Saturday, October 15, 2016

பாலியல் லஞ்சம் கொடுத்த மனைவியின் உண்மைக் கதை


பிரசன்ன விதானகே அவர்களின் உருவாக்கத்தில்  "silence in tha courts" உசாவிய நிஹண்டாய்  " நீதிமன்றத்தில் அமைதி " என்ற சிங்கள  திரைப்படம் திரையிடலுக்கான  அனுமதி மறுப்பினை  நீதி மன்றத்திலிருந்து  எதிர்நோக்கியுள்ளது. இலங்கையின் நீதித்துறையில்   இருள் படிந்த  சம்பவங்களை  ராவயின் முன்னாள் ஆசிரியர்  விக்டர் ஐவன்  அவர்கள் தனது நொனிமி அரகலய  என்ற  நூலில்  விரிவாக எழுதியிருந்தார் .  அதில்  லெனின்  ரத்நாயக  என்ற முன்னாள் நீதிபதி  மஹவ நீதி மன்றத்தில்  கடைமை ஆற்றிய காலத்தில்  ஒரு ஏழைப் பெண்ணிடம் கட்டாயத்தின் பேரில்  பாலியல் லஞ்சம்  பெற்றதினை  குறிப்பிட்டுள்ளார் .  இந்த  உண்மையினை அடிப்படையாக வைத்து  எடுக்கப்பட்ட  திரைப்படமே  தடையை  எதிர்கொண்டுள்ளது.

No comments: