Showing posts with label தேவா. Show all posts
Showing posts with label தேவா. Show all posts

Tuesday, August 26, 2014

சட்டங்களும் சம்பிரதாயங்களும்

-தேவா (ஜெர்மனி )-
சட்டங்கள் பாராளுமன்றங்களில் விவாதிக்கப்பட்டு, பெரும்பான்மை வாக்குகள் பெற்று அமுல்ப் படுத்தப்படுகின்றன. லஞ்சம் புரளும் நாடுகளில் சட்டம்  அமுல்படுத்தப்படுகின்றனவா  என்ற கேள்வி ஒரு கேள்விக்குறியாகவே  இருக்கிறது. ஐனநாயகநாடுகளில் சட்டங்கள் முறைப்படி செயல்படுத்த முடிகின்றது. மதக்கொள்கைகளை அடிப்படையாக கொண்ட அரசுகள், சமயநூல்களின் எழுதப்பட்டுள்ள முடிபுகளை சட்டங்களாக மாற்றி தீவிரமாக செயல்படுத்துகின்றன.
எப்படியோ சட்டங்கள் மக்களுக்கு மேலே ஏற்றப்படுகின்றன. ஐனநாயக நாடாய் இருந்தாலும், சர்வாதிகாரமான நாடாய் இருந்தாலும், சட்டங்கள் நடைமுறைப்படுத்த படுகின்றன. ஒரு அரசு வாழ்வதற்கு அதனுடைய முதுகெலும்பாய் சட்டங்கள் தேவைப்படுகின்றன. மக்களுக்கு மேல் நிர்வாகம்  திணிக்கப்பட்டிருப்பினும், மக்கள் தம்மை வழிநடத்திசெல்ல ஒரு தலைமையை ஏற்றுக்கொள்கின்றனர். தலைமை, அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்டது. மக்கள் குழுக்களாக வாழத் தொடங்கிய காலத்தில் இருந்தே இந்த நடைமுறை பல்வேறு வடிவங்களாகி மாறி இருப்பினும் அடிப்படைத்தோற்றம் அங்கேயே நிற்கிறது

Saturday, October 08, 2011

Le Havre (துறைமுகம் ) ஒன்றுபட்டால் வெல்லமுடியும்!

தேவா - ஜெர்மனி
தற்போது ஜெர்மன் சினிமாத்திரைகளில், Le Havre (துறைமுகம்); படம் ஓடிக்கொண்டிருக்கிறது. பின்லாந்து, பிரான்ச்,ஜெர்மன் நாடுகளின் கூட்டுத்தயாரிப்பு இது. இச்சினிமாப்படம் ஒரு சிறந்த- சினிமாக் கலைஞரும் பின்லாந்துக்காரருமான Aki Kaurismäki யின் இயக்கத்தில் உருவாயிருக்கிறது. 1990இருந்தே இவரின் பல குறும்படங்களும், பெரும் திரைப்படங்களும் சர்வதேசதிசைப்பட விழாக்களில் பரிசுபெற்றிருக்கின்றன. பரிசுக்கு தேர்வானவையும்கூட. Cannes ல் நடைபெற்ற 64வது சர்வதேசவ திரைப்படவிழாவிலே இப்படத்துக்கு FIBPRESCI பரிசு கிடைத்தது. மேலும் இவரது மற்றொரு திரைப்படமான The man without a past, ஐரோப்பாவிலும், ஆர்ஐன்டீனாவிலும் நடைபெற்ற திரைப்படவிழாக்களிலே சிறந்த இயக்குனர், கதை, சிறந்த கமராவுக்காக 2002ல் பல பரிசுகள் பெற்றது. சில படைப்புக்கள் Oscar க்கும் தெரிவானவைகள்.
பொதுவாகவே இவரின் படைப்புக்களிலே கலைத்தன்மையோடு மனிதநேயம், நேர்மை, சோகங்கள் கலந்திருக்கும். பாத்திரங்கள் போராட்ட குணமுடையவர்களாய்; இருப்பார்கள். அவர்களது வெளிப்பாடு திரையில் கவித்துவமாய் வெளிப்பட்டிருக்கும். இதயத்தை நெருடிச்செல்லும் தன்மை கொண்டவை.மென்மையான மாந்தர்கள் அங்கு படைக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் தங்கள் கொள்கைபிடிப்பில் தீவிரமாய் இருப்பார்கள். அகி கருசிமாகி படம் பார்ப்போரை மிகவும் நெருங்கிவிடுவார்.