Saturday, May 01, 2010


பெண் தொழிலாளர்கள் இன்னும் அடிமைளாகவே நடத்தப்படுகிறார்கள்
-தாஸ் -

இலச்சக்கணக்கான ஆசிய, ஆபிரிக்க நாட்டைச்சேர்ந்த பெண் தொழிலாளர்கள் பணிப் பெண்களாகவும் கடைநிலைத் தொழிலாளர்களாகவும் மத்திய கிழக்கு நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் அடிமைகளாகவே நடத்தப்படுவதாகவும், அவர்களுக்கு எதிராக நடத்தப்படுகின்ற கொடுமைகளுக்கு, குரல் உயர்த்தாத வகையில் முடியாதவர்களாக, ஓர் கோணலான கட்டமைப்பு அங்கு காணப்படுவதாகவும், மனித உரிமைகளுக்கான அமைப்பான human rights watch தனது மேதினத்துக்காக தயாரிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. உலகத் தொழிலாளர்கள் தினத்தில் இந்த இலச்சக் கணக்கான பாட்டாளியப் பெண்கள், தொழிலாளர்கள் அணியில் அணிவகுத்து தங்கள் உரிமைக்கான கோசங்களை, கோசமிட்டுச் செல்லத்தானும் முடியாதவகையில் ஆகக் கூடிய அல்லது குறைந்த வகை அடிமைகள் ஆக்கப்பட்டுள்ளார்கள்.

மத்திய கிழக்கைச்சேர்ந்த எட்டு நாடுகளில் கடந்த ஐந்தாண்டுகளின் தொடர்ந்த போராட்டத்தில் நிச்சயமாக ஜோர்டான் நாட்டில் குறைந்தளவேனும் அங்கு தனியார் வீடுகளில் பணிபுரியும் பிலிப்பயன்ஸ், ஸ்ரீலங்கா, இந்தோனேசிய நாட்டைச்சேர்ந்த பணிப் பெண்களுக்கு ஓரளவு பாதுகாப்பை பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளது. இருப்பினும் சட்ட வரையறைகளுக்கு அப்பால் வாரத்தில் ஒருநாள்தானும் விடுமுறையின்றி ஒவ்வொரு நாளும் 18 மணித்தியாலயங்கள் இவர்களிடமிருந்து வேலை வாங்கப்படுகிறது.

ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட கால் கோடி பெண்கள் வேலைக்காக குடி பெயர்ந்து அடிமைகளாக வாழ்வதென்பது இன்றைய நவதாராளவாத அமைப்பின் உலகமயமாகிப் போயிருக்கும் பெண்ணியப் பிரச்சினை.

மத்திய கிழக்கு நாடுகளில் ஜோர்டான் நாடு அண்டளவாக டென்மார்கினைப் போல் ஐம்பது லச்சம் மக்கள் சனத்தொகையை கொண்டதுதான். ஆனால் அங்கு சுமார் எழுபதுனாயிரம் மூன்றாம் உலகநாடுகளை சேர்ந்த பெண்கள் தனியார் வீடுகளில்
ணிப்பெண்களாகச் சென்று அடிமைகளாகக் கிடக்கின்றார்கள். இதேபோல் சவூதி அரேபியாவில் ஒன்றரைலட்சம் பெண்கள், பணிப்பெண்களா சென்று அடிமைகளாகி வதைபடுகிறார்கள். மிகுந்த போராட்டங்களின் மத்தியில் தான் இவர்களின் எதிர் குரலைத்தேனும் வெளிக்கொணர முடிகிறது. இனிவரும் காலங்களில் .......
இனி ஒரு மேதினத்தில் .......

தகவல் :human rights watch





No comments: