Sunday, November 13, 2022

Tillykke ! Ratch

Tillykke ! Ratch டென்மார்க்கில் பிலுண்ட் நகரசபையின் இரண்டாவது பதில் நகரபிதா சமூக ஜனநாயகக் கட்சியினைச் சேர்ந்த நண்பர். ஜெயராஜா ராசையா Jeyarajah Rasiah er ny 2. viceborgmester i Billund kommune Nyheder november 10, 2022
 வருடங்களுக்கு முன்பாக அன்று எமது டென்மார்க் நாட்டின் Integrationsminister Mattias Tesfaye தனது Tweeter செய்து மூலம் ஒரு கருத்தினை வெளியிட்டிருந்தார். அச்செய்தியில் அவர் எழுதியிருந்தார் தாய்லாந்து, ஸ்ரீ லங்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் இருந்து டென்மார்க்கிற்கு குடிபெறுபவர்களால் டென்மார்க்கில் பாரியளவில் பிரச்சினை எதுவும் இல்லை என்றும், மற்றும் இது போன்ற நாடுகளில் இருந்து இங்கே வருபவர்களால் தனக்கு இணைவாக்க அமைச்சர் என்ற முறையில் அவர்களை டென்மார்க்கில் ஒருங்கிணைப்பு செய்வதற்கு கூட தான் நேரம் பாவிக்கத்தேவை இல்லை என்றும், அதைவிட இது போன்ற நாடுகளில் இருந்து இங்கே அந்த மக்கள் வந்து குடியேறுவது டென்மார்க்கிற்கு மிகவும் நல்ல விடயம் எனவும் சொல்லியிருந்தார். இவர் இந்த அறிவிப்பில் இலங்கையனரான எங்களையும் சேர்த்ததை நினைத்து நாம் சந்தோசப்படனும். இலங்கையரை/ தமிழர்களை பல அமைச்சர்கள் மற்றும் பல அரசியல் கட்சிகள் இப்படியாக முன்பும் பலதடைவைகள் பாராட்டி இருக்கிறார்கள். ஆகவே இது முதல் தடவை அல்ல. என்றாலும் இன்றைய வெளிநாட்டவர் பற்றிய அரசியல் சூழ்நிலையில் இந்த அங்கிகாரம் எமக்கு தொடர்ந்தும் இருப்பது இலங்கையரான எமக்குப் பெருமை. இதை ஆங்கிலத்தில் Ethnic branding அல்லது ethnic profiling என்று சொல்லுவார்கள். இது ஐரோப்பாவில் இன்றைய சூழ்நிழையில் எமக்கு இந்த Ethnic branding மிக முக்கியம். இப்படிப்பட்ட அபிப்பிராயம் இருப்பது எமது வருங்கால சந்ததிகளுக்கு மேலும் நல்லது மற்றும் அவர்களுக்கு வருங்காலத்தில் நிறைய வாய்ப்புக்களை தொடர்ந்தும் கொண்டுவரும் மற்றும் முன்னேற்றும் வழியினைக் காட்டும் . இந்த அங்கீகாரம் எமக்கு கிடைப்பதற்கு முழுக்காரணம் நாம் நெகிழ்வான( fleksible ) முறையில் எமது கலாச்சாரம் மற்றும் எமது பண்பாட்டுப் பழக்க வழக்கங்களை டென்மார்க்கில் வாழும் வாழ்வில் ஒப்பீட்டளவில் கணிசமானவர் கொள்ளல் எனும் நிலையாகும் நாமும் எமது வரப்போகும் சந்ததிகளும் இன்னமும் பெரிய வெற்றிகளை பெறவேண்டும் என்றால் இரண்டாவது தலைமுறையை நாம் இன்னமும் கூட நன்றாகவும் இருமொழியிலும் தேர்ச்சியானவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் ராஜ்ஜைப்போல் வளர்க்க வேண்டும் . அவர்களுக்கு இன்னமும் கூட தன்நம்பிக்கையை கொடுக்க வேண்டும். அவர்கள் வாழும் Dansk- tamil இணைவாக்கக் கலாச்சாரத்தை பெரிதும் நாம் ஆதரிக்க வேண்டும் . ராஜ்ஜை பவருடங்களாக நான் நன்கறிவேன் அன்புருகப் பேசுவதுக்கும் பழகுவதுக்கும் இனியவர். டென்மார்க் தொழில்க் கல்லூரியில் கல்வி பயின்ற தொழில்க் கல்விப் பட்டதாரியவர். இரண்டு மகள்களின் அன்பான அப்பா, அவரது வீட்டில் நான் குடும்பமாகச்சென்று விருந்துண்டுள்ளேன். மகிழ்ந்துபோயுள்ளேன் வாழ்த்துகள் ராஜ். அரசியல் வாழ்வில் உங்கள் நேர்மைக்கும் தகுதிக்கும் உழைப்புக்கும் இன்னும் இன்னும் கெளரவமிக்க பதவிகளும் பொறுப்புகளும் உங்களை நாடி வரும் ...