எம்.சி யின் மகன் சந்திர
-கரவைதாசன்-
அறம்தான் ஆயுதங்களில் கூர்மையானது - ஆனால்
அது நேர்மையானது.
அவசரப்பட்டு ஆத்திரப்பட்டு அது யாரையும் தாக்காது, தாக்க ஆரம்பித்தால் அது தோற்காது .
-எம். சி. சுப்பிரமணியம்-
ஈழ தேசத்தின் மகாப் பெரிய அறவழிப் போராளி, பொதுமைச் சிந்தனையாளர், விம்புநிலை சமூகத்தின் கல்வியின் தந்தை, கறுப்பாகக் கிடந்த சமத்துவ மற்ற மூடத்தனங்களையே மூலதனமாக வைத்திருந்த தமிழர்களில் சாதாரணமானவர் தொடக்கம் சனாதனர்கள் வரை எடுத்துரைத்து கல்வியாளர் தசநாயக்க என்ற மகான் கல்வி மந்திரியாகவிருந்த கால கட்டத்தினிலே பருத்தித்துறைதொகுதி கம்யுனிஸ் கட்சி எம்பியாகவிருந்த தோழர் பொன் கந்தையாவையும் இணைத்துக்கொண்டு தமிழர்களே தமிழர்களின் ஒரு பகுதி மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டபோது சுமார் இருபத்தைந்து அ.த.க பாடசாலைகளை நிறுவியவர்தான் எம்.சி. என அழைக்கப்படுகின்ற எம்சி சுப்பிரமணியம்.
1956 ம் காலப் பகுதியிநிலேயே ஆலயப் பிரவேசம் தேநீர்கடைப் பிரவேசம் மயானங்களில் சமத்துவத்துக்கான போராட்டம் எனத் தேதியிட்டு வரிசைப் படுத்திக் கொண்டே செல்ல நீண்ட பெரும் பக்க வரலாறு ஈழத் தமிழருக்கு உண்டு. இக் காலத் தேதிகளை தெரிந்து வைத்திருந்த காலக் கண்ணாடி சந்திர போஸ் அண்ணா அவர்களின் இறுதிப் பயண குறிப்பினை எழுதக் கிடைத்த இயற்கையினை வைகிறேன்.
எனில் ,
சந்திர போஸ் அண்ணா இன்னும் எழுதுவதுக்கு அவரது அப்பாவின் வரலாறு குறித்தும் அவரோடு ஒத்த தோழர்கள் குறித்தும் எழுவதுக்கான ஏதுக்கள் அவரிடம் நிறையவே இருந்தன, டென்மார்க்கில் என்னால் கொண்டுவரப்பட்ட “இனி “ சஞசிகையில் கே.டானியல் பற்றி ஒரு நினைவுக் கட்டுரை எழுதிருப்பார் அதில் படைப்பாளிக்கு ஒரு சமூகப் பொறுப்புண்டு என்பதையும் படைப்புகளுக்கு ஒரு இலக்கும் பயன்பாடும் சமூகக்கட்டமைப்பும் உள்ளது எனக் குறித்துள்ளார். இத்தகைய ஆக்கச்செறிவும் அறம் சார்ந்து பார்க்கின்ற பக்கச் செறிவும் அவரிடமிருந்தது.
சந்திர போஸ் அண்ணா அவர்களின் அப்பா எம்.சி அவர்கள் காலமாகிய காலம். மிகவும் சிக்கலுக்குரிய ஒரு நேரமாகவிருந்தது. வலதுசாரிய சிந்தனையில் வெளிக்கிளம்பிய இளைஞர்கள் கையில் ஆயுத பெலம் இருந்தது. பேச்சுக்கு சோசலிசம் சமத்தும் பற்றிய பேச்சுக்கள் அவர்களது அரசியல் கடைகளிலே ஏலமிடப்பட்டபோதும் அவர்களிடம் காணப்பட்டதெல்லாம் சுத்த பாசிசப் போக்கே . இடது சாரிகள் தேடித் தேடி கொல்லப்பட்டார்கள். அவர்களது பாசிசப் பார்வையில் இடது சாரிகளின் சமூகப் பங்களிப்பு பற்றி பேசுவதும் குற்றமாகப் பார்க்கப் பட்டு வேட்டையாடப்பட்ட காலம்
எனவே சுமார் பத்து வருடங்கள் காத்திருந்து கதைகளின் உரையாடல்களிடையே ஒருவகை சமரச போக்கினை கையாண்டே எம் சி . ஒரு சமூகவிடுதலை போராளி எனும் ஒரு சிறு நூலினை 1999 ஆம் ஆண்டுசந்திர போஸ் அண்ணா வெளிக்கொண்டு வந்தார். அதன் தொடர்ச்சியே அதே பெயரில் பின்பு வந்த தொகுப்பு. வாழ்நாள் முழுவதும் அர்பணிப்பு மிக்க எழுத்தும் வாழ்வும் அவரிடமிருந்தபோதும் கன்னை கட்டி கூச்சல் போட்டு ஆர்ப்பாட்டமற்ற போக்க்கினைத் தான் அவரிடம் காணலாம் .
அவ்வாறே தனது இறுதி நிகழ்வும் தனது பூதவுட லை டொராண்டோ பல்கலைக்கழகத்துக்கு தானமாக வழங்கியுள்ளார் . அந்த வரலாற்று மிக்க நிகழ்வின் ஒளித்தொகுப்பே இணைக்கப்பட்டது. டொராண்டோ பல்கலைக்கழகத்தினர் உத்தியோக பூர்வமாக அவரது உடலினை பெற்றுச் செல்கிறார்கள். ஆனாலும் அவரது குடும்பத்தினர் அவருக்குகான இரங்கல் உரைக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர் அதன் விபரம் கீழே இணைத்துள்ளேன்
அன்பு மறவா
சத்தியதாஸ்
