Tuesday, December 31, 2013

தலைமுறைகள் விமர்சனம்

-உமா சக்தி -

நாம் விட்டு விலகிக் கொண்டிருக்கும் வேர்கள் மிக ஆழமானது. தொன்மையானது. ஆனால் வளர்ச்சி, தொழில்நுட்பம், சம கால வாழ்வியல் முறைகள் நம் கண்ணை மட்டுமல்ல கருத்தையும் மறைக்கும் மாயைகள். அது தற்காலிகமாக நமக்கு பெருமை தருவது போலத் தோன்றினாலும் நம்மை இழந்து, வேறு எதைப் பெறுவதற்காக இவ்வாழ்க்கை என்ற கேள்விக்கு உட்படுத்துவது தான் தலைமுறைகள் திரைப்படத்தின் மூலம் பாலுமகேந்திரா கேட்கும் கேள்வி. (ஆனால் சரியாகக் கேட்டிருக்கிறாரா என்பது தான் நம் கேள்வி) பணத்தின் பின் ஓடும் எந்த மனிதரையும் நிறுத்திக் கேளுங்கள் வாழ்க்கை உங்களுக்கு என்னவாக இருக்கிறது என்று அவர்களுக்கு பதில் சொல்லக் கூட நேரமிருக்காது. வாழ்க்கை அவர்களுக்கு பேப்பர்களால் ஆனது. வீட்டுப் பத்திரம், நிலப் பத்திரம், அலுவலகப் பேப்பர்கள், பணத் தாள்கள். அவர்களுக்கு அதுவே உலகம். அதுவே வாழ்க்கை.
சுப்பு பிள்ளையின் மகன் பணத்தைத் தேடி ஓடுபவனாக இருந்தாலும் பாசத்துக்கும் கட்டுப்படுபவன். இத்திரைப்படத்தில் மூன்று தலைமுறைகள் பற்றி கோடிட்டுக் காட்டுகிறார். பழையவை, இடைப்பட்டவை, புதியவை. இவ்வளவு தான். தலைமுறை இடைவெளி என்பது அன்பில் உருகும் நெஞ்சங்களுக்கு இல்லை. புரிதல் இருந்தால் கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருந்தாலும் இந்த இடைவெளி சமன்படும் என்று இப்படத்தில் சொல்லாமல் சொல்கிறார்.இத்திரைப்படம் நேர்க்கோட்டில் ஒரே விஷயத்தை நோக்கி நகர்கிறது.

காவேரிக்கரை கிராமத்தில் ஓய்வு பெற்ற தமிழ் வாத்தியார் சுப்பு (பாலுமகேந்திரா). அவருடைய மகன் சிவா சென்னையில் பெரிய டாக்டர் ஆனால் சாதி விட்டு கிருத்துவப் பெண்ணை மணம் முடித்ததால் பெரியவர் மகனை தன் சாவுக்குக் கூட வரக் கூடாது என்று விலக்கி வைத்துள்ளார். பெரியருக்கு இதய நோய் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி இரண்டு மாதங்கள் கழித்துதான் சிவாவுக்குத் தெரிய வருகிறது.

Wednesday, November 13, 2013

டாக்டர் நோர்மன் பெத்யூன்

-ந.இரவீந்திரன்- 

இன்று டாக்டர் நோர்மன் பெத்யூன் பிறந்தநாள்

டொராண்டோ பல்கலைக்கழகம், ஓவன் ஒலி கல்லூரிகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனம் போன்றவற்றில் கல்விகற்றார்.ஹென்றி நார்மன் பெத்யூன்  ஒரு கனடிய மருத்துவர் மற்றும்  சிறந்த மருத்துவ கண்டுபிடிப்பாளராக இருந்தார்.1935 ல் பெத்யூன்  சோவியத் ஒன்றியம் பயணித்தார் . இந்த ஆண்டில் அவர் ஒரு ஈடுபாடுள்ள  கம்யூனிஸ்ட் ஆனார் .ஸ்பானிஷ்  காலத்து போரின் போது வெளிப்படையாக  கம்யூனிஸ்ட் ஆக  அறியப்பட்டார்.அறுவை தலைவராகவும்,இரத்ததானம் நிர்வகிக்கும் பொறுப்பும் ஏற்றுநடாத்தினார் . அருகே காயமடைந்த வீரர்கலுக்கு தேவையான இரத்தத்தை  பாட்டில்கள் மூலம் பொதுமக்களிடம்   நன்கொடையாக இரத்த எடுக்க முடியும் எனக்கருதி ஒரு மொபைல் இரத்தம் சேவை அமைத்தார். அது இரத்தத்தை  எடுத்துச் செல்ல உதவியது. இரண்டாம் சீன - ஜப்பனீஸ் போரின் போதும் , ஸ்பானிய உள்நாட்டு போரின் போதும் , (சீன கம்யூனிஸ்ட் எட்டாவது வழி இராணுவம் போர் )யுத்தமுனைக்கு சென்றார்.
ஜனவரி 1938 சீனாவுக்குச் சென்று   மாவோ சே துங் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார் .யுத்தத்தில் காயமடைந்த போர்வீரர்களுக்கு அனைத்து சிகிச்சைகளையும் செய்துகொடுத்து,பல அறுவைச் சிகிச்சை உபகரணங்களையும் உருவாக்கினார். ,தன்னைக் கவனிக்காது மக்களுக்காகவே வாழ்ந்து மரணித்தார். அவரைப் பற்றி தோழர் மணியம் அவர்கள் முதலில் சொல்லி இருந்தார்.பின் பெத்யூன்  பற்றி தேடி வாசித்திருந்தேன்.இந்தியாவில் இருந்தபோது அவர் பற்றிய நூலை எழுத்துத் திருத்தும் வாய்ப்புக் கிடைத்தது. கண்கலங்கி ,கண்கலங்கி திருத்தினேன்.(டாக்டர் நோர்மன் பெத்யூன் கதை- சவுத் விசன் வெளியீடு 415 பக்கங்கள் : படிக்க விரும்புவோர் என்னிடமிருந்து பெற்றுத் திரும்பத் தரவும் )

Wednesday, October 23, 2013

30வது பெண்கள் சந்திப்பு - ஒரு பார்வை

-உமா- (ஜேர்மனி)
1990ம் ஆண்டு ஜேர்மனியின் கேர்ண நகரில் ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் சந்திப்பின் 30வது தொடர் ஒக்டோபர் மாதம்12ம் திகதி பாரிஸில் நடைபெற்றது.
viji 12.10
இச்சந்திப்பின் ஆரம்பவுரையை நிகழ்த்திய விஜி,  1990 களில் ஜேர்ம னி கேர்ண நகரில் தொடங்கிய இப்பெண்கள் சந்திப்பு, 30 வது  சந்திப்பு வரை பல ஐரோப்பிய நாடுகளிலும், கனடாவிலும் தொடர்ந்து நடைபெற்றுவருவது குறிப்பிடக்கூடியது.  இதற்கு முதல் மூன்று சந்திப்புகள் பிரான்சில் நடைபெற்றுள்ளதாகவும், எல்லாச் சந்திப்புகளுமே காத்திரமான சந்திப்புகளாக அமைந்தனவென்றும், 2000ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பெண்கள் சந்திப்பில் தலித் சிந்தனையாளரும் பெண்ணியவாதியுமான சிவகாமி கலந்து கொண்டு ஆழமான கருத்துகளை வழங்கியதோடு பங்குபற்றியஅனைத்துப் பெண்களையும் மனந்திறந்து பேசவைத்தார் என்பதையும் பதிவுசெய்தார்.
 சந்திப்பின் முதல்நிகழ்வாக,

Thursday, October 17, 2013

இருவர்

-அ.யேசுராசா- 

ஏ.ஜே. கனகரத்தினா

 ஏ.ஜே. கனகரத்தினா, ஓவியர் மாற்குபோன்றோருடன் நெருங்கிப் பழகியிருக்கிறீர்கள் ; அவர்களைப் பற்றிச் சுருக்கமாகக்  கூறுங்கள்!

