Sunday, July 05, 2020

கலீல் ஜிப்ரானும் எனது பேரக்குழந்தைகளும்

-கரவைதாசன்-
இந்தக் கிழமை நேற்றும் இன்றும் பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக பொழுது கழிகிறது. எங்களது பிள்ளைகள் மூவரையும் நல்ல மனிதர்களாய் வளர்த்தெடுத்துவிட்டோம் என்ற மதர்ப்பு எங்களிடமிருந்தது.
"பிள்ளைகள் எங்களிடமிருந்து வந்தவர்கள் ஆனாலும் அவர்கள் எங்களவர்கள் அல்ல " என்ற கலீல் ஜிப்ரானின் வார்த்தைகளுக்கு எங்களிடம் பொருள் இருந்ததில்லை.
எங்களது பேரக்குழந்தைகளுடன் கழிக்கின்ற அநேக பொழுதுகளை நான் நிழலாகவோ அல்லது காணொளியாகவோ பதிவு செய்து நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ்ந்து வந்திருக்கின்றேன். ஆனாலும் இதனை எங்களது பிள்ளைகள் கூடுமானவரை தவிர்த்து வருகிறார்கள் என்பது எனது மகன் ஸ்ரெலினுடன் உரையாடும்போது தெரிய வந்தது. அவரிடம் கேட்டபோது அவர் சொன்னார் "நாங்கள் அங்கரின்(எனது பெயரன்) படங்களை பகிர்ந்து மகிழலாம் ஆனால் அதனை அனுசரிக்கின்ற எந்த அறிவும் அவருக்கு இப்போது இல்லை. அவர் வளர்ந்த பின் ஏன் இப்படி செய்தீர்கள்? எனக் கேட்டால் எங்களிடம் பதில் இல்லாமல்ப் போகலாம் அப்பா. எனவே தான் தவிர்த்து வருகிறோம்" எனப் பதிலிறுத்தார். எனது மகனிடம் கலீல் ஜிப்ரானின் வார்த்தைகளுக்கு பொருள் இருந்தது கண்டு மகனை நினைத்து எனக்குள் இன்னும் மதர்ப்பு.
இந்த நிழல் எனது பெயரன் அகரன் (மகளின் மகன்) நேற்றைய தினம் எனது அலைபேசியிலிருந்து கிளிக் செய்தது.
இந்தக் கிழமை நேற்றும் இன்றும் பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக பொழுது கழிகிறது. எங்களது பிள்ளைகள் மூவரையும் நல்ல மனிதர்களாய் வளர்த்தெடுத்துவிட்டோம் என்ற மதர்ப்பு எங்களிடமிருந்தது.
"பிள்ளைகள் எங்களிடமிருந்து வந்தவர்கள் ஆனாலும் அவர்கள் எங்களவர்கள் அல்ல " என்ற கலீல் ஜிப்ரானின் வார்த்தைகளுக்கு எங்களிடம் பொருள் இருந்ததில்லை.
எங்களது பேரக்குழந்தைகளுடன் கழிக்கின்ற அநேக பொழுதுகளை நான் நிழலாகவோ அல்லது காணொளியாகவோ பதிவு செய்து நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ்ந்து வந்திருக்கின்றேன். ஆனாலும் இதனை எங்களது பிள்ளைகள் கூடுமானவரை தவிர்த்து வருகிறார்கள் என்பது எனது மகன் ஸ்ரெலினுடன் உரையாடும்போது தெரிய வந்தது. அவரிடம் கேட்டபோது அவர் சொன்னார் "நாங்கள் அங்கரின்(எனது பெயரன்) படங்களை பகிர்ந்து மகிழலாம் ஆனால் அதனை அனுசரிக்கின்ற எந்த அறிவும் அவருக்கு இப்போது இல்லை. அவர் வளர்ந்த பின் ஏன் இப்படி செய்தீர்கள்? எனக் கேட்டால் எங்களிடம் பதில் இல்லாமல்ப் போகலாம் அப்பா. எனவே தான் தவிர்த்து வருகிறோம்" எனப் பதிலிறுத்தார். எனது மகனிடம் கலீல் ஜிப்ரானின் வார்த்தைகளுக்கு பொருள் இருந்தது கண்டு மகனை நினைத்து எனக்குள் இன்னும் மதர்ப்பு.
இந்த நிழல் எனது பெயரன் அகரன் (மகளின் மகன்) நேற்றைய தினம் எனது அலைபேசியிலிருந்து கிளிக் செய்தது.

இரண்டு தலையணையும் ஒரு படுக்கையும்....

-கரவைதாசன்-
எனது அப்பாவும் சகோதரனும் மொட்டைமாடியிலே பாயை போட்டுவிட்டு மல்லாந்து படுத்துக் கொண்டு கனவு காண்பார்கள் கூடவே என்னையும் அழைத்து நடுவில் படுக்கவைப்பார்கள் நான் என்ன காண்கிறீர்களெனக் கேட்டால் ஒவ்வொன்றாக சொல்வார்கள். அவர்களின் கனவுகளை வேறு எவர்தனும் காண முடியாது அப்படி வித்தியாசமாக இருக்கும்.என்னையும் சேர்ந்து கனவு காணச்சொல்வார்கள் நான் தான் கேள்விச் செவியனாச்சே கேட்பேன் "என்னத்தைக் காண? "யார் சொன்னதாக ஞாபகமில்லை என் காதில் விழுந்தது "எங்கள் ஊர்க் குளத்தில் எத்தனை பேர் அடிக்கழுவினால் குளத்து நீர் வற்றும்?" ம்.. வித்தியாசம் கட்டுடைப்பான கனவு தான். ஒருவர் சொன்னது கேட்டது " மல்லாந்து படுத்துக் கொண்டு குனிந்து செய்கின்ற வேலைக்கு கனவென்று பெயரோ இதுக்க வேற கட்டுடைப்பாம்." மற்றவர். நான் சொன்னேன் "வானத்தைப் பார்த்துக் கொண்டு காணூங்கள்." இருவரும் "ஆதோ அந்த நட்சந்திரங்களைப் பாருங்கள் அவை விளக்கானால் எரிவதுக்கு எவ்வளவு எண்ணை தேவைப்படும்?. அவை தொழிலாளவர்க்கத்தின் நம்பிக்கையின் குறியீடு அல்லவா இப்பவும்கூட பிரகாசமாக எரிந்து கொண்டுதான் இருக்கின்றன. நான் மகிழ்ந்திருந்தேன். ஆகா நட்சத்திரம் பற்றி கனவு காண்கிறார்கள் நானும் சேர்ந்து கனவு கண்டு கொண்டிருந்தேன். திடீரென வானத்தை நோக்கி துப்பத் தொடங்கினார்கள். நான் கேட்டேன் "என்ன ஆச்சு?ஏன் இப்படி? " இருவரும் முந்திக் கொண்டு சொன்னார்கள். நட்சத்திரங்களை துப்பி அணைத்துவிட்டு எண்ணையின் தேவையை கணக்கிடப்போகிறோம். யார் அதிகம் அணைக்கிறாரோ அவரே விபரமானவர். எஃகி, எஃகி துப்பத் தொடங்கினார்கள். முகம் தலையணையென தெப்பமாக அவர்களின் முகங்கள்மட்டுமல்ல எனது முகமும் எச்சில் நெடில் எங்கு சென்று கழுவுவது? ஏற்கெனவே அடிக்கழுவி குளத்தைக் கலக்கி......

22.6.20