Monday, September 02, 2019

எங்கள் தோழர் தங்கராசா அண்ணா

-கரவைதாசன்- 
தோழர் தங்கராசா அவர்களின் நினைவுகளை எங்கிருந்து தொடங்குவது ?
ஒவ்வொன்றாக அவரது தோழர்கள் வே.பரமகுரு, கே.எஸ்.இரத்தினம், சீ .செல்லக்கிளி, ஆ.சுந்தரம் என இன்னும் பலர்  அந்த மண்ணில் உதிர்ந்தபோதும் ஒற்றைப் பனைமரமாக அந்தக் கிராமத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் தனித்துவமிக்க தோழராக அவர் வலம் வந்தார். கோட்பாட்டு ரீதியில் தனது கட்சியின் கோட்ப்பாடுகளுடன் அவர்  தன்னை அடையாளப்படுத்தியபோதும். சமூகத்தில் தானும் ஒருவராக தன்னை இணைத்துக்கொண்டு அவர் தோப்பாகவே வாழ்ந்தார். ஒரு சோஷலிசவாதிக்குரிய அரிய பண்புகளுடன்  கிராமத்தில் எரிந்துகொண்டிருக்கும் எந்த  முதற் பிரச்சினையிலும் சிநேகமாக   தீர்வு தேடும் ஒருவராக அவரை நான் அடையாளம் கண்டேன்.  அது கோவிலோ , சுடுகாடோ, கழகங்களோ அல்லது பாடசாலையோ பொதுச் செயற்பாடுகளில் பகை முரண்பாடுகளை களைந்து சினேகா முரண்பாடுகளை கண்டறிந்து அவற்றை  இளைஞர்  மத்தியில் பேசு பொருளாக்கி  ஐக்கியத்தினை  வலியுறுத்தும் நல்ல முன்னோடியாக அவரைக் கண்டேன். அவர் இல்லாத கிராமத்தில் கிராமத்தின் வளர்ச்சியில்  எனது நம்பிக்கைகளில் நான் பயம் கொண்டுள்ளேன்.