Wednesday, October 23, 2013

30வது பெண்கள் சந்திப்பு - ஒரு பார்வை

-உமா- (ஜேர்மனி)
1990ம் ஆண்டு ஜேர்மனியின் கேர்ண நகரில் ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் சந்திப்பின் 30வது தொடர் ஒக்டோபர் மாதம்12ம் திகதி பாரிஸில் நடைபெற்றது.
viji 12.10
இச்சந்திப்பின் ஆரம்பவுரையை நிகழ்த்திய விஜி,  1990 களில் ஜேர்ம னி கேர்ண நகரில் தொடங்கிய இப்பெண்கள் சந்திப்பு, 30 வது  சந்திப்பு வரை பல ஐரோப்பிய நாடுகளிலும், கனடாவிலும் தொடர்ந்து நடைபெற்றுவருவது குறிப்பிடக்கூடியது.  இதற்கு முதல் மூன்று சந்திப்புகள் பிரான்சில் நடைபெற்றுள்ளதாகவும், எல்லாச் சந்திப்புகளுமே காத்திரமான சந்திப்புகளாக அமைந்தனவென்றும், 2000ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பெண்கள் சந்திப்பில் தலித் சிந்தனையாளரும் பெண்ணியவாதியுமான சிவகாமி கலந்து கொண்டு ஆழமான கருத்துகளை வழங்கியதோடு பங்குபற்றியஅனைத்துப் பெண்களையும் மனந்திறந்து பேசவைத்தார் என்பதையும் பதிவுசெய்தார்.
 சந்திப்பின் முதல்நிகழ்வாக,

Thursday, October 17, 2013

இருவர்

-அ.யேசுராசா- 

ஏ.ஜே. கனகரத்தினா

 ஏ.ஜே. கனகரத்தினா, ஓவியர் மாற்குபோன்றோருடன் நெருங்கிப் பழகியிருக்கிறீர்கள் ; அவர்களைப் பற்றிச் சுருக்கமாகக்  கூறுங்கள்!

*  1976 ஆம் ஆண்டிலிருந்து இருவருடனும் பழகத்தொடங்கினேன். மாற்கு மாஸ்ரர் எனது வீட்டுக்கு அண்மையிலும், ஏ.ஜே. எங்கள் ஊருக்கு மிக அண்மையிலும் வசித்தனர்.
ஏ.ஜேயைப் பற்றி ஏற்கெனவே,  மனிதனாயிருந்த மனிதன் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். எனது வாழ்வில் நான் சந்தித்த மிக முக்கிய மனிதருள் ஒருவர் அவர்! பரந்த வாசிப்பும், எளிமையும், அனைவருக்கும் உதவும் பண்பும், எதற்காகவும் தனது நிலையில் நின்று வழுவிச் சோரம்போகாத ஆளுமையும் கொண்டிருந்தவர். அவருடன் ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் அக்காலங்களில் பழகியிருக்கிறேன் ; அவரிடமிருந்து நிறையக் கற்றிருக்கிறேன். அன்னா அக்மதோவா, ஃவெடரிக்கோ கார்ஸியா லோர்கா ஆகியோரின் கவிதைகள் கொண்ட சிறிய ஆங்கில நூல்களைத் தந்து, “இனிமேல்ஆங்கிலத்திலும் வாசிக்கவேண்டும், மொழிபெயர்க்கவும் முயலுங்கள்” என்று தூண்டியவரும் அவரே.  ஆரம்பத்தில் மல்லிகைக்கும் டொமினிக் ஜீவாவுக்கும் நிறைய உதவியிருக்கிறார். எண்பதாம் ஆண்டுக்காலம் வரை மல்லிகை சிறப்பாக வந்ததென்றால், அதில் அவரின் பங்கு முக்கியமானது; அலை, சமர்முதலிய இதழ்களுக்கும் பின்னர் உதவினார். எழுபதுகளில் நடைபெற்ற, இலக்கியத்தில் கலை அம்சத்தின் முக்கியம் பற்றிய கருத்தாடல்களில், பிரச்சாரப் படைப்புகளுக்கு எதிரானதாக அவரது  நிலைப்பாடு இருந்தது.மார்க்சியமும் இலக்கியமும்  சில நோக்குகள் என்ற நூலும், அவர் எழுதிய – மொழிபெயர்த்த ஏராளமான கட்டுரைகளும், அவரது கருத்துநிலைச் சார்பை வெளிப்படுத்துகின்றன. பேராசிரியர் கைலாசபதிதனது இலக்கியமும் சமூகவியலும் என்ற நூலைத்  தந்து அபிப்பிராயத்தைத் தெரிவிக்கும்படி கேட்டதாகவும், ‘இலக்கியம் பற்றிக் கூறப்பட்டுள்ளது; சமூகவியல் பற்றியும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இரண்டுக்குமுள்ள தொடர்பு கூறப்படவில்லை’ என்ற சுருக்கமான குறிப்பை மட்டும் துண்டொன்றில் எழுதித் தான்  கொடுத்ததாகவும்,  ஒருதடவை என்னிடம்

Tuesday, October 15, 2013

தமிழக மீனவ உறவுகள் அறங்காக்க வேண்டும்

-தமயந்தி-

"இழுவைப்படகு, இரட்டைமடி மீன்பிடி போன்றவற்றை நிறுத்தும்படி இலங்கை மீனவர்கள் சொல்கிறார்கள்.
அது இந்தியாவில் நிறுத்தப்படவில்லை, நாட்டுக்கு நாடு கடல்ச் சட்டங்கள் வேறு வேறானவை.
இலங்கையைப் பொறுத்தவரை, இலங்கையில் கடலட்டைத் தடைச் சட்டம் இல்லை. ஆனால் இழுவைப்படகு, இரட்டைமடி தடைச் சட்டம்தான் இருக்கிறது.
கடலட்டைத் தடைச் சட்டம் இந்தியாவில் கொண்டுவரக் காரணம் கடலில் காணக்கூடிய அபூர்வமான உயிரினம்"

இந்திய, தமிழகக் கடலட்டைத் தடைச் சட்டத்தை கழிப்பறையில் கிழித்துப்போட! 
இந்திய, தமிழக கடல்வள ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிக் குதத்துக்குள் கொள்ளியைச் சொருக!! 


இது எப்படி இருக்கிறதென்றால் குடியிருக்கும் வீட்டைப் பெற்ரோல் ஊற்றிக் கொழுத்துவார்களாம் ஆனால் வீட்டு வளையில் இருக்கும் குருவிக்கூட்டுக்குப் பாதுகாப்புச் சட்டம் போடுவார்களாம். கடலட்டை என்ற உயிரினம் எப்படி இனப்பெருக்கம் செய்கிறது, அபிவிருத்தியாகிறது என்ற அடிப்படை அறிவுகூட இல்லாதவர்களின் கடல்வள ஆராய்ச்சி அறிவை என்னவென்பது....? 


1968 இறுதியிலும் 70களின் தொடக்கத்திலும் யாழ் தீவகத்தில் கடலட்டைத் தொழில் அறிமுகமாகி ஏற்றுமதி செய்யத் தொடங்கியபோது அங்கொன்று இங்கொன்றாய் அருந்தலாகக் காணப்பட்ட கடலட்டைகள் அதற்குப் பிற்பாடுதான் அதிகளவில் பல்கிப் பெருகி பாரிய அபிவிருத்தி அடைந்தது. தொழிலாளர்கள் கடலட்டையை எவ்வளவுக்கெவ்வளவு பிடித்தார்களோ அவ்வளவுக்கவ்வளவு பல நூறு மடங்காகப் பெருகியது.

Saturday, October 12, 2013

பாலியல் தொழிலில் கேந்திர நிலையமாக மாறிவரும் வடமாகாணம்

வட மாகாணத்தில் பாலியல் தொழில் மிகுந்த முனைப்புடன் வளர்ச்சியடைந்துள்ளதாக ஐ.ஆர்.ஐ.என். தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னைய யுத்த வலயத்தின் பெரும்பான்மையான பெண்கள் குடும்பத் தலைமைப் பொறுப்பை வகித்து வருகின்றனர்.

யுத்ததினால் கணவனை இழந்த, காணாமல் போன அல்லது கைது செய்யப்பட்ட பல பெண்கள் குடும்பச் சுமையை சுமக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

போதியளவு வாழ்வாதார வழிகள் இல்லாமை மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் காரணமாக அதிகளவான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

வடக்கில் சுமார் 7000 பெண்கள் இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

யுத்தத்தில் கணவனை இழந்த அல்லது காணாமல் போன பல குடும்பத் தலைவிகள் விருப்பிமின்றியேனும் பாலியல் தொழிலை தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.

2012ம் ஆண்டு அரசாங்க மதிப்பீடுகளின் அடிப்படையில் வடக்கில் 59000 குடும்பங்களுக்கு பெண்கள் தலைமை தாங்குகின்றனர்.

தங்களது கணவர், சகோதரர், தந்தைமார் சுமந்த பொருளாதாரச் சுமையையே இவர்கள் இவ்வாறு சுமக்கின்றனர்.

வறுமை மற்றும் வாழ்வாதார வழிகளில் காணப்படும் வரையறுக்கப்பட்ட தன்மை பெண்களை வர்த்தக ரீதியான பாலியல் தொழில் நோக்கி உந்துகின்றது.

Wednesday, October 09, 2013

திரையில் வரையப்பட்ட தமிழ் நிலம்

-பிரேம்-
திரைப்படத்தை முன்வைத்து நம் காலத்திய அரசியல் உளவியல்புகள் பற்றிச் சில கருத்துரைகள்

திரையில் வரையப்பட்ட தமிழ்நிலம் என்ற இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள்  ‘விலகும் திரைகள்’ என்ற தலைப்பில் தீராநதி மாத இதழில் தொடராக வெளிவந்தவை. ஒரு பொருள் பற்றியோ அல்லது பல்வேறு பொருள் சார்ந்தோ சில எழுத்தாளர்கள் எழுதுவதை ஒரு பொதுத்தலைப்பின் கீழ் ஒவ்வொரு இதழிலும் வெளியிடுவது அந்த இதழில் உள்ள நடைமுறை. முன்பு 2007-இல் தீராநதியில்  ‘இருண்மைகள்  இடைவெளிகள்  மௌனங்கள்’ என்ற  தலைப்பில் தொடராகச் சில கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். கவிஞர் கடற்கரை கேட்டுக் கொண்டதன் பேரில் எழுதப்பட்ட அந்தக் கட்டுரைகள் பின்நவீனத்துவ அரசியல் சார்ந்த உரையாடல்களாக அமைந்தன. தமிழில் அதுவரை முழுமையாக விவாதிக்கப்படாத பல்வேறு கோட்பாட்டுச் சிக்கல்கள் பற்றிய தொடக்க கட்ட உரையாடலாக அமைந்த அக்கட்டுரைகளைத் திட்டமிட்டபடி தொடர இயலாத சூழல் ஏற்பட்டது.
மீண்டும்  2011, செப்டம்பர் மாத தீராநதி இதழுக்கு  எழுதிய ஒரு கட்டுரை இத்தொடருக்கான தொடக்கமாக அமைந்தது. திரைப்படத்தை முன் வைத்து நம் காலத்திய  சமூக-அரசியல் உளவியல் பற்றிய கட்டுரைகளைக் கொண்டதாக இத்தொடர் அமையும் என நான் தெரிவித்திருந்தேன். திரைப்படங்களை முன்வைத்து நம் காலத்திற்கான சில கோட்பாட்டுச் சிக்கல்களைப் பேச இந்தப் பக்கங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற திட்டம் இருந்தது.
தமிழில் திரைப்படங்கள் பற்றிய கோட்பாடுகள் சார்ந்த ஆய்வுகள், வாசிப்புகள் இல்லை.  திரைப்பட வரலாறு, திரைப்படத் தொழில்நுட்பம் பற்றிய அறிமுக நூல்கள் சில மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.