Monday, July 25, 2016

கபாலி - வரலாற்றினை மாற்றும் உரிமை ரஞ்சித்துக்கு இல்லை

-முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன்


கபாலி படத்தில் விவேகானந்தர், அம்பேத்கர், சேகுவேரா, கார்ல் மார்க்ஸ்,பாப் மார்லி போட்டோக்கள் எல்லாம் செட் பிராப்பர்ட்டியாக வருகிறது ஆனால் இவர்களில் எவரும் மலேஷிய தோட்டத்தொழிலாளர்களுக்காக போராடியவர்கள் இல்லை. ஆனால் செட்பிராப்பர்ட்டியில் ஒருவர் படம் இல்லை அது பெரியார்... ஆனால் வேடிக்கை மலேஷிய தோட்டத் தொழிலாளர்களுக்காக போராடியது தந்தை பெரியாரே!

கபாலி திரைப்படம் ஒடுக்கப்பட்டவர்களுக்கானது என்றும், அடிமைப்படுத்தப்பட்ட சமூகத்தின் போராட்டங்களை பதிவுசெய்திருக்கும் ஒரு அரும்பெரும் படைப்பு என்றும் எங்கும் போற்றப்பட்டுவருகிறது. ஒரு சினிமாவாக மட்டுமே கபாலியை முன்னிலைப்படுத்தும் வரையில், அதில் நாம் எந்தவொரு அரசியல் காரணங்களையும் கற்பிக்கத் தேவையில்லை. ஆனால், கபாலி திரைப்படம் இதிலிருந்து வேறுபட்டது. விவேகானந்தர், அம்பேத்கர், சேகுவேரா, கார்ல் மார்க்ஸ் ஏன், பாப் மார்லியின் படத்தைக்கூட வைத்திருக்கிறார்கள் படத்தில். இவற்றையெல்லாம் மனதில்கொண்டு அடுத்துவரும் கட்டுரையைப் படியுங்கள்.

1833ஆம் ஆண்டு, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அடிமை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, பல்லாயிரக்கணக்கான ஆப்பிரிக்க நாட்டு அடிமைகள் விடுதலை பெற்றனர். ஆனால், ஆப்பிரிக்க அடிமைகள் உதறிச்சென்ற அடிமைச் சங்கிலியில் பூட்டப்படுவதற்குப் பொருத்தமானவர்களாக, உலக வல்லாதிக்கங்கள் தேர்வுசெய்த இனம் தமிழினம். அன்று தொட்டு, ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்க நாடுகளின் கரும்பு வயல்கள், ஈயச் சுரங்கங்கள், தேயிலை, ரப்பர்த் தோட்டங்களில் தமிழர்களை நாற்றாக நடும் பணி இருநூற்றாண்டுகளுக்குத் தொடர்ந்து நடைபெற்றது. இவ்வாறு தமிழர்கள் லட்சக்கணக்கில் ஏற்றுமதி செய்யப்பட்ட நாடுகளுள் மலேசியாவும் ஒன்று. இரப்பர்த் தோட்டங்களில், கூலிகளாகத் திரிந்த இத்தமிழரின் வரலாறு கண்ணில் நீர் கசிய வைப்பதாகும்.

Monday, July 18, 2016

இணுவையூர் சக்திதாசன் எழுதிய ‘தொட்டுவிடும் தூரத்தில்’

புலம்பெயர்ந்து டென்மார்க் தேசத்தில் வசிக்கும் இணுவையூர் சக்திதாசன் எழுதிய ‘தொட்டுவிடும் தூரத்தில்’ கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது, 17.06.2016 ஞாயிற்றுக் கிழமை, பிற்பகல் மூன்று மணிக்கு வவுனியா நகரில் அமைந்துள்ள குடியிருப்பு பூங்காவில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு பண்டிதர் வீ.பிரதீபன் தலைமை தாங்கினார். தமிழ்மொழி வாழ்த்து இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து வரவேற்புரையினை ஜெசிதா ஆனந்தமூர்த்தி வழங்கினார்.

ஆசியுரையினை தமிழ்மணி அகளங்கன் அவர்கள் வழங்கினார். வாழ்த்துரையினை தமிழ்மணி மேழிக்குமரன் அவர்கள் வழங்கினார். நூலின் அறிமுக உரையினை கவிஞர் வே.முல்லைத்தீபன் நிகழ்த்தினார்.

நூலின் வெளியீட்டு நிகழ்வுகளை செல்லமுத்து வெளியீட்டகம் இயக்குநர் யோ.புரட்சி நெறிப்படுத்தி வழங்கினார்.

நூலினை திரு.திருமதி இணுவையூர் சக்திதாசன் ஆகியோர் வெளியிட்டு வைக்க முதற்பிரதியினை வவுனியா அறிவாலயம் புத்தகசாலை உரிமையாளர் ஜெ.கோபிநந்தன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

தேசிய கலை இலக்கியப் பேரவையின் உரையாடல்கள்



தமிழ்ச் சூழலில் காத்திரமான கலந்துரையாடல்கட்கும் அறிவுப்பகிர்வுக்குமான களமாக தேசிய கலை இலக்கியப் பேரவை பௌர்ணமி தோறும் நிகழ்த்தும் 'உரையாடல்கள்' நிகழ்வின் இம்மாத நிகழ்வு'பிரிக்ஸிட்டும் இலங்கையும்: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் வெளியேற்றமும் இலங்கையில் அதன் தாக்கமும்;' என்ற தலைப்பில் நிகழவிருக்கிறது

காலம்: செவ்வாய்க்கிழமை 19ம் திகதி மாலை 05.00 மணிக்கு
இடம் : 121. ஹம்டன் லேன், வெள்ளவத்தையில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடம். 

தயாபரன் ரெஷாங்கன் நெறியாள்கை செய்ய கருத்தாளர்களாக சுதாகரன் பேரம்பலமும் அனோஜன் திருக்கேதிஸ்வரநாதனும் பங்குபற்றுகின்றனர்.

பொதுவெளியில் பயனுள்ள உரையாடல்கள் நிகழ்தற்கான களத்தை உருவாக்கும் முயற்சியில் பங்கேற்கவும் கலந்துரையாடவும், கருத்துப் பரிமாறவும் தேசிய கலை இலக்கியப் பேரவை அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.   

Sunday, July 17, 2016

கன்தீல் பலூச் அவரது சகோதரனினால் "கெளரவக் கொலை" செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானிய Social Media ஸ்டாரான கன்தீல் பலூச் அவரது சகோதரனினால் "கெளரவக் கொலை" செய்யப்பட்டுள்ளார். தமது சமூக, கலாச்சார, மத நெறிமுறைகளை "மீறும்" பெண்களை குடும்ப கெளரவத்தை பாதுகாத்தல் என்ற பெயரில் கொலை செய்வது இறுக்கமான கட்டமைப்பு கொண்ட, சனாதன கீழைத்தைய சமூகங்களில் ஒரு வழமையாகவே இருந்து வருகிறது. நாம் வன்மையாக கண்டிக்கத்தக்க, இழித்துரைத்து அழித்தொழிக்கப்பட வேண்டிய மனிதாயமற்ற பயங்கரவாத பண்பாடு இது.

பாகிஸ்தான் போன்ற நாடுகளின் சமூக அமைப்புகள் மிகவும் பழமைவாத தன்மை கொண்டவை. பின்தங்கிய சமூக மதிப்பீடுகளை கொண்டவை. இந்தியாவில் காலனித்துவத்துக்கு எதிரான Anti Thesis போன்று தேசியம் உருப் பெற்றது போன்று (இது வரலாற்றாய்வாளர் பிபின் சந்திராவின் கருத்து) பாகிஸ்தானில் முற்போக்கான நவீனத்துவ பண்பாடு உருப் பெறவில்லை. காந்தி, நேரு, ராஜாராம் மோகன்ராய், அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்களும் பாகிஸ்தானில் உருவாகவில்லை. இமாம் அபுல் அஃலா மெளதூதி போன்றவர்களின் செயல்வாதங்கள் பாகிஸ்தானின் மைய நீரோட்டத்தை விட்டு விலகி விளிம்பில் தள்ளப்பட்டே இருந்தன. ஆக பாகிஸ்தான் ஒரு முஸ்லிம் நாடாக இருந்தும் இஸ்லாத்தின் அகிலத்துவ மதிப்பீடுகளிலிருந்து உருவான சமூக செயல்திட்டம் பாகிஸ்தான் சமூகத்தில் ஆளப் பதியவில்லை. அஹ்லே ஹதீத் ஸலபிகளும், பிரேலவி சூபிகளும், தேவ்பந்திகளும் தான் பாகிஸ்தான் மைய நீரோட்டத்தை வழிநடாத்தும் தீர்மானகரமான சக்திகள். இவை Dogmatic ஆனவை. Literal Interpretation களை தாண்டி வெளிவர முடியாதவை. எனவே இந்த சிந்தனை போக்குகளினால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒரு போதுமே தடுத்து நிறுத்த முடியாது. காரணம், இவர்களின் புனித பிரதிகளின் மீதான வாக்கியவாத அணுகுமுறை ஒரு போதுமே பெண்களை சமூக களத்தில் ஆண்களுக்கு நிகராக நடை போட ஒவ்வாதவை. பிற்போக்கான, தந்தை வழி சமூக மதிப்பீட்டில் ஆழ வேர்விட்டு நின்றிருக்கும் பாகிஸ்தானிய சமூகத்தில் அல் குர்ஆன் முன் வைக்கும் பால் சமத்துவம் மற்றும் சமூக நீதி இரண்டுமே சரி வர உருப் பெறவில்லை என்பதே உண்மை. ஸெய்யித் குத்ப் கூறுவது போல இவை இஸ்லாத்திற்கு முற்பட்ட அநாகரீக காலகட்டத்தை ஒத்த "ஜாஹிலிய்யத்" சமூகங்களே. இது சட்ட ரீதியான தீர்ப்பல்ல, மாறாக இதுவொரு Value Based அடிப்படையில் உலகியல் விவகாரங்களை அணுகிடும் பார்வையை கொண்ட அணுகுமுறை.

Sunday, July 10, 2016

இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
வடமாகாண கல்வி அமைச்சினால் வழங்கப்படும் நியமனங்களில் அரசியல்வாதிகளின் தேவையற்ற தலையீடுகளும் பிரதேசவாதங்களும் செல்வாக்கு செலுத்துவதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

கிளி/சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் அதிபர் நியமனம் வழங்கப்பட்டிருந்த பெருமாள் கணேசனுக்கு - கல்வியமைச்சின் செயலாளருடைய கடிதத்தின் பிரகாரம் கலைமகள் வித்தியாலயத்தில் கடந்த 07.07.2016 அன்று கடமையைப் பொறுப்பேற்கவிருந்த நிலையில் - அவருக்கு தொலைபேசி மூலமாக ஒரு இடைநிறுத்த அறிவித்தல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மூலமாக  வந்திருப்பதாக - அவை தொடர்பான செய்திகளும் தகவல்களும் ஏற்கனவே ஊடகங்களிலும் பரவலாக வந்துள்ளன.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட அநீதி கண்டனத்துக்குரியது.

 இத்தகைய செயற்பாடுகள் வடமாகாண கல்வி அமைச்சின் முறைகேடுகளின் மற்றுமொரு பரிமாணமாகவே பார்க்கப்படவேண்டியுள்ளது.  இந்தத் தவறான - முறையற்ற நடவடிக்கைகளால், சமூகத்தில் பகையும் மோதலும் அணிபிரிதல்களும் உண்டாகக்கூடிய பொறுப்பற்ற செயற்பாடுகளில் வடமாகாண கல்வியமைச்சு ஈடுபட எத்தனித்துள்ளதாகவே பார்க்கவேண்டியுள்ளது.

அரசியல் அதிகாரங்கள் தேவையற்ற விதமாக கல்வியில் குழப்பங்களை உருவாக்க முயலுமாயின் - அது வடமாகாண கல்வியில் இனியும் மீளமுடியாத பின்னடைவை உருவாக்கிவிடும்.
எனவே - இவ்விடயத்தில் வடமாகாண முதலமைச்சர் தலையிட்டு - பாதிக்கப்பட்ட அதிபருக்கு நீதியான தீர்வை வழங்கவேண்டும்.

ஜோசப் ஸ்ராலின்
பொதுச்செயலாளர்,
இலங்கை ஆசிரியர் சங்கம்.