Sunday, April 21, 2013

இளையதலைமுறைக்கு புதிய வாசல்






ஆசிரியர் சிதம்பரப்பிள்ளை அவர்களின் நினைவாக


-இராகவன்-
காலச்சுவடு என்ற பெயரை 2001 பிற்பகுதியில் நண்பர் குப்பிழான் ஐ. சண்முகன் வாயிலாகத்தான் நான் முதன் முதலாகக் கேள்வியுற்றேன். 1988 காலப் பகுதியில் குப்பிழான் ஐ. சண்முகன் அவர்கள் தமிழகத்திற்கு வந்து சுந்தர ராமசாமி வீட்டில் தங்கியிருந்ததாகவும் தான் இதுவரை சந்தித்த மனிதர்களுள் கேண்மை பூண்டு விருந்தோம்புவதில் சுந்தரராமசாமி போல் ஒருவரை எடுத்துக்காட்ட இயலாதென்றும் கதை கதையாகச் சொல்லி சுந்தர ராமசாமியின் மகள் தைலாவின் ஒளிப்படத்தையும் எனக்குக் காட்டியிருக்கிறார். எனினும் நான் காலச்சுவடு இதழைக் கண்டது தேவதாசனின் ‘சலன சித்திரம்’ அலுவலகத்தில்தான். தேவதாசன் ஈழத்துத் தமிழ் சினிமாவை வளப்படுத்தப் போகிறேனென ‘சலன சித்திரம்’ அமைப்பைத் தொடங்கினார். அப்போதுதான் ‘பாரதி’ திரைப்படம் வெளியாகியிருந்தது. தேவதாசன் ‘பாரதி’ திரைப்படம் குறித்து ஈழம் தமிழகம் மற்றும் புலம்பெயர் சஞ்சிகைகளில் வெளிவந்த விமர்சனக் கட்டுரைகளைத் தொகுத்து ‘பாரதி - திரைப்பட விமர்சனத் திரட்டு’ என்ற நூலை சலன சித்திர வெளியீடாகக் கொண்டுவந்திருந்தார். அந்நூல் குறித்துக் காலச்சுவடில் கண்ணன் ‘சலனபாரதி’ என்ற தலைப்பில் ஒரு விமர்சனக் குறிப்பை எழுதியிருந்தார். அக்குறிப்பு வெளியான இதழையே தேவதாசன் சலன சித்திரம் அலுவலகத்தில் பார்வைக்காக வைத்திருந்தார். அவ்விதழை எடுத்துப் புரட்டிப் பார்த்தபோது வடிவமைப்பும் உள்ளடக்கமும் அதுவரை நான் பார்த்திருந்த இதழ்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது. எனினும் அவ்விதழை வீட்டிற்கு எடுத்துச்சென்று வாசிக்கத் தேவதாசன் அனுமதிக்க வில்லை.2002 பிற்பகுதியில் பருத்தித்துறைக் காணிப் பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் நண்பர் உமாகாந்தன் ஒருநாள் தமது அலுவலகத்திற்கு காணியுறுதி அலுவலாக ஒருவர் வந்ததாகவும் அவர் பெயர் குலசிங்கம் என்றும் அவர் தீவிர இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடுடையவராகத் தோன்றுவதாகவும் விரும்பினால் புலோலியிலுள்ள தனது வீட்டிற்கு வரும்படி சொன்னதாகவும் என்னிடம் கூறினார். ஒருநாள் சனிக் கிழமை நானும் உமாகாந்தனும் புலோலியிலுள்ள குலசிங்கம் வீட்டிற்குப் போனோம். வீட்டில் ஒரு நூலகமே வைத்திருந்தார். யாழ் மாநகரசபை நூலகத்தில் கூட இல்லாத நூல்கள் எல்லாம் அந்த நூலகத்தில் இருந்ததைக் கண்டு பிரமிப்பிலாழ்ந்தோம். அங்கே காலச்சுவடு இதழ்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டோம். அவ்விதழ்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் விரும்பினால் வாங்கிக்கொள்ளலாம் என்றும் குலசிங்கம் சொன்னார். அப்போது எனக்கு வேலை இல்லை. அதனால் கையில் பணப்புழக்கமுமில்லை. ஆனால் உமாகாந்தனின் நிலமை வேறுவிதமானது. அதனால் 500ரூபா கொடுத்து 50 காலச்சுவடு இதழ்களைக் குலசிங்கத்திடம் வாங்கினார். காலச்சுவடு இதழொன்றில் குலசிங்கத்தின் நேர்காணலும் வெளியாகியிருந்தது. இவ்விதழை குலசிங்கம் எங்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார். அவரிடம் வாங்கிய 50 இதழ்களையும் ஆளுக்கு 25 எனப் பிரித்து வாசித்துப் பரிமாறிக்கொள்ளத் தீர்மானித்தோம்.

Thursday, April 18, 2013

சீனா புதிய சவால்கள்- புதிய தலைவர்கள்


-மருதன்-
ஒரு பக்கம் பராக் ஒபாமாவின் இரண்டாவது பதவிக்காலம் தொடங்கியிருக்கிறது. மற்றொரு பக்கம், சீனாவில் ஹூ ஜிண்டாவ் தனது இரண்டாவது பதவிக்காலத்தை முடிக்கும் தருவாயில் இருக்கிறார். இந்தக் கட்டுரை சீனாவின் புதிய தலைமை குறித்தும் அந்நாடு எதிர்கொண்டுள்ள முக்கியப் பிரச்னைகள் குறித்தும் சுருக்கமாக ஆராய்கிறது.
கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு
சீனாவின் பதினெட்டாவது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு கடந்த நவம்பர் 14ம் தேதி நடந்து முடிந்தது. 1.4 பில்லியன் சீனர்களை ஆளப்போகும் ஒரு புதிய தலைமையை சீனா இந்த மாநாட்டில் அறிமுகம் செய்துவைத்துள்ளது. சீனாவின் உயர்ந்த அதிகார மையமான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ ஸ்டாண்டிங் கமிட்டியில் இந்த முறை ஏழு பேர் இடம்பெறுகிறார்கள். சீனா முழுவதிலும் இருந்து திரண்டு வந்த 2200 பிரதிநிதிகள் இவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.  பத்தாண்டுகள் சீனாவை வழிநடத்திச் சென்ற ஹூ ஜிண்டாவின் அதிபர் பதவிக்காலம் மார்ச் 2013ல் முடிவடைகிறது. புதிய அதிபராக ஜி ஜின்பிங் அப்போது பொறுப்பேற்பார்.

Sunday, April 07, 2013

லண்டன் இலக்கியச்சந்திப்பு 40

லண்டன் இலக்கியச்சந்திப்பு 40 அமர்வு இரன்டு 7.04.2013

Wednesday, April 03, 2013

மெளனக்கடலில் ஒரு கல் -ஆனந்தவிகடன்


-டி.எல்.சஞ்சீவிகுமார்-


ஒரு படைப்பாளியின் பார்வையில்... ஒரு சாமானியனின் பார்வையில்... ஓர் இயலாமைவாதியின் பார்வையில்... ஈழ மக்களின் வலியை, தனுஷ்கோடி மீனவனின் துயரத்தை ஆவணப்பட மாக்கி இருக்கிறார் இயக்குநர் லீனா மணிமேலை. 



ஈழப் போரின் இறுதியில் உயிருக்குப் பயந்து தமிழகத்துக்கு அகதிகளாகத் தப்பி வரும் ஈழத் தமிழர்கள் ஒரு பக்கம், இந்தியாவிலேயே இருந்தும்கூட உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத மீனவத் தமிழர்கள் இன்னொரு பக்கம் என இரு நிலப்பரப்பு மக்களின் வாழ்வும் வலி யும்தான் கதை. ஈழத் தமிழனின் ரத்தமும் தனுஷ் கோடி மீனவனின் ரத்தமும் ஒன்றாகக் கலந்து நீலம் மறைந்து நிறம் மாறும் வங்காள விரிகுடா தான்... 'செங்கடல்’!

படப்பிடிப்புக்கு அனுமதி மறுப்பு, சென்சார் பிரச்னை என பல பிரச்னைகளைத் தாண்டி மேல் முறையீட்டு ஆணையத்தின் தலையீட்டால், 'பொது இடங்களில் திரையிடலாம்’ என்று அனுமதி வாங்கி வெற்றிபெற்றிருக்கிறார் இயக்குநர் லீனா மணிமேகலை.

Monday, April 01, 2013

BBC சுசரித்த கம்லத் அவர்கள் மரணம்


இலங்கையின் பிரபலமான மொழியியலாளரும் எழுத்தாளருமான சுசரித்த கம்லத் அவர்களின் மரணம் இலங்கையின் இலக்கிய உலகுக்கு பெரும் இழப்பு என்று பலரும் கூறியுள்ளனர்.
சனிக்கிழமையன்று காலமான அவரது இறுதிச் சடங்குகள் திங்கட்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளன.
ஆங்கில-சிங்கள மொழி அகராதியை மேம்படுத்தியவர் என்கிற பெருமையும் அவருக்கு உண்டு.
மார்க்ஸிய இலக்கிய திறனாய்வை சிங்கள் மொழியில் அறிமுகம் செய்தவர் இவரே என்று கூறுகிறார் அவருடன் யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர் எம். ஏ. நுஃமான்.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வந்ததால், அவர் சிங்கள ஏகாதிபத்தியவாதிகளின் எதிர்ப்பையும் சந்தித்திருந்ததாகவும் பேராசிரியர் எம். ஏ. நுஃமான் கூறியுள்ளார்.
சுசரித்த அவர்களால், பிபிசி சிங்கள சேவையில் 15 வருடங்களாக தொடர்ந்து நடத்தப்பட்ட ''ஹீ மினி ஆர'' என்னும் சிங்கள பாடல் வரிகளின் இலக்கியம் பற்றிய நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக திகழ்ந்த ஒன்றாகும்.

சாதியமைப்பு பற்றிஓர்ஆவணப்படம்

-மாதினி -விக்னேஸ்வரன்- 

இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள சாதியமைப்பு பற்றி விரிவாக இந்த ஆவணப்படம் பேசாவிட்டாலும் ஓரளவுக்கு பேசியுள்ளது என்றே கூறலாம் சாதியமைப்பினால் தனித் தனி கோயில்கள் வெவ்வேறான சமூகம் என பிரிக்கப்பட்டுள்ளதை இந்த ஆவணப்படம் எடுத்துக்காட்டியுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக இந்து மன்றத்தினால் பல்கலைக்கழக பீடங்களுக்கு நடாத்தப்பட்ட ஆவணப்படப்போட்டியில் முதலாம் இடத்தையும் சிறந்த வசன அமைப்புக்காக பரிசும் பெற்றுள்ளது


 Religion is for man Man is not for religion this documentary film is based on caste system & Hinduism.

லண்டன் இலக்கியச்சந்திப்பு40