*  1976 ஆம் ஆண்டிலிருந்து இருவருடனும் பழகத்தொடங்கினேன். மாற்கு மாஸ்ரர் எனது வீட்டுக்கு அண்மையிலும், ஏ.ஜே. எங்கள் ஊருக்கு மிக அண்மையிலும் வசித்தனர்.
ஏ.ஜேயைப் பற்றி ஏற்கெனவே,  மனிதனாயிருந்த மனிதன் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். எனது வாழ்வில் நான் சந்தித்த மிக முக்கிய மனிதருள் ஒருவர் அவர்! பரந்த வாசிப்பும், எளிமையும், அனைவருக்கும் உதவும் பண்பும், எதற்காகவும் தனது நிலையில் நின்று வழுவிச் சோரம்போகாத ஆளுமையும் கொண்டிருந்தவர். அவருடன் ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் அக்காலங்களில் பழகியிருக்கிறேன் ; அவரிடமிருந்து நிறையக் கற்றிருக்கிறேன். அன்னா அக்மதோவா, ஃவெடரிக்கோ கார்ஸியா லோர்கா ஆகியோரின் கவிதைகள் கொண்ட சிறிய ஆங்கில நூல்களைத் தந்து, “இனிமேல்ஆங்கிலத்திலும் வாசிக்கவேண்டும், மொழிபெயர்க்கவும் முயலுங்கள்” என்று தூண்டியவரும் அவரே.  ஆரம்பத்தில் மல்லிகைக்கும் டொமினிக் ஜீவாவுக்கும் நிறைய உதவியிருக்கிறார். எண்பதாம் ஆண்டுக்காலம் வரை மல்லிகை சிறப்பாக வந்ததென்றால், அதில் அவரின் பங்கு முக்கியமானது; அலை, சமர்முதலிய இதழ்களுக்கும் பின்னர் உதவினார். எழுபதுகளில் நடைபெற்ற, இலக்கியத்தில் கலை அம்சத்தின் முக்கியம் பற்றிய கருத்தாடல்களில், பிரச்சாரப் படைப்புகளுக்கு எதிரானதாக அவரது  நிலைப்பாடு இருந்தது.மார்க்சியமும் இலக்கியமும்  சில நோக்குகள் என்ற நூலும், அவர் எழுதிய – மொழிபெயர்த்த ஏராளமான கட்டுரைகளும், அவரது கருத்துநிலைச் சார்பை வெளிப்படுத்துகின்றன. பேராசிரியர் கைலாசபதிதனது இலக்கியமும் சமூகவியலும் என்ற நூலைத்  தந்து அபிப்பிராயத்தைத் தெரிவிக்கும்படி கேட்டதாகவும், ‘இலக்கியம் பற்றிக் கூறப்பட்டுள்ளது; சமூகவியல் பற்றியும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இரண்டுக்குமுள்ள தொடர்பு கூறப்படவில்லை’ என்ற சுருக்கமான குறிப்பை மட்டும் துண்டொன்றில் எழுதித் தான்  கொடுத்ததாகவும்,  ஒருதடவை என்னிடம்

Tuesday, October 15, 2013

தமிழக மீனவ உறவுகள் அறங்காக்க வேண்டும்

-தமயந்தி-

"இழுவைப்படகு, இரட்டைமடி மீன்பிடி போன்றவற்றை நிறுத்தும்படி இலங்கை மீனவர்கள் சொல்கிறார்கள்.
அது இந்தியாவில் நிறுத்தப்படவில்லை, நாட்டுக்கு நாடு கடல்ச் சட்டங்கள் வேறு வேறானவை.
இலங்கையைப் பொறுத்தவரை, இலங்கையில் கடலட்டைத் தடைச் சட்டம் இல்லை. ஆனால் இழுவைப்படகு, இரட்டைமடி தடைச் சட்டம்தான் இருக்கிறது.
கடலட்டைத் தடைச் சட்டம் இந்தியாவில் கொண்டுவரக் காரணம் கடலில் காணக்கூடிய அபூர்வமான உயிரினம்"

இந்திய, தமிழகக் கடலட்டைத் தடைச் சட்டத்தை கழிப்பறையில் கிழித்துப்போட! 
இந்திய, தமிழக கடல்வள ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிக் குதத்துக்குள் கொள்ளியைச் சொருக!! 


இது எப்படி இருக்கிறதென்றால் குடியிருக்கும் வீட்டைப் பெற்ரோல் ஊற்றிக் கொழுத்துவார்களாம் ஆனால் வீட்டு வளையில் இருக்கும் குருவிக்கூட்டுக்குப் பாதுகாப்புச் சட்டம் போடுவார்களாம். கடலட்டை என்ற உயிரினம் எப்படி இனப்பெருக்கம் செய்கிறது, அபிவிருத்தியாகிறது என்ற அடிப்படை அறிவுகூட இல்லாதவர்களின் கடல்வள ஆராய்ச்சி அறிவை என்னவென்பது....? 


1968 இறுதியிலும் 70களின் தொடக்கத்திலும் யாழ் தீவகத்தில் கடலட்டைத் தொழில் அறிமுகமாகி ஏற்றுமதி செய்யத் தொடங்கியபோது அங்கொன்று இங்கொன்றாய் அருந்தலாகக் காணப்பட்ட கடலட்டைகள் அதற்குப் பிற்பாடுதான் அதிகளவில் பல்கிப் பெருகி பாரிய அபிவிருத்தி அடைந்தது. தொழிலாளர்கள் கடலட்டையை எவ்வளவுக்கெவ்வளவு பிடித்தார்களோ அவ்வளவுக்கவ்வளவு பல நூறு மடங்காகப் பெருகியது.

Saturday, October 12, 2013

பாலியல் தொழிலில் கேந்திர நிலையமாக மாறிவரும் வடமாகாணம்

வட மாகாணத்தில் பாலியல் தொழில் மிகுந்த முனைப்புடன் வளர்ச்சியடைந்துள்ளதாக ஐ.ஆர்.ஐ.என். தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னைய யுத்த வலயத்தின் பெரும்பான்மையான பெண்கள் குடும்பத் தலைமைப் பொறுப்பை வகித்து வருகின்றனர்.

யுத்ததினால் கணவனை இழந்த, காணாமல் போன அல்லது கைது செய்யப்பட்ட பல பெண்கள் குடும்பச் சுமையை சுமக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

போதியளவு வாழ்வாதார வழிகள் இல்லாமை மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் காரணமாக அதிகளவான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

வடக்கில் சுமார் 7000 பெண்கள் இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

யுத்தத்தில் கணவனை இழந்த அல்லது காணாமல் போன பல குடும்பத் தலைவிகள் விருப்பிமின்றியேனும் பாலியல் தொழிலை தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.

2012ம் ஆண்டு அரசாங்க மதிப்பீடுகளின் அடிப்படையில் வடக்கில் 59000 குடும்பங்களுக்கு பெண்கள் தலைமை தாங்குகின்றனர்.

தங்களது கணவர், சகோதரர், தந்தைமார் சுமந்த பொருளாதாரச் சுமையையே இவர்கள் இவ்வாறு சுமக்கின்றனர்.

வறுமை மற்றும் வாழ்வாதார வழிகளில் காணப்படும் வரையறுக்கப்பட்ட தன்மை பெண்களை வர்த்தக ரீதியான பாலியல் தொழில் நோக்கி உந்துகின்றது.

Wednesday, October 09, 2013

திரையில் வரையப்பட்ட தமிழ் நிலம்

-பிரேம்-
திரைப்படத்தை முன்வைத்து நம் காலத்திய அரசியல் உளவியல்புகள் பற்றிச் சில கருத்துரைகள்

திரையில் வரையப்பட்ட தமிழ்நிலம் என்ற இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள்  ‘விலகும் திரைகள்’ என்ற தலைப்பில் தீராநதி மாத இதழில் தொடராக வெளிவந்தவை. ஒரு பொருள் பற்றியோ அல்லது பல்வேறு பொருள் சார்ந்தோ சில எழுத்தாளர்கள் எழுதுவதை ஒரு பொதுத்தலைப்பின் கீழ் ஒவ்வொரு இதழிலும் வெளியிடுவது அந்த இதழில் உள்ள நடைமுறை. முன்பு 2007-இல் தீராநதியில்  ‘இருண்மைகள்  இடைவெளிகள்  மௌனங்கள்’ என்ற  தலைப்பில் தொடராகச் சில கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். கவிஞர் கடற்கரை கேட்டுக் கொண்டதன் பேரில் எழுதப்பட்ட அந்தக் கட்டுரைகள் பின்நவீனத்துவ அரசியல் சார்ந்த உரையாடல்களாக அமைந்தன. தமிழில் அதுவரை முழுமையாக விவாதிக்கப்படாத பல்வேறு கோட்பாட்டுச் சிக்கல்கள் பற்றிய தொடக்க கட்ட உரையாடலாக அமைந்த அக்கட்டுரைகளைத் திட்டமிட்டபடி தொடர இயலாத சூழல் ஏற்பட்டது.
மீண்டும்  2011, செப்டம்பர் மாத தீராநதி இதழுக்கு  எழுதிய ஒரு கட்டுரை இத்தொடருக்கான தொடக்கமாக அமைந்தது. திரைப்படத்தை முன் வைத்து நம் காலத்திய  சமூக-அரசியல் உளவியல் பற்றிய கட்டுரைகளைக் கொண்டதாக இத்தொடர் அமையும் என நான் தெரிவித்திருந்தேன். திரைப்படங்களை முன்வைத்து நம் காலத்திற்கான சில கோட்பாட்டுச் சிக்கல்களைப் பேச இந்தப் பக்கங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற திட்டம் இருந்தது.
தமிழில் திரைப்படங்கள் பற்றிய கோட்பாடுகள் சார்ந்த ஆய்வுகள், வாசிப்புகள் இல்லை.  திரைப்பட வரலாறு, திரைப்படத் தொழில்நுட்பம் பற்றிய அறிமுக நூல்கள் சில மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

Thursday, September 19, 2013

சிவகாமியின் அரிதிலும் அரிதான புலிவாதம்

-வேப்பூர் திருடன்-
டெல்லி மருத்துவ மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகளையும், அதனையொட்டிய கொலையையும் முன்வைத்து 13.09.2013 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்த்திய நேர்படப்பேசு நிகழ்ச்சியில் சமூக சமத்துவப்படையின் (SSP) தலைவர் சிவகாமி அய்.ஏ.எஸ்பங்கேற்று அவ‌ர் தெரிவித்த  பெண்கள் மீதான பாலியல் பிரச்சனைகளையும், அதனூடாக‌ ஈழப்புலிகள் குறித்துப் பேசிய கருத்துக்களுக்கும் எதிர்வினையாக நாகரிகமற்ற, கீழ்த்தரமான, அறிவார்த்தமில்லாத‌ விமர்சனங்களை வலைத்தளங்களில் கண்ட பின்னரே தலித் மனித உரிமைப் பார்வையில் சில குறிப்புகளை முன் வைக்கிறேன்.
—————————————-
நிர்பயா வழக்கில் நால்வருக்கு விதிக்கப்பட்ட அரிதிலும் அரிதான தூக்குத் தண்டணை குறித்து ஒடுக்கப்பட்ட மக்கள் பார்வையில் சிவகாமி மிகவும் கூர்மையான விவாதங்களை நேர்படப்பேசு நிகழ்ச்சியில் எழுப்பினார். நடுத்தர வர்க்க மேட்டுக்குடி கலாச்சார மனோபவம் கொண்ட பெண்ணிய வாதிகளுக்கும், தலித் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களுக்கும் அவரின் அடித்தளப் பார்வையிலான விமர்சனம் சற்று எரிச்சலானது. அதிலும் அவர் சொல்ல வந்த‌ கருத்து எதையும் முகம் சுளிக்காமல், மற்றவரை நேருக்கு நேர் விமர்சிக்கின்ற ஆளுமை கொண்டவராக இருந்ததினால் விவாதத்தினூடாக விடுதலைப்புலிகள் பற்றியும் பேசினார்.
அவர் பேசிய கருத்து என்னவென்றால் “விடுதலப்ப்புலிகள் ஈழத்தமிழருக்காகப் போராட்டம் நடத்தும்போது ஈழப்புலிகள் இராணுவத்தில் சில பெண்கள் இருந்தார்கள். ஈழப்புலி இராணுவத்தின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்பட்டார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு வந்த போது என்ன பதில் சொன்னார்கள் என்றால், உயிரையே பணயம் வச்சி ஒருத்தன் நாட்டுக்காக உழைக்கும்போது இது அதோட ஒப்பிடுகையில் ஒரு சாதாரண விஷயந்தான் என்பதை செய்திகளில் நான் படிச்சேன்” என்று கருத்து தெரிவித்தார். அவரின் கருத்தை இடை மறித்த  நிகழ்ச்சித் தொகுப்பாளர் குணசேகரனும், வழக்கறிஞர் அருள்மொழியும் நீங்கள் இதுவரை கேள்விப்படாத ஆதாரமற்ற செய்திகளை அவதூறாக புலிகள் மீது சொல்லுகிறீர்கள் என்று பேசினார்கள். இதனையடுத்த தொடர் விவாதங்களில் “பாரீசில் வாழும் தமிழர் ஒருவர் என்னிடம் இதனைப் பகிர்ந்து கொண்டார். என்னிடம் இதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன” என சிவகாமி விளக்கமளித்தார். இறுதியில் வழக்கறிஞர் அருள்மொழியும், திலகவதியும் இதனை மீண்டும் மறுத்தார்கள் (பார்க்க இணைப்பு – http://www.dailymotion.com/video/x14o4u3_nerpada-new_lifestyle).
———————————————–

nerpada_(new) by tamildoom

சிவகாமி எந்த கருத்தை வலியுறுத்தி விவாதிக்க விரும்பினாரோ, அந்த நோக்கம் சற்று திசைமாறி சிவகாமி மீதான புலிகள் விமர்சனத்துக்கு அது அகல வழி ஏற்படுத்தியது.

Friday, September 13, 2013

(For Sunila Sundari Janet Abeysekera)


Twenty-six years have passed.

Our first meeting,
North of Colombo,
a house on the beach.


flowers and creepers;
Beyond the fence,
fearful and shy
lovers trembling in passionate embrace.
Waves breaking incessantly.

For both of us
the agony and haste
of flight to safety.

The spark of righteous anger
a straight line on the sea,
unswerving we stayed the course,
reaching the Hague
where dawn and dusk
merged as one.

“Goluhathavaththin thunveniyamatta”  -
your  music my lullaby.

When  Subha was born,
I heard her cry
I saw your tears.

Scattered like floating lotus
defying land and time,
our wings gained strength.

Your life the essence of kindness.

Divided by land and sea and space,
our dreams
a constant bridge.

“Son, where are you?
I don’t hear your voice,
send me your picture.”
The messages you sent.
The telephone bursting with
love.

A short life,
what did we learn?

We are puddles
created by chance;
not crystals of love;
poetry, music and freedom
remain always entwined;
we can tread on fire, or
defy the wind;
we cannot lose our lives.

This year in the Hague
when we met,
my farewell was final.
From you
a smile and a tear.


R. Cheran | September 11, 2013

Translated from Tamil by Chelva Kanaganayakam

Tuesday, September 10, 2013

Sov godt søster Sunila

Prisbelønnet menneskerettighedsforkæmper og berømte aktivist Sunila Abeysekera gik bort i Colombo for et øjeblik siden.

Sov godt kammerat!

Vi har mistet en meget god ven, søster og kammerat hvis aktiviteter altid lange betegnes og uden for vores hori
sont. Hele hendes liv var dedikeret til ét mål, rettigheder for mennesker.


Vi vil savne hende. Du vil forblive i vores tanker og hjerter for evigt.


Saturday, September 07, 2013

ஒரு வரலாற்று எழுதியை வக்கிரமாக கொன்றுள்ளனர்.

-கரவைதாசன்-

இந்தியதேசத்து கல்கத்தா நகரினைச் சேர்ந்த நடுத்தர வர்க்க குடும்பத்தில் 1964ல் பிறந்த வரலாற்று எழுதி சுஸ்மிதா பானர்ஜி அவர்கள், முஸ்லீம் அடிப்படைவாதிகளால் ஆப்கனிஸ்தான் நாட்டின் பக்கிற்றா மாகாணத்திலுள்ள அவரது வீட்டின் முன்னால் மிகவும் வக்கிரமான முறையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சமூகத்தில் முன்னனியில் உள்ள பெண்களுக்கு ஆப்கானிஸ்தான் ஆபத்தான இடம் அதிலும் முஸ்லீம் அடிப்படைவாத தலிபான்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருக்கும் கிழக்கு ஆப்கானிஸ்தானில் பெண்களின் நிலை மிகவும் மோசமானது. கடந்த வருடம் உயர்பதவியில் இருந்த இரண்டு ஆப்கான் பெண்கள் லக்மான் (Laghman)  மாகாணத்தில் கொல்லப்பட்டனர். பெண்கள் சம்பந்தமான வாரியத்தின் தலைவியாக இருந்த நஜியா சித்திக்கி அவர்களும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். அந்த வரிசையில் சுய ஆற்றலும் இன்பமான காதல் வாழ்வும் கொண்ட  இந்திய எழுத்தாளர் சுஸ்மிதா பானர்ஜி கொல்லப்பட்டுள்ளார். பெண்களின் உரிமை பற்றி பேசும் எல்லோருமே அதிலும் கிழக்கு ஆப்கனிஸ்தானில் பயமுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்                  

மூன்றாம் உலக நாடுகளுக்குள் அவர்களது சிறு சிறு வித்தியாசங்களை கண்டறிந்து அவற்றை  ஊதிப்பெரிதாக்கி, எப்போதும் தமது நலன்களுக்காகவே அத்துமீறி பிரவேசித்து நாட்டாள்மை செய்யும் நேட்டோ நாட்டுப்படைகள்  ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைகளையும், பெண்களின் நிலையையும் உயர்த்தி, பெண்களுக்கு பாதுகாப்பைக் கொடுத்தமை நேட்டோ(Nato) நாடுகளின் தலையீட்டால் நடைபெற்ற சாதனை, ஓரளவேனும்  பாராட்டப்பட்ட விடயமாகும். நேட்டோ நாடுகள் 2014 இல் தமது படைகளைக் மீளப் பெற்றுக் கொள்ளவுள்ள நிலையில், பெண்ணுரிமை என்பதே  ஆப்கானிஸ்தானில் மீண்டும் கேள்விக்குறியாகவுள்ளது. 

Friday, September 06, 2013

மரணத்தில் நேசித்தவர்களே சீவியத்திலும் மறவாதிருங்கள்

-லீனா மணிமேகலை-
 

யாழ்ப்பாணத்தில் ஜூலை 20, 21 தேதிகளில் நடைபெற்ற41 வது இலக்கிய சந்திப்பை பற்றிய குறிப்புகளை எழுதும் இந்த தருணத்தில், ”நாங்கள் எல்லா தரப்புகளாலும் விசாரிக்கப்பட்டவர்கள்” என்ற ஐயா சோ.பதம்நாதனின் சொற்கள் தான் நினைவில் மோதுகின்றன. 

சிங்களப் பேரினவாதமும், ராணுவவாதத்தை மட்டுமே நம்பிய தமிழ்த் தேசிய விடுதலை இயக்கங்களும் குற்றவாளிகளெனவும், துரோகிகளெனவும் வேட்டையாடியது போக இன்னும் மிச்சமிருக்கும் கலைஞர்கள் உண்மைகளை இரத்தப்பலியென எழுத்தில் கழுவிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு சாட்சியாக நிற்கும் புலம் பெயர்ந்த படைப்பாளர்களின் இயக்கமான “இலக்கிய சந்திப்பு” மூன்று தசாப்தங்களைக் கடந்து புலத்தின் கரை சேர, வரலாறு சற்று நெகிழ்ந்து நிற்கிறது. 

தேசியம் குறித்த இலக்கிய சந்திப்பின் அரங்கில் பேசிய யதீந்திரா, அல்ஜீரிய சிந்தனையாளர் பிரான்ஸ் ஃபனானின் “தேசியம் என்பது ஒரு வெற்றுக்கூடு” என்ற கூற்றை முன்வைத்து, எப்படி தேசியம் அடிப்படைவாதிகளின் வசமிருந்தால், அவர்களுக்கு சேவை செய்யும், அது இடதுசாரிகள் வசமிருந்தால்,இடதுசாரி முகம் காட்டும், அதுவே பயங்கரவாதிகள் வசமிருந்தால் பயங்கர முகம் காட்டும் என தேசியத்தின் பண்பை நாடி பிடித்துக் காட்டினார். இன்று ஈழத்தில் தமிழ்த்தேசியம், ஐக்கிய இலங்கையில் அதிகாரப் பகிர்வு என்ற ஆரம்பகால மிதவாத தேசிய அரசியலுக்கே திரும்பியிருப்பதின் நெருக்குவாரங்களினூடே கலை இலக்கிய செயற்பாட்டாளர்கள் தங்கள் பற்றுக்கோள்களைக் குறித்த விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள்.

Sunday, September 01, 2013

நிர்மல் ரஞ்சித் தேவசிறி - சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு எதிரான தொடர் குரல்

என் .சரவணன்

தோழர் நிர்மல் ரஞ்சித்தை 11 வருடங்களுக்குப் பின் நான் மீண்டும் நேரில் சந்தித்தது, கொழும்பில் ஊடக ஒழுக்கக்கோவை பற்றி கடந்த ஜூலை 17 அன்று நடந்த மாநாட்டில். அப்போது தான் இலக்கிய சந்திப்புக்கு யாழ்ப்பாணம் செல்வதாக என்னிடம் தெரிவித்தார். ஒரு காலத்தில் ஜே.வி.பி செயற்பாட்டளராக இருந்து பின்னர் 90களில் X-group எனும் பெயரில் இயங்கி வந்த அணியில் செயற்பட்டு வந்தார்... சிங்கள சூழலில், அமைப்பியல்வாதம், நவ-மாக்சியம், பின்நவீனத்துவம் போன்றவற்றை அறிமுகம் செய்து அதன்வாயிலாக பலத்த விவாதங்களையும், புதிய அரசியல் பார்வைகளையும், மொழிப்பிரயோகங்களையும், எழுத்து நடைகளையும் கொணர்ந்ததில் இந்த X-Group க்கு முக்கிய பங்குண்டு. பின்னர் அந்த குழு உடைந்து வெவ்வேறு அணிகளானார்கள். சரிநிகர் காலத்தில் எங்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்தார்.

அவரது கட்டுரைகளையும், பெட்டிகையும் பிரசுரித்திக்கிறோம். அப்போது கூட சமாதான பேச்சுவார்த்தை, அதிகாரப்பகிர்வு என்பவற்றிற்கு எதிராக நலின் டி சில்வா பேசும் கருத்துக்களுடன் தர்கிக்க மேடைகளில் அழைக்கப்படும் பேச்சாளராக இருந்தவர் நிர்மல். பேரினவாதத்தை புலமைத்துவ அறிவோடு நிறுவ முயல்பவர்களுக்கு புலமைத்துவ அறிவோடு தென்னிலங்கை சிங்கள பேரினவாத சக்திகளுக்கு தக்க பதிலளிப்பதில் வல்லவரும் நிர்மல் தான் என்பது என் கருத்து. குறிப்பாக சொல்வதென்றால் "சமூக விஞ்ஞானிகள் சங்கம்" (SSA - Social scientist association) த்தில் குமாரி ஜெயவர்தன, ஜயதேவ உயன்கொட போன்றோருடன் பல வருடங்களாக இயங்கி வருபவர். அவர்கள் வெளியிடும் "ப்ரவாத" சஞ்சிகையில் இலங்கையின் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் உருவாக்கம், அதன் அமைப்பு, செயல் என்பன குறித்து நிர்மாலின் பல கட்டுரைகளை காணலாம்.

Thursday, August 22, 2013

வெகுசனப்போரளி நரேந்திர தபோல்கர் அவர்களுக்கு அஞ்சலி

 -கரவைதாசன் -
பொருள் முதல், கருத்து முதல் என்று எதையோ வைப்பைவர்களுக்கிடையே சீரான முறையில் மக்களை சிந்திக்க வைத்து வாழ்ந்து மறைந்த ஒரு சமகால அற்புதம்

 நரேந்திர தபோல்கர் கடந்த செவ்வாய் கிழமை 20.8.13  காலை புனே ஓம்கரேஷ்வர் பாலம் அருகில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள், அவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இதில் தலையிலும் நெஞ்சிலும் குண்டு பாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

நரேந்திர தபோல்கர் அவர்கள் பகுத்தறிவாளர், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான முற்போக்கு சிந்தனையாளர், சமூக ஆர்வலர் , முன்னாள் தேசிய விளையாட்டு வீரர் (கபடி), மருத்துவர், எழுத்தாளர் வெகுசனப்போரளி அறுபத்தி ஏழு வயதில் வாழும் காலத்திலேயே  அவர் வாழ்வு பறிக்கப்பட்டுள்ளது.

தபோல்கர் கொலை செய்யப்பட்டதையடுத்து அவரது சொந்த ஊரான சடாராவில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள் அவரது வீட்டில் திரண்டனர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தினர். இதையொட்டி அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன.


மகாராஸ்டியின் சிந்துதாத் மாவட்டத்தில் தாப்கோலி என்னும் குக்கிராமத்தில் அஜ்யுட் தாராபாய் தம்பதிகளின் பத்தாவது கடைசி மகனாக நரேந்திர தபோல்கர் அவர்கள்   கார்த்திகை மாதம் முதலாந்திகதி ஆயிரத்திதொளாயிரத்தி நாற்பத்தி ஐந்தாம் ஆண்டு  பிறந்தவர். 

இவரது தந்தையாரும் பகுத்தறிவாளர் ஆவர். மூத்த தமையனார் சிறந்த கல்வியாளர்.  தொழில்ரீதியாக  மருத்துவரான  நரேந்திர தபோல்கர் அவர்கள். பகுத்தறிவுப் போராளியான சைலா அவர்களை  மணம் புரிந்தார். இவர்களுக்கு கமித்,முக்தா என இரு பிள்ளைகள். 

1980 லிருந்து வெகுசன முற்போக்குச் செயற்பாட்டில்     தீவிரமாக செயல்பட்டு வந்த     நரேந்திர தபோல்கர் அவர்கள் முதலில்  1989களில் மராட்டிய அந்தா ஷ்ரத்தா நிர்மூலன் சமிதி என்ற மூட நம்பிக்கை எதிர்ப்பு இயக்க நிறுவனத்தினை நிறுவினார். முதலாளித்து அமைப்பில் அதன் அசைவின்  இயங்குதலுக்காக சங்கிலிப் பின்னலாக கொழுவி வைக்கப்பட்டிருக்கும் மதம்,சாதி,பால்,நிறம் தொடரின் அடிப்படை மூடத்தினை தகர்க்க வலுவான பலவீனத்தினை கண்டறிந்து மூட நம்பிக்கைகளுக்கு எதிராக அவரை ஒத்த தோழர்களுடன் சேர்ந்து தீவிரமாக இயங்கினார். இதுவரையில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக இவரால் சுமார் மூவாயிரம் கருத்தரங்குகள். நடத்தப்பட்டிருக்கின்றன.

Tuesday, August 13, 2013

இலங்கை: வடமாகாணத்தேர்தலும் 13வது சட்டத்திருத்தமும்

-அ.மார்க்ஸ்- 

(இலங்கையின் அரசியல் சட்ட வரலாற்றில் முதன் முதலாக Unitary State என்பதற்கு மாற்றாக unitary வடிவத்திற்குள் மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்குதல் என்கிற கருத்தாக்கத்தை ஏற்றுக் கொண்ட அரசியல் சட்ட வடிவம் 13வது திருத்தம். ஆனால் இத் திருத்ததின் மூலம் வழங்கப்படும் மாகாண அதிகாரங்கள் எத்தனை அபத்தமானவை என்பதை இக்கட்டுரை விரிவாக அலசுகிறது. இந்த 13வது திருத்தத்தையும் நீர்க்கச் செய்ய இலங்கை அரசு முயற்சித்து வரும் சூழலில், இத் திருத்தத்தின் அடிப்படையில் வட மாகாணத்தில் நடத்தப்படும் தேர்தல் தமிழர்களுக்கு எந்த அரசியல் அதிகாரத்தையும் உண்மையில் அளிக்கப் போவதில்லை என்றாலும், இன்றைய சூழலில் இந்தத் தேர்தலில் தமிழர் கட்சிகள் பங்கேற்பது அரசியலதிகாரத்தை நோக்கிய போராட்டத்திகான ஒரு வலுவான தளத்தை ஏற்படுத்தித் தரும், அந்த வகையில் தேர்தலில் பங்கேற்பது என தமிழர் அரசியல் கட்சிகள் எடுத்துள்ள முடிவு சரியானதே என வாதிடுகிறது இக் கட்டுரை)
த.தே.கூ தலைவர்கள்
த.தே.கூ தலைவர்கள்



இலங்கையில் வடமாகாணத்திற்கான தேர்தல் வரும் செப்டம்பரில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளைத் துவங்கிவிட்டன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துள்ளது. அவரும் தொடக்க மறுப்புகளுக்குப் பின் அதை ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஜூலை 27,1987 அன்று இயற்றப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடியாக நவம்பர் 14,1987 அன்று இலங்கைப் பாராளுமன்றம் இயற்றிய 13வது சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் 26 ஆண்டுகளுக்குப் பின் இப்போது ஈழத் தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசமான வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடக்கப் போகிறது. இடையில் என்னென்னவோ நடந்துவிட்டன. ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட ராஜிவ் காந்தி, ஜெயவர்த்தனா இருவரும் இப்போது இல்லை. விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு நான்காண்டுகள் ஓடிவிட்டன.

இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போதுகூட வட மாகாணத் தேர்தல் குறித்த முறையான அறிவிப்பு எதையும் ராஜபக்‌ஷே அரசு வெளியிடவில்லை. ஏதாவது ஒரு காரணம் சொல்லித் தேர்தலை ரத்து செய்வதுதான் இலங்கை அரசின் நோக்கமாக இருக்கிறது. தேர்தல் நடந்தால் நிச்சயமாக இங்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (த.தே.கூ) வெற்றி பெறும். இலங்கையின் ஒரு  மூலையில் கூட ராஜபக்‌ஷே குடும்பத்திற்கு விசுவாசமாக இல்லாத ஒரு அரசு வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர் சகோதர்கள். பாதுகாப்புச் செயலர் கோத்தபயா, ”இன்னும் தனி நாட்டுக் கோரிக்கையை வைத்துக் கொண்டுள்ள ஒரு கட்சியிடம் (அதாவது த.தே.கூ) காவல் அதிகாரத்துடன் கூடிய அரசைக் கையளிக்க இயலாது” என வெளிப்படையாகக் கூறியுள்ளார் (மே23, 2013).

Wednesday, July 31, 2013

"உறவு " திரைப்படம்.ரசித்தது கவிதா.


-கவிதா-

தமது அடையாளங்களைத் தொலைத்திருக்கும் புலம்பெயர் ஈழத்துத்தமிழ் திரைப்படங்கள் தற்பொழுது மீண்டும் தமது முகவரிகளைத் தேடத்தொடங்கியுள்ளன. அவ்வப்போது திரையிடப்படும் குறும்படங்களிலும், ஒளிஇசைகளின் மூலமும் மெல்ல மெல்ல தமது பாதையைத் தேடிக்கொண்டிருக்கின்றன.

ஈழத்திலும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியிலும் வளர்ந்துவரும் திரைக்கலை பெரும் சவால்களுக்கு மத்தியில் தன்னை இழுத்துக் கொண்டுபோகவேண்டிய நிலையில் உள்ளதாகவே நான் நினைக்கின்றேன். தென்னிந்திய சினிமாக்களின் தாக்கத்தையும் ஆக்கிரமிப்பையும் மீறி ஈழத்துச்சினிமா தனது அடையாளத்தை கண்டுகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது என்பதில் ஐயமில்லை.

தென்னிந்தியத் திரைப்படங்களுக்குக் கிளம்பும்போது இருக்கும் உற்சாகம் ஏனோ நமது ஈழத்துப் படைப்புகளுக்கு போகும் போது ஏற்படுவதில்லை. கடமைக்காக போவது, அழைப்பின் கட்டாயத்தில் போவது, எமது கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகப்போவது என்று இப்படி பல காரணங்களுக்காகவே ஈழத்துத்திரைப்படங்களுக்கு நாம் செல்கிறோம் என்பதுதான் உண்மை. இப்படித்தான் நானும் ஒரு ஈழத்து திரைப்படத்தைப் பார்ப்பதற்காக் சென்றேன். எமது கலைஞர்களின் படைப்பிற்கு சமூகமளிக்கவேண்டும் என்ற எண்ணம் தவிர வேறு ஏதுவும் என்னை உற்சாகப்படுத்தியிருக்கவில்லை. எப்படியோ அலுப்படிக்கப் போகிறது ஆனாலும் போய்வருவோம் என்ற மனநிலையில்த்தான் கிளம்பினேன். 

இந்த எண்ணத்தை முற்றிலுமாக மாற்றிப்போட்ட «உறவு» திரைப்படத்திற்கு முதலில் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். ஒரு முழுநீள ஈழத்துத்திரைப்படம் இரண்டு மணித்தியாளங்களுக்கு மேலாக எம்மை நகரவிடாமல் உட்காரவைத்த பெருமை கனடாவைச் சேர்ந்த இயக்குர் திவ்யராஜனையே சாரும். 

Sunday, July 28, 2013

தேவதாசி முறையும் சொர்ணமாலாவும் ஒரு குறிப்பு

-அ.மார்க்ஸ்-
சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியின் நாட்டியத் துறை சார்பாக நடத்தப்பட்ட பரத நாட்டியம் தொடர்பான ஒரு சர்ச்சையை பத்திரிக்கையாளர் கவின்மலரின் பக்கத்தில் பார்த்தேன். Devadasi System  and Bharatha Natyam என்கிற தலைப்பில் அக் கல்லூரியின் நாட்டியத் துறையில் ஒரு உரை நிகழ இருப்பதாக வந்த அறிவிப்பைப் பார்த்துவிட்டு முதலில் பேரா. சரஸ்வதி தொலை பேசியிலும் பின்னர் சரஸ்வதி,  பெண்ணியச் சிந்தனையாளர் ஓவியா, வழக்குரைஞர் அஜிதா, கவின்மலர் ஆகியோர் நேரிலும் சென்று கல்லூரி முதல்வரிடம் பேசியுள்ளனர். “தேவதாசி முறை ஒழிக்கப்பட்டுவிட்டது. இந்நிகழ்வு அதை மீண்டும் மாணவர்களிடையே நியாயப்படுத்துவதாக அமைந்துவிடுமோ என்கிற அச்சத்தை” அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அவ் உரை ரத்து செய்யப்பட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.

தொலைபேசியில் கூறியதை ஒட்டி ‘Evolution of Bharathanatiyam' என்பதாக உரைத் தலைப்பு மாற்றப்பட்டுவிட்டதாகவும், ‘’இது கலை சார்ந்த நிகழ்வாக இருக்கும். சொர்ணமால்யாதான் பேசுகிறார்’’ என்றும் கல்லூரி தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

நிகழ்வின்போது இவர்களும் சென்று உரையைக் கேட்டுள்ளனர்.  உரைத் தலைப்பு அதுவாக இருந்தபோதிலும்  சொர்ணமாலாவின் பவர் பாயின்ட் ஸ்லைட் தலைப்பு  'Devadasis - Wives of God' என்பதாகாக இருந்துள்ளது. மாலா என்ன பேசினார் என்பது முழுமையாகத் தெரியவில்லை. கவின்மலரின் பதிவிலிருந்து அவர் தேவதாசி முறையைப் போற்றிப் பேசினார் என்றும் தேவதாசியரால் வளர்க்கப்பட்ட ‘சதிரில்’ இருந்தே பரதம் தோன்றியதாகவும் அவர் பேசியதாகத் தெரிகிறது. தேவதாசி சாதி உருவானது, முத்து லட்சுமி ரெட்டி போன்றோர் அதை ஒழித்தது முதலியன குறித்தும் அவர் சில தவறான கருத்துக்களை முன் வைத்ததாகவும் அதற்கு ஓவியா முதலானோர் அங்கேயே எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் அறிகிறேன்.

Thursday, July 25, 2013

நோர்வேயில் திவ்வியராஜனின் உறவு

நோர்வேயில் திவ்வியராஜனின் உறவு

Thursday, July 18, 2013

41வது இலக்கியச் சந்திப்பு - யாழ்ப்பாணம் 2013

ஊடக அறிக்கை:

41 வது இலக்கியச் சந்திப்பு  (இலங்கை - யாழ்ப்பாணம்) எதிர்வரும் யூலை 20 - 21ம்திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. கீழ்வரும் வகையில் இலங்கைஇலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி உள்ளடக்கங்கள் அமையும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகம், பன்மைத்துவம், சமனிலை என்பவற்றின் அடிப்படையில் ஈழ இலக்கியத்தில்பேசுபொருளாக இருந்த - இருக்கின்ற அனைத்து விடயங்கள் பற்றியும் எத்தகைய சார்புநிலைகளுமின்றி, பேசுவதற்கான அரங்குகள் திறந்துள்ளன.

 1.பாரம்பரியக் கலைகள் 
  மலையக, முஸ்லிம், தமிழ்ச் சமூகங்களின் கலை, பண்பாடு, மரபுரிமை மற்றும்அவற்றின் இன்றைய நிலை தொடர்பான அரங்கு.

 2.சாதியம்
யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு, கிழக்கு, மலையகம், புலம்பெயர் சூழல் ஆகிய இடங்களில்சாதியம்.

சமூகச் செயற்பாட்டனுபவங்கள் மற்றும் சமகாலச் சவால்கள்
பொது மற்றும் சமூக சேவைகள், செயற்பாடுகளில் பணிசெய்தல் மற்றும் பணி செய்வோர் தொடர்பான விடயங்கள். (போர் மற்றும் போருக்குப் பிந்தியகால உளவியல்)

4.இலக்கியம்
மலையக, முஸ்லிம், தமிழ், தலித், விளிம்புப்பால்நிலை, புலம்பெயர் இலக்கியத்தளங்கள்  மற்றும் கவின் கலைகள்.

தேசிய இனங்களின் பிரச்சினைகள் 
மலையக, முஸ்லிம், தமிழ், சிங்களத் தேசியவாதங்கள், தேசியமும் பெண்களும், காணி தொடர்பான பிரச்சினைகள், தேசிய இனங்களுக்கு இடையிலான உறவுகள்.

மேற்கண்ட கருத்தாங்கங்களில் பேசப்படுவதற்கான அரங்குகளில் பல்வேறு தரப்பைச் சேர்ந்த ஆளுமைகளும் செயற்பாட்டாளர்களும் பங்கேற்பர். ஒவ்வொரு தலைப்பினையும் பெண்ணிய நோக்கில் அவதானிக்கும் உரைகளும் இடம்பெறும்..

 *கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

- 41வது இலக்கியச் சந்திப்புஏற்பாட்டுக்குழு, யாழ்ப்பாணம்.

Wednesday, July 10, 2013

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 70ஆவது ஆண்டுவிழா

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 70ஆவது ஆண்டு விழா யாழ்ப்பாணம் பலநோக்கு கூட்டுறவுச் சங்க கேட்போர் கூடத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தோழர் சிவராஜா தலைமையில் இன்றுபிற்பகல் 2.30மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் டியூ குணசேகர, கட்சியின் உபதலைவரும் புனருத்தாபன அமைச்சருமான சந்திரசிறி கஜதீர, நேபாள அரசின் முன்னைநாள் பிரதமரும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான தோழர் மாதேவ் குமார் நேபாள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா, பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எவ் பொதுச்செயலர் தி.சிறீதரன் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும், கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் பெருமளவிலான பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர். இந்நிகழ்வில் நேபாள முன்னைநாள் பிரதமரும், நோபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான தோழர் மாதேவ் குமார் நேபாள் மற்றும் தோழர் டியூ குணசேகர ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். அத்துடன் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தன.  

Tuesday, July 02, 2013

கட்டாய திருமணத்திற்கு எதிரான சட்டம்

sinthuja1
கட்டாய திருமணத்திற்கு எதிரான சட்டம் இன்று முதல் சுவிட்சர்லாந்தில் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்டு ஆகக்குறைந்தது 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சுவிட்சர்லாந்தின் சமஷ்டி அரசு அறிவித்துள்ளது.
கட்டாய திருமணத்தை செய்து வைப்பதில் சுவிட்சர்லாந்தில் உள்ள இலங்கை தமிழர்கள் பெரும்பாலும் ஈடுபடுவதாக சுவிசர்லாந்தின் பிரபல பத்திரிகையான சொண்டாக் பிளிக் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடாந்தம் சராசரி 400 கட்டாய திருமணங்கள் நடப்பதாகவும் இலங்கை, துருக்கி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், போன்ற நாடுகளை சேர்ந்த பெற்றோரே தமது பிள்ளைகளின் விருப்பத்திற்கு மாறாக கட்டாய திருமணங்களை செய்து வைக்கின்றனர் என்றும் சுவிஸ் சமஷ்டி அரசின் ஆதரவுடன் நொசத்தல் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சூரிச் மாநிலத்தில் உள்ள 22வயதுடைய சிந்துஜா என்ற தமிழ் பெண் தமது பெற்றோர் தனக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக தெரிவித்துள்ளார். 16வயதில் விடுமுறைக்காக இலங்கைக்கு சென்ற போது தனது விருப்பத்திற்கு மாறாக தனது தந்தை தனக்கு தெரியாத ஒருவருக்கு திருமணம் முடித்து வைத்ததாகவும் அத்திருமணத்தை செய்யவில்லை என்றால் உன்னை கொலை செய்வேன் என அச்சுறுத்தினார் என்றும் சொண்டாக் பிளிக் பத்திரிகைக்கு சிந்துஜா தெரிவித்துள்ளார்.
இப்பொழுது தனது பெற்றோரை பிரிந்து தனது நண்பருடன் வாழ்ந்து வரும் சிந்துஜா பெரும்பாலான தமிழ் பெண்கள் பெற்றோர்களால் அச்சுறுத்தப்படுவதாகவும் பெண்கள் தாங்கள் சுயமாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இப்பொழுது தனது பெற்றோருடனான தொடர்புகளை முற்றாக துண்டித்து சுதந்திரமாக வாழ்வதாகவும் முன்னர் தனது தந்தை எல்லா விடயத்திற்கும் கட்டுப்பாடுகளை விதித்து அடக்கி வைத்ததாகவும் 22வயதுடைய சிந்துஜா தெரிவித்துள்ளார்.

Wednesday, June 26, 2013

டொமினிக் ஜீவா பிறந்த தின சந்திப்பு

மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களின் 87 வது பிறந்த தின சந்திப்பு

Wednesday, June 05, 2013

பிணங்களால் பிரச்சினை இல்லை மனுஷங்கதான் பிரச்சினை



சுடுகாட்டின் திசையிலேயே பெண்கள் நடக்கக் கூடாது என்று கட்டுப்பாடு காக்கும் சமூகம் நம்முடையது. சுடுகாட்டுக் காற்று அடித்தாலே ஆவி  அண்டியதாக அஞ்சும் மக்கள் மத்தியில்தான் கிருஷ்ணவேணி வாழ்கிறார். அனாதைப் பிணங்களை வண்டியில் சுமந்துவந்து அடக்கம் செய்வதோடு,  சந்நியாசித்தோப்பு சுடுகாட்டுக்கு வரும் ஊர்ப் பிணங்களை எரிக்கும் பணியையும் செய்கிறார்.


புதுவை பொது மருத்துவமனை வளாகத்திலிருந்து கிளம்புகிறது அந்த வண்டி. முன்னும் பின்னும் பிணவண்டியிலிருந்து சகிக்க இயலாத நாற்றம்  நாசியை உறுத்துகிறது. வியர்வை உருக உருக வலுகொடுத்து வண்டியை இழுத்துச் செல்லும் கிருஷ்ணவேணியை சபித்துக்கொண்டே நடக்கிறார்கள்  மக்கள். பிரதான சாலையைக் கடக்கும் வண்டி, சந்துகளில் நுழைந்து சந்நியாசித்தோப்பு சுடுகாட்டை வந்தடைகிறது. வண்டியை நிறுத்திவிட்டு,  படபடவென மண்வெட்டியை எடுத்து குழிவெட்டத் தொடங்குகிறார் கிருஷ்ணவேணி. குழி ஆழமானதும் வண்டியைச் சரிக்க, குழியில் விழுகிறது  வெண்துணி போர்த்திய சடலம். அருகே அமைதியாக எரிந்து கொண்டிருக்கிறது இன்னொரு பிணம்.



பிணம் புதைக்க குழி தோண்டித் தோண்டி கைகளில் இயல்புக்கு மீறிய சுருக்கங்கள். வாழ்க்கையின் இருட்டுப்புற ரகசியங்களை கண்டடைந்து விட்ட  ஞானியைப் போல அலட்சியம் தொனிக்கும் பார்வை... கிருஷ்ணவேணி சாதாரண மனுஷியில்லை. சாதனை மனுஷி.


‘‘இந்த ஊர்லதான் நான் பொறந்தேன். அப்பன் பேரு பிச்சமுத்து. முனிசிபாலிட்டில குப்பை வேலை செஞ்சார். அம்மை பேரு செங்கேணி. நாலு  புள்ளைகள்ல மூத்தவ நான். ஆறாப்பு வரைக்கும் படிச்சிருக்கேன். மூத்த பிள்ளைங்கிறதால சிறு வயசுலயே கல்யாணம் கட்டிட்டாங்க. புருஷன் பேரு  அல்பர். மனுஷன் தங்கமானவரு. குடிப்பழக்கம் மட்டும் உண்டு. ஒருநாளும் என்னை அழ வச்சுப் பாத்ததில்லை. 

Saturday, May 25, 2013

டி.எம்.எஸ் .மக்களின் பாடகன்.

-ஷாஜி-
                            இசை பயிற்சியல்ல இசை உணர்ச்சி

''நான் டி.எம்.எஸ் பாடல்களை வெறுக்கிறேன்'' என்று இப்போதுள்ள ஒரு தமிழ் பின்னணிப்பாடகர் என்னிடம் சொன்னார். அந்த வெறுப்புக்கான காரணத்தைக் கேட்டபோது அவரால் சரியாகச் சொல்ல முடியவில்லை. ''அவருடைய பாடல்கள் தமிழ்நாட்டின் வெயிலையும் புழுதியையும்தான் ஞாபகத்துக்குக் கொண்டுவருகின்றன'' என்று சொன்னார். ''நீங்கள் கோடைவிடுமுறைக்கு மட்டும் தமிழ்நட்டுக்கு வந்திருப்பீர்கள். அப்போது மட்டுமே அந்தப்பாட்டுகளைக் கேட்டிருப்பீர்கள்'' என்று நான் சொன்னேன். தமிழ்நாடில் பிறந்து வேறு பகுதிகளில் வளர்ந்த ஒரு சிறுவனின் மனப்பதிவு மட்டும்தான் அது. சிலர் அந்த மனப்பிராயத்தை தாண்டுவதேயில்லை!

நானும் சிறுவயதில் டி.எம்.எஸ் பாட்டை அவ்வளவாக விரும்பவில்லை. ஜேசுதாசை உலகிலேயே பெரிய பாடகர் என்று நினைத்திருந்த காலகட்டம் அது. ஆனால் கொஞ்சவருடங்களுக்குள்ளேயே டி.எம்.எஸ் பாட்டை கவனிக்க ஆரம்பித்தேன். அவரது பாட்டு என் மனதில் தீவிரமான பதிவை உண்டுபண்ணியிருந்தது என்ற ஒரே காரணத்தால் ஒரு முறை அவரது பாடலொன்றை பள்ளிநிகழ்ச்சியில் பாடினேன். பாடலின் வரிகளோ அதன் மெட்டோ எதுவுமே சரியாக தெரியாமல் மேடையேறி மானத்தை வாங்கினேன். மேற்கொண்டு நான் பாட்டே பாடக்கூடாது என்று எச்சரித்தார் தலைமையாசிரியர்.

'அண்ணாச்சி' என்று நாங்கள் அழைத்த ஒருவரிடமிருந்து தான் டி.எம்.எஸ் பற்றிய என் நினைவுகள் ஆரம்பிக்கின்றன. 'அண்ணாச்சி' என்றுதான் எல்லா தமிழர்களையும் எங்களூரில் சொல்வார்கள். மற்றபடி அவர் பெயரே தெரியவில்லை. அவர் ஒரு தேநீர் கடையில் தினக்கூலித் தொழிலாளர். கரிய மெலிந்த மனிதர். முகத்தில் சின்னப்பையன்களைப்போல ஒரு இனிய சிரிப்பு உண்டு. 'சத்தியமே லட்சியமாய் கொள்ளடா' பாட்டை அவர்
அருமையாக பாடுவார். அதைக் கேட்டநாள் முதல் அந்த அண்ணாச்சியே என் கதாநாயகன் என உறுதிபூண்டேன்.

Monday, May 20, 2013

காற்றில் கலந்த செங்கொடி ஓ.ஏ.ராமையா

-இரா.வினோத்-


இலங்கையின் மலையகத்தில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர் நலனுக்காகவும், தமிழர் உரிமைக்காகவும் துடி துடித்த மூத்த தொழிற்சங்கவாதி ஓ.ஏ.ராமையா நேற்றிரவு காற்றில் கலந்தார். கடந்த ஓராண்டாக உடல் நலிவுற்று இருந்த அவருக்கு அகவை 76!

''உலகத்தில் பசி... பட்டினி என்ற இருபெரும் பூதங்கள் தோன்றிய நாள் முதல் இன்று வரை உழைத்து உழைத்து ஓடாகி போன‌ பாட்டாளி வர்க்கத்தின் ரத்தம் கொடூரமாக உறிஞ்சப்பட்டு கொண்டே தான் இருக்கிறது. உலகமே கைக்குள் சுருங்கி விட்டதாக நாம் காலரை தூக்கி விட்டு கொண்டாலும், கால் வயிற்று கஞ்சிக்கு ஏங்கி தவிக்கும் வறண்ட நாவுகள் எத்தியோப்பியாவிலும், சோமாளியாவிலும், பாலைவனங்களிலும் மட்டுமின்றி பசும் போர்வைப் போர்த்தி செழுமையாக காட்சியளிக்கும் மலையகத்திலும் ஏராளமாக இருக்கின்றன.

இந்த அவல நிலை பொறுக்காமலே 'தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என சீறினான் பாரதி. மகாகவியும் மண்ணாகி போய் நூறாண்டு ஆகப்போகிறது. இன்னமும் மக்களின் வாழ்நிலை மாறலையே தம்பி!'' நான்கு மாதங்களுக்கு முன்பு ஓ.ஏ.ராமையாவை ஹட்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தபோது கடைசியாக உதிர்த்த உயிருள்ள வார்த்தைகள் இவை.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தென் தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது, இலங்கையின் தேயிலைத் தோட்டங்களுக்கு பஞ்சம் பிழைக்க சென்ற பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் ஒன்று தான் ராமையாவின் குடும்பமும். இலங்கையின் கண்டி மலை தொடரில் இருக்கும் நாவலபிட்டி, பூண்டுலோயாவில் உள்ள தோட்டமொன்றில் 1938ஆம் ஆண்டில் பிறந்தார். 'என்னுடைய தாய் நாடு இலங்கை என்றாலும், தமிழ் நாட்டுக்குள் கால் வைத்தாலே உடம்பெல்லாம் சிலிர்த்து விடும். என்னுடைய வேரும் வேரடி மண்ணும் இங்கே தானே இருக்கிறது. மறுத்தாலும், வெறுத்தாலும் இந்தியா என் தந்தை நாடு' என அடிக்கடி நினைவுகளை அசைப்போடுவார்.

இளம் வயது முதலே சமூக பிரச்னைக‌ளில் அக்கறை கொண்டிருந்த ஓ.ஏ.ராமையா 1950களின் இறுதியில் தனது வாழ்க்கையைத் தொழிற்சங்கத்தோடு இணைத்து கொண்டார். இலங்கை பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் செயலாளராக இருந்த போது, தேயிலைக் கூடையில் தேசத்தை சுமக்கும் மலையகத் தமிழர்களுக்காக போராடி பல்வேறு உரிமைகளை பெற்று கொடுத்திருக்கிறார்.