Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Sunday, March 25, 2012

சிங்களவர்கள் ஆகிய நாங்கள்- சுனிலா ஜெயவர்த்தன

 -தமிழில்: எஸ் .குமார் -
மோதல்கள் மற்றும் சமாதானம், அரசியல், ஆட்சி என்பனவற்றின் அடையாளம்

ஒரு சிப்பியானது சூழலிருந்து துகள்களை உறிஞ்சியெடுத்து முத்துக்களை உருவாக்குகிறது. அப்படியில்லாமல் அது எல்லாத் துகள்களையும் வடிகட்டி வெளியேற்றியிருப்பின் அது ஒரு கீழ்நிலைப் பிறவியாகவே வாழவேண்டியது அதன் தலைவிதியாக எழுதப்பட்டிருக்கும்.
நாடுகடத்தல்கள், ஆக்கிரமிப்பு அலைகள், கைப்பற்றப்பட்ட அரசுகள் மற்றும் தனிமைப் படுத்தப்பட்ட பயணிகள் என்பனவற்றின் வழிகளில்தான் சிங்களமக்களின் இனப்பெருக்கம் இந்த ஸ்ரீலங்காத் தீவில் உருவானது என்பது புதிய தலைமுறைக்கு சொல்ல மறந்த ஒரு கதை. நாடுகடத்தப் பட்டவர்கள் வெற்றி கொள்ளப்பட்டவர்கள், மற்றும் ஏதிலிகள், சில உன்னதமானவர்கள் பெரும்பாலும் அப்படியல்லாதவர்கள் ஆகியோரின் பிள்ளைகள்தான் இவர்கள். முற்றுகைக்குள்ளாகியவர்கள், எதிர்த்து நின்றவர்கள். மற்றும் செழிப்பான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் ஆகியோரை உறிஞ்சியெடுத்து ஒரு முத்து உருவாவதைப்போல உருவாக்கிப் பெற்ற கலவைதான் அவர்கள்.
காலப்போக்கில் சிங்களவர்கள் ஒரு இனம் மற்றும் கலாச்சாரம் என்பனவற்றில் இந்தியாவின் கலாச்சாரத்திலிருந்து தங்களை வேறுபடுபடுத்தி வரையறுத்துக் கொண்டார்கள். .இது அதிகப்படியாக எதிர்நோக்கும் ஒன்றின் முக்கியத்துவத்தை குறைத்து காண்பிக்கிறது என்ற வகையில் பாராட்டத் தக்க ஒன்று. நாம் பல வண்ணக் கடல்களுடாக நீந்தி வெளிவந்த போதும் இன்னும் பலவற்றை அறிந்து கொள்ளவேண்டிய இனமாகவே இருக்கிறோம்….ஆனால் நாங்கள் மிகவும் தைரியமாக வேறுபாடுகள் யாவற்றையும் தெளிவாக உய்த்துணர்ந்து கொண்டோம் என்கிற நம்பிக்கையுடன் மிகவும் அற்புதமாக நம்மைத் தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறோம். எங்கள் வெளித்தோற்றம் இணைக்கப்பட வேண்டியது மற்றும் நாம் கலந்துறவாடிய சமூகங்களில் உள்ள, பழங்குடியினர், அவுஸ்திரேலிய – நீக்ரோ கலப்பு வேடர்கள், ஜெயம் கொண்ட திராவிடர்கள், சிறைக்கைதிகள் மற்றும் வேலையாட்கள், பரந்த அராபிய நிலப்பரப்பை சேர்ந்த மூர் இன வணிகர்கள் மற்றும் மாலுமிகள், சிங்கள அரசர்களுடன் போரிட்ட இந்தோனசிய தீவுகளைச் சேர்ந்த கூலிப்படைகள், ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் மதப்பிரச்சாரர்கள், சீன வணிகர்கள், ஆபிரிக்க முத்துக் குளிப்பவர்கள், மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் நிச்சயம் தமது விதைகளை இங்கே விதைத்திருப்பார்கள்.