Showing posts with label மந்துவில். Show all posts
Showing posts with label மந்துவில். Show all posts

Saturday, February 27, 2016

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்- மந்துவில்(பகுதி 15 -16)

-விஜய பாஸ்கரன்-

அச்சுவேலியில் ஏற்பட்ட சம்பவத்தில் அரியரத்தினம் கொல்லப்பட்டார்.இது தொடர்பாக யாரும் எந்த தகவலும் பொலிசாருக்கு கொடுக்கவில்லை.உண்மை விபரங்களை வெளியிடவும் இல்லை.எனக்குத் தெரிந்த விசயங்களை பகிரவிரும்பவில்லை.இறப்பதற்கு முதல்நாள் எங்கள் வீட்டுக்கு வந்து தன் தோட்டத்துக்கு பனை ஓலை வாங்கிக்கொண்டு போனார். மறுநாள் இந்த தகவல் கிடைத்தது.அவர் பிரபாகரன் பாணியில் செயற்பட முனைந்தார்.புரிந்தவரகள் விளங்கிக் கொள்ளவும்

இரத்தினம் கொலை செய்யப்பட்டபின் கொடிகாம்ம் அய்யா எமது ஊர் தொடர்புகளை விட்டுவிட்டார்.தவராசன் கொல்லப்பட்ட சில மாதங்களின் பின் எமது எதிரிகள் அய்யாவை கொடிகாம்ம் பஸ் நிலையத்தில் வைத்து சுட்டுக்கொன்றனர்.1956ம் ஆண்டு தேர்தலோடு தொடங்கிய மோதல் 1969இல் அய்யா கொல்லப்பட்டார்.இந்த மோதல் காங்கிரஸ் கட்சியால் ஆரம்பிக்கப்பட்டது .
அய்யா கொலையை தமிழரசுக்கட்சி கண்டித்தது.அவரது மரணச் சடங்கில் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.இதைவிட அதிக பங்களிப்பை அவர்களுக்கு கொடுத்தவர் இரத்தினம்.யாருமே கண்டு கொள்ளவில்லை .எமது எதிரிகள் காங்கிஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.எமது ஊரவர்கள் தமிழரசுக்கட்சியின் கட்சி ஆதரவாளர்கள்.சாதி காரணமாக எதிரிகளுக்கே கை கொடுத்தனர்.

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 12- 13 - 14)

-விஜய பாஸ்கரன்-

சம உரிமைப் போராட்டமாக தொடங்கி எதிரிகளின் கொலைவெறியால் இப்போது சமூகங்களிடையேயான பழிவாங்கலாக மாறிவிட்டது.நமது சமூகத்தினர் திடீரென அமைதியானார்கள்.வழமைபோலவே செயற்பாடுகள் இயல்பு நிலை திரும்பின.ஆனாலும் இரத்தினம் பற்றிய பேச்சு தொடர்ந்தது.இரத்தினம் இல்லாத்தால் மீண்டும் அவர்கள் ஊரைத் தாக்கலாம் என்ற அச்சம் சிலரிடையே இருந்தது.அவரகளும் அமைதியாக செயலாற்றினார்கள்.அவரகளில் சிலர் இரண்டு கைக்குண்டுகளை கொண்டுவந்தார்கள்.இது திரியை வாயால் இழுத்து எறிவது.இது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.ஆனால் இதை யார் வைத்திருப்பது,எங்கே வைத்திருப்பது என்ற பிரச்சினை உருவானது.வைத்திருப்பவர் கண்டிப்பாக அதனுடன் இருக்க வேண்டும்.இது உயிர் பாதுகாப்பு சம்பந்தமானது.அத்துடன் பொலிஸ் கெடுபிடியும் கூடியது.அப்போது எமது ஊரில் எல்லா வீடுகளும் குடிசைகளே.அது என்னவென்றே தெரியாதவர்கள்.ஆகவே இதை காட்டில் உள்ள கூழா மரத்தின் அடியில் வைத்திருந்தனர்.இதை யாழ்பாண நகரில் இருந்து ஊருக்கு கொண்டுவர இரண்டு நாட்கள் எடுத்தன.

தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் -மந்துவில்( பகுதி 9 - 10 - 11)

-விஜய பாஸ்கரன்-

சாதி வெறியர்கள் ஊருக்குள் புகுந்து நடத்த இருந்த திட்டம் தோற்றது.ஆனால் எமது பகுதி இளைஞர்கள் அதே வழியை சிந்திக்க தொடங்கினர்.இதே வேளை இதற்கு தலைமை தாங்கும் எதிரிகளை கொல்லும் முடிவுக்கு வந்தனர்.இது தொடர்பாக இரத்தினத்திடம் கேட்க அவர் மறுத்துவிட்டார்.அப்படி செய்வதாயின் ஒரே நாளில் சத்தமின்றி அவர்களை அழிக்கலாம்.நமது நோக்கம் அதுவல்ல.அவரகளை நம் கண் முன்னே பணிய வைக்க வேண்டும்.

இரத்தினம் அந்த நாட்களில் பல ஊர் சண்டியர்களை எல்லைக்கோடு தாண்டவிடாமல் தடுத்தவர்.பலர் அந்த எல்லைகளை தாண்டவே பயந்தனர்.இவரைக, கண்டாலே ஓடி விடுவர்.எனவே பழிவாங்கும் திட்டம் கைவிடப்பட்டது.
கொலை வழக்கில் சத்தியேந்திரா உதவ வந்தபின்னர் கம்யூனிஸ்ட் கட்சியினரும் தொடர்ச்சியாக வருகை தந்தனர்.சிலர் அவர்களுடன் உறவுகளை பலபல படுத்தினர்.எம்.பி.நவரத்தினம் விமர்சனத்துக்கு உள்ளாக தொடங்கினார்.இது நடராசா மாஸ்ரருக்கு பிடிக்கவில்லை.நேரடியாக இன்றி மற்றவரகளை தூண்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்(பகுதி 6 -7- 8 )

-விஜய பாஸ்கரன்-

நவரத்தினம் என்பவர் கொலை செய்யப்பட்டதை சாக்காக வைத்து பொலிஸ் நமது ஊருக்குள் புகுந்தது.இக் கொலையில் மாணிக்கம் இராசன்,சின்னத்தம்பி செல்லத்துரை ,நல்லையா ஆறுமுகம்,சோலையன் செல்லப்பா ஆகியோரை குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தனர்.

அன்று பல சட்டத்தரணிகள் யாழ்ப்பாணத்தில் இருந்தனர்.யாரும் உதவ முன்வரவில்லை .தமிழரசுக்கட்சி,தமிழ் காங்கிரஸ் கட்சி ஆகியவை இதில் ஒன்றாக நின்றன.முன்னாள் பனம் பொருள் அபிவிருத்திச் சபை தலைவர் நடராசா சாவகச்சேரி பா.உ. வி.என.நவரத்தினத்தின் பரம விசுவாசி.அவரும் நவரத்தினம் மூலமாக ஒழுங்கு செய்வதாக கூறுனார்.எதுவும் நடக்கவில்லை.
இக்காலத்தில் செல்வநாயகம் இது இந்துக்கள் பிரச்சினை. எனவே நான் தலையிட மாட்டேன் என்று நழுவினார்.அமிர்தலிங்கம் சங்கானை ஒரு வியட்நாமாக மாறி வருகிறது என கம்யூனிஸ்ட் சாயம் பூசி திசை திருப்ப முயற்சித்தார்.இப் போராட்டத்தை கேவலப்படுத்தி பேசினார்.அன்று உள்ளூராட்சி அமைச்சாராக தமிழரசுக்கட்சி சார்பில் இருந்தவர் எம்.திருச்செல்வம்.அவர் நினைத்திருந்தால் கட்டுப்படுத்தி இருக்கலாம்.அவரின் நிர்வாகம் சம்பந்தப்பட்ட பிரச்சினை இவை.

தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்(பகுதி 3 - 4 - 5 )

-விஜய பாஸ்கரன்-

இரத்தினம் மீது கொண்ட அபிமானம் காரணமாகவே டானியல் பஞ்சமர் நாவலை மந்துவிலை வைத்து இரத்தினம் என்ற பாத்திரத்தை கொண்டுவந்தார்.அவர் பற்றிய சில தகவல்கள்.
இரத்தினம் மிக உயரமான திடகாத்திரமான மனிதர்.அவருடன் யாரும் சண்டை போட்டு வென்றதில்லை.எப்போதும் எதிரிகளுடன் சமாதானமாகவே பேசுவார்.யாருடனும் கும்பலாக தாக்குவதில்லை.அவருக்கும் பல சகாக்கள் இருந்தனர்.அவரகளை சண்டை போட அனுமதிப்பதில்லை .
இவர் இல்லாவிட்டால் தமிழரசுக்கட்சி சாவகச்சேரியில் கால்பதித்திருக்க முடியாது.காங்கிரஸ் கட்சியின் அடாவடித்தனங்களை தன் நண்பர் அய்யாவின் நட்புக்காக முறியடிக்க உதவியவர்.இவரின் உடல் பலத்துக்கும் துணிவுக்கும் எல்லோரும் அஞ்சி நடந்தனர்.பல எதிரிகள் இவரை பொலிஸ்காரன் போல கண்டு ஓடினர்.
எமது ஊரில் வெள்ளாள சாதியைச் சேர்ந்த விதானை ஒருவர் மகன் கோவியரகளோடு ஏற்பட்ட தகராறில் ஒரு கோவியரை அடித்துக் கொலை செய்து விட்டார்.அங்கே கோவியரை யாரும் பகைத்து வாழ முடியாது.கொலை செய்தவர் தலை மறைவாகிவிட்டார்.அங்கே வெள்ளாளர் ஒருவர் இறந்துவிட அவரின் சடலத்தை சுடலைக்கு எடுத்துச்செல்ல கோவியர்கள் தடுத்தனர்.வெள்ளாளரால் அவர்களை மிஞ்ச முடியவில்லை .அவரகளில் வரதர், என்பவர் இரத்தினத்திடம் கள் அருந்துபவர்.அவர் மூலமாக இரத்தினத்தின் உதவியை வெள்ளாளர் நாடினர்.
இரத்தினம் தனியாக அங்கு சென்று பிணத்தை அவர்கள் காவிவர அவர் முன்னே சுடலைவரை சென்று ஈமக்கிரியைகளை முடிக்க உதவினார்.எவரும் ஒரு எதிர்பைக் கூட காட்ட துணியவில்லை.
இப்படி இன்னும்பல கதைகள் அவரைப் பற்றி ஊரில் உண்டு.அன்றைய பல போராளிகள் மந்துவில் என்றாலேயே இரத்தினத்தை விசாரிப்பார்கள்
இந்தப் போராட்டமானது பொது இடங்களில் சம உரிமைகோரி நடத்தப்பட்டது.தனிப்பட்ட ரீதியில் யாருடனும் பகை தீர்க்க இல்லை.சாதிவெறியர்கள் பகை தீர்பதிலேயே குறியாக நின்றனர்.எமது கிராமங்களைச் சுற்றி பல கிராமங்களில் தாழ்த்தப்பட்ட சாதியினர் இருந்தனர்.ஆனாலும் பங்குபெற முன்வரவில்லை.தார்மீக ரீதியாக பல பொருளாதார ஒத்துழைப்புகளை மானாவளை பகுதியினர் வழங்கினர்,.கொடிகாம்ம்,மிருசுவில்,வரணி, அல்லாரை, வேம்பிராய் போன்ற இடங்களில் அதிகமாக சிறுபான்மை தமிழர்கள் இருந்தும் ஆதரவளிக்க தயங்கினர்.இதேபோலவே சங்கானையிலும் நடந்தது.அங்கேயும் சங்கானை ஒரு பகுதியினர்,சண்டிலிப்பாய் போன்ற இடங்களின் ஒத்துழைப்பு குறைவாக இருந்தது.நிச்சாம்ம் மட்டும் தனியே களமாடியது.
இப்போராட்ட காலத்தில் இரத்தினத்தை கொலை செய்ய எடுத்த முயற்சிகள் யாவும் தோற்றன.ஒரு தடவை அவர் தென்னைமரத்தில் இருந்தபோது கொல்ல முயற்சித்தனர்.அது ஓரளவ உயரமான மரம்.குதிக்க முடியாது.யாரையும் அழைக்கவும் முடியாத தூரம்.வேறு வழி இல்லை.அவர் கவனிகாத்துபோல் நின்று தென்னை ஓலையின் வழியாக கொலையாளிகள் நடுவே உருவி வீழ்ந்தார்.எல்லோரும் பயந்து அலறி ஓடிவிட்டனர்.
அதன்பின் மிகுந்த எச்சரிக்கையுடன் கைத்துப்பாக்கி சகிதமாக திரிந்தார்.அவரிடம் துணிவு இருந்தபோதும் தன்னை எப்படியும் கொல்வாரகள் என திடகாத்திரமாக நம்பினார்.ஆனால் பயம் அவரை நெருங்கவில்லை.அவரின் வீடு ஊர் எல்லையில் இருந்தபோதும் அங்கேயே உறங்குவார்.சாதிவெறியர் பகுதிக்குள்ளால் தனியாக போய் வருவார்.
இரத்தினம் கொலை முயற்சிகள் யாவும் தோல்வி கண்டதை அடுத்து ஊரையே பழிவாங்க திட்டம் போட்டார்கள்.இவரகளுக்கு முன் எச்சரிக்கையாக எமது ஊரவர்கள் இரவு வேளைகளில் தெருக்கள்,பற்றைகள் எல்லாம் இரவுகளில் வலம் வந்தனர்.இதனால் இலகுவாக திட்டம் தீட்ட முடியவில்லை.இதை அறிந்த அவர்கள் பொலிசார் உதவியை நாடி நமது ஊரவர்களை சோதனைகள் போட வைத்தனர்.எமது ஊரில் எல்லைகளில் தமிழ் பொலிசார் நடமாடி அவர்களைக் பாதுகாக்க உதவினர்.
ஒரு தடவை திட்டம் தீட்டி எல்லையில் நின்றபோது எமது இளைஞர் ஒருவரின் காதலி கோவியர் சமூகத்தை சேர்ந்தவர்.அவர் மூலமாக தகவல் கிடைக்க எமது ஊரவர்கள் அணி அணியாக செல்ல அவரகள் ஓட்டம் பிடித்தனர்.
இரண்டாவது தடவை அவரகள் இருட்டோடு இருட்டாக ஓரிடத்தில் எமது ஊரை தாக்க தயாராக நின்றனர்.இதை அறிந்த கொடிகாம்ம் அய்யாவின் தம்பி தபால் சாமி என்பவர் தகவலை பரிமாற்றங்கள் செய்ய வசதியற்ற காரணத்தால் தன் வீட்டில் உள்ள துப்பாக்கியால் வெடி வைத்து எம்மவரகளை உசாராக்கினார்.எம்மவரகள் ஆயதங்கள் எதுவுமின்றி அவ்விடம் செல்ல அவர்கள் வேலி ஒன்றைக் கொழுத்தி விட்டு தன் பின நின்று துப்பாக்கி பிரயோகம் நடாத்தினர்.எம்மவரகள் படுத்துக் கிடந்தனர் .ஓடவும் முடியாது போராடவும் முடியாத நிலை.
இந்நிலையில் ஏனையவர்கள் துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு அவ்விடம் வந்தார்கள்.எதிரிகளின் சரியான திசையை பார்க்க நெருப்பு பகை தடையானது.அவரகளின் குறி இவர்களை நோக்கி சரியாகவே வந்தன.இதைக் கேட்ட ஒரு 18 வயது இளைஞரும் புறப்பட்டு வந்தார்.அவருக்கு ஊர் எல்லையிலுள்ள வீட்டில் வைக்கப்பட்ட துப்பாக்கி தெரியும். அதை எடுத்து வரும்போது ஒரு மரத்தில் இருந்து டோரச் லைற் ஒளி எமது ஊரவர்கள் மீது விழுவதை அவதானித்தார்.அந்த இருட்டிலும் அவர் குறி தவறவில்லை.அங்கிருந்து ஒருவர் அலறி வீழ்ந்தான்.அத்துடன் எதிரிகள் நிலை குலைய வேலையைத் தாண்டி எமது ஊரவர்கள் அவர்கள் பகுதிக்குள் நுழைந்தனர்.பலர் வெடிகாயங்களுடன் தப்பி ஓடினர்.எம்மவரும் எந்த காயமும் இன்றி தப்பி வந்தனர்.
மறுநாள் இறந்த இளைஞன் யாரென்று அடையாளம் கண்டனர்.அவரதான் இரத்தினத்தால் எச்சரித்து அனுப்பப்பட்ட நவரத்தினம்.வெள்ளாள சமூகத்தவர்.நம்மை எச்சரித்து துப்பாக்கி வெடி வைத்தவர் தபால் சாமி.இவர் கோவியர் கொடிகாம்ம் அய்யாவின் தம்பி. பின்னர் சாமியின் வீட்டைக் கொழுத்தி அவரை ஊரை விட்டு காலிபண்ண வைத்தனர்

தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்( பகுதி 2)

-விஜய பாஸ்கரன்-

இந்தப் போராட்டத்தை அச்சுவேலியிலும் தொடங்க சிலர் முன் வந்தனர்.அங்கே பெரிய சமூகமாக பொருளாதார பலத்துடன் இருந்தாலும் போராட யாரும் முன் வரவில்லை .அங்கேயும் கோவியர் சமூகத்தைச் சேர்ந்த தவராசன் என்பவன் தலைமையில் சாதி வெறியர்கள் அணி திரண்டனர்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவான சக்திகள் எமக்கு 5 துப்பாக்கிகளை அன்பளிப்பாக வழங்கினர்.இதில் மூன்றை எமது ஊரவரகளும் இரண்டை அச்சுவேலிக்கும் கொடுக்கப்பட்டது.அச்சுவேலி புத்திசாலி வீர்ர்கள் அதை கிணற்றில் போட்டு மறைத்து வைத்திருந்தனர் .சில நாட்களின் பின் எடுத்தபோது அவை கறள்பட்டு செயலிழந்து விட்டன.
எம்மிடம் தரப்பட்டவை மிக அப்பாவிகள் சந்தேகத்துக்கு இடமில்லாத ஊர் எல்லையை அண்டிய வீடுகளில் ஒழித்து வைக்கப்பட்டன.

இக் காலகட்டத்தில் சங்கானை அச்சுவேலி மற்றும் பல பகுதிகளைச் சேர்ந்த போராட்ட ஆர்வலர்கள் எமது ஊருக்கு வந்து போவார்கள்.இவரகளை இணத்துச் செயற்படும் சீன கம்யூனிஸ்ட் கட்சியினரும் வந்து போவார்கள்.இது சம்பந்தமான கலந்துரையாடல்கள் எமது ஊர் பாடசாலைகளில் நடக்கும்.இது எமது ஊரின் மையப் பகுதிதான்.

தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்-மந்துவில்(பகுதி1)

-விஜய பாஸ்கரன்-

1966ம் ஆண்டு சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவோடு தொடங்கப் பட்ட போராட்டத்தில் பங்கேற்க அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது .இதை எமது பகுதியில் முன்னெடுக்க மீசாலை வடக்கு வேம்பிராய் பாரதி வாசிகசாலையில் ஒரு கருத்தரங்கை அப்பகுதி மக்கள் நடத்தினர்.இதற்கு எமது ஊருக்கும் அழைப்பு விடுத்தனர்.இதில் முன்னாள் பனம்பொருள் அபிவிருத்திச் சபைத் தலைவர் நடராசா இரத்தினம் என்பவரையும் அழைத்துச் சென்று கலந்துகொண்டார் .இந்தப் போராட்டத்தை இரத்தினத்தை தலைமை தாங்குமாறு வேண்டிக் கொண்டனர்.மிகுந்த தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டார்

மீசாலை பள்ளர் சமூகத்தையும் மந்துவில் நளவர் சமூகத்தையும் கொண்டது.மீசாலையைச் சேர்ந்தவர்கள் இது ஒரு சாதாரண போராட்டம் என நினைத்தே இதை தொடங்க நினைத்தனர்.சாவகச்சேரியைப் பொறுத்தவரை சாதியமைப்பு மிகவும் தளர்வு நிலையில் இருந்தது.ஒரு சில சலூன் உரிமையாளர்கள் மட்டும் உயர்சாதியினருக்கு சேவகம் பண்ணினார்கள்.கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கை அடுத்து எல்லா உணவகங்களும் திறந்துவிட்டனர்.உண்மையில் அங்கே பாகுபாடு பொது இடங்களில் இல்லை.
கொடிகாமத்தில் சிலர் மறுப்புத் தெரிவித்தனர்.எமது ஊரில் இரண்டு கோவில்கள் இருந்தன.கேலத்து அம்மன் கோவில்.இது அய்யருக்கே சொந்தமானது.அவர் பூரண சம்மதம் தெரிவித்தார்.இன்னொன்று தெருவாரம் பிள்ளையார் கோவில்.இவரகளும் சம்மதித்தனர்.ஆனால் கோவில் பூசைகள் நிறுத்திவிட்டார்கள்.இந்த கடும் எதிர்ப்பாளர்கள் வெள்ளாளர் அல்ல.கோவியர்களே.அதில, முக்கியமானவரகள்அந்த சமூகமே மரியாதை தராதவரகள்.வழிப்பறி திருட்டு சம்பந்தப்பட்டவர்கள்.மீசாலை தெருவாரம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இந்தப் போராட்டத்துக்கு எமது ஊரிலும் அதிக ஆதரவு இருக்கவில்லை .எமது ஊரிலும் இரு பிரிவுகள் இருந்தன.ஒரு பிரிவு விலகிவிட்டது.கொடிகாமத்தில் போராட முடிவு எடுக்கப்பட்டது.இதை தொடங்கிய மீசாலையைச் சேர்ந்தவர்கள் தலைமறைவாகி விட்டனர்.எனினும் இரத்தினமும் அவரது சகாக்களும் திட்டமிட்டபடி தேனீர்கடை பிரவேசம் செய்தனர்,.இரத்தினம் ஏற்கனவே பிரபலமானவர்.அவரை எதிர்க்க எவரும் முன்வரவில்லை .ஆதரவும் தரவில்லை.கொடிகாம்ம் அய்யா இரத்தினத்தின் நண்பர்.அவரும் மதில்மேல் பூனையாக நின்றார்.