Thursday, January 26, 2006

கவிதை

நட்பு
உடைந்த உள்ளங்களுக்கு
ஒத்தடம்,
சிதைந்த உறவுகளுக்குப் பாலம்.,
எதையும் எதிர்பாராத நட்பு.
எட்டாப்பழம்
சொந்தங்கள் சரியாக இருந்தால்
சொர்க்கம் அருகில் இருக்கும்
சொந்தங்கள் பழுவானால்
சொர்க்கம் எட்டாப் பழமே.
உன்மானம்
கற்றவரின் அவமானம்
கலியுகத்தின் சன்மானம்
கலைஞரின் தன்மானம்
மனிதா! அது உன்மானம்.
நம்பிக்கை
மரத்துப்போன இதயத்தில்
மலரும் ஆசைகள் இல்லை
புதைந்த நினைவுகளின் ரணங்களில்
வேரூன்றி நிமிர்ந்து வளர்கிறது நம்பிக்கை.

- ஆதியா -

No comments: