Showing posts with label நூல் மு.நித்தியானந்தன். Show all posts
Showing posts with label நூல் மு.நித்தியானந்தன். Show all posts

Thursday, January 05, 2012

கசகறணம் பற்றி

நாவல் உரை  -மு.நித்தியானந்தன்-


கசகறணம் என்கின்ற இந்தப்படைப்பு இந்தமொழியைத் தவிர வேறு எந்தமொழியிலும் கூறப்பட்டிருக்கக் கூடாது. இந்நாவலின் மொழியே இந்நாவலின் வெற்றிக்கான முதற்காரணம்.

‘நீங்கள் உயிர்வாழ்வதென்பது உங்களின் உரிமையல்ல. அது உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கின்ற சலுகை மட்டுமே’ மேற்படி வசனமானது இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் சொன்னதாக ராஜினி திராணகம தனது நூலில் குறிப்பிட்டது.

மூன்று தசாப்தங்களாக நடந்து கொண்டிருந்த போரியல் வாழ்வின்போது விடுதலைப் புலிகளோ மற்றைய இயக்கங்களோ இலங்கை இராணுவமோ இந்திய இராணுவமோ யாராக இருப்பினும் தங்களின் சுய நலனுக்காக பந்தாடப்பட்டதில் சிதிலமடைந்து சின்னாபின்னமாகிப்போன மக்களுடையதும் மண்ணுடையதும் பதிவுதான் விமல்குழந்தைவேல் படைத்திருக்கின்ற கசகறணம் என்கின்ற நாவல்.