-கரவைதாசன்-
"பனிக் காலம் தொடங்கும் ஒரு பொழுதில் இரவு பகல் சமமாகும் நாள் நெருங்கு முன் நீர் பிறந்தீர். பழைய உலகம் மறைத்து இக்காலத்தின் குறியீடாக புது உலகின் அடையாளமாக ஓர் வளைவைப்போல் நீர் வந்தீர். எமக்கு பின் வழிவழித் திரண்டு வரும் எம் மக்கள் அவ்வளைவை பார்த்து விட்டுத்தான் கடந்து நடக்க வேண்டியிருக்கும் "
போர்த்துகேய நாட்டின் சிறந்த எழுத்தாளரும், மாக்சிய சிந்தனையாளரும் , இலக்கியத்திற்கான நோபல் பரிசினை பெற்றவருமான jose de souse saramago அவர்கள் தனது 87 வது வயதில் இறப்பெய்தினார்.
1922 ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ந் திகதி Azinhaga எனும் குக் கிராமம் ஒன்றில் தொடங்கிய அவரின் காலச் சக்கரம் யூன் மாதம் இறுதிப்பகுதியில் 2010ல் நகர்ந்து, ஸ்பெயின் நாட்டில் கனாரியன் தீவில் அவரின் சொந்த இல்லத்தில் நின்றகர்ந்தது.
