Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Sunday, January 18, 2015

பெருமாள் முருகனிடம் போலீசார் நடத்திய கட்டப்பஞ்சாயத்து - அதிர்ச்சித் தகவல்கள்

எழுத்தாளர் பெருமாள் முருகனை பலவந்தப்படுத்தி நாமக்கல்லை விட்டு வெளியேறுமாறு செய்ததது அந்த மாவட்டத்தின் போலீசாரே என்று எழுத்தாளரின் வழக்கறிஞர் ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளர்ர்.சில நாட்களுக்கு முன்னதாக `மாதொருபாகன்’ என்ற நாவல் எழுதியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகன் சாதி ஆதிக்க அமைப்புகளினாலும் ஆர்எஸ்எஸ் மதவெறி அமைப்புகளினாலும் மிரட்டப்பட்டு மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டு, அவர் எழுதிய நாவல்களை திரும்ப பெறுமாறு நிர்பந்திக்கப்பட்டார்.
இது மாவட்ட நிர்வாகத்தின் முன்பாகவே பேச்சுவார்த்தை என்ற பெயரில் நடந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் நாமக்கல் ஊரை விட்டு தனது குடும்பத்தினருடன் வெளியேறிச் சென்று விட்டார். பின்னர் அவர் தான் எழுதுவதை நிறுத்தப்போவதாகவும் தனது நாவல்களை திரும்ப போவதாகவும் தனக்குள் இருக்கும் எழுத்தாளர் இறந்து விட்டதாகவும் மனம் நொந்து அறிவிப்பு வெளியிட்டார். ஒரு எழுத்தாளர் இப்படிப்பட்ட முறையில் நிர்பந்திக்கப்பட்டு எழுதுவதையே நிறுத்தும்படி செய்வதும் ஊரைவிட்டு விரட்டியடிப்பதற்கும் தமிழகம் முழுவதும் கண்டனம் எழுந்தன.

Friday, January 16, 2015

நாங்கள் பெருமாள் முருகனுடன் தான் இருக்கின்றோம்

  • புலம்பெயர்ந்த இலங்கை எழுத்தாளர்களது கூட்டறிக்கை:

எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவலான 'மாதொருபாகன் 'பிரதிமீது இந்துத்துவ - சாதிய சக்திகள் கோரும் தடையையும், அவர்கள் கொடுக்கும் நெருக்கடியிலிருந்து பெருமாள் முருகனைக் காப்பாற்றத் தவறியிருக்கும் தமிழக அரசையும் புலம்பெயர்ந்த இலங்கை எழுத்தாளர்களான நாங்கள் எங்களது இந்தக் கூட்டறிக்கை வழியே  வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கருத்துச் சுதந்திரத்திற்கு எல்லைகள் கிடையாது. அவ்வாறு எல்லைகள் இருப்பின் அவை உண்மையில் ஒழுங்கமைக்கப்பட்ட மறைமுகத் தடைகளே. மதம் அல்லது சாதி போன்ற சமூக பிற்போக்கு அமைப்புகளால் கருத்துச் சுதந்திரத்தின் மீது வைக்கப்படும்  தடைகள் மட்டுமல்லாது; அரசு இறைமை, இன விடுதலை, புரட்சி, சமத்துவம் போன்ற முற்போக்கு முழக்கங்களுடன் வைக்கப்படும் கருத்துச் சுதந்திரம் மீதான தடைகளும் முழுமையாகக் கண்டிக்கப்படவேண்டியவை என்பதை நாங்கள் அனுபவபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் நன்கறிவோம்.

மதவாத - சாதிய சக்திகளின் நெருக்குவாரங்களை எதிர்கொள்ள முடியாத நிலையில் எழுத்தாளர் பெருமாள் முருகன் தனது முழு இலக்கிய எழுத்துகளையும் மீளப்பெற்றுக்கொள்வதாகவும் இனிமேல் தான் இலக்கியம் எழுதமாட்டேன் எனவும் அறிவித்திருப்பது சமூகத்தின் கூட்டு அவமானமும் துயருமாகும்.

எழுத்தாளர் பெருமாள் முருகன் தனது முடிவை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக இருக்கும் அனைத்துச் சக்திகளிடமிருந்தும் கருத்துச் சுதந்திரத்தைக் காப்பாற்றும் பொறுப்பைத் தமிழக அரசு உணர்ந்து செயற்படவேண்டுமெனவும் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

மு.நித்தியானந்தன்  (இங்கிலாந்து )
எஸ்.ரஞ்சகுமார்  (அவுஸ்திரேலியா) 
இளவாலை விஜேந்திரன் ( நோர்வே) 
நிர்மலா ராசசிங்கம் (இங்கிலாந்து )
ஷோபாசக்தி (பிரான்ஸ்) 
நட்சத்திரன் செவ்விந்தியன் (அவுஸ்திரேலியா) 
புஷ்பராணி (பிரான்ஸ்)
மெலிஞ்சி முத்தன் (கனடா) 
உமா (ஜேர்மனி)
ஹரி ராஜலட்சுமி (இங்கிலாந்து) 
சயந்தன் (சுவிற்சர்லாந்து) 
கவிதா (நோர்வே) 
சுமதிரூபன்  (கனடா) 
தர்மு பிரசாத் (பிரான்ஸ்)
தேவன் (சுவிற்சர்லாந்து) 
ஏ.ஜி. யோகராசா (சுவிற்சர்லாந்து) 
நற்கொழுதாசன் (பிரான்ஸ்) 
கற்சுறா (கனடா) 
தர்மினி (பிரான்ஸ்) 
பதீக்அபூபக்கர் (இங்கிலாந்து) 
விஜி (பிரான்ஸ்) 
கரவைதாசன் (டென்மார்க்) 
தமயந்தி (நோர்வே) 
சுரதா யாழ்வாணன் (ஜேர்மனி)
எம். ஆர்.ஸ்டாலின் (பிரான்ஸ்) 
புதியவன் இராசையா (இங்கிலாந்து) 
ராகவன் (இங்கிலாந்து) 
க.சுதாகரன் (சுவிற்சர்லாந்து)
ச.தில்லை நடேசன்( பிரான்ஸ் )
பானு பாரதி (நோர்வே) 
ஜீவமுரளி (ஜேர்மனி) 
அதீதா (கனடா) 
தேவிகா கெங்காதரன் (ஜேர்மனி) 
விஜயன் (சுவிற்சர்லாந்து) 
கோமகன் (பிரான்ஸ்) 
சஞ்சயன் (நோர்வே) 
அசுரா (பிரான்ஸ்) 
பத்மநாதன் நல்லையா (நோர்வே) 
இளங்கோ (கனடா )
காருண்யா கருணாகரமூர்த்தி (ஜெர்மனி) 
சரவணன் நடராசா (நோர்வே) 
கலையரசன் (நெதர்லாந்து) 
திருமாவளவன் (கனடா) 
பத்மபிரபா (சுவிற்சர்லாந்து)
சந்துஸ் (இங்கிலாந்து) 
தேவதாசன் (பிரான்ஸ்) 
மீராபாரதி (கனடா) 

Friday, January 02, 2015

செய்வதெல்லாம் எதிர்ப்பு அரசியல் என்றோ, புரட்சிகர அரசியல் என்றோ பதாகை எழுதித் திரியும் தேவை இதுவரைக்கும் ஏற்பட்டதில்லை.

-ந.சுசீந்திரன்- 
முற்கற்பிதங்களையும், விசமப் பிரச்சார உள்நோக்கங் கொண்ட வதந்திகளையும், தனித்த வெறுப்புக்களையும் அடிப்படையாகக் கொண்டும் நிகழ்வுகள் புரிந்து கொள்ளப்படுகின்றன.
அப்படித்தான் ஜம்பவான்கள் போன்று தோரணைதரும் பலரது புரிதல்களும் காணப்படுகின்றன. அவ்வாறான புரிதல்களில் இருந்தே ஒரு கருத்துருவாக்கத்தை, அக் கருத்துருவாக்கம் நியாயமற்றது, எல்லாப் பரிமாணங்களில் நோக்கினாலும் தலைகீழானது, இயங்கா நிலைதேடிச் செயலிழக்கச் செய்வது என்பதை தெரிந்து வைத்திருந்தும், அக் கருத்துருவாக்கத்தைச் சிருஷ்டித்து விடுகின்றனர். பின்னர் அதனை நிலைநிறுத்த, மிகவும் மலினமான தர்க்கங்களை, அவசர அவசரமாக இறைத்து விடுகின்றனர்.
நாம் செயற்படுவதென்பது மற்றவர்கள் எதை விரும்புவார்கள், எவ்வாறு பொருள் கோடல் செய்வார்கள் என்பதைப் பொறுத்ததல்ல. அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் போல, இப்படிப்பட்டவர்களது புறநிலைப் பார்வை சகிக்கமுடியாதபடி முற்றிலும் அபத்தமானதாக இருக்கின்றது, நாம் சற்றே குலைந்துவிடும்போது, எமக்கு பெரிய மனச் சோர்வினையையும் அவை தந்துவிடுகின்றன.
ஆனால் கிசுகிசுச் சமாச்சாரங்களில், கள்ளச் சந்தோஷமடைகின்ற பேர்வழிகள், பேரில்வழிகளுக்கு இவை உற்சாகத்தைக் கொடுக்கின்றன போலும்.
போருக்குப் பின்னர் புகலிடத்தில் இடம்பெற்ற பல சிறு-, பெருவிடயங்கள் குறித்து இலங்கை அரசுக்கு உளவுச் செய்தியாகச் சென்றுவிடச் சாத்தியங்கள் உள்ளதால் பலவற்றைச் சிலகாலங்கள் வரை எழுதமுடியாது. அப்படி எழுதுவது பொறுப்பற்றது. பல நண்பர்களின் பெயரைச் சொல்லமுடியாது.
முஸ்லிம் பெண்ணொருவர், இலங்கையின் வடபகுதியில் தமிழ்ப் பெண்கள், தமிழ் பெண் போராளிகள், போராளிகளின் விதவை மனைவிகள் எதிர்கொள்ளும் இன்னோரன்ன பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க, வெளிக்கொணர, அவர்களுக்கு வாழும் துணிவை ஏற்படுத்தத் தன்னால் முடிந்ததைச் செய்துகொண்டிருக்கின்றார். அவரது வழங்கும் தகவல்கள் எங்களை உறைய வைத்து விடுகின்றன.
இலங்கை அரசு இரசாயன ஆயுதங்களைப் பிரயோகித்துள்ளதா என்பதைக் கண்டறிய போர் நடந்த சில இடத்து மண் பரிசீலிக்கப்பட்டிருகின்றது.
நான் இலங்கை அரசினதோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளினதோ ஆதரவாளானாக ஒரு போதும் இருந்ததில்லை. இலங்கையில் நடைபெற்ற, நடைபெறுகின்ற சிறுபான்மை இனங்களின் மீதான அடக்குமுறைக்கு எதிரான செயற்பாடுகள் தொடக்கம் அண்மைய, சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர்களின் விடுதலை வரை, அது எள்ளின் அளவேயாயினும், எமது சக்திக்கேற்பச் செய்து கொண்டிருகின்றோம். வண. நந்தன அவர்கள் கண்டியில் இருந்து சிறைக் கைதிகளுக்காக ஆற்றும் பணிக்கு நான் தலை வணங்குகின்றேன். எக்னாலிகொட காணாமற் போகச் செய்ததன் பின்னர், சந்தியாவின் போராட்டம் தொடர்கின்றதல்லவா, அவர் சந்திக்கும் அவதூறுகள், குழிபறிப்புக்கள் சொல்லி மாளாது. போர்க் குற்றவாளி ஜெனரல் டயஸ் ஜெர்மனியின் தூதுவராகச் சிலகாலம் இருந்தபோது அவரைக் கைது செய்து சர்வதேச நீதி மன்றத்தின் முன் நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான பங்களிப்புக்கள் எப்படி இருந்திருக்கும்!
அண்மையில் றுக்கி பெர்னாண்டோ ஒரு கருத்தினைத் தெரிவித்திருந்தார். இனி, “ஐ.நா வை நம்பிப் பிரயோசனமில்லை.” அவரது அனுபவத்தில் சொல்கின்றார். இது எமக்கு எப்பவோ தெரியும் என்று இலகுவாகக் கூறிவிட எம்மால் முடியாது. இலங்கை அரசு பொய் சொல்கின்றது என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்த மேற்கொண்ட பல நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள் பலவகை அச்சுறுத்தல்கள் இலங்கையில் இருந்தபோதும் நிமல்கா பெர்னாண்டோ, சுனந்த தேசப்பிரிய, போன்ற சிங்கள இனத்தவர்களும் தான் என்பதை எத்தனை தமிழ்ப் புத்திஜீவிகள் தெரிந்து வைத்திருக்கின்றனர் எனபது கேள்வியாகவே இருக்கின்றது. இவர்கள் செய்யும் எதிர்ப்பு அரசியலின் மதிபீட்டுக்காக எங்கள் அன்றாட வாழ்வும் இல்லை. சமூகமும் இல்லை.
இலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கான ஒரு அரசியல் தீர்வை எப்பொழுதும் வலியுறுத்தி, அதிகாரப் பரவலாக்கம், சமஷ்டி என்று சொல்லப்படுகின்ற மாநிலங்களின் சுயாட்சி போன்ற தீர்வுகளைப் பற்றி தென்னிலங்கை மக்களுக்கு மத்தியில் கொண்டு செல்ல முயற்சித்தவர்கள், இலங்கையின் அரசியல் யாப்புக்கள் அதிலும் 1972, 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்புக்கள், எப்படி ஒரு சர்வாதிகார அரசினை உருவாக்கி நிற்கின்றது என்பது பற்றியெல்லாம் கருத்தரங்குகளை நிகழ்த்தியியவர்கள், இவற்றில் உரை நிகழ்த்தியுள்ள வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் உதாரணமாக வெலியமுன, எஸ்.ஜி.புஞ்சிஹேவா, ஜயம்பதி விக்கிரமரட்ன, வி.ரி.தமிழ்மாறன் போன்றவர்கள் எவ்வகைப் பங்களிப்பினைச் செய்து கொண்டிருக்கின்றனர் என்று நோக்குகின்றோமா?

Saturday, May 31, 2014

எரியும் நினைவுகள்- யாழ் நூலகம்

ஓர் கலாச்சாரப் படுகொலையின் நினைவைத் தொடரும்
எம்.ஏ.நுஃமான் அவர்களின் கவிதை
(தமிழ், சிங்களம், ஆங்கிலம், காணொளி)
புத்தரின் படுகொலை!
----------------------------------
நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது.
இரவில் இருளில்
அமைச்சர்கள் வந்தனர்.
'எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை
பின் ஏன் கொன்றீர்?'
என்று சினந்தனர்.
'இல்லை ஐயா,
தவறுகள் எதுவும் நிகழவே இல்லை
இவரைச் சுடாமல்
ஓர் ஈயினைக் கூடச்
சுடமுடியாது போயிற்று எம்மால்
ஆகையினால்......
என்றனர் அவர்கள்.
'சரி சரி
உடனே மறையுங்கள் பிணத்தை'
என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.
சிவில் உடையாளர்
பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.
தொண்ணூறாயிரம் புத்தகங்களினால்
புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்
சிகாலோவாத சூத்திரத்தினைக்
கொழுத்தி எரித்தனர்.
புத்தரின் சடலம் அஸ்தியானது
தம்ம பதமும்தான் சாம்பல் ஆனது.
- எம்.ஏ.நுஃமான்
-----------------------------------------------------
මම දිටිමි සිහිනයක් ඊයේ රෑ
මරන ලදහ බුදුහිමියෝ වෙඩි තබා
නීතිය රකින පොලිසිය විසින්
ලෙයින් පෙගුණු ශ්රී දේහය
වැතිර තිබිණි
යාපා පටුනේ පුස්තකාලය අභියස
පැමිණියහ ඇමතියෝ අඳුරට මුවා වීල
ප්රශ්න කළහ කෝපාවිශ්ට වල
,නැත මොහුගේ නම අපේ ලැයිස්තුවේ
වැරදීමක් වෙලාවත් ද?,
,නෑ නෑ ඇමතිවරුනිෟ
වැරදීමක් වෙලා නැහැල
නොයවා මොහු පරලොව
හානියක් කළ හැකි ද කුරා කුහුඹියෙකුටවත් ?,
තැතනූහ පොලිස්කාරයෝ
—හා හරි හරිෟ සඟවාපියව් සිරුර වහා ම,
කියමින් අතුරුදන් වූහ ඇමතියොA
එකෙණෙහි ම ඇදගෙන යනු ලැබිණ ශ්රී දේහය
පුස්තකාලය තුළට
සිවිල් ඇඳුමින් සිටි
පොලිස්කාරයෝත
ගොඩගැසූහ දේහය මත පොත්
ඉතා දුර්ලභ ඉතා අගනා
අනූ දහසක්
ඉක්බිති ගිනි තැබූහ චිතකයට
සිඟාලෝවාද සූත්රය ගිනි හුල ලෙස ගෙන
මෙසේ ගිනිබත් විය
රන් වන් බුදු බඳ
දම්මපදයත් සමඟ
--------------------------------------------------
Last night
I had a dream
Lord Buddha was shot dead
by the police-
guardians of the law.
His body lay drenched in blood
on the step
of the Jaffna Library
Under cover of darkness
came the ministers.
“His name-not in our lists
Why did you him?”
they ask in anger.
“No, sirs, no
There was no mistake.
Without bumping him off
it was impossible
to harm even a fly.
Therefore…,” they stammered.
“Okay, okay,
Hide the corpse.”
The ministers vanish.
The men in civvies
dragged the corpse
into the library.
They heaped the books,
rare and valuable,
ninety thousand in all.
They lit the pyre
with the Cikalokavada Sutta.
Thus the remains
Of the Compassionate One
were burned to ashes
along with the Dhammapada.

Sunday, May 25, 2014

சிறுபான்மையினத்தவரின் ஐக்கியம் குறித்த மலையகமக்களின் கலந்துரையாடல்


சிறுபான்மை தேசிய இனமக்களின் ஒருமைப்பாட்டிணக்க முயற்சியில், மலையக மக்களினது அரசியல் உரிமைபற்றிய கலந்துரையாடல் நேற்று லண்டனில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் ஆயதப் போராட்டம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புலம் பெயர் சூழலில் பல்வேறு தரப்பினராலும் அமைப்புக்களாலும் சிறுபான்மை தேசிய இன மக்கள் தொடர்பான அரசியல் செயற்பாடுகள் முனைப்புப்பெற்று வருகின்றன.

சிறுபான்மை தேசிய சமூகங்களை ஒன்றுதிரட்டி, ஒருமித்த கருத்துடன் அவர்களின் அரசியல் தீர்வுபற்றிய கோரிக்கை ஒன்றினை அல்லது திட்டவரைபொன்றினை முன்மொழியும் பட்சத்தில், அது சாதகமான அரசியல் சூழலை இலங்கையில் உருவாக்கலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், லண்டனில் அமைந்துள்ள தமிழ்மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம், சிறுபான்மை தேசிய இனம்சார்ந்த கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றது.

இந்தவகையில் நேற்று லண்டன் ஈஸ்ற்ஹாமில் மலையக மக்களின் அரசியல் உரிமைகள் பற்றியும், சிறுபான்மை இன மக்களின் ஒருமைப்பாட்டில் மலையக மக்களினது இணைவின் அவசியம் பற்றியும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நான்கு தசாப்தத்திற்கு மேலாக மலையக மக்கள் மத்தியில் பணியாற்றி வருபவரும், மனிதஉரிமைகள் செயற்பாட்டாளரும், ஆய்வாளரும் சமூகவியலாளருமான அருட்தந்தை கை டி பொன்கலன் கலந்துகொண்டார்.

அருட்தந்தை கை டி பொன்கலன் மார்ச் மாதம் 24 ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் கலந்து கொண்டு மலையக மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக உரையாற்றியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்கள் இராணுவ அடக்குமுறை, பௌத்த மேலாதிக்கம், அரசியல் அடக்குமுறை, சிங்களமயமாக்கல், நிர்வாக அடக்குமுறை என்பவற்றால் தொடர்ச்சியாக பாதிக்கப்படுகின்றார்கள் என்றும், இம்மக்களிடையே உள்ள வேறபாடுகளையும் கருத்துமுரண்பாடுகளையும் களைந்து ஒருமித்த நோக்கோடு அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்று இந்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டிருந்தன. இந்த கலந்துரையாடலில் பல சமூக ஆர்வலர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் உரையாற்றினார்கள். தலைமைக்கு கட்டுப்படும் இயல்புகொண்ட மலையகமக்களின் பலம் அரசியல் தீர்வுகளில் முக்கியமானது என்று எழுத்தாளரும் ஆய்வாளருமான டீ.யு. காதர் குறிப்பிட்டார்.

இன்றுள்ள நெருக்கடி நிலையில் இருந்து சிறுபான்மை தேசிய இன மக்களின் உரிமைகளை மீட்க வலுவான கருத்துவாக்கங்களும் அதற்கான தலைமையும் செயற்பாடுகளும் தேவை என்று கலந்துகொண்டவர்கள் தெரிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்றி - ஆதவன் நியுஸ்

Thursday, April 24, 2014

மக்கள் தொழிலாளர் சங்க மே தின அறைகூவல்


 apr 23 kl. 5:51 AM
வீடு, காணி, சம்பள உரிமைகளை வென்றெடுக்க பலமான தொழிற்சங்கத்தைக் கட்டுவோம்.
மக்கள் தொழிலாளர் சங்க மே தின அறைகூவல்

மக்கள் தொழிலாளர் சங்கத்தின் மே தினக் கூட்டமும் கருத்தரங்கும் வீடு காணி சம்பள உரிமைகளை வெற்றெடுப்போம் என்ற தொனிப்பொருளில் காவத்தை கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் காலை 10 மணி முதல் இடம்பெற உள்ளதாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா குறிப்பிட்டுள்ளார். 

மேதினம் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் எட்டு மணித்தியாலம் மட்டுமே வேலை நேரம் என்ற உரிமையை வென்றெடுத்த தொழிலாளர் போராட்ட மேதினத்தை நினைவூட்டும் இவ்வேளையில் அவ்வுரிமையை இழந்து விட்ட நாம் இன்று பல மணிநேரம் ஓய்வின்றி வேலை செய்து மாய்கிறோம். ஆரம்பத்தில் காடு வெட்டி மேடு திருத்தி பெருந்தோட்டங்களை அமைத்து பிரிட்டிஷ் கம்பனிகளுக்கு உழைத்த கொடுத்த பரம்பரைகள் இன்றில்லை. பின்னர் அரச நிறுவனங்களுக்கும் உழைத்து கொடுத்த பரம்பரைகள் போய், இன்று பெருந்தோட்ட பல்தேசிய கம்பனிகளுக்கும் சிறுதோட்ட உடைமையாளர்களுக்கும் உழைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். எமது பரம்பரையான வர்க்க அடையாளம் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் என்பதாகின்ற அதே வேளை எமது அதிகப் பெரும்பான்மையினரின் இன அடையாளம் மலையகத் தமிழர்களே. 

இந்த இரண்டு அடையாளங்களையும் சுமந்த வண்ணம் 200 வருடங்களுக்கு மேல் இந்நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய பங்காளிகளாக இருந்து வரும் நாம், எமது உழைப்பை சுதந்திரமாக விற்று வாழக்;கைச் செலவிற்கேற்ற சம்பளத்தை பெற முடிவதில்லை. பெருந்தோட்டக் கம்பனிகள் மட்டுமன்றி அவற்றுடன் சமரசம் செய்து கூட்டு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ள தொழிற்சங்கங்களும் மாதச் சம்பளம் வேண்டும் என்பதை பேச்சுக்குகூட எடுப்பதில்லை. கூட்டு ஒப்பந்தத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ள தெளிவில்லாத சம்பளத்திட்டம் எம்மீது திணிக்கப்பட்டுள்ளது. இன்று பிரிட்டிஷ் காலத்தை விட எமது உழைப்பு வௌ;வேறு வழிகளில் சுரண்டப்படுகிறது. வேலை நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. 

Thursday, September 19, 2013

சிவகாமியின் அரிதிலும் அரிதான புலிவாதம்

-வேப்பூர் திருடன்-
டெல்லி மருத்துவ மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகளையும், அதனையொட்டிய கொலையையும் முன்வைத்து 13.09.2013 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்த்திய நேர்படப்பேசு நிகழ்ச்சியில் சமூக சமத்துவப்படையின் (SSP) தலைவர் சிவகாமி அய்.ஏ.எஸ்பங்கேற்று அவ‌ர் தெரிவித்த  பெண்கள் மீதான பாலியல் பிரச்சனைகளையும், அதனூடாக‌ ஈழப்புலிகள் குறித்துப் பேசிய கருத்துக்களுக்கும் எதிர்வினையாக நாகரிகமற்ற, கீழ்த்தரமான, அறிவார்த்தமில்லாத‌ விமர்சனங்களை வலைத்தளங்களில் கண்ட பின்னரே தலித் மனித உரிமைப் பார்வையில் சில குறிப்புகளை முன் வைக்கிறேன்.
—————————————-
நிர்பயா வழக்கில் நால்வருக்கு விதிக்கப்பட்ட அரிதிலும் அரிதான தூக்குத் தண்டணை குறித்து ஒடுக்கப்பட்ட மக்கள் பார்வையில் சிவகாமி மிகவும் கூர்மையான விவாதங்களை நேர்படப்பேசு நிகழ்ச்சியில் எழுப்பினார். நடுத்தர வர்க்க மேட்டுக்குடி கலாச்சார மனோபவம் கொண்ட பெண்ணிய வாதிகளுக்கும், தலித் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களுக்கும் அவரின் அடித்தளப் பார்வையிலான விமர்சனம் சற்று எரிச்சலானது. அதிலும் அவர் சொல்ல வந்த‌ கருத்து எதையும் முகம் சுளிக்காமல், மற்றவரை நேருக்கு நேர் விமர்சிக்கின்ற ஆளுமை கொண்டவராக இருந்ததினால் விவாதத்தினூடாக விடுதலைப்புலிகள் பற்றியும் பேசினார்.
அவர் பேசிய கருத்து என்னவென்றால் “விடுதலப்ப்புலிகள் ஈழத்தமிழருக்காகப் போராட்டம் நடத்தும்போது ஈழப்புலிகள் இராணுவத்தில் சில பெண்கள் இருந்தார்கள். ஈழப்புலி இராணுவத்தின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்பட்டார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு வந்த போது என்ன பதில் சொன்னார்கள் என்றால், உயிரையே பணயம் வச்சி ஒருத்தன் நாட்டுக்காக உழைக்கும்போது இது அதோட ஒப்பிடுகையில் ஒரு சாதாரண விஷயந்தான் என்பதை செய்திகளில் நான் படிச்சேன்” என்று கருத்து தெரிவித்தார். அவரின் கருத்தை இடை மறித்த  நிகழ்ச்சித் தொகுப்பாளர் குணசேகரனும், வழக்கறிஞர் அருள்மொழியும் நீங்கள் இதுவரை கேள்விப்படாத ஆதாரமற்ற செய்திகளை அவதூறாக புலிகள் மீது சொல்லுகிறீர்கள் என்று பேசினார்கள். இதனையடுத்த தொடர் விவாதங்களில் “பாரீசில் வாழும் தமிழர் ஒருவர் என்னிடம் இதனைப் பகிர்ந்து கொண்டார். என்னிடம் இதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன” என சிவகாமி விளக்கமளித்தார். இறுதியில் வழக்கறிஞர் அருள்மொழியும், திலகவதியும் இதனை மீண்டும் மறுத்தார்கள் (பார்க்க இணைப்பு – http://www.dailymotion.com/video/x14o4u3_nerpada-new_lifestyle).
———————————————–

nerpada_(new) by tamildoom

சிவகாமி எந்த கருத்தை வலியுறுத்தி விவாதிக்க விரும்பினாரோ, அந்த நோக்கம் சற்று திசைமாறி சிவகாமி மீதான புலிகள் விமர்சனத்துக்கு அது அகல வழி ஏற்படுத்தியது.

Saturday, September 07, 2013

ஒரு வரலாற்று எழுதியை வக்கிரமாக கொன்றுள்ளனர்.

-கரவைதாசன்-

இந்தியதேசத்து கல்கத்தா நகரினைச் சேர்ந்த நடுத்தர வர்க்க குடும்பத்தில் 1964ல் பிறந்த வரலாற்று எழுதி சுஸ்மிதா பானர்ஜி அவர்கள், முஸ்லீம் அடிப்படைவாதிகளால் ஆப்கனிஸ்தான் நாட்டின் பக்கிற்றா மாகாணத்திலுள்ள அவரது வீட்டின் முன்னால் மிகவும் வக்கிரமான முறையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சமூகத்தில் முன்னனியில் உள்ள பெண்களுக்கு ஆப்கானிஸ்தான் ஆபத்தான இடம் அதிலும் முஸ்லீம் அடிப்படைவாத தலிபான்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருக்கும் கிழக்கு ஆப்கானிஸ்தானில் பெண்களின் நிலை மிகவும் மோசமானது. கடந்த வருடம் உயர்பதவியில் இருந்த இரண்டு ஆப்கான் பெண்கள் லக்மான் (Laghman)  மாகாணத்தில் கொல்லப்பட்டனர். பெண்கள் சம்பந்தமான வாரியத்தின் தலைவியாக இருந்த நஜியா சித்திக்கி அவர்களும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். அந்த வரிசையில் சுய ஆற்றலும் இன்பமான காதல் வாழ்வும் கொண்ட  இந்திய எழுத்தாளர் சுஸ்மிதா பானர்ஜி கொல்லப்பட்டுள்ளார். பெண்களின் உரிமை பற்றி பேசும் எல்லோருமே அதிலும் கிழக்கு ஆப்கனிஸ்தானில் பயமுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்                  

மூன்றாம் உலக நாடுகளுக்குள் அவர்களது சிறு சிறு வித்தியாசங்களை கண்டறிந்து அவற்றை  ஊதிப்பெரிதாக்கி, எப்போதும் தமது நலன்களுக்காகவே அத்துமீறி பிரவேசித்து நாட்டாள்மை செய்யும் நேட்டோ நாட்டுப்படைகள்  ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைகளையும், பெண்களின் நிலையையும் உயர்த்தி, பெண்களுக்கு பாதுகாப்பைக் கொடுத்தமை நேட்டோ(Nato) நாடுகளின் தலையீட்டால் நடைபெற்ற சாதனை, ஓரளவேனும்  பாராட்டப்பட்ட விடயமாகும். நேட்டோ நாடுகள் 2014 இல் தமது படைகளைக் மீளப் பெற்றுக் கொள்ளவுள்ள நிலையில், பெண்ணுரிமை என்பதே  ஆப்கானிஸ்தானில் மீண்டும் கேள்விக்குறியாகவுள்ளது. 

Thursday, August 22, 2013

வெகுசனப்போரளி நரேந்திர தபோல்கர் அவர்களுக்கு அஞ்சலி

 -கரவைதாசன் -
பொருள் முதல், கருத்து முதல் என்று எதையோ வைப்பைவர்களுக்கிடையே சீரான முறையில் மக்களை சிந்திக்க வைத்து வாழ்ந்து மறைந்த ஒரு சமகால அற்புதம்

 நரேந்திர தபோல்கர் கடந்த செவ்வாய் கிழமை 20.8.13  காலை புனே ஓம்கரேஷ்வர் பாலம் அருகில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள், அவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இதில் தலையிலும் நெஞ்சிலும் குண்டு பாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

நரேந்திர தபோல்கர் அவர்கள் பகுத்தறிவாளர், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான முற்போக்கு சிந்தனையாளர், சமூக ஆர்வலர் , முன்னாள் தேசிய விளையாட்டு வீரர் (கபடி), மருத்துவர், எழுத்தாளர் வெகுசனப்போரளி அறுபத்தி ஏழு வயதில் வாழும் காலத்திலேயே  அவர் வாழ்வு பறிக்கப்பட்டுள்ளது.

தபோல்கர் கொலை செய்யப்பட்டதையடுத்து அவரது சொந்த ஊரான சடாராவில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள் அவரது வீட்டில் திரண்டனர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தினர். இதையொட்டி அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன.


மகாராஸ்டியின் சிந்துதாத் மாவட்டத்தில் தாப்கோலி என்னும் குக்கிராமத்தில் அஜ்யுட் தாராபாய் தம்பதிகளின் பத்தாவது கடைசி மகனாக நரேந்திர தபோல்கர் அவர்கள்   கார்த்திகை மாதம் முதலாந்திகதி ஆயிரத்திதொளாயிரத்தி நாற்பத்தி ஐந்தாம் ஆண்டு  பிறந்தவர். 

இவரது தந்தையாரும் பகுத்தறிவாளர் ஆவர். மூத்த தமையனார் சிறந்த கல்வியாளர்.  தொழில்ரீதியாக  மருத்துவரான  நரேந்திர தபோல்கர் அவர்கள். பகுத்தறிவுப் போராளியான சைலா அவர்களை  மணம் புரிந்தார். இவர்களுக்கு கமித்,முக்தா என இரு பிள்ளைகள். 

1980 லிருந்து வெகுசன முற்போக்குச் செயற்பாட்டில்     தீவிரமாக செயல்பட்டு வந்த     நரேந்திர தபோல்கர் அவர்கள் முதலில்  1989களில் மராட்டிய அந்தா ஷ்ரத்தா நிர்மூலன் சமிதி என்ற மூட நம்பிக்கை எதிர்ப்பு இயக்க நிறுவனத்தினை நிறுவினார். முதலாளித்து அமைப்பில் அதன் அசைவின்  இயங்குதலுக்காக சங்கிலிப் பின்னலாக கொழுவி வைக்கப்பட்டிருக்கும் மதம்,சாதி,பால்,நிறம் தொடரின் அடிப்படை மூடத்தினை தகர்க்க வலுவான பலவீனத்தினை கண்டறிந்து மூட நம்பிக்கைகளுக்கு எதிராக அவரை ஒத்த தோழர்களுடன் சேர்ந்து தீவிரமாக இயங்கினார். இதுவரையில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக இவரால் சுமார் மூவாயிரம் கருத்தரங்குகள். நடத்தப்பட்டிருக்கின்றன.

Thursday, May 02, 2013

பு.ஜ.மா.லெ.கட்சியின் புரட்சிகர மேதின ஊர்வலம் யாழ்ப்பாணம் 2013

கொட்டும் மழையில் சுன்னாகம் சந்தை வளாகத்தில் பிற்பகல் 2 மணிக்கு சைக்கிள் பேரணியுடன் ஆரம்பித்து யாழ் ஸ்ரான்லி வீதியில் உள்ள பட்டப்படிப்புகள் வளாகத்தில் பிற்பகல் 4 மணிக்கு கூட்டமும் இடம்பெற்றது.

Sunday, April 07, 2013

லண்டன் இலக்கியச்சந்திப்பு 40

லண்டன் இலக்கியச்சந்திப்பு 40 அமர்வு இரன்டு 7.04.2013

Thursday, February 23, 2012

சுதந்திரத்துக்கான விடுதலைப்போராளி பியா (Per Mortensen)

-கரவைதாசன்- 

சுதந்திரத்துக்கான விடுதலைப்போராளி Per Mortensen கடந்த வெள்ளிக்கிழமை 17.02.2012 இறப்பெய்தினார்.  நீண்ட நாட்களாக  நோய் வாய்ப் பட்டிருந்த  பியாவின்  இருதயம் தனது எண்பத்தி ஏழாவது வயதில்  தன் துடிப்பை நிறுத்திக் கொண்டது. 

1924ம் ஆண்டு யூன்மாதம் 2ந் திகதி டென்மார்க்கின் தலை நகர் கோபன்ஹேகனின்  நகரப் புறப் பகுதியான வன்லூசாவில்  போராட்ட குணாம்சம் மிக்க குடும்பத்தில் பிறந்து , தொழிலாளர்கள் சேரி ஒன்றில்  வளர்ந்து வந்தார்.  இவரது பேரனார் ஒரு போர் வீரனாவார். இவரது குடும்பத்தில் பலர் கடல்படை வீரர்கள் ஆவார்கள். 

தொழில் முறையில் இயந்திர பொறியிலாளரான இவர், சுதந்திரம், விடுதலை, அடிபணியாமை பற்றியும்,  நாசிகளின் ஆக்கிரமிப்பு பற்றியும் புத்தகங்களை எழுதியுள்ளார்.

இரண்டாம் உலகமாக யுத்தக் காலப் பகுதியில் கிட்லரின் நாசிப் படைகளால் டென்மார்க் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தவேளை  நாசிகளுக்கு எதிராக ஆர்த்தெழுந்த  BOPA எனும் விடுதலை அமைப்பில் 1943ம் ஆண்டு தனது 19வது  வயதில்  முன்னனிப்போரளிகளின் வரிசையில் இணைந்து  ரோம் Tom  எனும் இயக்கப் பெயரினை தன்னகத்தே கொண்டு நாசிகளுக்கு  எதிரான சிறு சிறு தாக்குதல்களை மேற்கொண்டவர். 

அந்நாட்களில்  நாசிகள்  அணுகுண்டு  தயாரிப்பதற்கான தாதுப்பொருட்களை   நோர்வேயிலிருந்து  சரக்குவண்டிகளில்  டென்மார்க் ஊடாக  எடுத்துச் சென்ற வேளை, அச்சரக்குவண்டிகளை தகர்த்து, அவர்களுக்கு அத்தாதுப்பொருட்கள்  சென்றடையாமல் BOPA எனும் விடுதலை அமைப்பு மேற்கொண்ட தாக்குதலை தலைமை ஏற்று  பியா செயல்ப்படாது போயிருந்தால், ஜேர்மன் நாசிகளின் கையில் அன்று அணுகுண்டு இருந்திருக்கும். இன்று இந்த உலகப்பந்தும் அதில் உயிர்களும் இருந்திருக்கா.

இன, சாதி, பால், வர்க்கம் , தேசியம் போன்ற காரணிகளில்  தோன்றும் ஆதிக்கவெறிபிடித்த  ஆக்கிரமிப்பாளர்களே அதிகாரத்துவப்போட்டியில்  "பியா" போன்ற சுதந்திரத்துக்கான விடுதலைப்போராளிகள் தோன்றுவதற்கான வெளிகளை தோற்றுவிக்கிறார்கள்.


Sunday, February 12, 2012

ஈரான் மீதான தடையும் இலங்கையில் ஏற்படும் பாதிப்புகளும்

-இதயச்சந்திரன்-

ஈரானிற்கும் அமெரிக்காவிற்குமிடையே தீவிரமடையும் இராஜதந்திரப் போர்,
இலங்கையின் பொருளாதாரத்தில் பெரும்பாதிப்பினை ஏற்படுத்தப் போகிறது.

சர்வதேச அளவில் இலங்கை மீதான போர்க் குற்ற விசாரணைக்கான அழுத்தங்கள்
அதிகரிக்கும் அதேவேளை, மத்திய கிழக்கு நெருக்கடியும் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள
பொருளாதார சரிவும் இலங்கையின் திறைசேரியை ஆட்டம் காண வைக்கிறது.

இந்த வாரம், அனைத்துலக குற்றவியல் நீதித்துறை மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி ஸ்டீபன் ராப் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

அத்தோடு மத்திய மற்றும் தெற்காசிய பிராந்தியத்திற்கான அமெரிக்க இராஜாங்க
திணைக்களத்தின் உதவிச் செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக்கும், அமெரிக்க மக்கள் பாதுகாப்பு
மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்பான உதவிச் செயலர் மரி ஒட்டேரோ (Marie Otero)
அவர்களும் வருகை தர உள்ளனர்.

Thursday, January 19, 2012

ஸ்ரீ லங்கா அரசியலில் சாதி , இனம் , மொழி , மதம் என்பனவற்றின் தாக்கம்

- விக்டர் ஐவன்-

இந்தக் கட்டுரை இன நெருக்கடி மற்றும் அவை சுட்டிக்காட்டும் அவற்றின் உள்ளார்ந்த குறைபாடுகள் என்பனவற்றின் பாரம்பரிய விளக்கங்களின் போதாமைகளை ஆராயும் கருத்தில் எழுதப்படுகிறது.

இந்த பிரச்சினையை இன நெருக்கடிக்கான ஒரு சிகிச்சையாகக் கருதுவதில் தவறேதுமில்லை. இன்னும் எனது கருத்தில் இதை மோதலை அடிப்படையாகக் கொண்ட பெரும்பான்மை சிங்கள சமூகத்துக்கும் மற்றும் ஏனைய சிறுபான்மை இனங்களான தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களிடையே நிலவும் இன வேறுபாடுகளின் அடிப்படையில் மட்டும் சிகிச்சிப்பதற்காக பயன்படுகிறது எனக் கருதுவது தவறு. வேறு விதமாகக் கூறினால், நெருக்கடி நிலைக் காட்சிகள் இன வரிகளுக்கு அப்பால் நீளும் பல்வேறு முகங்களை தழுவியிருக்கிறது.

Sunday, January 15, 2012

ஏன் பொங்கல் வாழ்த்து சொல்லணும் ...

சமூகப் பிரக்ஞை அற்ற இந்த தமிழ் சமூகத்திற்கு நான் ஏன் பொங்கல் வாழ்த்து  சொல்லணும் ? நடிகர் நாசர் பிரக்ஞை பூர்வமான கேள்வி .....

காணொளி  இணைக்கப்பட்டுள்ளது



Tuesday, January 03, 2012

சிக்மன் பிரட்டும் கார்ல் மார்க்சும் : தனி மனித மாற்றத்திலிருந்து சமூக மாற்றத்தை நோக்கி..

-மீராபாரதி-

இந்த தலைப்பில் இக் கட்டுரையை – சிறு குறிப்பு எனக் குறிப்பதே பொருத்தமானது – எழுதுவதற்கு முதல் “சிக்மன் பிரட்டும் கார்ல் மார்க்சும்” என கூகுள் இணையத்தளத்தில் தமிழில் தேடினேன். துரதிர்ஸ்டவசமாக ஒன்றும் இருக்கவில்லை. இதன் அர்த்தம் இவர்கள் இருவரையும் இணைத்து தமிழில் ஆய்வு ஒன்றும் நடைபெறவில்லை என்பதாக கருதலாம். ஆனால் இக் குறிப்பிட்ட தேடலை மட்டும் கொண்டு அவ்வாறான ஒரு முடிவுக்கு வருவது அபத்தமானது. நிச்சயமாக யாராவது எழுதியிருப்பார்கள். ஏனனில் இவர்களது பெயரை ஆங்கிலத்தில் எழுதி தேடிய பொழுது பல ஆய்வுகள் நடைபெற்றதை அறிய முடிந்தது.. 80களின் கடைசியில் யாழிலில் இருந்தபோது, கார்ல் மார்க்ஸை ஆர்வமாக ஆனால் மேலோட்டமாக நூனிப் புல் மேய்ந்தேன். இதற்கு குறிப்பிட்ட சிலரின் வழிகாட்டல்களும் இருந்தன. ஆனால் நமது அக்கறை எல்லாம் நடைமுறை செயற்பாடுகளில் இருந்ததனால் இவ்வாறான வாசிப்புகளில் அக்கறை செலுத்தவில்லை. (செயற்பாடுகளில் என்னத்தை செய்து கிழித்தோம் என்பது கேள்விக்குறியே?) மீண்டும் 90களின் ஆரம்பத்தில் எதிர்கால புரட்சியின் கனவை நினைவில் கொண்டு இவ்வாறான புத்தகங்களை கொழும்பில் இருக்கும் பொழுது வாங்கி அழகுபார்த்ததுதான் மிச்சம். ஆனாலும் புலம் பெயரும் பொழுதும் இந்தப் புத்தகங்களை மட்டும் எடுத்துக் கொண்டு வந்தது ஒரே ;ஒரு நம்பிக்கையில் தான். அது, மீண்டும் நாட்டிற்கு சென்று புரட்சிகர செயற்பாட்டில் ஈடுபடுவோம் என்பதே. அதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததாக 90களின் கடைசியில் நம்பி செயற்பட்டுக்கொண்ருந்தபோது, ஒரு புறம் அந்த நம்பிக்கை சிதைவுற்று சென்றது. ஆனால் மறுபுறம் இந்த சிதைவுகளுக்கான காரணங்களை எனக்குப் புரிகின்ற வகையில் (மிகச் சரியாக?) விளக்குகின்ற புதிய வகை சிந்தனை என்னுள் உள்வாங்கப்பட்டதனால் அடிப்படை சிந்தனை மாற்றம் ஏற்பட்டது. இதன் விளைவாக, தியானம் தொடர்பான, மிகவும் குறிப்பாக சொன்னால் ஒசோவின் எழுத்துக்களை தவிர்த்து, எல்லாவிதமான வாசிப்புக்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். இலங்கையிலிருந்து கொண்டு வந்த புத்தகங்கள் அணைத்தையும் கூட கை(கழுவி) விட்டுவிட்டேன். சில கால இடைவெளியின் பின் மீண்டும் வாசிக்க ஆரம்பிக்கின்றேன். இந்த இடைவெளில் பல மாற்றங்கள் நடைபெற்றது மட்டுமல்ல பல தலைப்புகளில் பல படைப்புகள் வெளியாகிவிட்டன. குறிப்பாக இணையத்தளங்களில் பல காரசாரமான விவாதங்கள் நடைபெற்றதை, நடைபெற்று வருவதை அறியக் கூடியதாக இருக்கின்றது. ஆகவே நிச்சயமாக மார்க்ஸையும் பிரட்டையும் இணைத்தும் ஒப்பிட்டும் பல ஆய்வுகள் விவாதங்கள் தமிழில் வந்திருக்கலாம். அவ்வாறு வந்திருப்பின் அதை என்னுடன் பகிர்ந்து கொள்ளும்படியும் இக் குறிப்பு அதிக பிரசங்கித்தனமாகவும் ஆழமற்ற பார்வையையும் கொண்டிருந்தால்; ஒதுக்கிவிடுங்கள்;.

Thursday, October 27, 2011

கடாஃபியைக் கொன்றவர்களும் லிபியாவை வென்றவர்களும்


  -அ.மார்க்ஸ்-
சாக்கடைக் குழாய்க்குள்ளிருந்த  பெருச்சாளி ஒன்றை வெளியே இழுத்துப் போட்டு அடித்துக் கொன்றதைப் போல் கர்னல் கடாஃபியை கலகப் படையினர் கொன்று போட்டுள்ளனர்.  அமெரிக்கத் தலைமையில் இயங்கும் ‘நேடோ’ படைகளின் உதவியோடு இது நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரு செத்த நாயைப்போல அவர் உடல் இழுத்துச் செல்லப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டதையும், சதாம் உசேன் அல்லது சீசெஸ்கு வீழ்த்தப்பட்டபோது மக்கள் "மகிழ்ச்சி அடைந்த" காட்சிகள் எவ்வாறு காட்டப்பட்டனவோ  அதேபோல இன்று கடாஃபியின் கொலையை மக்கள் கொண்டாடடியதையும் ஊடகங்களில் பார்த்தோம்.
அராபிய வசந்தம் எனச் சொல்லப்படும்

Saturday, October 22, 2011

ச.தமிழ்ச்செல்வனுடன் நேர்காணல்


‘‘எந்த ஆன்மிகவாதியாலும் தொட முடியாத எல்லையில் நிற்பவன் கம்யூனிஸ்ட்''  -ச.தமிழ்ச்செல்வன்-

 நேர்கண்டவர் : பேராச்சி கண்ணன்

ச.தமிழ்ச்செல்வன்
ச. தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளராக ஆறு ஆண்டுகள் பதவி வகித்தவர். தற்போது மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இருளும் ஒளியும், அரசியல் எனக்கு பிடிக்கும் உட்பட முப்பது நூல்களை வெளியிட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராக இருக்கும் இவர், தமிழகம் முழுவதும் தொடர்ந்து பயணம் செய்துகொண்டே இருப்பவர். தமுஎகச மற்றும் இடதுசாரிகளின் பங்களிப்புகள், முற்போக்கு எழுத்து உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பேராச்சி கண்ணனிடம் தெளிவாகப் பதிலளிக்கிறார்
தமிழின் நம்பிக்கை அளிக்கும் சிறுகதை எழுத்தாளராக அறிமுகமானவர் நீங்கள். பிறகு முற்றிலும் களச்செயல்பாட்டாளராக மாறிவிட்டீர்கள். ஏன் இந்தத் தேர்வு?
எல்லா மனிதர்களுக்குமே புறச்சூழல் தான் அகத்தூண்டுதலைத் தீர்மானிக் கிறது. என்னுடைய வாழ்க்கையில் புறச்சூழல் தூண்டுதல்தான் எழுதக் காரணமானது. எழுத்து முக்கியம்தான். ஆனால் அதைவிட களப்பணி முக்கியமானதாக இருக்கிறது.

Thursday, October 20, 2011

பக்தி பேரியக்கத்தை வெறும் மத நிகழ்வாக மட்டும் பார்க்க முடியாது! .

-கலாநிதி .ந.இரவீந்திரன்-

இலங்கையின் வடபுலத்தில் யாழ்ப்பாண நகரிலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பண்டத்தெருப்புக்கு உட்பட்ட காலையடி எனும் கிராமத்தில் 1955இல் பிறந்தவர். நடேசன் இரவீந்திரன். காலையடி அமெரிக்கன்மிசன் தமிமழ்க்கலவன் பாடசாலை, சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி, சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லுரி ஆகியவற்றில் கல்வி பெற்று, பேராதனைப் பல்கலைக் கழகத்தில் வெளிவாரி மாணவராய் கலைப் பட்டதாரியாகவும், பின்னர் முதுகலை மாணிப் பட்டத்தையும், சென்னைப் பல்கலைக் கழகத்தில் “திருக்குறளின் கல்விச் சிந்தனை’’ எனும் பொருளில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
மார்க்சியத்தைத் தனது தத்துவத் தளமாக்கிக் கொண்டார். இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி (இப்போது “புதிய ஜனநாயகக் கட்சி’’) இவரது அரசியல் பார்வையை விரிவுபடுத்தியது. மலையகத்தில் 1977இல் ஆசிரியராகச் செயற்படத் தொடங்கியதிலிருந்து மேலும் தனது சமூகவியல் பார்வையை வளர்த்துக் கொண்டவர். மலையகத்தின் ஸ்ரீபாத தேசிய கல்வியியல் கல்லூரியில் 1992இல் விரிவுரையாளராக இணைந்து, 1995இல் வவுனியாவிற்கு இடமாற்றம் பெற்று இன்றுவரை வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் சென்னை வந்திருந்தபோது சந்தித்த உரையாடலிலிருந்து...

சந்திப்பு: முத்தையா வெள்ளையன்