Sunday, July 05, 2015

பிரத்தியேகம் (சிறுகதை)

-கரவைதாசன்-
எனக்குத்  தெரியும் தூரத்தில் அவர்கள்  அந்த தொடு கடலை அண்டி நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கிடையில்  அண்டளவாக ஒரு இரண்டு மீட்டர் இடைத்தூரம் இருக்கலாம். அவர்கள் எதையோ  சம்பாசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் அநாதரவற்றுக்  கிடக்கும்  கல்லொன்றினையோ அல்லது  பனிக் கட்டியொன்றையோ உதைக்கின்றார். இருப்பிலிருந்து  பிரிய விரும்பா ரீங்காரத்துடன்  அது நகர்ந்து செல்கின்றது. நேற்றிரவு பூத்த பனிகள் இறுகித் திண்மையாகி வெள்ளைச் சல்லிக் கற்களைப்போல் கடற் கரையோடு பரந்து கிடக்கின்றன. வானம் கரும் முகில்களால் சூழ்ந்தே கிடக்கின்றது. இடையிடையே வெள்ளியிலான முகில்கூட்டங்களும். மொய்க்கின்ற குளிரும்,  வசந்த காலத்தினிலே இலையும் கணுவும்  பூவும் பிஞ்சும் காயும் கனியுமாய் குடை விரித்துநின்ற மரங்கள் விறகாகி  உயிர் ஒளித்து மீண்டும் ஒரு பிராப்தத்துக்காய் வான் நோக்கி விரல் நீட்டி தவம் கேட்க  அவற்றிலும்  பனி குந்தியிருந்தன.  இவை  டென்மார்க் நாட்டின்  குளிர் காலத்தின்  இயற்கை வனப்புகள்.

எனக்கு இரசிக்க நேரமில்லை கைகோடரியினை ஓங்கி மரக்குத்திகளியிடையே  இறக்கினேன். எதிரே காற்று மெல்ல வந்து விலகிப் போனாபோது  குளிர் முகத்தில் அறைந்தது.  உள்ளே சென்று வழைமைபோல் அப்பா பாவிக்கின்ற அந்தக் கூடையை எடுத்து வந்து கொத்திப்பிரித்தெடுத்த விறகுகளை அதில் அடுக்கத்தொடங்கினேன். அப்பாவுக்குத் தெரிந்த  அதே நுட்பம் பெரிய துண்டுகள் கீழாகவும் சிறுதுண்டுகள் மேலாகவும்  அடுக்கி முடித்தேன். பலம் கொண்டவரை கூடையை இழுத்துச் சென்று கொட்டிலின் நடுவே விட்டேன். 
இரண்டொரு விறகுத்துண்டுகளை என்னோடு எடுத்துக் கொண்டு வீட்டின் பின்கதவினைத் திறந்து சமையல் அறையினைக் கடந்து வராந்தவை நோக்கிச் சென்றேன். அங்கே அம்மா லீற்ஸ் கிழங்கினை பிரித்துச் சுத்தம் செய்துகொண்டு நின்றாள். நான் எடுத்துச்  சென்ற விறகுகளை போறணையில் இட்டேன். நெருப்பு சூழ்ந்து கொண்டு சுவாலைவிட்டு எரியத்தொடங்கியது சிறு கணங்களில் அவை தணலாய் பூக்கத்தொடங்கும். ஆனாலும் இப்போதே வராந்தாவை இதமான வெப்பம்   சூழ்ந்திருந்தது. அப்போதான்  கோட்டைக் கழட்டத் தோன்றியது.

யோகியின் நேர்காணல்


தினக்குரல் நாளேடு, இலங்கை
நேர்கண்டவர் : பத்தனை வே.தினகரன்

மலேசியாவைச் சேர்ந்த யோகி சுறுசுறுப்பான இளம் ஊடகவியலாளர். எந்தச் சூழலோடும் தன்னைப் பொருத்திக்கொண்டு தனது பணியை செவ்வனே செய்துகொண்டு செல்பவர். கலகலப்பும், சுறுசுறுப்பும் இயல்பாக புதியவர்களிடம் பழகும் பாணியும் அவருக்குறியது. ஊடறு பெண்கள் அமைப்பும் மலையகப்பெண்களும் இணைந்து மலையகத்தில் நடத்திய பெண்ணிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் நிகழ்வுக்கு ‘மலேசியப் பெண்களின் இன்றைய சவால்கள்’ எனும் தலைப்பில் உரையாற்ற மலேசியாவிலிருந்து வருகை தந்திருந்த அவரை நேர்காணல் செய்யும் வாய்ப்புக்கிடைத்தது. இவர் ‘துடைக்கப்படாத ரத்தக் கறைகள்’ எனும் நூலின் ஆசிரியர் ஆவார்.

கேள்வி: மலேசியாவில் இளம் தமிழ்ச் சமூகத்தினரின் இன்றைய நிலை, நம்பிக்கையளிக்கிறதா? 

யோகி: இந்தக் கேள்விக்கு எப்படிப் பதிலளித்தாலும் அதிலிருந்து வேறு கேள்விகளை உற்பத்தி செய்யலாம். அந்த அளவுக்குச் சிக்கலான கேள்வியாகவே இதைப் பார்க்கிறேன். மலேசியாவில் இன்று தமிழ்ச் சமூகத்தின் மக்கள் தொகை விழுக்காடு கணிசமாகக் குறைந்திருக்கிறது. தமிழ் மக்களின் பிறப்பு எண்ணிக்கை குறையும் அதே நேரம் மலாய்க்காரர்களின் பிறப்பு எண்ணிக்கை கூடியிருப்பது அதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.
தற்போதைய இந்திய இளைய சமூகத்தினர் எப்படி இருக்கின்றனர் என்று ஆராயும்போது மூன்று வகையான சூழல் நிலவுகிறது.

1. கல்வியில் முன்னேற்றம்
2. குண்டர்க் கும்பலில் முதல் நிலை
3. அரசியலில் ஈடுபடுதல்

இந்த மூன்று விடயத்தையும் போகிற போக்கில் சொல்லிவிட்டு நகரமுடியாது. காரணம் மூன்றும் ஒவ்வொரு கோணத்தில் ஆராயும்போது, மிகமுக்கியமான அரசியலைப் பேசுபவையாக இருக்கின்றன.
கல்வியைப் பொறுத்தவரையில் இந்திய மாணவர்கள் சிறந்து விளங்கினாலும், அவர்களுக்கான மேற்கல்வி ஒதுக்கீடு மிகச் சொற்பமாகத்தான் ஒதுக்கப்படுகிறது. பூமிபுத்ராக்களுக்கு (மண்ணின் மைந்தர்கள், நேரடியாகச் சொன்னால் மலாய்க்காரர்கள்) 70 சதவிகிதத்திற்கு மேல் மேற்கல்வி இட ஒதுக்கீடும், சீனர்களுக்கு 10 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடும், இந்தியர்களுக்கு 10-க்கும் குறைவான இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்படுகிறது. இதில் இன்னும் வேதனையான விஷயம் பலவேளைகளில் தாம் விரும்பித் தேந்தெடுத்த துறையில் படிக்க முடியாமல், அங்கு எஞ்சி இருக்கும் துறையை நிர்பந்தத்தில் தேர்ந்தெடுப்பதுதான். மலேசிய மண்ணில் பிறந்த நாங்களும் பூமிபுத்ராக்கள்தானே என்று நீங்கள் கேட்கலாம். உண்மைதான். எங்களின் அடையாள அட்டையில் எங்கள் குடியுரிமை மலேசியர் என்றுதான் எழுதப்பட்டிருக்கிறது.   சீனர்களுக்குச் சீனா என்றும் இந்தியர்களுக்கு இந்தியா என்றும் இன குடியேற்றம் குறித்த வரலாற்று பதிவும் அதில் உள்ளது. இதனால், நாட்டில் எங்களுக்குச் சலுகைகளும் பாகுபாடோடுதான் இன்றுவரை வழங்கப்படுகிறது என்பதையும் கூறிக்கொள்கிறேன்.

Friday, June 26, 2015

“படிப்பகம்” புத்தக நிலைய திறப்பு விழாவும் கருத்தரங்கமும்.

படிப்பகம் புத்தக நிறுவனத்தினர்.
தொடர்வுகளுக்குசந்திரகுமார்  - 0713 006 971

Tuesday, June 02, 2015

கவிஞர்.எம்சி.லோகநாதன் நினைவுகளைப்பகிர்தல்


வெப்பியாரமாய் இருக்கிறதடா, நீ வாழ்கிறாய் என்பதில், சிறிது தணியும் தன்மை கண்டேன். உன்அன்பு தாஸ்.

Friday, May 22, 2015

நீதிகோரி தெற்கில் மே 26

சகோதரி வித்தியாவின் படுகொலைக்கு நியாயம் கோரி தெற்கின் சகோதர -சகோதரிகள் - தோழர்கள் அமைதிப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். கொழும்பு வாழ் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்.
இடம் : Kanatta roundabout , Boralla
நேரம் : on the 26th at 4 pm.
In Jaffna, in the recent past, they raped logarani, saranya and now vithya. If you want to show solidarity and demand justice for this victim please come, wearing black, to Kanatta roundabout , Boralla on the 26th at 4 pm. Please share the news with your friends and networks.

சகோதரி வித்தியாவின் படுகொலைக்கு நியாயம் கோரி தெற்கின் சகோதர -சகோதரிகள், தோழர்கள் அமைதிப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். 
கொழும்பு வாழ் அனைவரும் ஆதரவளிக்குமாறு வேண்டுகிறோம். 


26 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள போராட்டத்தில் எழுப்பப்படும் கோரிக்கைகளும் - கோசங்களும்

1. We need justice for Sivaloganaadan Vithiya, Expedite the hearing - 

விசாரணைகளை துரிதப்படுத்து, சிவலோகநாதன் வித்யாவுக்கு நீதி வழங்கு. 

2. Justice Delayed is Justice Denied. Expedite judgments in all rape cases - 

தாமதமாகும் நீதி மறுக்கப்பட்ட நீதியாகும்! அனைத்து பாலியல் வல்லுறவு வழக்குகளுக்கும் விரைந்து தீர்ப்புகள் வழங்கு

3. No bail or suspended sentence for rapists - 

பாலியல் வன்புணர்வாளருக்கு வழக்குகளின் பிணை வழங்குவதையும், தண்டனையை இல்லாமல் செய்வதனையும் நிறுத்து. 

4. She is still a minor. Reform the law stipulating that raping a girl under the age of 18 is a statutory rape. 
அவள் இப்போதும் சிறுமிதான் ! 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவதை a statutory rape(பாலியல் வன்முறைக்கு குற்றவாளியே முழுப் பொறுப்பு ) என சட்ட சீர்திருத்தம் மூலம் நிர்ணயம் செய்!

5. Establish a separate court for women and children's matters - 

பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரங்களைக் கவனிக்க தனி நீதிமன்றம் அமை! 

6. Politicians don’t try to fish in troubled water. Rape against a Tamil, Sinhala, or Muslim girl-it is all the same. It is gruesome.- 

அரசியல் வாதிகளே , கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க முயல வேண்டாம். பாலியல் வல்லுறவு தமிழ் , சிங்கள மற்றும் முஸ்லீம் பெண்கள் - எவர் மீது நடத்தப்பட்டாலும் அது ஒன்றே . அது கொடூரமானது

7. Five Rapes a Day!! Can you sleep at night? 

ஒருநாளில் ஐந்து பாலியல் வல்லுறவு ! உங்களால் நின்மதியாக உறங்க முடியுமா? 

8. No exceptions, no excuses- Stop Rape Now - 

எந்த விதிவிலக்கும் காரணங்களும் தேவையில்லை - பாலியல் வன்புணர்வை உடனே நிறுத்து ! 

9. Enough is Enough-- Stop rape now - 

நடந்தவைகள் போதும்! பாலியல் வல்லுறவை உடனே நிறத்து ! 



විත්‍යා සිවලොගනාතන් සඳහා යුක්තිය! මැයි මස 26 වන අඟහරුවාදා සවස 4 ට බොරැල්ලේ කනත්ත වටරවුමට කළු පැහැති ඇඳුමින් සැරසී පැමිණෙන ලෙස කාරුණිකව ඉල්ලා සිටිමු. 
---------------------------------------------------------------------- 

1. විත්‍යා සිවලොගනාතන් සඳහා යුක්තිය අවශ්‍යය -- නඩුව පමා නොකර විභාග කල යුතුය.

2. යුක්තිය පමා අයුක්තිය වේ -- සියලු දූෂණ නඩු කඩිනමින් විභාග කරනු.
3. දූෂිතයින්ට ඇප දීම තහනම් කරනු, අත්හිටුවන දඬුවම් දීම අත්හිටවනු.
4. ඇය බාල්වයස්කාරියකි. 
5. ළමා සහ කාන්තා නඩු සඳහා වෙනම උසාවි පිහිටවනු.
6. දේශපාලකයිනි, බොර දියෙහි මාළු බෑම නවත්වනු -- දූෂණයට ලක්වූ යේ සිංහල හෝ දමිළ හෝ මුස්ලිම් හෝ වෙන කවුරුන් හෝ වේවා, දූෂණයෙහි කෲරත්වය සහ ප්‍රචණ්ඩත්වය එකමය. 
7. දවසකට පස් දෙනෙකු දූෂණය වන රටක සුව නින්දක් නිදාගැනීමට හැකිද? 


Thanks: Malinda Seneviratne,piraththiyal

Thursday, May 21, 2015

தேர்தல் முறைமாற்றம் தொடர்பான கலந்துரையாடல்கள் - ஒரு கவலை

-மல்லியப்பு சந்தி திலகர்-
தேர்தல் முறைமாற்றம் தொடர்பில் ' 20வது அரசியலமைப்புத் திருத்தமும் மலையகமும்' எனும் கட்டுரையை கடந்த வாரம் ஞாயிறு தினக்குரல், நமதுமலையகம்.கொம், அததெரண தமிழ் இணைத்தளம் மற்றும் கருடன்நிவ்ஸ் போன்றன 'சிறப்புக்கட்டுரையாக' வெளியிட்டிருந்தன. கட்டுரையை வாசித்த பலரும் தொலைபேசி மூலமும் நேரடியாகவும் உள்பெட்டி செய்தியாகவும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தனர். குறிப்பாக சரளமான மொழிநடையில் அதனை எழுதியிருக்கிறேன் என்பது பலரது அபிப்பிராயமாக இருந்தது.
இந்த தேர்தல் முறைமாற்ற விடயம் மக்களுக்கு சரள மொழியில் எடுத்துச் சொல்லப்படல் வேண்டும் எனும் ஆர்வம் எனக்குள் அதிகமாகவே இருக்கிறது. காரணம் சமூகத்தின் எதிர்கால இருப்பைத் தீர்மானிக்கும் அடிப்படை உரிமையான வாக்குகள் அது அளிக்கப்படும் முறை அதன் மூலம் பிரதிநிதிகள் தெரிவாகும் முறை போன்றவற்றை தீர்மானிக்கும் திருத்தமாக இந்த '20வது திருத்தம்' அமைகிறது.
இதனால் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பல்வேறு உரையாடல்கள், செயலமர்வுகள், கூட்டங்களில் கலந்துகொண்டு கற்று வருகிறேன். அவற்றையே கட்டுரை வடிவிலும் இத்தகைய பதிவுகள் ஊடாகவும் பதிவு  செய்து வருகிறேன். நேற்றைய நாளிலும் 'தேர்தல் திணைக்களம்' ஒழுங்குசெய்திருந்த செயலமர்வு ஒன்றில் பங்குகொண்டேன். அப்போதெல்லாம் விளக்கமளிக்கும் வளவாளர்கள் (கட்சி சாராத) நிபுணர்கள் உரையாற்றும்போது, விளக்கமளிக்கும்போது என்னையறியாமல் ஒரு கவலை எனக்குள் வருகிறது.

Wednesday, May 06, 2015

இந்து சாதி அமைப்பு தான் முதலாளித்துவத்தின் தாய்

-அருந்ததி ராய்-
'' இன்று உலகெங்கிலும் பரபரப்பாக பேசப்படும் புத்தகமான Capital in the 21st Century என்கிற தனது புதிய புத்தகத்தில் ஃபிரெஞ்ச்எழுத்தாளரும் பேராசிரியருமான தாமஸ் பிகெட்டி அமெரிக்காவில் ’தங்க முலாம் யுகம் ’ என அழைக்கப்பட்ட 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இருந்ததையொத்த பொருளாதார சமநிலையின்மை இப்போதும் உலகில் உருவாகி வருவதை சுட்டிக்காட்டியிருக்கிறார். வங்கிகளும்நிறுவனங்களும் கோலோச்சும் இந்த காலகட்டத்தில் கூட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சமமற்ற தன்மையை உருவாக்கும் எந்திரமாக இருப்பது குடும்ப சொத்துக்களும் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு (வாரிசுகளுக்கு)அவை கை மாறுவதும் என்பதை வலுவான ஆதாரங்களோடு நிறுவியிருக்கிறார் பிகெட்டி. இதன் படி பார்த்தால் சொத்து, அறிவு,சலுகைகள் எல்லாம் வாரிசுரிமை அடிப்படையில்தான் என்கிற கோட்பாட்டைப் புனிதப்படுத்தியிருக்கும் இந்து சாதி அமைப்புதான் முதலாளித்துவத்தின் தாய்.''

Wednesday, April 22, 2015

தீண்டாமை ஒழிப்பு செயலர் சி.புலேந்திரன் அவர்கள் நினைவு

சி.புலேந்திரன் அவர்கள் அண்ணன் அல்ல தோழர்
-கரவைதாசன்-
தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு அமரர் கம்பர்மலை தங்கவடிவேல் மாஸ்ரருடன் இணைச்செயலாளர் நாயகம் பொறுப்பேற்று மக்களைத் தீண்டாமைக்கெதிராக பாசறை அமைத்துச் செயற்பட்டு வந்தார்.

கருப்பாகிக் கிடந்த ஈழ மண்ணில் எழுந்து பழுத்து விழுந்த மற்றொரு விதை தோழர் சி.புலேந்திரன் அவர்கள். தொடர்ச்சியான போராட்ட குணமும் சமத்துவத்துக்கான முன் ஏற்பாடுகளையும் கொண்ட கன்பொல்லைக் கிராமத்தில் ஒரு தலை முறையின்  பழுதற்ற விதையாக வந்தவர். 

இனத்துவப் புனைவுகளின்  தொடர் முரண்பாடுகளுக்கிடையேயும் சரியான அரசியல் திசை நோக்கிய பயணம் அவரிடம் இருந்தது. 

மதம் ஒன்று, மொழி ஒன்று, கடவுள் ஒன்று என்ற பம்மாத்துக்கிடையே பலம் தின்று கொட்டை போட்ட மூத்தசந்ததி பட்ட அவலங்கள். சிறை வதைக் கொடுமைகள் இவர் போன்ற தோழர்கள் சரியான அரசியல் தெரிவினைக் கொள்ளும் வாய்ப்பினை இவர்களுக்கு வழங்கிற்று. இடதுசாரிய பாரம்பரியம் மிக்க குடும்பப் பின்புலம் இவருக்கு ஏற்பாக அமைந்திருந்தது. இவரது தந்தையாரும் சிறிய தகப்பனார் ஆ.சிவகுருவும் மூத்த தோழர்களின் வரிசையில் இன்றும் நினைவுகொள்ளத்தக்கவர்கள்.

பழைய உலகம் மறைத்து புது  உலகின் இக்காலத்தின் குறியீடாக இவர் வந்தார்.

தனது இடை நிலைக் கல்வியினை கரவெட்டி திரு இருதயக் கல்லூரியல் பெற்ற இவர் இலங்கை அரச கட்டடத்தினைகளத்தில் ஊழியராக கடமை புரிந்தார். பொருளாதார மேம்பாட்டுக்காக ஈராக் சென்று பொருளீட்டி நாடு திரும்பியவர். தனது வழி நடத்தலில் தனது பிள்ளைகளையும் சகோதரியின் பிள்ளை களையும் எமது கிராமத்தில் பட்டதாரிகளின் வரிசையில் நிரல்ப்படுத்தியவர்.

Tuesday, April 21, 2015

சாதியமைப்பு ஒடுக்குமுறைக்கு எதிராக கம்யுனிஸ்டுகள்

-பி.சம்பத்-
இதுவரை உள்ள மனிதகுல வரலாறு முழுவதும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே (ஆதிகாலப் பொதுவுடைமைச் சமுதாயம் தவிர) என பிரகடனப்படுத்துகிறது மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை. இது இந்தியாவின் வரலாறு மற்றும் சமூக அமைப்புக்கும் பொருந்தும். உலகின் பல்வேறு நாடுகளின் சமூக அமைப்பும், வர்க்கப் போராட்டங்களும் ஒரே மாதிரியானதாக இல்லை. இந்த அம்சங்களில் ஒவ்வொரு நாட்டிற்கும் பிரத்யேகத்தன்மைகளும் பின்னணியும் உண்டு.
இந்தியாவின் பிரத்யேகத் தன்மை:
ஒவ்வொரு நாட்டின் பிரத்யேகத்தன்மையை சரிவர ஆய்வு செய்து புரிந்து கொண்டுதான் அந்நாடுகளின் நடைபெற வேண்டிய வர்க்கப் புரட்சியையும், அதற்கான பாதையையும் அந்நாட்டின் புரட்சிகர இயக்கம் தீர்மானிக்க வேண்டுமேயொழிய மார்க்சிய கோட்பாடுகளை இயந்திர பாணியில் அமல்படுத்துவதன் மூலம் அல்ல.திட்டவட்டமான நிலைமைகளை திட்டவட்டமாக ஆய்வு செய்து திட்டவட்டமான முடிவுகளுக்கு வர வேண்டும்” என்றே மார்க்சியம் நமக்கு போதிக்கிறது.
இந்த அடிப்படையில் இந்தியச் சமுதாயத்தை ஆய்வு செய்தால் அதன் பிரத்யேகத் தன்மைகளில் ஒன்றுதான் இங்கு நிலவும் சாதியமைப்பு. இச்சாதியமைப்பையும் இதோடு இங்கு நிலவும் மூடப்பழக்க வழக்கங்கள் மற்றும் பத்தாம்பசலித் தனமான சம்பிரதாயங்களையும் எதிர்த்துப் போராடாமல் – அவ்வாறு போராடி முறியடிக்காமல் இங்கே புரட்சிகரமான சிந்தனைகள் மற்றும் இயக்கம் வளர்வதோ அல்லது சமுதாய மாற்றத்திற்கான புரட்சி வெற்றிகரமாக நடைபெறுவதோ சாத்தியமல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

Sunday, April 19, 2015

சமூக உற்பத்தியின் ஒரு வடிவமே கலை

-ந. இரவீந்திரன்-

மனித சமூகம் பெற்று வந்த வளர்ச்சிச் செல்நெறியின் வெளிப்பாடாக உற்பத்தியானது கலை. அதன் எழுத்து வடிவமாய்ப் பரிணமித்த இலக்கியம் குறித்து பல்வேறு கோட்பாடுகள் உண்டு. மனிதப்படைப்பு என்பதைக் கடந்து உள்ளொளி வாயிலாகக் கடவுள் வெளிப்படுத்தும் கொடையெனக் கொள்வோரும் உளர். மனுக்குலம் எதிர்நோக்கிய பிரச்சனைகளை மக்கள் போராட்டங்கள் வாயிலாக தீர்க்கும் மார்க்கம் கண்டறியப்பட்டபோது, அத்தகைய இயங் காற்றல்களின் செயல்திறன் கலை - இலக்கியத்தின் பேசு பொருளான போது, இவை அருள் கொடைகளல்ல சமூகம் உற்பத்திசெய்கின்ற இன்னொரு வடிவமே எனக்கண்டறிய இயலுமாயிற்று.
சமூக மாற்றத்துக்கான அந்த இயங்காற்றலில் பங்கேற்று அதனைக் கோட்பாட்டுருவாக்கம் செய்த மார்க்ஸியத்தின் மூலவர்களான மார்க்சும் ஏங்கெல்சும் இலக்கியம் குறித்தோ அதனைத் திறனாய்வு செய்யும் முறையியல்கள் பற்றியோ தனியாக எழுதி வைக்கவில்லை. எரியும் பிரச்சனையாகப் பாட்டாளி வர்க்கப் புரட்சிகள் எழுச்சிகொண்டு இயங்கிய அனுபவங்கள் சார்ந்த எழுத்தாக்கங்களே அவர்களது முழுமைப்பணியாக இருந்தன. அத்தகைய எழுத்துகளில் வெளிப்பட்ட கருத்துகள் பின்னால் தொடர்ந்த மார்க்சியச் சிந்தனையாளர்களால் வளர்த்தெடுக்கப்பட்டிருந்தன. கலை - இலக்கிய - சமூக விஞ்ஞான நூல்களைக் கற்றுத்தேறி மார்க்சிய இலக்கியத் திறனாய்வை அறிவதென்பதை விட, மார்க்சையும் ஏங்கெல்சையும் போன்றே சமூக மாற்றப் போராட்டங்களில் இணைந்து இயங்கியவாறே ஏனைய மார்க்சியச் சிந்தனையாளர்களும் மார்க்சியத்தையும் அதன் இலக்கியக்கோட்பாடுகளையும் செழுமைப்படுத்தினர்.
அந்த வகையில் பிளெக்கனோவ், லெனின், ட்ரொட்ஸ்கி, ஸ்டாலின், மார்க்சிம்கோர்க்கி, பெஞ்சமின், ப்ரெக்ட், லூகாக்ஸ், அல்தூசர், ஜோர்ஜ் தாம்சன், ரேமன்ட் வில்லியம்ஸ், பியோமா ஷே, கிறிஸ்டோபர் காட்வெல், லூசியன் கோல்ட்மான் ஆகியோரின் பங்களிப்புகள் கவனிப்புக்குரியன. இன்னும் லூசூன், மாஒசேதுங், கோசிமின், பிடெல் காஸ்ட்ரோ என இந்தப்பட்டியல் மிக நீளமானது என்ற போதிலும் மேற்குறித்த செயற்பாட்டாளர்களும் சிந்தனையாளர்களும் முன்வைத்த இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகளை அடியொற்றியுங்கூட அடிப்படைத் தெளிவை எட்ட இயலும் என்பது மெய். அத்தகைய ஒரு முயற்சி டெரி ஈகிள்டன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 'மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்' என்ற டெரி ஈகிள்டனின் நூல் இலக்கியத் திறனாய்வு குறித்த மார்க்சியர்களின் கருத்தாடல்களை அலசும் போக்கில் மார்க்சியத்தில் மேலும் தெளிவுபெற இயலும் என்பதையும் எடுத்துக்காட்டுகின்றது.

இஸ்தம்பூல் பயணக்குறிப்பு


-ந.சுசீந்திரன்-
கி.பி. மூன்றாம் நூற்றாண்டளவில் கொன்ஸ்ராண்டின் என்ற ரோமச் சக்கரவர்த்தி இன்றைய இஸ்தம்பூல் என்ற இந் நகரத்தைப் புனரமைத்து அதற்குப் ”புதிய ரோமாபுரி” என்று பெயரும் வைத்து அதனை ரோம சாம்ராச்சியத்தின் கிழக்குப் பகுதியின் தலை நகராகவும் ஆக்கியுள்ளான். அவனது மரணத்தின் பின்னர் அது ’கொன்ஸ்டாண்டினோபிள்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுவே இன்றைய இஸ்தம்பூல் ஆகும்.
இஸ்தம்பூல் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த நிலக்கீழ் நீர்த்தேக்க மாளிகை ஜுஸ்டினியான் என்ற ரோமச் சக்கரவர்த்த்தி காலத்தில் கி.பி. நான்காம் நூற்றாண்டளவில் ஏழாயிரம் அடிமைகளை வேலையாட்களாக வைத்துக் கட்டப்பட்டிருகின்றது. இவ்வாறான ரோமர் காலத்தில் அமைக்கப்பட்ட நிலக்கீழ் நீர்த்தேக்க மாளிகைகள் அதிக அளவில் இத்தாலியிலும், மற்றும் தூனேசியாவிலும் காணப்படுகின்றன. இந்த ரோமர் காலத்து நீர்த்தேக்கங்களுக்கு சுமார் 100 கிலோமீட்டர் வரையான தூரத்தில் இருந்து கூட நிலக்கீழ் வடிகாலமைப்பின் மூலம் தண்ணீர் பெறப்பட்டிருப்பதை அறியமுடிகின்றது. ஆனால் சுமார் 80,000 கனமீட்டர் நீரைத் தேக்கி வைக்கக்கூடிய, பன்னிரு வரிசைகளில் ஒவ்வொரு வரிசையும் 8 மீட்டர் உயர 28 தூண்களைக் கொண்ட பிரமாண்டமான, 138 மீட்டர் நீளமும் 65 மீட்டர் அகலமுங் கொண்ட உலகின் பெரிய நிலக்கீழ் நீர்த்தேக்க மாளிகை இங்கே இஸ்தம்பூலில் உள்ள ”பாசிலிக்கா சிஸ்டேன்” என்ற இந்த நிலக்கீழ் நீர்த்தேக்க மாளிகையாகும்.

Tuesday, April 14, 2015

குன்ரர் கிறாஸ்-Günter Grass- காலமானார்

நோபல் பரிசு பெற்ற ஜெர்மன்மொழி எழுத்தாளர் குன்ரர் கிறாஸ்-Günter Grass- (1927-2015) அவர்கள் இன்று லூபெக் நகர மருத்துவ மனையொன்றில் அவரது 87ஆவது வயதில் காலமானார்.இவரின் முதல் நாவலான The tin drum ஐரோப்பிய வட்டாரத்தில் பரவலான கவனத்தை ஈர்த்தது. அதன் பிறகு Cat and Mouse, Dog years போன்ற நாவல்கள் அவரிடமிருந்து வெளிவந்தன. சில காலம் ஜெர்மன் சோசலிச ஜனநாயக கட்சியில் செயற்பாட்டாளராக இருந்தார். கவிஞர் மற்றும் நாடகாசிரியர் போன்ற பன்முக ஆளுமைத்திறன் கொண்டவர்

Saturday, April 11, 2015

வாழ்த்தப்பட வேண்டிய வெற்றி.....


-கோவை நந்தன்-
பிரான்சில் கடந்த வாரம் இடம் பெற்ற பிராந்திய நிர்வாக அமைப்புகளுக்கான தேர்தலில் (Élection Départementale en France) வலது சாரிக்கட்சிகள் பெற்ற பெரு வெற்றியானது, ஜனாதிபதி பிரான்சுவா கொலண்ட் (François Hollande) தலைமையிலான ஆளும் சோசலிச அரசுக்கு பெரு நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் தொடர்ந்தும் அதிகரித்து வரும் வேலையற்றோர் எண்ணிக்கையே இந்தத்தோல்விக்கு காரணம் எனவும் இந்த எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியா விட்டால் வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என ஜனாதிபதி அறிவிக்கும் அளவிற்கு இடதுசாரிகளின் நிலைமை மோசமடைந்து வருகிறது.
குறிப்பாக அதிதீவிர வலதுசாரிய கட்சியும் இனவாதத்தை தமது அடிப்டை கொள்கையாகவே கொண்டுள்ளதுமான தேசிய முன்னணி (Front National)நாட்டின் இரண்டாம் நிலைக்கு வளர்ந்து வருவதை, இந்தத் தோதல் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

மரின் லுப்பன் (Marine Le Pen)தலைமையிலான இந்த தேசிய முன்னணியின் வளர்ச்சியை தடுக்கவேண்டுமானால், இன்றைய நிலையில் முன்னாள் ஜனாதிபதி நிக்கொல சாக்கொசி மீண்டும் ஜனாதிபதியாக முன்னிலைப் படுத்தப்படுவார் என எதிhபார்க்கப்படும் UMP (Union Pour Un Mouvement Populaire) கட்சியை ஆதரிப்பதுதான் இங்கு வாழும் வெளிநாட்டவர்க்கும், ஜனநாயக வாதிகளுக்கு மான ஒரே தெரிவாக இருக்க முடியும்.

இவர்களும் வலதுசாரிய சிந்தனா கட்சியாக இருந்தாலும் கூட , இனவாதிகளாக இல்லாமல் இருப்பதும், ஜக்சிராக் (Jacques Chirac) மற்றும் நிக்கொல சாக்கொசி(Nicolas Sarkozy) ஆகியோரது கடந்தகால ஆட்சிகள், நடுநிலையாளர் களாக இவர்களை இனம்காட்டியதும் குறிப்பிடத் தக்கது.
இந்த வகையில் இடம்பெற்ற பிராந்திய தேர்தலில் 95வது நிர்வாக அலகின்,கார்ஜ் லெ கொணேஸ் (Garges les gonesse ), மற்றும் அர்னோவில் (Arnouville ) ஆகிய பகுதிகள் இணைந்த கன்ரோனில், UMP சார்பில் போட்டியிட்ட சேர்ஜியா மகேந்திரன் பெற்ற பெரு வெற்றியை பாராட்டியே ஆகவேண்டும்.
பொதுச் சேவையில் கடின உழைப்புடனும், நடுநிலையுடனும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள, தமிழ் சமூகத்தின் இளம் தலைமுறைப் பெண் சேர்ஜியா மகேந்திரன் பெற்ற இரண்டாவது வெற்றி இது.
2014ம் ஆண்டு இடம்பெற்ற கார்ஜ் லெ கொணேஸ் (Garges les gonesse ),பகுதி நகரசபைத் தேர்தலில் வெற்றிபெற்று அங்கு துணை மேயராக (Maire Adjoint), தெரிவு செய்யப்பட்ட சேர்ஜியா தற்போது பிராந்திய சபைக்கும் (Conseil Départemental )தெரிவு செய்யப்பட்தனை அவரது பொதுப்பணியின் அடுத்தபடியாகவே நோக்க வேண்டும்.
இளமையின் துடிப்புடன் புதிய பொறுப்பினை ஏற்றுள்ள சோஜியா தனது கடமைகளில் சுறசுறுப்பாக ஈடுபட்டுள்ளார்.

கார்ஜ் லெ கொணேஸ் (Garges les Gonesse ) பகுதியிலிருந்து, டுனி (Dugny) ஊடாக லி புர்ஜே (le bourget) வரை Tram சேவை, இந்தப் பகுதியின் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் சீரமைப்பு உட்பட்ட பல வாக்குறுதிகளுடன் தெரிவாகியுள்ள UMP இன் பிராந்நிய நிர்வாக குழுவினதும் குறிப்பாக சேர்ஜியா மகேந்திரனிதும் பணிகள் சிறக்க வாழ்த்துவோம்.



Tuesday, March 24, 2015

பெண்கள் மற்றும் அரசியல் கல்விசார் ஆலோசகர் தோழி நளினியுடனான நேர்காணல்

துணிவாகவும், தைரியமாகவும் கதைக்கிற பெண்கள் வேண்டும். வெறும் வாய் காட்டுகிற பெண்கள் வேண்டாம்!

Thursday, March 19, 2015

சங்கப் படலை - கன்பொல்லை- வரலாற்றுக் குறிப்புகள்.

-கரவைதாசன் -
புத்தம் சரணம் கச்சாமி..............
பானாதி பாதா வேரமணி சிக்கா பதம் சமாதி யாமி.........
வண்ண கந்த குணோ பேதங் ஏ தங்க குசும சந்ததி..............
சுகந்தங் சீதலங்கப்பங் வசந்த மரணங் சுகங்..........
சுகந்தி காய வதனம் மணந்த குண கந்தினம்................
நாகவல்லி தழு பேதம்...............
நமாமி புத்தம் குணசாகரந்தம்.......
இதிபிசோ பகவா புரிச சம்ம சாரதி................
போன்ற பாளி மொழியினால சுலோக சட்டங்களினால் (காதா)
இலங்கையில் பெளத்த மதத்தின் சங்கப்படலை உருவாக்கம் செய்யப் பட்டடுள்ளது.  இச்சங்கப் படலை பல்வேறுபட்டகாலங்களில் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் இலங்கைதீவில் ஒவ்வொரு பகுதியிலும்  திறக்கப்பட்டும் மூடப்பட்டும் சில சந்தர்ப்பங்களில் அகற்றப்படுவதற்கும் எத்தணிப்புகள் நடந்துள்ளன. சிலவேளை சில ஆயிரம் வருடங்கள் முன்பாக, சிலவேளை சில நூற்றாண்டுகள் முன்பாக, சிலவேளை சில பத்து வருடங்கள் முன்பாக  வரலாற்றின் போக்கில் பதிவுகளும் அகழ்வுத் தடயங்களிலும் புனைவுகளிலும் கூட நிறுத்தம் கொள்கிறது.