Showing posts with label தமயந்தி. Show all posts
Showing posts with label தமயந்தி. Show all posts

Wednesday, February 01, 2017

தொட்டுணர்ந்த ஏழு தேவதைகள் பற்றிய கதை.

-கரவைதாசன்- 
தமயந்தியின் ஏழு  கடல் கன்னிகள்  வாசிப்பு மனநிலை!

அலை ஒதுங்கிய கரையில் விசாரணை செய்! எனும் அரசியல் கோரிக்கையுடன் விரிகிறது பக்கங்கள்.
ஓலசுண்டின் அலை ஒதுங்கிய கரையொன்றில் தானை வைத்து கடல் நுகப்பினை கணக்கிட்டு தூண்டில் எறிந்த களைப்பு தீர முன்னே வங்கு நிறைந்த மீன் அளைந்த கைகளை உப்புநீரிலேயே அலம்பிவிட்டு ஈரமான கைகளை தன் சாரத்திலே துடைத்து விட்டு உழைப்பேறி மரத்துப்போன விரல் நீட்டி அழைக்கின்றார் .  கதை சொல்ல...

மொழிகளில் யார் தேவதைகளை பிரசவித்தவர்களோ அவர்களே அறிவர், தேவதைகளை காண முடியாது, பேசமுடியாது, நுகர முடியாது,  சுவைக்க முடியாது, தொட்டுணரவும் முடியாது.

எனினும்  மாந்திரீக எதார்த்தம் செய்த காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸின் கதைகளிலே வருகின்ற ஒரு இருளுடனோ அல்லது இருண்ட வீட்டுடனோ அல்லது  எச்.சி. அனசனின் கதைகளில் வருகின்ற ஏதாவது ஒரு அஃறினை பொருளுடனோ உறவாடுவதுபோல் இக்கதைகளினிலே வருகின்ற தேவதைகளுடன் சிரித்துப் பேசி கும்மாளமிட்டு குதூகலிக்க  முடிகிறது, கண்டு வரத்துகள் வாங்க முடிகிறது, சேர்ந்து நுகர்ந்து சல்லாபிக்க முடிகிறது, கிள்ளி எறிந்து வாயினிலே விட்டு மென்றும் மீதியினை கொப்பளிக்கவும் முடிகின்றது. என்றால் பிள்ளைவாளும் பறையனாரும் சபையினில் விவாதம் செய்கின்றனர் என்பது போல் சமன் செய்யப்படுகின்றது . மையத்தினை உடைத்து உதைத்து உதைத்து விளிம்பினில்  வைத்து அழகு செய்யப்படுகின்றது . இது தமயந்தி என்ற கதை சொல்லியால் முடிந்திருக்கின்றது.  தமிழ் மொழியினிலே தேவதை என்ற சொல் உசத்தியானது என்ற ஆதிக்க மனோபாவத்துக்கே பட்டா ஆகிப்போயிருக்கும் மனோநிலையில் முட்டியை உசத்தி "எங்களதும்  தேவதைகள் தான்! வயல்  உனக்கு சாமி என்றால் கடல்  எனக்கு தேவதை!" இதுவும் கர்வமான ஒரு இலக்கியச் செல்நெறிதான். அவர் உருவகித்த அந்த தேவதைகள் ராட்சத இரும்பு  இயந்திரங்கள் கொண்டு உழுது கிழிக்கப்படுகின்றபோது வீசும் இரத்தவாடை, கந்தகம் விழுந்து வெடிக்கின்றபோது எழும் கரும் புகை போன்ற  சொற் கூட்டங்கள் அவரின் எழுதுகோலினால்   வரிகளில் குந்தி  இருக்கச் செய்கின்றபோது வாசிப்போரின்   கண்களை  சிவக்க வைக்கின்றார்.

Wednesday, October 29, 2014

எல்லோரும் ஏகலைவர் தாமோ

-கலாநிதி சி.ஜெயசங்கர்- 

நுண்கலைத்துறை கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை. 

ஏகலைவன் தொன்மோடிக் கூத்துப் பிரதிக்கு வழங்கிய முன்னுரை. 




னது சிறுபராயத்தில் ஏகலைவன் எனக்கு அறிமுகமாகின்றான். அந்த அறிமுகம் எனக்கு துயரத்தைத் தந்தது. அத்துடன் தர்மம், அதர்மம் பற்றிய வகுப்பறைக் கற்பித்தல்கள், கதாப்பிரசங்கிகளின் கதையாடல்கள், நியாயப் படுத்தல்கள் எல்லாவற்றிலும் சந்தேகம் இழையோடத் தொடங்கிவிட்டிருந்தது.


சத்திரியருக்குச் சேவகம் செய்யும் பார்ப்பனத் துரோணரிடம் வேடர் குலத்தவனான ஏகலைவன் ஏன் வந்தான்? கட்டை விரலை வெட்டிக் குருதட்சணையாகத் துரோணரிடம் கொடுத்த கதை ஏன் பாடப் புத்தகங்களுள் உள்ளடக்கப்பட்டது? குருபக்தியின் பெயரில் ஏகலைவன் ஏன் பெருமைப் படுத்தப்படுகிறான்? என்ற கேள்விகள் என்னுடன் வளரத்தொடங்கிற்று.

ஆயினும் ஏகலைவனின் குருபக்தி பற்றிய அதே கதைகள் எங்கும் எதிலும் சுற்றிச் சுற்றி வந்து கொண்டே இருக்கின்றன. ஆங்காங்கே இந்தப் போக்கிரித்தனம் பற்றிய கேள்விகளும், பார்வைகளும் எழுந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் இவற்றில் எல்லாம் கடவுளும் கலந்திருப்பதால் பக்தியும், பயமும், சேர்ந்து இக்கேள்விகளை மழுங்கடித்து வருவதாகவும் இருக்கின்றது. பொதுப்புத்திக்கும் பயபக்திக்குமான போராட்டத்தில் பயபத்தியின் ஆதிக்கம் எதிர்கொள்ளப்பட வேண்டியது.

Tuesday, October 15, 2013

தமிழக மீனவ உறவுகள் அறங்காக்க வேண்டும்

-தமயந்தி-

"இழுவைப்படகு, இரட்டைமடி மீன்பிடி போன்றவற்றை நிறுத்தும்படி இலங்கை மீனவர்கள் சொல்கிறார்கள்.
அது இந்தியாவில் நிறுத்தப்படவில்லை, நாட்டுக்கு நாடு கடல்ச் சட்டங்கள் வேறு வேறானவை.
இலங்கையைப் பொறுத்தவரை, இலங்கையில் கடலட்டைத் தடைச் சட்டம் இல்லை. ஆனால் இழுவைப்படகு, இரட்டைமடி தடைச் சட்டம்தான் இருக்கிறது.
கடலட்டைத் தடைச் சட்டம் இந்தியாவில் கொண்டுவரக் காரணம் கடலில் காணக்கூடிய அபூர்வமான உயிரினம்"

இந்திய, தமிழகக் கடலட்டைத் தடைச் சட்டத்தை கழிப்பறையில் கிழித்துப்போட! 
இந்திய, தமிழக கடல்வள ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிக் குதத்துக்குள் கொள்ளியைச் சொருக!! 


இது எப்படி இருக்கிறதென்றால் குடியிருக்கும் வீட்டைப் பெற்ரோல் ஊற்றிக் கொழுத்துவார்களாம் ஆனால் வீட்டு வளையில் இருக்கும் குருவிக்கூட்டுக்குப் பாதுகாப்புச் சட்டம் போடுவார்களாம். கடலட்டை என்ற உயிரினம் எப்படி இனப்பெருக்கம் செய்கிறது, அபிவிருத்தியாகிறது என்ற அடிப்படை அறிவுகூட இல்லாதவர்களின் கடல்வள ஆராய்ச்சி அறிவை என்னவென்பது....? 


1968 இறுதியிலும் 70களின் தொடக்கத்திலும் யாழ் தீவகத்தில் கடலட்டைத் தொழில் அறிமுகமாகி ஏற்றுமதி செய்யத் தொடங்கியபோது அங்கொன்று இங்கொன்றாய் அருந்தலாகக் காணப்பட்ட கடலட்டைகள் அதற்குப் பிற்பாடுதான் அதிகளவில் பல்கிப் பெருகி பாரிய அபிவிருத்தி அடைந்தது. தொழிலாளர்கள் கடலட்டையை எவ்வளவுக்கெவ்வளவு பிடித்தார்களோ அவ்வளவுக்கவ்வளவு பல நூறு மடங்காகப் பெருகியது.