Wednesday, November 13, 2013

டாக்டர் நோர்மன் பெத்யூன்

-ந.இரவீந்திரன்- 

இன்று டாக்டர் நோர்மன் பெத்யூன் பிறந்தநாள்

டொராண்டோ பல்கலைக்கழகம், ஓவன் ஒலி கல்லூரிகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனம் போன்றவற்றில் கல்விகற்றார்.ஹென்றி நார்மன் பெத்யூன்  ஒரு கனடிய மருத்துவர் மற்றும்  சிறந்த மருத்துவ கண்டுபிடிப்பாளராக இருந்தார்.1935 ல் பெத்யூன்  சோவியத் ஒன்றியம் பயணித்தார் . இந்த ஆண்டில் அவர் ஒரு ஈடுபாடுள்ள  கம்யூனிஸ்ட் ஆனார் .ஸ்பானிஷ்  காலத்து போரின் போது வெளிப்படையாக  கம்யூனிஸ்ட் ஆக  அறியப்பட்டார்.அறுவை தலைவராகவும்,இரத்ததானம் நிர்வகிக்கும் பொறுப்பும் ஏற்றுநடாத்தினார் . அருகே காயமடைந்த வீரர்கலுக்கு தேவையான இரத்தத்தை  பாட்டில்கள் மூலம் பொதுமக்களிடம்   நன்கொடையாக இரத்த எடுக்க முடியும் எனக்கருதி ஒரு மொபைல் இரத்தம் சேவை அமைத்தார். அது இரத்தத்தை  எடுத்துச் செல்ல உதவியது. இரண்டாம் சீன - ஜப்பனீஸ் போரின் போதும் , ஸ்பானிய உள்நாட்டு போரின் போதும் , (சீன கம்யூனிஸ்ட் எட்டாவது வழி இராணுவம் போர் )யுத்தமுனைக்கு சென்றார்.
ஜனவரி 1938 சீனாவுக்குச் சென்று   மாவோ சே துங் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார் .யுத்தத்தில் காயமடைந்த போர்வீரர்களுக்கு அனைத்து சிகிச்சைகளையும் செய்துகொடுத்து,பல அறுவைச் சிகிச்சை உபகரணங்களையும் உருவாக்கினார். ,தன்னைக் கவனிக்காது மக்களுக்காகவே வாழ்ந்து மரணித்தார். அவரைப் பற்றி தோழர் மணியம் அவர்கள் முதலில் சொல்லி இருந்தார்.பின் பெத்யூன்  பற்றி தேடி வாசித்திருந்தேன்.இந்தியாவில் இருந்தபோது அவர் பற்றிய நூலை எழுத்துத் திருத்தும் வாய்ப்புக் கிடைத்தது. கண்கலங்கி ,கண்கலங்கி திருத்தினேன்.(டாக்டர் நோர்மன் பெத்யூன் கதை- சவுத் விசன் வெளியீடு 415 பக்கங்கள் : படிக்க விரும்புவோர் என்னிடமிருந்து பெற்றுத் திரும்பத் தரவும் )