Saturday, May 31, 2014

எது ஹைகு

-ரீ.கே.கலாப்ரியா- 

ஹைகு பற்றி – ஒரு நண்பருக்குச் சொன்னவை :-

ஹைகுவின் தோற்றம் வளர்ச்சி இவை பற்றிப் பேசும் முன், தமிழ்க் கவிதைப் பரப்பில் அதன் தாக்கம் பற்றிய தகவல்களைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். பாரதியார்தான் முதன் முதலில் ஹைகு பற்றிப் பேசுகிறார். கல்கத்தா ’ஸ்டேட்ஸ்மென்’ பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு கட்டுரையை மேற்கோள் காட்டி அவர் வியக்கிறார். அவர் ஹைக்குவின் அசல்ப் பெயரான ’ஹொக்கு’என்று எழுதுகிறார். கல்கத்தா என்கிறபோது தாகூர் அது பற்றித் தெரியாமல் இருந்திருப்பாரா.தாகூரது ‘Stray Birds’ என்ற அற்புதமான நூலில் ஹைகு சாயலில் பிரமாதமான கவிதைகள் எழுதியிருக்கிறார். அது பற்றிப் பின்னால் காண்போம். நவீன தமிழில் கசடதபற இதழில் ஒரு ஹைகுவை மொழி பெயர்த்துப் போட்டிருந்தார்கள். ரைஸான் எழுதிய அந்தக் கவிதையைப் பின்னால் சொல்லுகிறேன். நான் ஹைகு பற்றி அப்போதுதான் அறிந்து கொண்டேன். அந்தப் பாதிப்பில்

“நேரங்கழித்துக் குளிக்கின்றன
மழை பெய்கையில்
மரத்தடியில் சிந்திய மலர்கள்” (1970)
*
”தொலைவில் புணரும் தண்டவாளங்கள்
அருகில்ப் போனதும்
விலகிப் போயின” (1970)

என்றெல்லாம் நானும் எழுதினேன்.

ஹைகு அல்லது ஹொக்கு, முதலில் ’டாங்கா’ என்ற கவிதை வடிவத்திலிருந்து பிறந்தது. அதில் ஐந்து வரிகள் இருக்கும். அது ஒரு போட்டிப் பாடல் போல. முதல் மூன்று வரிகளை ஒருவர் சொல்ல அதை முடித்து வைக்கும் கடைசி இரண்டு வரிகளை இன்னொருவர் சொல்ல வேண்டும். ’டாங்கா’வின் முதல் மூன்று வரிகளை ‘ஹொக்கு’ என்பார்கள். பிற்காலத்தில் இந்த முதல் மூன்று வரிகளே ஒரு அற்புதக் கவிதை வ்டிவமாக நிலைத்து விட்டது. அதனாலேயே ‘ஹொக்கு’ என்பது ’ஹைகு’வாக ஆனதாகவும் சொல்வார்கள். ஹைகுவுக்கென்ற இலக்கணம்: அதில் பதினேழு அசைகள் மட்டுமே இருக்கும்,முதல் மற்றும் கடைசி வரிகளில் ஐந்து அசைகளும்,நடு வரியில் ஏழுமாக மொத்தம் பதினேழு அசைகள் (Syllables). அநேகமாக கவிதையில் ஏதாவது ஒரு பருவம் அல்லது பருவத்தைக் குறிக்கும் ஒரு நேரடிச் சொல், அல்லது பருவத்திற்குரிய பூச்சிகள், பொழிவுகள் போல எப்படியும் ஒரு சொல் இடம் பெற வேண்டும். ஒரு நல்ல ஹைகு வெறும், இயற்கை அல்லது உணர்ச்சி பற்றிய ’வசன வாக்கியமோ’ அல்லது இயற்கைச் சித்திரமோ மட்டுமல்ல, ’மேம்போக்கான பார்வை’க்குத் தென்படாத, இரண்டு வெவ்வேறு விஷயங்களுக்கு இடையேயுள்ள அடையாளத்தைச் சொல்ல வேண்டும். நமக்கு உள்ள வெண்பா, கலிப்பா போன்ற பாவிலக்கணம் மாதிரியான ஒரு விஷயம் இது. அதனால்த்தான் சுஜாதா அடிக்கடி சொல்வார், தமிழில் வருபவை ஒரு வகை குறுங்கவிதைகளே தவிர ‘ஹைகு’ அல்ல, என்று. 70களின் பிற்பகுதியில் இருந்து தமிழில் நிறைய குறும்பாக்கள் வருகின்றன, அதற்கு முன்பே கூட குறள் வெண்பா போல ஏற்கெனவேயும் இருக்கின்றன. தாகூரை இதற்கு முன்னோடியெனச் சொல்லலாம்

எரியும் நினைவுகள்- யாழ் நூலகம்

ஓர் கலாச்சாரப் படுகொலையின் நினைவைத் தொடரும்
எம்.ஏ.நுஃமான் அவர்களின் கவிதை
(தமிழ், சிங்களம், ஆங்கிலம், காணொளி)
புத்தரின் படுகொலை!
----------------------------------
நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது.
இரவில் இருளில்
அமைச்சர்கள் வந்தனர்.
'எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை
பின் ஏன் கொன்றீர்?'
என்று சினந்தனர்.
'இல்லை ஐயா,
தவறுகள் எதுவும் நிகழவே இல்லை
இவரைச் சுடாமல்
ஓர் ஈயினைக் கூடச்
சுடமுடியாது போயிற்று எம்மால்
ஆகையினால்......
என்றனர் அவர்கள்.
'சரி சரி
உடனே மறையுங்கள் பிணத்தை'
என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.
சிவில் உடையாளர்
பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.
தொண்ணூறாயிரம் புத்தகங்களினால்
புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்
சிகாலோவாத சூத்திரத்தினைக்
கொழுத்தி எரித்தனர்.
புத்தரின் சடலம் அஸ்தியானது
தம்ம பதமும்தான் சாம்பல் ஆனது.
- எம்.ஏ.நுஃமான்
-----------------------------------------------------
මම දිටිමි සිහිනයක් ඊයේ රෑ
මරන ලදහ බුදුහිමියෝ වෙඩි තබා
නීතිය රකින පොලිසිය විසින්
ලෙයින් පෙගුණු ශ්රී දේහය
වැතිර තිබිණි
යාපා පටුනේ පුස්තකාලය අභියස
පැමිණියහ ඇමතියෝ අඳුරට මුවා වීල
ප්රශ්න කළහ කෝපාවිශ්ට වල
,නැත මොහුගේ නම අපේ ලැයිස්තුවේ
වැරදීමක් වෙලාවත් ද?,
,නෑ නෑ ඇමතිවරුනිෟ
වැරදීමක් වෙලා නැහැල
නොයවා මොහු පරලොව
හානියක් කළ හැකි ද කුරා කුහුඹියෙකුටවත් ?,
තැතනූහ පොලිස්කාරයෝ
—හා හරි හරිෟ සඟවාපියව් සිරුර වහා ම,
කියමින් අතුරුදන් වූහ ඇමතියොA
එකෙණෙහි ම ඇදගෙන යනු ලැබිණ ශ්රී දේහය
පුස්තකාලය තුළට
සිවිල් ඇඳුමින් සිටි
පොලිස්කාරයෝත
ගොඩගැසූහ දේහය මත පොත්
ඉතා දුර්ලභ ඉතා අගනා
අනූ දහසක්
ඉක්බිති ගිනි තැබූහ චිතකයට
සිඟාලෝවාද සූත්රය ගිනි හුල ලෙස ගෙන
මෙසේ ගිනිබත් විය
රන් වන් බුදු බඳ
දම්මපදයත් සමඟ
--------------------------------------------------
Last night
I had a dream
Lord Buddha was shot dead
by the police-
guardians of the law.
His body lay drenched in blood
on the step
of the Jaffna Library
Under cover of darkness
came the ministers.
“His name-not in our lists
Why did you him?”
they ask in anger.
“No, sirs, no
There was no mistake.
Without bumping him off
it was impossible
to harm even a fly.
Therefore…,” they stammered.
“Okay, okay,
Hide the corpse.”
The ministers vanish.
The men in civvies
dragged the corpse
into the library.
They heaped the books,
rare and valuable,
ninety thousand in all.
They lit the pyre
with the Cikalokavada Sutta.
Thus the remains
Of the Compassionate One
were burned to ashes
along with the Dhammapada.

Sunday, May 25, 2014

சிறுபான்மையினத்தவரின் ஐக்கியம் குறித்த மலையகமக்களின் கலந்துரையாடல்


சிறுபான்மை தேசிய இனமக்களின் ஒருமைப்பாட்டிணக்க முயற்சியில், மலையக மக்களினது அரசியல் உரிமைபற்றிய கலந்துரையாடல் நேற்று லண்டனில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் ஆயதப் போராட்டம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புலம் பெயர் சூழலில் பல்வேறு தரப்பினராலும் அமைப்புக்களாலும் சிறுபான்மை தேசிய இன மக்கள் தொடர்பான அரசியல் செயற்பாடுகள் முனைப்புப்பெற்று வருகின்றன.

சிறுபான்மை தேசிய சமூகங்களை ஒன்றுதிரட்டி, ஒருமித்த கருத்துடன் அவர்களின் அரசியல் தீர்வுபற்றிய கோரிக்கை ஒன்றினை அல்லது திட்டவரைபொன்றினை முன்மொழியும் பட்சத்தில், அது சாதகமான அரசியல் சூழலை இலங்கையில் உருவாக்கலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், லண்டனில் அமைந்துள்ள தமிழ்மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம், சிறுபான்மை தேசிய இனம்சார்ந்த கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றது.

இந்தவகையில் நேற்று லண்டன் ஈஸ்ற்ஹாமில் மலையக மக்களின் அரசியல் உரிமைகள் பற்றியும், சிறுபான்மை இன மக்களின் ஒருமைப்பாட்டில் மலையக மக்களினது இணைவின் அவசியம் பற்றியும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நான்கு தசாப்தத்திற்கு மேலாக மலையக மக்கள் மத்தியில் பணியாற்றி வருபவரும், மனிதஉரிமைகள் செயற்பாட்டாளரும், ஆய்வாளரும் சமூகவியலாளருமான அருட்தந்தை கை டி பொன்கலன் கலந்துகொண்டார்.

அருட்தந்தை கை டி பொன்கலன் மார்ச் மாதம் 24 ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் கலந்து கொண்டு மலையக மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக உரையாற்றியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்கள் இராணுவ அடக்குமுறை, பௌத்த மேலாதிக்கம், அரசியல் அடக்குமுறை, சிங்களமயமாக்கல், நிர்வாக அடக்குமுறை என்பவற்றால் தொடர்ச்சியாக பாதிக்கப்படுகின்றார்கள் என்றும், இம்மக்களிடையே உள்ள வேறபாடுகளையும் கருத்துமுரண்பாடுகளையும் களைந்து ஒருமித்த நோக்கோடு அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்று இந்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டிருந்தன. இந்த கலந்துரையாடலில் பல சமூக ஆர்வலர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் உரையாற்றினார்கள். தலைமைக்கு கட்டுப்படும் இயல்புகொண்ட மலையகமக்களின் பலம் அரசியல் தீர்வுகளில் முக்கியமானது என்று எழுத்தாளரும் ஆய்வாளருமான டீ.யு. காதர் குறிப்பிட்டார்.

இன்றுள்ள நெருக்கடி நிலையில் இருந்து சிறுபான்மை தேசிய இன மக்களின் உரிமைகளை மீட்க வலுவான கருத்துவாக்கங்களும் அதற்கான தலைமையும் செயற்பாடுகளும் தேவை என்று கலந்துகொண்டவர்கள் தெரிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்றி - ஆதவன் நியுஸ்

Tuesday, May 20, 2014

மலையக மக்கள் குறித்து "இருள்வெளிப் பயணம்

பெர்லினில் இடம்பெற்ற 42வது இலக்கிய சந்திப்பில் மலையக மக்கள் குறித்து "இருள்வெளிப் பயணம்" என்கிற தலைப்பில் மு.நித்தியானந்தன் அவர்கள் ஆற்றிய உரை. 

Monday, May 12, 2014

ஈழத்துப் பெண் எழுத்தாளர் சித்ரா நாகநாதன்


-மைகேல் கொலின்-
தாகம் கலைஇலக்கிய காலாண்டிதழின் மூலம் பரவலாக அறியப்பட்ட சித்ரா நாகநாதன் ஈழத்து பெண் எழுத்தாளர்களில் தனித்துவமானவர். அவரது முதல் சிறுகதைத் தொகுதி “ கிராமத்து மண்கள் சிவக்கின்றன “ தாகம் வெளியீடாக 1990 இல் வெளிவந்து அந்த வருடத்தின் வட-கிழக்கு மாகாண தமிழ் சாகித்திய விருது பெற்றது. இதன் வெளியீட்டு விழா (1990 சித்திரை ) திருகோணமலையிலும் ஆணி மாதம் அறிமுக விழா யாழ் – நாவலர் மண்டபத்திலும் நடைபெற்றது. இதில் பிரபல எழுத்தாளர்கள் அமரர் செம்பியன் செல்வன், அ.யேசுராசா (இன்னும் ஒரு எழுத்தாளர் பெயர் ஞாபகம்வரவில்லை) அக் காலத்தில் இளம் கவியாக அறியப்பட்ட செல்வி மைதிலி அருளையா ஆகியோர் விமர்சன உரைஆற்றினர். அன்றைய காலத்தின் போர்க்கால சூழ்நிலைகளின் காரணமாக பிரான்ஸுக்கு புலம் பெயர்ந்த சித்ரா நாகநாதன் 1990 களின் போர் நிலைகளை வைத்து எழுதிய “தாகம்” என்ற சிறுகதை “தாகம்’எட்டாவது ஆண்டு மலரில் (20 இதழில்) வெளியானது. கலாநிதி செங்கை ஆழியான் “ஈழத்துச் சிறுகதை வரலாறு” என்ற தனது ஆய்வு நூலில் சித்ரா நாகநாதன் பற்றி இவ்வாறு எழுதுகிறார். 
சித்ரா நாகநாதன் எழுதிய சிறுகதைகள் ஒரு காலகட்டத்தின் மறைக்கப் படக் கூடாத ஆவணங்களாகவுள்ளன . கிழக்கிலங்கையில் இந்திய அமைதிப் படையின் காலகட்டத்தில் நடந்தேறிய சோக நாடகங்களை அப்படியே தனது சிறுகதையில் சித்ரா நாகநாதன் தந்துள்ளார். இலக்கியம் ஒரு காலகட்டத்தின் கண்ணாடி எனின் சித்ராவின் சிறுகதைகள் அவ்வாறானபணியினைச் செய்கின்றன.கலாபூர்வமெனும் போது இச் சிறுகதைகள் அடிபட்டுப் போனாலும் சமுகவியலாவணமாக இவை மிளிர்கின்றன.