகதியில் பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.



--------------------------------- 

ஐநா பேரறிவிப்பு

பின்வந்த நாட்களில் ஐ.நா. பெண்கள் அமைப்பு சார்பில் அனைத்துலக பெண்கள் நாள் கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.

தகல்: விக்கிபீடியா

Sunday, March 06, 2011

யாழ்நங்கை என்ற அன்னலட்சுமி இராஜதுரை

சர்வதேச மகளிர் தினம் மார்ச் - 8 - பத்திரிகைத்துறையில் ஓர் சாதனை மாது...

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பத்து வருடங்களுக்கு முன்பு (2000) 'ஞாயிறு தினக்குரல்" பத்திரிகையில் தோழர் 'பாரதிநேசன்" வீ. சின்னத்தம்பி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். 'கம்யூனிஸ இயக்க வளர்ச்சியில் தமிழ்ப் பெண்கள்" என்பது அக்கட்டுரையாகும். அடுத்த ஆண்டு அவர் காலமாகிவிட்டார். அவரது நினைவாக அக்கட்டுரையைச் சிறு நூலாக யான் வெளியிட்டேன்.
அக்கட்டுரையில் வேதவல்லி கந்தையா, தங்கரத்தினம் கந்தையா, பரமேஸ்வரி சண்முகதாசன், வாலாம்பிகை கார்த்திகேசன், பிலோமினம்மா டானியல் ஆகிய மாதரசிகளின் பணிகள் குறித்துச் சுருக்கமாக விளக்கியிருந்தார். இம்மாதரசிகளையும் அவர்தம் பணிகளையும் யான் நன்கறிவேன். அவர்களது பணிகள் மெச்சத்தக்கவை தான்.
பாடசாலைக் காலத்திலிருந்தே மூத்த சகோதரர்களைப் பின்பற்றி கலை இலக்கிய, அரசியல்துறைகளில் யான் எழுத்தாளர்கள், அரசியல் பிரமுகர்களோடு பழகும் வாய்ப்புகள் ஏற்பட்டன.
அன்று சிறந்த பெண் பேச்சாளர்களாக வடபகுதியில் பண்டிதை சத்தியதேவி துரைசிங்கம், பண்டிதை பொன் பாக்கியம், பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி, புஸ்பா செல்வநாயகம், வேதவல்லி கந்தையா, உருத்திரா கந்தசாமி ஆகியோர் விளங்கினர். இவர்களது பேச்சுக்களைக் கேட்கவும், இவர்கள் சிலரோடு மேடையேறும் சந்தர்ப்பமும் அன்றே எனக்கு வாய்த்தது.
அந்தக் காலம் முதல் இன்றுவரை எழுத்துத்துறையில் குறமகள், யாழ்நங்கை - அன்னலட்சுமி இராஜதுரை, புதுமைப்பிரியை - பத்மா சோமகாந்தன், ந. பாலேஸ்வரி, சிதம்பரபத்தினி, குந்தவை - சடாட்சரதேவி, பவானி ஆழ்வாப்பிள்ளை, ரூபராணி யோசேப், இராஜம் புஸ்பவனம், தமிழ்ப்பிரியா, யோகா பாலச்சந்திரன், அருண் விஜயராணி, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், மண்டைதீவு கலைச்செல்வி, கோகிலா மகேந்திரன், சௌமினி, மண்டூர் அசோகா, சிவமலர் செல்லத்துரை, தாமரைச்செல்வி, ஆதிலட்சுமி இராசதுரை, நயிமா சித்திக், சந்திரா தியாகராசா, சந்திரா தனபாலசிங்கம், யோகேஸ்வரி சிவப்பிரகாசம், சிவயோகமலர் ஜெயக்குமார், ஆனந்தி, கவிதா, கெக்கிராவ ஸகானா, ராணி சீதரன் ஆகியோருட்படப் பல பெண் எழுத்தாளர்களை அறிந்திருக்கிறேன்.
அவர்களில் ஒரு மூத்த பெண் படைப்பாளி பத்திரிகைத்துறையில் 48 வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்து பணியாற்றி வருவது உண்மையில் மெச்சத்தக்க சாதனையாகும். ஆமாம்... அவர் தான் யாழ்நங்கை என்ற பெயரில் அன்றுதொட்டுப் பல படைப்புகளைத்தரும் மூத்த பெண் படைப்பாளி அன்னலட்சுமி இராஜதுரை.

இன்று எத்தனையோ இளம்பெண்கள் சிறந்த படைப்பாளிகளாக, பத்திரிகையாளர்களாக விளங்குகிறார்கள். சர்ச்சைக்குரிய விடயங்களையும் துணிச்சலோடு எழுதுகிறார்கள். பெண்ணியம் பேசுகிறார்கள். ஆனால் அன்று ஒரு இளம்பெண் படைப்பாளியாக விளங்கியதோடு, துணிச்சலோடு பத்திரிகைத்துறையைத் தானாக விரும்பி ஏற்றுக்கொண்டு பணிபுரிய முன்வந்தமை முற்போக்கானதும் பாராட்டுக்குரியதுமாகும்.
1959 -ம் ஆண்டு 'கலைச்செல்வி" சஞ்சிகை இவரை இளம் எழுத்தாளர் என அறிமுகப்படுத்தியது. 1962-ம் ஆண்டு முதல் வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தில் உதவி ஆசிரியராகப் பணியை ஆரம்பித்தார். பத்திரிகைத்துறை, ஆங்கிலம் ஆகியவற்றில் டிப்ளோமா தேர்ச்சிச் சான்றிதழ்கள் பெற்றுக்கொண்டவர். ஓவியத்துறையிலும் ஆசிரியர் தரரதரப் பத்திரம் பெற்றுக்கொண்டவரென அறியமுடிகிறது.
சிறுகதை, கட்டுரை, கவிதை, நாவல், விமர்சனம் என எழுத்துத்துறையில் தடம்பதித்தார். கலைச்செல்வி, சிரித்திரன், வீரகேசரி மற்றும் சஞ்சிகைகளிலும் தொடர்ந்து எழுதிவந்தார். இலங்கை வானொலியில் மகளிர் நிகழ்ச்சிகளைத் தயாரித்தளித்தார். அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு சிறப்பித்து வருகிறார்.
நெருப்பு வெளிச்சம் (சிறுகதைத் தொகுதி), உள்ளத்தின் கதவுகள் (நாவல்), விழிச்சுடர் (குறுநாவல்) இருபக்கங்கள் (கவிதைத் தொகுதி) என்பன இவரது படைப்புகளாகும்.
மணிலா, பீஜிங் நகரங்களில் நடைபெற்ற மாநாடுகளில் கலந்துகொண்ட அனுபவங்களை வீரகேசரி வாரவெளியீட்டில் தொடராகப் பல வாரங்கள் எழுதிப் பாராட்டுப் பெற்றார்.
இவரது பணிகளைப் பாராட்டி இந்துக் கலாசார அமைச்சு 1992 -ம் ஆண்டு 'தமிழ்மணி" விருது வழங்கிக் கௌரவித்தது.
சிறந்த பத்திரிகையாளருக்கான விருதை 1993 -ம் ஆண்டு எஸ்மண்ட் விக்கிரமசிங்க அறக்கட்டளை, அன்றைய ஜனாதிபதி டி. பி. விஜயதுங்க மூலம் இவருக்கு வழங்கிக் கௌரவித்தது.
கொழும்பு தமிழ் இளைஞர் கலாசாரக் கூட்டமைப்பு, தென்கிழக்கு ஆய்வு மையம், கொழும்பு கலைச்சங்கம் என்பனவும் இவரது பணிகளைப் பாராட்டிக் கௌரவித்துள்ளன. மல்லிகை சஞ்சிகை அட்டையில் இவரது படத்தைப் பிரசுரித்து, இலக்கிய வரலாற்றில் பெருமை சேர்த்தது.
இலங்கை எங்கும் நடைபெறும் பல்வேறு மகளிர் நிகழ்ச்சிகள், இலக்கியக் கருத்தரங்குகள், உரையரங்குகள், இலக்கியப் பயிற்சிப் பட்டறைகள், கலந்துரையாடல்கள் யாவற்றிலும் கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றார்.
சிறுகதை, கட்டுரை, கவிதை, நாவல், விமர்சனம் மொழிபெயர்ப்பு, பத்திரிகைத்துறை என அனைத்திலும் சிறப்புற்று விளங்கும் இவருக்குக் கணவர் திரு இராஜதுரை உறுதுணையாக என்றும் உதவிவருவது முன்மாதிரியானதாகும்.
கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே வீரகேசரி நிருபராக நியமனம் பெற்ற யான், அன்று வீரகேசரி நிருபர்களுக்கான கருத்தரங்கு - ஒன்றுகூடலுக்கென அங்கு செல்லும்போதெல்லாம் இவரைப் பார்த்திருக்கிறேன் - பேசியிருக்கிறேன். இலக்கியக் கூட்டங்களிலும், வானொலியிலும் அவரது குரலைக் கேட்டுள்ளேன்.
பத்திரிகை அலுவலகத்தில் மிக அமைதியாகத் தனது பணியில் மூழ்கியிருப்பார். கதைத்தால் புன்முறுவலோடு ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்வார்.
தற்போது, வீரகேசரி நிறுவனம் வெளியிடும் 'கலைக்கேசரி" சஞ்சிகையின் பொறுப்பாசிரியராகக் கடமையாற்றுகிறார். கலைக்கேசரியைத் தொடர்ந்து பெற்று வருகிறேன். வடிவமைப்பிலும், விடயதானங்களின் உள்ளடக்கத்திலும் கனதியான, அழகான சஞ்சிகையாகக், கலாசாரப் பண்பாட்டு, ஆய்வு இதழாக கலைக்கேசரி வெளிவந்து இவரது ஆளுமையை வெளிப்படுத்துகிறது. தமிழகத்தில்கூட இத்தகைய இதழ் வெளிவருவதில்லை.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில், பல வருடங்களுக்குப் பின் இவரைச் சந்தித்தேன். 'சிற்றிதழ்கள்" அரங்கில் கட்டுரை சமர்ப்பித்துப் பேசுவதற்காக இருந்தேன். ஆரம்பமாக ஒரு சில நிமிடங்களேயிருந்தன. முன்வரிசையில் இவர் அமர்ந்திருந்தார். அருகில் சென்று வணக்கம் சொன்னேன்.
'இளங்கோவன் எப்படி? பிரான்ஸ் நாட்டில் இருக்கிறாய்.. இல்லையா? முன்னர் மெல்லிய ஆளாக.. அழகாக.. இருந்தாய்... இப்ப.. என்ன.. இப்படி..? என்றார்.
'வெளிநாட்டுச் சுவாத்தியம்... ... வயதும் அறுபதாகிறது..." என்றேன்.
'அப்படியா..." புன்னகைத்தார். 'நல்லாயிரு... .." என்று தாயுள்ளத்தோடு வாழ்த்தினார். மனது குளிர்ந்தது. அப்பால் நகர்ந்து மேடைக்குச் சென்றேன்.
சிறந்த பெண் படைப்பாளியாகப், பத்திரிகையாளராகப் பல்லாண்டுகள் பணிபுரிந்து சாதனை படைத்துவரும், பெண்ணினத்துக்குப் பெருமை சேர்க்கும் அந்தத் தாய் அன்னலட்சுமி இராஜதுரை மேலும் பல்லாண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து பணிபுரியப் புலம்பெயர்ந்து வாழும் நாமும் வாழ்த்துவோமாக... ..!

- வி. ரி. இளங்கோவன்.
(பிரான்ஸ்)

Saturday, March 05, 2011

குடை நிழல்அறிமுகம்

மலையக இலக்கியத்தில் புதிய போக்கை காட்டி நிற்கும் குடை நிழல் என்ற நாவல்

- லெனின் மதிவானம் -

மலையக இலக்கியத்தில் தனித்துவமான ஆளுமை சுவடுகளைப் பதித்தவர் தெளிவத்தை ஜோசப். அவர் சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், விமர்சகர் என பல்துறைச் சார்ந்த பங்களிப்பினை மலையக இலக்கியத்திற்கு வழங்கியவர். இன்று இருக்க கூடிய மலையக எழுத்தாளர்களுள் தெளிவத்தை ஜோசப் அவர்களை சிரேஷ்டராய்க் கருதி கொள்ளும் மரபு இயல்பாகவே தோன்றியுள்ளது.
ஈழத்து எழுத்தாளர் மத்தியில் தெளிவத்தை ஜோசப் என்ற பெயருக்கு தனி மதிப்புண்டு. அப்பெயரானது ஒருவருக்கு பரிவு, பாசம், பயம், மதிப்பு முதலியவற்றை தோற்றுவிக்கும் கனிவுள்ள இடத்தில் தான் கண்டிப்பும் இருக்கும் என்பதற்கமைய இயல்பாகவே எளிமையாகவும் இனிமையாகவும் பேசி பழகும் தெளிவத்தை ஜோசப் ஆழமான கனதியான விசயங்களை கூறும் போதும், அநீதிகளை எதிர்க்கும் போதும் ஆவேசத்துடன் பேசி தனது கருத்துக்களை நிறுவார். இத்தகைய பண்பினை அவரது படைப்புகளிலும் காணலாம்.
அண்மைக் காலத்தில் மலையக இலக்கியத்தில் ஏற்பட்ட புதியதொரு போக்குதான் அதன் தனித்துவம் பிரதேச மண்வாசனை, சமகால வாழ்க்கை பிரச்சனை என்பவற்றினை வலியுறுத்துகின்ற அதே சமயம் அது தமிழ் இலக்கியத்தின் பொதுமையையும் வலியுறுத்தி நிற்கின்றது.
தென்னாபிரிக்காவில் தோற்ற விடுதலையுணர்வு மிக்க இலக்கியங்களும் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் முகிழ்ந்த பாரதியின் படைப்புகளும் அவ்வவ்வக் காலச் சூழலை பிரதிப்பலித்து நின்ற அதே சமயம், அவை ஏனைய ஒடுக்கப்படும் மக்களின் உணர்வுகளை பிரதிப்பலித்து நிற்பதனைக் காணலாம். இதனை தான் மார்க்ஸ் “பல தள  இலக்கியங் களிலிருந்தும் தேசிய இலக்கியங்களிலிருந்தும் ஒரு உலக இலக்கியம் உதயமாகின்றது” என்றார்.
இந்த அடிப்படையில் நோக்குகின்ற போது மலையக படைப்பாளிகள் இன்று ஈழத்துப் படைப்பாளிகளாக பார்க்கின்ற நிலை தோன்றி வளர்ந்துள்ளது. இந்த பின்னணியில் தான் தெளிவத்தை ஜோசப் இன்று ஈழத்து தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்பாளியாக கொள்ளப்படுகின்றார். மலையக இலக்கியத்தின் ஆழ அகலப்பாட்டை நுண்ணயத்துடன் நோக்குபவர்களால் இந்த புதிய மாற்றங்களையும் போக்குகளையும் உணர்ந்துக் கொள்ள முடியும்.
இந்த பின்னனியில் நின்றுக் கொண்டே தெளிவத்தை ஜோசப்பின் படைப்புகளை மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. இக் கட்டுரையும் அவரது ”குடை நிழல்” என்ற நாவல் குறித்த அறிமுகத்தினை வழங்க முற்படுகின்றது.
மலையகத் தமிழர்கள் பல்வேறுபட்ட தடைகளுக்கும் தர்மயுத்தத்திற்கும் பின்னர் தம்மை தேசிய சிறுபான்மைக்கான அடையாளத்துடன் இனக்குழுமமாக வளர்த்த போது தொழில் நிமிர்த்தம் கொழும்புக்கு புலம்பெயர தொடங்கினர். அவர்கள் கொழும்பை தொழிலுக்கான இடமாகவும் மலையகத்தை வாழ்விடமாகவும் கொண்டிருந்தனர். ஆரம்பத்தில் சாதாரண கூலி வேலை, வீட்டு வேலைகளில் ஈடுபடுகின்றவர்களாக காணப்பட்டனர். காலப்போக்கில் ஏற்பட்ட சமூக பெயர்ச்சியின் காரணமாக பல தொழில்களில் ஈடுபடக் கூடிய மத்தியதர வர்க்கமொன்று கொழும்பில் தொழில் நிமிர்த்தம் வசிக்கின்றவர்களானார்கள்.
இத்தகைய சூழலில் இலங்கையில் ஏற்பட்ட இனமுரண்பாடுகள் அதனையொட்டி எழுந்த இனவிடுதலை போராட்டங்கள் - கைதுகள், தனிமனித பழிவாங்கல்கள் மலையகத் தமிழரையும் பாதிக்க தொடங்கியது. குறிப்பாக கொழும்பை வாழ்விடமாகவும் தொழிலிடமாகவும் கொண்டவர்கள் பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு உட்பட்டனர். இந்த சூழலில் மலையகத் தமிழர்கள் அனுபவித்த இன்னல்களை இந்நாவலின் பிரதான பாத்திரம் மூலமாக வெளிப்படுத்தப்படுகின்றன. இதுவரை வெளிவந்த படைப்புகளில் இந்நாவலே இந்த நிலைமையை ஓரளவு எடுத்துக் காட்டுகின்றது எனலாம்.
அத்தியாயம் 5 இல் மலையக வாழ்க்கை எடுத்துக் கூறப்படுகின்றது. பெரியாங்கங்கானி காலத்தில் மலையகத்தில் காணப்பட்ட நிலைமைகள் சுரண்டல், ஒடுக்கு முறை என்பன வெளிக் கொணரப்படுகின்றது. யாவற்றுக்கும் மேலாக ஆண்களின் ரோமம் அடர்ந்த கரங்களின் ஆதிக்கத்தை, பெண்களின் நிலையை பெரியாங்கங்கானியின் மனைவி, அவரது வைப்பாட்டிகள் மூலமாக ஆசிரியர் எடுத்துக் காட்டத் தவறவில்லை. ஒரு புறத்தில் பெரியாங்கங்காணி வாழ்க்கை முறையை அழகுப்படுத்திக் காட்டியிருப்பினும் அதன் சிதைவும்; வெளிக் கொணரப்பட்டுள்ளது.
மலையக வாழ்வில் தாக்கம் செலுத்துகின்ற பிறிதொரு போக்கு தான் யாழ்ப்பான மேட்டுக் குடித்தளத்தின் அதிகார மனோபாவமாகும். இலங்கைத் தமிழர்களில் யாழ்ப்பாணத்தவர்களே மேலானவர்கள் எனவும் அவர்களே கல்வி அறிவு மிக்கவர்கள் என்றவகையிலான சிந்தனைப் போக்கு இன்றுவரை இருந்து வருகின்றது. மலையகத்தின் அபிவிருத்தி குன்றிய நிலை- கல்வியில் போதிய வளர்ச்சியின்மை  இந்த சிந்தனையை வலுப்படுத்தியுள்ளது. மலையகத்தில் தோன்றிய புதிய மத்தியதர வர்க்கமும்(குறிப்பாக எண்பதுகளில்) யாழ்ப்பானத் தமிழர்களாக பாவனை செய்தல், அவர்களின் மொழி நடையை கையாள்தல், படித்த இளைஞர்கள் யாழ்ப்பான பெண்களை திருமணம் செய்தல் முதலிய அம்சங்களினூடாக தமக்கான அங்கிகாரத்தை வேண்டி நிற்கின்ற போக்கு (இயல்பான காதல் திருமணம் என்பது வேறு) இச்சமூகமைப்பில் வளர்ந்திருந்தது. இந்நாவலில் வருகின்ற சட்டத்தரணியின் போலி வாழ்க்கை குறித்தும், அதனால் ஏற்படுகின்ற கருத்தோட்டங்கள் குறித்தும் எடுத்துக் காட்டுவதில் இந்நாவல் ஆசிரியர் வெற்றிப் பெறுகின்றார். இதனை யாழ்ப்பாண வெறுப்புணர்வுகள் படைப்பாக்காது அதனை இயல்பான சமூக சிதைவின் பின்னனியில் சித்தரித்துக் காட்ட முனைவது இந்த நாவலின் தனித்துவமான அம்சமாகும். தொழிலாளர் வர்க்கத்திலிருந்து வளர்ந்து தமது கல்வி மேம்பாட்டின் மூலமாக மத்திய தர வர்க்கமாக மாறியவர்கள் கிளாக்கர், கணக்கப்பிள்ளை போன்றோரின் பிள்ளைகளை திருமணம் செய்து அதனூடாக தமது வாழ்க்கைப் போக்குகளை மாற்றிக் கொண்டவர்கள் பற்றியே மலையகத்தில் அனேக படைப்புகள் வெளிவந்துள்ளன. ஆனால் யாழ்பாண மேட்டிமைத்தனதிதிற்கு தமது தனமான உணர்ச்சிகளை அடமானம் வைத்து மானுடம் இழந்து அம்மணமாக நின்றவர்கள் குறித்துக் காட்டியதில் இந்நாவலுக்கு முக்கிய இடமுண்டு. இந்நாவலில் கருத்து முழக்கங்களையோ உணர்ச்சிமயமான சன்னதங்களையோ காணமுடியாதுள்ளது. கருத்து நிலை கோட்பாடாக விபரிக்கப்படாமல் மனிதவுறவுகளின் அடிப்படையில் அவற்றினைப் படைப்பாக்க முனைந்துள்ளமை இந்நாவலின் வெற்றிக்கு வழிவகுக்கின்றது. காலவோட்டத்தில் இடையீடின்றி மாறிக் கொண்டிருக்கும் வாழ்நிலைகளின் இயக்கத்திசைகளை நுணுக்கமாக நோக்குவதற்கு இந்நாவல் துணை நிற்கின்றது.
இந்நாவலில் மலையக மண்வாசனை மிக்க மொழிநடை கையாளப்பட்டாலும் அது இடம், பொருள், காலம், வர்க்க, தொழில் நிலைகளுக்கேற்ப அமைந்திருப்பதைக் காணலாம். எடுத்துக் காட்டாக பெரியங்கங்கானி தமக்கு வீட்டு வேலைகளை செய்கின்ற கிருஷ்ணாவிடம் உரையாடுகின்ற பாங்கு, மொழிநடை நாவலின் கதாநாயகன் தமது சட்டத்தரணி நண்பன், மற்றும் பொலிஸ்காரர்களிடம் உரையாடுகின்ற மொழிநடையும் வித்தியாசப்படுகின்றது. இவ்வாறு நாவல் முழுவதிலும் தேவைக்கேற்ற வகையில் மொழி நடை கையாளப்பட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது.
இந்நாவலினை தொகுத்து நோக்குகின்ற போது, நாவலின் இறுதி இப்படியாக வரிகள் அமைந்துக் காணப்படுகின்றன.குடை நிழல் இருந்து குஞ்சரம் ஊரும் இவர்களுக்கு நடை மெலிந்து நலிவுறும் எங்கள் நிலை எங்கே தெரியப் போகிறது. அதனால்தான் சொல்கின்றோம் குடையைப் பிடுங்க வேண்டும் என்று~குடையை மட்டுமல்ல குஞ்சரத்தையும் சேர்த்து என்கிறது மனம்”
“குடையை மட்டுமல்ல குஞ்சரத்தையும் சேர்த்து” என்ற வரிகள் புதியதோர் அரசியல் மாற்றத்திற்கான தேவையை உணர்த்துகின்றது. இக் கூற்று சோகத்தை இசைத்தாலும் அவைக்கூட சமூக அசைவியக்கத்தை முன்னெடுத்து செல்வதாகவே அமைந்திருக்கின்றது.
இத்தகைய சிறப்புகளை கொண்டிருக்கின்ற இந்நாவலில் மலையகத் தமிழர்களை இந்திய வம்சாவழித்தமிழர் என்ற பதம் கொண்டு அழைக்க முற்படுகின்றார் தெளிவத்தை ஜோசெப்  மலையகத் தமிழரின் வரலாறு இருப்பு, அவர் தம் நடாத்திய போராட்டங்கள் யாவற்றையும் சிதைக்கும் வகையில் தான் இந்திய தமிழர்கள் என்ற அடையாளம் பாவிக்கப்படுகின்றது. ஆயிரம் கணக்கான தொழிலாளர்களின் நலனில் பின்னனியில் உருவாகியிருக்கின்ற மலையகத்தமிழர் என்ற அடையாளத்தை மறுத்து இந்திய தமிழர் என்ற அடையாளம் பிரயோகிக்கப்படுவது எமது வரலாற்றை பின்னோக்கித் தள்ளுவதாக மட்டுமன்று இந்திய ஆதிக்க சக்திகளின் கைக்கூலியாக எம்மை ஆக்கிக் கொள்ள கூடிய நிலையையும் உருவாக்கும்.
எமது யாசிப்பு இது போன்ற காத்திரமான படைப்புகளை மேலும் தெளிவத்தை ஜோசப் வெளிக்கொணர வேண்டும் என்பதாகும்.
நன்றி :லெனின் மதிவானம்

மணத்துக்கு அரசியல் உண்டா?



மணத்துக்கு அரசியல் உண்டா ? இரண்டு கதைகள்


-தமயந்தி -


கதை/1

உள்ளிக்கு வந்த வாழ்வு!

1988ம் ஆண்டு. நான் அகதியாய் வந்த புதிது. செய்வதின்னதெனத் தெரியாது நானிருந்த அகதி முகாமுக்கு அண்மையிலிருந்த ரூசன்லி என்ற கடற்கரையின் பாறைகளின் மீது அமர்ந்தும், படுத்துறங்கியும் பொழுதுகளைக் கரைத்த காலமது. (எனது பல சிறுகதைகள் இந்தப் பாறை இடுக்குகளில்தான் பிரசவமாகின)

ஒரு நாள், உறவினனும் நண்பனுமான ஒருவன் என்னை ஒரு பழைய பொருட்கள் விற்கும் கடைக்கு அழைத்துச் சென்றான். சுவரில் அறையப்பட்ட ஆணியில் தூசி படிந்தபடியே ஒரு ரஷ்யன் தயாரிப்பான செனித் கமெரா தொங்கிக்கொண்டிருந்தது. நான் பிறப்பதற்கு நான்கு வருடங்களுக்கு முன்பே அது தயாரிக்கப்பட்டது. விலையைக் கேட்டேன் 500குரோனர்களென கடைக்காரக் கிழவர் சொன்னார். அடுத்து ஒருவாரத்தை சமாளிக்க என்னிடம் இருந்தது 500மட்டுமே. உடனே அதை எடுத்து அவரிடம் நீட்டி கமெராவைப் பெற்றுக் கொண்டேன்.

கடையிலிருந்து எனது அகதிக்கூடு வந்தடையும் மட்டும் என் நண்பன் பாடிய மங்களமிருக்கே.... சொல்லிமாளா. இந்தக் கடைகளிலெல்லாம் சொன்ன விலைக்கு யாருமே எந்தப் பொருளும் வாங்குவதில்லை. நோர்வேஜியரே எங்களைவிடப் பேரம் பேசித்தான் வாங்குவார்கள். அப்படி பேரம்பேசி 100, 150 குரோணர்களுக்கே இதனை வாங்கியிருக்க முடியுமென நீண்ட பிரசங்கமும், அறிவுரையும், திட்டல்களும். இவை எதுவுமே என் மண்டையில் ஏறவில்லை. காரணம் வெறுங்கையுடன் இருந்த எனக்கு இப்போ நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு பெரிய ஆயுதம் கிடைத்த திருப்தி. இறக்கைகள் இல்லாமலேயே சிந்தனை ஒரு பருந்துக்கு ஒப்பானதாய் வானவெளியெங்கணும் வட்டமிட்டுக்கொண்டிருந்தது.

விடிகாலையிலிருந்தே புறப்பட்டு விடுவேன். காடுகள், மலைகள், கடற்கரைகள், பாறைகள், சவக்காலைகள், குச்சொழுங்கைகளென கமெராவோடு அலைதலே நிரந்தரத் தொழிலாகி விட்டது. அப்படி அலைந்து கொண்டிருந்த ஒரு சமயத்தில்தான் நான் நண்பன் ஜீவமுரளியின் "ஒலிகளின் அரசியல்" கட்டுரைக்கு முகாந்திரமாய் சொல்ல வந்த இந்த சம்பவம் நடந்தது.

தெருவோரத்தின் நடைபாதையால் நடந்துகொண்டிருக்கிறேன். திடீரென என்னைத் தட்டிவிடுமாப்போல் மிகமிக அருகில் வந்து என்னைக் கடந்துசென்ற ஒரு சிவப்பு நிறக் காரிலிருந்து "க்வித்லொக்" (உள்ளிப்பூண்டு) என உரத்த குரலில் கோரஸாக கத்தியபடி கார் யன்னலூடாக விரலடித்துக் காட்டினார்கள். நோர்வேஜியர்கள் எம்மை நிந்திக்க, பழித்துரைக்க, வசைபாட உள்ளிப்பூண்டு என்ற இந்த வார்த்தையைத்தான் பாவிப்பார்களென அறிந்து வைத்திருந்தேன். ஆனால் இதுதான் நான் முதல் தடவையாக நேரடியாக எதிர் கொள்கிறேன். அந்தக் கணத்திலேயே தெருவோரத்தில் கிடந்த சொத்தம்பி பனங்கொட்டையளவு கல்லை எடுத்து குறி பார்த்து வேகமாய் எறிந்தேன். காரில் அது படும் என்றே நினைக்கவில்லை. பின்பக்கக் கண்ணாடியில் போய்த் தாக்கியது. கண்ணாடி நொருங்கியது. அல்பிரட் தம்பியையாவின் வயற்காணிக்குள் உயர்ந்து சடைத்து நின்ற இலுப்பை மரத்தில் கல்லெறிந்து காய்கள் விழுத்திய 70களின் கெட்டித்தனங்கள் இன்னும் மறைந்து விடவில்லை என்ற எண்ணம் ஒரு கணம் வந்து போனது.

சிகப்புக்கார் சடன்பிரேக் போட்டு நின்றது. காரிலிருந்து மூன்று வாட்டசாட்டமான இளைஞர்களும், அவர்கள் பின்னால் இரண்டு அழகிய இளைஞிகளும் என்னை நோக்கி வந்தனர். அவர்கள் இறங்கி வரும்போதே சடக் என எனது செனித் கமெராவால் அவர்களை ஒரு கிளிக் செய்து விட்டேன்.

பெரீய்ய வாக்குவாதம். "நீ இப்படி செய்ய முடியாது, இங்கு உனது செயலை நோர்வேஜியச் சட்டம் அனுமதிக்காது, உனக்கு சிறைத்தண்டனை கிடைக்கும்" இப்படியெல்லாம் அடுக்கிக்கொண்டே போனார்கள். நான் சொன்னேன் "நீங்கள் என்னை இப்படி அவமதிக்கும் வார்த்தைகள் சொன்னால் மீண்டும் கல்லெறிவேன்" என்று. "இப்படி சொல்லாதே" என்றனர். "நீங்கள் சொன்னால் நான் எறிவேன்" என்றேன். சர்ச்சை நீண்டுகொண்டே போனது. இரண்டு பெண்களும் அவர்களை இடைமறித்து, அவர்களது தவறை சுட்டிக்காட்டி, சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். அவர்கள் என்னோடு விவாதம் செய்து கொண்டிருக்கும்போதே வேலியோரங்களில் அடுத்து இன்னும் எங்கெங்கு கற்கள் கிடக்கின்றன என கண்களால் கணக்குப்போட்டு வத்து விட்டேன்.

காரில் சென்று ஏறும்போது ஒருவன் மீண்டும் விரலடித்துக் காட்டினான். ஏற்கனவே அவதானித்து வைத்திருந்த கற்களில் ஒன்றை ஓடிப்போய் எடுத்து எறிய ஓங்கினேன். இரண்டு கைகளையும் உயர்த்தி "மன்னித்துக்கொள், மன்னித்துக்கொள்..." எனக் கத்தினான். ஒரு கையில் கண்ணகிசிலை சிலம்பை ஏந்தியதுபோல் கல்லை ஏந்தியபடி மறு கையால் "ஓடிப்போ" என்பதாய் சைகை செய்தேன். அவர்கள் போய் விட்டார்கள்.

நாம் விரும்பித் தின்னும் உள்ளிப்பூண்டை, பத்தியங்களுக்கு பேருதவியாயிருக்கும் உள்ளிப்பூண்டை, குழந்தை பெற்ற தாய்மாரின் வயிற்றுப்புண்ணை ஆற்றிய உள்ளிப்பூண்டை, எனது அப்பு பேதுருவை வாய்வு உபாதையிலிருந்து மீட்டெடுக்க ஆச்சி அன்னம்மா கைப்பக்குவமாய் வைக்கும் ரசத்தில் நடு நாயமாய் அலங்கரிக்கும் உள்ளிப்பூண்டை, நாம் ஆழ்கடலில் சுழியோடி கடலட்டை, சங்கு சிங்கறால் பிடித்த காலங்களில் ஏற்படும் காதுக்குத்துக்கு நெருப்பில் வாட்டி காதுக்குள் சொருகி வைத்து வலி அகற்றும் உள்ளிப்பூண்டை வைத்தே இவர்கள் எம்மை அடிக்கிறார்களே என்ற ஆதங்கத்தை சுமந்தபடி மீண்டும் ரூசன்லி கடற்கரையின் பாறைகளைத் தேடி நடந்தேன். எனது "சரக்குத்தண்ணி" என்ற சிறுகதை அப்போதான் பிரசவமானது.

1999ம் ஆண்டு.
நான் பணி புரியும் நோர்வேஜிய தினப்பத்திரிகையில் அடுத்த நாளுக்குரிய செய்திப் படங்களை எனது டெஸ்கிலிருந்து செப்பனிட்டுக்கொண்டிருந்தேன். இரண்டு மீற்றர் இடைவெளியில் டெஸ்கில் அமர்ந்திருந்து தனக்கான பணிகளை செய்து கொண்டிருந்தான் எனது சக நிழற்படப்பிடிப்பாள நோர்வேஜிய நண்பன் அந்த்ரே. அவன் எதையோ கறுக்கு புறுக்கு என சப்பிக்கொண்டிருந்தான். "என்ன...?" எனக் கேட்கும் பாவனையில் அவனைப் பார்த்தேன். விளங்கிக்கொண்டவன் தனது காற்சட்டைப் பையிலிருந்து கடலைக்கொட்டைகள் போல் ஒரு சிறங்கையை எடுத்து எனது பக்கம் நீட்டி சொன்னான் "நீயும் சாப்பிடு நண்பா, இது இதயத்துக்கு நல்லது, இரத்தத்தை சுத்திகரிக்கும், இயற்கை மருந்து நீயும் சாப்பிடு" என்றான். அவனது உள்ளங்கையில் உரித்த உள்ளிப்பற்கள் சிரித்துக்கொண்டிருந்தன.

மதியவுணவு இடைவேளையின்போது அவனிடம் சொன்னேன் "எம்மை இந்த நாட்டில் உள்ளிப்பூண்டு எனச் சொல்லித்தானே இத்தனை காலம் அவமதிப்பு செய்தார்கள்" என. அவன் சொன்னான் "நானும் அதை செய்திருக்கிறேன் நண்பா, அப்போதெல்லாம் இதன் அருமை எனக்குத் தெரியாது. அப்போ இது எனக்குக் கெட்ட மணமாய் இருந்தது. இப்போ எனக்கு மிகவும் பிடித்தமான மணமாய் உணர்கிறேன். எனது வீட்டில் உள்ளியில் தயாரிக்கப்பட்ட கிறீம், சீஸ், பட்டர், எண்ணெய் எல்லாமும் உண்டு தெரியுமா?" என்றான்.

வாழ்க உள்ளியின் வாசம், ஓங்குக உள்ளியின் புகள்!!
உள்ளிக்கு ஏற்பட்ட இந்த வாழ்வானது இப்போ எமது தேவைக்கு கிடைக்க மாட்டேனென்கிறது.


கதை/2

தூள்க்குழம்புக்கு வந்த வாழ்வு!

எமது மகள் இலக்கியா படிக்கும் பாடசாலை எங்கள் வீட்டிலிருந்து 100 அல்லது 120மீற்றர் தொலைவில்தான் அமைந்திருக்கிறது. மதியம் 12மணிக்கு சாப்பாட்டு இடவேளை மணி ஒலித்ததும் வீட்டுக்கு ஓடி வருவாள். முதல் நாள் சமைத்த குழம்புச் சட்டிக்குள் சோற்றைப் போட்டுப் பிரட்டி சூடாக்கிச் சாப்பிட்டு விட்டுத்தான் போவாள்.

நானும் பல தடவைகள் சொல்லியிருக்கிறேன் "இப்படி குழம்பு சாப்பிட்டுப் போனால் வகுப்பில் பக்கத்திலிருக்கும் பிள்ளைகளுக்கு மணக்குமே" என்று. இதற்கு அவள் எனக்குத் தரும் பதில் "அப்பா... அவங்கட உடம்பிலயிருந்து மணக்கிற புளிச்சபால் மணத்தவிட இது நல்லாத்தானேயப்பா இருக்கு?, அவங்களும் தாங்க விரும்பின பாதி வெந்த மீன், அரைப்பச்சை இறச்சி எண்டு சாப்பாடுகளக் கொண்டு வந்து சாப்பிடுகிறாங்கள்தானே?"

நானும் விக்கிரமாதித்தன் போல் அப்பப்போ முயற்சி எடுப்பேன், அவளும் வேதாளம்போல் ஒற்றை வரியில் கேள்விகளைக் கேட்டுவிட்டு குழம்புச்சட்டியோடு மரத்திலேறி விடுவாள். காலப்போக்கில் பழைய குழம்புக்கறியையும் சோற்றையும் பொட்டலமாகவே கட்டிக்கொண்டு பாடசாலைக்கே கொண்டு போகத் தொடங்கி விட்டாள்.

"ம்... நல்ல வாசமா இருக்கே இலக்கியா... கொஞ்சம் சுவை பார்க்கத் தருவாயா..?" எனக் கேட்ட இவளது நண்ப நண்பிகளுக்கு குழம்புக் குழையலைக் கொடுத்திருக்கிறாள். உறைப்புத் தாங்க முடியாமல் தண்ணீரைக் குடித்துக் குடித்து சாப்பிட்டிருக்கிறார்கள். அப்படியே பழகியும் விட்டார்கள். வகுப்பாசிரியரையும் விட்டு வைக்கவிலை.

ஒரு நாள் சமையற்கலை பாடத்தின் போது நான் அழைக்கப்பட்டேன். கோழிக்குழம்பு சமைப்பது எப்படியென சமைத்தும் காட்டினேன். கூடவே ரொட்டி. ரொட்டியுமில்லை, குழம்புச் சட்டியுமில்லை. மாணவர்களும் ஆசிரியர்களும் எல்லாவற்றையுமே காலி பண்ணி விட்டார்கள். இப்போ குறைந்தது மாதத்தில் ஒரு தடவையாவது இலக்கியாவின் நண்ப நண்பிகள் ஐந்தாறுபேர் வீட்டுக்கு வந்து எமது சாப்பாட்டை சாப்பிட்டுப் போகிறார்கள். பல தடவைகள் நண்பர்குழாமோடு அவர்களது வீடுகளுக்கும் சென்று தாமே எமது சமையலை செய்து சாப்பிடத் தொடங்கி விட்டார்கள்.

தேவைகள்தான் மணத்தின் மீதான விருப்பு வெறுப்புக்களைத் தீர்மானிக்கிறதென நான் நினைக்கிறேன்.

யாராவது விழாம்பழ ஜாம் சாப்பிட்டிருக்கிறீர்களா....? என்ன சுவை!
அந்த ஜாமை மணந்து பார்த்திருக்கிறீர்களா...?
புளித்த மணத்தோடு வயிற்றால போகுமே அதே மணம்தான் இல்லையா?!

ஆனாலும் சாப்பிடுகிறோம்.
இங்கே தேவைதானே முன்னுக்கு நிற்கிறது.

Friday, March 04, 2011

உலகின் அழகிய முதல் பெண்


முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு
ஈழக்கவிதை நூல்

சொல் -கவிதை -வரலாறு


தொகுப்பாசிரியர் : குட்டி ரேவதி

மதிப்புரை : லீனா மணிமேகலை

நன்றி புத்தகம் பேசுது மார்ச் 2011

"வரலாற்றை உருவாக்குபவன் ஒடுக்குமுறையாளன்தான். அவன் எழுதுகின்ற வரலாறு அவனால் ஒடுக்கப்படவர்களின் வரலாறாக இருப்பதில்லை. அது சூறையாடுகின்ற, வன்புணர்ச்சி செய்கின்ற, வறுமையை உருவாக்குகின்ற அவனது சொந்த வரலாறே. இதற்கு மாறாக ஒடுக்கப்பட்டவர்களால் வேறொரு வரலாறு உருவாக்கப்படுகிறது.ஆனால் இந்த வரலாற்றை உருவாக்குபவர்கள் நாவலாசிரியர்களும் கவிஞர்களும்தானே தவிர தொழில்ரீதியான அல்லது கல்வித்துறை சார்ந்த வரலாற்றாளர்களல்ல" என்று ஃபிரான்ஸ் ஃபனான் குறிப்பிடுவார். சமூகத்தின் நெருக்கடியை முதலில் உணர்ந்துக் கொள்வது கவிதையாகத் தான் இருக்கிறது. ஆதிக்கமயமாக்கலுக்கும், சட்டங்களுக்கும் தணிக்கைகளுக்கும் வெளியே சதா தன்னிலையைப் பேசி மிச்சமிருக்கும் நம்பிக்கைகளைத் திரட்டிக் கொண்டேயிருக்கிறது.

கவிஞர் குட்டி ரேவதி தொகுத்து, ஆழி பதிப்பகத்தால் வெளி வந்துள்ள “முள்ளி வாய்க்காலுக்குப் பின்” கவிதை தொகுதி ஒரு மாபரும் இன அழிப்பிற்குப் பின்னான வாழ்வுறுதியை கூட்டு நினைவுகளின் முன்மொழிதலாக வைக்கின்றது. கவிஞர்கள் கி.பி.அரவிந்தன், சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், திருமாவளவன், செழியன், சிவசேகரம், மாதுமை, கனகலதா எனறு தொடங்கி தீபச்செல்வன், அனார், பஹீமா ஜஹான், ரிஷான் ஷெரீஃப் ஊடாக விரியும் இத்தொகுதியின் வார்த்தைப் படலங்களின் பின்னால் கசிகிறது படுகொலைகளின் ரத்தக் கவுச்சி நாற்றம். கவிஞர் விநோதினி எழுதிச்செல்வது போல, நாம் காரிருளில், விமானச் சத்தங்களுக்கு நடுவே, வெடி மணத்தோடு, கைகளில், பசித்த மென் வயிறுகளில், தலைகளில், நீண்ட பின்னல்களில், பாதங்களில், தடுக்கி விழுந்து நடந்தபடி கவிதைகளைக் கடக்கவியலாது வாசித்து கிடப்பது உயிர் துடிக்க துடிக்க பிரேதப் பரிசோதனை செய்துக் கொள்வதற்கு ஒப்பானது.



தலைமுறை தாண்டியும் சொற்களில் தான் உறையுமோ முள்ளிவாய்க்கால் வதையின் கதை என்ற கி.பி.அரவிந்தனின் வரிகளில் அலறத் தொடங்கும் மனம் சாம்பலை உதறியபடிக்கு இடிபாடுகளை விலக்கிக் கொண்டு உயிர்த்தெழுகிறது வாழ்வு என்ற வ.ஐ.ச ஜெயபாலனின் எழுச்சியில் சிறிது ஆசுவாசம் அடைகிறது. அரசாங்கங்களுக்கு கவிதை புரியாது தான். ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்ட, பத்திரிகைகள் வெளியேற்றப்பட்ட, பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்ட யுத்த நிலத்தின் காட்சிகளை, உயிர் பிரியும் வலியுடன் விவரணை செய்யும் இத்தொகுப்பின் கவிதைகள், இந்நூற்றாண்டின் மாபெரும் இன அழிப்பின், மனித உரிமை மீறல்களின், போர்க்குற்றங்களின் அழிக்க முடியா சாட்சிகள். விடுவிக்கப்பட்டவர்களின் இரகசிய வாக்குமூலம் என்ற தமிழ்நதியின் கவிதை திரையை உண்மையால் எரிக்கும் காட்சி கூடிய ஒரு ஆவணப்படம்.


சொல்லின் மீதான வேட்கை என்பதும், ஒருவகை மறுப்பின் மீதான வேட்கை தான். தம்மீதான தொடர்ந்த ஒடுக்குமுறைகளுக்கெதிரான ஒரு மூர்க்கமான எதிர்ப்பு, சொல்லாக, கவிதையாக மாறுகிறது. எதிர்ப்பை பற்றிய கவிதை எதிர்ப்பைக் காட்டிலும் ஒரு படி மேலோங்கியதாக இருக்கவேண்டும் என்ற மஹ்மூத் தர்வீஷின் கூற்றுக்கு கட்டியம் கூறுகின்றன சேரனின் கவிதைகள். கண்ணீரின் சுவடுகளால் முகக் கோலம அழிந்தாலும் இன்னொரு முகம் பன்முகமாக விரியக் கண்டேன் என்று முடியும் அவரின் ’தலைமுறை’ கவிதை, கவிதைக்கும் எதிர்ப்புக்கும் இடையே இருக்கும் சமத்துவமில்லாத உறவை வெளிப்படுத்துகின்றது.



ஏன் செய்தாய் எனக் கேட்க முடியாத அடக்குமுறையில் காலம் சிக்கியிருந்தது என்று எழுதும் பஹீமா ஜஹான், அடிமையாக இருப்பதையும் விடக் கொடுமையானது அகதியாக இருத்தல் என வெதும்பும் சுலோசனா தேவராஜா, மரணத்துள் வாழத் தலைப்படும் சுல்பிகா, புத்தனை-யேசுவை-அல்லாவை- சில்லறைப்பயல்களா என ஏசும் கவிதா, வரலாறு மதுவிலும், குருதியிலும் பிறழ்ந்துக் கிடக்கிறது என விசனப்படும் கனகலதா, பெரும் சூறாவளிக்குத் தப்பிய பரிசுப் பொருளின் சிதையாத பாகமாய் கிடைக்கின்ற தூக்கத்தை அணைக்கும் அனார் என்று தொகுதியில் தனித்து நிற்கும் பெண் குரல்கள் வாழ்வின் மீதான பெரும் காமத்தை வெளிப்படுத்துபவை.பன்றிகள் கிளறியெறிந்த வீதியில், அந்த பூவரச மரத்தினடியில் கிடக்கிறது நான் உன்னை சந்திக்கிற பொழுதுகள் என நீளும் தீபச்செல்வனின் கவிதைகள் கொடுங்கனவினூடே உன்னத வாழ்வை சதா தேடியலையும் ஆன்மாவின் ஓலங்கள்.



உதவுங் கரங்கள்/வடக்கினின்று நீளுமெனக் காவலிருந்தார்கள்/ மேற்கினின்று ரட்சகர்கள் வருவரென தவங்கிடந்தார்கள்/கிழக்கு ஒளி மங்கி கிடந்தது/தென் திசையின் தெய்வம்/தூதர்களைத் துரிதமாகவே அனுப்பி வைத்தது என்னும் சிவசேகரத்தின் கவிதை வாசிக்கும் மனசாட்சிகளைக் கொல்லும். அடையாள மின்மை, மிச்ச்மிருக்கும் கனவுகளைப் பற்றிய அரற்றுதல், இழப்பை நம்பிக்கையாக மாற்றும் அக்கறை, துர்க்கனவைத் துரத்தும் அலறல் என்று இந்த தொகுப்பின் கவிதைகள் நம்மை தீயிலிறக்கி நீராக்குபவை. ”முள்ளிவாய்க்கால்” என்ற திருமாவளவனின் கவிதையை வாசித்து முடிக்கும்போது “கூத்து முடிந்தது” என்ற வரியில் உறைய மறுக்கிறது காலம். எதிர்காலம் குறித்த ஒரு சொல்லை ஏற்க முடியாத வீரத்தின்/முன்னே/நான் எறிவேன்/நாயின் மலத்தை/இந்த வரலாற்றின் விதி முன்னே என்ற கருணாகரன் வசந்தியின் வரிகள் முள்ளிவாய்க்காலோடு தமிழீழம் முடிந்துவிடாது என்ற அறைகூவலை வைக்கிறது.



