Showing posts with label ஆளுமைகள். Show all posts
Showing posts with label ஆளுமைகள். Show all posts

Thursday, February 23, 2012

சுதந்திரத்துக்கான விடுதலைப்போராளி பியா (Per Mortensen)

-கரவைதாசன்- 

சுதந்திரத்துக்கான விடுதலைப்போராளி Per Mortensen கடந்த வெள்ளிக்கிழமை 17.02.2012 இறப்பெய்தினார்.  நீண்ட நாட்களாக  நோய் வாய்ப் பட்டிருந்த  பியாவின்  இருதயம் தனது எண்பத்தி ஏழாவது வயதில்  தன் துடிப்பை நிறுத்திக் கொண்டது. 

1924ம் ஆண்டு யூன்மாதம் 2ந் திகதி டென்மார்க்கின் தலை நகர் கோபன்ஹேகனின்  நகரப் புறப் பகுதியான வன்லூசாவில்  போராட்ட குணாம்சம் மிக்க குடும்பத்தில் பிறந்து , தொழிலாளர்கள் சேரி ஒன்றில்  வளர்ந்து வந்தார்.  இவரது பேரனார் ஒரு போர் வீரனாவார். இவரது குடும்பத்தில் பலர் கடல்படை வீரர்கள் ஆவார்கள். 

தொழில் முறையில் இயந்திர பொறியிலாளரான இவர், சுதந்திரம், விடுதலை, அடிபணியாமை பற்றியும்,  நாசிகளின் ஆக்கிரமிப்பு பற்றியும் புத்தகங்களை எழுதியுள்ளார்.

இரண்டாம் உலகமாக யுத்தக் காலப் பகுதியில் கிட்லரின் நாசிப் படைகளால் டென்மார்க் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தவேளை  நாசிகளுக்கு எதிராக ஆர்த்தெழுந்த  BOPA எனும் விடுதலை அமைப்பில் 1943ம் ஆண்டு தனது 19வது  வயதில்  முன்னனிப்போரளிகளின் வரிசையில் இணைந்து  ரோம் Tom  எனும் இயக்கப் பெயரினை தன்னகத்தே கொண்டு நாசிகளுக்கு  எதிரான சிறு சிறு தாக்குதல்களை மேற்கொண்டவர். 

அந்நாட்களில்  நாசிகள்  அணுகுண்டு  தயாரிப்பதற்கான தாதுப்பொருட்களை   நோர்வேயிலிருந்து  சரக்குவண்டிகளில்  டென்மார்க் ஊடாக  எடுத்துச் சென்ற வேளை, அச்சரக்குவண்டிகளை தகர்த்து, அவர்களுக்கு அத்தாதுப்பொருட்கள்  சென்றடையாமல் BOPA எனும் விடுதலை அமைப்பு மேற்கொண்ட தாக்குதலை தலைமை ஏற்று  பியா செயல்ப்படாது போயிருந்தால், ஜேர்மன் நாசிகளின் கையில் அன்று அணுகுண்டு இருந்திருக்கும். இன்று இந்த உலகப்பந்தும் அதில் உயிர்களும் இருந்திருக்கா.

இன, சாதி, பால், வர்க்கம் , தேசியம் போன்ற காரணிகளில்  தோன்றும் ஆதிக்கவெறிபிடித்த  ஆக்கிரமிப்பாளர்களே அதிகாரத்துவப்போட்டியில்  "பியா" போன்ற சுதந்திரத்துக்கான விடுதலைப்போராளிகள் தோன்றுவதற்கான வெளிகளை தோற்றுவிக்கிறார்கள்.


Saturday, February 18, 2012

ஹோமாய் - இந்தியாவின் முதல் பெண் போட்டோ ஜெர்னளிஸ்ட்

-கவின்மலர்-
குடியரசுத்தலைவர் மாளிகையில் அரசு நிகழ்வு ஒன்றில்..பத்திரிகையாளர்களும், புகைப்படக்காரர்களும் குழுமியிருந்த அந்த அரங்கில் அந்தப் பெண், நிகழ்ச்சியின்  ஒவ்வொரு கணத்தையும் தன் கேமிராவுக்குள்  அடக்கிக்கொண்டிருந்தார். கையினால் தைக்கப்பட்ட அவரது ப்ளவுஸின் கைப்பகுதி அவருக்குத் தொல்லை தந்தது. அவர் நினைத்தபடி சரியான கோணத்தில் படமெடுக்க கையை உயர்த்திய வேளையில் அவரது கைப்பகுதியில் ப்ளவுஸ் துணி கிழிந்தது. அங்கிருந்த ஒரு சில பெண்களின் முணுமுணுப்பைப் பொருட்படுத்தாமல், சட்டென்று தனது இரண்டு கைப்பகுதி துணிகளையும் வெட்டி எடுத்து ஹேண்ட்பேக்கில் வைத்துக்கொண்டு, படமெடுக்கும் வேலையைத் தொடர்ந்தார். இந்த நிகழ்வுக்குப் பின் அவர் சல்வார் கமீஸ் அணியத் தொடங்கினார். அவர் ஹோமாய் வியாரவல்லா. இந்தியாவின் முதல் பெண் போட்டோ ஜர்னலிஸ்ட்.


Tuesday, November 29, 2011

ழாண்-லூயிக்- செவ்வியார்

சாஷா எபெலிங் உணர்வால் தமிழர்
- வி.தேவராஜ்-
பிறப்பால் ஜெர்மனியரான முனைவர்  சாஷா எபெலிங் உணர்வால் தமிழராக, தமிழ் மொழியை நேசிப்பவர். இவரைப் போலவே இன்னொருவரும் சிங்கப்பூர் உலகத் தமிழ் எழுத்தாளர் மகாநாட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மகாநாட்டில் கலந்து கொண்டவர்களைச் சந்திக்கும் போது கை கூப்பி வணக்கம் தெரிவிக்கும் அவர் சுகமாக இருக்கிறீர்களா? பயணம் சுகமாக அமைந்ததா? போய் வருகின்றேன், உங்களுடைய பயணம் இனிதாக அமை யட்டும் என்றெல்லாம் தமிழ் மொழியில் சரளமாக உரையாடியவர் முனைவர் ழான் லூயிக் செவ்வியார்.

பிரெஞ்சைத் தாய் மொழியாகக் கொண்ட இவர் கணிதமும் மொழியியலும் பயின்றவர். தென்னிந்தியாவில் பேராசிரியர் முத்து சண்முகம்பிள்ளையிடம் இவர் தமிழ் கற்றார். தமிழ் இலக்கணப் பாரம்பரியத்தில் தனிக்கவனம் செலுத்திய இவர் சேனாவரையம் பற்றி ஆய்வுக் கட்டுரை எழுதி அதை பண்டிட் டி.வி. கோபால அய்யரின் துணையுடன் திருத்தம் செய்து கொண்டார். பிரெஞ்சு கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடத்திலும் பின்னர் தேசிய அறிவியல் ஆய்வு மையத்திலும் பணிக்கமர்த்தப்பட்ட இவர் மொழித் தத்துவ வரலாற்றுக் குழுவிலும் இடம்பெற்றுள்ளார்.

இவர் பல நூல் பிரதியை வெளியிட்டுள்ளார். அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். ஒரு கணினி வட்டு (கணினித் தேவாரம்)முதலியவற்றை வெளியிட்டுள்ளார். வரலாறு அறிவாய்வியல் மொழி (History Epistemology Language-ISSN 0750-8069) என்ற சஞ்சிகையின் ஆசிரியராகவும் கட மையாற்றுகின்றார். தற்போது ஆசிரியத்துறை பிரெஞ்சுப் பள்ளி, பாண்டிச்சேரி மையத்தில் பணியாற்றும் இவர் அதன் ஏட்டுச் சுவடிச் சேகரிப்பைக் கணினி மயப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். „ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்'' என்ற பாடல் வரிகளை உச்சரிப்புப் பிசகாமல் பாடி அசத்தினார் என்று சிங்கப்பூர்  தமிழ் முரசு பத்திரிகை அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளது. அத்துடன் பழம்பெரும் இலக்கியங்களான குறுந்தொகை, கலித்தொகை ஆகியவற்றின் பாடல்களைப் பிழையற வாசித்துக் காட்டியதுடன் தமிழில் மிகவும் பிடித்த நூல் சிலப்பதிகாரம் என்றும் கூறியுள்ளார். தொல்காப்பியத்தில் முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் இருந்து பெறப்பட்டு தற்போது பிரான்சின் கீழ்த்திசை ஆய்வுக் கல்விக் கூடத்தில் பாதுகாக்கப் பட்டு வரும் சுமார் 1600 ஓலைச் சுவடிகளையே அவர் கணினிமயப்படுத்தி வருகின்றார்.
தேவாரத்தில் உள்ள சுமார் 800 பதிகங்களையும் தொகுத்து அவற்றைச் சொற்கள் வாரியாகத் தேடக்கூடிய வசதியையும் கணினி வட்டின் மூலம் தமிழ் உலகுக்குத் தந்துள்ளார்.
நன்றி: வீரகேசரி

Tuesday, October 11, 2011

திரு நங்கையின் வலி


 திரு நங்கையின் வலி 
-வித்யா -


சொந்த நாட்டில் வாழ வழியின்றி, அடைக்கலம் கொடுக்கும் நாட்டிற்கு சென்று வாழ்பவர்களைத் தான் அகதிகள் என்று சொல்வார்கள். உண்மையில் அவர்களுக்கும் தலையாய அகதிகள் போல வாழ்பவர்கள் திருநங்கைகளே. "வாக்குரிமை, குடும்ப அட்டை, பெயர்மாற்றம்" என்று எதுவாக இருந்தாலும் போராட்டம் தான் அவர்களுக்குப் பெற்றுத் தருகிறது. இது போதாதென்று சொந்த குடும்பத்தாலும், உறவுகளாலும், நண்பர்களாலும் ஒதுக்கி வைக்கப்படுபவர்கள். ரயில் பயணங்களிலோ, காய்கறி சந்தையிலோ யாசகம் கேட்கும் திருநங்கையை கவனிக்காதது போல பலமுறை சென்றிருக்கிறேன். அவர்களுடன் என்னை தொடர்பு படுத்திப் பேசிவிடுவார்களோ என்ற பயம். அவர்களின் யாசக நிலைமைக்கான காரணத்தை என்றுமே யோசித்ததில்லை. பயம் விட்டுப்போய் பல வருடங்கள் ஆகிறது. இப்போதெல்லாம் எனக்கு எதிரில் யார் இருந்தாலும் தயங்காமல் பேசப் பழகிவிட்டேன். "quality of life is nothing but a quality of communication" என்ற மேற்கோளை நினைத்துக் கொள்வேன்.