Sunday, March 30, 2014

தோழர் றொசாரியோ பெர்னாண்டோ அவர்களுக்கு அஞ்சலி


தோழர் றொசாரியோ பெர்னாண்டோ காலமானார் !
இலங்கைத் தோட்டத் தொழிலாளர் செங்கொடி சங்கத்தின் ஸ்தாபகரும் பிரபல இடதுசாரி தொழிற்சங்க வாதியுமான தோழர் றொசாரியோ பெர்னாண்டோ கடந்த 29.03.2014 இல் காலமானார். கடந்த சில மாதங்களாக அன்னார் நோய்வாய்ப்பட்டு இருந்தார். 
ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸில் காலஞ்சென்ற திரு. அஸீஸ் அவர்களுடன் பணிபுரிந்த தோழர் றொசாரியோ இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் அறிவுறுத்தலின் பேரில் காலஞ்சென்ற தோழர் சண்முகதாசனுடன் இணைந்து மலையகத்தில் 1960களில் செங்கொடி சங்கத்தினை ஸ்தாபித்தவர் ஆவார். மலையக தொழிலாளர் மத்தியில் அக்காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த செங்கொடி சங்கத்தின் சார்பில் கீனாகொல்லை, மடகும்பர முதலிய முக்கிய தோட்டத் தொழிலாளர் போராட்டங்களை தோழர் றொசாரியோ மிக வெற்றிகரமாக நடத்தியதோடு தனது தொழிற்சங்க ஈடுபாட்டின் காரணமாக பலமுறை சிறைவாசமும் அனுபவித்தார். 
1970களில் மலையகத் தோட்டத் தொழிலாளர் மத்தியிலும் மலையகத்தின் இளம் புத்தி ஜீவிகள் மத்தியிலும் இடதுசாரி சிந்தனைகள் ஆழமாக வேரூன்றுவதற்கும் தோட்டத் தொழிலாளர் மத்தியில் போராட்ட உணர்வு வளர்வதற்கும் தோழர் றொசாரியோவின் கடும் உழைப்பும் அர்ப்பணிப்பும் மாக்சிய சிந்தனையின் மீது அவருக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் காரணமாக அமைந்தன. அத்துடன் தேசிய இடதுசாரி போராட்டங்களிலும் ஆர்வம் கொண்டிருந்த தோழர் றொசாரியோ 1960களில் யாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சங்கானையில் மேற்கொள்ளப்பட்ட சாதி எதிர்ப்பு போராட்டத்தில் தோழர் கார்த்திகேசன், நீர்வை பொன்னையன் போன்றவர்களோடு தோளோடு தோள் நின்று போராடினார். 

Saturday, March 29, 2014

டென்மார்க்கில் மலையகநூற்கள் அறிமுகம்

டென்மார்க்கில் மலையகநூற்கள் அறிமுகம்
 
 

Tuesday, March 25, 2014

இரத்தோட்டையில் ஓர் இலக்கிய நிகழ்வு.

 -எம்.முத்துக்குமார்-
பாக்யா பதிப்பகமும் நூலகம் நிறுவனமும் இணைந்து நடாத்திய மலையக ஆவணக மற்றும் நூலறிமுக நிகழ்வுகள் மாத்தளை ரத்தொடடை நகரில் இடம்பெற்றது. ரத்தொட்டை உதயம் சமூக நலன்புரிச் சங்கம்  ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலய நிர்வாக சபையுடன் இணைந்து நடாத்திய இந்த நிகழ்வில் மலையக நூல்கள் ஆவணங்களை எண்ணிமப்படுத்தல் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் நூலகம் நிறுவனத்தினர் செயலமர்வுகளை நடாத்தினர்.

நூலகம் நிறுவனத்தின் தன்னார்வத் தொண்டாளர் சேரன் நூல்களை எண்ணிம முறையில் ஆவணப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து கருத்துத் தெரிவித்தார். ஏதொ ஒரு காரணத்திற்காக யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்டுவிட்டது. அப்போது எரிந்து சாம்பலான நூல்கள் இப்போது எம்மிடத்தில் இல்லை. ஆனால் இப்போதைய நவீன தொழிநுட்ப வளர்ச்சியினூடாக இணையத்தில் அதனை பாதுகாக்கும் முயற்சியை செய்து வருகிறோம். இதுவரை 13000 க்கும் மெற்பட்ட நூல்கள் ஆவணங்கள் இவ்வாறு இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள் இலவசமாக பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளலாம் என கூறி நேரடியாக கணிணியினூடாக செயன்முறை விளக்கமும் அளித்தார்.

எண்ணிம ஆவணப்படுத்தல் தொடர்பாக செயன்முறை விளக்கமளித்து உரையாற்றிய தன்னார்வ செயற்பாட்டாளர் மயூரன்  பாடசாலைகளில் ஆலயங்களில்  சமூகத்தளங்களில்  வெளியிடப்படும் சஞ்சிகைகள் கூட இவ்வாறு கணிணியூடாக பத்திரப்படுத்த முடியும். இதன் மூலம் நமது ஆவணங்களைப் பாதுகாக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

அதேபோன்று இலத்திரணியல் பள்ளிக்கூடம் எனும் முறையினூடாக மாணவர்கள் எவ்வாறு தமது கற்றல் நடவடிக்கைகளை இலகுவாக்கலாம் என்பது தொடர்பாக தன்னார்வ செயற்பாட்டாளர் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் மாணவர் நந்தகுமார் விளக்கமளித்தார். மாணவர்கள் கடந்த கால வினாத்தாள்கள் உள்ளிட்ட பயிற்சிக்குரிய மாதிரி வினாத்தாள்களை இந்த இணையத்தளத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளமுடியும். மாணவர்கள் முகநூல் வலைத்தளம் போன்று இந்தத் தளத்தின் ஊடாக தங்களது பாடவிதானம் தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வு காண முடியும் எனவும் செயன்முறையுடன் விளக்கினார்.

இதனுடன் இணைந்த சிறப்பு நிகழ்வாக அல்அஸ்மத் மற்றும் தெளிவத்தை ஜோசப் ஆகியோரின் நூல்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டன. கவிஞர் அல் அஸ்மத் அவர்கள் இரத்தோட்டை தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவர். மாத்தளையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் எழுதிய அறுவடைக்கனவுகள் எனும் நாவலை அறிமுகம் செய்து மல்லியப்புசந்தி திலகர் நயப்புரை வழங்கினார்.

ஏற்புரை வழங்கிய கவிஞர்.அல்அஸ்மத் அவர்கள் பல ஆண்டுகளுக்குப்பிறகு வேலாயுதமாகிய அஸ்மத்  பிறந் மண்ணுக்கு வந்திருக்கிறேன். அதுவும் இந்த மண்ணில் எனது நூலை அறிமுகப்படுத்தக் கிடைத்தமை பெரும் பாக்கியமாகும் என தெரிவித்தார்.