Friday, July 09, 2010

அதிரவைக்கும் வீடியோ


மதிப்புக்குரிய மனிதர்களே இவை வரிந்திச்சொல்லும் வார்த்தைகள் மட்டுமா? ஒரு அதிரவைக்கும் வீடியோ 18+
-சுனிதா கிருஷ்ணன்-

சுனிதாகிருஷணன்தன்னுடையபதினைந்தாவதுவயதில்எட்டுபொறுக்கிகளால்பாலியல் வல்லுறவுக்குஉள்ளாக்கப்பட்டவர்.. தனக்கு நடந்தசம்பவத்தால் இடிந்துபோனாலும்.., சரி நாம்இப்படியே இருந்துவிடக்கூடாது எனதன்னைப்போல்பாதிக்கப்பட்ட மற்றும்செக்ஸ் அடிமைகளை, அவர்தம் குழந்தைகளைமீட்டு அவர்களுக்குநல்வாழ்வை அமைத்து தரவிரும்பினார்.. கலாச்சாரம், பண்பாடு எனவாய்கிழிய பேசும் நம்இந்திய தேசத்தில்அவருக்கு நேர்ந்தபிரச்சினைகள் அநேகம்.. அவரை ஒரு கும்பல்தாக்கியதில் ஒரு காதுகேட்காமலேபோய்விட்டது..

ஆண்களால் பாதிக்கபட்ட யாரும் ஆண்களை சாடவும், ஆண்களின் பார்வையிலேயே தன்னையும் பார்ப்பார்கள், ஆனால் பாதிக்கபட்ட பெண்களை பற்றி யோசித்து அதோடு நில்லாமல் அவர்களுக்காக போராடி, அடிபட்டு வாழும் தேவதை சுனிதா கிருஷ்ணன்.

தான் காப்பாற்றிய குழந்தைகளை மனித மிருகங்கள் சில நான்கு வயது என்று கூட பார்க்காமல் சீரழித்த கொடூரம் ஆன்மீகமும், தெய்வத்தன்மையும் நிரம்பியுள்ள நம் தேசத்தில்தான் நடந்திருக்கிறது.. செக்ஸ் அடிமைகளாய் விற்கப்பட்ட அல்லது வறுமை காரணமாய் அல்லது விரும்பியே தொழில் செய்யும் பெண்கள் HIV ஆட்கொல்லி நோயில் விழும்போது அவர்களின் சம்பாத்தியத்தில் வாழும் அத்தனை பேரும் நிராதரவாய் விட்டுப் போகும் கொடூரமும் நம் தேசத்தில்தான் நடக்கிறது.

அப்படி பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு வந்து அவர்களுக்கு போதிய பயிற்சி அளித்து தகுந்த வேலை வாய்ப்பை தேடும்போது இந்த நாகரிக சமூகம் அவர்களை மனிதர்களாக பார்க்க மறுப்பது ஏன்.. வாரம் இரண்டாயிரம் கொடுத்து அவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட ஒரு பெண்மணி தன் வீட்டு வேலைக்கு அந்த பெண்கள் வேண்டாம் என மறுக்கும்போது வருத்தமாயிருக்கிறது..

எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.. நான் அடிப்படை மனித நேயம் விரும்புகிறவன்... இனி சில நாட்கள் என்னை பாதித்த.. என்னை யோசிக்க வைத்த விசயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..

இதுவரை பைசா பெறாத நிறைய விசயங்களை என் பதிவுகளில் இட்டு நிரப்பி வந்த நான் வாழ்க்கை இப்படியும் இருக்கிறது.. இப்படியும் சிலர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.. அவற்றுள் பல பதிவுகள் சற்று அப்பட்டமான விமர்சனமாக இருக்கும்..18+ என்று அடையாளமிட்டே எழுதப்போகிறேன்..



நன்றி - எங்கே செல்லும் பாதை

No comments: