Sunday, March 25, 2012

சிங்களவர்கள் ஆகிய நாங்கள்- சுனிலா ஜெயவர்த்தன

 -தமிழில்: எஸ் .குமார் -
மோதல்கள் மற்றும் சமாதானம், அரசியல், ஆட்சி என்பனவற்றின் அடையாளம்

ஒரு சிப்பியானது சூழலிருந்து துகள்களை உறிஞ்சியெடுத்து முத்துக்களை உருவாக்குகிறது. அப்படியில்லாமல் அது எல்லாத் துகள்களையும் வடிகட்டி வெளியேற்றியிருப்பின் அது ஒரு கீழ்நிலைப் பிறவியாகவே வாழவேண்டியது அதன் தலைவிதியாக எழுதப்பட்டிருக்கும்.
நாடுகடத்தல்கள், ஆக்கிரமிப்பு அலைகள், கைப்பற்றப்பட்ட அரசுகள் மற்றும் தனிமைப் படுத்தப்பட்ட பயணிகள் என்பனவற்றின் வழிகளில்தான் சிங்களமக்களின் இனப்பெருக்கம் இந்த ஸ்ரீலங்காத் தீவில் உருவானது என்பது புதிய தலைமுறைக்கு சொல்ல மறந்த ஒரு கதை. நாடுகடத்தப் பட்டவர்கள் வெற்றி கொள்ளப்பட்டவர்கள், மற்றும் ஏதிலிகள், சில உன்னதமானவர்கள் பெரும்பாலும் அப்படியல்லாதவர்கள் ஆகியோரின் பிள்ளைகள்தான் இவர்கள். முற்றுகைக்குள்ளாகியவர்கள், எதிர்த்து நின்றவர்கள். மற்றும் செழிப்பான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் ஆகியோரை உறிஞ்சியெடுத்து ஒரு முத்து உருவாவதைப்போல உருவாக்கிப் பெற்ற கலவைதான் அவர்கள்.
காலப்போக்கில் சிங்களவர்கள் ஒரு இனம் மற்றும் கலாச்சாரம் என்பனவற்றில் இந்தியாவின் கலாச்சாரத்திலிருந்து தங்களை வேறுபடுபடுத்தி வரையறுத்துக் கொண்டார்கள். .இது அதிகப்படியாக எதிர்நோக்கும் ஒன்றின் முக்கியத்துவத்தை குறைத்து காண்பிக்கிறது என்ற வகையில் பாராட்டத் தக்க ஒன்று. நாம் பல வண்ணக் கடல்களுடாக நீந்தி வெளிவந்த போதும் இன்னும் பலவற்றை அறிந்து கொள்ளவேண்டிய இனமாகவே இருக்கிறோம்….ஆனால் நாங்கள் மிகவும் தைரியமாக வேறுபாடுகள் யாவற்றையும் தெளிவாக உய்த்துணர்ந்து கொண்டோம் என்கிற நம்பிக்கையுடன் மிகவும் அற்புதமாக நம்மைத் தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறோம். எங்கள் வெளித்தோற்றம் இணைக்கப்பட வேண்டியது மற்றும் நாம் கலந்துறவாடிய சமூகங்களில் உள்ள, பழங்குடியினர், அவுஸ்திரேலிய – நீக்ரோ கலப்பு வேடர்கள், ஜெயம் கொண்ட திராவிடர்கள், சிறைக்கைதிகள் மற்றும் வேலையாட்கள், பரந்த அராபிய நிலப்பரப்பை சேர்ந்த மூர் இன வணிகர்கள் மற்றும் மாலுமிகள், சிங்கள அரசர்களுடன் போரிட்ட இந்தோனசிய தீவுகளைச் சேர்ந்த கூலிப்படைகள், ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் மதப்பிரச்சாரர்கள், சீன வணிகர்கள், ஆபிரிக்க முத்துக் குளிப்பவர்கள், மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் நிச்சயம் தமது விதைகளை இங்கே விதைத்திருப்பார்கள்.

Saturday, March 24, 2012

இலங்கை வானொலிக் குயில் மறைந்தார்

இலங்கையின் மூத்த வானொலி அறிவிப்பாளராகிய திருமதி ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் தனது 72 ஆவது வயதில் வெள்ளியன்று மாலை யாழ் போதனா வைத்தியசாலையில் காலமானார்.




மார்ச். 16. 1940 தொடக்கம் மார்ச். 23. 2012 வரை வாழ்நாள் காலத்தைக்கொண்ட இராஜேஸ்வரி சண்முகம், இலங்கையில் புகழ்பெற்ற வானொலி அறிவிப்பாளரும் நாடகக் கலைஞரும் ஆவார்.


இவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபத்தில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அறிவிப்பாளராக, நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவராவார். இனிமையான குரல் வளத்தை இயற்கையின் கொடையாகப் பெற்றிருந்த இவர், வானொலி நாடகங்களிலும் தனது குரல் வளத்தைப் பயன்படுத்தி சிறந்த நாடகக் கலைஞராகவும் திகழ்ந்தார்.

இலங்கை மற்றும் தமிழக வானொலி நேயர்கள் மத்தியில் வானொலி குயில் என  புகழ்பெற்றிருந்த இவர் .செய்தி வாசிப்பதில் தனக்கென ஒரு பாணியைக் கைக்கொண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தனித்துவமிக்கவராகத் திகழ்ந்தார். தொழில் ரீதியில் அறிவிப்பாளர்களுக்கு இவர் ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் நிகரில்லாத ஆசானாகவும் விளங்கினார்.

Thursday, March 22, 2012

ஐ.நா.மனிதஉரிமை கவுன்சில் 19வது கூட்டத்தொடர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸில் 19வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் ஐக்கிய அமெரிக்கா முன்வைத்த பிரேரணை பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வாக்களித்த நாடுகளின் முழு விபரம் வருமாறு:

இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்:-

01.பங்களாதேஷ்
02.சீனா
03.கொங்கோ
04.கியூபா
05.ஈக்குவாடோர்
06.இந்தோனேசியா
07.குவைத்
08.மாலைத்தீவு
09.மைவுரிடானியா
10.பிலிபைன்ஸ்
11.கட்டார்
12.ரஸ்யா
13.சவுதி அரேபியா
14.தாய்லாந்து
15.உகாண்டா


இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகள்:-

01.அவுஸ்திரேலியா
02.பெல்ஜியம்
03.பெனின்
04.கெமரூன்
05.சிலி
06.கொஸ்டரீக்கா
07.செக் குடியரசு
08.கோத்தமாலா
09.ஹங்கேரி
10.இந்தியா
11.இத்தாலி
12.லிபியா
13.மொரிடஸ்
14.மெக்சிகோ
15.நைஜீரியா
16.நோர்வே
17.பெரு
18.போலந்து
19.மோல்டோவா
20.ரோமானியா
21.ஸ்பெயின்
22.சுவிட்ஸர்லாந்து
23.ஐக்கிய அமெரிக்கா
24.உருகுவே


வாக்களிக்காத நாடுகள்:

01.அங்கோலா
02.போர்சுவானா
03.பேர்கினா பசோ
04.ஜிபூடி
05.ஜோர்தான்
06.கிர்கிஸ்தான்
07.மலேசியா
08.செனகல்

Thursday, March 15, 2012

பிரிந்து செல்வதை மறுக்கும் சுயநிர்ணய உரிமை

  -ந.இரவீந்திரன்-

மூன்று தசாப்தங்களின் முன் ஈழத்தமிழ்த் தேசியம் பிரிவினைப் போராட்டத்தை முன்னெடுத்தபோது அதன் ஆபத்துக்கள் குறித்து மார்க்சியர்கள் எச்சரித்திருந்தனர். அதேவேளை தமிழ்த் தேசியத்தின் நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்திய போராட்டங்களை அவர்கள் முன்னெடுக்கத் தவறியமையால் வரலாறு அவர்கள் கைகளை விட்டுத் தவறிப் போனது. போகவும், இந்தியப் பிராந்திய மேலாதிக்கத்தால் வழிநடாத்தப்பட்டு இன்று நாடு பூராவும் இந்திய ஆக்கிரமிப்புக்கு ஆட்பட்டுப் போயுள்ளது.
அன்று ஈழத்தமிழ்த் தேசியத்தை நீண்டகால நோக்கில் பலவீனப்படுத்தும் நோக்குடன் சிங்களப் பேரினவாதப் பிதாமகனான ஜே.ஆர் கையாண்ட தந்திரோபாயம் மேலாதிக்க சக்திகளுக்குப் பயன்பட்டுள்ளதுளூ மக்கள் விடுதலைக்குப் பாரிய பின்னடைவாகியுள்ளது. புலம்பெயர் தமிழ்ப் பட்டாளம் இத்தனை பெரும் சக்தியாக முடிந்தமையே ஜே.ஆரின் அந்த நரித் தந்திரம். இந்தப் புலம்பெயர் தமிழர்கள் உண்மையில் ஈழத்தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்கு தீங்கிழைப்பதோடு தெற்காசிய சமூகத்துக்கும் பாதகமாய்ச் செயற்படுகின்றனர்.

Monday, March 05, 2012

கலைச்செல்வன் 7ம் ஆண்டு நினைவாக

மலைகளை  பொசுக்கும் வாலிபம் 
-கலைச்செல்வன்- 
 
இருள் அடர்ந்த என் உலகத்தில்      
துயரத்தின் ஒளிக்கீற்றுக்கள் தான்
என் பாதங்களுக்கு வழி கொடுத்தன.
மலைகளும் அருவிகளும் நிறைந்த
இந்தப் பாலை வனத்தில்
பசி எனக்குச் சோறூட்ட
வறுமை ஆதரவோடு வளர்த்தெடுத்தது...
அவை பாலை வனங்களா?
இல்லை!
இன்னும் இன்னும் கொடியது.
ஈரலித்த மண்ணில்
ஆழப் பதிந்த சோகத்தின் சுவடுகள்
என் வரலாற்றை
மறுபதிப்புச் செய்து கொள்ளும்
இன்னும் இன்னும்
ஏன்?
காலம் வட்டமான வரிக்கோடுகளாக
வலம் வந்து கொண்டிருக்க
இன்பம்