Showing posts with label வண்ணைத்தெய்வம். Show all posts
Showing posts with label வண்ணைத்தெய்வம். Show all posts

Thursday, February 18, 2021

கலைஞர் காவலர் வண்ணைத்தெய்வம்..

ஏற்க மறுக்கும் உன் இறப்பின் செய்தி . சிவப்பாக தோன்றி செம் மஞ்சளாய் நின்று மறைந்தார் கலைஞர் காவலர் வண்ணைத்தெய்வம். விழி சொரிந்து அஞ்சலிக்கிறோம்.  

கவிஞர், நாடகக் கலைஞர்,  நாடக ஆசிரியர், வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், தொலைக்காட்சிப் பிரபலம் என புகழிடச் சூழலில் நன்கறியப்பட்ட யாழ் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த வண்ணைத்தெய்வம் எங்கள் கன்பொல்லை கிராமத்தின் நன்கறியப்பட்ட நண்பர். அந்நாட்களில் இலங்கையில்  இடதுசாரிய அரசியலுடன் தன்னை அடையாளப்படுத்தியவர் பின்னாளில் புகழிடச் சூழலில் தமிழ்தேசிய அரசியலுடன் தன்னை நிலைப்படுத்தி தனது கலைப்பயணத்தினை தொடர்ந்தவர். இவரால்  கொண்டு வரப்பட்ட "காலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்துக் கலைஞர்கள்"  எனும்  சிறப்பு நூலினை எங்கள்  கிராமத்துக்  கலைஞர்  கே.எஸ்.இரத்தினம் அவர்களுக்கு காணிக்கை செய்திருந்தார். அந்நூலில்  தனது கலையுலக வாழ்வின் குரு எங்கள் கிராமத்தினைச் சேர்ந்த  கே.எஸ். இரத்தினம் அவர்கள் என பதிவு செய்துள்ளார்.  எங்கள் கிராமத்தின்  கனுவில் சனசமூக நிலையம் ஒரு காலத்தில் ரஷ்ய சார்பு, சீன சார்பு என இரண்டாக பிரிந்து செயற்பட்டபோது நாடக மன்றமும் இரண்டாக பிரிந்து செய்யற்பட்டன. சீனசார்பு கலைமகள் கலாமன்றம் எனும் பெயரிலும் ரஷ்ய சார்பு ஜெயசூரியன் கலாமன்றம் எனும் பெயரிலும் பிரிந்து  செய்யற்பட்டன. 1978 ஆம் ஆண்டளவில் சீன சார்பு கம்யூனிஸ்ட்கள் சர்வதேச  ரீதியில் திரும்பவும் இரண்டாகப்  பிரிந்தபோது இலங்கையில் என்.சண்முகதாசன்  தலைமையில்
ஒரு பகுதியனரும், கே.எஸ்.சுப்பிரமணியம் தலைமையில் இன்னொரு பகுதியினருமாக பிரிந்தபோது ஊரிலும் அப்பிரிவு  ஏற்பட்டது. அத்தோடு சீனசார்பு கலைமகள் நாடகமன்றும் ஸ்தம்பித்துப் போய்விட்டது. அதன் பின் கே.எஸ்.இரத்தினம் அவர்களும் ச.நவரத்தினம் அவர்களும் இணைந்து கரவை நவரசகலாலயம் எனும் பெயரில் பொதுவாக ஒரு நாடகமன்றினை உருவாக்கினார்கள். அதில்  நானும்  அங்கம் வகித்திருந்தேன்.  நவரசகலாலயம் இலங்கையில் பலபகுதியிலும் நாடகங்களை அரங்கேற்றியது.  அதில் அதிகப் படியான மேடையேறிய "மாலிக்கபூர் "வெற்றித்திருநகர்  இந்த  இரண்டு அரச நாடகங்களையும் எழுதி வசனகர்த்தாவாகவும் செயல்ப்பட்டவர் கலைக் காவலர்  வண்ணைத்தெய்வம் அவர்களே. கலைக்காவலர் வண்ணை அவர்கள் காலமாகிப்  போயிருக்கும்  இத் தருணத்தில் அவரோடொத்த மறைந்தொரு
கலை வரலாற்றினை நினைவூட்டக் கிடைத்தது.
 எங்கள்  கிராமத்தில் கலை இருக்கும் வரை சிவப்பாகித் தோன்றி செம்மஞ்சளாய் நின்ற வண்ணையின்  நாமம் நிலைத்து  வாழும். .

Monday, April 04, 2016

நினைவழியா நாட்கள் கே.எஸ். இரத்தினம் நினைவுக் குறிப்பு

-வண்ணைத்தெய்வம்-
கலைஞர்களுடன் கைகுலுக்கி
 நாளெல்லாம் நீ,நடந்த பாதையெல்லாம் 
 உன் மூச்சின்றி முகாரி பாடுதடா!!!
பூஞ்செடிகள், இன்னும், இன்னும் இத்தியாதி, இத்தியாதிகள். யாரையும் மறக்கமுடியவில்லை! 1983ம் ஆண்டு கார்த்திகை மாதம்;, நான் பிறந்து ஓடி விளையாடிய எனது தாய் மண்ணை விட்டு பிரிந்த அந்த நாள், 33 வருடங்கள் உருண்டோடி விட்டது! மறக்கமுடியவில்லை!.... என்னால் மறக்க முடியவில்லை!எனக்கு பிரியாவிடை தந்தனுப்பிய எனது நண்பர்கள் உறவினர்களுடன் நான் பிறந்த வீடு, நான் வாழ்ந்த வீடு, நான் வளர்த்த செல்லப்பிராணி வீமன் என்ற நாய்க்குட்டி, எவையையும் மறக்கமுடியவில்லை! 

இது கலைஞர்கள் வாழ்கின்ற பூங்காவனம். புகழ்பெற்ற பெரும் கலைஞர்கள் 'நவாலியூர் நா.செல்லத்துரை மாஸ்ற்ரர், 'கலைக்காவலர்" சி.தர்மலிங்கம் மாஸ்ற்ரர், குணநாயகம் மாஸ்ற்ரர். இந்த பெரும் கலைஞர்கள் வாழ்ந்த அந்த மண்தான் நண்பன் கே.எஸ்.இரத்தினத்தின் பிறப்பிடமும். இரத்தினம; நான் மறக்கமுடியாத அந்த நண்பர்களில் ஒருவர். ஏன் இவன் எனக்கு நண்பன் மட்டுமல்ல, எனது கலை வாழ்வின் குருவும்கூட! 1970ம் ஆண்டு என நினைக்கின்றேன் 'நல்வாழ்வு" என்னும் நாடகத்தில் நடிப்பதற்காக இயக்குனர் கே.எஸ். இரத்தினத்தினத்துடன் அறிமுகமாகி, இனிய நண்பர்களாகிய நாங்கள் இறுதிவரை நண்பர்களாகவே இருந்தோம். மறக்கமுடியாத அந்த நினைவழியா நாட்களை இன்று மீண்டும் இரை மீட்டிப் பார்க்கின்றேன்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு மிக மிக அண்மையில் ஆத்திப்புலம் என்னும் சிற்றூர். ஆத்திசூடி வீதிக்கு முன்பாக புகையிரதத் தண்டவாளம். அதனைத் தாண்டினால் ஆத்திப்புல மக்களுக்கே பல்கலைக்கழகம்போல் விழங்கிய 'கலைமகள் சனசமூக நிலையம்" அதற்கு பின்னால் ஒரு அகண்ட பெரிய ஓலையால் வேயப்பட்ட வீடு. அதுதான் இரத்தினத்தின் இல்லம். இரத்தினத்தின் கலை வாழ்விற்கு வீட்டில் எந்தவிதமான எதிர்ப்பும் இருந்ததில்லை. இவருடைய இல்லத்தில்த் தான் நாடக ஒத்திகை பார்ப்போம். இதனால் தினமும் இரவு ஏழு மணியானால் நான் இவர்களின் வீட்டிற்கு தவறாது செண்றிடுவேன். முகம் தெரியாத வெளியாட்கள் வீட்டுக்கு வந்தாலும் ஒரு உற்ற சகோதரனைப்போல் கனம் பேணுவது இரத்தினத்தின் துணைவியார் போக்கு; நாடக ஒத்திகைக்கு வருபவர்களில் நான் ஒருவன்தான் வெளியாள். மற்றவர்களான கிங்ஸிலி செல்வக்குமார், சி.ரி.பி. ஜெயா அண்ணன், தேவன் நாகராசா போன்ற அனைவரும் அயலவர்கள்தான். ஓரிரு வாரங்களிலேயே நான் நன்கு அறிமுகமாகிவிட பின்பு அவர்களின் குடும்ப நண்பனாகிவிட்டேன்;.

இவரின் செல்ல மகள் சாந்தி. ஐந்து வயது இருக்கும். பார்ப்பதற்கு லக்ஸ்பிறே மாரின்னில் இருக்கும் குழந்தையின் படம்போல மொழு மொழுவென இருப்பார். நான் சென்றதும் என்னை வரவேற்கும் முதல் ஆள் இவர்தான். இரத்தினத்தின் தந்தையார் ஒரு கலா ரசிகன். நாங்கள் ஒத்திகை பார்க்கும் பொழுது அவரும் ஒரு இயக்குனராகவே மாறி நடிப்பின் நுணுக்கங்களைச்; சொல்லித்தருவார். இப்படியான நினைவழியாத அந்த நாட்கள் என்றும் மறக்கமுடியாதவை.