Monday, June 28, 2010

அறிவித்தல்

2011 [dtupapy; ,yq;ifapy; ru;tNjr jkpo; vOj;jhsu; xd;W$ly;

jpU. KUfG+gjp mth;fl;Fk; cyfk; vq;Fk; Gyk; ngah;e;J thOk; jkpo; vOj;jhsh;fs;> ,yf;fpa Mh;tyh;fSf;F nld;khh;f;fpy; ,Ue;J [PtFkhud; vOjpf;nfhs;tJ. . .

vOj;jhsh; xd;W$ly; 2011 gw;wp njhiyNgrpapYk;> gj;jphpiffspYk; ed;F mwpe;J nfhz;l NghJk; jdpg;gl;l Kiwapy; vdJ gq;fspg;G vt;thW mike;jhy; jq;fs; Kaw;rpf;F ehd; gf;f gykhf ,Uf;f KbAk; vd gythW rpe;jpj;Njd;.

jhq;fs; Kd;ndLf;Fk; 12 mk;r jpl;lj;jpy; 6tJ jpl;lj;jpw;F (jkpo; kf;fsplk; thrpg;Gg;gof;fj;ij Cf;Ftpg;gjw;fhd gzpfis Kd;ndLg;gJ njhlu;ghd MNyhridfis ngWjy;) VNjh xU tifapy; Gyk; ngah;e;J thOk; jkpod; vd;w tifapy; kw;wth;fspd; MNyhridfSlDk; topfhl;ly;fSlDk; mDruizAlDk; vdJ gq;fspg;igr; nrYj;j KbAk; vd ek;Gfpd;Nwd;.

1000 Gj;jfq;fis ,ytrkhf nfhLf;Fk; jpl;lk;;.

,e;jpahtpy; ntspaplg;gLk; Gyk; ngah;e;j E}yhrphpah;fspd; E}y;fspd; Mapuk; gpujpfis> E}yhrphpahpd; mDkjpAlDk; mDruizAlDk; ,yq;ifapy; cs;s juk; 10> 11 cs;s ghlrhiyfSf;Fk;> jkpo; Gj;jfq;fis jkJ E}yfq;fspy; xU gFjpahff; nfhz;l E}yfq;fSf;Fk; ,ytrkhff; nfhLj;jy;.

Ntiyj;jpl;lKk; - Gj;jf gjpg;Gk;:

,yq;ifia tpl ,e;jpahtpy; Gj;jfq;fs; gjpg;gpj;jy; kypthdJ.

Mdhy; ,yq;iff;F Gj;jfq;fis vLj;J tUk; nghOJ Vw;Wkjp> ,wf;Fkjp> Rq;fthp Nghd;w nrytpdq;fs; cs;sjdhy; Muk;gj;jpy; ,e;jpahtpYk; ,yq;ifapYk; xNu Ntisapy; Gj;jfq;fis gjpg;gpf;Fk; jpl;lk; ,Ue;jJ. mjpy; rpy eil Kiwr;rpf;fy;fSk;> Gj;jfq;fspy; juhju NtWghLfSk; ,Ue;jJ.

Mdhy; jw;nghOJ fpilj;j tpiyg;gl;bay;fspy;gb Vw;Wkjp> ,wf;Fkjp> Rq;fthp nrytpdq;fs; ,Ug;gpDk; ,e;jpahtpy; gjpg;gpg;gNj kyptha; ,Uf;fpd;wJ.

,d;W Gyk; ngah;e;j vOj;jhsh;fs; ,e;jpag;gjpg;gfq;fSf;F Rkhh; 200 gf;f E}y;fSf;F nfhLf;Fk; mNj gzj;jpy; ,jidr; nra;a KbAk;. my;yJ mjid tpl kypthfr; nra;a KbAk;.

cjhuzj;jpw;F jukhd Ngg;ghpy; mr;rplg;gl;l 200 gf;fKila xU E}ypd; 1000 gpujpfis vOj;jhsUf;Fk; 1000 gpujpfis ,yq;ifapy; ,ytrkhf ifaspg;gjw;Fk; midj;J nryTfSk; cl;gl ,e;jpa &gh 25.000 kl;LNk nrythFk;. Nkyhf ,e;jpahtpYk; kw;iwa ntspehLfspYk; ,e;j E}y;fspd; guk;gYf;Fk; vk;khy; epWtg;gl ,Uf;Fk; ghyk; vd;w epWtdk; cWJizahf ,Uf;Fk;.

,e;jpag;gjpg;Gk; jkpo;ehl;L murpd; E}yfq;fSf;fhf nfhs;tdTk;

,e;jpahtpy; gjpg;gjdhy; cs;s kw;w ed;ik ahnjdpy; jkpo;ehl;lurpd; 1000 E}y;fs; nfhs;tdT jpl;lk;. ,J gjpg;gfq;;fSf;F kpfTk; ed;ik gaf;Fk; jpl;lk;. xU gjpg;gfj;ij nfhz;L elhj;Jtjw;Fhpa ghhpa nryit ek;gp ,Uf;fpwJ. NkYk; ,J tiu 1000 Gj;jfq;fis nfhs;tdT nra;j jkpo;ehl;luR vjph;fhyj;jpy; 2000 Gj;jfq;fis nfhs;tdT nra;a cs;sJ.

mjpf gjpg;gfq;fs; vOj;jhsUf;F royalty nfhLg;gjpy;iy. mg;gb nfhLf;f te;jhYk; 10tPjj;Jf;F Nky; nfhLg;gjpy;iy. mjidNa mth;fSf;F 25 tPjkha; nfhLg;gjd; %yk; my;yJ me;j royalty I ,e;j jpl;lj;jpw;F ghtpg;gjd; %yk; ,e;j Kaw;rpapd; gO NkYk; ,yFthf;fg;gLk;.

Gyk;ngah; ehLfspy; Gj;jfg; guk;gYk; vOj;jhshpd; gq;fspg;Gk;

NkNy cs;s jpl;lj;ij Mjhpf;f Kd;tUk; vOj;jhsh;fs; (Fwpg;ghf Gyk; ngah; vOj;jhsh;fs;) kw;w vOj;jhsh;fspd; E}y;fis Fiwe;j gl;rk; 5 Gj;jfq;fisahtJ Ntz;b mth;fs; jkf;Fj; njhpe;jth;fSf;F tpw;Fk; nghOJ Gj;jfq;fSk; guTk;. . .Gyk; ngah;e;j ehLfspYk; thrpidAk; mjpfkhFk;. . . xU tUlj;jpy; Fiwe;jJ 12 Gj;jfq;fis ,e;j jpl;lj;jpD}L ntspapl tpUk;Gfpd;Nwd;. 12000 Gj;jfq;fs; vj;jidNah Mapuk; kf;fspd; iffis nrd;wilAk;.


Nkyhf ,d;unew;wpy; Gj;jftpw;gidf;F jghy; nryit tplTk; nghpa njhiffs; t#ypf;fg;gLfpwJ. mij cz;ikapy; Fiwe;j tpiyf;F nra;J thrpg;G guk;giy ,d;Dk; mjpfkhf;fyhk;.

Gjpa vOj;jhsh;fs;> ,yq;ifapy; nghUshjhug; gpur;ridAila vOj;jhsh;fs;

,e;j jpl;lj;jpw;F trjp gilj;j Gyk; ngah; vOj;jhsh;fs; nfhLf;Fk; Mjutpdhy; Gjpa vOj;jhsiuAk; ,yq;ifapy; nghUshjhuk; fhuzkhf jukhd E}y;fis ntspapl KbahJ f\;lg;gLk; vOj;jhsh;fisAk; Cf;Ftpf;fyhk;.

mDgtk;:

,e;jpahtpy; mz;ikf; fhyq;fspy; gjpg;gfq;fSld; Vw;gl;l ghPl;rak; fhuzkhf ,e;j Jiwapd; gy tplaq;fis fw;Wf; nfhz;Nld;. me;j mDgtq;fis ,e;j jpl;lj;jpw;F ey;y Kiwapy; gad;gLj;j tpUk;Gfpd;Nwd;.

ehd; mwpe;jtiu Gyk; ngah;e;j gy vOj;jhsh;fsplk; mNdf ,e;jpag; gjpg;gfq;fs; mjpfkhfNt gzk; t#ypf;fpd;wd. my;yJ Gyk;ngah; vOj;jhsh;fs; gyhpd; Mh;tq;fs; J\;gpuNahfk; nra;ag;gLfpd;wd. ,jpy; Neubahf fz;lzj;Jf;F cl;gl;lJ kzpNkfiy gjpg;gfk;. MdhYk; NtWk; gy gjpg;gfq;fSld; Gyk; ngah;e;j vOj;jhsh;fSf;F Vw;gl;l gy frg;ghd rk;gtq;fs; gjpT nra;ag;glhJ ,Uf;fpd;wd.

nrd;w fpoik kzpNkfiyapy; gjpf;fg;gl;l 10 vOj;jhsh;fspd; E}y;fs; utp jkpo;thzdhy; yz;ldpy; ntspaplg;gl;ld. ,ij Vd; vq;fs; ehl;L kf;fSf;F 1000 E}y;fis ,ytrkhf nfhLf;ff; $ba tifapy;. . .mth;fSf;F gadspf;Fk; tifapy; nra;af; $lhJ vd;gJ jhd; vdJ Mjq;fk;.

Kaw;rp 1 :
2011 [dthpapy; Rkhh; 20-25 rpWfijfis cs;slf;fpa njhFg;ig ntspapLjy;. ,J Rkhh; 250-300 gf;fKila E}yhf mikayhk;.

1. ,jpy; ,lk; ngWk; rpWfijfs; Gyk; ngah;e;J ntt;NtW ehLfspy; cs;s jkpoh;fs; me;j me;j ehl;il fskhf gpujpgypf;Fk; tz;zk; cUthf;fpa rpWfijfshf mika Ntz;Lk;.
,yq;ifapy; trpf;Fk; vOj;jhsuhapd; jdJ thOk; gpuNjrj;ij gpujpgypf;Fk; tz;zk; mika Ntz;Lk;. ,yq;ifapy; mjpf vOj;jhsh;fs; cs;sjhy;> mjpf gilg;Gfs; tUk; re;jh;g;gj;jpy;; ,uz;L E}y;fshf ntspapl vz;Zfpd;Nwd;.

(Gyk; ngah;e;Njhh; fijfs; vd;Dk; nghOJ jk; gpwe;j ehl;ilg; gw;wpa Gyk;gy;fis ntspehl;by; ,Ue;J mNdfh; vOJfpd;whh;fs; vd;w ,e;jpa tpkh;rfh;fsJ kpf Nkhrkhd tpkh;rdj;ij cilf;Fk; tz;zkhf me;je;j ehl;L tho;tpay; #oypy; vk; tho;T-mDgtq;fs; vd;gjid mbg;gilahf nfhz;bUf;f Ntz;Lk;)

2. ,e;jf; fijfs; ,izaj;jsq;fs; cl;gl vjpYk; gpuRukhfpapUf;f $lhJ.

3. A4 mstpy; BAMINI size 10-12; gf;fq;fq;fSf;F Nkw;glhJ ,Uf;f Ntz;Lk;.

4. nghUshjhuk; : jw;nghOJs;s epiyapy; ,jid ahUk; sponscer nra;Ak; epiy ,y;yhjjhy; ,jd; ntspaPl;Lr; nryit ,jpy; gq;Fnfhs;Sk; vOj;jhsh;fs; midtUk; gfph;e;jspg;gjhf ,Uf;f Ntz;Lk;. ,yq;ifapy; ghlrhiyfSf;Fk; E}yfq;fSf;Fk; 1000 gpujpfs; ,ytrkhf nfhLg;gJ cl;gl kw;Wk; ,e;jpa-,yq;ifg; gjpg;gpw;F Rkhh; xt;Nthh; vOj;jhsUf;Fk; 1000-1500 ,e;jpa &gha;fs; nrythfyhk;.

5. ,jpy; Mh;tKs;s vOj;jhsh;fs; jq;fs; Mf;fq;fis jaT nra;J 31-08-2010f;F Kd;G vdJ kpd;dQ;rYf;F mDg;GkhW md;Gld; Nfl;Lf; nfhs;fpd;Nwd;.

Kaw;rp 2 : Gyk; ngah;e;jth;fSf;fhd xU gjpg;gfk;

Gj;jfq;fis ,ytrkhf nfhLf;Fk; nray;ghLfs; Rkhh; xU tUlj;jpw;F jq;Fjilapd;wp ey;y tpjkhf elf;Fkplj;J> jw;;nghOJ vd; ,yf;fpa ez;gh;fSld; ,ize;J Muk;gpf;Fk; ghyk; vd;w ,e;j epWtdj;ij> vjph;fhyj;jpy; Gyk; ngah; vOj;jhsh;fSf;FHpa gjpg;gfkhf kl;Lk; my;yhJ. . . Gyk; ngah;e;j kf;fspd; midj;J mr;Rj; Njitfis G+h;j;jp nra;Ak; xU epWtdkhf nray;gLj;Jk; nghOJ vj;jidNah cauq;fis njhlKbAk;.


,jd; mLj;J fl;l Kaw;rp midj;Jyf vOj;jhsh; rhh;gpy; ,e;jpahtpy; etPd mr;rpae;jpae;jpuj;Jld; $ba xU gjpg;gfj;ij epWTjy;.

,J xU nghpa fbdkhd gzpahfj; Njhd;wpdhYk; fhyfhykhf Gyk; ngah;e;j vOj;jhsh;fs;; ,e;jpahtpy; jkJ E}y;fis gjpg;gpj;Jf; nfhs;s Kad;w nghOJ mth;fSf;F Vw;gl;l gy frg;ghd mDgtq;fis njhFj;Jg; ghh;f;Fk; ,lj;J vkf;nfd;nwU gjpg;gfk; ,y;yhjJjhd; fhuzk; vd;gJ Gyg;gLk;. Nkyhf Rayhgk; ghh;f;fhky; nghJ Nehf;fpy; nray;glf; $baJk; mNj Ntis el;lj;jpy; NghfhjthWk; nghUshjhug; gyj;Jld; ,aq;ff; $ba xU gjpg;gfk; cUthf;fg;gLkplj;J Gyk; ngah; vOj;jhshpd; gilg;Gfs; mjpfstpy; ntsptuTk; mjpfstpy; guk;gTk; mJ top mikf;Fk;.

,jd; KjyPL gq;Ffshf tpw;Wg; ngwg;gLk;. ahUk; vtiu vf;fhyj;jpYk; Vkhw;wjthW KOtJk; ,e;jpar; rl;ljpl;lq;fSf;F Vw;g gjpT nra;J Kiwahd fzf;fhsh; epWtdj;jpdhy; fzf;Ffs; rhp ghh;f;fg;gl;L jdpkdpjh; xUthpd; yhgj;ij Fwpf;Nfhshf nfhs;shJ elhj;jg;gLk;. midj;Jk; mth; mth;fs; gq;FfSf;F Vw;g mikAk;. mNj Ntisapy; midj;jpYk; midthpd; gq;fspg;Gk; ,Uf;Fk;. Gyk; ngah;e;j jkpoh;fspd; mr;rf NjitfisAk; ,J

,J ,yq;if kf;fSf;F cjtf;$ba tifapy; xU nghJNehf;fhd epWtdkhf mikAkplj;J gpugy ,e;jpa vOj;jhsh;fspd; vj;jidNah E}y;fis tpahghuhPjpahf gjpg;gpj;J ntspaplTk; mjpy;

,e;j jpl;lj;jpw;F midj;J vOj;jhsh;fs;> ,yf;fpa Mtyh;fspd; MNyhridfis md;Gld; vjph;ghh;f;fpd;Nwd;. ,jid vOj;jhsh; kfhehl;by; nkd;; NkYk; MNyhrpg;Nghk;.

vOj;jpw;f;Fk; guk;gYf;Fk; midj;Jyf hPjpapy; xU GJj; jsj;ij mikf;Fk; Kaw;rpNa ,J md;wp NtW ahJkpy;iy.

vd;Dila ,e;j Kd;ndLg;G ve;j jdpg;gl;l tpahghu Nehf;fk; ,y;yhjJ vd;gjid vid mwpe;Njhh; mwpth;. ,J cq;fs; E}y;fis ,yq;ifapy; guk;GjYf;F Kd;ndLf;Fk; gzp vd tpsq;fpf; nfhs;Sk; re;jh;g;gj;jpy; ehd; vd;id ,jpy; Kw;W KOjhf ,jpy;

epiwT

NkNy ehd; Fwpg;gpl;l tplaq;fs; ghhpa gzpNghYk; njhpayhk;. . .my;yJ Foe;ijg;gps;isj; jdkhdjhfTk; Njhd;wyhk;. Mdhy; vd; kdjpy; gl;litfis Neh;ikAld; ,jpy; gjpT nra;jpUf;;fpd;Nwd;.

,jid thrpf;Fk; nghOJ ve;j ,lj;jpYk; vdJ GJj;njhopYf;F my;yJ Gjpa gjpg;gfj;jpw;F rh;tNjr vOj;jhsh; tpohit VNjh xU tpjj;jpy; gad;gLj;j epidf;fpd;Nwd; vd ahUk; epidj;jpl Ntz;lhk; vd gzpthf Nfl;Lf; nfhs;fpd;Nwd;.

vdJ jkpo;g;gw;W ey;y Kiwapy; vd; ,dj;Jf;F nrd;wila Ntz;Lk; vd;gNj vdJ tpUg;gk;. mj;Jld; cz;ikapy; Gyk; ngah;e;j jkpoUf;F ,e;jpahtpy; ,Ue;J international kl;lj;jpy; ey;y Nritahw;w Ntz;ba xU jkpo; gjpg;gfj;jpd; Njit ,Uf;fpwJ.

vdJ vz;zq;fis ve;j xspT kiwTkpd;wp cq;fs; Kd; itj;jpUf;fpd;Nwd; vd;wstpy; vdf;Fj; jpUg;jpNa.

,e;j Kd;ndLg;gpd; %yk; cq;fisr; re;jpf;Fk; vd;idg; gw;wpa rpwpa mwpKfk;:


ngah; : tp. [PtFkhud; taJ : 52 tjptplk; : nld;khh;f;

njhopy;:
Odsherred efurigapd; Gtpapay; rhh;e;j fzdpg;gjpTj;Jiw nghWg;ghsh;; (KONeuk;)
nld;khh;f; mur E}yfj;jpd; jkpo;g; gFjp MNyhrfh;; - nfhs;tdthsh; -
nkhopngah;g;ghsh; (gFjp Neuk;)


ntspapl;l ahTk; fw;gid my;y (fij> ftpij> fl;Liuj; njhFg;G)
E}y;fs;;: kf;fs; kf;fshy; kf;fSf;fhf (ehty;)
rq;fhidr; rz;bad; (rpWfij
FWehty; njhFg;G)
nldp\;-Mq;fpy-jkpo; kUj;Jt ifNaLk; mfuhjpAk;
nky;yj; jkpo; ,dpj; Jsph;f;Fk; (,isa re;jjpapd; ,zaj;js
ftpijfspd; njhFg;G)

murpay; rhjhuz xU ghh;itahsd;.
gpd;dzp: xU r%f tpkh;rfd;. ,yf;fpa Mh;tyd;.


mDgtk;: gy Gyk; ngah;e;j vOj;jhsh;fisg; Nghy ,e;j Jiwapy; ehd; re;jpj;j
ntw;wpfs;> Njhy;tpfs;> Vkhw;wq;fs;> gz ,og;Gfs; vd;gd 50
%.
,e;j ,yf;fpa cyfpy; ehd; rk;ghjpj;j ey;y ,jaKila ,yf;fpa
ez;gh;fs;> mth;fspd; mwpTiufs; vd;gd mLj;j 50
%.


njhlh;Gfs;;: jpdrhp fhiy 7 kzp Kjy; khiy 6 kzp tiu : 0045 59 46 00 21
khiy 6 kzp Kjy; ,uT 10.00 kzp tiuapYk;>
rdp> QhapWfspy; KOehSk; : 0045
59 46 45 47

kpd;dQ;ry;:
jeevakumaran5@gmail.com


Gyk;ngah;e;j kf;fspd; Neubahd my;yJ kiwKfkhd nghUshjhu cjtpfs; fle;j 30 Mz;Lg; Nghiu top elj;jpr; nrd;wJ vd;gJ fz;$L. ,d;W moptpd; tpspk;gpy; epw;Fk; jkpo; gpuNjrq;fis fl;b vOg;g mNj Gyk; ngah;e;j kf;fspd; gq;fspg;G fl;lhakhf Ntz;Lk;. me;j tifapy; ,J xU mwpTg; grp Nghf;Fk; Kaw;rpay;yhJ Ntnwhd;Wkpy;iyepidT ey;yJ Ntz;Lk;

md;Gld;
jq;fspd; kdk; jpwe;j gjpiy vjph;ghh;j;J
tp. [PtFkhud;
23-06-2010

Sunday, June 27, 2010

மட்டக்களப்புக்கூத்து

மட்டக்களப்புக்கூத்து ஒரு ஆய்வுக் கண்ணோட்டம்
-மு.கணபதிப்பிள்ளை (மூனாகானா)-
கூத்து என்றவுடன் எம் எண்ணத்தில் முதலில் வருவது ஆட்டமே. ஆட்டம்இல்லையென்றால் கூத்து, விலாச நாடகம் (Drama) ஆகிவிடும். கூத்தின் சிறப்புஆட்டத்திலே தங்கியிருக்கிறது.

ஏனைய இடங்களில் ஆடப்படும் கூத்துகளிலும் பார்க்க மட்டக்களப்பில்ஆடப்படும் கூத்துக்களில் ஆட்டம் சிறப்பாக அமைந்திருக்கும். ஆட்டத்தோடுமத்தள அடியும் இணைந்து போக வேண்டும். இல்லையென்றால் ஆட்டமேபிழைத்துவிடும்.

முதன் முதல் கூத்தாடியவன் தில்லைக் கூத்தன். இதற்கு மத்தளம் அடித்தவன்திருநந்திதேவன். இது தெய்வக்கூத்து இதன் பின்பு மனிதக் கூத்து ஆரம்பித்தது.

கற்காலத்து மனிதர்கள் தங்கள் உணவுக்காக காடுகளில் அலைந்து திரிந்து, கல்லாயுதங்களாலும், வில்லாயுதங்களாலும் மிருகங்களை வேட்டையாடும்போது மிருகங்கள் விழுந்துவிட்டால் ஓடிப்போய் அதைப் பார்த்ததும்மிகிழ்ச்சியினாலே துள்ளிக்குதித்து ஆடியிருப்பார்கள்.

பின்பு அம் மிருகத்தை பச்சையாகவோ, நெருப்பில் வாட்டியோ உண்டபின்பும்கூட்டமாகத் துள்ளிக்குதித்து ஆடியிருப்பார்கள்.

இது இரண்டாவது படிமுறைக் கூத்துமல்லாமல், மனிதனது முதலாவதுகூத்துமாகும். இதன் பின்னர் மக்கள் நாகரிகம் அடைய அடைய இக்கூத்து பலபரிணாம வளர்ச்சிகளைப் பெற்று சாஸ்திர ரீதியான கூத்தாக இன்றுவிளங்குகிறது.

நதி மூலம் ரிஷிமூலம் தேடுவது போல நமது கூத்தின் மூலத்தையும் தேடிய பலர்கூத்தின் பிறப்பிடம் தமிழ் நாடு என்றும் வேறு சிலர் மலையாளம் என்றும்கூறினாலும், மட்டக்களப்புக் கூத்தின் பிறப்பிடம் மட்டக்களப்புத்தான் என்பதைஇலகுவில் எவரும் ஒதுக்கிவிட முடியாது.

வட கேரளத்தில் கிருஷ்ணாட்டம் பிரபலமாக இருந்தபோது தென்கேரளத்துமன்னன் கொட்டாரக்காரத் தம்பிரான், இந்த ஆட்டத்தைப் பார்க்க விரும்பிஅக்கலைஞர்களை அனுப்பி வைக்கும்படி கேட்டபோது வடகேரள மன்னன்மறுத்தது மட்டுமல்லாமல் பரிகாசமும் பண்ணி அனுப்பினான்.

இதனால் கவலையடைந்த தம்பிரான் தனது நாட்டிலுள்ள அறிஞர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், நாட்டியகாரர்கள் அனைவரையும் அழைத்து, ஒரு புதியஆட்டத்தை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டான்.

இதற்கு இராமனாட்டம் என்று பெயர். மட்டக்களப்பு மக்கள் மலையாளத்துப்பரம்பரையைச் சேர்ந்தவர்களாகையால் வடகேரளத்தில் ஆடிய கிருஷ்ணாட்டம்வடமோடியாகவும், தென் கேரளத்தில் ஆடிய இராமனாட்டம் தென்மோடியாகவும்ஆடப்படுவதாக சிலரின் அபிப்பிராயம்.

இவற்றின் மறுவடிவமாகிய கதகளியே மட்டக்களப்புக் கூத்தின் மூலம் எனவும்கூறுகிறார்கள். ஆனால் கதகளிக்கும் நமது கூத்துக்கும் பல வேறுபாடுகள்உள்ளன. கதகளியில் கர்நாடக சங்கீதம் பயன்படுகிறது.

தோல் வாத்தியமாக, நிலத்தில் நிலைக்குத்தாக வைத்து ஒருபக்கம் மட்டுமேஅடிக்கும் செண்டை வாத்தியம் பயன்படுத்தப்படுகிறது. இதில் கதாபாத்திரங்கள்பாடுவதில்லை. ஆனால் ஒப்பனையில் மட்டும் ஒரு சில ஒற்றுமைகள் உண்டு. எனவே கதகளிதான் நமது கூத்தின் மூலம் என்று எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும்.

வேறு சிலர் தமிழ் நாட்டில் விந்திய மலைக்கு வடக்கேயும், தெற்கேயும்நடத்தப்பட்ட தெருக்கூத்துகளே இங்கு வடமோடி தென் மோடி எனஆடப்படுவதாகக் கூறுகிறார்கள்.

நேபாளத்தின் சாக்கியர் கூத்தும், ஆந்திராவின் குச்சுப்புடியும், வட இந்தியாவின்மணிப்புரியும், கேரளத்தின் கதகளியும் தமிழ் நாட்டின் பரத நாட்டியமும், இப்போதும் இலங்கையில் ஆடப்படும் போது அவற்றின் அமைப்பு சிறிதும்மாறுபடாமல் ஆடப்படுகிறது.

ஆனால் நமது கூத்தின் ஆடல், பாடல், இசை, வாத்தியம், உடையலங்காரம், ஒப்பனை எல்லாம் இந்தியாவிலிருந்து வந்த கூத்துக்களிலிருந்து மாறுபட்டுத்தனித்தன்மையுடன் காணப்படுகின்றது.

எனவே, நமது கூத்து எங்கிருந்தும் இறக்குமதி செய்யப்படவில்லை என்பதேஉறுதியான உண்மையாகும். அப்படியானால் நமது மட்டக்களப்புக் கூத்துக்களின்பிறப்பிடம் மட்டக்களப்புத்தானா என்பதில் கொஞ்சம் கவனம் செலுத்துவோம்.

புளியந்தீவை மையமாகக் கொண்ட பகுதியே மட்டக்களப்பு என்பதைதற்காலிகமாக மறந்து விட்டுப் படியுங்கள். தற்போது அம்பாறை எனப்படும்பிரதேசமே பண்டைய மட்டக்களப்பின் மையமாகும்.

ஒல்லாந்தர் கோட்டை கட்டி ஆட்சியை தொடங்கிய பின்னர் பலஇடங்களிலிருந்தும் மக்கள் குடியேறிய பின்னரே தற்போதய மட்டக்களப்புஉதயமானது.

பண்டைய மட்டக்களப்பில் பட்டிநகர், உகந்தை, திருக்கோயில் சங்கமான் கண்டி, பனங்காடு, அக்கரைப்பற்று, கோளாவில், வாகூரை, வீரமுனை, மணல்புட்டி, சலவை பாணமை, நாவலூர், நாகமுனை, வதன வெளி, தம்பட்டை, தளகைக்குடாஎன்பன பேரூர்களாகும். இங்கே பல புலவர்களும், பண்டிதர்களும், கலைஞர்களும், அறிஞர்களும், சோதிடர்களும், மந்திரவாதிகளும், பரிசாரிமார்களும் அண்ணாவிமார்களும் இருந்திருக்கிறார்கள். இப்போதும்இருக்கிறார்கள். இதை பின்வரும் பாடலால் அறியலாம்.

இயலிசை நாடகம் எங்கும் விளங்க

பல நூலாய்ந்த பண்டிதர் சிலரை

கவிபல விளங்கக் காசினியோர்க்கு

எனப் போடிகல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இவர்கள் ஏன் நமதுகூத்துக்களை ஆக்கியிருக்கக்கூடாது என்ற கேள்வி எழுகிறது. இப்பொழுதும்கேரளாவில் என்ற ஊரில் பல அண்ணாவிமாரும் மந்திரவாதிகளும், சித்தவைத்தியர்களும் இருக்கிறார்கள்.

இங்கு 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த தாமோதரம் பிள்ளை என்றஅண்ணாவியார், சயிந்தவன் நாடகம், தரும்புத்திரர் நாடகம், அல்லி நாடகம்போன்ற பல வடமோடிக் கூத்துகளை தெற்கு ஆரையம் பதியில் பழக்கியுள்ளார்.

கல்முனையைச் சேர்ச்த கணபதிப் பிள்ளை என்னும் அண்ணாவியார், வாளபிமன்நாடகம், அலங்கார ரூபன நாடகம் போன்ற தென்மோடி நாடங்களை ஆரையம்பதிநடுத்தெருவில் பழக்கியுள்ளார்.

தாமோதரம் பிள்ளை அண்ணாவியார் பழக்கிய ஒரு கூத்துப் பாடலிலே,

ஆனாப் பானா கோவன்ன

ஊனாத் தாவன்னா சொன்ன

அன்பான செந்தமிழை

பண்பாய் உரைத்துக் கொண்டு

எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. ‘ஆனாப் பானாஎன்றால் அக்கரைப்பற்றுஊனாத்தாவன்னன என்றால் உலகிப் போடி தாமோதரம் பிள்ளை எனப்பொருள்படும். இது மட்டுமல்லாமல் அலங்கார ரூபன் தென்மோடி கூத்திலேஉள்ள கடவுள் வணக்க விருத்தத்திலே

திருக்காரைப் பழித்த குழல் அலங்கார

ரூபிதனைச் செல்வம் போற்ற

பெருக்காரை அலங்கார ரூபனருள்

நாடகத்தைப் பெரிதுபாட

செருக்காரைக் கொழுப்படக்கி சிறியவர்க்கும்

நெடியவர்க்கும் சிறப்பாயீந்து

மருக்காரைப் பதிவளரும் காத்தவராசன்

பாதம் வணங்குவோமே

என கூத்து ஆக்கப்பட்ட ஊர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடப்படும் ஊரை ஆரைப்பதி என்றும் காரைப்பதி என்றும் எடுத்துக்கொள்ளலாம். இதற்கு முந்திய விருத்தத்திலேகதிரை வரை மருவுமொருகுமரனிரு தாள் காப்புத்தானேஎன கடவுள் வாழ்த்துப் பாடியிருப்பதால்மருக்காரைப் பதிவளரும் காத்தவராசன் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதுகுருவணக்கமாக இருக்கலாம்.

கூத்துகள் ஆடப்பட்டு வரும் பிரபலமான ஊர்களிலே ஆரையம்பதியும் ஒன்றாகஇருப்பதால் இவ்வூர் ஆரையம்பதியைக் குறிப்பிடுவதாக இருக்கலாம் என்பதுசிலரது அபிப்பிராயம் எந்த ஊராக இருந்தாலும் இது மட்டக்களப்பில் இருப்பதால்இக்கூத்தை ஆக்கிய புலவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் என்பது புலனாகிறது.

வேறு இடங்களிலிருந்தும் சில கூத்துகள் வந்திருக்கலாம். இதையும் நிராகரிக்கமுடியாது. எனவே மட்டக்களப்பில் ஆடப்படும் பெரும் பாலான கூத்துகளின்பிறப்பிடம் மட்டக்களப்பே என்ற முடிவுக்கு நாம் வரலாமென நினைக்கின்றேன். இந்த அபிப்பிராயத்தோடு ஒன்றுபட்டவர்களும் இருக்கலாம்.

வேறுபட்டவர்களும் இருக்கலாம். வேறுபட்டவர்கள் தங்கள் அபிப்பிராயங்களைவெளிப்படுத்தினால் இது பற்றிய ஆய்வாளர்களுக்கு உதவியாக இருக்குமெனஎண்ணுகிறேன்.

எவ்வாறாயினும், மட்டக்களப்புக் கூத்து யாழ்ப்பாணத்திலிருந்தோ, தமிழகத்திலிருந்தோ வந்தது என்பது மிகவும் அபத்தமான கூற்று. எவ்விதஆதாரமும் அற்றது என்பதை வாசகர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இக் கூத்து நாட்டுக்கூத்து அல்ல, நாட்டார் கூத்துமல்ல. அது பரத நாட்டியம் போன்று தனித்துவமான ஆட்ட இலக்கணங்களுக்கு அமைந்த செந்நெறிக்கலை எனப் பேராசிரியர் சி. மெளனகுரு அறுதியிட்டுக் கூறியிருப்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும். நீண்டகால ஆராய்ச்சியின் பின் அவர் இவ்வாறு கூறியுள்ளார் என்பதையும் நாம் மனங்கொள்ள வேண்டும்.

இனி மட்டக்களப்புக் கூத்துக்களிலுள்ள ஒரு சில சிறப்பு அம்சங்களைக்கூறவிரும்புகிறேன். ஆட்டத்திலே சக்கரவர்த்திகள், கடவுளர்கள் வயதானபாத்திரங்களுக்கு, தாளக்கட்டு,

தகதிக தாம் தெய்யா தெய்தெய்

தாதெய்யத்தோம் தகதிகஎன சாந்தமானதாகவும், வீரர்களுக்கு,

தாம் தெயயத்தெய் தக்கச்சந்தரிகிடஎன வேகமானதாகவும் குதிரைவீரர்களுக்கு,

சேகணம் சேகணம் தத்தா

ததிந்தத்தா தெய்தெய்” – என வடமோடியிலும், தென் மோடியில் வீரர்களுக்கு,

தாதாம் தாதெய்ய தாதாம் தெய்ய எனவும், மற்றப்பாத்திரங்களுக்கு,

ததித்துளாதக ததிங்கிண கிடதக

தாதிமி தெத்தா தெய்யேஎன பொருத்தமான வரவுத் தாளக்கட்டுகள்அமைந்திருப்பது ஒரு சிறப்பாகும்.

பாடல்களை நோக்கும் போது மோனைகள், முன் எதுகை பின் எதுகைகளோடுகூடிய கவர்ச்சிகரமான பாடல்களும், சயங் கொண்டார், அருணகிரி நாதர்போன்றவர்களின் பாடல்களைப் போன்ற சந்தச் சிறப்பு மிக்க பாடல்களும்அமைந்துள்ளன.

அத்தோடு கர்நாடக சங்கீதத்தில் (விருத்தம்) தொகையறாவும் அதைத்தொடர்ந்துபாடலும் அமைந்துள்ளது போல கூத்துப் பாடல்களிலும் பல பாடல்கள் உள்ளன. வடமோடியில் இதற்கு கந்தார்த்தம் என்றும், தென்மோடியில் கொச்சகத்தருஎன்றும் குறிப்பிடுகிறார்கள்.

உடையலங்காரம் ஒப்பனைகளைப் பொறுத்தவரையில் கரப்புடுப்பு எனப்படும்நெட்டுடையும், கத்தாக்கு எனப்படும் வட்டுடையும், மன்னர்கள் அணியும்கிரீடங்களும், வேறுர் கூத்துகளில் காணப்படாத சிறப்பம்சமாகும்.

இத்தகைய ஆடை அலங்காரம் தென்மோடிக் கூத்துகளுக்கு சிறப்பாகஅமைந்தவை இனி கவிநயங்களைப் பார்ப்போம்.

கம்பர் போன்ற மகா கவிஞர்களின் பாடல்களிலே அமைந்துள்ள நயங்களையும்விட மேலான கவிநயங்கள் கூத்துப் பாடல்களிலும் உள்ளன என்பதைவிளக்குவதற்காக எடுத்துக் காட்டாக இரு பாடல்களைக் கூறவிரும்புகிறேன்.

வாளபிமன் நாடகம் தென்மோடிக் கூத்திலே ஒருபாடல். அர்ச்சுனன் தன்மகன்வாளபிமனுக்கு கிருஷ்ணரின் மகள் சுந்தரியை மணம் பேசி நிச்சயார்த்தம்செய்துவிட்டு வனம் போகிறான்.

இதை அறிந்த துரியோதனன் தன்மகன் இலக்கண குமரரனுக்கு சுந்தரியை மணம்முடிக்க பலபத்திரரோடு சென்று கிருஷ்ணரிடம் சம்மதம் பெற்று நாளும்குறிப்பிட்டாகிவிட்டது. இதை அறிந்த சுந்தரி, மனிதரால் இத்திருமணத்தைநிறுத்த முடியாதென உணர்ந்து இராமரிடம் முறையிடுவதாக ஒரு பாடல்,

இந்த மண்ணும் வெந்த மண்ணும்இதை

எடுத்தொருவர் அடுத்து வைத்தால்இது

சிந்தியே பேறாகமலே ஒன்றாய்

சேருமோ அரிராமா

இங்கு இப்பாடலிலே இருவகை மண்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒன்றுஈரலிப்பான களிமண், மற்றது உருவாக்கப்பட்டு சூளையிலே வெந்தமண்இவ்விரு மண்களையும் கைகளிலே வைத்துக் கொண்டு இவ்விரு மண்களும்ஒன்றாகுமா? சிந்தி வேறு வேறாகி விடுமல்லவா? என இராமனிடம் கேட்கிறாள். நான் உலக வாழ்வின் திருமண நியதிப் படி வாளபிமனுக்கு மனைவியாகஆக்கப்பட்டு விட்டேன்.

(வெந்த மண்ணாக) இனி இலக்கண குமாரனுக்கு மனைவியாக முடியுமா? எனக்கேட்கிறாள். அதுவும் யாரிடம் நீதி கேட்கிறாள் தெரியுமா? ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என வாழ்ந்து காட்டிய இராம பிரானிடம் கேட்பது எவ்வளவுபொருத்தமாக இருக்கிறதென்பதைக் கவனியுங்கள்.

அடுத்து வரும் பாடல் அலங்கார ரூபன் தென்மோடிக் கூத்திலுள்ளது. அலங்காரரூபியும் தோழிகளும் பொய்கையில் நீராடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போதுகுளத்திலிருந்த மீன்கள் மேலே பாய்ந்து அலங்கார ரூபியின் மேல் விழுகின்றன. இதைக் கண்டதும் அலங்கார ரூபி தோழிமார்களிடம் பின்வருமாறு கேட்கிறாள்.

வேலன்றி வாளன்றி வேறொன்றில்லாமல்

விழி கொல்லும் பெண்ணாரே! – எந்தன்

காலுக்கும் மேலுக்கும் மேலுக்கொருமீன்

கதித்துக்குதிப்பதென்னஎன்தோழி

இந்த வினாவுக்கு தோழிகள் கூறும் பதில் வருமாறு

கோலக் குழையில் பொன்னோலையில் மாலையில் கூடித்திரும்பு கண்ணைஇனமென்று வாலப்பருவத்து வேல்கண்டு மேல் கொண்டு

வந்து குதித்த தம்மாஎன் அம்மா

என்று தோழி பதில் கூறுகிறாள். இனி இவற்றிலுள்ள நயங்களைப் பார்ப்போம். வேலாயுதத்தாலும், வாளா யுத்தாலும் வேறு எந்த விதமான ஆயுதத்தாலும்கொல்ல முடியாத வாலிபர்களின் உள்ளத்தமைதியை உங்களது விழியாகியகண்) ஆயுதத்தாலே பார்த்தவுடன் கொல்லுகின்ற பெண்களே! என்றுகூறியிருப்பது கற்பனையின் உச்சக் கட்டத்தைத் தொடுகிறதல்லவா? இந்தக்காலத்துக் கவிஞர்களும் இந்தக் கற்பனை கையாண்டிருக்கிறார்கள். இந்தக்கேள்விக்கு தோழிகள் கூறிய பதில் கற்பனைச் சிகரத்தையே தொட்டு நிற்கின்றது. (

அம்மா! பொற்றகட்டினாலே இழைக்கப்பட்ட உங்களது தோடுகளோடும், அணிந்துள்ள மாலைகளோடும், கயல்மீன் போன்ற உங்களது கண்கள் இருபக்கங்களிலும் அசைந்து சென்று பார்த்து கூடித் திரும்புவதை குளத்திலே உள்ளவாலிபப் பருவத்துச் கயல் மீன்கள், தங்களுடைய இனமென்று எண்ணி உங்களதுகண்களோடு கூடிக்குலாவுவதற்கு உங்கள் மேல் பாய்கின்றன என்று பதில்கூறுகிறாள்.

இப்படிப்பட்ட கற்பனைதயங்களை எங்களாலும் தர முடியுமெனகவிச்சக்கரவர்த்தி கம்பரைப் பார்த்தே சவால் விடுவது போல இப்பாடல்அமைந்திருக்கிறது. இவைபோல இன்னும் பல நயம்மிக்க பாடல்கள்விசேடமாகத் தென்மோடிக் கூத்துக்களிலே இருக்கின்றன.

இவை போன்ற காதல் சுவைமிக்க பாடல்கள் அமைந்திருப்பதாலும், காதல்கதைகளையே தென்மோடிக் கூத்துக்கள் கருவாகக் கொண்டிருப்பதாலும் தென்மோடிக் கூத்துகளெல்லாம் காமரசம் ததும்பும் அகப்பொருள் கூத்துகள் என்றும், வடமோடிக் கூத்துகள் வீரம் செறிந்த புறப்பொருள் கூத்துகளெனவும்கூறுகிறார்கள்.


கூத்தைப் பற்றிப் பேசுகிறவர்கள் எழுதுகிறவர்கள் எவரானாலும் மதிப்புக்குரிய பேராசிரியர் மெளன குருவின் பெயரைக் கூறாவிட்டால், நாம் நன்றி மறந்தவர்களாவோம்.

நமது கூத்துக்கு அவர் செய்த செய்து கொண்டு வருகின்ற பணிகள் பல .வே. சாமி நாதையாரைப் போல ஊர் ஊராகச் சென்று ஏடுகளைச் சேகரித்து அண்ணாவிமாரையும் சந்தித்து கூத்து பற்றி ஒரு பெரிய ஆய்வு நூலை எழுதியுள்ளார்.


ஆண்டுகள் தோறும் நாடக விழா நடத்தி கூத்தை அறிஞர்களும் ஏற்றுக்கொள்ளும்படி உயர்த்தினார். சினிமாவின் தாக்கத்தினாலே கோமா நிலையில் உறங்கிக் கிடந்த நமது கூத்தை சிங்களக் கலைஞர்களும் அறிஞர்களும் வியக்கும்படி மேடை ஏற்றியவர்.


ஒதுங்கிக் கிடந்த அண்ணாவிமார்களை அறிஞர்கள் மத்தியிலே சிம்மாசனத்தில் ஏற்றினார். ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்தில பிறந்திராவிட்டால் சைவம் அழிந்திருக்கும் என்பார்கள்

. நானோ, மட்டக்களப்பிலே பேராசிரியர்மெளனகுருபிறந்திருக்காவிட்டால் நமது கூத்து அழிந்திருக்குமெனக் கூறுகிறேன்.

கூத்துக்கள் அழியாமல் இருந்தாலும், அதன் மகத்துவம் மக்களுக்குத் தெரியாமல் போயிருக்கும். கிராமியக்கலை எனப் படித்தவர்களால் ஏளனக் கண்கொண்டு நோக்கப்பட்ட இக்கூத்துக்கலையைப் பல்கலைக்கழகத்தில் புகுத்த படித்தவர் மத்தியில் நற்பெயர் பெறச் செய்தது மட்டுமல்லாமல், முறையான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு கூத்துக்கலை நமது பொக்கிஷம். நமது முதுசம் என்று நிறுவியவர் பேராசிரியர் சி. மெளனகுரு அவர்களே.


Friday, June 25, 2010

பிள்ளைபிடிகாரர்களின் உணவகம்


மைக்டொனால்ட் பிள்ளைபிடிகாரர்களின் உணவகம்
-
கலையரசன்-


எங்காவது ஒரு மேற்குலக நகரத்தில் பொருளாதார உச்சி மகாநாடு நடைபெற்றால், அங்கே முதலில் தாக்கப் படுவது மக்டொனால்ட்ஸ் ரெஸ்டாரன்ட் ஆக இருக்கும். மகாநாட்டை எதிர்த்து தெருவில் ஊர்வலம் போகும் எதிர்ப்பாளர்கள் வழியில் மக்டோனால்ட்சை பார்த்தால் கல் எடுத்து வீசாமல் போக மாட்டார்கள். அனைவருக்கும் தெரிந்த உலகமயமாக்கலின் சின்னமான மக்டோனால்ட்சை அடித்து நொறுக்குவதில் அவர்களுக்கு அவ்வளவு குஷி. இதனால் மகாநாடு நடக்கும் சமயம், முதல் நாளே உணவு விடுதியை பூட்டி விட்டு, கண்ணாடிகளுக்கு மேலே பலகை அடித்து விட்டு போவார்கள்.

மக்டொனால்ட்ஸ் எந்த சத்துமற்ற சக்கையை விற்று காசாக்குகின்றது, என்ற விழிப்புணர்வு மெல்ல மெல்ல மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டு வருகின்றது. அதனால் மக்டொனால்ட்ஸ் நிர்வாகம், "உள்நாட்டில் வாங்கிய தரமான உணவுப் பொருட்களை கொண்டு தயாரிப்பதாக" அடிக்கடி காதில் பூச் சுற்றும். மக்டொனால்ட்ஸ் உணவுப் பதார்த்தங்கள் தயாரிக்க பயன்படுத்தும் இரசாயனப் பொருட்கள் பல்வேறு வியாதிகளை உருவாக்குகின்றன. மக்டோனால்ட்சின் தாயகமான அமெரிக்காவில், "ஹம்பெர்கர்" தின்று கொழுத்த சிறுவர்கள் ராட்சதர்கள் போல காட்சி தருவார்கள். (உலகிலேயே பெரிய்ய்ய்ய நாடல்லவா. அங்கே எல்லாம் பெரிசு பெரிசாக தான் இருக்கும்.)

மக்டொனால்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்ட மேற்கு ஐரோப்பிய பொது மக்கள், அங்கே சாப்பிடுவதை தரக் குறைவாக கருதுகின்றனர். ஆனால் இந்தியாவிலோ நிலைமை தலை கீழ். வசதியான நடுத்தர வர்க்க இளைஞர்கள் மக்டோனால்ட்சை மொய்க்கிறார்கள். அங்கே சாப்பிடுவதில் ஒரு பெருமிதம். அமெரிக்காவில் இருந்து எந்த குப்பையை இறக்குமதி செய்தாலும் அவர்களுக்கு இனிக்கும். மேற்குலகில் தோன்றியுள்ள மக்டொனால்ட்ஸ் எதிர்ப்பு அலை பற்றி, இந்திய மேன் மக்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். (நீங்க எல்லாவற்றிலும் too late)

கடந்த பத்தாண்டுகளில் வணிகவியல் படித்த மாணவர்களுக்கு தெரிந்திருக்கும். அவர்களது மார்க்கெட்டிங் வகுப்பில் மக்டோனால்ட்சின் "வெற்றியின் இரகசியம்" பற்றி கற்பித்திருப்பார்கள். அது என்ன பெரிய "மார்கெட்டிங் புரட்சி"? குழந்தைகளை கவர்ந்திழுக்கும் அன்பளிப்புகளை, (மக்டொனால்ட்ஸ் சின்னம் பொறித்த)விளையாட்டுப் பொருட்களை கொடுக்கிறார்கள். அதனால் குழந்தைகளே பெரியவர்களை ரெஸ்டாரன்ட் பக்கம் இழுத்து வருகின்றன. வழியில் மக்டோனால்ட்சை கண்டால் அங்கே போக வேண்டுமென்று அடம் பிடிக்கும் குழந்தைகள் எத்தனை? குழந்தைகள் வந்தால் கூடவே பணத்துடன் பெற்றோரும் வருவார்கள் என்று அவர்களுக்கு தெரியும். இது ஒன்றும் மகத்தான மார்க்கெட்டிங் கிடையாது. "பிள்ளைகளுக்கு இனிப்புக் கொடுத்து கடத்தும் பிள்ளைபிடிகாரர்களின் கயமைத்தனம்." இப்படிக் கூறுகிறது அமெரிக்காவில் ஆய்வு செய்த Centre for Science in the Public Interest (CSPI).

உணவு உற்பத்தி தொழிற்துறையை ஆய்வு செய்யும் அந்த வெகுஜன நிறுவனம், மக்டொனால்ட்ஸ் நீதியற்ற, ஏமாற்றும் மார்க்கெட்டிங் மூலம் பிள்ளைகளை கவருவதாக குற்றஞ் சாட்டியுள்ளது. குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களைக் கொண்டு விளம்பரம் செய்வதானது, நுகர்வோர் பாதுகாப்பை மீறும் செயல் என்று எச்சரித்துள்ளது. பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு சத்தான உணவை சாப்பிட பழக்குவதற்கு மக்டொனால்ட்ஸ் தடையாக இருப்பதாக அது மேலும் குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் அடங்கிய கடிதம் மக்டொனால்ட்ஸ் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. எண்ணி முப்பது நாட்களுக்குள் மக்டொனால்ட்ஸ் தனது "பிள்ளை பிடி மார்க்கெட்டிங்கை" நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் வழக்குத் தொடுக்கப்படும். நிச்சயமாக மக்டொனால்ட்ஸ் நிர்வாகம் இது குறித்து மகிழ்ச்சியடைந்திருக்காது. அவர்களைப் பொறுத்த வரையில் நமது குழந்தைகளின் நலன் முக்கியமல்ல, நமது பாக்கெட்டில் உள்ள பணம் தான் முக்கியம்.

கோக் எதிர்ப்பு

கோக் எதிர்ப்பு பிளக்சிமடா மக்களுக்கு கிடைத்த இடைக்கால வெற்றி

கேரளாவின்
பாலக்காடு மாவட்டத்திலுள்ள பிளாச்சிமடா கிராமத்தில் அமைந்துள்ள கோக் ஆலையை எதிர்த்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் நடத்திவரும் போராட்டத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் அப்போராட்டத்தில் தற்பொழுது முக்கியமான திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.

பிளாச்சிமடா பஞ்சாயத்து ஒன்றியத்தைச் சேர்ந்த மக்கள் விடாப்படியாக நடத்திவரும் போராட்டத்தின் காரணமாக, கேரள மாநில அரசு, கோக் ஆலைக்கு எதிராக மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்வதற்காக ஒன்பது உறுப்பினர்கள் கொண்ட நிபுணர் குழுவொன்றைச் சில மாதங்களுக்கு முன் அமைத்தது. அந்நிபுணர் குழு, கோக் ஆலையின் செயல்பட்டால் அப்பகுதியின் நிலத்தடி நீர் வற்றிப் போனதையும், அவ்வாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகளால் நிலத்தடி நீரும் நிலமும் மாசடைந்து போனதையும் தற்பொழுது உறுதி செய்திருப்பதோடு, இதற்காக கோக் நிர்வாகம் அப்பகுதி மக்களுக்கு 200 கோடி ரூபாய் நட்ட ஈடாக வழங்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. மேலும், அப்பகுதியில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் எவ்வளவு தொகை நட்ட ஈடாக வழங்குவது என்பது குறித்து முடிவு செய்யவும் அதிகாரமிக்க கமிட்டியொன்றை அரசு அமைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

கேரள மாநிலத்தின் நெற்களஞ்சியமாக அறியப்படுவது பாலக்காடு மாவட்டம். பிளாச்சிமடா கிராமம் அமைந்துள்ள சித்தூர் வட்டம் நெற்களஞ்சியத்தின் நெற்களஞ்சியம் எனப் பெயரெடுத்த பகுதி. நெல், தென்னை, கடலை, பருத்தி, கரும்பு, வாழை, மிளகு, கேழ்வரகு, மா, ஆரஞ்சு, ஏலக்காய், ரப்பர் மற்றும் காய்கனிகள் என முப்போகம் விளைந்த பிளாச்சிமடா பகுதி, கோக் ஆலை பிளாச்சிமடாவில் இயங்க ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே பாலைவனம் போலாகிப் போனது. கோக், ஒவ்வொரு நாளும் குறைந்தது 15 இலட்சம் லிட்டர் நீரை உறிஞ்சி எடுத்ததாலும், தனது ஆலைக் கழிவுகளை வயல்வெளியிலேயே கொட்டியதாலும் ஏற்பட்ட நிலைமை இது.

ஆலைக்கு நிலத்தை விற்ற பண்ணையாரிடம் கூலி வேலை செய்து வந்த பழனி, ஒரே வரியில் இந்த அவலநிலைமையை விளக்குகிறார். “அன்று ஒரு ரூபாய் சம்பளம். சோற்றுக்கும் பஞ்சமில்லை; நல்ல தண்ணீருக்கும் அன்று பஞ்சமில்லை. இன்று பண்ணையார் கொடுத்த 5 செண்டு நிலமிருக்கிறது. ஆனால், கிணற்றில் தண்ணீர் இல்லை.” கோக் ஆலைக்கு அருகில் 4 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் ஷாகுல் அமீது 2002-க்குப் பிறகு தன்னால் விவசாயமே செய்ய முடியவில்லை என்கிறார். நான் 20 பேருக்கு வேலை கொடுத்தேன். இன்று மகனுடைய சம்பளத்தில்தான் தனது வயிற்றை கழிவிக் கொண்டிருப்பதாகப் பொருமுகிறார், அவர்.

நீர் வளமிக்க பிளாச்சிமடா கிராமத்தின் மக்கள் கோக் ஆலையின் வருகைக்குப் பின்னர், தங்களது தாகத்தைத் தீர்த்துக் கொள்வதற்கே லாரித் தண்ணீரை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கோக் ஆலையால் மாசுபடுத்தப்பட்ட நிலத்தடி நீரைத் துணிகளைத் துவைப்பதற்குக்கூடப் பயன்படுத்த முடியாது என்கிறார்கள் அப்பகுதி மக்கள். கோக் ஆலையால் இப்படி மாசுபடுத்தப்பட்ட நிலத்தடி நீரையும், நிலத்தையும் மீண்டும் தூய்மைப்படுத்துவதற்கும், கோக் ஆலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்ட ஈடு வழங்குவதற்கும் இந்த 200 கோடி ரூபாய் போதுமானதா எனக் கேட்க வேண்டிய நேரத்தில், கோக் ஆலையோ தனக்குத் தண்டனை அளிக்க இந்த நிபுணர் கமிட்டிக்கு அதிகாரம் கிடையாது எனக் கொக்கரிக்கிறது. நிபுணர் குழு விசாரணைக்கு அழைத்தபொழுது, அதற்கு உடன்படவும் மறுத்து வந்தது, கோக் நிர்வாகம். அரசு அமைத்த நிபுணர் குழுவின் உத்தரவைக் கழிப்பறைக் காகிதம் போல் தூக்கி வீசுவது, அரசின் அதிகாரத்திற்கே சவால் விடுவதற்குச் சமமானது என்ற போதிலும், ஏகாதிபத்திய எதிர்ப்புப் பேசும் கேரள மாநில சி.பி.எம். அரசாங்கம் கோக்கின் இந்தத் திமிருக்கு எதிராக அடக்கியே வாசிக்கிறது.

இடதுசாரிக் கூட்டணியின் கையில் அதிகாரம் இருந்தால், பன்னாட்டு நிறுவனங்களின் ஆட்டத்திற்கு ஆப்பு வைத்துவிடுவோம் என சி.பி.எம். உதார்விட்டு வருவதைப் பற்றி புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை. இதோ, கேரள மாநில அதிகாரம் இடதுசாரிக் கூட்டணியின் கையில்தான் இருக்கிறது. அக்கூட்டணி ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாக இருந்தால், “உடனடியாக 200 கோடி ரூபாய் பணத்தை அரசு கஜானாவில் கட்டச் சொல்லி கோக்கிற்கு உத்தரவிட்டிருக்கலாம். அப்படிக் கட்டத் தவறினால், கேரளாவிலுள்ள கோக்கின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்” என ஒரு வார்த்தைக்காகவாவது மிரட்டல் விட்டிருக்கலாம். நிபுணர் குழுவின் பரிந்துரையையொட்டி கோக் நிர்வாகத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத சி.பி.எம். கூட்டணி ஆட்சி, ஒப்புக்குச் சப்பாணியாக, அதே பாலக்காடு மாவட்டத்தில் இயங்கிவரும் பெப்சி ஆலை நிர்வாகத்திடம், “இனி, 7 இலட்சம் லிட்டர் நீருக்குப் பதிலாக, 2.34 இலட்சம் நீரைத்தான் நிலத்தடியிலிருந்து எடுத்துப் பயன்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவைக் கேட்டு பெப்சி நிர்வாகம் ஆடிப் போய்விடும் என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் உண்டா? பிளாச்சிமடாவில் உள்ள கோக் ஆலைகூட ஒவ்வொரு நாளும் 5 இலட்சம் லிட்டர் நீரைத்தான் நிலத்தடியில் இருந்து எடுத்துப் பயன்படுத்த வேண்டும் என அரசிடம் அனுமதி பெற்றிருந்தது. ஆனால், கோக் நிர்வாகமோ ஒவ்வொரு நாளும் 15 இலட்சம் லிட்டருக்கும் மேலாக நீரை உறிஞ்சி எடுத்துப் பயன்படுத்தி வந்தது. கடந்த பத்தாண்டுகளில் இந்தத் தண்ணீர் திருட்டுக்காக கோக் நிர்வாகம் ஒருமுறையேனும் தண்டிக்கப்பட்டதுண்டா?

பிளாச்சிமடா மக்களின் போராட்டத்திற்குக் கிடைத்த இந்த வெற்றியைச் செயல்படுத்த வேண்டும் என்றால்கூட, கோக்கிற்கு எதிராக நடந்துவரும் இப்போராட்டத்தை இன்னும் தீவிரமாக நடத்த வேண்டியிருக்கும். ஏனென்றால், கோக்கின் பண பலமும் அரசியல் செல்வாக்கும் பாதாளம் வரை பாயக்கூடியது. இதற்கு ஆதாரமாக கடந்த பத்தாண்டுகளில் நடந்த பல சம்பவங்களை உதாரணமாகக் காட்டலாம்.

கோக்கின் செயல்பாடுகளால் நிலத்தடி நீர் மாசடைவதைக் கண்ட பிளாச்சிமடா பஞ்சாயத்து ஒன்றியம், கோக்கின் ஆலை செயல்படுவதற்குத் தடை விதித்தது; கேரள மாநில அரசைக் கொண்டே இந்தத் தடையை உடைத்தெறிந்தது, கோக். இதற்கடுத்து, 34 ஏக்கரில் விவசாயம் செய்யும் விவசாயி எந்தளவிற்கு நீரைப் பயன்படுத்துவரோ, அதே அளவு நீரைத்தான் கோக் ஆலையும் பயன்படுத்த வேண்டும் என கேரள உயர்நீதி மன்றத்தின் மூலம் ஒரு தீர்ப்பைப் பெற்றனர், பிளாச்சிமடா மக்கள். இதனையும் கேரள உயர்நீதி மன்றத்தைப் பயன்படுத்தியே உடைத்தது, கோக். பிளாச்சிமடா மக்கள் குடிதண்ணீருக்காகக் குடத்தைத் தூக்கிக்கொண்டு அலைந்து கொண்டிருந்தபொழுதுதான், இப்படிபட்ட தீர்ப்புகளையும், அரசாணையையும் கோக் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பிரச்சினை பற்றி தலையங்கம் எழுதியுள்ள “எக்கனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி” என்ற ஆங்கில வார இதழ், “பிளாச்சிமடா மக்கள் கடந்த பத்தாண்டுகளாக சட்டபூர்வமாகப் போராடி இந்த வெற்றியை ஈட்டியுள்ளனர். இது நடைமுறைக்கு வரவில்லையென்றால், நீதியைப் பெறுவதற்கு ஜனநாயகத்திற்குப் புறம்பான வழிகளில் மக்கள் போராடத் தொடங்கி விடுவார்கள்” என ஆட்சியாளர்களை எச்சரித்துள்ளது.

இந்த வரிகளைத் தோலுரித்தால், இந்திய ‘ஜனநாயகமும்’, அதன் ஆட்சியாளர்களும், ஓட்டுக் கட்சிகளும் எந்தளவிற்குப் பன்னாட்டு நிறுவனங்களின் நலனைப் பாதுகாக்கும் ஏவல் நாய்களாக நடந்து வருகிறார்கள் என்பது அம்பலமாகும். ஆனாலும் என்ன செய்வது? எத்தனை முறை குச்சியை வைத்துக் கட்டினாலும், நாய் வாலை நிமிர்த்திவிட முடியாதே!

நன்றி: புதிய ஜனநாயகம்



Friday, June 18, 2010

தமிழ் இன்னிய அணி


பேராசிரியர் .சி.மௌனகுரு அவர்களின்
தமிழ் "இன்னிய"அணி

நேர்கண்டவர்: செ.ஸ்ரீகோவிந்தசாமி

கிழக்கில் அருகிவரும் தமிழ் பாரம்பரிய கலை வடிவங்களுக்கு புத்துயிர் அளித்து வருபவர்களில் பேராசிரியர் சி. மௌனகுரு ஒரு முன்னோடியாக விளங்கி வருகின்றார் என்றால் மிகையாகாது. அந்த அடிப்படையில் வரவேற்பு வைபவங்களில் இங்கு வழக்கமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பாடசாலை மாணவர்களின் 'பேண்ட்' வாத்தியக் குழுவுக்கு மாற்றீடாக தமிழ் கலாசார பாரம்பரிய ரீதியில் வாத்தியக் குழுவொன்றை பேராசிரியர் சி.மௌனகுரு அமைத்துள்ளார்.

தமிழ் 'இன்னிய அணி' என இது அழைக்கப்படுகிறது.

அண்மையில் நடைபெற்ற கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் போது இடம்பெற்ற இந்த வாத்தியக் குழுவின் இன்னிசையும், ஆட்டமும் பார்வையாளர்கள் பலரையும் கவர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் தமிழ் பாரம்பரிய இன்னிய அணிக்குழு (Group of Tamil Band) உருவானது பற்றி பேராசிரியரிடம் கேட்டபோது அவர் அளித்த பதில்கள் வருமாறு:

கேள்வி: இத்தகையதொரு வாத்தியக் குழுவை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தங்களுக்கு எவ்வாறு தோன்றியது?

பதில்: வாத்தியக் குழு என்று நீங்கள் கூறுவதை நாங்கள் 'இன்னியம்' என்று அழைக்கிறோம். இன்னியம் என்றால் பல இசைக் கருவிகளைக் கூட்டாக இசைத்தல் என்பது அர்த்தம். 'கூடுகொள் இன்னியம் கறங்க' எனப் புறநானூறு கூறும்.

காலனித்துவ சிந்தனைக்குள் கட்டுப்பட்டுக் கிடக்கும் நாம் மேற்கு நாட்டவரின் பழக்க வழக்கங்களை மேலானதாகக் கருதி விடுகிறோம். அவர்களைப் போல உடை, நடை, பாவனை இவை எல்லாம் புகுந்து நமது பாரம்பரியத்தையும் அடையாளத்தையும் அழித்தே விட்டன. அதில் ஒன்றுதான் நாம் பயன்படுத்தும் 'பேண்ட் வாத்தியம்'. 'பேண்ட் வாத்தியம்' என்றால் 'வெள்ளையன்ர பறைதானே' என்று கவிஞர் மகாகவி, கோடை நாடகத்தில் கூறுகிறார். வெள்ளையனின் பறைக்கு மாற்றீடாக நமது பறையைப் பாவித்தால் என்ன? என்ற எண்ணமே இதற்கான ஒரு தூண்டுதல்

.
எனது 20ஆவது வயதில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது கண்டி எல பெரஹராவில் ஓர் இன்னிய அணியை இரவு, நெருப்பு வெளிச்த்திற் கண்டேன்.

சிங்கள பெர (மத்தளம்), சங்கு என்பன முழங்க ஆட்டக் கோலங்களுடனும், அழகான ஆடை அணிகளுடனும் ஆண்களும் பெண்களுமாக ஆனந்தமாக அணி வகுத்து அவர்கள் சென்றமை ஒரு பரவசத்தை ஏற்படுத்தியது. இது நமது மண்ணிற்குரியது என்பது பிரத்தியேகமாகத் தெரிந்தது. அந்த அணி வகுப்பே தேசிய அணி வகுப்பாகக் காட்டப்பட்டமையும் சிறுபான்மை மக்களின் அடையாளங்கள் அதில் இல்லாமையும் அன்றே வேதனை தந்தன

.
இத்தகையதொரு பாரம்பரிய இன்னிய அணியை, இசையும், ஆடலும் கொண்டதாக ஈழத் தமிழ் மக்களுக்கு உருவாக்க முடியாதா? என்ற ஏக்கம் எழுந்தது. அது கனிந்து வர 40 ஆண்டுகள் சென்றன. கிழக்குப் பல்கலைக்கழகத்தில்தான் அது சாத்தியமாயிற்று

.

கேள்வி: இந்த இசைக் குழுவை, இன்னிய அணியை அமைக்கக் காரணம் என்ன?

பதில்: எமது நுண்கலைத்துறை வருடந்தோறும் உலக நாடகத் தினவிழா நடத்துவது வழமை. அதற்கு விருந்தினரை மேளதாளங்களோடு அழைப்பது மரபு. கிழக்கு மாகாணத்தில் மேளம்/ நாதஸ்வரம் பெரு வழக்கில் இல்லை. இங்குள்ளவை தமிழர் மத்தியில் மத்தளம், உடுக்கு, பறை, சங்கும், இஸ்லாமியர் மத்தியில் றபானும்தான். அத்தோடு கூத்து ஈழத் தமிழருக்குப் பொதுவான ஓர் ஆடல் மரபு. (இஸ்லாமியர் மத்தியிலும் கூத்துகள் ஆடப்பட்டமைக்குச் சான்றுகளுண்டு) இவ்வாத்தியங்களையும், ஆடல்களையும் பண்டைய உடைமுறைகளையும் வைத்து விருந்தினர்களை விழாவுக்கு அழைக்கலாம் என நினைத்தேன்

.
மண்ணோடு சார்ந்த வாத்தியம், உடை, ஆடல் என்பன தனித்துவமாக மேற்கு நாட்டவருக்கு மாறான ஓர் அடையாளம் காட்டும் என்பதும் இதை அமைக்க இன்னொரு காரணம்.


இம் முயற்சியில் தமிழர், முஸ்லிம்கள் வாழும் இடங்களிலுள்ள பாடசாலைகளும் மேற்கொண்டுள்ளன. முக்கியமாக வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சு முன்னாள் யெலாளர் சுந்தரம் டிவகலாவின் பணிப்பில் இம்முயற்சியில் முன்னமேயே ஈடுபட்டிருக்கிறது. ஆனால், அவர்கள் முற்றாக அந்நிய கலாசாரத்திலிருந்தும் தமிழரின் உயர் கலாசாரத்தினின்றும் விடுபடவில்லை. நாம் அனைத்துத் தமிழரினதும் கலாசாரத்தை (உடுக்கு,பறை) இணைத்தோம். இதுதான் வித்தியாசம்.

இதை அமைப்பதில் எமது நுண்கலைத் துறை விரிவுரையாளர்களான பாலசுகுமாரும், ஜெயசங்கரும் பெரும் தூணாக நின்றார்கள். அன்றைய இளம் விரிவுரையாளர்கள் பக்கத் துணையானார்கள்.

கேள்வி: இந்த இன்னிய குழுவில் இடம்பெறும் இசைக் கருவிகளின் பாரம்பரிய வரலாறு என்ன?

பதில்: இந்த இன்னியக் குழுவிலே பெரும்பறை, தப்பட்டை, றபான், உடுக்கு, மத்தளம், வணிக்கை எனும் தோல் வாத்தியங்களும் சிலம்பு, சிறுதாளம், பெருதாளம் போன்ற கஞ்ச வாத்தியங்களும் சங்கு, எக்காளம் போன்ற துளை வாத்தியங்களும் இடம்பெறுகின்றன. பெரும்பறை, தப்பட்டை என்பன கிழக்கு மாகாணத்தில் கோயில்களிற் சடங்குகளுக்கும், சித்திரைப் பெருநாள் போன்ற நாட்களில் வீடு தோறும் சென்று அடிப்பதற்கும் ஒரு காலத்திற் பாவிக்கப்பட்டன. இன்றும் பாவிக்கப்படுகின்றன. பல்வேறு வகையான தாளக் கட்டுகளும் அடிமுறைகளும் இவற்றிலுண்டு.


றபான் இஸ்லாமிய மக்கள் மத்தியில் வழங்கும் ஒரு தோற் கருவி. பக்கீர் பைத் பாடல்களில் அற்புதமாக இணைந்தொலிக்கும்.


உடுக்கு வருடம்தோறும் வைகாசி தொடக்கம் புரட்டாதி வரை கிழக்கு மாகாணம் எங்கும் நடக்கும். அம்மன் கோயில் பெருவிழாச் சடங்குகளில் ஒலித்து நாடி நரம்புகளை முறுக்கேற்றும்.


சுவணிக்கை என்பது தோலும் நரம்பும் இணைந்த உறுமும் ஒலி கொண்ட ஒரு வாத்தியம். இது முன்னாளில் கோயில்களிற் பாவிக்கப்பட்டதாக அறிகிறோம்.
சிலம்பு சிறு தெய்வக் கோயில்களில் தெய்வமாடுவோர் காலிலும், கையிலும் அணிந்து ஆடுவது. அதன் ஒலி கல்கல் என ஒலித்து ஒருவிதமான உணர்வைத் தரும். மத்தளம் கிழக்குமாகாணத்தில் கூத்துக்களில் பிரதான வாத்தியம். இதன் ஓசை காற்றில் கலந்து வருகையில் அற்புதமாயிருக்கும்.


சிறுதாளம் கூத்திற்கும் வசந்தனிற்கும் கரகத்திற்கும் காவடிக்கும் பாவிக்கப்படுவது. சங்கு கோயில்களில் ஊதப்படுவது. எக்காளம் அரசர் பவனியில் முன்னொரு காலத்தில் பாவிக்கப்பட்டது. இவை யாவும் கிழக்கு மாகாண தமிழர் முஸ்லிம் மக்கள் மத்தியில் பிரபலமான வாத்தியங்கள். அவர்கள் காதுகளுக்குப் பழகிப் போன வாத்தியங்கள். சாதாரண மக்களுடனும், மண்ணுடனும் இரண்டறக் கலந்துபோன மக்கள் வாத்தியங்கள் சாதாரண தமிழரின் வாத்தியங்கள்.


கேள்வி: எத்தகைய உடைகள் ஒப்பனைகள் இந்த இன்னிய அணிக்குழுவில் பயன்படுத்தப்படுகின்றன?

பதில்: இந்த இன்னிய அணியில் தமிழரது பாரம்பரிய மண்வானை மணக்க வேண்டும் என நாம் விரும்பினோம். வடக்கு கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு தயாரித்த இன்னிய அணியில் வரும் சர்வாணியும், தொப்பியும் எமக்குரியதல்ல. அவை வட இந்தியச் சாயலும் ஆங்கிலச் சாயலும் பொருந்தியவை

நாம் தமிழரின் பாரம்பரிய உடையைத் தேடினோம். அந்நியக் கலாசாரம் ஏற்படுமுன் நம்மவர் என்ன உடை அணிந்திருந்தனர்? நமக்கு ஒரு பழையபடம் கிடைத்தது. அதில் ஒரு தமிழ் அதிகாரியும் (போடியாரும்) மனைவியும் இருந்தனர். 1905ஆம் ஆண்டுப் படம் அது. அந்த உடையினையும், உடுக்கும்பாங்கினையும், தலைப்பாகையினையும் சற்று நவீன முறைப்படி அமைத்தோம்.


இதனை
அமைப்பதில் எமக்கு மிகுந்த துணை புரிந்தார் ஓவியர் கமலா வாசுகி அவர்கள். ஆடைகளுக்கான நிற ஒழுங்கையும் ஆடையையும் வடிவமைத்தவர் அவர்.

அதிகாரியான போடியார் அவரது மனைவி, அவரது மகள் அணிந்திருந்த மணிகளாலான மாலைகள், கையிலே கட்டும் தாயத்து, கைகளில் கடகம், காதுகளுக்குக் கடுக்கன் என்பனதான் ஆபரணங்கள். இவற்றை நாம் கிடைத்த சின்னக் காயங்களைக் கொண்டு செய்தோம். கடையில் வாங்கினோம்.
போடியாரின் தலைப்பாகை அழகாக ஒழுங்குபடுத்தப்பட்டு புதுத் தலைப்பாகையாக மாறியது.


கேள்வி: இன்னிய அணியிற் கையாளப்படும் தாளம், ஆட்டம் பற்றிய நுட்பங்கள் யாவை?



பதில்: இந்த இன்னிய அணி 1997 இல் ஆரம்பத்தில் மரபுவழி அண்ணாவிமார் 10 பேரைக் கொண்டு உருவாக்கப்பட்டது. அவர்கள் அன்று மத்தளம் மாத்திரமே பாவித்தனர். 'ததித்துளாதக ததிங்கிணதிமிதக தாதெய்யத்தாதோம்' என்ற தென்மோடித் தாளக்கட்டை அடித்தபடி அவர்கள் ஊர்வலத்தின் பின்னால் வந்தனர். 1998 இல் மாணவரை மாத்திரம் கொண்டதாகவும், ஆடை அணிகளுடனும் இது வடிவமைக்கப்பட்டதுடன் 1998 இல் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவுக்கு பாவிக்கப்பட்டது. 1999, 2000 ஆண்டுகளில் மேலும் பல ஆட்டங்கள் புகுத்தப்பட்டன.


'தகதகதகதிகுதிகுதிகு தளாங்கு தித்தக தக ததிங்கிணதோம்' என்றதும், 'தந்தத் தகிர்தத் தகிர்தத்தாம் திந்தக் திகிர்தத் திகிர்தத் தெய்' என்ற வடமோடித் தாளக்கட்டுகளும் வீசாணம், பொடியடி, நடை போன்ற வடமோடி ஆட்டக் கோலங்களும் புகுத்தப்பட்டன. நீண்டதொரு ஊர்வலத்திற் செல்லும் இவர்கள் வடமோடி, தென்மோடிக் கூத்தர் போல கைகளை அசைத்துக் கொண்டும், நடந்து கொண்டும் ஆடிக் கொண்டும் செல்வார்கள்.

2002ஆம் ஆண்டில் இன்னும் சில ஆட்ட நுட்பங்களை இணைத்தோம். கூத்தர்போல சிலருக்கு முழங்காலிலிருந்து புறங்கால் வரை சதங்கைகளும் அணிந்தோம்.

ஒவ்வொரு வருடமும் ஒரு சிறு முன்னேற்றம்.

பின்னாளில் கொடி ஆலவட்டம் எல்லாம் இதில் இணைத்துக் கொண்டோம்.


கேள்வி: இந்த இசைக் குழுவை மேலும் அபிவிருத்தி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ன?



பதில்: எமது நோக்கம் தூர நோக்காகும். நாம் இன்று பயன்படுத்தும் வாத்தியங்கள் ஈழத்தமிழருள் சாதாரண மக்கள் மத்தியில் பயில் நிலையிலுள்ள வாத்தியங்களாகும். தவில் (மேளம்), நாதசுரம், வயலின், புல்லாங்குழல் என்பன சாஸ்திரிய சங்கீதத்திற்குப் பாவிக்கப்படுகின்றன.


பரதநாட்டியத்தில் அடவுகளும், ஜதிகளும் ஆடல் முறைகளும் உள்ளன. அவற்றையும் இதனுடன் இணைக்கும் பொழுதுதான் இவ்வின்னிய அணி முழுமை பெறும். அத்தோடு கிழக்கு மாகாணத்தில் வாழும் இஸ்லாமியர் மத்தியில் வழங்கும் களிகம்பு அடி அசைவுகளும் இணைக்கப்பட வேண்டும்.


பெரும்பறை, சிறுபறை, தப்பட்டை, மேளம், றபான், உடுக்கு, மத்தளம், நாதசுரம், சொர்ணாளி, புல்லாங்குழல், சிறுதாளம், பெருதாளம், மிருதங்கம், சங்கு, எக்காளம், சிலம்பு, கேண்டி, அம்மனைக்காய், வணிக்கை, கூத்து, பரதம், கழிகம்பு என இன்னிய அணியும் ஊர்வலமும் என்று அமைகிறதோ அன்று அது முழுமை பெறும்


. இவ்வின்னிய அணியைப் பார்க்கும்போது அனைவரும் இது எம்மது என்ற உணர்வு பெற்று அதனோடு ஒன்றிவிட வேண்டும் என்பதே எமது குறிக்கோள்.
இந்த அளவுக்காவது பல்கலைக்கழக மாணவரைக் கொண்டு வர நாம் மிகுந்த சிரமப்பட்டோம்.


பறை, உடுக்கு, தப்பட்டை, மத்தளம், றபான் என்பன படிப்பறிவில்லாத மக்கள், பின்தங்கிய மக்கள் பாவிக்கும் வாத்தியம் என அதனைத் தூக்கவும் பாவிக்கவும் வர மாணவர் தயங்கினர்


. காலனித்துவக் கல்வியும் மேற்கு மயமோகமும் அவர்கட்கு பேண்ட், றம்பட், எக்கோடியன், கிட்டார் போன்ற வாத்தியங்களையும், வயலின், வீணை, மிருதங்கம் போன்ற வாத்தியங்களையுமே உயர்ந்தவையாகக் கருதும் மனோபாங்கை ஏற்படுத்தியிருந்தன. அந்த மனத் தடையை நாம் விரிவுரைகள், கலந்துரையாடல்கள், மூலம் உடைத்தோம்.


பேராசிரியர் உடுக்கு அடிக்கிறார் என்ற பல்கலைக்கழகக் கல்விமான்களின் பகிடியை நாங்கள் பொருட்படுத்தவில்லை.

மாணவர் தெளிவு பெற்றனர். எம் பின்னால் வந்தனர்.

காலப் போக்கில் அவர்கள் எம்மையும் முந்திச் சென்றனர்.

நாம் இப்போது அவர்களின் பின்னால்.

முதலாம் கட்டத்தைத் தாண்டி மக்கள் வாத்தியங்களை இசைக்க மாணவரைப் பயிற்றவுள்ளோம். ஏனைய வாத்தியங்களை இசைத்துக் கொண்டு வீதியில் இறங்கும் மனோபக்குவத்தையும் வரலாற்றுக் கடமையையும் விபுலானந்த இசை நடனக் கல்லூரியில் சாஸ்திரீய சங்கீதம் பயிலும் மாணவரை உணரப்பண்ண வேண்டும்.

இஸ்லாமிய மாணவர்க்கு இதனை உணர்த்தி றபானுடனும், கழிகம்பு ஆட்டத்துடனும் அவர்களையும் களத்தில் இறக்க வேண்டும்.

இதனிடையே பல சவால்களையும் எதிர்கொள்ள வேண்டும். பல ஏளனங்களையும் எதிர்பார்ப்புகளையும் எதிர்கொள்ள வேண்டும். நம்பிக்கையோடும் அர்ப்பணிப்போடும் நாமும், நமது விரிவுரையாளர்களும் மாணவர்களும் இதில் ஈடுபடுகிறோம்.

ஏற்பது ஏற்காது விடுவது சமூகத்தைப் பொறுத்தது.


கேள்வி: பேண்ட் வாத்தியத்தைக் கை விடும் படியான நிலைமையை தங்கள் இன்னிய அணி உருவாக்குமா?

பதில்: எனக்கென்ன தெரியும்? பல்கலைக்கழகத்தின் பாரிய பணி, ஆராய்ச்சி செய்வதும் அதனைச் சமூக நலனுக்குப் பாவிப்பதும்தான். திட்டமிட்டு பிரக்ஞைபூர்வமாக இதனை உணர்ந்தோரும், வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சும் வளர்த்தால் பாடசாலை மூலம் இது பரவ வாய்ப்புண்டு. பாடசாலைகளில் இரண்டு பேண்ட் இருக்க வேண்டும். ஒன்று மண் சார்ந்த பேண்ட்(Indigenous Band) , அடுத்தது வழமைபோல் மேற்கத்தைய பேண்ட் (Western Band) என்ற கட்டளையைப் பாடசாலைகட்கு அமைச்சு பிறப்பிக்க வேண்டும். செய்வீர்களா?


படித்தவர்களின் கண்களைத் திறப்பது தானே இன்று பெரும் கஷ்டமாக இருக்கிறது.



கேள்வி: இது விடயமாக தாங்கள் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புபவை என்ன?

பதில்: பகிர்ந்து கொள்ள நிறைய உண்டு.

ஒன்று இதனை உருவாக்க நாங்கள் பட்ட பெரும் கஷ்டம் எதிர்ப்பு எங்களது எண்ணக் கருவை யாரும் முதலில் புரிந்து கொள்ளவில்லை

. பறையையும், உடுக்கையும் மத்தளத்தையும் கூத்தாட்டத்தையும் கண்டவுடன் பலர் பதறிவிட்டனர். திடுக்குற்று விட்டனர். இதென்ன நாம் முன்னர் பார்க்காத ஒரு ஊர்வலம் என்று அவர்கள் எண்ணியிருக்க வேண்டும்.

ஏற்கனவே நான் கூறியபடி மாணவர்களுக்கு இதனைப் புரிய வைத்து உள்ளிழுப்பது பெரும்பாடாகி விட்டது. இன்றைய சினிமாவுக்குள்ளும், தொலைக்காட்சிக்குள்ளும் ஊறி அதி நவீன ஆட்டங்களை ரசிக்கும் குழாத்தை எப்படி அதி பழைய கருத்துருவுக்குக் கொண்டு வருவது. எனினும், நாம் வெற்றி பெற்றோம் எமது உழைப்பு வெற்றி தந்தது.

இளம் வயது லட்சிய வேகம் கொண்டது.

தறிகெட்டு அது ஓடினாலும் இலட்சியங்களைக் காணும் போது அவற்றை அது பற்றிப் பிடித்துவிடும்.

எமது மாணவர் லட்சியத்தைக் கண்டு கொண்டனர். பற்றிப் பிடித்துக் கொண்டனர்.

இத்தனைக்கும் மேலால் எமக்கு சில விரிவுரையாளர்களிடமிருந்து எதிர்ப்பு வந்தது.

மூன்றாம் தர சினிமாப் பாடலை ஊதியபடி வரும் நாதசுர ஊர்வலத்தை வரவேற்கும் இவர்கள் பாரம்பரிய கூத்துத் தாளக் கட்டுக்களுடனான மத்தளத்தை வரவேற்க ஆயத்தமாயில்லை

.
பறை கிழக்கு மாகாணத்தின் மங்கள ஒலியும் கூட. ஒரே பறையில் அமங்கல ஒலியும் வாசிக்கப்படும். மங்கள ஒலியும் வரும். செத்த வீட்டுக்கு அமங்கல அடி. கோயிலுக்கு மங்கள அடி. யாழ்ப்பாணத்தின் சில கோயில்களிலும் பிரசித்தி பெற்ற வற்றாப்பளை அம்மன் கோயிலிலும் வாசிக்கப்படுவது மங்கலப் பறைதானே?

பறை ஒலி முன்னுக்கு வருவதா என்று சிலர் பதறினர். தமிழ் மரபில் பறையொலியுடன்தான் பவனிகள் நிகழ்ந்தன என்பதை அறியாத இவர்கள் தமிழ் மரபு வேறு பேசினர். தமிழரிடம் காணப்படும் சமூக ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுத்தி விட்ட சிந்தனையோட்டம் அது. இன்னும் விடுதலை பெற விரும்பாத மனோபாவம் அது.

இன்னிய அணியின் ஆடை அணிகளையும் மாணவரின் வெற்றுடல்களையும் கண்ட சிலர் "எங்களை கெதியாக கோவணத்துடன் தான் பட்டமளிப்புக்கு வரச் சொல்வார்களோ? என்று கேலி பேசினர்.

இவர்களின் பெற்றோர்களும் பாட்டன்மார்களும் கோவணத்துடன்தான் பயிர்களுக்குத் தண்ணீர் ஊற்றுகிறார்கள். அதனைப் பெருமையாகக் கருதும் தன்னம்பிக்கை அற்றவர்கள் இவர்கள். தாம் நடந்து வந்த பாதையினை மறைக்கும் கல்வியைத்தான் இவர்கள் கற்றுள்ளார்கள்.

இதனைத் தான் காலனித்துவக் கல்வி என்று முன்னர் குறிப்பிட்டேன்.


இரண்டாவது நான் பகிர்ந்து கொள்ள விரும்புவது ஊடகங்கள் இதற்கு முக்கியத்துவமளிக்காமை.

தமிழகத்திலிருந்து வரும் தரம் கெட்ட ஆட்டங்களுக்கு முக்கியத்துவம் தரும் ஊடகங்கள் இப்பாரம்பரிய மக்கள் மண் சார்ந்த ஆட்டங்கள், அணிகளுக்கு முக்கியமளிப்பதில்லை.

மூன்றாவதாக நான் பகிர விரும்புவது இவ்வின்னிய அணி பிரதே பண்பு சார்ந்தது என்றும் உடுப்பு அணி, ஆட்டம் என்பவற்றில் சிங்களச் சாயல் கொண்டுள்ளது என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டமை.

அப்படியல்ல. இதில் கையாளப்படும் வாத்தியங்கள் வடக்கிலும் கிழக்கிலும், வட கிழக்கிலும் பயில் நிலையிலிருந்தவை ஆட்டங்களும் அவ்வாறே, உடையும் அவ்வாறே என நாம் மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் விளக்கவேண்டியிருந்தது.


நான்காவது பகிர விரும்புவது இவ்வின்னிய அணியை 1998 இல் நாம் பட்டமளிப்பு விழாவில் முதன்முறை செய்தபோது தமிழ் நாடு கோயம்புத்தூர் பல்கலைக்கழகத்திலிருந்து வந்த பேராசிரியர் ஆரோக்கியசாமி இதனைப் பார்த்து வியந்து "தமிழ் நாடு செய்யாததை உங்கள் பல்கலைக்கழகம் செய்துள்ளது என்று பாராட்டியது, ஊக்கமளித்தது.


2003 இல் சர்வதே நாடக விழா நடந்தபோது அதில் கலந்துகொண்ட மான்செஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர்களும், விரிவுரையாளர்களும், சிங்களப் புத்திஜீவிகளும், கலைஞர்களும் இன்னிய அணியின் ஊர்வலம், ஆட்டம் என்பனவற்றை வியந்தும் செழுமையான கலாசார மரபு எனப் பாராட்டியதும், பாரதியின் வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது.

தரமான புலமையெனில் பிற நாட்டார் இதை வணக்கம் செய்ய வேண்டும். இல்லையா?


கேள்வி: பௌத்த சிங்கள கலாசாரத்தின் சாயலும் இன்னிய அணியிலும், ஆட்டத்திலும் இருப்பதாகக் கூறப்பட்டது. இதைத் தவிர்க்க முடியுமா?



பதில்: பௌத்த சிங்கள கலாசாரம் என்றால் என்ன என்று கூற முடியுமா?

மத்தளம், உடுக்கு, பறை, வணிக்கை, தாளம், சங்கு, றபான், சிலம்பு, சதங்கை என்பன பௌத்த சிங்கள கலாசாரமா?

அது தமிழர் மத்தியில் முன்னாளில் இருந்ததல்லவா?

பௌத்த மதத்தின் வருகையின் முன் இலங்கையில் வாழ்ந்த தமிழர் மத்தியிலும், சிங்களவர் மத்தியிலும் இவ்வாத்தியங்கள் இருந்தன.

பண்பாடு, பழக்க வழக்கம், உடை, ஒப்பனை, ஆடை அணிகளிலும் ஒற்றுமைகள் இருந்தன. ஒன்றிலிருந்து ஒன்று பெற்றுக் கொண்டன. அதனால், இரண்டும் செழுமை பெற்றன.

உடுக்கு சிங்களத்திற்கு 'உடுக்கி' என்ற பெயரில் சென்றது.

மத்தளம் அங்கு 'தமிழ பெர' என்றே அழைக்கப்படுகிறது.

வாசிக்கப்படுகிறது. தமிழர் மத்தியில் இருந்த சொர்ணாளி அங்கு 'ஹொரணை' என்று அழைக்கப்படுகிறது

. கூத்தாட்டத்திற்கும், கூத்து அசைவுகளுக்கும், நடைக்கும் கண்டிய நடனம், சப்பிரகமுவ மூவா நடனத்திற்குமிடையே நிறைந்த ஒற்றுமைகளுண்டு

.
சரத் சந்திரா தனது "'மனமே! சிங்கபாகு' நாடக ஆட்டமுறைகளை தமிழ்க் கூத்திலிருந்து பெற்றதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

எமது இன்னிய அணியின் உடை அமைப்பும் ஆடை அணிகளும் மட்டக்களப்பின் போடியார் குடும்பத்தினுடையது என்பதை முன்னமேயே விளக்கியுள்ளேன்.

ஒரு நாள் இன்னிய அணி வருகையில் ஒரு மாணவன் என்னைப் பார்த்து 'சிங்களச் சாயல் தெரிகிறதே' என்றான்.

அவனிடம் நான் 'தம்பி இங்கு வா' என்று அழைத்து 'தாளத்தைக் கவனி' என்றேன். 'ததித்துளாதக ததிங்கிண திமிதக' என்ற தென்மோடித் தாளக் கட்டுக்களை அவதானிக்கச் சொன்னேன். 'தந்தத் தகிர்தத் தகிர்த்தா' என்ற வடமோடித் தாளக் கட்டுக்களை அவதானிக்கச் சொன்னேன். 'தகதகதக திகு திகு திகு' என்ற தாளக் கட்டுக்களுடன் அவர்கள் வருவதைக் காட்டினேன்.

'இது நமது தாளக்கட்டு' என்று வியப்புடன் அவன் கூறினான்.


'மத்தளமும், உடுக்கும், வணிக்கையும், சிலம்பும், சங்கும் சிங்களச் சாயலா?'


என்றேன். 'இல்லையே' என்றான்.


'உடுப்பு உனது பாட்டனார் போட்ட உடுப்படா பையா' என்றேன்.


எம்மிடமிருந்து இன்னொரு இனத்துக்குச் சென்றதெல்லாம் எம்முடையது அல்ல என்று கூறுகிற கலாசார வறுமைதான் எம்மிடமுள்ளது.


எம்முடையது எது என்று எம்மவர்க்கே தெரியாத அவலம்.


அறிவாளிகளின் நிலையே இது. ஆனால், நிச்யமாக சாதாரண பொதுமக்களுக்கு அது சிங்களச் சாயலாகத் தெரியாது. ஏனெனில் அவர்கள் அந்தச் சூழலுக்குள் வாழ்பவர்கள். அவர்களிடமிருந்துதான் அறிவாளிகள் என்போர் கற்றுக் கொள்ள வேண்டும்.

இம்முறை பட்டமளிப்பு விழாவுக்கு இவ்வின்னிய அணியை எமது புதிய உபவேந்தர் பேராசிரியர் இரவீந்திரநாத் உபயோகித்தமை அவர் மீது எமக்கு மதிப்பை உயர்த்தியதுடன், நம்பிக்கையையும் தந்தது.

ஆராய்ச்சியினால் கண்ட முடிவினை நாம் அமுல்படுத்துகிறோம். உபவேந்தர் அதன் தன்மை கண்டு ஆதரவு தருகிறார்.

நான் தற்போது விடுமுறை லீவில் நிற்கிறேன். இவ்வின்னிய அணியை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தவரும், எமது சகாவும் இன்றைய கலைப் பீடாதிபதியுமான பாலசுகுமார். இதனை இம்முறை முன்னின்று நடத்தினார்.

இதனை நடத்திச் செல்ல இன்னொருவர். இதன் தன்மையையும் தேவையையும் தெரிந்த அறிந்த ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணம் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருகிறது.

பகிர்வு:மௌனகுருஅனுபவங்கள் -தாஸ்-