Showing posts with label மல்லிகை. Show all posts
Showing posts with label மல்லிகை. Show all posts

Monday, October 17, 2016

மல்லிகை தொடர்ந்தும் வரும்

ல்லிகை சஞ்சிகை வராத காலத்தில் கூட மல்லிகை ஆசிரியர் என்று நெஞ்சை நிமிர்த்தி பெருமை கொள்கிறேன் என மல்லிகை சஞ்சிகையின் ஆசிரியர் டொமினிக் ஜீவா தெரிவித்தார்.

மேலும் நான் இல்லாத காலத்திலும் மல்லிகை வரும், மணம் வீசும். தமிழ்பேசும் இம்மண்ணில் மிகவும் அதிகமாக நேசிக்கப்பட்ட சஞ்சிகை மல்லிகை ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.

மக்கள் கலை இயக்கியப் பெருமன்றத்தின் ஏற்பாட்டில் நானிலம் இணையத்தின் ஊடக அனுசரனையில் ‘ஜீவாவுடன் ஓரு மாலைப் பொழுது’ நிகழ்வு  16.10.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி தொடக்கம் 6 மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்…
இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பு யாழ்ப்பாணத்தில் இருந்த காலகட்டத்தில் திருநெல்வேலி, மதுரை போன்ற இடங்களில் இருந்து வந்திருந்த தமிழ்இன சிப்பாய்கள் மல்லிகை சஞ்சிகையை 30 சதம் கொடுத்து வாங்கி வாசித்தார்கள்.