Showing posts with label குமார்குணரத்தினம். Show all posts
Showing posts with label குமார்குணரத்தினம். Show all posts

Monday, March 28, 2016

குமார்குணரத்தினத்தின் நீதிமன்ற உரை

எனது அரசியற் செயற்பாடுகள் ஒருவிதத்தில் இந்த நாட்டு ஜனநாயகம் புதையுண்டு இருந்த இவ்வாறான நிலையில், ஜனநாயகத்தை ஒருவிதத்தில் வெற்றிகொள்ள நடைபெற்ற போராட்டத்துடன் தொடர்பு கொண்டது.

கௌரவ நீதிபதி அவர்களே!

கேகாலை நகரில் பிறந்து வளர்ந்த என்னை விசா காலம் முடிந்தும் இங்கு வசித்த வெளிநாட்டவன் என்ற காரணத்தைக் காட்டி கைது செய்து வைத்துள்ளனர்.

எனது வீட்டின் முன்வாசலுக்கு வந்தால் என்னால் பொது மயானத்தைக் காணமுடியும். எனது தந்தை உட்பட எனது சொந்தங்கள் அடக்கம் செய்த, தகனம் செய்த மயானம் அதுவாகும். நான் வீட்டில் இருந்து கொழும்பு-கண்டி வீதிக்கு வந்தால் றோமன் கத்தோலிக்க மயானத்தைக் காண முடியும். அங்கு எனது தாயின் சொந்தங்கள் எனது தந்தைவழி பாட்டனார் ஆகியோர் அடக்கம் செய்யப்ட்டுள்ள புதைகுழிகள் இன்றும் இருக்கின்றன.