Sunday, July 10, 2016

இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
வடமாகாண கல்வி அமைச்சினால் வழங்கப்படும் நியமனங்களில் அரசியல்வாதிகளின் தேவையற்ற தலையீடுகளும் பிரதேசவாதங்களும் செல்வாக்கு செலுத்துவதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

கிளி/சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் அதிபர் நியமனம் வழங்கப்பட்டிருந்த பெருமாள் கணேசனுக்கு - கல்வியமைச்சின் செயலாளருடைய கடிதத்தின் பிரகாரம் கலைமகள் வித்தியாலயத்தில் கடந்த 07.07.2016 அன்று கடமையைப் பொறுப்பேற்கவிருந்த நிலையில் - அவருக்கு தொலைபேசி மூலமாக ஒரு இடைநிறுத்த அறிவித்தல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மூலமாக  வந்திருப்பதாக - அவை தொடர்பான செய்திகளும் தகவல்களும் ஏற்கனவே ஊடகங்களிலும் பரவலாக வந்துள்ளன.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட அநீதி கண்டனத்துக்குரியது.

 இத்தகைய செயற்பாடுகள் வடமாகாண கல்வி அமைச்சின் முறைகேடுகளின் மற்றுமொரு பரிமாணமாகவே பார்க்கப்படவேண்டியுள்ளது.  இந்தத் தவறான - முறையற்ற நடவடிக்கைகளால், சமூகத்தில் பகையும் மோதலும் அணிபிரிதல்களும் உண்டாகக்கூடிய பொறுப்பற்ற செயற்பாடுகளில் வடமாகாண கல்வியமைச்சு ஈடுபட எத்தனித்துள்ளதாகவே பார்க்கவேண்டியுள்ளது.

அரசியல் அதிகாரங்கள் தேவையற்ற விதமாக கல்வியில் குழப்பங்களை உருவாக்க முயலுமாயின் - அது வடமாகாண கல்வியில் இனியும் மீளமுடியாத பின்னடைவை உருவாக்கிவிடும்.
எனவே - இவ்விடயத்தில் வடமாகாண முதலமைச்சர் தலையிட்டு - பாதிக்கப்பட்ட அதிபருக்கு நீதியான தீர்வை வழங்கவேண்டும்.

ஜோசப் ஸ்ராலின்
பொதுச்செயலாளர்,
இலங்கை ஆசிரியர் சங்கம்.

No comments: