Showing posts with label -ந.சுசீந்திரன்- தீண்டப்படாத முத்தம். Show all posts
Showing posts with label -ந.சுசீந்திரன்- தீண்டப்படாத முத்தம். Show all posts

Sunday, October 09, 2016

தீண்டப்படாத முத்தம் - கொடூரத்தை மீண்டும் உரத்து ஒலித்து நிற்கின்றது.

-ந.சுசீந்திரன்-
சுகிர்தராணியின் „தீண்டப்படாத முத்தம்“ என்ற கவிதைத் தொகுப்பில் முதலாவது இடம்பெறும் கவிதை –விடுதலையின் பதாகை. 2006 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 29 ஆம் திகதி மகாராஷ்டிராவில் நிகழ்ந்த „கயர்லாஞ்சிப் படுகொலைகள்“ நினைவாக இக் கவிதை எழுதப்பட்டிருகின்றது. மிக நன்றாக எழுதப்பட்டிருக்கும் இவ் வரலாற்றுப் பதிவு, கழிந்துவிட்ட பத்து வருடங்களின் பின்னரும் „கயர்லாஞ்சிப் படுகொலையின் கொடூரத்தை மீண்டும் உரத்து ஒலித்து நிற்கின்றது.
அண்ணல் அம்பேத்கார் அவர்களின் ‚சாதி ஒழிப்பு‘ என்ற நூலின் விளக்கங்களும் விமர்சனங்களும் கொண்ட நவீன பதிப்புக்கு ”டாக்டரும் புனிதரும்” என்ற தலைப்பில் அருந்ததி ராய் அவர்களால் மிக நீண்ட முன்னுரை ( அடுத்த வருடம் இது ஒரு தனி நூலாகவும் வெளியிடப்படுகின்றது.) எழுதப்பட்டிருக்கின்றது. இந் நூல் பற்றிய ஓர் அறிமுகக் கூட்டத்தில் இதே தலைப்பில் அருந்ததி ராய் அவர்கள் சிறப்புரை யாற்றும்போது கயர்லாஞ்சிப் படுகொலை பற்றி மிக விபரமாகக் குறிப்பிடுகின்றார். எவ்வாறு கயர்லாஞ்சிப் படுகொலை இன்றைய சந்தை-ஜனநாயக உலகால் கவனங்கொள்ளப்படாமல் விடப்பட்டது என்பதை பாக்கிஸ்தான் நாட்டின் மாணவி மலலாவிற்கு கிடைத்த அங்கீகாரத்துடன் ஒப்பிட்டு, இன்றும் படுகொலைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இந்திய சாதி அமைப்பின் குரூரத்தையும் கொடூரத்தையும் விளக்கியுள்ளார்.
‚விடுதலையின் பதாகை‘ என்ற தலைப்பிடப்பட்டிருக்கும் இக் கவிதை ஜெர்மன் மொழியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் இக் கவிதையின் மூலத்தில் காணப்படும் சுகிர்தராணியின் படிமங்களையும் சொல்லாட்சியையும் இம் மொழிபெயர்ப்பில் காணமுடியவில்லை. எடுத்துக் காட்டாக:
“… மூங்கில் கூடையில் வெளிச்சம் வாரப்பட்ட
வீட்டின் முற்றத்தில்
நிர்வாணமாய்க் கிடத்தப்பட்டிருக்கிறேன்
கால்களும் கட்டப்பட்டிருக்கின்றன …”