Showing posts with label பறை. சி.மௌனகுரு. Show all posts
Showing posts with label பறை. சி.மௌனகுரு. Show all posts

Sunday, August 16, 2015

என் மனதில் இன்றும் நிறைந்து நிற்கும் துணிச்சல் மிக்க மாணவி

-சி.மௌனகுரு-

பறை பற்றி இப்போது பலர் பேசுகிறார்கள்
இங்கு.பெண்கள் சேர்ந்து செய்த பறை முழக்கம்
ஒன்றையும் நான் இணையத் தளத்திலும் பார்த்தேன்

மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
இப் பறை வத்தியத்தை நாம் கிழக்குப் பல்கலைக் கழகத்தில்
1996இல் அறிமுகம் செய்தோம்

.இற்றைக்கு 19 வருடங்களுக்கு முன்னர்.
எமது உலக நாடக தின விழாவினை பறை முழக்கத்தோடு ஆரம்பித்தோம்.
அது முதல் படி
.களுதாவளையிலிருந்து ஆனைக்குட்டி தலைமையில் ஒரு குழு வந்து இதனச் செய்தது
இணையத் தளங்கள் சிலவற்றில் வரும் படம் அதுதான்
இவரை இங்கு கூட்டிவந்தவர் களுதவளையச் சேர்ந்தவரும்
இன்று விரிவுரையாளராயிருப்பவருமான 
அன்றைய எமது மாணவன் சிவரத்தினம்

அவரோடு சேர்ந்து எனக்கு மிகுந்தவலதுகரமாக நின்றவர்.பாலசுகுமார்
உதவியாக இருந்தவர் ஜெயசங்கர்
முதன் முதலில் பறை தூக்கி அடித்த பல்கலைக் கழக விரிவுரையாளர் பாலசுமாரே
.அதனால் அவர் பெருமை பெற்றார்
.மாணாக்கருக்கு ஒரு வ்ழிகாட்டியுமானார்.
ஒவ்வொரு ஆண்டும் பறைமேளக் கூத்துடந்தான் வட்டக் களரியில் நாடக விழா ஆரம்பமாகும்.
பின்னால் இந்தப் பறையை அவர்களைக்கொண்டு மாணாக்கருக்குப் பழக்கினோம்.
ஆரம்பத்தில் பறை பழக மாணவர்கள் தயக்கம் காட்டிய வேளைகளில் நாங்கள் அவர்களுக்கு
தமிழ் மரபிலும் தமிழ் இசை மரபிலும்
பறையின் இடம் பற்றி வரலாற்று
விளக்கமளித்ததோடு.