Sunday, December 16, 2012

தேவதை ஆவணப்படத்தை முன்வைத்து இயக்குனர் மணிமேகலையுடன்-நேர்காணல்

-ஜெயச்சந்திரன் ஹஸ்மி-

தேவதைகள் – நமது கனவுலகத்திலும் கற்பனைகளிலும் சினிமாக்களிலும் வெள்ளை உடை உடுத்திக் கொண்டு, அழகாக, கவலைகள் இல்லாமல், பாடிச் சுற்றிக்கொண்டிருக்கும் தேவதைகளை பார்த்திருப்போம். ஆனால், நிஜ வாழ்வின் தேவதைகளை அடையாளப்படுத்துகிறது ஒரு ஆவணப்படம். ஆம், இந்த தேவதைகள் உழைத்து உண்பவர்கள். வியர்வை சிந்தி சம்பாதிப்பவர்கள். ஆண் பெண் பேதங்களை உடைத்தவர்கள். உழைப்புக்கு ‘பால்’ ஒரு வரையறை இல்லை என்று உணர்த்தியவர்கள். எல்லாவற்றிற்கும் மேல் இவர்கள் பெண்ணைப் பற்றி சமூகம் கொண்டிருக்கும் உள்ளீடுகளை உடைத்தெறிந்தவர்கள். நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். கனவு காணும் கண்களை கசக்கி, நம் சமூகத்தை ஆழ்ந்து கவனித்தால், தெருவுக்குத் தெரு இதுபோன்ற தேவதைகளை காணலாம். இவர்கள் நிஜ தேவதைகள். லீனா மணிமேகலை இயக்கத்தில் வந்துள்ள ‘தேவதைகள்’ ஆவணப்படம் உலகத்தோடு நிமிடத்துக்கு நிமிடம் போராடும் மூன்று பெண்களைப் பற்றி பேசுகிறது. இயக்குனர் லீனா மணிமேகலையோடு கலந்துரையாடியதிலிருந்து....
1. முதலில் இந்த தேவதைகள் ஆவணப்படத்திற்கான அடிப்படைக் கரு எங்கிருந்து வந்தது?

தோழர் பவா செல்லதுரையின் வழி ஒப்பாரி கலைஞர் லஷ்மி அம்மாவின் தொடர்பு கிடைத்தது. வசியம் வைக்கப்பட்ட ஒரு ஆடு போல அவர் பின்னாடி சுற்றிக்கொண்டிருந்தேன். மணிமேகலை என்று அறிமுகம் செய்துக்கொண்ட அடுத்த நொடி, மணிமேகலைக்கு ஒரு பாடல் என்று இட்டுக்கட்டி பாடத்தொடங்கிவிட்டார். ஒரு முழுமையான மனுஷி அவர். அவரைப்பற்றி மேலும் பலர் தெரிந்துக்கொள்வதற்கு ஏதுவாக கேமிராவில் ஆவணப்படுத்தலாமா என்று கேட்டேன். உனக்கு எது மகிழ்ச்சியோ அதை செய்துக்கொள் என்றார். தேவதைகளின் விதை அந்த உரையாடல் தான்.
இவரைப்போன்றே அசாதாரணமான வாழ்க்கையை எந்த புகாருமில்லாமல் வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஆன்மாக்கள் யாரும் இருக்கிறார்களா என்ற தேடலில், விகடன் சரண் மூலம் சேதுராக்கம்மாவையும், பாண்டிச்சேரி சுகுமாரன் மூலம் கிருஷ்ணவேணியம்மாவையும் தொடர்பு கொண்டேன். தேவதைகள் சாத்தியமானது.

Friday, December 07, 2012

உடுப்பிட்டிமகளிர் கல்லூரியும் தீட்டும்

-வி.அப்பையா-
இனஅழிப்பு போருக்கு பிந்தைய காலங்களில் சமூக வாழ்க்கை இயல்பாகி விட்டதற்கான தோற்றப்பாட்டை அரசும், அதன் சிவில் சமூக ஆர்வலர்களும் தொடர்ச்சியாக பிரச்சாரங்களினூடாகவும், பல்வேறு "நிகழ்ச்சிநிரல்" செயல்பாடுகள் மூலம் நிறுவ முயலுகிறார்கள்.
ஆனால், உண்மையில் மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக இராணுவ நிர்வாகத்திற்கு எதிராகவும், அதிகார வர்க்கத்தின் ஆதிக்க திமிருக்கு எதிராகவும் போராடுவது என்பது தொடர் போக்காகவே இருந்து வருகிறது.
சமீபத்தில் இணையங்களில் "பெரிதாக” அடிபடாத அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்ட செய்தி உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கு தகுதியான அதிபரை நியமிக்கக்கோரி பாடசாலை முன்பு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது. ஒரு தகுதியான அதிபர் நியமனத்திற்கு கூட மக்கள் போராட வேண்டியுள்ளதையும், "நிர்வாக சீர்கேடு, தலையீடு" எந்த அளவுக்கு சீரழிந்துள்ளது என்பதை வெளிப்படுத்துவதாகவே இந்த செய்தி உணர்த்துகிறது.
மக்களின் போராட்டத்திற்கான அடிப்படை காரணம் என்ன? 04.10.2012இல் வடமராட்சி வலயத்தில், தரம் 1 ஏபி கொண்ட உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கு அண்மையில் புதிதாக நியமனம் பெற்ற 15 பேரில், தரம் 2-2 நிலையில் உள்ள ஒருவர் அதிபராக நியமிக்கப்பட்டதை கண்டித்தே பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தகுதியான கல்வி தகுதி கொண்ட அதிபர் இருந்தும் ஏன் இந்த உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கு அவர்கள் நியமிக்கப்படவில்லை என்பது நியாமான கேள்வியாகவே உள்ளது.
மேலும், முன்னைய காலங்களிலும் இதே போன்ற நிலமைதான் இக்கல்லூரிக்கு ஏற்பட்டுள்ளது. 12.11.2012ல் ஓய்வுபெற்ற இக்கல்லூரியின் அதிபரின் தேர்வும் கூட "விதிமுறைகளை£" மீறி "அதிகாரம்" படைத்தோரால் நியமிக்கப்பட்டது. இவரும் கூட அதிபர் தரம் அற்ற, ஆசிரியர் தரத்தை உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தற்போதைய அதிபர் நியமனத்தையும் கருத்தில் கொண்டால் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் "நிர்வாக செல்வாக்கை" புரிந்து கொள்ள இயலும். இக்கல்லூரிக்கான முதல் நிலை தகுதியுடைய அதிபர்கள், உடுப்பிட்டியில் இல்லையா? என்றால், உண்மை செய்தி அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது.

Tuesday, November 27, 2012

கே.ஏ.சுப்பிரமணியம் சில நினைவுப் பதிவுகள்


- லெனின் மதிவானம் -
 தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றில் தனக்கென தனித்துவமான பங்களிப்பை வழங்கியர். மூத்த இடதுசாரி தோழர்களான மு கார்த்திகேசுஇ ந. சண்முகதாசன் என்ற வரிசையில் வைத்து நோக்கப்பட வேண்டியவர். ஒருவகையில் முன்னவர்களின் தொடர்ச்சியாகவும் அதன் அடுத்த கட்ட பரிமாணமாகவும் திகழ்ந்தவர் கே.ஏ. சுப்பிரமணியம்.  ஆதிகார பீடத்தில் அமர்ந்திருக்கும் ஆதிக்க வர்க்கத்தினருக்கும் ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக ஓர் ஆர்பரிப்பில் உண்மையின்-உழைக்கும் மக்களின் பக்கத்தில் நின்று போராடிய இத்தோழரின் கருத்துக்கள் சிந்தனைகள் செயற்பாடுகள் என்பன இன்று வரை பல விதங்களில் தாக்கம் செலுத்தி வருகின்றன. இருப்பினும் இவர் பொறுத்த வெளிவந்த நினைவு மலரைத் தவிர அவர் பொறுத்து காத்திரமான ஆய்வுகள் ஏதும் வந்ததாக தெரியவில்லை. என்னைப் பொறுத்த மட்டில் அத் தோழரோடு நேரடியாக பழக கூடிய சந்தர்ப்பங்கள் ஏதும் கிடைக்காத போதினும் அவரால் எழுதப்பட்டு இசெம்மைப்படுத்தப்பட்ட  'தாயகம்''இசெம்பதாகை'இ புதியபூமி' போன்றவற்றின் ஆசிரிய  தலையங்கங்களும் இசில கடிதங்களும் பார்வைக்கு கிட்டின. மேலும் அவரால் வளர் த்தெடுக்கப்பட்ட இடதுசாரி தோழர்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது ஆளுமையின் செல்வாக்குட்பட்டவர்கள் என்போரின் கருத்துக்களை கொண்டு அவரை அறிய முடிந்நது. பழமைவாத சமூக புனிதங்களிலிருந்து வழியும் சீழினை நக்கி பிழைப்போட்டும் நிலைமைகளே யதார்த்தமாகிவிட்டதோர் சூழலில் அவற்றினை மீறி கலப்பு திருமணம் செய்துகொண்டமை அவரது நேர்மையையும் தன்முனைப்பற்ற நாகரிகத்தினையும் எடுத்துக் காட்டுகின்றது.    கூடவே  தனது இறுதி மூச்சு வரையிலும் அத்தகைய நாகரிகமான வாழ்வை தமதாக்கி கொண்ட அவர் மரண வாயிலில் நின்றுக் கொண்டு கூட தம் தோழர்களுக்கும் அடுத்த தலைமுறையிருக்கும்  'விடை பெறுகிறேன்' கூற முற்பட்ட அவரது செயல் நம்பிக்கையூட்டுவதாக மட்டுமன்று ஒர் உண்மையான இடதுசாரிக்கு இருக்க கூடிய ஆன்ம பலத்தை எடுத்துக் கூறுவதாக அமைத்துள்ளது. அவரது மரண சடங்கில் எந்த விதமான மத சம்பிரதாயங்களுக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்துள்ளார். இன்றுவரை அவரது துணைவியாரின் கழுத்தில் தொங்கும் 'அரிவாளும் இ சம்மட்டியும்' தான் அவர் கட்டிய தாலி.அவரது இல்லமானஅந்தச் சிறிய  'சத்தியமனை'  கதவுகள் அற்று 'அடையா நெடுங்கதவும்இ அஞ்சேல் என்ற சொல்லும் வேண்டும் ' என்று  சொல்லி திறந்தே இருந்திருகிறது.

Saturday, November 03, 2012

அன்புள்ள சின்மயிக்கு

 -ஞாநி-
அன்புள்ள சின்மயிக்கு வணக்கம்.
நாம் ஒரே ஒரு முறைதான் சந்தித்திருக்கிறோம். எந்திரன் பட வெளியீடு சமயத்தில் ரஜினியின் பிம்பம் பற்றிய ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் நாம் பங்கேற்றோம். எதிரெதிர் அணியில் இருந்தோம் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. நீங்கள் எந்திரன் படத்தில் பங்கேற்றவர். நான் எப்போதும் விமர்சகன்.
பின்னர் அண்மையில் என் சிநேகிதி பத்மாவும் நீங்களும் பங்கேற்ற ஒரு சமூக மேம்பாட்டு நிகழ்ச்சியில், இளம் மாணவிகளுக்கு உற்சாகமும் தன்னம்பிக்கையும் ஏற்படும் விதத்தில் நீங்கள் பேசியதாக அவர் எனக்குச் சொன்னார். சிறு வயதில் தந்தையால் கைவிடப்பட்டபோதும் தாயின் உறுதியான மனமும் கடும் உழைப்பும் உங்களை வாழ்க்கையில் முன்னேறச் செய்ததைப் பற்றி நீங்கள் பேசி அந்தச் சிறுமிகளுக்கு வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடுவதற்கான உத்வேகத்தை அளித்ததை அறிய. மகிழ்ச்சியாக இருந்தது. பொதுவாக சினிமா பிரபலங்கள் தங்கள் இளமைக் காலக் கசப்புகளை பேசுவதோ ஒப்புக் கொள்வதோ அவற்றிலிருந்து கற்றுக் கொண்டதைப் பகிர்வதோ அரிது.
அதன்பின் இணைய உலகில் டிவிட்டர் தளத்தில்

Friday, November 02, 2012

நூல் அறிமுகம்

Præsentation af bogen
இலங்கை அரசியல் வரலாறு - இழப்புக்களும் பதிவுகளும்

Tid:
Lørdag, den 3. november 2012, kl. 15:00

Sted:
Overlundhallen
Toftegårdsvej 8
8800 Viborg
[Vedlagt er et kort, som viser placeringen]


Vært:
Selvakumar Thuraisingam

Programmet for dagen:
  • Velkomst
  • Anmeldelser:
    • Loganadan Chellathamby
    • Rajagopalan Sinnathambi
    • Sathyadas Thavarasa
    • Sri Kathirgamanathan Veeravagu
  • Svar fra forfatteren
  • Takketale
Programmet vil desuden indeholde lykønskninger.

Aftenen afsluttes med aftensmad.

Friday, October 19, 2012

ஒரு கம்யூனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்

தோழர் சண்முகதாசன் அவர்களின்
“ஒரு கம்யுனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்”
நூல் அறிமுக மற்றும் விமர்சன அரங்கு

காலம் - 20th October 2012 , 3.00 P.M

இடம் - Walthamstow Quaker Meeting House, 1a Jewel Road, London E17 4QU

 தலைமை – தோழர் வேலு அவர்கள்


மேலதிக விபரங்கட்கு :தோழர் பாலன் - 00447753465573
tholar2003@hotmail.com

----------------------------------------------------------------------

மார்க்சிய கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையம்

Thursday, October 18, 2012

இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்

-ந.இரவீந்திரன்-
பார்த்துப் பழகிய வடிவத்தில் மனமீடுபாடு கொள்ளூம் நிலை காரணமாக ,உண்மைத்தோற்றம் மறைந்து வேறுபட்ட மயங்கிய காட்சியில் தவறான புரிதல்களுக்கு ஆட்படுவது எப்போதும் நிகழக்கூடியதுதான்.நீண்டகாலமாக எம்மிடமுள்ள தோற்றமயக்கமாக இருப்பது சமூக மாற்றம்பற்றிய புரிதலும்,அத்தவறான புரிதலுடன் மார்க்சியத்தைப் பிரயோகிக்க முயன்று தோல்விகளைச் சந்தித்துப் பாரதூரமான பின்னடைவுகளைக் கண்டடைந்துள்ளமையுமாகும்.எமது சமூகத்தில் மார்க்சியத்தை திரிபுகளுக்குஆட்படுத்திக்கொண்டு இயங்குவதே முனேறவியலாத முட்டுக்கட்டைகளுக்கு காரணம் என்றமயக்கங்களும் உண்டு.
திரிபுகளின்றி அப்படியே விசுவாசமாக மிகுந்த அர்ப்பணிப்புகளுடன் இயங்கமுயன்றவர்களும் இடர்ப்பாடுகளுக்கு உள்ளாயினர் என்பதே உண்மை.மார்க்சியம் ஐரோப்பியச் சமூகத்தைப் பகுத்தாராய்ந்த அதே முறையில் நமது சாதியச்சமூகத்தைக் காண இயலாது என்ற புரிதல் நீண்ட காலமாய் எமக்கு இருந்ததில்லை.மார்க்சியம் மட்டுமே சமூக மாற்றத்தை ஏற்படுத்திச் சமத்துவத்தை வென்றெடுப்பதற்கு வழிகாட்ட இயலும்;அதேவேளை மார்க்சியப் பிரயோகிப்பில் வேறுபட்ட வடிவம் இங்கு அவசியமாயுள்ளது.

Thursday, October 04, 2012

Why Socialism?..........

Why Socialism?
(Albert Einstein)
Translated By: Sivalingam M.

சோசலிஷம் எதற்காக?
(ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்)
தமிழாக்கம்: சிவலிங்கம்.மு

பொருளாதார, சமூகப் பிரச்சினைகளில் வல்லுனராக இல்லாத ஒருவர் சோசலிஷம் என்ற பொருள் பற்றிக் கருத்துத் தெரிவிப்பது சரியானதா? பற்பல காரணங்களினால் சரியானது என்றே நான் நம்புகிறேன்.
விஞ்ஞான அறிவுக் கண்ணோட்டத்திலிருந்து முதலில் இந்தப் பிரச்சினையை நோக்குவோம். வானியலுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையில் சாராம்சமான நடைமுறை ரீதியான வேறுபாடுகள் எதுவும் இல்லை என்பதுபோலத் தோன்றலாம்: இரு துறைகளையும் சார்ந்த விஞ்ஞானிகள் ஒரு வரம்புக்குட்பட்ட தொகுப்பில் அடங்கிய நிகழ்வுகளுக்கு இடையேயான பரஸ்பரத் தொடர்பினைக் கூடுமானவரைத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் பொருட்டு, அந்த நிகழ்வுகளின் தொகுதிக்குப் பொதுவாக ஏற்றுக் கொள்ளத் தக்க விதிகளைக் கண்டறிய முயல்கிறார்கள். ஆனால் எதார்த்தத்தில் அத்தகைய நடைமுறை ரீதியான வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. பொருளாதாரத் துறையை எடுத்துக் கொண்டால், பொருளாதார நிகழ்வுகள் பெரும்பாலும் அனேகக் காரணிகளால் பாதிக்கப்படுகின்றன. அக்காரணிகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே மதிப்பீடு செய்வது மிகவும் கடினம் ஆகும். இத்தகைய சூழ்நிலை, பொருளாதாரத் துறையில் செயல்படும் பொதுவான விதிகளைக் கண்டறியும் பணியைச் சிக்கலாக்கியுள்ளது. அதோடுகூட, மனித வரலாற்றில், நன்கு அறியப்பட்ட நாகரிகக் காலப்பகுதி என்று சொல்லப்படுகின்ற காலந்தொட்டு இன்றுவரை நாம் சேர்த்து வைத்துள்ள அனுபவத்தின்மீது பெருமளவு செல்வாக்குச் செலுத்திய, கட்டுப்படுத்திய காரணிகள் முற்றாகப் பொருளாதார இயல்பு கொண்டவையே அன்றி வேறல்ல. எடுத்துக்காட்டாக, வரலாற்றில் இடம்பெற்றுள்ள பெரும் பேரரசுகளில் பெரும்பாலானவை போர் வெற்றிகளாலேயே நிலைபெற்றுள்ளன. வெற்றி பெற்ற மக்கள், வெற்றி கொள்ளப்பட்ட நாட்டின் சிறப்புரிமை பெற்ற வர்க்கமாக சட்ட ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தம்மை நிலைநிறுத்திக் கொண்டனர். அந்நாட்டு நிலங்களின் மீதான ஏகபோக உரிமையை தமக்கென அபகரித்துக் கொண்டனர். தங்களுடைய ஆட்களையே அந்நாட்டில் மதக் குருக்களாய் நியமித்தனர். அம்மதக் குருக்கள் கல்வியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, சமுதாயத்தில் நிலவிய வர்க்கப் பிரிவினைகளை நிரந்தர சமூக அமைப்புகளாக மாற்றிவிட்டனர். அந்நாட்டு மக்கள் தமது சமுதாய நடவடிக்கைகளில் பின்பற்றக்கூடிய சமூக மதிப்புகளின் கட்டமைப்பை உருவாக்கினர். மக்கள் பெரும்பாலும் தங்களை அறியாமலேயே அதன்படி வழிநடத்தப்பட்டனர். ஆனால், தார்ஸ்டெயின் வெப்லென் (Thorstein Veblen) அவர்கள், மனிதகுல வளர்ச்சியில் ”கொள்ளைசார்ந்த காலகட்டம்” (predatory phase) என்று அழைக்கிற நேற்றைய வரலாற்று மரபை நாம் எங்கேயும் உண்மையிலேயே விட்டொழித்ததாகத் தெரியவில்லை. அந்தக் காலகட்டத்துக்குரிய அறியக்கூடிய பொருளாதார உண்மைகள் மற்றும் அவற்றிலிருந்து நாம் தருவிக்க முடிகிற விதிகளும்கூட வரலாற்றின் பிற காலகட்டங்களுக்குப் பொருந்தாதவை ஆகும். சோசலிஷத்தின் உண்மையான நோக்கம், துல்லியமாக, மனிதகுல வளர்ச்சியின் கொள்ளைசார்ந்த காலகட்டத்திலிருந்து விடுபடுவதும், அதனையும் தாண்டி முன்னேறுவதுமே ஆகும். பொருளாதார விஞ்ஞானம் இப்போதிருக்கும் நிலையில் வருங்கால சோசலிஷ சமுதாயம் பற்றி எதுவும் கூற இயலாத நிலைமையே உள்ளது.

Sunday, September 30, 2012

சிவாஜி கணேசனுக்கு பிரியாவிடை கூறல்

ஒரு பண்பாட்டாய்வியற் குறிப்பு 

-கார்த்திகேசு  சிவத்தம்பி -

சிவாஜிகணேசன் மறைந்து விட்டார் என்ற செய்தி தொலைக்காட்சி வழியாக வந்தபொழுது (21.07.2001) அது தமிழகத்தின் கடந்த மாத காலத்தின் அசாதாரண நிகழ்வுகள் பற்றிய நினைப்புகளுக்குள் அமிழ்ந்து விடும் போலவே இருந்தது.

ஆனால், வந்த நிகழ்ச்சிகள் அப்படி அமையவில்லை. மரணம் இயற்கை மரணம் என்றாலும், இழப்பு திடீரென வந்தது போலவும், அந்த இழப்பு சின்னதொன்றல்ல, மிகப் பெரியது, முழுத் தமிழகம் தழுவியது என்ற தொனியில் ஊடகங்கள் எடுத்துரைக்கத் தொடங்க அந்த எடுத்துரைப்பு தமிழுணர்வில் படியத் தொடங்க, அந்த மனிதன் மறைவுக்குள் தமிழ்ப் பண்பாட்டின் 'இனங்காணல்கள்' சில தொக்கி நிற்கின்றன என்பது புரியத் தொடங்கியது.

அரசியல் தன்னை ஒதுக்கியது கண்டு ஒதுங்கிப் போய் தன் நடிப்பும் தானும் என்றிருந்த சிவாஜிகணேசனுக்கு இறுதி மரியாதையாக வீரர்களுக்கு வழங்கப்படும் இறுதி கெளரவம் (துவக்குவேட்டு மரியாதை, 'லாஸ்ற்போஸற்' இசைப்பு) வழங்கப்பட்டது. சோகம் தமிழகத்தையும் தமிழ் பேசும் உலகத்தையும் தாண்டியது. அனைத்திந்திய சோகம் ஆயிற்று.

Saturday, September 29, 2012

இப்பெல்லாம் எவண்டா சாதி பார்க்கிறான் ?

Aadhavan Dheetchanya, one of the astonishing writers for reformative thoughts in Tamil, has composed this thoughtful song sung by Vaikarai Govindan troup. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளரும் புதுவிசை கலாசாரக் காலாண்டிதழின் சிறப்பாசிரியருமான ஆதவன் தீட்சண்யா அவர்களின் ஆக்கங்கள் மலையாளம்,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. In his blogs, books, speeches and videos, there are practical views on social inequalities. ஆதவன் தீட்சண்யா அவர்கள் இயற்றி உள்ள "இப்பல்லாம் எவன்டா சாதி பாக்குரான்னு அப்பாவி போலவே கேட்கிறான்' எனும் இந்த அருமையான பாடல் தமிழகத்தில் சமூக நீதிக்கும், பகுத்தறிவுக்கும் எள்ளளவும் இடமில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது! பாட்டின் நடுவில் வரும் "அம்பேத்கர் பெயரை பிள்ளைக்கு சூட்டி ஆனந்தம் கொள்பவர் எத்தனை பேர்?" என்ற கேள்விக்கு என்ன பதில் கூறலாம்? மிக முக்கியமான இந்த படலை அழகாகப் பாடியுள்ள வைகறை கோவிந்தன் குழுவினர் மிகவும் பாராட்டுதலுக்கு உரியவர்கள்! தமிழ் சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையை இந்த பாடலின் வரிகள் வி படம் பிடித்துக் காட்டுகின்றன! An inspiration to numerous youth belonging to the Scheduled Communities, Aadhavan Dheetchanya continues his dynamism in creativity for social change! Let us wish him all success!

Saturday, September 22, 2012

டேனிஸ் தலைவர்கள்… தமிழ் தலைவர்கள் இணைந்து நடாத்தும் வெற்றிப் பிரகடனம்..



டென்மார்க் மண்ணில் நின்று கடந்த 25 வருடங்களாக கலைப்பணியாற்றி வரும் அத்தனை கலைஞர்களும் பாராட்டப்படும் பெருவிழா.
அனைத்துக் கலைஞர்களும், படைப்பாளிகளும், சமுதாய சிற்பிகளும் மக்களால் கௌரவிக்கப்படும் பொன்னாள்.
ஒருவர் வெள்ளிவிழா கொண்டாடினால் அது அவருக்கு பெருமை ஆனால் அனைவரும் இணைந்து கொண்டாடினால் நம் அனைவருக்கும் பெருமை.
கலை நிகழ்ச்சிகளை வழங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்.. alaikal@gmail.com
மேலதிக விபரங்கள் வெகு விரைவில்…
காலம் : 22.09.2012 சனிக்கிழமை மாலை
இடம் : கேர்னிங் கலாச்சார இல்லம் Kulturallen – Herning

Wednesday, September 12, 2012

கூடங்குளம் நிகழ்வுகள் தொடர்பாக கூட்டறிக்கை


 கூடங்குளம் நிகழ்வுகள் தொடர்பாக  எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் கலைஞர்கள் செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை.
’’கடந்த ஓராண்டாக அறவழியில் நடந்துகொண்டிருக்கும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான இடிந்தகரை மக்களின் போராட்டம் தற்போது ஒரு முக்கிய கட்டத்தை அடைந்திருக்கிறது. சுதந்திர இந்தியா சந்தித்த மக்கள் திரள் போராட்டங்களில் முக்கியமான ஒன்று கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இந்திய தேசத்தின் ஆன்மாவை நோக்கி வலிமையான கேள்விகளை எழுப்பிய இந்தப் போராட்டம் இன்று அதிகாரத்தின் வன்கரங்களால் நசுக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கியிருக்கிறது. இந்த நிலையில் மக்கள் விடுதலையில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் போராடும் கூடங்குளம் மற்றும் இடிந்தகரை மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியது தார்மீக கடமை என்று நம்புகிறோம்.

எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்களாகிய நாங்கள் இடிந்தகரை மக்களுடன் நிற்கிறோம் என்பதை தெரிவிக்க விரும்புகிறோம்.  மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மக்கள் அரசாங்கம் என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால் ஜனநாயக விழுமியங்களை காற்றில் பறக்கவிட்டு, அறவழியில் நின்று போராடிய  இடிந்தகரை மக்கள் மீது இன்று மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் சர்வாதிகார அடக்குமுறையை ஏவியிருப்பதும் , கடந்த செப்டம்பர் 10 அன்று நடந்த முற்றுகைப் போராட்டத்தில் அந்த மக்கள் மீது கண்ணீர்ப் புகைகுண்டு வீசியும், தடியடி நடத்தியும் தாக்குதல் நடத்திய காவல்துறையினரின் அராஜகமும், குலசேகரப்பட்டினத்தில் அந்தோணி என்கிற மீனவர் பலியாகக் காரணமான துப்பாக்கிச்சூடும்  கடும் கண்டனத்துக்குரியது.

Tuesday, September 04, 2012

கட்டியகாரனைத் தொலைத்த தென்மோடி

-மெலிஞ்சி முத்தன் -


ஈழத்தமிழரின் பாரம்பரியக் கலை வடிவங்களில் ஒன்று. கூத்துக் கலை ஆகும்.   கிராமியக் கலை, அல்லது நாட்டார் கலைவடிவம் என்ற சொற்களால் புரிதலுக்கு உட்படுத்தப்படும் இக்கலை/ வளர்ச்சிகுன்றிப் போனமைக்கான காரணங்களில் ‘நாட்டார்’ என்ற சொல்லுக்குப் பின்னால் இருந்த மனோநிலையும் ஒருவகைக்காரணம் எனலாம். முற்காலத்தில் வாழ்ந்தவர்கள் பொழுதுபோக்காகவும், தங்களது களைப்பைப் போக்கும் செயற்பாடாகவும் ஒரு முற்றத்தில் ஒன்று கூடி ஆடிப்பாடி மகிழ்ந்தனர் என்றும், கூத்து என்கின்ற சொல்லே குதித்தல் என்ற சொல்லிலிருந்து தோன்றியிருக்கலாம் என்றும் சிலர் சொல்வதுண்டு. அதுவே நாளடைவில் பல்வேறு பரிணாமங்களைப் பெற்று பின்னர் வளர்த்தெடுக்கப்பட்ட வடிவங்களாகவும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.




ஈழத்துக் கூத்தில் தென்மோடி,வடமோடி,காத்தவராயன், பேய்க்கூத்து, வசந்தன் கூத்து என்று பலவகைக் கூத்துகள்  இருந்தாலும். நான் இங்கு பேசுபொருளாகக் கொண்டிருப்பது ‘தென்மோடிக் கூத்து’ என்ற வகையிலான கூத்தையும், அக்கூத்தின் சமூகப் பின்னணி பற்றியுமேயாகும்.
 தென்மோடிக் கூத்தினை இன்று பெரும்பாலும் கடலோரப் பகுதிகளிலேயே  காணக்கூடியதாக இருக்கின்றது மாதகல், மெலிஞ்சிமுனை, பாசையூர், குருநகர், நாவாந்துறை, சில்லாலை, போன்ற இடங்களில் ஆடப்படும் இக்கூத்து ஒவ்வொரு கிராமத்திலும் வித்தியாசமான பாங்கினைக் கொண்டதாகவே இருக்கின்றது,


Saturday, August 25, 2012

கவிதாவின் கறுத்தப்பெண்

“கறுத்தபெண் - நான் தவறுகள் செய்ய மறுக்கப்பட்டவள்"
 பேராசிரியர் சண்முகரட்ணம் அணிந்துரை:-
"இந்தக் தொகுப்பில் பெரும்பாலான கவிதைகளில் கூர்மையான சமூக விமர்சனங்கள் பொதிந்துள்ளன. இக்கவிதைகளை வரையும் போது கவிதா என்ன நோக்கத்தைக் கொண்டிருந்தார் என அவரிடம் கேட்பதைவிட அவர் எழுதிய வரிகள் எத்தகைய சிந்தனைகளை நம்முள்ளே தூண்டுகின்றன என்பதே முக்கியமெனலாம்."

தாழ் உடைக்கும் கவிதைகள்
கவித்துவமின்றிக் கவிதை தோன்ற முடியாது. ஆனால் கவித்துவமாகக் கவிஞர் எதைச் சொல்கிறார் என்ன சேதிகளைத் தர முயற்சிக்கிறார் என்பது முக்கியமென்பதை அழுத்திக் கூறத்தேவையில்லை. கவிதாவின் கவிதைகள் அழகானவை, அவற்றில் பெரும்பாலானவை ஆழமானவை. அழகும் ஆழமும் மிக்க கவிதைகள் நிறைந்த இந்தத் தொகுப்பினைப் படித்து மகிழும் சந்தர்ப்பத்தினைக் கொடுத்தமைக்காகக் கவிதாவிற்கு எனது நன்றிகள். ”கறுத்தபெண்”  கவிதைகளை இயற்றிய கவிதாவிற்கு எனது பாராட்டுக்கள்.
தன் கனவுகளுக்குக் கதவடைப்புகள் போடப்படும் தருணங்களில் கவிதைகள் தாழ் உடைக்கின்றன என்கிறார் கவிதா. இவரது கவியாற்றல் ஒரு கதவற்ற பிரபஞ்சத்தின் திறவுகோலாகிறது. அங்கே தங்குதடையின்றி கவிதைமழை பொழிகிறார் கவிஞர்.
இந்தத் தொகுப்பில் உள்ளடங்கிய கவிதைகள் மனித உறவுகளின் முக்கிய அம்சங்களைக் கருப்பொருட்களாகக் கொண்டுள்ளன. தனி மனிதரின் அனுபவங்கள், உணர்வுகள் இயற்கையாகவும் தெளிவாகவும் அவற்றின் சமூகத் தன்மைகளுடன் வெளிப்படுகின்றன. ஆண்- பெண் உறவு, பெண்களின் சமூக இருப்பு, காதலின் பல்வேறு அர்த்தங்கள் பல கவிதைகளின் பொருட்களாகின்றன.
’நான் பெய்யெனப் பெய்யும் மழை’ எனும் தலைப்பினைக் கொண்ட முதலாவது கவிதை பல்லாண்டு காலமாகத் தமிழராய் புனித கோபுரத்தில் வைத்துப் பூசிக்கப்படும் திருக்குறள் மீது ஒரு போர் பிரகடனத்தை வீசுகிறது.
வள்ளுவா!
உன்னுடன் கொண்ட
முரண் பாடொன்று
முறிந்து விட்டது
உண்மைதான்
ஓம்
நான் பெய்யெனப் பெய்யும்
மழை!
என ஆரம்பிக்கும் கவிதை தொடர்கிறது
கலைந்த கூந்தலோடு
உம்மையும்
பெண் கற்பைப்பாடும்
உம்மொத்த புலவர்களையும்
பிடுங்கியெறிய
என் மழை எழுகிறது
எனச் சவால்விட்டுப்; பின் வருமாறு முடிகிறது இந்தக் கவித்துவப்போர் பிரகடனம்
நான் பெய்யெனப் பெய்யும்
மழையாய்
கட்டுக்கடங்பாதென் கவிதை
நான் பாயெனப் பாயும்
இந்தக்கவிதையின் நோக்கம் திருக்குறளை அவமதிப்பதெனப் பார்ப்பதைவிட அது நியாயப்படுத்தும் ஆண்-பெண் அசமத்துவ விழுமியத்தினைக் கேள்விக்குள்ளாக்கி நிராகரிக்கிறது எனக் கொள்வதே பொருத்தமானதாகும். ஆணாதிக்கம் நமது சமூகத்தில் நிறுவன ரீதியில் தொடர்வதை மறுக்க முடியாது.
புனிதப்படுத்தப்பட்ட தொன்மைமிகு ஒழுக்கவியல் நூல்களும் மதத்தின் பெயராலும் மரபின் பெயராலும் பெண்கள் மீது திணிக்கப்படும் சடங்குகளும் கட்டுப்பாடுகளும் விமர்சிக்கப்படுதல் சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் வலுப்படுத்தும் விழுமியங்களின் பரிணமிப்புக்கும் முற்போக்கான சமூக மாற்றத்தின் நகர்ச்சிக்கும் அவசியமான செயற்பாடாகும். இந்தச் சிந்தனைப்போக்கு இந்தத் தொகுப்பின் பல கவிதைகளில் இழையோடக் காணலாம். இது ஒரு அரசியல் சுலோகமாகவோ அல்லது அறிக்கை ரீதியான வாசகமாகவோ வரவில்லை. கவிதைகளைப் படித்து சற்று ஆழச் சிந்தித்தால் இந்தக் கருத்துக்கள் தோன்றலாம். இது எனது வாசிப்பு.
பெண்ணின் சமூக நிலை, காதல், கற்பு நிலைபற்றி மீண்டும் அதே கருத்துக்களை வலியுறுத்துவது போல் அமைந்துள்ளது ”சொன்ன சொல் மாறாமல்” என்ற கவிதை. இதன் இறுதி வார்த்தைகளைப் பாருங்கள்
தயவுசெய்து
காலாகாலமாய் கட்டிவரும்
கற்பு என்றால் என்ன, என்பதை
கறுத்தபெண் என்ற
என் முகவரிக்கு
வந்து சொல்லுங்கள்
இந்தக் கவிதைத் தொகுப்பின் தலைப்பு கறுத்தபெண் தவறுகள் செய்ய மறுக்கப்பட்டவள் எனக் கூறுகிறது. அதே நேரம் கறுத்தபெண்ணாயிருந்தால் மட்டுமல்ல இந்த மறுப்பு அவள் அவள் சிவப்புப் பெண்ணாக மாறினாலும் கட்டுப்பாடுகள் மாறுவதில்லை எனும் உண்மையையும் காட்டுகிறது.
இதை மேலும் ஆழப் புலப்படுத்துகிறது “நாங்கள் காவும் பெட்டகம்” எனும் கவிதை. அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என ஆணாதிக்கம் வரித்த நாற்குணங்களும் பெண்மையின் ஒருமித்த இலக்கணமென்று அவளை அதன் பெட்டகமாக்கிப் பொன்விலங்கு பூட்டியுள்ளது சமூகம். காதலாக ஆரம்பிக்கும் உறவும்
படிப்படியாக ஆக்கிரமிப்பாக மாறலாம் என்பதை நயம்படக் கூறுகிறது இன்னொரு கவிதை.
இந்தத் தொகுப்பில் வேறு விடயங்களும் கையாளப்படுகின்றன. உதாரணத்திற்கு ‘சித்தப்பாவும் சில கேள்விகளும்’ எனும் கவிதை வாசகரை தாயகத்தின் போர்க் கொடூரங்கள் மிகுந்த காலகட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. சித்தப்பாவிற்கு நடந்தது என்ன.
..
ஈரம் சொட்ட சொட்ட
அரைக்குளியலுடன்
யார் யாரோ துரத்த
ஓடிய ஒருநாள்…
பின் கோடி மதிற்சுவரை
தாண்டிய பின்
தகவல் எதுமில்லை
இந்தக் கவிதையின் முடிவு மனதை
மிகவும் தொடுவதாயுள்ளது
எந்த மதிலையும்
பழஞ் சுவரென்று இடித்துவிடாதீர்
அத்துவாரங்களினூடு பார்க்கவேண்டும்
ஏதாவது தகவல் வரலாம்
என்னைக் கவர்ந்த வேறு பல கவிதைகளும் இங்கே உண்டு. இந்தக் தொகுப்பில் பெரும்பாலான கவிதைகளில் கூர்மையான சமூக விமர்சனங்கள் பொதிந்துள்ளன. இக்கவிதைகளை வரையும் போது கவிதா என்ன நோக்கத்தைக் கொண்டிருந்தார் என அவரிடம் கேட்பதைவிட அவர் எழுதிய வரிகள் எத்தகைய சிந்தனைகளை நம்முள்ளே தூண்டுகின்றன என்பதே முக்கியமெனலாம். இந்த வகையில் ஒருவரின் ஆக்கம் சமூகத்தில் வெளிவந்ததும் அது தனக்கென ஒருவாழ்வைப் பெற்றுக் கொள்கிறது என்பதை மறந்திடலாகாது. அதன் பிரசுரம் அதை ஆக்கியவரிடமிருந்து விடுவித்து விடுகிறது என்றும்
அர்த்தப்படுத்தலாம்.
கவிதாவின் கவிதைகள் வாசகர்களுக்கூடாக ஒரு திறந்த அரங்கிற்குள் வந்துவிட்டது. அங்கே அவை பற்றிய விளக்கங்களும் விவாதங்களும் தொடர வேண்டும் என வாழ்த்தி கவிதாவுக்கு மீண்டும் பாராட்டுகளைத் தெரிவிக்கின்றேன்.
நன்றி:பேராசிரியர் ந. சண்முகரத்தினம்

Thursday, August 23, 2012

நூல் அறிமுகம்

தோழர் MC லோகன் இன் கவிதை தொகுப்பு வெளியீடும் - அரசியல் நிகழ்வும் டென்மார்க் இல் நடக்கவிருக்கிறது .
 

Wednesday, August 08, 2012

உயிர் நிழல் 35வது இதழ் வெளிவந்துள்ளது

, சுல்பிகா இஸ்மாயில், பா. துவாரகன், சேரன், இராகவன், ஆழியாள், றியாஸ் குரானா, லஷ்மி, வி. சிவலிங்கம், ரிஷான் ஷெரீப், ஜிஃப்ரி ஹாசன், ரதன், எம்.பௌசர், ஸர்மிளா செய்யித், சு. குணேஸ்வரன், அஜாதிகா, ஆகியோரின் படைப்புக்கள் வெளிவந்துள்ளன.

Wednesday, August 01, 2012

விடியல் சிவா நினைவுகள்

-ந.சுசீந்திரன்-
தோழர் விடியல் சிவா அவர்கள் எனக்கு 1990 களின் நடுவாக்கில் அறிமுகமாகியிருக்கலாம். அவரைத் தோழர் எஸ்.வி.ராஜதுரை அவர்கள் வீட்டில் தான் முதன்முதலில் பார்த்த ஞாபகம். அப்போதெலாம் அதிகாலையிலேயே யாராவது இளந்தோழர்கள் எஸ்.வி.ராஜதுரை அவர்களது வீட்டுக்கு வந்து விடுவார்கள். தலைகுனிந்து கண்களை அரைப்பங்கு மூடியபடி எஸ்.வி. ஆர் பேசத்தொடங்கினால் அது மடைவிட்ட வெள்ளம் போல் ஓடியபடியிருக்கும். அப்படியொரு காலையில் தான் விடியல் சிவா அவர்களைக் கண்டேன். பெரியார் :சுயமரியாதை சமதர்மம் நூலின் பதிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தகாலம் அது. அப்பொழுது அவர் அறியப்பட்ட முற்போக்குப் பதிப்பாளராக இருந்தார். வெற்றிலை போடுவதும், வியர்க்கும் போது அவர் கையில் வைத்திருக்கும் பையொன்றினுள் இருக்கும் துண்டை எடுத்து முகம் துடைத்துக் கொள்வதும், எப்பொழுதும் குமிண்சிரிப்பொன்றைத் தாங்கி நிற்பதும் சிவாவின் அடையாளங்கள்.

அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற தமிழினி மகாநாட்டில் அவரைக் காணும்போது எங்கள் உறவும் நெருக்கமும் அதிகரித்திருந்தது. காரணம் தோழர் தண்டபாணி, தோழ
ர் கல்யாணி ஆகியோரின் ஒரே மகள் சுமித்திரா பெர்லினில் எங்கள் பவானி அக்காவின் மகன் கிருபாவை மணம்புரிந்திருந்திருந்தார். தமிழினியின் தொடக்க நாளில் பாண்டிச்சேரி எம். கண்ணன், வ. கீதா, விடியல் சிவா, நான் மற்றும் கவிஞர் சு.வில்வரத்தினம் ஆகியோர் காலைப்பொழுதொன்றின் மரநீழல் தந்த தரையிலமர்ந்து ஈழ நிலைமைகளை சு.வி அவர்கள் தன் பாணியில் தெளிவுபட விவரித்துக்கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்தோம். பின்னர் நிலாந்தனின் „முல்லைக் காடே, முல்லைக் காடே…“; மு.பொன்னம்பலத்தின் „மார்கழிக்குமரி…; “நீலாவணனின் „ஓ..ஓ..வண்டிக்காரா…“ போன்ற பாடல்களை சு.வியின் அதிசய உணர்குரலிசையில் கேட்டு லயித்திருந்ததையும் விடியல் சிவா அவற்றுக்குத் தலையசைத்து நின்றதையும் இப்பொழுது எண்ணிப்பார்க்கின்றேன்.

Tuesday, July 24, 2012

நகைச்சுவைச் சிங்கம் நினைவுகளை எழுதித்தான் கடக்க வேண்டும் ...

- கரவைதாசன் -

யாழ் புங்கங்குளம்வீதி பாண்டியந்தாழ்வை பிறப்பிடமாக கொண்டு  நெதர்லாந்தில் வாழ்ந்து வந்த "நகைச்சுவை சிங்கம்" தம்பிமுத்து தவரத்தினம் அவர்கள் பிரான்சில் 24.06.2012 இறப்பெய்தினார்.  சிறந்த நாடகநடிகர், நாடக கதாசிரியர் வசனகர்த்தா, நாடக இயக்குநர், சிலைவடிக்கும் சிற்பி, பயிற்றப்பட்ட கடச்சல் தொழில் நிபுணர், முகாமைத்துவப் பொறுப்பாளர்  எனப் பல்வேறு பரிமாணங்களையும் ஆளுமைகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு உன்னத கலைஞன் அந்நிய தேசமொன்றில் யாருமறியாச் சக மனிதனாய் மரிணித்து போவது போலோரு கொடுமை, வேறெந்த மொழிச் சூழலிலுமில்லை. 
காட்டுவிளைச்சலாய் வியாபித்துப் போயிருக்கும் தமிழ்பேசும்  பெரும் ஊடகங்களுக்கு இச்செய்திகள் எட்டுவதில்லைதான். பல்வேறுபட்ட அரசியல் காரணிகளினால்  இவரைப்போன்ற பலரின் சுவடுகள் புகலிடச் சூழலில் அறியாப் பொருளாய் அற்ப மனிதர்களாய் மறைந்து போதல்  உண்மையில் கொடுமை!  வரலாற்றின் சில பக்கங்களைத்தன்னும் நம்மால் முயன்று  பதிதல் வேண்டும். இல்லையேல்   அஃது இவர்களது  சாவின் கொடுமையிலும்  கொடுமையாய் அமைந்துவிடும்.
ஈழத்தில் அளவெட்டியில் தம்பிமுத்து கனகம்மா தம்பதிகளின் தலை மகனாக   நண்பர் தவரத்தினம் அவர்கள் 05.10.1950ம்  ஆண்டு பிறந்தார். அவரது ஆரம்பக் கல்வியை பாசையூர் சென்யோசாப் கல்லூரியில் ஆரம்பித்த அவர், தொடர்ந்து கொழும்புத்துறை  இந்துமகா வித்தியாலயத்தில் தனது இடைநிலை கல்வியினை கற்றார். முத்திரைச் சந்தி புரோ மோட்டார் கொம்பனியில் தொழில்  கல்வியை கற்றுக் கொண்டு அங்கேயே முகாமைத்துவப்  பொறுப்பாளராக  கடமையாற்றினார். இடையே யாழ் அத்தியடியில் இயங்கி வந்த  ஸ்கைலாக் என்ஜினியரிங் கொம்பனியிலும் அதே தொழிலில் இருந்தார். யாழ் பாண்டியந்தாழ்வை சேர்ந்த லில்லி மலர் என்ற பெண்ணை காதல்மணம் புரிந்து இனிய காதலின் பேறாக சேர்ஜன், ஷர்மிலி, தமிழினி, மதீபன் என நான்கு பிள்ளைகளை பெற்றார்கள்.

சிறுவயதினிலேயே யாழ் கொழும்புத்துறையைச் சேர்ந்த நாடக இயக்குநர் தலைவர் அருளானந்தம் அவர்களின் "இறுதிவார்த்தை" எனும் சமூகநாடகத்தில் நடித்து,  தனது கலைப் பயணத்தினை தொடர்ந்த இவர். முடிவில் ஓர் ஆரம்பம், பரந்தர் பத்தாயிரம், அன்பின் பெருமை,பரிவும் பிரிவும், சிட்டுக்குருவி,  நான் ஒரு பெக்கோ, மாலிக்கபூர், பிஞ்சகடகம் என பல்வேறுபட்ட நாடகங்களில்  சிறுவன், பெரியவன், அரசன், ஆண்டி ,கோமாளி என வேறுபட்ட பாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளார்.

Wednesday, July 18, 2012

மலேசியஇலக்கியம் பீர் முஹம்மது

லாயா நாட்டின் தொடக்ககால வரலாற்றை ஆராயும் எவரும் யாழ்பாணத் திலிருந்து குடிபெயர்ந்து போன தமிழர்கள், மலாயாவின் எல்லாப் பகுதிக்கும் பரந்து சென்று அங்கிருந்த நிர்வாகத்திற்கும், அடிமட்ட தொழிலளர்களுக்கும் இடையில் மேலாளராக பணியாற்றினார்கள், என்பதற்கப்பால் தேடுவதில்லை.  அவங்கள் என்ன பண்ணினாங்கள்? என்பதற்கு பல தகவல்கள்  இக் காணொளியில்............

Monday, July 16, 2012

விம்பம் 7வது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா


ஆளும்வர்க்க அதிகாரத்தின் ருசி நன்கு தெரிந்தவர்களாக முஸ்லீம் அரசியல் பிரதிநிதிகள்

Fauzer
-எம் .பௌசர்-
கிழக்கில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில், சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆளும் அரசாங்க கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது என அக்கட்சித் தலைமை எடுத்துள்ள அரசியல் தீர்மானம் முஸ்லீம்,தமிழ் அரசியல் வெளியில் வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளதனை காணக் கூடியதாக உள்ளது.

முஸ்லீம் மக்களின் அரசியல் உரிமைக்காகவும்,சமூக பாதுகாப்பினை வலுப்படுத்தி உறுதிப்படுத்துவதற்காகவும் ஸ்தாபன மயமான இவ்வியக்கம், மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் இக்கட்சியை வழிப்படுத்தும் வரை,முஸ்லிம்களின் தேசிய அரசியல் இயக்கத்தின் இடத்தினை இலங்கை முஸ்லிம்களுக்குள் ஓரளவு பூர்த்தி செய்கின்ற அரசியல்பண்புகளுடனும் தனது அரசியல் போக்கினை முன்னெடுத்து வந்திருக்கிறது.


அஷ்ரப் அவர்களின் அகால மறைவின்பின் நீடித்த உட்கட்சி அரசியல் முரண்பாடுகளினால், காலத்திற்கு காலம் முஸ்லீம் காங்கிரஸ் கட்சி சிதறுண்டு பல்வேறு குட்டிகுட்டி தலைமைகளின் கீழும்,பிராந்தியத் தலைமைகளின் கீழும் பல அரசியல் கட்சிகளாக மாறின. பேரியல் அஷ்ரப் தலைமையில் தேசிய ஐக்கிய முன்னணி,அதாஉல்லா தலமையிலான தேசிய காங்கிரஸ், ரிசாத் தலைமையிலான அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் என கட்சிகளின் அடையாளங்களும் தலைவர்களின் பெயர்களும் அதிகரித்தன.என்னதான் கட்சி பல்வேறு அணிகளாகப் பிரிந்தாலும், முஸ்லிம்களுக்கான தேசிய அரசியல் தலைமையாக முஸ்லிம் காங்கிரஸ் நீடித்ததற்கு அதனுடைய ஸ்தாபன பெறுமானமும்,அக்கட்சி உருவானதன் தேவையும் நோக்கமும் பின்புலமாக இருந்து வந்துள்ளன.

Wednesday, July 11, 2012

உலகின் புதிய ஒழுங்கில் மண் மீட்ப்புப் போராட்டங்கள்

-இதயச்சந்திரன்-
உலகின் புதிய ஒழுங்கில், நிலத்திற்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
மூலவளச் சுரண்டலிற்காக, வர்த்தகச் சந்தைக்காக வல்லரசுகளும் முட்டி மோதிக் கொண்டிக்கின்றன.
பெருந் தேசிய இனவாத ஆட்சியாளர்களும் தமது இறைமையை  நிலை நிறுத்திக் கொள்ள, பூர்வீக தேசிய இனங்களின் நிலங்களை ஆக்கிரமிக்கின்றார்கள்.

அகண்ட பார்வையில், உலகப் பொருளாதாரத்தின் எண்பது சத வீதத்தைக் கொண்ட முதலாளித்துவ முறைமை, நில ஆக்கிரமிப்பின் பின் புலத்தில் நின்று செயற்படுவது தெரிகிறது.
 தேசிய பாதுகாப்பிற்கும் மூலவளச் சுரண்டலிற்கும் தென் சீனக் கடலில் தீவுகளுக்கு உரிமை கோரும் சீனா, வியட்னாம், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளைக் காணலாம்.
மலை வாழ் மக்களை அவர்களது பிரதேசங்களிலிருந்து விரட்டி அடித்து கனிம வள சுரண்டிலிற்காக அரசோடு கைகோர்க்கும் பன்னாட்டு கம்பனிகளை இந்தியாவின் மத்திய பகுதியில் பார்க்கலாம்.திருமலைத் துறை முகத்தில் முதலீடு செய்யும் பல் தேசியக் கம்பனிகளின் நகர்வு, சம்பூர் மண்ணை ஆக்கிரமிக்கிறது என்கிற செய்தியை கடந்த வாரம் கண்டோம்.


முதலீட்டு ஆதிக்கம் நாட்டின் பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்தும் அதேவேளை, ஒடுக்கு முறைக்கு உள்ளாகும் தேசிய இனங்களின் நிலங்களையும் கபளீகரம் செய்கிறது.
மனித உரிமை மீறல் குறித்துப் பேசும் வல்லரசாளர்கள், நில ஆக்கிரமிப்புக் குறித்து வாய் திறப்பதில்லை.

வல்வை கடலோடிகள் நூல் வெளியீட்டு விழா

இந்த நூலை கனடாவில் வாழ்ந்து காலஞ்சென்ற ஈழத்து பூராடனார் எழுதியுள்ளார்..
இங்கிலாந்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாலை வல்வை நலன்புரிச் சங்கம் பிரித்தானிய ஆதரவில் வல்வை கடலோடிகள் என்ற வரலாற்று ஆவண நூல் வெளியீடு செய்யப்பட்டது. இந்த நூலை கனடாவில் வாழ்ந்து காலஞ்சென்ற ஈழத்து பூராடனார் எழுதியுள்ளார். ஈழத்து பூராடனார் வல்வையைச் சேர்ந்தவர் என்பதால் அவர் தன்னால் திரட்ட முடிந்த தகவல்களை எல்லாம் ஒன்று திரட்டி ஆவணப்படுத்தியுள்ளார். இவரோடு மேலும் பலர் துணை நின்றுள்ளனர்.
கனடாவில் வல்வை தொடர்பாக நடைபெறும் பல்வேறு ஆவணப்படுத்தல் முயற்சிகளில் காலம் சென்ற அ.சி.விஷ்ணுசுந்தரம் நினைவு மையமூடாக அவர்கள் நினைவாக தற்போது கனடாவில் வாழ்ந்து வரும் அவருடைய புதல்வர் வி. அருட்செல்வம் ( விஷ்ணு ) இதை வெளியீடு செய்துள்ளார்.
இந்த வெளியீட்டு நிகழ்வில் வல்வையின் கடலோடிகள், கேப்டன் பணியாற்றிய பலர் பங்கேற்று சிறப்பித்தது கவனத்தைத் தொட்டது. கேப்டன் துரைலிங்கம் அவர்களுடைய பாரியார் விளக்கேற்றி நூல் வெளியீட்டு விழாவை ஆரம்பித்து வைத்தார். வல்வையின் அன்னபூரணி அமெரிக்கக் கரையை தொட்ட சாதனையை நூல்வடிவாக்கிய திரு. ரீ. இராஜகோபாலும் கலந்து சிறப்பித்தார். மேற்கண்ட நூலின் முதல் வெளியீட்டு நிகழ்வு கனடாவில் நடை பெற்றது குறிப்பிடத்தக்கது.
புலம் பெயர்ந்து வந்தாலும் தாய் மண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆவலில் எடுக்கப்பட்ட இந்த முயற்சி மிகவும் பாரமானது, அதை சிறப்பாக செய்த விஷ்ணு அவர்கள் தமிழ் சங்கத்தால் பாராட்டி கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

நன்றி: அலைகள்

Sunday, June 10, 2012

தேசவழமைச்சட்டமும் சாதியமும்

- ராகவன்- 

சாதியம் தென்னாசிய சமூகங்களிற்கான தனித்துவமான பண்பாகயிருக்கிறது.  சமூக, பொருளாதார, அரசியல், பண்பாடு என அனைத்துத் தளங்களிலும் இச்சமூகங்களில் சாதி கலந்திருக்கிறது.  யாழ்ப்பாணச் சாதிய அமைப்பின் அரசியல் பண்பாட்டுக் கூறுகள் பற்றி ஒரளவுக்கு எழுதப்பட்டிருக்கின்றன.எனினும்  சாதியத்திற்கும் நில உரிமைக்கும்  உள்ள சட்டரீதியான முண்டுகொடுத்தலை பற்றிய ஆழமான ஆய்வு எதுவும் வந்ததாகதெரியவில்லை.சட்டத்தின் முன் எல்லோரும் சமம் எனற மாயக்கண்ணாடியின் பின் சாதிய மேலாதிக்கமும் சனாதனமும் தேசவழமைச் சட்டத்தைஎவ்வாறு வடிவமைத்திருக்கின்றன என்பது ஆய்வுக்குரிய பொருள். இக்கட்டுரை ஒரு முழுமையான ஆய்வு அல்ல. ஆனாலும் ஒரு ஆரம்ப விவாதத்திற்கான கருப்பொருளாக இக்கட்டுரை இருக்குமென நம்புகிறேன்.

Wednesday, May 30, 2012

இலங்கையில் தமிழ் இலக்கியம் சார்ந்த மாநாடுகளை தமிழகம் ஏன் புறக்கணிக்கிறது?

International Tamil Writers Forum
சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்
 P.O.BOX 350,Craigieburn,Vic-3064 ,AUSTRALIA T.Ph: 00 61 3 9308 1484
                            E.Mail:international.twfes@yahoo.com.au
ஊடக அறிக்கை:

இலங்கையில் தமிழ் இலக்கியம் சார்ந்த மாநாடுகளை தமிழகம் ஏன் புறக்கணிக்கிறது?
  
போருக்குப்பின்னர் ஈழத்தமிழ் இலக்கியம் உயிர்ப்புப்பெறவேண்டாமா?
இலக்கிய உறவுக்கு நீட்டும் கரத்தை துண்டிக்கவேண்டாம் !
சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் அமைப்பாளர் முருகபூபதி அறிக்கையூடாக வேண்டுகோள்.
murugapoobathyஇலங்கையில் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் சார்ந்த எந்தவொரு விழாவோ ஆய்வரங்கோ அல்லது மாநாடோ நடைபெற்று அவற்றுக்கு தமிழக எழுத்தாளர்களை தமிழ் அறிஞர்களை அழைத்தால்  முதலில் தமிழ்நாட்டிலிருந்தே  எதிர்ப்புக்குரல் வந்துவிடுகிறது.
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் போர் முடிவடைந்ததைத்தொடர்ந்து போர்க்குற்றம் நிகழ்ந்த இலங்கையில்; தமிழ்மொழி சார்ந்த ஒன்றுகூடல்களை தமிழ்நாட்டில் சந்தேகக்கண்கொண்டு பார்ப்பது வழக்கமாகிவிட்டது.இலங்கையில் கொழும்பில் நடக்கும் எந்தவொரு பொது நிகழ்ச்சியும் இலங்கை அரசின் ஆதரவுடனும் ஆசியுடனும்தான் நடப்பதாக கற்பனைசெய்துகொண்டு அறிக்கை விடுவதும் வழக்கமாகிவிட்டது.
2011 ஆம் ஆண்டு சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் கொழும்பில் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடத்தவிருந்தவேளையிலும் தமிழகத்திலிருந்து எதிர்ப்புக்குரல் ஓங்கி ஒலித்தது.எனினும் குறிப்பிட்ட மாநாட்டில் சில எழுத்தாளர்கள் உட்பட சில  சிற்றிதழ் ஆசிரியர்களுமாக  சுமார் ஐம்பதுபேரளவில் தமிழ்நாட்டிலருந்து வந்து கலந்து சிறப்பித்தனர்.
குறிப்பிட்ட மாநாடு தொடர்பான முதலாவது ஆலோசனைக்கூட்டம் கொழும்பு தமிழச்சங்கத்தில் 2010 ஜனவரி முதல் வாரம் நடந்தது. தமிழக சிற்றிதழ்கள் சிலவற்றிலும் நடைபெறவிருக்கும் மாநாடு பற்றிய செய்திகள் வந்தபின்பு, சுமார் ஆறுமாதங்கள் கடந்த நிலையில் எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன.

Friday, May 25, 2012

கசகறணம் நாவலுக்கு விருது!

நண்பர் விமல் குழந்தைவேலுவின் கசகறணம் நாவலுக்கு 2011ம் ஆண்டுக்கான நாவல் விருது கிடைத்துள்ளது!

-எம் .பௌசர்-
 
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்( தமுஎகச) ஆண்டுதோறும் அந்தந்த வருடத்தில் வெளியான கலை இலக்கிய படைப்புகளுக்கு விருது வழங்கி வருகிறது.

கவிதை,சிறுகதை, நாவல்,தமிழ் வளர்ச்சிக்கான ஆய்வு, மொழிபெயர்ப்பு, விளிம்புநிலை மக்களுக்கான எழுத்துகள் ,மற்றும் படங்கள்,குறும்படங்களுக்கு துறைசார் விருதுகள் வழங்கப்படுகிறது.

நாவலுக்கான சிறந்த விருது , விமல் குழந்தைவேலுவின் கசகறணம் நாவலுக்கு கிடைத்துள்ள செய்தியினை சற்றுமுன்தான் அறிந்து கொண்டேன். எனது மகிழ்ச்சியினை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன். விமலுக்கு எனது வாழ்த்துக்கள்!

விரிந்த கதை வெளியில் ,போருக்குள் சிக்குண்டு சிதைந்தழிந்த தமிழ் முஸ்லீம் மக்களின் வாழ்வை அம்மக்களின் மொழியில், அதன்கலை அனுபவத்தோடு , கண்ணீரோடு ,ஆவேசத்தோடு தமிழ் முஸ்லீம் மக்களின் இணைந்த வாழ்வை நேசிக்கின்ற ஒரு நேர்மையான கலைஞனின் உளத்துயரத்தோடு விமல் குழந்தைவேல் எழுதியிருந்தார்.

Sunday, May 20, 2012

தொலைக்காட்சி விவாதத்தில் பொறுமை இழந்தார் / மேற்கு வங்க முதல்வர்

கொல்கத்தாவில் நடைபெற்ற CNN-IBN இன் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி, பல்கலைக்கழக மாணவிகளின் கேள்விகளில் அதிருப்தி அடைந்து நிகழ்ச்சியின் பாதியிலேயே எழுந்து சென்ற நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறிக்கொண்டிருந்தார் மமதா பானர்ஜி. அப்போது ஜாதாவ்பூர் பல்கலைக்கழக மாணவி ஒருவர், மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருக்கிறதே என கேள்வி எழுப்பினார்.


மற்றொருவர் கார்டூன் வரைந்தற்காக பேராசிரியர் அம்பிகேஷ் மகாபாத்ராவை கைது செய்தது ஏன் என கேள்வி எழுப்பினார். அது கார்டூன் அல்ல. சைபர் கிரைம். என்னை கொலை செய்வதற்கான சதி முயற்சி. குறித்த பேராசிரியர் மார்க்சிஸ்ட் கட்சியின் ஏஜெண்டுக்களில் ஒருவர்.



அவர் அதை 60 பேருக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளார். கடந்த தேர்தலின் பின்னர் மார்க்ஸிஸ்ட் கட்சி, 1000 ற்கு மேற்பட்ட சீ.டி க்களை வெளியிட்டு என்னை அவமானப்படுத்தியது. மாவோயிஸ்டுக்களும் - மார்க்ஸிட் கட்சியும் ஒன்றாக இணைந்து செயற்படுகின்றன என மமதா பதில் அளித்தார்.


அத்துடன் திடீரென கோபமடைந்த அவர், ஏன் எல்லோரும் மாவோயிஸ்டுக்கள் தொடர்பான கேள்விகளையே எழுப்புகிறீர்கள். மாநிலத்தில் பேசுவதற்கு வேறு எந்த விடயமும் இல்லையா? வேறு பல்கலைக்கழக மாணவர்களை இந்நிகழ்வுக்கு அழைக்கவில்லையா? என்றார்.


நீங்கள் மாவோயிஸ்டு இயக்கத்தை சேந்தவரா என குறித்த மாணவியை பார்த்து பதில் கேள்வி எழுப்பினார். என்னால் மாவோயிஸ்டுக்கள் - மற்றும் மார்க்சிஸ்ட் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது. நீங்கள் மாவோயிஸ்டு மாணவர்கள்.


இங்கு மாவோயிஸ்டுக்கள் பலர் உள்ளனர். என்னால் மவோயிஸ்டுக்களுகு பதில் கூறமுடியாது என சொல்லிவிட்டு நிகழ்ச்சியின் பாதியிலேயே கோபத்தில் வெளியேறிவிட்டார்.


முதன்முறையாக மமதா பானர்ஜி ஊடகம் ஒன்றின் முன்னிலையில் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு வெடுவெடுப்பாக பேசிவிட்டு நிகழ்ச்சியின் பாதியில் வெளியேறியது மேற்குவங்க மூத்த அரசியல் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 கொல்கத்தாவில் நடைபெற்ற CNN-IBN இன் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி, பல்கலைக்கழக மாணவிகளின் கேள்விகளில் அதிருப்தி அடைந்து நிகழ்ச்சியின் பாதியிலேயே எழுந்து சென்ற நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறிக்கொண்டிருந்தார் மமதா பானர்ஜி. அப்போது ஜாதாவ்பூர் பல்கலைக்கழக மாணவி ஒருவர், மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருக்கிறதே என கேள்வி எழுப்பினார்.


மற்றொருவர் கார்டூன் வரைந்தற்காக பேராசிரியர் அம்பிகேஷ் மகாபாத்ராவை கைது செய்தது ஏன் என கேள்வி எழுப்பினார். அது கார்டூன் அல்ல. சைபர் கிரைம். என்னை கொலை செய்வதற்கான சதி முயற்சி. குறித்த பேராசிரியர் மார்க்சிஸ்ட் கட்சியின் ஏஜெண்டுக்களில் ஒருவர்.



அவர் அதை 60 பேருக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளார். கடந்த தேர்தலின் பின்னர் மார்க்ஸிஸ்ட் கட்சி, 1000 ற்கு மேற்பட்ட சீ.டி க்களை வெளியிட்டு என்னை அவமானப்படுத்தியது. மாவோயிஸ்டுக்களும் - மார்க்ஸிட் கட்சியும் ஒன்றாக இணைந்து செயற்படுகின்றன என மமதா பதில் அளித்தார்.


அத்துடன் திடீரென கோபமடைந்த அவர், ஏன் எல்லோரும் மாவோயிஸ்டுக்கள் தொடர்பான கேள்விகளையே எழுப்புகிறீர்கள். மாநிலத்தில் பேசுவதற்கு வேறு எந்த விடயமும் இல்லையா? வேறு பல்கலைக்கழக மாணவர்களை இந்நிகழ்வுக்கு அழைக்கவில்லையா? என்றார்.


நீங்கள் மாவோயிஸ்டு இயக்கத்தை சேந்தவரா என குறித்த மாணவியை பார்த்து பதில் கேள்வி எழுப்பினார். என்னால் மாவோயிஸ்டுக்கள் - மற்றும் மார்க்சிஸ்ட் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது. நீங்கள் மாவோயிஸ்டு மாணவர்கள்.


இங்கு மாவோயிஸ்டுக்கள் பலர் உள்ளனர். என்னால் மவோயிஸ்டுக்களுகு பதில் கூறமுடியாது என சொல்லிவிட்டு நிகழ்ச்சியின் பாதியிலேயே கோபத்தில் வெளியேறிவிட்டார்.


முதன்முறையாக மமதா பானர்ஜி ஊடகம் ஒன்றின் முன்னிலையில் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு வெடுவெடுப்பாக பேசிவிட்டு நிகழ்ச்சியின் பாதியில் வெளியேறியது மேற்குவங்க மூத்த அரசியல் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


நன்றி:eutamilar.eu

Friday, May 18, 2012

Journalists failed to tell the story of war crimes in Srilanka

'Journalists failed to tell the story of war crimes in Sri Lanka'

Frances Harrison, former BBC correspondent in Sri Lanka
Posted: 17 May 2012 By: Frances Harrison
Sri Lanka

Today marks three years since the end of the fighting in Sri Lanka. I would like to mourn the dead but still I do not know how many. Estimates range from seven to 147,000. It is a shocking difference.

How is it possible in this world of satellites, rolling news and internet we have no idea how many human beings really perished, even rounded up to the nearest thousand?

It is because as journalists we have failed to get close to the truth. On one hand the Sri Lankan government says the 2009 war was a magnificent humanitarian rescue operation, while on the other many Tamils say it was a genocide. As reporters it is not enough to quote both extremes without digging a little deeper, but that is what the media reports in 2009 were like, citing army and rebel claims and just adding a proviso that these were unverified because journalists had no access to the war zone.

Perhaps that is why the media dubbed the Sri Lankan conflict "a war without witness". That is simply not true. There were 60 Catholic priests and nuns, 240 local NGO workers, and Tamil civil servants working for the central government including five doctors. All of them were people who prided themselves on their professional integrity. Not to mention the survivors of this war, many of whom are now traumatised, suicidal, destroyed people, racked with guilt at being alive when so many around them died. Every emaciated person who walked out of those months of hell had a tale of narrowly missing death, of sitting chatting to someone one minute and seeing them dead the next. This is a story that has been largely missed, with the notable exception of Channel 4 news.

தகவல்

சந்திப்பு அரங்கு

Sunday, May 13, 2012

முள்ளிவாய்க்கால்: “மிகவும் கோரமான சம்பவங்களின் சாட்சியாக நான் இருக்கிறேன்”

பாஷண அபேவர்த்தன தமிழில்: மீராபாரதி
நேர்காணல்: முள்ளிவாய்க்கால்: “மிகவும் கோரமான சம்பவங்களின் சாட்சியாக நான் இருக்கிறேன்”

சிறப்புப் பகுதி: போரும் வாழ்வும்: முள்ளிவாய்க்கால் நினைவுகள்
நேர்காணல்: முள்ளிவாய்க்கால்: “மிகவும் கோரமான சம்பவங்களின் சாட்சியாக நான் இருக்கிறேன்”
பாஷண அபேவர்த்தன
தமிழில்: மீராபாரதி
நீங்கள், இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் (Journalists for Democracy in Sri Lanka- JDS) என்ற உங்கள் அமைப்பினர், நண்பர்கள் ஆகியோர் பங்களிப்பு இல்லாமல் சர்வதேசச் சமூகத்தையே உலுக்கிய கைப்பேசி வீடியோவில் எடுக்கப்பட்ட படுகொலைக் காட்சிகள் வெளிச்சத்துக்கு வந்திருக்க மாட்டா. இந்த வீடியோ படங்களை சானல் 4 தொலைக்காட்சிக்குத்தான் வழங்க வேண்டுமென எப்படித் தீர்மானித்தீர்கள்?
முதலில் நான் ஒன்றைக் கூற வேண்டும். இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரமான படுகொலைகளும் குற்றச் செயல்களும் ரகசியமாக நடந்தவையல்ல. சர்வதேச அதிகார சக்திகளைப் பொறுத்தவரை இவ்வாறான இன அழிப்பு நடவடிக்கை இடம்பெறப் போகிறது என்பதை ஏற்கனவே அவர்கள் அறிந்திருந்தார்கள். இந்தப் படுகொலைக் களத்தின் ஆர்வமிக்க பார்வையாளர்களாக ஏராளமானோர் தொலைதூரத்தில் இருந்தார்கள். இந்த உண்மை, ஐ. நா. அவையின் மனிதாபிமானச் செயல்பாடுகளுக்கான தலைவர் சர் ஜோன் ஹோல்ம்ஸ் சானல் 4இல் வெளிப்படையாகக் கூறிய ஒரு கருத்தில் மிக நன்றாகவே பிரதிபலித்தது:
‘சர்வதேசச் சமூகத்திலிருந்து யாராவது தடுத்து நிறுத்துவார்கள் என்று இலங்கை அரசு ஒருபோதும் நம்பவில்லை. அதன் கணிப்பு சரியானதே. ஆனால் சில ராஜதந்திர ஆட்டங்கள் இதைச் சுற்றி நடந்தன.’ ஆகவே நீண்ட காலமாக நடைபெற்ற இந்த உள்நாட்டுப் போர் ரத்தக்களரியில் முடிந்தமை வழமையான, தர்க்கரீதியானது என நாம் பார்க்க முடியாது. மாறாகக், கள்ளத்தனமாகக் கணக்கிடப்பட்ட சர்வதேச அரசியல் விளையாட்டின் விளைவாகவே பார்க்கப்பட வேண்டும். உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள், பொலிசார் அடித்தபோதும் துன்புறுத்தியபோதும் இழுத்துக் கைதுசெய்தபோதும், அந்தந்த நாடுகளின் வீதிகளில் பல மாதங்களாக நின்றனர். ஓலமெழுப்பினர். விம்மினர். கடுங்குளிரையும் பொருட்படுத்தாது எதிர்த்து நின்றனர். பொதுமக்கள் சதுக்கங்களைக் கைப்பற்றியிருந்தனர். விரைவு நெடுஞ்சாலைகளை மறித்தனர். பலர் தீக்குளித்தனர். இவை எங்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் மைய நீரோட்ட ஊடகங்கள் இவற்றுக்கு எத்தகைய முக்கியத்துவமும் வழங்கவில்லை. இனப் படுகொலை இடம்பெறுவதைப் பற்றி உணர்வுபூர்வமான செய்திகள் எதையும் வெளியிடவில்லை.
இப்படியான சூழ்நிலையில்தான் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்ற முதலாவது வீடியோ முக்கியத்துவம் பெறுகிறது. இது வெளிவந்தமை அன்றைய சூழலை ஆட்டங்காணவைத்தது. இலங்கை அரசாங்கத்தைத் தவிர வேறு எவருக்கும் அந்த வீடியோவைப் பொய்யெனச் சொல்லிப் புறம் தள்ளிவிடுவதற்கான துணிவு இருக்கவில்லை. இலங்கை அரசாங்கம் வழமைபோலவே இதையும் மறுத்தது. இப்படி மறுப்பது என்பது அவர்களுக்கு ஒரு சடங்கு மாதிரி.

கறுப்பி

"கறுப்பி" - சமுதாயம் "சக்கிலி" - பொன்னி அரசு சமீபத்தில் அரங்காற்றிய நிகழ்வு- கைலாசபதி அரங்கு / கொழும்பு
 

Tuesday, May 08, 2012

உலகின் தலைசிறந்த 10 பேரில் மதுரை இளைஞர்

உலகின் தலைசிறந்த 10 பேரில் மதுரை இளைஞர் : 1.20 கோடி பேருக்கு உணவு தந்ததற்கு கவுரவம்:


ஆதரவற்ற, மனநலம் பாதித்தவர்களுக்கு 2002 முதல் இதுவரை தினமும் மூன்று வேளை உணவு அளித்து வரும் மதுரை டோக் நகரைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணனை(29), உலகின் தலைசிறந்த 10 “ரியல் ஹீரோக்களில்’ ஒருவராக சி.என்.என்., வெப்சைட் தேர்வு செய்துள்ளது.

நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலைஞரான இவர், 2002ல் சுவிட்சர்லாந்து ஓட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அங்கு செல்வதற்காக மதுரை ரயில்வே ஸ்டேஷன் வந்தார். அங்கே முதியவர் ஒருவர் உணவுக்கு போராடும் அவலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி, வீட்டில் சமைத்து, இது போன்ற மனிதர்களை தேடிச் சென்று உணவு கொடுக்க ஆரம்பித்தார். இதுவரை 1.20 கோடி பேருக்கு தினமும் காலை, மதியம், இரவு என உணவு வழங்கி வருகிறார். இதற்காக “அக்ஷயா டிரஸ்ட்’ என்ற அமைப்பையும் “ஸ்பான்சர்கள்’ உதவியுடன் நடத்தி வருகிறார். மதுரையை சுற்றி கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிப்பிடித்து உணவு தருகிறார். இதற்காக தனது வாழ்கையை முழுமையாக அர்ப்பணித்துள்ள இவர், சி.என்.என். வெப்சைட்டால், உலகின் தலை சிறந்த 10 ரியல் ஹீரோக்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஏழை எளிய மக்களை தேடிசென்று உணவு கொடுப்பதென்பது அரிய மகத்தான பணி .. கோவில் உண்டியலில் பணத்தை கொட்டுபவர்கள இவரின் கைகளின் குடுங்கள் உங்களுக்கு கடவுள் குடுப்பதை விட இது பெரிய புண்ணியம் ..வளரட்டும் இவரின் சேவை.. வாழ்த்துக்கள் ...!!!

Monday, May 07, 2012

யாழ்ப்பாணத்தில் கம்யூனிச மே தின பேரணி!! தமிழ் ஊடகங்கள் இருட்டடிப்பு!!

வடபுலத்துப் போர்ச் சூழலால் இயல்பு வாழ்வும் ஜனநாயகமும் கடந்த காலங்களில் மறுக்கப்பட்டு வந்தது. போர் முடிந்த பின்பும் அதே நிலை தொடருகிறது. இதன் மத்தியிலேயே இம்முறை மேதினம் யாழ்ப்பாணத்தில் பேரணிகளுடன் கொண்டாடப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சி தமது தமிழ் மேட்டுக்குடிச் சகாவான தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கூட்டு மேதினம் கொண்டாடியது. தெற்கிலிருந்து பெருந்தொகையானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியால் பேரணிக்கும் கூட்டத்துக்கும் கொண்டுவரப்பட்டிருந்தனர். இதனை வேறொரு கட்சியினர் செய்திருந்தால் யாழ்ப்பாண ஊடகங்கள் எகிறிக்குதித்து இனவாதத்தையும் இனவெறியையும் எழுதித் தள்ளியிருப்பார்கள். ஆனால் இது மேட்டுக்குடிக் கூட்டு என்பதால் அதனை அடக்கி வாசித்துக்கொண்டனர். இது தமிழர் பழைமைவாத ஆதிக்க அரசியலுக்கு வக்காலத்து வாங்கும் யாழ்ப்பாணப் பத்திரிகைகளின் பத்திரிகா தர்மமாகும். அத்துடன் சிங்கக்கொடி பிடித்த ரணில் சம்பந்தன் கூட்டுக்கரங்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தில் ஒரு சிறு பகுதியைத்தானும் புதிய-ஜனநாயக மார்க்சிச-லெனினிசக் கட்சி (NDMLP) யாழ்ப்பாணத்தில் மிகவும் சிறப்பாக நடத்திய சைக்கிள் பேரணிக்கும் கூட்டத்திற்கும் கொடுக்க மறுத்துவிட்டனர்.

Saturday, May 05, 2012

புரட்சிகர மேதினப் பேரணியும் பொதுக்கூட்டமும்

புதிய-ஜனநாயக மார்க்சிச-லெனினிச கட்சியின் புரட்சிகர மேதினப் பேரணியும் பொதுக்கூட்டமும் 01-05-2012 அன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
கோஷங்களுடனும் பதாகைகளுடனும் சுன்னாகம் சந்தை வளாகத்திலிருந்து சைக்கிள் பேரணியாகச் சென்ற தோழர்கள் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள பட்டப்படிப்புக்கள் கல்லூரி வளாகத்தில் மாபெரும் பொதுக்கூட்டத்தினை நடத்தினர்.
பெரும்பாலான ஊடகங்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்டுவிட்ட இப்பேரணியினதும் பொதுக்கூட்டத்தினதும் காட்சிகளை இங்கே நீங்கள் காணலாம்.
இலங்கை யில் நான்கு இடங்களில் NDMLP இனால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த மேதின நிகழ்ச்சிகள் பற்றிய விரிவான அறிக்கை விரைவில் துலாவில் வெளியாகும்.








Monday, April 30, 2012

நெஞ்சில் தைத்த முள் "கசகறணம்"

-இளைய அப்துல்லாஹ்-

விமல் குழந்தைவேலின் ‘வெள்ளாவி’ நாவலை வாசித்து முடித்தபோது அவருக்கு தொலைபேசி அழைப்பெடுத்து கேட்டேன். ‘நீங்கள் என்ன சலவைத் தொழிலாளியா?’ என்று. அவர் சிரித்தபடி ‘இல்லை’யென்றார்.

அப்படி மட்டக்களப்பு, இலங்கையின் கிழக்கு
மாகாண சலவைத் தொழிலாளர் சமூகத்தை
வெள்ளாவி நாவலில் துல்லியமாகக் கொண்டு
வந்தவர் அவர்.

கசகறணம் நாவலில். தேவதூதர்கள் போல் வந்தார்கள்,ராஜகுமாரர்கள் போல் உபசரிக்கப்பட்டார்கள், மாய மந்திரம் செய்தது
போல் மறைந்தே போனார்கள். விடுதலைப்புலிகளின் தோற்றம், வாழ்வு, மறைவை மூன்றே மூன்று வாக்கியங்களில் முழு மன உணர்வுகளையும் இப்படி இதற்கு முதலும் யாரும் சொல்லவில்லை. இனி மேலும் யாரும் சொல்ல முடியாதபடிக்கு விமல் குழந்தைவேல் சொன்னது எனது நெற்றிப்பொட்டில் ஆணி அடித்தது போல் இருந்தது.

Thursday, April 05, 2012

ஈழத்து சிறுகதைகளின் செல்நெறி

தம்பு  சிவாவின் சிறுகதைகளை முன்னிறுத்தி 
-லெனின்  மதிவானம்-

நவீன காலத்தே எழுந்த இலக்கியத்தின் உட்பிரிவுகள் யாவற்றிலும் சிறுகதை பொதுமக்கள் பெரிதும் விரும்பபடுகின்ற இலக்கிய வடிவமாகத் திகழ்கின்றது. இன்றைய சமுதாயச் சூழல் தோற்றுவிக்க கூடிய தனிமனித முரண்பாடுகளும் நெரிசல்களும் சிறுகதைக்கான நுகர்வோர் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. அதுமட்டுமன்று, சிறுகதைக்கான உள்ளடக்கம், உருவம் சமகால வாழ்க்கைப் போராட்டத்தில் அதன் இடம் என்பன குறித்து விமர்சகர்கள் எவ்வளவுதான் அரிய கருத்துக்களையும் கோட்பாடுகளையும் வகுத்துக் கூறினாலும் அதன் இறுதி வெற்றி என்பது பொதுமக்கள் விரும்பும் நிலையிலேயே தீர்மானிக்கப்படுகின்றது. அதுவும் தரமான சிறுகதைகளுக்கு புறத் தூண்டுதல் அவசியமில்லையென்றே தோன்றுகின்றது.
சிறுகதை சமூகவுறவுகளில் வெளிப்படும் மனித நிலைகளை பின்புல உறைப்புடன் எடுத்துக் காட்டுகின்றது. இன்றைய உலகில் சிறுகதைப் பற்றிய சிந்தனைகளும் போக்குகளும் பல புதிய பரிமாணங்களையும் தோற்றுவித்திருக்கின்றது. தமிழ் சிறுகதை வரலாற்றிலும் இதன் பாதிப்பு நிகழாமல் இல்லை. வ.வே.சு. ஐயரின் குளத்தங்கரை அரசமரத்தில் ஆரம்பித்து நமது யுகத்து ஆற்றல் மிக்க சிறுகதையாசிரியரான ஆதவன் தீட்சண்யாவின் சிறுகதைகள் வரை பலரும் பலவகைகளில் சோதனைகள் செய்து பார்த்து தான் இந்த புதிய திசை வழியை கண்டடைந்துள்ளனர்.
புதி திசை வழி என்பதன் அர்த்தம் மக்களால் மக்களுக்கான இலக்கியம் என்ற அம்சத்தை சுட்டி நிற்கின்றது. பல ஆண்டுகளாக வளர்ந்த இயக்கம், போராட்டம் செயல் என்பனவற்றின் ஊடாக வளர்ந்து வந்ததொரு இக்கிய செல்நெறியாகும். இந்த பின்னணியில் சிறுகதை பற்றி நோக்ககின்ற போது அது வாழ்க்கையின் அவலங்களை துன்பங்களை எடுத்துக் காட்டுகின்றது. தனி மனித வாழ்வில் ஏற்படும் அவலங்கள் துன்பங்கள் வெளிக்கொணரப்படாவிட்டால் அவற்றினை அழித்து விடவும் முடியாது. எனவே சிறுகதை மக்களின் வாழ்க்கை அவலங்களை துன்பங்களை மட்டும் சித்திரிப்பதாக அன்று அதனை தீர்ப்பதற்காக உந்துதலையும் வழங்குகின்றது என்பதை சிறுகதை வரலாற்றினை ஊன்றிக் கவணிப்பவர்களால் உணர முடியும்.

Sunday, March 25, 2012

சிங்களவர்கள் ஆகிய நாங்கள்- சுனிலா ஜெயவர்த்தன

 -தமிழில்: எஸ் .குமார் -
மோதல்கள் மற்றும் சமாதானம், அரசியல், ஆட்சி என்பனவற்றின் அடையாளம்

ஒரு சிப்பியானது சூழலிருந்து துகள்களை உறிஞ்சியெடுத்து முத்துக்களை உருவாக்குகிறது. அப்படியில்லாமல் அது எல்லாத் துகள்களையும் வடிகட்டி வெளியேற்றியிருப்பின் அது ஒரு கீழ்நிலைப் பிறவியாகவே வாழவேண்டியது அதன் தலைவிதியாக எழுதப்பட்டிருக்கும்.
நாடுகடத்தல்கள், ஆக்கிரமிப்பு அலைகள், கைப்பற்றப்பட்ட அரசுகள் மற்றும் தனிமைப் படுத்தப்பட்ட பயணிகள் என்பனவற்றின் வழிகளில்தான் சிங்களமக்களின் இனப்பெருக்கம் இந்த ஸ்ரீலங்காத் தீவில் உருவானது என்பது புதிய தலைமுறைக்கு சொல்ல மறந்த ஒரு கதை. நாடுகடத்தப் பட்டவர்கள் வெற்றி கொள்ளப்பட்டவர்கள், மற்றும் ஏதிலிகள், சில உன்னதமானவர்கள் பெரும்பாலும் அப்படியல்லாதவர்கள் ஆகியோரின் பிள்ளைகள்தான் இவர்கள். முற்றுகைக்குள்ளாகியவர்கள், எதிர்த்து நின்றவர்கள். மற்றும் செழிப்பான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் ஆகியோரை உறிஞ்சியெடுத்து ஒரு முத்து உருவாவதைப்போல உருவாக்கிப் பெற்ற கலவைதான் அவர்கள்.
காலப்போக்கில் சிங்களவர்கள் ஒரு இனம் மற்றும் கலாச்சாரம் என்பனவற்றில் இந்தியாவின் கலாச்சாரத்திலிருந்து தங்களை வேறுபடுபடுத்தி வரையறுத்துக் கொண்டார்கள். .இது அதிகப்படியாக எதிர்நோக்கும் ஒன்றின் முக்கியத்துவத்தை குறைத்து காண்பிக்கிறது என்ற வகையில் பாராட்டத் தக்க ஒன்று. நாம் பல வண்ணக் கடல்களுடாக நீந்தி வெளிவந்த போதும் இன்னும் பலவற்றை அறிந்து கொள்ளவேண்டிய இனமாகவே இருக்கிறோம்….ஆனால் நாங்கள் மிகவும் தைரியமாக வேறுபாடுகள் யாவற்றையும் தெளிவாக உய்த்துணர்ந்து கொண்டோம் என்கிற நம்பிக்கையுடன் மிகவும் அற்புதமாக நம்மைத் தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறோம். எங்கள் வெளித்தோற்றம் இணைக்கப்பட வேண்டியது மற்றும் நாம் கலந்துறவாடிய சமூகங்களில் உள்ள, பழங்குடியினர், அவுஸ்திரேலிய – நீக்ரோ கலப்பு வேடர்கள், ஜெயம் கொண்ட திராவிடர்கள், சிறைக்கைதிகள் மற்றும் வேலையாட்கள், பரந்த அராபிய நிலப்பரப்பை சேர்ந்த மூர் இன வணிகர்கள் மற்றும் மாலுமிகள், சிங்கள அரசர்களுடன் போரிட்ட இந்தோனசிய தீவுகளைச் சேர்ந்த கூலிப்படைகள், ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் மதப்பிரச்சாரர்கள், சீன வணிகர்கள், ஆபிரிக்க முத்துக் குளிப்பவர்கள், மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் நிச்சயம் தமது விதைகளை இங்கே விதைத்திருப்பார்கள்.

Saturday, March 24, 2012

இலங்கை வானொலிக் குயில் மறைந்தார்

இலங்கையின் மூத்த வானொலி அறிவிப்பாளராகிய திருமதி ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் தனது 72 ஆவது வயதில் வெள்ளியன்று மாலை யாழ் போதனா வைத்தியசாலையில் காலமானார்.




மார்ச். 16. 1940 தொடக்கம் மார்ச். 23. 2012 வரை வாழ்நாள் காலத்தைக்கொண்ட இராஜேஸ்வரி சண்முகம், இலங்கையில் புகழ்பெற்ற வானொலி அறிவிப்பாளரும் நாடகக் கலைஞரும் ஆவார்.


இவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபத்தில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அறிவிப்பாளராக, நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவராவார். இனிமையான குரல் வளத்தை இயற்கையின் கொடையாகப் பெற்றிருந்த இவர், வானொலி நாடகங்களிலும் தனது குரல் வளத்தைப் பயன்படுத்தி சிறந்த நாடகக் கலைஞராகவும் திகழ்ந்தார்.

இலங்கை மற்றும் தமிழக வானொலி நேயர்கள் மத்தியில் வானொலி குயில் என  புகழ்பெற்றிருந்த இவர் .செய்தி வாசிப்பதில் தனக்கென ஒரு பாணியைக் கைக்கொண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தனித்துவமிக்கவராகத் திகழ்ந்தார். தொழில் ரீதியில் அறிவிப்பாளர்களுக்கு இவர் ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் நிகரில்லாத ஆசானாகவும் விளங்கினார்.