எலும்புக்கூட்டு ராஜ்ஜியங்கள் எழுதும் எம்.ரிஷான் ஷெரீப், ரட்சகர் எவருமில்லை என்று முறையிடும் காருண்யன், ஒரு நூற்றாண்டின் கொடுமையை சிறு பாடலில் மட்டுமா பதிவது என வினவும் த.மலர்ச்செல்வன், புதிய குருஷேத்திரத்தை வரையும் மு.புஷ்பராஜன், அட பிணம் தின்னி – நீ உனக்கு மட்டுமே எனச் சொல்கிற இந்த நாடு ஒரு நாள் இந்து சமுத்திரத்தில் பிணமாக மிதக்கும் என்று சாபமிடும் தேவ அபிரா, இறுதிக்கணங்களாலான கவிதையை எழுதும் சிமோன்தி,மந்தைகள் வெறுந்தரை தின்னுகையில் மேய்ப்பனின் மந்தை ஓட்டும் தடியில் எந்தக் களிப்பிற்காக கொடி பறந்துக் கொண்டிருந்தது என்று விடுபட்டுப் போன காலத்தின் வார்த்தைகளாய் ததும்பும் சித்தாந்தன், மனைவி முத்தமிடும் போதும் காது வெளியில் தான் நீட்டிக் கொண்டிருக்கிறது என்று நுட்பமாக விவரிக்கும் இளைய அப்துல்லாஹ், விடியலைத் தேடும் வினாக்குறிகள் என்று அகதிவாழ்வை எழுதும் வெலிகம ரிம்ஸா முகம்மத் என எல்லோரும்,பல்லாயிரம் மக்கள் செத்து மடிந்திருந்தாலும்  மொழி இன்னும் செத்துவிட வில்லை என்று கன்னம் அறைகிறார்கள்.



ஆனாலும் மொத்தமாக வாசித்து முடிக்கும்போது போதாமையே மிஞ்சுகிறது. தொகுப்பாசிரியர் குட்டி ரேவதியின் தேர்வின் அரசியல் சில பிரதிநிதித்துவங்களை, நுண்ணரசியல் களன்களை விலக்கிவைக்கின்றது. இந்த தொகுதியின் இஸ்லாமியக் கவிஞர்களின் கவிதை தேர்வு அதற்கொரு உதாரணம். முன்னுரையில் தொகுப்பாசிரியர் முள்ளிவாய்க்காலில் இறுதிவரை நின்று சண்டையிட்ட இருதரப்பு போராளிகளின் பார்வைகளாக கவிதைகள் ஆகி நிற்கின்றன என்கிறார். இருதரப்பென்றால் யாரைச் சொல்கிறார்? இலங்கை ராணுவத்தைப் போராளிகள் என்கிறாரா? அல்லது இருதரப்புமே ராணுவம் என்பதால் ஒரு தட்டில் வைக்கிறாரா? தெளிவாய் இல்லை.

சாதியம், இந்திய தேசியம், தமிழ்த் தேசியம் எல்லாவற்றையும் இணைத்துப் பார்த்து அதன் நுட்பமான கோணங்களை விரித்துப்பேச வேண்டியிருக்கிறது என்று குறிப்பிடும் குட்டி ரேவதி தமிழ்த் தேசியம், ஈழத் தமிழ்தேசியம், சாதியம் குறித்த தன் கருத்தை குழப்பமான முறையில் வரையறுக்கிறார். தமிழ்நாட்டில் பார்ப்பனீயத்தை தவிர்த்து, தமிழ்த் தேசியத்திற்கு பெரும் பங்காற்றியிருப்பது வெள்ளாளக் கருத்தியல் தான். பெரியாருக்குப்பின் பார்ப்பனர் அல்லாதோர் அரசியலில் முதலியார்களும், வெள்ளாளர்களுமிணைந்த அரசியலதிகாரம் உருவாகியது. 1930 களிலேயே தனிநாடு, சுயநிர்ணய உரிமை, மாநிலத்திற்கு அதிக அதிகாரம் போன்றவற்றைப் பேசி இந்திய ஒருமைப்பாட்டுக்கு வெளியே பிராந்திய அரசியலை தங்களுக்கென்று வரித்துக் கொண்டன. தமிழ்த்தேசியத்திற்கு தமிழக தலித்துகள் மற்றும் அடித்தட்டு மக்கள் உடன்படுவது கூட, அரசியல் அதிகாரத்தில் தங்களுக்கான பங்கிற்கும், தமிழகத்திலிருக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளின் ஊடாக தங்கள் ஆதிக்கத்தை சாதித்துக் கொண்டிருக்கும் சக்திகளுடன் கூட்டாக இருப்பதற்காகவும் தான். மற்றபடி தலித்துகள் திராவிட அரசியலுக்கு கீழ் நின்று தான் தமிழ்த் தேசியம் பேசிக் கொள்ள முடியும்.அதிகாரத்தில் இருப்பவர்கள் தேசியம் பேசுவதும், இல்லதவர்கள் சாதியம் பேசுவதும் தான் இங்கு மெய்யியல். ஈழத்தமிழ் தேசியம் என்பதைப் பொறுத்தவரை அது ஒரு கற்பிதம் தான். கற்பிதமாக இருந்ததால் தான் அப்பாவி தமிழ் மக்கள் பலியிடப்பட்டார்கள். பிரபாகரன் முள்ளிவாய்க்காலில் கைவிடப்பட்டதும் தற்செயலானதல்ல.



ஈழம் கருத்து நிலம் என்கிறார் தொகுப்பாசிரியர். உணமை தான். நவகாலனித்துவ, பன்னாட்டு மூலதனம் இவற்றைப் பற்றிப் பேசாமல் முள்ளிவாய்க்காலை எப்படி விளங்கிக் கொள்வது. பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள் அபரிதமான மூலதனத்தின் வழியே ஒரு தேசிய அரசாங்கத்தை ஊடுறுவும்போது, பெரும்பான்மை இனம் அதிகாரத்தின் உள் முரண்களோடு கூடிய சிறுபான்மை இனத்தைக் கொன்றொழித்து தன் விசுவாசத்தை மூலதனத்திற்கு நிரூபித்துக் கொள்ளும். இதுதான் இலங்கையில் நடந்தது. ராஜபக்சே அதற்கொரு கருவி தான்.கூடவே யுத்தத்தினிடையே இலங்கையின் உற்பத்தி உறவும், வர்க்க ரீதியிலான பிரச்சினைகளும் என்னவாயிற்று என்ற கேள்வியையும் கேட்டுப் பார்த்தால் இன்னும் கூட தெளிவானப் புரிந்துணர்வு ஏற்படும்,.


முள்ளிவாய்க்காலுக்குப்பின் என்ற இந்த தொகுப்பைத் தந்ததன் மூலம் குட்டி ரேவதி விவாதிப்பதற்கான பல திற்வுகோல்களையும் சேர்த்தே தருகிறார். செழியன் தன் கவிதையில் சொல்வது போல நெஞ்சில் வாழ்வு அச்சமின்றி குடை விரிக்கட்டும். போராட்டங்களை விட ஆகப் பெரியது வாழ்வு.

நூல் பிரதிக்கு ஆழி பதிப்பகத்தை அணுகவும்