Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Monday, July 25, 2016

கபாலி - வரலாற்றினை மாற்றும் உரிமை ரஞ்சித்துக்கு இல்லை

-முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன்


கபாலி படத்தில் விவேகானந்தர், அம்பேத்கர், சேகுவேரா, கார்ல் மார்க்ஸ்,பாப் மார்லி போட்டோக்கள் எல்லாம் செட் பிராப்பர்ட்டியாக வருகிறது ஆனால் இவர்களில் எவரும் மலேஷிய தோட்டத்தொழிலாளர்களுக்காக போராடியவர்கள் இல்லை. ஆனால் செட்பிராப்பர்ட்டியில் ஒருவர் படம் இல்லை அது பெரியார்... ஆனால் வேடிக்கை மலேஷிய தோட்டத் தொழிலாளர்களுக்காக போராடியது தந்தை பெரியாரே!

கபாலி திரைப்படம் ஒடுக்கப்பட்டவர்களுக்கானது என்றும், அடிமைப்படுத்தப்பட்ட சமூகத்தின் போராட்டங்களை பதிவுசெய்திருக்கும் ஒரு அரும்பெரும் படைப்பு என்றும் எங்கும் போற்றப்பட்டுவருகிறது. ஒரு சினிமாவாக மட்டுமே கபாலியை முன்னிலைப்படுத்தும் வரையில், அதில் நாம் எந்தவொரு அரசியல் காரணங்களையும் கற்பிக்கத் தேவையில்லை. ஆனால், கபாலி திரைப்படம் இதிலிருந்து வேறுபட்டது. விவேகானந்தர், அம்பேத்கர், சேகுவேரா, கார்ல் மார்க்ஸ் ஏன், பாப் மார்லியின் படத்தைக்கூட வைத்திருக்கிறார்கள் படத்தில். இவற்றையெல்லாம் மனதில்கொண்டு அடுத்துவரும் கட்டுரையைப் படியுங்கள்.

1833ஆம் ஆண்டு, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அடிமை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, பல்லாயிரக்கணக்கான ஆப்பிரிக்க நாட்டு அடிமைகள் விடுதலை பெற்றனர். ஆனால், ஆப்பிரிக்க அடிமைகள் உதறிச்சென்ற அடிமைச் சங்கிலியில் பூட்டப்படுவதற்குப் பொருத்தமானவர்களாக, உலக வல்லாதிக்கங்கள் தேர்வுசெய்த இனம் தமிழினம். அன்று தொட்டு, ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்க நாடுகளின் கரும்பு வயல்கள், ஈயச் சுரங்கங்கள், தேயிலை, ரப்பர்த் தோட்டங்களில் தமிழர்களை நாற்றாக நடும் பணி இருநூற்றாண்டுகளுக்குத் தொடர்ந்து நடைபெற்றது. இவ்வாறு தமிழர்கள் லட்சக்கணக்கில் ஏற்றுமதி செய்யப்பட்ட நாடுகளுள் மலேசியாவும் ஒன்று. இரப்பர்த் தோட்டங்களில், கூலிகளாகத் திரிந்த இத்தமிழரின் வரலாறு கண்ணில் நீர் கசிய வைப்பதாகும்.

Wednesday, April 03, 2013

மெளனக்கடலில் ஒரு கல் -ஆனந்தவிகடன்


-டி.எல்.சஞ்சீவிகுமார்-


ஒரு படைப்பாளியின் பார்வையில்... ஒரு சாமானியனின் பார்வையில்... ஓர் இயலாமைவாதியின் பார்வையில்... ஈழ மக்களின் வலியை, தனுஷ்கோடி மீனவனின் துயரத்தை ஆவணப்பட மாக்கி இருக்கிறார் இயக்குநர் லீனா மணிமேலை. 



ஈழப் போரின் இறுதியில் உயிருக்குப் பயந்து தமிழகத்துக்கு அகதிகளாகத் தப்பி வரும் ஈழத் தமிழர்கள் ஒரு பக்கம், இந்தியாவிலேயே இருந்தும்கூட உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத மீனவத் தமிழர்கள் இன்னொரு பக்கம் என இரு நிலப்பரப்பு மக்களின் வாழ்வும் வலி யும்தான் கதை. ஈழத் தமிழனின் ரத்தமும் தனுஷ் கோடி மீனவனின் ரத்தமும் ஒன்றாகக் கலந்து நீலம் மறைந்து நிறம் மாறும் வங்காள விரிகுடா தான்... 'செங்கடல்’!

படப்பிடிப்புக்கு அனுமதி மறுப்பு, சென்சார் பிரச்னை என பல பிரச்னைகளைத் தாண்டி மேல் முறையீட்டு ஆணையத்தின் தலையீட்டால், 'பொது இடங்களில் திரையிடலாம்’ என்று அனுமதி வாங்கி வெற்றிபெற்றிருக்கிறார் இயக்குநர் லீனா மணிமேகலை.

Sunday, March 24, 2013

பரதேசி-திரை விமர்சனம்

-அமிர்தம் சூர்யா- 

 நாம் குடிக்கும் கதகதப்பான காலை நேரத் தேநீர் உருவாக எத்தனை ஆயிரம் மக்களின் வாழ்வு சிதைக்கப்பட்டு அவர்களின் ரத்தமும் வியர்வையும் தேயிலைத் தோட்டத்துக்கு எப்படி உரமாகிறது என்பதைச் சொல்லும் கதை ‘பரதேசி’. பஞ்சம் பிழைக்க 1939ல் சாலூரிலிருந்து நாற்பத் தெட்டு நாட்கள் கால்கடுக்க பச்சை மலைக்கு வேலை தேடி நடக்கிறது ஒரு சமூகம். அதில் கதை நாய கன்(அதர்வா) ஒட்டுப் பொறுக்கியும் ஒருவன். போகிற போதே சிலர் செத்து வீழ்கிறார்கள். தேயிலைத் தோட் டத்தில் பனி, அட்டைக்கடி, உணவு பற்றாக்குறை, பாலியல் கொடுமை, தப்பிக்க நினைத்தால் கால் நரம்பு துண்டிப்பு, இவற்றோடு கொள்ளை நோயும் தொடர்ந்து கொள்ள... கொத்து கொத்தாக மடிகிறார்கள் மக்கள். தன்னுடைய அங்கம்மாவை (வேதிகா) பார்க்கவே முடியாத சூழலில் ‘நியாயமாரே’ என்று அழுகிறார் அதர்வா. குழந்தையோடு கொத்தடிமையாக வேதிகா வும் வந்துசேர ‘ஓ’வென வானம் பிளக்கும்படி ‘இந்த நரகுழியில் நீயுமா வந்திட்ட?’ என்று கதறுகிறான் - கதை முடிகிறது. இந்தப்படம் டேனியலின் எரியும் பனிக்காடு நாவலின் தழுவல், தாக்கம் என்று சொல்லப்பட்டாலும் அது இல்லை. அதைவிட கால குளறுபடி, தெளிவாக நிலம் குறித்தான தகவல் இன்மை, கருத்து மோசடிகளை இந்தப் படத்தில் வரிசையாக அடுக்கலாம்.

Tuesday, February 28, 2012

இன்னுமொரு வானத்தைப் பிளந்த கதை

-கற்சுறா-

ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் எனும் ஐயரின் புத்தக வெளியீட்டிற்குச் சென்றேன்.  செழியனின் பேச்சு மிகுந்த அசௌரியமாக இருந்தது. நண்பர்கள் மிகவும் ஏமாற்றுவார்கள் என்பதற்கு உதாரணம் செழியனாக தற்போது இருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. செழியன் முன்னைநாள் போராளி தான் சார்ந்த இயக்கத்தின் மத்தியகுழு உறுப்பினர் ஈழத்துக் கவிஞர் என அடையாளம் கொண்டவர். மிகுந்த பொறுப்புடன் பேசவேண்டும். அங்கு குமரன் பேசியளவுக்கு கூட செழியனின் பேச்சில் ஒன்றுமிருக்கவில்லை. அதைவிட இறுதியில் பாருங்கள் இலங்கையில் இன்னுமொரு ஆயுதப்போராட்டம் வெடிக்கும்  நிச்சயம் உருவாகும் என சத்தியம் செய்துவிட்டுப் போகிறார். மிகுந்த கவலையளித்தது. 30வருட போராட்டம்  எனச் சொல்லப்பட்டதை ஒரு அழுகிய யுத்தத்தின் மூலம் அரசு முடித்திருக்கிறது.  அரசும் புலிகளும் தமது அரணாக மக்களை காவுகொண்டு முடித்திருக்கிறது. கடந்த 30வருடங்களும் உட்கட்சி  மற்றும் சகோதரப் படுகொலை என்றும் தடுப்பு முகாம் வதைமுகாம் சிறைச்சாலை என்றும் தமது பிள்ளைகளைக் காவுகொடுத்து  மக்கள்  மனநோயாளிகளாக வாழும் சூழல் அதற்குள் அரசின் கண்மூடித்தனமான  தாக்குதல்களால் ஊனமுன்றவர்கள் பெற்றோரை இழந்த குழந்தைகள் என்று இன்னும் இரண்டு  மூன்று தலைமுறைக்கு தொடரும் வலிகளாக  வாழ்ந்து வரும் மக்கள் ஆயுதம் திரும்பவும் தரிப்பார்கள் என்று சொல்ல செழியனுக்கு எப்டி மனம் வந்தது. இதுவும் இன்னொருமுறை வானத்தைப் பிளந்த கதைதானே செழியன்?
மற்றும்  போராட்டம் முளைவிட்ட ஆரம்ப காலத்தின் நேரடி சாட்சியாக வெளிவரும் நூல் இதுஎன புத்தகத்தின் பதிப்புரையில் இனியொருவினர் சொல்கிறார்கள். அப்படியாயின் கோவிந்தனின் புதியதொரு உலகம். டேவிட் ஐயாவின் கொலைகார முகுந்தனும் கூட்டாளி வாசுதேவாவும் புஸ்பராசாவின் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்பன எத்தனையாவது? இந்த நம்பர் ஒன் வியாபாரத்தைவிட்டு ஐயரை தன்னிச்சையாக எழுத விடுங்கள். அவர் எழுதவேண்டியவை அதிகம் உண்டு. எழுதுப்படும் தளங்களின் அரசியல் நிலைப்பாடுகளுக்குள் அவை மங்கிவிடக் கூடாது.

மௌனகுருவின் "இராவணேசனும்", மணிரத்தினத்தின் "ராவணனும்"

இரண்டு ஊடகங்கள், இரண்டு கலைஞர்கள், ஒரு கரு:
மணிரத்தினத்தின் "ராவணனும்", மௌனகுருவின் "இராவணேசனும்"

-க. மோகனதாசன்-
(விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக் கழகம். இலங்கை) 


ஒரு கலைஞன் தான் பார்த்து கேட்டு அனுபவித்த விடயங்களை தனக்கு கை வந்த ஊடகத்தினூடாக வெளிப்படுத்தும் போது அது கலையாகின்றது. கலைஞர்களுக்கிடையே வெளிப்படுத்தும் முறையிலும் கையாளும் உத்திகளிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இது அவர்களது அனுபவத்தினாலும் பயிற்சியினாலும் சூழலினாலும் வேறுபடுகின்றது. ஒரு கலைப்படைப்பில்  சமூகத்திலுள்ள பிரச்சினைகளும் அதிலிருந்து மீள்வற்கான வழிமுறைகளும் கூறப்படும் போது அதன் பெறுமதி இன்னும் அதிகரிக்கின்றது. கலையாக்கங்களில் சமூகத்தின் நிலைமைகளை பிரதிபலிப்போரில் பழைய கதைகளுக்கு புதிய வியாக்கியானங்களையும் புதிய கருத்தேற்றங்களையும் செய்வோரும் உள்ளனர். இது தழுவலாகவோ அல்லது அதே கதையமைப்புடன் சிறு மாற்றத்தினை மேற்கொள்ளும் முறைமையுடையதாகவோ அமைந்து காணப்படும். இராமாயணம் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய பல விடயங்களை உள்ளடக்கி யுள்ளது. இதனால்தான் பல இராமாயணங்கள் (கம்பர், வால்மீகி, வசிட்டர், போதாயினர், துளசி, சம்பூர்ணர்,….இராமாயணங்கள்) உருவாயின. இராமாயணம் சமூகத்திற்கான பல்வேறுபட்ட கருத்துக்களை முன் வைக்கின்றது. அந்தவகையில் இராமாயணக் கதையினை அடிப்படையாகக் கொண்டு, 2010ல் இராமாயணத்தைத் தழுவியதான கதையமைப்புடன் மணிரத்தினத்தின் இராவணணனும் (சினிமா) இராமாயணத்தின் யுத்த காண்டத்தை அடிப்படையாகக் கொண்டு மௌனகுருவின் இராவணேசனும்(நாடகம்) படைத்தளிக்கப்பட்டுள்ளன.

Monday, December 12, 2011

வரலாற்றின் விளைபொருள்: ”கசகறணம்”

 விமல் குழந்தைவேலின் "நாவல்"
-ந.சுசீந்திரன்-

 ”வழி வழிவரும் ஏனைய இலக்கிய வடிவங்களைப் போலவே, நாவலும் வரலாற்றின் விளைபொருளாகும்…”
(க.கைலாசபதி, இலக்கியச் சிந்தனைகள், கொழும்பு 1983)

விமல் குழந்தைவேல் அவர்களின் மூன்றாவது  நாவல் கசகறணம், 2011 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வெளியாகியிருக்கின்றது. நூலின் முன்னுரையின் குறிப்புக்களில் இருந்து  இந் நாவல் இலங்கையில் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்ட 2002 இற்குப் பின்னர் 2006 வரை நான்கு வருடங்கள் நிலவிய தற்காலிக அமைதியின் போது இலங்கையில் சுனாமிப் பேரலையின் அழிவுக் காலமான  2004 இன் இறுதி தொடக்கம் போர் முற்றாக முடிவுக்கு வந்த 2009 க்கும் இடைப்பட்ட 5 வருட காலத்தில்  எழுதப்பட்டிருக்கின்றது என்று கொள்ளலாம். காலம், ஆன்மா, நாடு, இனங்கள், உறவு போன்றவற்றை சிதைத்துச் சிதிலங்களாக்கி விட்டெறிந்த ஒரு களப்புலத்தில், அதிகாரம், வன்முறை, ஆயுதக் கலாசாரம், போரின் ஆரவாரம், சமாதானம், அனர்த்தனங்கள், போன்ற பெருங்கதைச் சமாச்சாரங்கள் மனிதர்களைப் பிடித்துக்கொள்ளும்போது, தெருத்தூசிகளாக மதிப்பிழந்து மறக்கடிக்கப்பட்ட  மிகச் சாதாரண மனிதர்களின் வாழ்வும் இருப்பும் மனோநிலையும் எப்படிச் சின்னாபின்னமாக்கப்பட்டது என்பதை அவர்களது அன்றன்றான சோலிகள், யோசனைகள், உணர்வுகள், பேச்சுக்கள், உறவாடல்கள் மூலம் ஒரு நல்ல நாவலாக உருமாற்றியிருக்கின்றர் விமல் குழந்தைவேல் அவர்கள். வரலாற்றின் விளைபொருளாக, காலத்தின் தவிர்க்க முடியாத அசலான அர்த்தம் மிக்க பதிவாகவும்  இந் நவீனம் இருக்கின்றது. 

கதையமைப்பு:

Sunday, November 06, 2011

இப்படிக்கு அன்புள்ள அம்மா கவிதைத்தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

 -வெலிகம ரிம்ஸா முஹமத்-    (மதிப்புரை)

நூல் - இப்படிக்கு அன்புள்ள அம்மா
(கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - கலாநிதி ஜீவகுமாரன்
தமிழில் - வி. ஜீவகுமாரன்
வெளியீடு - விஸ்வசேது இலக்கியப் பாலம்

டென்மார்க்கில் டெனிஷ் மொழியில் திருமதி கலாநிதி ஜீவகுமாரன் எழுதிய இப்படிக்கு அன்புள்ள அம்மா என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதை (காவிய) த் தொகுதியை விஸ்வசேது இலக்கியப் பாலத்தின் இரண்டாவது படைப்பாக 163 பக்கங்களில் திரு வி. ஜீவகுமாரன் அவர்களால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. திரு வி. ஜீவகுமாரன் அவர்கள் தனது பதிப்புரையில் ''விஸ்வசேது இலக்கியப் பாலத்தின் இரண்டாவது படைப்பாக இப்படிக்கு அன்புள்ள அம்மா வெளிவருதல் பற்றி மனம் மகிழ்ச்சி அடைகிறது. காரணம் இதில் வரும் அம்மாவுடனும், அவரின் மகன் ஹரியுடனும் பதிப்பாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் கடந்த ஆறு மாதகாலமாக நான் பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். பிரிவு! வாழ்வின் முதல் அத்தியாயத்தில் உலகத்தை விட்டுப் பிரியும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது" என்கிறார்.
"இலக்கியம் மனிதனின் சிக்கலைக் கலைத்துவப் பாணியில் எடுத்தியம்புவது ஆகும். இப்பொழுது நாம் வாசிக்க எடுக்கின்ற புத்தகம் எளிமையான கவி நடையில் புதுக்கவிதை நடையில், வயோதிக மாது ஒருவரின் மனக்குமுறலை பதிவு செய்கிறது.

Sunday, October 30, 2011

ஏழாம் அறிவு -தமிழர் பெருமிதத்தின் பின்னுள்ள அபாயங்கள்

-சுகுணா திவாகர் -

 கி.பி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த பௌத்த மதத்தைச் சார்ந்த பல்லவ இளவரசன் போதிதர்மன் சீனா சென்று அரிய வகை மருத்துவத்தையும் நோக்குவர்மம் எனப்படும் மெஸ்மரிசத்தையும் தற்காப்புக்கலைகளையும் கற்றுத்தருகிறார். அதே விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு சீனா, இந்தியாவின் மீது உயிரியல் போர் தொடுக்க லாங்லீ என்பவரை அனுப்புகிறது. மரபணு அறிவியல் மாணவி சுபா, போதிதர்மரின் வாரிசான சர்க்கஸ் கலைஞர் அரவிந்தனின் மரபணு நினைவாற்றலை உசுப்பிவிட்டு சீன அபாயத்தை முறியடிக்கிறார். கதை குறித்தும் காட்சியமைப்புகள், தொழில்நுட்பங்கள் குறித்தும் விரிவான விமர்சனங்கள் வரக்கூடும். அதை நான் எழுதப்போவதில்லை.

படம் நெடுகிலும் தமிழரின் வீரம்,அறிவியல், கலைகள் குறித்த பெருமிதம் முன்வைத்து வியந்தோதப்படுகிறது.சீன தேசத்தில் கொண்டாடப்படும் மகத்தான ஞானியான போதிதர்மனை (இது போதிதர்மனா, போதிதம்மனா என்கிற அய்யம் எனக்குண்டு) தமிழகம் எப்படி மறந்துபோனது என்கிற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.ஞாயமான கேள்விதான். தமிழ்ப்பரப்பில் இலக்கியம்,