Sunday, January 13, 2013

மத்திய கிழக்குநாடுகளில் பணிபுரியும் பணிப்பெண்களின் அவலம்


-உமா-(ஜேர்மனி) 


குருநாகலை மாவட்டத்தில அமைந்துள்ள பொல்கிறிகாகவைச் சேரந்த 35 வயதான ரோகினி ராஜபக்ச என்ற  சவுதி அரேபியாவிலிருந்த திரும்பிய பணிப்பெண்ணின் உடலிலிருந்து 7 ஆணிகள்  09.02.2011 அன்று குருநாகலை வைத்தியசாலையில் வைத்து அகற்றப்பட்டுள்ளன. தலைமுடி போலமைந்த இக்கம்பிகளில் ஆறு இவரது கைகளிலும் , ஒன்று இவரது காலிலும் ஏற்றப்பட்டிருந்தன. இவர் சென்ற ஆண்டு டிசம்பரில்  சவுதி அரேபியாவிற்கச் சென்றதாகவும், ஆணிகள் ஏற்றப்பட்ட நிலையில் மீண்டும் சென்ற கிழமை நாடு திரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.




11.12.2010 அன்று பேர்லினில் நடைபெற்ற 29வது பெண்கள் சந்திப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரை, சில புதிய தகவல்களை உள்ளடக்கி இங்கே பதிவாகிறது.