Wednesday, May 30, 2012

இலங்கையில் தமிழ் இலக்கியம் சார்ந்த மாநாடுகளை தமிழகம் ஏன் புறக்கணிக்கிறது?

International Tamil Writers Forum
சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்
 P.O.BOX 350,Craigieburn,Vic-3064 ,AUSTRALIA T.Ph: 00 61 3 9308 1484
                            E.Mail:international.twfes@yahoo.com.au
ஊடக அறிக்கை:

இலங்கையில் தமிழ் இலக்கியம் சார்ந்த மாநாடுகளை தமிழகம் ஏன் புறக்கணிக்கிறது?
  
போருக்குப்பின்னர் ஈழத்தமிழ் இலக்கியம் உயிர்ப்புப்பெறவேண்டாமா?
இலக்கிய உறவுக்கு நீட்டும் கரத்தை துண்டிக்கவேண்டாம் !
சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் அமைப்பாளர் முருகபூபதி அறிக்கையூடாக வேண்டுகோள்.
murugapoobathyஇலங்கையில் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் சார்ந்த எந்தவொரு விழாவோ ஆய்வரங்கோ அல்லது மாநாடோ நடைபெற்று அவற்றுக்கு தமிழக எழுத்தாளர்களை தமிழ் அறிஞர்களை அழைத்தால்  முதலில் தமிழ்நாட்டிலிருந்தே  எதிர்ப்புக்குரல் வந்துவிடுகிறது.
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் போர் முடிவடைந்ததைத்தொடர்ந்து போர்க்குற்றம் நிகழ்ந்த இலங்கையில்; தமிழ்மொழி சார்ந்த ஒன்றுகூடல்களை தமிழ்நாட்டில் சந்தேகக்கண்கொண்டு பார்ப்பது வழக்கமாகிவிட்டது.இலங்கையில் கொழும்பில் நடக்கும் எந்தவொரு பொது நிகழ்ச்சியும் இலங்கை அரசின் ஆதரவுடனும் ஆசியுடனும்தான் நடப்பதாக கற்பனைசெய்துகொண்டு அறிக்கை விடுவதும் வழக்கமாகிவிட்டது.
2011 ஆம் ஆண்டு சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் கொழும்பில் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடத்தவிருந்தவேளையிலும் தமிழகத்திலிருந்து எதிர்ப்புக்குரல் ஓங்கி ஒலித்தது.எனினும் குறிப்பிட்ட மாநாட்டில் சில எழுத்தாளர்கள் உட்பட சில  சிற்றிதழ் ஆசிரியர்களுமாக  சுமார் ஐம்பதுபேரளவில் தமிழ்நாட்டிலருந்து வந்து கலந்து சிறப்பித்தனர்.
குறிப்பிட்ட மாநாடு தொடர்பான முதலாவது ஆலோசனைக்கூட்டம் கொழும்பு தமிழச்சங்கத்தில் 2010 ஜனவரி முதல் வாரம் நடந்தது. தமிழக சிற்றிதழ்கள் சிலவற்றிலும் நடைபெறவிருக்கும் மாநாடு பற்றிய செய்திகள் வந்தபின்பு, சுமார் ஆறுமாதங்கள் கடந்த நிலையில் எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன.

Friday, May 25, 2012

கசகறணம் நாவலுக்கு விருது!

நண்பர் விமல் குழந்தைவேலுவின் கசகறணம் நாவலுக்கு 2011ம் ஆண்டுக்கான நாவல் விருது கிடைத்துள்ளது!

-எம் .பௌசர்-
 
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்( தமுஎகச) ஆண்டுதோறும் அந்தந்த வருடத்தில் வெளியான கலை இலக்கிய படைப்புகளுக்கு விருது வழங்கி வருகிறது.

கவிதை,சிறுகதை, நாவல்,தமிழ் வளர்ச்சிக்கான ஆய்வு, மொழிபெயர்ப்பு, விளிம்புநிலை மக்களுக்கான எழுத்துகள் ,மற்றும் படங்கள்,குறும்படங்களுக்கு துறைசார் விருதுகள் வழங்கப்படுகிறது.

நாவலுக்கான சிறந்த விருது , விமல் குழந்தைவேலுவின் கசகறணம் நாவலுக்கு கிடைத்துள்ள செய்தியினை சற்றுமுன்தான் அறிந்து கொண்டேன். எனது மகிழ்ச்சியினை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன். விமலுக்கு எனது வாழ்த்துக்கள்!

விரிந்த கதை வெளியில் ,போருக்குள் சிக்குண்டு சிதைந்தழிந்த தமிழ் முஸ்லீம் மக்களின் வாழ்வை அம்மக்களின் மொழியில், அதன்கலை அனுபவத்தோடு , கண்ணீரோடு ,ஆவேசத்தோடு தமிழ் முஸ்லீம் மக்களின் இணைந்த வாழ்வை நேசிக்கின்ற ஒரு நேர்மையான கலைஞனின் உளத்துயரத்தோடு விமல் குழந்தைவேல் எழுதியிருந்தார்.

Sunday, May 20, 2012

தொலைக்காட்சி விவாதத்தில் பொறுமை இழந்தார் / மேற்கு வங்க முதல்வர்

கொல்கத்தாவில் நடைபெற்ற CNN-IBN இன் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி, பல்கலைக்கழக மாணவிகளின் கேள்விகளில் அதிருப்தி அடைந்து நிகழ்ச்சியின் பாதியிலேயே எழுந்து சென்ற நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறிக்கொண்டிருந்தார் மமதா பானர்ஜி. அப்போது ஜாதாவ்பூர் பல்கலைக்கழக மாணவி ஒருவர், மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருக்கிறதே என கேள்வி எழுப்பினார்.


மற்றொருவர் கார்டூன் வரைந்தற்காக பேராசிரியர் அம்பிகேஷ் மகாபாத்ராவை கைது செய்தது ஏன் என கேள்வி எழுப்பினார். அது கார்டூன் அல்ல. சைபர் கிரைம். என்னை கொலை செய்வதற்கான சதி முயற்சி. குறித்த பேராசிரியர் மார்க்சிஸ்ட் கட்சியின் ஏஜெண்டுக்களில் ஒருவர்.



அவர் அதை 60 பேருக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளார். கடந்த தேர்தலின் பின்னர் மார்க்ஸிஸ்ட் கட்சி, 1000 ற்கு மேற்பட்ட சீ.டி க்களை வெளியிட்டு என்னை அவமானப்படுத்தியது. மாவோயிஸ்டுக்களும் - மார்க்ஸிட் கட்சியும் ஒன்றாக இணைந்து செயற்படுகின்றன என மமதா பதில் அளித்தார்.


அத்துடன் திடீரென கோபமடைந்த அவர், ஏன் எல்லோரும் மாவோயிஸ்டுக்கள் தொடர்பான கேள்விகளையே எழுப்புகிறீர்கள். மாநிலத்தில் பேசுவதற்கு வேறு எந்த விடயமும் இல்லையா? வேறு பல்கலைக்கழக மாணவர்களை இந்நிகழ்வுக்கு அழைக்கவில்லையா? என்றார்.


நீங்கள் மாவோயிஸ்டு இயக்கத்தை சேந்தவரா என குறித்த மாணவியை பார்த்து பதில் கேள்வி எழுப்பினார். என்னால் மாவோயிஸ்டுக்கள் - மற்றும் மார்க்சிஸ்ட் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது. நீங்கள் மாவோயிஸ்டு மாணவர்கள்.


இங்கு மாவோயிஸ்டுக்கள் பலர் உள்ளனர். என்னால் மவோயிஸ்டுக்களுகு பதில் கூறமுடியாது என சொல்லிவிட்டு நிகழ்ச்சியின் பாதியிலேயே கோபத்தில் வெளியேறிவிட்டார்.


முதன்முறையாக மமதா பானர்ஜி ஊடகம் ஒன்றின் முன்னிலையில் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு வெடுவெடுப்பாக பேசிவிட்டு நிகழ்ச்சியின் பாதியில் வெளியேறியது மேற்குவங்க மூத்த அரசியல் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 கொல்கத்தாவில் நடைபெற்ற CNN-IBN இன் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி, பல்கலைக்கழக மாணவிகளின் கேள்விகளில் அதிருப்தி அடைந்து நிகழ்ச்சியின் பாதியிலேயே எழுந்து சென்ற நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறிக்கொண்டிருந்தார் மமதா பானர்ஜி. அப்போது ஜாதாவ்பூர் பல்கலைக்கழக மாணவி ஒருவர், மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருக்கிறதே என கேள்வி எழுப்பினார்.


மற்றொருவர் கார்டூன் வரைந்தற்காக பேராசிரியர் அம்பிகேஷ் மகாபாத்ராவை கைது செய்தது ஏன் என கேள்வி எழுப்பினார். அது கார்டூன் அல்ல. சைபர் கிரைம். என்னை கொலை செய்வதற்கான சதி முயற்சி. குறித்த பேராசிரியர் மார்க்சிஸ்ட் கட்சியின் ஏஜெண்டுக்களில் ஒருவர்.



அவர் அதை 60 பேருக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளார். கடந்த தேர்தலின் பின்னர் மார்க்ஸிஸ்ட் கட்சி, 1000 ற்கு மேற்பட்ட சீ.டி க்களை வெளியிட்டு என்னை அவமானப்படுத்தியது. மாவோயிஸ்டுக்களும் - மார்க்ஸிட் கட்சியும் ஒன்றாக இணைந்து செயற்படுகின்றன என மமதா பதில் அளித்தார்.


அத்துடன் திடீரென கோபமடைந்த அவர், ஏன் எல்லோரும் மாவோயிஸ்டுக்கள் தொடர்பான கேள்விகளையே எழுப்புகிறீர்கள். மாநிலத்தில் பேசுவதற்கு வேறு எந்த விடயமும் இல்லையா? வேறு பல்கலைக்கழக மாணவர்களை இந்நிகழ்வுக்கு அழைக்கவில்லையா? என்றார்.


நீங்கள் மாவோயிஸ்டு இயக்கத்தை சேந்தவரா என குறித்த மாணவியை பார்த்து பதில் கேள்வி எழுப்பினார். என்னால் மாவோயிஸ்டுக்கள் - மற்றும் மார்க்சிஸ்ட் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது. நீங்கள் மாவோயிஸ்டு மாணவர்கள்.


இங்கு மாவோயிஸ்டுக்கள் பலர் உள்ளனர். என்னால் மவோயிஸ்டுக்களுகு பதில் கூறமுடியாது என சொல்லிவிட்டு நிகழ்ச்சியின் பாதியிலேயே கோபத்தில் வெளியேறிவிட்டார்.


முதன்முறையாக மமதா பானர்ஜி ஊடகம் ஒன்றின் முன்னிலையில் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு வெடுவெடுப்பாக பேசிவிட்டு நிகழ்ச்சியின் பாதியில் வெளியேறியது மேற்குவங்க மூத்த அரசியல் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


நன்றி:eutamilar.eu

Friday, May 18, 2012

Journalists failed to tell the story of war crimes in Srilanka

'Journalists failed to tell the story of war crimes in Sri Lanka'

Frances Harrison, former BBC correspondent in Sri Lanka
Posted: 17 May 2012 By: Frances Harrison
Sri Lanka

Today marks three years since the end of the fighting in Sri Lanka. I would like to mourn the dead but still I do not know how many. Estimates range from seven to 147,000. It is a shocking difference.

How is it possible in this world of satellites, rolling news and internet we have no idea how many human beings really perished, even rounded up to the nearest thousand?

It is because as journalists we have failed to get close to the truth. On one hand the Sri Lankan government says the 2009 war was a magnificent humanitarian rescue operation, while on the other many Tamils say it was a genocide. As reporters it is not enough to quote both extremes without digging a little deeper, but that is what the media reports in 2009 were like, citing army and rebel claims and just adding a proviso that these were unverified because journalists had no access to the war zone.

Perhaps that is why the media dubbed the Sri Lankan conflict "a war without witness". That is simply not true. There were 60 Catholic priests and nuns, 240 local NGO workers, and Tamil civil servants working for the central government including five doctors. All of them were people who prided themselves on their professional integrity. Not to mention the survivors of this war, many of whom are now traumatised, suicidal, destroyed people, racked with guilt at being alive when so many around them died. Every emaciated person who walked out of those months of hell had a tale of narrowly missing death, of sitting chatting to someone one minute and seeing them dead the next. This is a story that has been largely missed, with the notable exception of Channel 4 news.

தகவல்

சந்திப்பு அரங்கு

Sunday, May 13, 2012

முள்ளிவாய்க்கால்: “மிகவும் கோரமான சம்பவங்களின் சாட்சியாக நான் இருக்கிறேன்”

பாஷண அபேவர்த்தன தமிழில்: மீராபாரதி
நேர்காணல்: முள்ளிவாய்க்கால்: “மிகவும் கோரமான சம்பவங்களின் சாட்சியாக நான் இருக்கிறேன்”

சிறப்புப் பகுதி: போரும் வாழ்வும்: முள்ளிவாய்க்கால் நினைவுகள்
நேர்காணல்: முள்ளிவாய்க்கால்: “மிகவும் கோரமான சம்பவங்களின் சாட்சியாக நான் இருக்கிறேன்”
பாஷண அபேவர்த்தன
தமிழில்: மீராபாரதி
நீங்கள், இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் (Journalists for Democracy in Sri Lanka- JDS) என்ற உங்கள் அமைப்பினர், நண்பர்கள் ஆகியோர் பங்களிப்பு இல்லாமல் சர்வதேசச் சமூகத்தையே உலுக்கிய கைப்பேசி வீடியோவில் எடுக்கப்பட்ட படுகொலைக் காட்சிகள் வெளிச்சத்துக்கு வந்திருக்க மாட்டா. இந்த வீடியோ படங்களை சானல் 4 தொலைக்காட்சிக்குத்தான் வழங்க வேண்டுமென எப்படித் தீர்மானித்தீர்கள்?
முதலில் நான் ஒன்றைக் கூற வேண்டும். இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரமான படுகொலைகளும் குற்றச் செயல்களும் ரகசியமாக நடந்தவையல்ல. சர்வதேச அதிகார சக்திகளைப் பொறுத்தவரை இவ்வாறான இன அழிப்பு நடவடிக்கை இடம்பெறப் போகிறது என்பதை ஏற்கனவே அவர்கள் அறிந்திருந்தார்கள். இந்தப் படுகொலைக் களத்தின் ஆர்வமிக்க பார்வையாளர்களாக ஏராளமானோர் தொலைதூரத்தில் இருந்தார்கள். இந்த உண்மை, ஐ. நா. அவையின் மனிதாபிமானச் செயல்பாடுகளுக்கான தலைவர் சர் ஜோன் ஹோல்ம்ஸ் சானல் 4இல் வெளிப்படையாகக் கூறிய ஒரு கருத்தில் மிக நன்றாகவே பிரதிபலித்தது:
‘சர்வதேசச் சமூகத்திலிருந்து யாராவது தடுத்து நிறுத்துவார்கள் என்று இலங்கை அரசு ஒருபோதும் நம்பவில்லை. அதன் கணிப்பு சரியானதே. ஆனால் சில ராஜதந்திர ஆட்டங்கள் இதைச் சுற்றி நடந்தன.’ ஆகவே நீண்ட காலமாக நடைபெற்ற இந்த உள்நாட்டுப் போர் ரத்தக்களரியில் முடிந்தமை வழமையான, தர்க்கரீதியானது என நாம் பார்க்க முடியாது. மாறாகக், கள்ளத்தனமாகக் கணக்கிடப்பட்ட சர்வதேச அரசியல் விளையாட்டின் விளைவாகவே பார்க்கப்பட வேண்டும். உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள், பொலிசார் அடித்தபோதும் துன்புறுத்தியபோதும் இழுத்துக் கைதுசெய்தபோதும், அந்தந்த நாடுகளின் வீதிகளில் பல மாதங்களாக நின்றனர். ஓலமெழுப்பினர். விம்மினர். கடுங்குளிரையும் பொருட்படுத்தாது எதிர்த்து நின்றனர். பொதுமக்கள் சதுக்கங்களைக் கைப்பற்றியிருந்தனர். விரைவு நெடுஞ்சாலைகளை மறித்தனர். பலர் தீக்குளித்தனர். இவை எங்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் மைய நீரோட்ட ஊடகங்கள் இவற்றுக்கு எத்தகைய முக்கியத்துவமும் வழங்கவில்லை. இனப் படுகொலை இடம்பெறுவதைப் பற்றி உணர்வுபூர்வமான செய்திகள் எதையும் வெளியிடவில்லை.
இப்படியான சூழ்நிலையில்தான் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்ற முதலாவது வீடியோ முக்கியத்துவம் பெறுகிறது. இது வெளிவந்தமை அன்றைய சூழலை ஆட்டங்காணவைத்தது. இலங்கை அரசாங்கத்தைத் தவிர வேறு எவருக்கும் அந்த வீடியோவைப் பொய்யெனச் சொல்லிப் புறம் தள்ளிவிடுவதற்கான துணிவு இருக்கவில்லை. இலங்கை அரசாங்கம் வழமைபோலவே இதையும் மறுத்தது. இப்படி மறுப்பது என்பது அவர்களுக்கு ஒரு சடங்கு மாதிரி.

கறுப்பி

"கறுப்பி" - சமுதாயம் "சக்கிலி" - பொன்னி அரசு சமீபத்தில் அரங்காற்றிய நிகழ்வு- கைலாசபதி அரங்கு / கொழும்பு
 

Tuesday, May 08, 2012

உலகின் தலைசிறந்த 10 பேரில் மதுரை இளைஞர்

உலகின் தலைசிறந்த 10 பேரில் மதுரை இளைஞர் : 1.20 கோடி பேருக்கு உணவு தந்ததற்கு கவுரவம்:


ஆதரவற்ற, மனநலம் பாதித்தவர்களுக்கு 2002 முதல் இதுவரை தினமும் மூன்று வேளை உணவு அளித்து வரும் மதுரை டோக் நகரைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணனை(29), உலகின் தலைசிறந்த 10 “ரியல் ஹீரோக்களில்’ ஒருவராக சி.என்.என்., வெப்சைட் தேர்வு செய்துள்ளது.

நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலைஞரான இவர், 2002ல் சுவிட்சர்லாந்து ஓட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அங்கு செல்வதற்காக மதுரை ரயில்வே ஸ்டேஷன் வந்தார். அங்கே முதியவர் ஒருவர் உணவுக்கு போராடும் அவலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி, வீட்டில் சமைத்து, இது போன்ற மனிதர்களை தேடிச் சென்று உணவு கொடுக்க ஆரம்பித்தார். இதுவரை 1.20 கோடி பேருக்கு தினமும் காலை, மதியம், இரவு என உணவு வழங்கி வருகிறார். இதற்காக “அக்ஷயா டிரஸ்ட்’ என்ற அமைப்பையும் “ஸ்பான்சர்கள்’ உதவியுடன் நடத்தி வருகிறார். மதுரையை சுற்றி கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிப்பிடித்து உணவு தருகிறார். இதற்காக தனது வாழ்கையை முழுமையாக அர்ப்பணித்துள்ள இவர், சி.என்.என். வெப்சைட்டால், உலகின் தலை சிறந்த 10 ரியல் ஹீரோக்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஏழை எளிய மக்களை தேடிசென்று உணவு கொடுப்பதென்பது அரிய மகத்தான பணி .. கோவில் உண்டியலில் பணத்தை கொட்டுபவர்கள இவரின் கைகளின் குடுங்கள் உங்களுக்கு கடவுள் குடுப்பதை விட இது பெரிய புண்ணியம் ..வளரட்டும் இவரின் சேவை.. வாழ்த்துக்கள் ...!!!

Monday, May 07, 2012

யாழ்ப்பாணத்தில் கம்யூனிச மே தின பேரணி!! தமிழ் ஊடகங்கள் இருட்டடிப்பு!!

வடபுலத்துப் போர்ச் சூழலால் இயல்பு வாழ்வும் ஜனநாயகமும் கடந்த காலங்களில் மறுக்கப்பட்டு வந்தது. போர் முடிந்த பின்பும் அதே நிலை தொடருகிறது. இதன் மத்தியிலேயே இம்முறை மேதினம் யாழ்ப்பாணத்தில் பேரணிகளுடன் கொண்டாடப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சி தமது தமிழ் மேட்டுக்குடிச் சகாவான தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கூட்டு மேதினம் கொண்டாடியது. தெற்கிலிருந்து பெருந்தொகையானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியால் பேரணிக்கும் கூட்டத்துக்கும் கொண்டுவரப்பட்டிருந்தனர். இதனை வேறொரு கட்சியினர் செய்திருந்தால் யாழ்ப்பாண ஊடகங்கள் எகிறிக்குதித்து இனவாதத்தையும் இனவெறியையும் எழுதித் தள்ளியிருப்பார்கள். ஆனால் இது மேட்டுக்குடிக் கூட்டு என்பதால் அதனை அடக்கி வாசித்துக்கொண்டனர். இது தமிழர் பழைமைவாத ஆதிக்க அரசியலுக்கு வக்காலத்து வாங்கும் யாழ்ப்பாணப் பத்திரிகைகளின் பத்திரிகா தர்மமாகும். அத்துடன் சிங்கக்கொடி பிடித்த ரணில் சம்பந்தன் கூட்டுக்கரங்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தில் ஒரு சிறு பகுதியைத்தானும் புதிய-ஜனநாயக மார்க்சிச-லெனினிசக் கட்சி (NDMLP) யாழ்ப்பாணத்தில் மிகவும் சிறப்பாக நடத்திய சைக்கிள் பேரணிக்கும் கூட்டத்திற்கும் கொடுக்க மறுத்துவிட்டனர்.

Saturday, May 05, 2012

புரட்சிகர மேதினப் பேரணியும் பொதுக்கூட்டமும்

புதிய-ஜனநாயக மார்க்சிச-லெனினிச கட்சியின் புரட்சிகர மேதினப் பேரணியும் பொதுக்கூட்டமும் 01-05-2012 அன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
கோஷங்களுடனும் பதாகைகளுடனும் சுன்னாகம் சந்தை வளாகத்திலிருந்து சைக்கிள் பேரணியாகச் சென்ற தோழர்கள் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள பட்டப்படிப்புக்கள் கல்லூரி வளாகத்தில் மாபெரும் பொதுக்கூட்டத்தினை நடத்தினர்.
பெரும்பாலான ஊடகங்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்டுவிட்ட இப்பேரணியினதும் பொதுக்கூட்டத்தினதும் காட்சிகளை இங்கே நீங்கள் காணலாம்.
இலங்கை யில் நான்கு இடங்களில் NDMLP இனால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த மேதின நிகழ்ச்சிகள் பற்றிய விரிவான அறிக்கை விரைவில் துலாவில் வெளியாகும்.