- லெனின் மதிவானம் -
மலைநாட்டு தமிழ்
மக்களின் உரிமைப் போர்த் தளபதிகள்: திருமதி கோகிலம்
சுப்பையா, ஸி.வி.
வேலுப்பிள்ளை.
(ஸி.வி.
வேலுப்பிள்ளையின் இக்கட்டுரை திரு. லெனின்மதிவானம் அவர்களால் சேகரிக்கப்பட்டது.பாக்கியாபதிப்பகத்தின் வெளியீடாக வரவுள்ள ஸி.வி.யின் 'மலைநாட்டு தலைவர்களும்
தளபதிகளும்' என்ற தொகுப்பிலிருந்து பிரசுரிக்கின்ற கட்டுரை).
திருமதி கோகிலம்
சுப்பையா தோட்டங்களுக்குப் புதியவர். திரு.சுப்பையாவின் மனைவியாயிருப்பதனால்
காங்கிரஸில் சேர்ந்தார். காங்கிரஸிலே கணவன்மாரின் வேலையைப் பகிர்ந்துகொள்ளும் வெகு
சில பெண்களில் அவரும் ஒருவர். ஏனென்றால், மற்றும் காங்கிரஸ்காரர்களின் மனைவிமார்
திருமதி சுப்பையாவைப்போலன்றித் தங்கள் கணவன்மாருக்குச் சுறுசுறுப்பாக உதவி செய்யப்
பல்வேறு வசதிக் குறைவுகளைக்கொண்டுள்ளனர்.
தலைமை வகிக்கப்
பேராற்றல்
''மாதர்
காங்கிரஸ்'' எனப்படும் காங்கிரஸின் மாதர் பகுதி தேவையான பணிபுரியப் போதிய
திறமைசாலிகளின்றி நெடுங்காலமாகச் செயலாற்றாதிருந்து வந்தது. ஆனால் திருமதி கோகிலம்
சுப்பையா வந்து சேர்ந்ததும், இந்த நெடுங்காலத் தேவை நிறைவேறியது. 1948ம் ஆண்டு
முதல் அவர் மாதர் காங்கிரஸில் சுறுசுறுப்பாகச் சேவைசெய்து வருகிறார்.
திரு.சுப்பையாவுடனும் தாமே தனியாகவும் சகல தோட்டங்களுக்கும் சென்று, பெண்களைச்
சந்தித்து, அவர்களுடைய பிரச்சினைகளைப் பற்றி அவர்களுக்குச்
சொற்பொழிவாற்றியுள்ளார். இவ்விதமாகத் திருமதி கோகிலம் சுப்பையா பெண்களிடையே மட்டுமன்றி
ஆடவர்களிடையேயும் பிரபலமடைந்துவிட்டார்.
காங்கிரஸ்
காரியக் கமிட்டி அங்கத்தினராகவும் மாதர் காங்கிரஸ் தலைவராகவும் தெரிவுசெய்யப்பட்ட
காலத்திலிருந்து, அவர் கமிட்டி ஆலோசனைகளிலும் பொதுமேடைகளிலும் சமூக வைபவங்களிலும்
தமது பங்கையெடுத்துள்ளார். இப்பங்கெடுப்பதற்காக முன்னணிக்குச் செல்வதில் ஒருவேளை
அவர் காட்டிய துணிவையும் விரைவையும் கண்டு ஆடவர்கள் கூடப் பொறாமைப்பட்டனர் எனலாம்.
தலைவரென்ற
முறையில், அவர் மற்றும் ஸ்தாபனங்களில் தம்மைப்போன்று தலைமை வகிப்பவர்களுக்கு
எவ்விதத்திலும் சளைத்தவரல்லர். அவர் திருமதி தேஜா குணவர்த்தனாவுடன்
அரசியலைப்பற்றிப் பேசியுள்ளார்@ திருமதி குளோதா ஜயசூரியாவுடன்
அரட்டையடித்திருக்கிறார்@ கைத்தொழில்களில் சமாதானத்தைச் சீராக்க வேலைநிறுத்துங்கள்
அத்தியாவசியமாகுமெனக் கவர்ச்சிகரமான இங்கிதங்களுடன் திருமதி சதுரு குலசிங்காவிடம்
அவர் சொல்ல முடிந்தது. அவர் ஓரிடத்துக்கு வந்து போகும்போது விட்டுச் செல்லும்
வசீகரத்தின் நறுமணமும் கலகலப்பான சிரிப்பொலியும் 'யார் அந்தப் பெருமாட்டி?"
என்று மற்றவர்களைக் கேட்க வைத்துவிடும். வேறெவரும் பதிலளிக்கு முன்பு திருமதி
கோகிலம் சுப்பையாவே சொல்வார் "நான் திருமதி கோகிலம் சுப்பையா - மாதர் காங்கிரஸின்
தலைவர்."
மாதர் சங்கம்
பெற்ற புத்துயிர்உண்மையில், அவர்
வந்து சேர்ந்தபிறகுதான் மாதர் காங்கிரஸ் புதிய தோற்றத்தைப் பெற்றது. அவர்கள்
தங்கள் ஆண்டு மகாநாட்டுக்கு அணியும் ஜாக்கெட்டுக்கும் போர்க்கோலமுள்ள சிவப்பு
நிறத்தைத் தெரிவுசெய்தனர்; தங்களுடைய சுலோகங்களைப் பெருமிதத்துடன் இசைக்க
முஷ்டியைக் காட்டத் தொடங்கினர்.