Tuesday, March 15, 2016

கலைஞர் கே.எஸ்.இரத்தினம் - ஓர் அஞ்சலிக் குறிப்பு.

-வைரமுத்து திவ்வியராஜன்- 

கம்யுனிசக் கட்சியில் இணைந்தும் , தேசிய கலை இலக்கியப் பேரவையில் இணைந்தும் பொதுத் தொண்டுகள் ஆற்றிய வகையிலும் இவருடன் நான் நெருக்கமாக பழகி இருக்கிறேன்

கலைஞர் கே.எஸ்.இரத்தினம் அவர்களை நான் திருமணம் முடித்து கரவெட்டிக்கு வந்தபின்னரே நேரடியாகப் பழகவும் அவரது கலைப் பங்களிப்பினை காணவும் வாய்ப்பு ஏற்பட்டது. காலம் பறித்து சென்றுவிட்ட கலைஞர்கள் நாடகத்திலகம் நற்குணம் , அமரர் தங்கமணி ,அமரர் தங்க பாஸ்கரன்,இவர்களுடன் இணைந்து இவர் ஆற்றிய கலைப் பங்களிப்புகளும் சிறி நாரதா வித்தியாலயத்தின் வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய பங்களிப்புக்களும் எவரும் நன்றியோடு நினைவு கூரத்தக்கவை . இதனை விட கம்யுனிசக் கட்சியில் இணைந்தும் , தேசிய கலை இலக்கியப் பேரவையில் இணைந்தும் பொதுத் தொண்டுகள் ஆற்றிய வகையிலும் இவருடன் நான் நெருக்கமாக பழகி இருக்கிறேன். இவர் மனித உரிமை செயற்பாட்டாளரும் போராளியும் ஆவார். . எப்போதும் அமைதியான- மென்மையான பேச்சும் , சிரித்த முகமும், வசீகரிக்கும் தோற்றமும் அடக்கமாகவே தன்னை பெரிதுபடுத்தாமல் ஆற்றிய பொதுத் தொண்டுகளும் எல்லோராலும் நினைவு கூரத் தக்கவை .இவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது பிள்ளைகள் குடும்பத்தவர் அனைவருடனும் நாமும் துயரத்தினை பகிர்ந்து கொண்டு அஞ்சலி செலுத்துகிறோம். அவரது நாமம் வாழட்டும்.

No comments: