Saturday, August 21, 2010

சந்திப்பு


நடிகவினோதன்
ரி .யோகராஜாவுடன் ஓர் சந்திப்பு.
-இனிக்காக சந்தித்தவர்: மு .சி .கந்தசாமி-


(ஈழத்தின் வடமராட்சிப் பகுதியில் வதிரியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் நடிகவினோதன் அவர்கள். இவர் ஈழத்தின் தகமை பெற்ற நடிகர்களில் ஒருவர், அத்தோடு புலம்பெயர்ந்தபோதும் டென்மார்க்கில் vestern vinden எனும் டெனிஸ் நாடக மன்றில் ஊதியம் பெற்று நடிகராக வழும் தகமைக்குரியவராகவும் வாழ்ந்து வருகிறார்.)


வினா: வணக்கம்! நீங்கள் இந்த நாடகத்துறைக்கு எப்போது? எப்டி வந்தீர்கள்?
நடிகர்: நான் எனது பள்ளிப் பருவத்திலேயே இத்துறைக்கு வந்துவிட்டேன். எனது எட்டாவது வயதில் எனது பாடும் திறனைக் கண்ட எனது தமிழ் ஆசிரியர்களான அல்வாயூரைச் சேர்ந்த ஜீ.ஜீ.மகாலிங்கம் ஆசிரியரும், ஆ.கதிரவேல் ஆசிரியரும,; கோவலன் கண்ணகி, அரிச்சந்திர மயாணகாண்டம், சத்தியவான் சாவித்திரி போன்ற ஸ்பெசல் நாடகங்களிலும் காத்தவராயன் நாடகத்திலும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவைத்தார்கள்.

வினா: நீங்கள் ஓர் கலைஞன் என்பதும் உங்களுக்குள் அதன் ஆளுமை உள்ளதாகவும் எப்போது உணர்ந்தீர்கள்?
நடிகர்: எனது இருபதாவது வயதில் |தூயஉள்ளம|; என்னும் சமூக நாடகத்தை நானே எழுதி நெறியாள்கை செய்து தேவரயாளி இளைஞர் நாடக மன்றத்தினர் மூலம் மேடையேற்றியதினைக் குறிப்பிடலாம். ஏனெனில் பல போட்டி நாடகங்களில் அந்நாடகம் தங்கப்பதக்கங்களை வென்று குவித்தது. அது தவிர சிறந்த நடிகருக்குரிய பரிசினையும் எனக்குப் பெற்றுத் தந்தது. அதுவுமன்றி 1982ல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்னை வானொலிக் கலைஞனாகத் தேர்ந்தெடுத்தது. அவ்வப்போது நான் எழுதிய சில நாடகங்களையும் ஒலிபரப்புச் செய்தது. 1985ல் நடிகமணி வைரமுத்து அவர்கள் நடிகவினோதன் என்ற பட்டத்தினை வழங்கி கவுரவித்தார். பின் புலம்பெயர்ந்து வந்தபோது மேல்காற்று (ஏநளவநசn எiனெநn) என்னும் டெனிஸ் நிறுவனம் என்னை நடிகனாக அங்கீகரித்து வேலைக்கமர்த்தியபோதும் எனக்குள் இருக்கும் ஆளுமையை நான் புரிந்து கொண்டேன்.

வினா: மேலைத் தேசத்தில் இப்சன், செகால,; பிராண்டோ போன்றவர்கள் யதார்த்த நாடகங்கள் நிறையவே செய்திருக்கிறார்கள். இவை பற்றி…..
நடிகர்;: இது பற்றிக் கூறுவதாயின் தமிழில் பெரிதான வளர்ச்சி இல்லை என்பதே என் அபிப்பிராயம், ஆனால் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கே.எம்.வாசர் இருந்த காலத்தில் நாடகத் தமிழை விடுத்து பேச்சுவழக்கிலுள்ள தமிழை நாடக உரைநடைகளில் சேர்த்துக் கொண்டார். மற்றையது தமிழின் வாழ்க்கைத் தரம் தாழ்ந்திருக்கும்போது மேலான ஓர் வளர்ச்சி உடனே ஏற்பட்டுவிடாது.

வினா: டெனிஸ் நாடகக் குழுவில் வாழும் கலைஞாராக இருக்கிறீர்கள் இதனிடையே ஏதாவது வேறுபாட்டினைக் கண்டுள்ளீர்களா?
நடிகர்;: முதலில் ஸ்கிறீப் இல்லாமல் நடிப்பதை இங்குதான் கற்றுக் கொண்டேன். பர்வையாளர்கள் எங்களில் ஒருவராக இருப்பதையும் இங்கேதான் கற்றுக் கொண்டேன். கதை சொல்லல், கதை கேட்டல் என்பதைவிடுத்து கதையை நகர்த்தல் என்பது இங்கு கூட்டாக நடைபெறுகிறது. கலைஞரும் சுவைஞரும் பங்காளராக இருக்கிறார்கள். மீடியா வளர்ந்தும் பொதுமைப்பட்டிருப்பதையும் புரிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது.

வினா: நீங்கள் வடமராட்சியினைச் சேர்ந்தவர் அந்த வகையில் நெல்லியடி அம்பலத்தாடிகளுக்கும் உங்களுக்குமான உறவு எப்படி இருந்தது?
நடிகர்;: எனது துரதிஸ்டம் அவர்களுடன் சேர்ந்து பணியாற்றும் பாய்க்கியம் எனக்கு கிட்டவில்லை. மற்றையது அது ஒரு இடதுசாரிகளின் கலைமன்றாகவே இருந்தது. ஈழத்து நாடக வரலாற்றில் அவர்களை விடுத்து கலை இலக்கியம் சார்ந்து பேசமுடியாது.

வினா: இறுதியாக ஓர் கேள்வி தற்போது எவ்வகையான நாடகங்களை எவ்வகையான உத்திகளை உங்கள் நாடகங்களில் கையாளுகிறீர்கள்?
தமிழ் நாடக அரங்குகளில் ஓரங்க நாடகங்களைத்தான் தற்போது இயக்கியும் நடித்தும் வருகிறேன்.

(இனி இதழ் இரண்டிலிருந்து )

No comments: