Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Tuesday, January 31, 2017

“இரண்டாம் இடம்” (மொழியெர்ப்பு நாவல்)

-ரவீந்திரன்.பா-
வரலாறு முக்கியம் அமைச்சரே !
* * ******************************
குறிப்பு: 29.01.2017 அன்று சூரிச் "வாசிப்பும் உரையாடலும்" நிகழ்ச்சியில் உரையாடலுக்காக "இரண்டாம் இடம்" நூல் எடுக்கப்பட்டது. தோழர் யோகராஜா வினால் இந் நூல் இன்னொரு கோணத்தில் விரிவாக அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து எல்லோரினதும் உற்சாகமான உரையாடலாக விரிந்தது. அதில் நான் வைத்த கருத்துகளை கொஞ்சம் விரிவாக செழுமைப்படுத்தி இங்கு பதிவிடுகிறேன்.

மலையாள எழுத்தாளர் வாசுதேசன் நாயர் அவர்களால் எழுதப்பட்டது. குறிஞ்சிவேலன் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்
மகாபாரதக் கதையின் மீதான ஓர் மறுவாசிப்பாக உருவாகிய நாவல் “இரண்டாம் இடம்”. மகாபாரதத்தில் அதன் கதைமாந்தர்கள் மீது சூட்டப்பட்ட ஒளிவட்டங்கள், புனிதங்கள் மனிதஜீவியிடமிருந்து மிதப்பாக அவர்களை நிலைநிறுத்துகிறது. இந்தப் புனிதங்களையும் ஒளிவட்டங்களையும் சிதைத்து அவர்களின் மனிதப் பாத்திரத்தை வெளிக்கொணருகிற வேலையை “இரண்டாம் இடம்” நாவல் செய்கிறது. எல்லோரும் தவறுகளோடும் சரிகளோடும் இயங்குகிற மனிதத் தளத்தில் அவர்கள் காண்பிக்கப்படுகிறார்கள்.
கிருஸ்ணன், கர்ணன், தர்மன், குந்தி... என எல்லோரினது பிம்பங்களும் மனிதக் கட்டமைப்புக்குள் இறக்கிவைக்கப்படுகிறது.
திரௌபதையின் துகிலை துச்சாதனன் உரிகிறபோது ஈஸ்ட்மென் கலரில் சீலைகள் படையெடுத்துவந்து அவன் களைத்து விழுந்ததாய், கிருஸ்ணனின் சீலைவிடலை கண்டு நிம்மதிகொண்ட வாசக மனதுக்கு மாதவிடாயுடன் இரத்தம் ஒழுக அவளது ஒற்றைச் சீலையை துச்சாதனன் இழுத்துக்கொண்டபோது ஏமாற்றமாய் இருத்தல் கூடும். சரி..ஒரு விஜய் ஒரு ரஜனி புயலாய் வருவதுபோல் வீமன் களத்தில் இறங்கமாட்டானா என நாசமாய்ப்போன இன்னொரு மனசு எதிர்பார்க்கவும்கூடும். எதுஎப்படியோ கிருஸ்ணனின் புனித பிம்பம் காணாமலே போய்விடுகிறது.

Sunday, January 18, 2015

பெருமாள் முருகனிடம் போலீசார் நடத்திய கட்டப்பஞ்சாயத்து - அதிர்ச்சித் தகவல்கள்

எழுத்தாளர் பெருமாள் முருகனை பலவந்தப்படுத்தி நாமக்கல்லை விட்டு வெளியேறுமாறு செய்ததது அந்த மாவட்டத்தின் போலீசாரே என்று எழுத்தாளரின் வழக்கறிஞர் ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளர்ர்.சில நாட்களுக்கு முன்னதாக `மாதொருபாகன்’ என்ற நாவல் எழுதியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகன் சாதி ஆதிக்க அமைப்புகளினாலும் ஆர்எஸ்எஸ் மதவெறி அமைப்புகளினாலும் மிரட்டப்பட்டு மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டு, அவர் எழுதிய நாவல்களை திரும்ப பெறுமாறு நிர்பந்திக்கப்பட்டார்.
இது மாவட்ட நிர்வாகத்தின் முன்பாகவே பேச்சுவார்த்தை என்ற பெயரில் நடந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் நாமக்கல் ஊரை விட்டு தனது குடும்பத்தினருடன் வெளியேறிச் சென்று விட்டார். பின்னர் அவர் தான் எழுதுவதை நிறுத்தப்போவதாகவும் தனது நாவல்களை திரும்ப போவதாகவும் தனக்குள் இருக்கும் எழுத்தாளர் இறந்து விட்டதாகவும் மனம் நொந்து அறிவிப்பு வெளியிட்டார். ஒரு எழுத்தாளர் இப்படிப்பட்ட முறையில் நிர்பந்திக்கப்பட்டு எழுதுவதையே நிறுத்தும்படி செய்வதும் ஊரைவிட்டு விரட்டியடிப்பதற்கும் தமிழகம் முழுவதும் கண்டனம் எழுந்தன.

Friday, January 16, 2015

நாங்கள் பெருமாள் முருகனுடன் தான் இருக்கின்றோம்

  • புலம்பெயர்ந்த இலங்கை எழுத்தாளர்களது கூட்டறிக்கை:

எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவலான 'மாதொருபாகன் 'பிரதிமீது இந்துத்துவ - சாதிய சக்திகள் கோரும் தடையையும், அவர்கள் கொடுக்கும் நெருக்கடியிலிருந்து பெருமாள் முருகனைக் காப்பாற்றத் தவறியிருக்கும் தமிழக அரசையும் புலம்பெயர்ந்த இலங்கை எழுத்தாளர்களான நாங்கள் எங்களது இந்தக் கூட்டறிக்கை வழியே  வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கருத்துச் சுதந்திரத்திற்கு எல்லைகள் கிடையாது. அவ்வாறு எல்லைகள் இருப்பின் அவை உண்மையில் ஒழுங்கமைக்கப்பட்ட மறைமுகத் தடைகளே. மதம் அல்லது சாதி போன்ற சமூக பிற்போக்கு அமைப்புகளால் கருத்துச் சுதந்திரத்தின் மீது வைக்கப்படும்  தடைகள் மட்டுமல்லாது; அரசு இறைமை, இன விடுதலை, புரட்சி, சமத்துவம் போன்ற முற்போக்கு முழக்கங்களுடன் வைக்கப்படும் கருத்துச் சுதந்திரம் மீதான தடைகளும் முழுமையாகக் கண்டிக்கப்படவேண்டியவை என்பதை நாங்கள் அனுபவபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் நன்கறிவோம்.

மதவாத - சாதிய சக்திகளின் நெருக்குவாரங்களை எதிர்கொள்ள முடியாத நிலையில் எழுத்தாளர் பெருமாள் முருகன் தனது முழு இலக்கிய எழுத்துகளையும் மீளப்பெற்றுக்கொள்வதாகவும் இனிமேல் தான் இலக்கியம் எழுதமாட்டேன் எனவும் அறிவித்திருப்பது சமூகத்தின் கூட்டு அவமானமும் துயருமாகும்.

எழுத்தாளர் பெருமாள் முருகன் தனது முடிவை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக இருக்கும் அனைத்துச் சக்திகளிடமிருந்தும் கருத்துச் சுதந்திரத்தைக் காப்பாற்றும் பொறுப்பைத் தமிழக அரசு உணர்ந்து செயற்படவேண்டுமெனவும் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

மு.நித்தியானந்தன்  (இங்கிலாந்து )
எஸ்.ரஞ்சகுமார்  (அவுஸ்திரேலியா) 
இளவாலை விஜேந்திரன் ( நோர்வே) 
நிர்மலா ராசசிங்கம் (இங்கிலாந்து )
ஷோபாசக்தி (பிரான்ஸ்) 
நட்சத்திரன் செவ்விந்தியன் (அவுஸ்திரேலியா) 
புஷ்பராணி (பிரான்ஸ்)
மெலிஞ்சி முத்தன் (கனடா) 
உமா (ஜேர்மனி)
ஹரி ராஜலட்சுமி (இங்கிலாந்து) 
சயந்தன் (சுவிற்சர்லாந்து) 
கவிதா (நோர்வே) 
சுமதிரூபன்  (கனடா) 
தர்மு பிரசாத் (பிரான்ஸ்)
தேவன் (சுவிற்சர்லாந்து) 
ஏ.ஜி. யோகராசா (சுவிற்சர்லாந்து) 
நற்கொழுதாசன் (பிரான்ஸ்) 
கற்சுறா (கனடா) 
தர்மினி (பிரான்ஸ்) 
பதீக்அபூபக்கர் (இங்கிலாந்து) 
விஜி (பிரான்ஸ்) 
கரவைதாசன் (டென்மார்க்) 
தமயந்தி (நோர்வே) 
சுரதா யாழ்வாணன் (ஜேர்மனி)
எம். ஆர்.ஸ்டாலின் (பிரான்ஸ்) 
புதியவன் இராசையா (இங்கிலாந்து) 
ராகவன் (இங்கிலாந்து) 
க.சுதாகரன் (சுவிற்சர்லாந்து)
ச.தில்லை நடேசன்( பிரான்ஸ் )
பானு பாரதி (நோர்வே) 
ஜீவமுரளி (ஜேர்மனி) 
அதீதா (கனடா) 
தேவிகா கெங்காதரன் (ஜேர்மனி) 
விஜயன் (சுவிற்சர்லாந்து) 
கோமகன் (பிரான்ஸ்) 
சஞ்சயன் (நோர்வே) 
அசுரா (பிரான்ஸ்) 
பத்மநாதன் நல்லையா (நோர்வே) 
இளங்கோ (கனடா )
காருண்யா கருணாகரமூர்த்தி (ஜெர்மனி) 
சரவணன் நடராசா (நோர்வே) 
கலையரசன் (நெதர்லாந்து) 
திருமாவளவன் (கனடா) 
பத்மபிரபா (சுவிற்சர்லாந்து)
சந்துஸ் (இங்கிலாந்து) 
தேவதாசன் (பிரான்ஸ்) 
மீராபாரதி (கனடா) 

Saturday, January 03, 2015

எஸ்.பொ. அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

ஈழம் ஈன்றெடுத்த பிரபல எழுத்தாளரான எஸ்.பொ. அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 04.01.2015 ஞாயிறு மாலை 15.30 வயன் நகரத்தில் சிறப்பாக நடைபெற இருக்கிறது.
அனைவரும் அழைக்கப்படுகிறார்கள், இது குறித்த அறிவித்தல் வருமாறு :
sun

Saturday, May 31, 2014

எது ஹைகு

-ரீ.கே.கலாப்ரியா- 

ஹைகு பற்றி – ஒரு நண்பருக்குச் சொன்னவை :-

ஹைகுவின் தோற்றம் வளர்ச்சி இவை பற்றிப் பேசும் முன், தமிழ்க் கவிதைப் பரப்பில் அதன் தாக்கம் பற்றிய தகவல்களைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். பாரதியார்தான் முதன் முதலில் ஹைகு பற்றிப் பேசுகிறார். கல்கத்தா ’ஸ்டேட்ஸ்மென்’ பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு கட்டுரையை மேற்கோள் காட்டி அவர் வியக்கிறார். அவர் ஹைக்குவின் அசல்ப் பெயரான ’ஹொக்கு’என்று எழுதுகிறார். கல்கத்தா என்கிறபோது தாகூர் அது பற்றித் தெரியாமல் இருந்திருப்பாரா.தாகூரது ‘Stray Birds’ என்ற அற்புதமான நூலில் ஹைகு சாயலில் பிரமாதமான கவிதைகள் எழுதியிருக்கிறார். அது பற்றிப் பின்னால் காண்போம். நவீன தமிழில் கசடதபற இதழில் ஒரு ஹைகுவை மொழி பெயர்த்துப் போட்டிருந்தார்கள். ரைஸான் எழுதிய அந்தக் கவிதையைப் பின்னால் சொல்லுகிறேன். நான் ஹைகு பற்றி அப்போதுதான் அறிந்து கொண்டேன். அந்தப் பாதிப்பில்

“நேரங்கழித்துக் குளிக்கின்றன
மழை பெய்கையில்
மரத்தடியில் சிந்திய மலர்கள்” (1970)
*
”தொலைவில் புணரும் தண்டவாளங்கள்
அருகில்ப் போனதும்
விலகிப் போயின” (1970)

என்றெல்லாம் நானும் எழுதினேன்.

ஹைகு அல்லது ஹொக்கு, முதலில் ’டாங்கா’ என்ற கவிதை வடிவத்திலிருந்து பிறந்தது. அதில் ஐந்து வரிகள் இருக்கும். அது ஒரு போட்டிப் பாடல் போல. முதல் மூன்று வரிகளை ஒருவர் சொல்ல அதை முடித்து வைக்கும் கடைசி இரண்டு வரிகளை இன்னொருவர் சொல்ல வேண்டும். ’டாங்கா’வின் முதல் மூன்று வரிகளை ‘ஹொக்கு’ என்பார்கள். பிற்காலத்தில் இந்த முதல் மூன்று வரிகளே ஒரு அற்புதக் கவிதை வ்டிவமாக நிலைத்து விட்டது. அதனாலேயே ‘ஹொக்கு’ என்பது ’ஹைகு’வாக ஆனதாகவும் சொல்வார்கள். ஹைகுவுக்கென்ற இலக்கணம்: அதில் பதினேழு அசைகள் மட்டுமே இருக்கும்,முதல் மற்றும் கடைசி வரிகளில் ஐந்து அசைகளும்,நடு வரியில் ஏழுமாக மொத்தம் பதினேழு அசைகள் (Syllables). அநேகமாக கவிதையில் ஏதாவது ஒரு பருவம் அல்லது பருவத்தைக் குறிக்கும் ஒரு நேரடிச் சொல், அல்லது பருவத்திற்குரிய பூச்சிகள், பொழிவுகள் போல எப்படியும் ஒரு சொல் இடம் பெற வேண்டும். ஒரு நல்ல ஹைகு வெறும், இயற்கை அல்லது உணர்ச்சி பற்றிய ’வசன வாக்கியமோ’ அல்லது இயற்கைச் சித்திரமோ மட்டுமல்ல, ’மேம்போக்கான பார்வை’க்குத் தென்படாத, இரண்டு வெவ்வேறு விஷயங்களுக்கு இடையேயுள்ள அடையாளத்தைச் சொல்ல வேண்டும். நமக்கு உள்ள வெண்பா, கலிப்பா போன்ற பாவிலக்கணம் மாதிரியான ஒரு விஷயம் இது. அதனால்த்தான் சுஜாதா அடிக்கடி சொல்வார், தமிழில் வருபவை ஒரு வகை குறுங்கவிதைகளே தவிர ‘ஹைகு’ அல்ல, என்று. 70களின் பிற்பகுதியில் இருந்து தமிழில் நிறைய குறும்பாக்கள் வருகின்றன, அதற்கு முன்பே கூட குறள் வெண்பா போல ஏற்கெனவேயும் இருக்கின்றன. தாகூரை இதற்கு முன்னோடியெனச் சொல்லலாம்

Thursday, April 03, 2014

கோபாலன் நினைவுக்கூட்டமும் மலையக நூற்கள் அறிமுகமும்

ஒல்போவில் 05.04.2014 சனிக்கிழமை, கலை இலக்கிய அரசியற் செயற்பாட்டாளர் கொக்குவில் கோபாலன் நினைவுக்கூட்டமும் மலையக நூற்கள் அறிமுகமும்

கலைஇலக்கிய அரசியற்செயற் பாட்டாளர் கொக்குவில் கோபாலன் நினைவுக்கூட்டமும் நூல் அறிமுகமும்

நிகழ்ச்சிநிரல் 

ஒளியேற்றல்
வரவேற்புரை
நினைவுரை
நூலறிமுகம் 
நன்றியுரை


நிகழ்வில் பங்குகொள்வோர்
இ.சரஸ்வதி
க.சிவசிதம்பரம்
ம.மரியதாஸ்
க.சிவா
க.நவரட்ணம்
இ.கண்ணதாஸ்
கி.கிருஷ்ணாநிதி
த.யோகராசா
த.தர்மகுலசிங்கம்
அ.குமாரதுரை
எம்.சி.லோகநாதன்
த.பிரேம்ராஜ்
 க.ஆதவன்
மு.நித்தியானந்தன்
கரவைதாசன்


Wednesday, April 02, 2014

ஹட்டனில் நூல்விமர்சனம்

'இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்' என்றநூல்- தளத்தின் வெளியீட்டுரையுடன் மேலும் செப்பனிடப்பட்ட வடிவில் இலங்கையில் வெளியிடப்படவுள்ளது. வரும் ஞாயிரு 6ந் திகதி ஹட்டன் தொழிலாளர் பொழிலில் மரியதாஸ் தலைமையில் நடைபெறவுள்ளது. லெனின் மதிவானம் விமர்சன உரையையும் செல்வராஜா கருத்துரையும் நூலாசிரியர் இரவீந்திரன் ஏற்புரையும் வழங்குவர். நிகழ்வு காலை 9.30 க்கு இடம்பெறும்.,இன்றைய தேச, சமூக சூழலின் தேவைக்கான ஒரு தேடலாக அமைகின்றது.. 

Saturday, March 29, 2014

டென்மார்க்கில் மலையகநூற்கள் அறிமுகம்

டென்மார்க்கில் மலையகநூற்கள் அறிமுகம்
 
 

Wednesday, October 23, 2013

30வது பெண்கள் சந்திப்பு - ஒரு பார்வை

-உமா- (ஜேர்மனி)
1990ம் ஆண்டு ஜேர்மனியின் கேர்ண நகரில் ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் சந்திப்பின் 30வது தொடர் ஒக்டோபர் மாதம்12ம் திகதி பாரிஸில் நடைபெற்றது.
viji 12.10
இச்சந்திப்பின் ஆரம்பவுரையை நிகழ்த்திய விஜி,  1990 களில் ஜேர்ம னி கேர்ண நகரில் தொடங்கிய இப்பெண்கள் சந்திப்பு, 30 வது  சந்திப்பு வரை பல ஐரோப்பிய நாடுகளிலும், கனடாவிலும் தொடர்ந்து நடைபெற்றுவருவது குறிப்பிடக்கூடியது.  இதற்கு முதல் மூன்று சந்திப்புகள் பிரான்சில் நடைபெற்றுள்ளதாகவும், எல்லாச் சந்திப்புகளுமே காத்திரமான சந்திப்புகளாக அமைந்தனவென்றும், 2000ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பெண்கள் சந்திப்பில் தலித் சிந்தனையாளரும் பெண்ணியவாதியுமான சிவகாமி கலந்து கொண்டு ஆழமான கருத்துகளை வழங்கியதோடு பங்குபற்றியஅனைத்துப் பெண்களையும் மனந்திறந்து பேசவைத்தார் என்பதையும் பதிவுசெய்தார்.
 சந்திப்பின் முதல்நிகழ்வாக,

Sunday, April 07, 2013

லண்டன் இலக்கியச்சந்திப்பு 40

லண்டன் இலக்கியச்சந்திப்பு 40 அமர்வு இரன்டு 7.04.2013

Monday, April 30, 2012

நெஞ்சில் தைத்த முள் "கசகறணம்"

-இளைய அப்துல்லாஹ்-

விமல் குழந்தைவேலின் ‘வெள்ளாவி’ நாவலை வாசித்து முடித்தபோது அவருக்கு தொலைபேசி அழைப்பெடுத்து கேட்டேன். ‘நீங்கள் என்ன சலவைத் தொழிலாளியா?’ என்று. அவர் சிரித்தபடி ‘இல்லை’யென்றார்.

அப்படி மட்டக்களப்பு, இலங்கையின் கிழக்கு
மாகாண சலவைத் தொழிலாளர் சமூகத்தை
வெள்ளாவி நாவலில் துல்லியமாகக் கொண்டு
வந்தவர் அவர்.

கசகறணம் நாவலில். தேவதூதர்கள் போல் வந்தார்கள்,ராஜகுமாரர்கள் போல் உபசரிக்கப்பட்டார்கள், மாய மந்திரம் செய்தது
போல் மறைந்தே போனார்கள். விடுதலைப்புலிகளின் தோற்றம், வாழ்வு, மறைவை மூன்றே மூன்று வாக்கியங்களில் முழு மன உணர்வுகளையும் இப்படி இதற்கு முதலும் யாரும் சொல்லவில்லை. இனி மேலும் யாரும் சொல்ல முடியாதபடிக்கு விமல் குழந்தைவேல் சொன்னது எனது நெற்றிப்பொட்டில் ஆணி அடித்தது போல் இருந்தது.

Thursday, April 05, 2012

ஈழத்து சிறுகதைகளின் செல்நெறி

தம்பு  சிவாவின் சிறுகதைகளை முன்னிறுத்தி 
-லெனின்  மதிவானம்-

நவீன காலத்தே எழுந்த இலக்கியத்தின் உட்பிரிவுகள் யாவற்றிலும் சிறுகதை பொதுமக்கள் பெரிதும் விரும்பபடுகின்ற இலக்கிய வடிவமாகத் திகழ்கின்றது. இன்றைய சமுதாயச் சூழல் தோற்றுவிக்க கூடிய தனிமனித முரண்பாடுகளும் நெரிசல்களும் சிறுகதைக்கான நுகர்வோர் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. அதுமட்டுமன்று, சிறுகதைக்கான உள்ளடக்கம், உருவம் சமகால வாழ்க்கைப் போராட்டத்தில் அதன் இடம் என்பன குறித்து விமர்சகர்கள் எவ்வளவுதான் அரிய கருத்துக்களையும் கோட்பாடுகளையும் வகுத்துக் கூறினாலும் அதன் இறுதி வெற்றி என்பது பொதுமக்கள் விரும்பும் நிலையிலேயே தீர்மானிக்கப்படுகின்றது. அதுவும் தரமான சிறுகதைகளுக்கு புறத் தூண்டுதல் அவசியமில்லையென்றே தோன்றுகின்றது.
சிறுகதை சமூகவுறவுகளில் வெளிப்படும் மனித நிலைகளை பின்புல உறைப்புடன் எடுத்துக் காட்டுகின்றது. இன்றைய உலகில் சிறுகதைப் பற்றிய சிந்தனைகளும் போக்குகளும் பல புதிய பரிமாணங்களையும் தோற்றுவித்திருக்கின்றது. தமிழ் சிறுகதை வரலாற்றிலும் இதன் பாதிப்பு நிகழாமல் இல்லை. வ.வே.சு. ஐயரின் குளத்தங்கரை அரசமரத்தில் ஆரம்பித்து நமது யுகத்து ஆற்றல் மிக்க சிறுகதையாசிரியரான ஆதவன் தீட்சண்யாவின் சிறுகதைகள் வரை பலரும் பலவகைகளில் சோதனைகள் செய்து பார்த்து தான் இந்த புதிய திசை வழியை கண்டடைந்துள்ளனர்.
புதி திசை வழி என்பதன் அர்த்தம் மக்களால் மக்களுக்கான இலக்கியம் என்ற அம்சத்தை சுட்டி நிற்கின்றது. பல ஆண்டுகளாக வளர்ந்த இயக்கம், போராட்டம் செயல் என்பனவற்றின் ஊடாக வளர்ந்து வந்ததொரு இக்கிய செல்நெறியாகும். இந்த பின்னணியில் சிறுகதை பற்றி நோக்ககின்ற போது அது வாழ்க்கையின் அவலங்களை துன்பங்களை எடுத்துக் காட்டுகின்றது. தனி மனித வாழ்வில் ஏற்படும் அவலங்கள் துன்பங்கள் வெளிக்கொணரப்படாவிட்டால் அவற்றினை அழித்து விடவும் முடியாது. எனவே சிறுகதை மக்களின் வாழ்க்கை அவலங்களை துன்பங்களை மட்டும் சித்திரிப்பதாக அன்று அதனை தீர்ப்பதற்காக உந்துதலையும் வழங்குகின்றது என்பதை சிறுகதை வரலாற்றினை ஊன்றிக் கவணிப்பவர்களால் உணர முடியும்.

Monday, February 13, 2012

தாயகம் கடந்த தமிழ் இலக்கியத்தில் தமிழ் மனம்



உறைபனி இடுக்கில் அடம்பன் கொடி வேர் பின்னும்

-ந. சுசீந்திரன்-

„ Ihr, die ihr auftauchen werdet aus der Flut 
 In der wir untergegangen sind 
 Gedenkt 
 Wenn ihr von unseren Schwächen sprecht 
 Auch der finsteren Zeit 
 Der ihr entronnen seid…“
                                  -Bertolt Brecht

‚தாயகம் கடந்த தமிழ் இலக்கியம்‘ என்னும் தொடரில் வருகின்ற தாயகம் என்ற பதம்  இக் கட்டுரையில் இலங்கையை மட்டுமே சுட்டுகின்றது. ‚தமிழ் மனம்‘ என்பது தமிழ் அடையாளம், தமிழ் நிலைப் பட்ட உணர்வு மற்றும் தமிழ் பண்பாடு, தமிழ்  மனப்போக்கு போன்ற கருத்தமைவுகளில் எழுதப்படுகின்றது.   
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் உருவாகிய இலக்கிய முயற்சிகளை, குறிப்பாக இலக்கிய சந்திப்பு என்ற தொடர் நிகழ்வை முன்வைத்து,  அதனூடாக  தமிழ் மனம் என்பது  முற்றிலும் புதிய சூழலை எதிர் கொண்டு எவ்வாறு செயற்பட்டிருக்கின்றது? தன் சுயத்தை இப் புதிய சூழலுக்கேற்ப தகவமைப்பதன் மூலம் ஏற்படுகின்ற மாற்றங்களைத், தன்  இருப்புக்கு எவ்வாறு  சீரமைத்துக்கொண்டது என்பதையும், புகலிடக் காலத்தின் பல்வேறு நிலைகளில்  அடையாளத்தின் மாறுபடு தன்மையை இலக்கியத்தின் துணைகொண்டு  இனங்காணமுனைவதுமே  இக்கட்டுரையின் நோக்கமாகும். கவிதைளே எடுத்துக் காட்டுக்களுக்கு அதிகம் பயன்படுத்தப் படுகின்றன