Tuesday, July 11, 2017

மண்வாசனைக்கு மகுடம் வைத்த நிலக்கிளி

-ஜீவகுமாரன் -


1973ல் வன்னி மண்ணின் வாசனையை இலக்கிய உலகத்திற்கு அறிமுகம் செய்த ’நிலக்கிளி’ நாவலின் ஆசிரியர். எழுத்தாளர் திரு. பாலமனோகரனின் 75வது பிறந்தநாள் தினக் கொண்டாட்டம் சென்ற சனிக்கிழமை மிக அமைதியான முறையில் குடும்ப உறவினர்கள் - நண்பர்கள் - இலக்கிய உலகுடன் தொடர்புடையவர்களுடன் நடந்தேறியது. டென்மார்க்கிற்கு வந்த காலம் தொடக்கம் அங்கிள் - அன்ரி என்ற உறவுமுறையே இப்போதும் தொடர்கிறது. மூத்த எழுத்தாளர் என்ற இடைவெளியுடன் ஏன் பழகவில்லை என்பதனை எனதுரையில் குறிபிட்டு இருந்தேன். எழுத்தாளர் பாலமனேகரனுக்கு ஒவியர் பாலமனோரன் என்று இன்னோர் பக்கம் உண்டு.
அவருக்கு எனது பரிசாக அவரின் சில ஓவியங்களையும் நிலக்கிளி நாவலின் அட்டைப்படத்தையும் தொகுத்து மிகச்சிறிய வாழ்த்தொன்றை எழுதியிருந்தேன்.இயற்கையும்  எழுத்தையும்  தன் சுட்டுவிரலுக்கும் பெருவிரலுக்கும்   இடையில் சிறைப்படுத்திய அங்கிளுக்கு  எமது 75வது பிறந்த தின வாழ்த்துகள்   ஜீவகுமரன் - கலாநிதி இந்த மிகச்சிறிய வாழ்த்தின் பொழிப்புரையே எனது 10 நிமிட பேச்சாக அமைந்திருந்தது. எனது பேச்சை எனது மனைவியார் டெனிஷ் நண்பர்களுக்காகவும் எம் இளம் தலைமுறையினருக்காகவும் டெனிஷ் மொழியில் மொழிபெயர்த்தார்.
இந்த அனைத்து ஓவியங்களிலும் உள்ள எளிமையும் கிராமியமணத்தின் தொகுப்புத்தான் நிலக்கிளி நாவல் என்றால் மிகையாகாது.